http://i501.photobucket.com/albums/e...psf4bf02a8.jpg"]
Printable View
TOMORROW 26th JANUARY - REPUBLIC DAY SPECIAL in SUN LIFE - THE FILM THAT EMPHASIZED THE VALUES OF NATIONAL INTEGRATION - NADIGAR THILAGAM's SUPERHIT FILM BHARATHA VILAS !
http://i501.photobucket.com/albums/e...ps5b0271dd.jpg
COMING SOON ------DHARMAM ENGE ?
http://i501.photobucket.com/albums/e...ps63a56567.jpg
GREAT PERFORMER MALAYALAM LATE VETERAN SRI. THILAGAN ABOUT NADIGAR THILAGAM
http://i501.photobucket.com/albums/e...ps7837e553.jpg
THE TRUE COLOURS OF TAMIZHNADU DRAVIDIAN PARTY LEADERS - FROM THE PEN OF Mr. A.L. Narayanan
http://i501.photobucket.com/albums/e...ps53292b67.jpg
CLASS in MASS
http://i501.photobucket.com/albums/e...psac4e2b28.jpg
COMING SOON AT KOVAI ROYAL - DAILY 4 SHOWS
http://i501.photobucket.com/albums/e...ps7f100857.jpg
Sivaji Ganesan – Definition of Style 17
தங்கமலை ரகசியம்
https://www.youtube.com/watch?v=NJXM...0TCAT5&index=6
ஆய்விற்கான காட்சி .. மணித்துளிகள் 2.56.14லிருந்து 2.59.54 வரை
ஸ்டைல் அல்லது தமிழில் பாணி என பொருள்படும் வகை நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம். சினிமாவைப் பொறுத்த மட்டில் ஒரு பாத்திரத்தை சித்தரிப்பதற்கு சிறந்த முறை அதனுடைய அத்தனை பரிமாணங்களையும் முதலில் நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ற நடிப்பை வழங்குவதே. இந்த அடிப்படையில் தான் நடித்த அத்தனை பாத்திரங்களையும் முழுமையாக சித்தரித்தவர் நடிகர் திலகம். நூறு சதவிகிதம் அவர் நடித்த பாத்திரங்கள் உருப்பெற்றன, முழுமை அடைந்தன. அவருடைய இந்த அணுகுமுறையை மட்டும் உணர்ந்து கொண்டால் கூட போதும், தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தில் ஒரு நடிகனால் வெற்றி பெற முடியும்.
காட்சி விளக்கம்
தன் பெற்றோருக்காக தன் இளமையைத் தியாகம் செய்து தரவேண்டிய பாத்திரம் விஜயேந்திரன் என்ற அந்த இளவரசனுடையது. அவனிடம் இளமையை தியானம் கேட்டுப் பெற வந்த மோகினிகளிடம் அவன் மனைவி அமுதா வலியச் சென்று தன் இளமையை எடுத்துக் கொள்ளுமாறு கேட்கிறாள். அவர்கள் அதை மறுத்து, பெற்றோருக்காக தனயன் தான் தியாகம் செய்ய வேண்டும் எனக் கூறிவிடுகிறார்கள். அந்த முதுமையான உடலுடன் தங்கமலைக்குச் சென்று அங்கிருக்கும் ஓர் மந்திரக்கோலினைக் கொண்டு வந்து பெற்றோர்கள் மேல் தடவினால் அவர்கள் குணமாகி விடுவார்கள். எனவே இளவரசன் விஜயேந்திரன் தன் இளமையை தானம் செய்து உடலால் முதியவனாகி விடுகிறான்.
தன்னுடைய தந்திரத்தால் அமுதா அந்த ரகசியத்தை இரு வீர்ர்களிடமிருந்து கேட்டறிகிறாள். அந்த மந்திரத்தை சொன்னால் உடல் கல்லாகி விடும். இளவரசன் விஜயேந்திரனோ முதுமையடைந்து விட்ட போதிலும் மனைவியை சந்தேகிக்கிறான். நீ உண்மையானவளாயிருந்தால் அந்த ரகசியத்தை சொல் என்கிறான். அவளும் அந்த ரகசியத்தைக் கூறி கல்லாகி விடுகிறாள். அவசரப்பட்டு மனைவியைக் கல்லாக விட்டு விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியில் பரதவிக்கிறான் இளவரசன்.
நடிகர் திலகம்...
ஒரு வயோதிக பாத்திரம் என்றால் மிகவும் நிதானமாக நடப்பது குரலை இழுத்து இழுத்து பேசுவது என்கிற குறுகிய இலக்கணத்தை வகுக்காமல் இந்த பாத்திரத்தை முழுமையாக வடித்திருக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பாராட்டியே ஆகவேண்டும். இதற்காக அவர் முன் இருந்திருக்கக் கூடிய சவால்கள்..
1. ஓர் இளைஞன் முதியவனாக மாறும் போது உடல் மட்டுமே மாறுகிறது. ஆனால் அந்த மனமும் குணமும் மாறவில்லை. இதனை சித்தரிக்க வேண்டும்.
2. அந்த முதியவனுக்குள் இருக்கும் இளம் வயதின் அணுகுமுறை அந்த பாத்திரத்தில் சித்தரிக்கப்படவேண்டும்.
3. முதுமை காரணமாக உடல் வலுவிழந்தாலும் தன் பெற்றோரை குணமடையச் செய்யவேண்டும் என்கின்ற அந்த இளவரசனின் லட்சிய உணர்வு வெளிப்படவேண்டும். ஓர் இளைஞன் அந்த உணர்வை எப்படி அணுகுவானோ அந்த அடிப்படையில் அந்த முதிய தோற்றத்தில் அந்த இளவரசன் அணுகவேண்டும்.
4. இது அவனுடைய நடை உடை பாவனையிலும் வெளிப்படவேண்டும்.
குறைந்த பட்சம் இந்த அளவுகோல்களையாவது நிறைவேற்றித் தான் அந்தப் பாத்திரத்தைப் படைக்கவேண்டும் சித்தரிக்கவேண்டும் என்பதே நடிகர் திலகத்தின் முன் இருந்திருக்கக்கூடிய சவால்கள்.
இப்போது காட்சிக்கு வருவோம்..
காட்சி 2.56.14ல் துவங்குகிறது. அமுதா மகிழ்ச்சி பொங்க ஓடி வருகிறாள். தங்கமலை ரகசியத்தைத் தெரிந்து கொண்டு விட்டோமே என்கிற ஆர்வம் அவளுக்குள் உற்சாகத்தைத் தருகிறது. ஆனால் இங்கோ..
விஜயேந்திரன் முதியவனாக தாயார் அருகில் அமர்ந்திருக்கிறான். அவன் முகத்தில் கோபம் தெறிக்கிறது..
--- இந்த இடத்தில் அமுதாவாக வரும் ஜமுனா ஓடி வரும் வேகத்தைப் பாருங்கள்.. அவருடைய பாத்திரமும் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்து காட்சிக்கு உயிரூட்டத் துணை புரிகின்றன. இயக்குநருக்கும் அவருக்கும் பாராட்டுக்கள்..
விஜயேந்திர்ராக நடிகர் திலகம்... தன் கழுத்தை சற்றே திருப்பி மேலெழுந்தவாறு அவளை நேரிட்டுப் பார்க்கிறார். முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது.
எழுந்து கோபமாக அவளிடம் பேசுகிறார். அந்தக் குரலில் அந்த முதுமையை மீறி அந்த இளைஞனின் அவள் கணவனின் அந்த ஆளுமை உணர்வு பளிச்சிடுகிறது. அதுமட்டுமின்றி அந்த கோபம் நடையிலும் பிரதிபலிக்கிறது. சற்றே வேகமான நடை.
அதே சமயத்தில் உடலில் அந்த முதுமையும் அதே நேரம் தன் வேலையைக் காட்டுகிறது. முகம் ஆடுவதைப் பாருங்கள்..
கால்களின் நடையில் இளைஞனின் வேகம்.. கண்களில் இளைஞனின் சந்தேகப் பார்வை.. கழுத்தை ஆட்டும் போது உடலின் ஒத்துழையாமை.. உடல் ஆட்டம் காணுதல்..
அவள் தான் நிரபராதி, அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ள நாடகமாடுவதாக அவள் சொன்னதும், சற்றே முகம் மலர்வதைப் பாருங்கள். அந்த ஒரு வினாடி அந்த சந்தேகம் மறைந்து சந்தோஷம் மலர்கிறது. காரணம் பெற்றோர் மேல் உள்ள பாசம், அதற்கான தீர்வு கிடைத்த மகிழ்ச்சி.. இயல்பான மனித குணம் அங்கே த்த்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதைச் சொன்னால் தான் கல்லாகி விடுவேன் எனக் கூறி அவள் தயங்க, கோபம் மீண்டும் தலை தூக்குகிறது. நீ களங்கமற்றவளாயிருந்தால் தெரிந்து வந்த ரகசியத்தை சொல் என்கின்றான். இந்த நேரத்தில் அவனுக்கு அவள் மனைவி என்பதையும் மீறி அந்த ரகசியத்தை சொல்ல வேண்டிய ஒரு சாதாரண பெண்ணாக தோற்றமளிக்கிறாள். சொன்னால் கல்லாகி விடுவாளே என்று அவன் மனம் யோசிக்க வில்லை.
இந்த இடத்தில் அந்தப் பாத்திரம் மிகச் சிறப்பாக சித்தரிக்கப் படுகிறது. அங்கே அந்த இளைஞனின் சுயநலம் வெளிப்படுகிறது.
இந்தக் கட்டத்தில் நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். அந்த உடலால் முதுமையும் மனதால் இளமையும் ஒரு சேர அந்த முகத்தில் பிரதிபலிக்கும் சிறப்பைக் காணுங்கள். இதனை அவள் கன்னத்தில் அடிக்கும் யுத்தியில் நிரூபிக்கிறார். இளைஞனாயிருந்தால் கோபத்தில் கைகள் நன்கு மேலே சென்று வேகமாக அழுத்தமாக பளாரென்று கன்னத்தில் அறையும். ஆனால் இங்கோ முதுமையின் காரணமாக கை மெதுவாக அழுத்தம் குறைவாக அவள் கன்னத்தில் அறைகிறது.
அமுதா மனம் தணிந்து அந்த ரகசியத்தை சொல்ல முற்படுகிறாள். இப்போது அவர் முகத்தை கவனியுங்கள். அதில் ஆர்வம் தென்படுகிறது. காதைக் கூர்மையாகத் தீட்டி என கதைகளில் படிப்போமே .. அந்த வர்ணனையைக் கண்களால் பாருங்கள்...கவனத்தோடு அந்த மந்திரத்தைக் கேட்கிறார்.
தங்கமலை ரகசியத்தைச் சொன்னவுடன் அமுதா சிலையாகிறாள்.
இப்போது துவங்குகிறது.. நடிப்புச் சாம்ராஜ்ஜியத்தின் புதிய பரிமாணம்.
முதுமையும் இளமையும் ஓன்று சேர்ந்து ஒரே உணர்வை பிரதிபலிக்கின்றன. இரண்டுமே அமுதாவின் அந்த நிலைக்கு வருந்துகின்றன.
இந்தக் காட்சியில் அமுதாவை சற்றே மெல்ல திரும்பிப் பார்க்கிறார் முதியவரான இளவரசர். சிலையாகி விட்ட அமுதாவைக் கண்டு திடுக்கிடுகிறார். கைகளைக் காட்டியவாறே அவளுடைய நிலையை யாரிடமாவது சொல்லவேண்டும் என துடிக்கிறார். அந்த வயது முதுமை இவையெல்லாம் மனம் மறந்து அவளுக்காக அவருக்குள் ஓர் வேகத்தைத் தருகின்றன. பின்னால் நடந்து செல்கிறார், பின் தாயார் அருகில் வருகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்.
தன்னால் தான் அவளுக்கு இந்த கதி எனப் புலம்புகிறார்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அந்த முதியவர் அவள் சிலையாகி விட்டதைக் கண்டவுடன் அவள் கல்லாகி விட்ட சோகமும் தன்னுடைய அவசர புத்தியையும் தாங்க முடியாமல் அழத் துவங்குகிறார். குமுறுகிறார். துடிக்கிறார். இவையாவுமே அந்தக் குரல்களில் வெளிப்படும் சிறப்பைப் பாருங்கள், கேளுங்கள்.
இந்த இடத்தில் அந்த அமுதா என்ற ஒரு வார்த்தையை எவ்வளவு விதமாக உணர்ச்சி பூர்வமாக அழைக்கிறார் பாருங்கள்..
குரலிலேயே பாத்திரத்தை அழுத்தமாக சித்தரிக்க முடியும் என்று நிரூபித்த நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பிற்கு மற்றுமோர் சான்று இக்காட்சி.
REPUBLIC DAY GREETINGS TO ALL OUR HUBBERS AND NT FANS.
Also advance greetings for our part 15 inaugural very soon.
like NT our NT thread will also create more records.
ramajayam
Los angeles.
செலுலாய்ட் சோழன் – 56
(From Mr.Sudhangan's Facebook page)
1961ம் வருடம் சிவாஜி வாழ்க்கை மிகப் பெரிய திருப்புமுனையான ஆண்டு!
அந்த வருடம் மார்ச் மாதம் `பாவ மன்னிப்பு’
மே மாதம் `பாசமலர்’!
செப்டெம்பர் மாதம் ` பாலும் பழமும்’
மூன்று மிகப் பெரிய வெற்றிப் படங்கள்!
ஆனால் `பா’ பந்தயத்தில் முன்னனியில் நின்றது ` பாசமலர்’ தான்
மத ஒற்றுமைப் படம் `பாவமன்னிப்பு’
அண்ணன் தங்கை பாசம் ` பாசமலர்’
நல்ல கதை கொண்ட படம் ` பாலும் பழமும்’!
மூன்று படங்களின் பாடல்களுமே காலத்தை மீறி நிற்கக் கூடிய பாடல்கள்!
`பாசமலர்’ படம் பல கலாச்சார அதிர்வுகளை தமிழ்நாட்டில் அலைமோத விட்டது!
லேசான பிணக்கில் இருந்த அண்ணன் – தங்கைகள் பாசத்தை பொழிய ஆராம்பித்தார்கள்!
சிவாஜி வெகு நாட்கள் அப்படி வந்த பல கடிதங்களை பத்திரப் படுத்தி வைத்திருந்ததாக என்னிடமே சொன்னார்!
சிவாஜியையும், சாவித்ரியையும் அண்ணன் தங்கையாகவே பார்க்க ஆரம்பித்தார்கள்1
இனி அவர்களை ஜோடியாக நடிக்க வைக்க முடியாது என்பதை பல இயக்குனர்களும் உணர்ந்து கொண்டார்கள்!
ஆனால் அந்த விபரீத விளையாட்டில் ஈடுபட்டவர் கண்ணதாசன்!
அந்த படம் ஒடவில்லை!
அதைப் பற்றி பின்னால் பேசுவோம்.
1961 ஒன்றில் வந்த இந்த மூன்று படங்களிலுமே சிவாஜி வித்யாசமாக நடித்திருந்தாலும், இதன் வெற்றிக்கு வேறு காரணம் இருந்தது!
இந்தக் காரணத்தை எனக்குச் சொன்னவரும் சிவாஜிதான்!
`படம் வர்றதுக்கு முன்னாடியே சிலோன் ரேடியோவில அந்த படத்தை பாட்டை போட்டுடுவான்! பாட்டு பட்டித் தொட்டியெங்கும் பரவி, எப்படா அந்த படத்தை பார்ப்போம்னு ஜனங்க ஏங்கற அளவுக்கு அந்தப் பாட்டுக்களும் அதன் வரிகளும் பிரபலமாய்ப் போச்சு!
படம் வந்ததும் மக்கள் அப்படியே அதை அள்ளிக்கிட்டாங்க!
`பாலும் பழமும்’ படம் வர்றதுக்கு முன்னாடியே அதில் வந்த `நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் ! ‘ அந்தப் பாட்டை பாராட்டி பல கடிதங்கள் எனக்கு வந்துச்சு’ என்றார் சிவாஜி!
சிவாஜி சொன்னது எத்தனை உண்மை!
பாவ மன்னிப்பு படத்தில் படம் துவங்கி பல நிமிடங்கள் கழித்துத்தான் முதல் பாடல் துவங்கும்!
அந்தப் பாட்டின் துவக்கத்தில் ஒரு பிறைசந்திரன்! அப்படியே காமிரா வானத்தை விட்டு நகர்ந்து கீழே வரும், அந்த இடத்தில் டேப் தோல் வாத்யம்! அதில் இரண்டு விரல்கள் அதை தட்டும்! அது கீழே இறங்கியபோது அங்கே முழுச் சந்திரனாக இஸ்லாமிய தோற்றத்தில் சிவாஜியின் முகம்!
`எல்லோரும் கொண்டாடுவோம்! அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்; என்று சிவாஜி முகபாவத்துடன் டி.எம்.எஸ், குரல் ஒலிக்கும்!
அவரை சுற்றி அந்தச் சேரியில் இருக்கும் மக்களில் எல்லா இனத்தவரும் சுற்றியிருந்து ` அல்லாவின் பெயரைச் சொல்லி’ என்று கோரஸாக பாடுவார்கள்!
அடுத்த வரியே தன்னிம்பிக்கைக்கு தாவும் வரிகள்!
`கல்லாக படுத்திருந்து களித்தவர் யாருமில்லே’
`கைகால்கள் ஒய்ந்த பின்னே துடிப்பது லாபமில்லே’
வந்ததை வரவில் வைப்போம்!
செய்வதை செலவில் வைப்போன்;
இன்று போல் என்று இங்கே ஒன்றாய் கூடுவோம்’
இந்த பாட்டின் உச்சமே டி.எம்.எஸ். கூட ஒலிக்கும் நாகூர் அனிபாவின் குரல்தான்!
இந்தப் பாட்டு பாடும் போதே பின்னனியில் பிரும்மாண்ட பங்களா உள்ளே அழகான ஜெமினியும் இந்தப் பாட்டை கேட்பார்!
ஒரு ஒலைக் குடிசையில் உலக்கையால் உரலில் குத்திக்கொண்டு சாவித்ரியும் ரசிப்பார்!
பாட்டின் தாள வேகம் குறையும்,
இசை சலனமற்று லேசாக பின்னனியில் ஒரு தொகையறாவைப் போல
`நூறு வகைப் பறவை வரும்!
கோடி வகைப் பூ மலரும்!
ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ;
கருப்பில்லே வெளுப்புமில்லே!
கனவுக்கு உருவமில்லே!
கடலுக்குள் பிரிவுமில்லே!
கடவுளில் பேதமில்லே!
முதலுக்கு அன்னை என்போம்!
முடிவுக்கு தந்தை என்போம்!
கண்ணிலே விண்ணைக் கண்டு
ஒன்றாய்க் கூடுவோம்
மீண்டும் ஒரு தொகையறா
இந்தப் பாடலின் மூலமாக படம் மதநல்லிணக்கத்தை சொல்லிப் போகிறது என்பது புரிந்து போகும்!
அடுத்து ஜெமினிக்கான இந்தப் பாடல் அன்றைய காதலர்களின் காதல் கடிதம்!
`காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஒவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை!
இந்த பாடல் வந்தபோது பலர் கண்ணதாசனிடம் கேட்டார்கள்
கீதையில் கண்ண பரமாத்மா தன்னை ` மாதங்களில் நான் மார்கழி’ என்கிறான்
கண்ணன் சொன்னதைப் போய் ஒரு பெண்ணுக்கு ஒரு காதலன் சொல்வதைப் போல எழுதலாமா ?
ஆண்டாள் – கண்ணன் உறவு எதைச் சொல்லுது தெரியுமா ?
ஜீவாத்மா – பரமாத்மா இணைப்பை காதல் மூலமாகச் சொன்னது!
எல்லாமும் `நான்’ என்றான் கண்ணன்!
அப்படியானால் என் படக் கதாநாயகனும் அவன் தானே!
அந்த அவன் தன்னை விட தன் காதலி மேலானவள் என்று உருகிச் சொன்னால் தப்பில்லை’ என்றார் கண்ணதாசன்!
அடுத்து `கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா ; என்கிற சித்தர் பாடலை அப்படியே காதல் பாட்டாக்கியிருப்பார்!
`அத்தான் என்னத்தான் – அவர்
என்னைத்தான் எப்படி சொல்வேனடி!
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து
கண்ணைத்தான் எப்படி சொல்வேனடி!
இந்தப் பாடலுக்கு அந்த நாளில் காதல் கொண்ட கன்னியருக்கும், புதமணமான பெண்களுக்கும் மனதுக்குள்
இந்தப் பாட்டும்
அடுத்து வந்த
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
பஞ்சணையில் காற்றும் வரும் தூக்க வராது
நாலு வகை குணமிருக்கும் ஆசை விடாது
நடக்க வரும் கால்களுக்கு துணிவிருக்காது
அதாவது அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு நான்கும் இருக்குமாம் ஆனால் ஆசை மட்டும் அவளுக்கு விடவில்லையாம்
இந்த பாட்டும், பெண்களில் இதயத் துடிப்பானது!
இந்தப் பாடலில் காதலை மட்டுமா சொல்லியிருப்பார் கண்ணதாசன்
கூடவே படத்தின் மூலக்கருவும் இணைந்தே வரும்
மதத்தால் வேறுபட்ட இருவர் காதலிக்கும் பாட்டு அந்தப் பெண் பாடுகிறாள்
காதலுக்கு ஜாதியில்லை மதமுமில்லையே!
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே!
வேதமெலாம் காதலையே மறுப்பதில்லையே ! அது
மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே
படத்தின் கருவையும் விடாமல், காதலின் மேன்மையையும், இன ஜாதி வேறு பாடு கூடாது என்பதை எப்படியெல்லாம் சொன்னார் கண்ணதாசன்!
இந்த படம் வந்த அந்த நாட்களில், கிராமப்புறங்களில் சைக்கிளில் போகிற எல்லோருமே இந்தப் பாட்டைத்தான் பாடிக்கொண்டு போனார்கள்
(தொடரும்)
திருச்சியில் குடியரசு தினத்தில் சிவாஜிக்கு புகழ் அஞ்சலி பட்டிமன்றம்
இன்று 26-01-2015 குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி புத்துர் 4 ரோடு சந்திப்பில் ஷண்முகா கல்யாண மண்டபத்தில் தெயவமகன் சிவாஜி புகழுக்கு காரணம் அவர் நடித்த பாசப்படங்களா தேசப்படங்களா என்ற சிறப்புமிக்க புகழ் அஞ்சலி பட்டி மன்றம் இனிதே நடைபெற்றது. இதில் நடுவராக வேங்கை சந்திரசேகரும் இரண்டு அணிகளின் பேச்சாளர்களாக இன்பா, கவிஞர் ஜோதி, மதுரை அயயம்பெருமாள், திருச்சி முரளி, திருச்சி நிஜ வீரப்பா முதலியோர் பட்டி மன்றத்தை அலங்கரித்தனர். பொது மக்களும் ரசிகர்களும் பெரிய அளவில் கலந்து கொண்டனர். மண்டபம் நிறைந்து காணபட்டது. இதற்கான ஏற்பாடுகளை திரு. M. சீனிவாசன் செய்திருந்தார்.
Nadigar Thilagam's Contribution towards Important Days of INDIA.... A True Indian by all means !!!
The First National Actor of Tamizhnadu Nadigar Thilagam Sivaji Ganesan Ayya's contribution towards spreading the importance of being an INDIAN is undoubtedly so far the best when compared to any commercial actor despite being one part of it himself.
It is 2015, the tastes of people have changed and so is the field of entertainment. With much hesitation, I thought I should hop the channels every now and then especially, today being a Republic Day. With so much of entertainment options for the people of Tamilnadu, I was quite amazed and surprised that most of the Channels were telecasting our NADIGAR THILAGAM FILMS on this REPUBLIC DAY.
RAJ Tv Showcased - KAPPAL OATTIYA THAMIZHAN
POLIMER Tv Showcased - SIVANTHA MANN
SUNLIFE Showcased - BHARATHA VILAS
MURASU Showcased - RATHTHA THILAGAM
DD Showcased - RAJAPART RANGADURAI
The old songs in many channels had many patriotic songs from Nadigar Thilagam Films .
KUDOS to our NADIGAR THILAGAM - The actor who cannot be forgotten by anybody....!
The FIRST & TRUE NATIONAL ACTOR - LONG LIVE HIS NAME !!!!
மனதுக்கு மிக மிக நெருக்கமான படத்தை ஒரே அலைவரிசையில் உள்ள நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து ரசிக்கும்போது, உணர்ச்சிப்பூர்வமான காட்சியமைப்புகள் நம்மை உணர்ச்சிக் குவியலாக மாற்றிவிடும் போது, ஒவ்வொரு காட்சியும் செதுக்கியது போல் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தை பிரமித்து போய் பார்க்கும்போது, அதிலும் குறிப்பாக அந்த மூன்று பேர் சந்திக்கும் காட்சியை நூற்றுக்கணக்கான தடவை பார்த்திருந்தும் ஒவ்வொரு முறையும் அந்த 7 நிமிடமும் அந்த மூன்று பேரும் வெவ்வேறு நபர்கள் என்றே இப்போதும் மனதில் பதிகிறது என்று சொன்னால் அவன்தான் நடிகன். அதுதான் தெய்வ மகன்!
அன்புடன்
மறந்து போன பழைய பறவை புதிய பறவையாக என்ட்ரி கொடுக்கும் போது குதூகலம் நடிகர்திலகத்தின் வதனத்தில் !! மகிழ்ச்சி கண்களில்!!Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / சோகம்
பகுதி 1 புதிய பறவை பார்த்த ஞாபகம் இல்லையோ
https://www.youtube.com/watch?v=xNInBEF8E7M
புதிய பறவை வந்த பிறகு பழைய பறவை ரீஎன்ட்ரி கொடுத்தால் அதிர்ச்சி நடுக்கம் தயக்கம் தவிப்பு பயம் குழப்பம் அந்த சோக வதனத்தில் ....?!
https://www.youtube.com/watch?v=0SdHvU6_6LE
Quote:
Quote:
பாடல் ஒன்றே! காட்சிகளோ இரண்டு !! மகிழ்ச்சி / சோகம்
பகுதி 2 பட்டிக்காடா பட்டணமா அடி என்னடிராக்கம்மா......!
வருங்கால மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு முறைக்கும் முறைப்பெண்ணை சீண்டும்போது குதூகலமே
https://www.youtube.com/watch?v=yOoguw_wQ7Y
மனைவியான பின் புரிதலின்றி பிரியும்போது ....கனத்த மனதின் உணர்வுகளை அதே முறைப்பெண்ணிடம் முறையிடுதல்
https://www.youtube.com/watch?v=7ROmQErLMK0
Quote:
Quote:
பாடல் ஒன்றே! காட்சிகளோ இரண்டு !! மகிழ்ச்சி / சோகம்
பகுதி 3 ராமன் எத்தனை ராமனடி.......அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு
சாப்பாட்டு ராமன் அப்பாவி ! மனதின் ஆசைகளோ 'அடப்பாவி!' நடிகர்திலகத்தின் குஷியாட்டம்!!
https://www.youtube.com/watch?v=cU9_w77CM1k
வாக்குறுதிகள் மீறப்பட்டு மனசாட்சி நசுக்கப்பட்டு எதிர்பார்ப்பு ஏமாற்றமாகும் போது ....
https://www.youtube.com/watch?v=2lsAJtWoUIA
Quote:
Quote:
பாடல் ஒன்றே! காட்சிகளோ இரண்டு !! மகிழ்ச்சி / சோகம்
பகுதி 4 .கவரிமான் ....பூப்போலே உன் புன்னகையில்....
உயிரின் உயிராக மகள் சிறுமியாக பெற்றோரை மனம் மகிழ்விக்கும் போது!
https://www.youtube.com/watch?v=_vP2REIiFc4
..
வளர்ந்த மகள் வெறுப்பு நெருப்பில் வாட்டி உயிரை உருக்கும் போது....?!
https://www.youtube.com/watch?v=FscpyQ57YY8