-
1962 - தேர்தல் நினைவலைகள் இரா .செழியன்
திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் முதல் முறையாக களமிறக்கப்பட்ட தன்னுடைய தேர்தல் செலவுக்காக வாக்காளர்களாகிய பொதுமக்கள் ரூ. 1, ரூ. 2 எனக் கொடுத்தனர். அதோடு, எம்.ஜி.ஆரும் நாடகம் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்தார் என நினைவுகூர்கிறார் மூத்த அரசியல்வாதியான இரா. செழியன் (93).
மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் சகோதரரான இரா. செழியன், மக்களவை உறுப்பினராக திறம்படப் பணியாற்றியவர். தன்னுடைய தேர்தல் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:
அண்ணாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த நான், 1944 முதல் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டேன். 1962-ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுக 18 தொகுதிகளில் போட்டியிட்டு, 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அப்போது பொதுத் தொகுதியாக இருந்த பெரம்பலூரில் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட எனக்கு தேர்தல் செலவுக்காக கட்சி சார்பில் ரூ. 2,000 தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்டதாக மக்களவைத் தொகுதி இருந்தது.
என்னை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் முன்னாள் மாநிலத் தலைவர் பழனியாண்டி போட்டியிட்டதால், தேர்தல் செலவுக்கு ரூ. 2,000 போதாது என்ற நிலை ஏற்பட்டது. அதற்காக, மூன்று நாள்கள் தொகுதியில் தங்கியிருந்து பிரசாரம் செய்த எம்ஜிஆர் திரையரங்குகளில் நாடகம் நடத்தினார். அதைக் காண வருவோருக்கு கட்டணம் நிர்ணயித்து, அதில் கிடைத்த 10,000 ரூபாயை 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா ரூ. 2,000 வீதம் பிரித்துக் கொடுத்து, தேர்தல் செலவுக்கு பயன்படுத்தினோம்.
தற்போது வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது போன்ற நிலைமை அந்தக் காலத்தில் இல்லை. வாக்கு கேட்டுச் செல்லும்போது எங்களை வரவேற்க யாரும் மாலை அணிவிக்க வேண்டாம் என்று கூறியிருந்ததால், தேர்தல் செலவுக்கு ரூ. 1, ரூ. 2 என மக்கள் கொடுத்தனர்.
திமுக சார்பில் போட்டியிட்ட எனக்கு 1,88,926 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனியாண்டிக்கு 1,33,536 வாக்குகளும் கிடைத்தன. 55,390 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக மக்களவைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்த வெற்றிக்கு, அண்ணா மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையே காரணம்.
பெரம்பலூர் தேர்தலின் போது பிரசாரம் செய்த எம்ஜிஆரைக் காண, ஆண்கள், பெண்கள் தங்களது குழந்தைகளுடன் இரண்டு நாள்கள் காத்திருந்த நிகழ்வெல்லாம் நடந்தது.
அப்போதெல்லாம் பணம், ஜாதி பார்த்து மக்கள் வாக்களித்தது கிடையாது. மக்களை நம்பி தலைவர், தலைவரை நம்பி மக்கள் என்பதே அந்தக் காலத்தில் ஜனநாயகத்தின் மூலதனமாக இருந்தது.
தற்போது தலைவரை நம்பி மக்கள் என்ற சூழல் இருக்கிறது. கழகமே குடும்பம் என்றார் அண்ணா. ஆனால், தற்போது குடும்பமே கழகமாகி விட்டது. 1967-இல் பெரம்பலூர் தனித் தொகுதியாக மாற்றப்பட்டதால், 1967, 1971 மக்களவை பொதுத் தேர்தல்களில் கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
1972-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேறி அதிமுக தொடங்கியதும், அந்தக் கட்சியில் இணைத்துக் கொண்ட நான், 1977 முதல் 1984 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தேன்.
வயது முதிர்வு காரணமாக கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்றார் அவர்.
courtesy - dinamani
-
எம்ஜிஆர் 100 | 51 - எம்.ஜி.ஆரின் வாரிசுகள்!
http://i68.tinypic.com/6edsuv.jpg
M.G.R. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கிடையே முக்கியமான ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருக்குமே நேரடி வாரிசுகள் இல்லை. எம்.ஜி.ஆர். தனது படங்களில் பாடி நடித்த கருத்துக்கள் எல்லாம் பிறகு அவர் வாழ்வில் அப்படியே நடந்துள்ளன. திரையில் அவர் பாடி நடக்காமல் போன பாடல், ‘பணம் படைத்தவன்’ படத்தில் இடம்பெற்ற, ‘எனக்கொரு மகன் பிறப்பான்… அவன் என்னைப் போலவே இருப்பான்…’
சத்யா ஸ்டுடியோவில் ‘மாட்டுக்கார வேலன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எம்.ஜி.ஆருடன் இயக்குநர் ப.நீலகண் டன், ஜெயந்தி பிலிம்ஸ் அதிபரும் படத்தின் தயாரிப்பாளருமான கனகசபை ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ப.நீலகண் டன், ‘‘உங்களுக்கு குழந்தை இருந்திருந் தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும். நாங்கள் எல்லாம் பார்த்து சந்தோஷப் பட்டிருப்போம். கடவுள் எங்களுக்கு அப்படிக் கொஞ்சி மகிழும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை’’ என்றார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘என் இரண்டா வது மனைவி சதானந்தவதிக்கு இரண்டு முறை கரு உண்டாகி ‘அபார்ஷன்’ ஆகி விட்டது. அதுகூட எனக்கு பெரிய வருத்தம் இல்லே. நான் கஷ்டப்படற காலத்திலே எங்க அம்மா இருந்தாங்க. இப்போ நான் வசதியா இருக்கும்போது எங்க அம்மா என் கூட இல்லே. கஷ்டத்தை அனுபவிச்சவங்க கொஞ்சம் சுகத்தை அனு பவிக்கவில்லேயே என்பது தான் என் வருத்தம்’’ என்று சொன்னார். கூட இருந்தவர் களின் இதயம் கனத்தது.
ரவீந்தர் என்பவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். இஸ் லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் காஜா முகைதீன். சொந்த ஊர் நாகூர். எம்.ஜி.ஆர். வைத்த பெயர் ரவீந்தர். எம்.ஜி.ஆர். நாடகமன்றத்தின் ‘இடிந்த கோயில்’ நாடகத்துக்கு (இந்த நாடகம்தான் பின்னர் ‘இன்பக் கனவு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது) வசனம் எழுதியவர். ‘நாடோடி மன்னன்’ படத்திலும் கவியரசு கண்ணதாசனுடன் சேர்ந்து வசனம் எழுதியுள்ளார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் வெற்றி பற்றி குறிப் பிடும்போது ரவீந்தரின் திறமையை எம்.ஜி.ஆர். பாராட்டியுள்ளார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்’ என்று அறியப்பட்டவர்.
ரவீந்தருக்கு 1958-ம் ஆண்டு திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதுபற்றி எம்.ஜி.ஆரிடமும் அவரது அண்ணன் சக்ரபாணியிடமும் ரவீந்தர் தெரிவித்தார். ‘‘திருமண தேதியை பெரியவர்கள் நிச் சயித்துவிட்டார்கள்’’ என்று ரவீந்தர் கூறி யதும், ‘‘ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பணம் வேண்டும்?’’ என்று சக்ரபாணி கேட் டார். ‘‘வெறும் பதினாறு ரூபாய் மட்டும் கொடுங்கள்’’ என்றார் ரவீந்தர். எம்.ஜி.ஆருக்கும் சக்ரபாணிக்கும் சற்று குழப்பம்.
பின்னர், கலகலவென சிரித்த சக்ர பாணி, ‘‘என்னய்யா 16 ரூபாய்க்கு கல்யாணம். ஒரு பிளேட் பிரியாணிக்குக்கூட ஆகாதே?’’ என்றார். அதற்கு ரவீந்தர், ‘‘எங்கள் வழக்கப்படி தாலி ஒரு கிராம் எடை யில் இருக்கும். இப்போது அதன் விலை பதினாறு ரூபாய். அதற்கு மட்டும் நீங்கள் பணம் கொடுத்தால் போதும். மத்த படி உங்க தயவுல என்கிட்ட இருக்கிற பணமே போதும்’’ என்றார்.
எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் உள்ளே சென்றனர். சக்ரபாணி மட் டுமே வெளியே வந்து, ரவீந்தர் கேட்ட படி, பதினாறு ரூபாயை அவரிடம் கொடுத்தார். எம்.ஜி.ஆர். வர வில்லை. சிறிது நேரம் ரவீந்தர் அங் கேயே காத்திருந்தார். எம்.ஜி.ஆர். தனது கையால் அந்தப் பணத்தைக் கொடுக்கவில்லையே என்று ரவீந் தருக்கு குறை.
சற்று நேரம் கழித்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ரவீந்தரைப் பார்த்து, ‘‘என்ன ரவீந்தர்? இன்னும் பணம் வேணுமா? உமக்காக பத் தாயிரம் ரூபாய் எடுத்து வெச்சிருக்கேன். தர்றேன்’’ என்றார். 1958-ல் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய் விற்ற நிலையில், பத்தாயிரம் ரூபாய்க்கு கிட்டத்தட்ட நூறு பவுன் வாங்கலாம். இன்றைய பவுன் விலையோடு ஒப்பிடும்போது அன்றைய பத்தாயிரம் ரூபாய், இப்போது இருபது லட்ச ரூபாய்க்கு சமம்.
ரவீந்தர் உடனே, ‘‘அதுக்கில்லே அண்ணே, பதினாறு ரூபாயை உங்க கையாலேயே என்கிட்ட கொடுப்பீங் கன்னு நினைச்சேன்’’ என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர். லேசாக புன்னகைத்து, ‘‘என்னய்யா புரி யாத ஆளா இருக்கே. கல்யாணத்துக்கு தாலி வாங்க பணம் கேட்கிறே. எங்க அண்ணன் புள்ளை குட்டிக்காரர். எனக்கு அந்த பாக்கியம் இல்லே. அதனால்தான் அவர் கையாலேயே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன்’’ என்றார்.
எம்.ஜி.ஆரின் இந்த எதிர்பாராத பதிலையும் அவரது நல்லெண்ணத்தை யும் அறிந்து ரவீந்தர் அழுதேவிட்டோர். எம்.ஜி.ஆரும் கண்கலங்கி ரவீந்தரை அணைத்தபடி, ‘‘நல்லா இரும்’’ என்று வாழ்த்தினார். பின்னர், ரவீந்தர் ஆறு குழந்தைகளுக்குத் தந்தையானார்.
எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. தன்னோடு தொடர்புடைய எல்லோருக்கும் எதையாவது கொடுக்க வேண்டும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் வள்ளல் தன்மையும் அவருக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தனது ரசிகர்களை ஒவ்வொருவராக எம்.ஜி.ஆர். சந்தித்து, தனித்தனியே அவர்களுக்கு ஏதாவது கொடுப்பது நடக்காத காரியம்.
எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இருந் திருந்தால் இரண்டு மூன்றோ அல்லது நான்கைந்து பேரோ இருந்திருக்கலாம். அவர்கள்தான் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்று அழைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போதோ, ‘எம்.ஜி.ஆரின் வாரிசுகள்’ என்ற பெருமையையும் தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கே வழங்கிவிட்டார் அந்த வள்ளல்.
http://i65.tinypic.com/6gdc77.jpg
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அவர் நடித்த எல்லாப் படங்களுமே பிடித்தமானவைதான். ஆனால், எம்.ஜி.ஆருக்கு தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம், புதிய பரிமாணத்தில் அவர் அற்புதமாக நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படமான ‘பெற்றால்தான் பிள்ளையா?’
-
அன்று
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1981ல்
எமது புரட்சித் தலைவர் நடாத்திய பொழுது
அதில் கலந்து கொள்ள இலங்கையின் அப்போதைய
எதிர் கட்சித் தலைவர் திரு அமிர்தலிங்கம் கலந்து
கொள்ள தமிழ் நாடு வந்தவர்
நாட்டு அரச வழக்கப்படி
முதல்வரை சந்தித்து அதன் பின்
எதிர் கட்சித் தலைவரை சந்திக்க வேண்டும்.
ஆனால் அவரோ திரு கருணாநிதி அவர்களை கண்டு மகிழ்ந்து
சொன்னார்
நீங்கள் இன்று முதல்வராய் இருந்திருந்தால்
தமிழீழம் மலர்ந்து விடும் .................................
இதனால் மனம் ஒடிந்த புரட்சித் தலைவர் கோபத்தில்
சொன்னார்கள், அதன் பின் மனம் வருந்தி மன்னிப்பும் கேட்டார்கள்
புரட்சித் தலைவர் என்னும் பெரும் தகை.
அது இலங்கையிலும் எதிர் ஒலித்தது.
அப்போது நான் சொன்னேன் ...........1981 ம் ஆண்டு
உங்கள் தமிழர் தலைவர் ஆட்சிக்கு வந்தால்
இலங்கைத் தமிழார் என்றொரு இனம்
இருக்கின்றதா என்று கேட்பார்.
அப்போது தெரியும்
என் தலைவன் அருமை.
நடந்தது என்ன
என் அருமைத் தமிழ் சொந்தங்களே
தமிழன் தலைவன் என்று
அன்றிலுருந்து இன்று வரை சொன்னவர்
செய்தது என்ன?
1. மகளை அனுப்பி இலங்கை ஜனாதிபதியிடம் பண முடிப்பு வாங்கி இலங்கையில் தமிழர் நலமாக வாழ்கின்றனர் அன்று அறிக்கை.
2. புது டில்லியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணித் தலைமைக்கு தொலைபேசியில் பேசாமல் தந்தி மேல் தந்தி அனுப்பியபடி அறிக்கை மேல் அறிக்கை.
3. இலங்கையில் தமிழர் பிரச்சினை முடிவு பெரும் வரையில் உண்ணாவிரதம் . ஆம் கலை பத்து மணியில் இருந்து மதியம் வரை .
4. இறுதிப் போரில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப் பட்ட போது, தமிழகமெங்கும் போராட்ங்கள் நடந்த பொழுது ............................... இந்திய இறையாண்மை பாதிக்கப் படும் வகையில் தமிழக அரசால் நடக்க முடியாது என்று எம்மை கை கழுவி விட்ட
சாணக்கியம்...
mukappu noolil irunthu
-
-
-
-
-
-
-
-
நேற்று (26/4/2016) அதிகாலை 5 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் .
எம்.ஜி.ஆர். நடித்த "கொடுத்து வைத்தவள் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/1z1agsk.jpg
-
இன்று (27/04/2016) அதிகாலை 5 மணிக்கு ஜெயா மூவிஸில் , மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். நடித்த "தாய் சொல்லை தட்டாதே " ஒளிபரப்பாகியது.
http://i66.tinypic.com/2z9ilci.jpg
-
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார் .
92 தள்ளாடும் வயதில் அப்பாவின் பதவி வெறி
62 வயதில் மகனின் பதவி வெறி
60 வயது இன்னொரு மகன் வீதீ வீதியாக இறங்கி பிரச்சாரம்
40 வயது கடந்த இன்னொரு மகள் -பல கோடிகளை முழுங்கியவரின் மேடை நடிப்பு .
60 வதை கடந்த ஒதுக்கப்பட்ட மூத்த மகன் - மவுன புரட்சி
40 வயதில் இந்திய பொருளாதரத்தை கொள்ளையடித்த இரண்டு பேரன்கள் -
2016 தேர்தல் என்னமாய் பாடாய் படுத்துகிறது .
-
http://i67.tinypic.com/2lxfnd4.jpg
http://i68.tinypic.com/1zc0961.jpg
Film director K. Subrahmanyam, who had helped Sri. Sathyamurthy start the South Indian Film Chamber of Commerce, was approached by a few actors like R. M. Somasundaram, T. N. Sivathanu, N. N. Kannappa and Sattampillai Venkatraman to create a representative organisation. And it was finally in August 1952, that they launched one called the Junior Actors Association (Thunai Nadigar Sangam). MGR expressed his desire to join this group and insisted that there should be no difference amongst actors on the basis of seniority, and hence, it came to be called Nadigar Sangam. As films of all the four southern languages were shot in Madras during that period, it was later renamed Thenn Indhiya Nadigar Sangam or South Indian Artistes Association. On November 15, 1952, it was registered as a society (not as a labour union) with rules and bylaws in place. K. Subrahmanyam and MGR donated money to help run this association, and began recruiting members. Sivaji had completed only one film during this time. It is interesting to note the serial numbers of popular actors who registered as members of the Sangam. The first member on its rolls, as of 1955, was N. N. Kannappa, and the next was M. R. Santhanam. The latter is known for roles like the father of Sivaji in Sabash Meena and the minister in Veerapandiya Kattabomman. He later turned producer and made classics like Pasamalar.
His sons, Santhana Barathi and R. S. Sivaji are also both actors/directors. The first woman member was S. D. Subbalakshmi (No. 8). While MGR was No. 25, his brother Chakrapani was No. 61. Other senior members of the Sangam are M. N. Rajam (No. 56), V. N. Janaki (No. 95), S. S. Rajendran (No. 96), Sivaji (No. 109), T. S. Balaiah (No. 123), M. K. Radha (No. 122), Avvai T. K. Shanmugam (No. 129), Veena Vidwan S. Balachander (No. 176), K. B. Sundarambal (No. 179), M. K. Thyagaraja Bhagavathar (No. 192), Gemini Ganesan (No. 218), T. R. Rajakumari (No. 337), P. Kannamba (No. 338), A. Nageswara Rao (No. 342) and M. R. Radha (No. 281), who contributed to the fund-raising efforts of the Sangam by staging plays. N. T. Rama Rao (Telugu), Prem Nazir (Malayalam) and Rajkumar (Kannada) also became the members of the association.In November 1955, a magazine, Nadigan Kural (The Voice of the Artiste) was started by MGR; he was its first editor. In that he wrote: “An association for the unity of artistes, a magazine to carry the united voice, a library to improve the knowledge of all actors, a place to socialise, improve health by sports, exchange views and a stage for actors—these are our dreams for the future.”
The founder-president was T. V. Sundaram, while the vice-presidents were MGR, S. D. Subbalakshmi, S. D. Sundaram and K. Vembu. The secretaries were T. N. Sivathanu and R. M. Somasundaram, while R. S. Manohar was the treasurer. When a sizeable number of members had joined the association, a grand function was organised in July 1953. In February 1954, the first elections were held. The railway concession that was offered to drama artistes was then revived by the Sangam. One of the biggest achievements though was the introduction of bus services to the Kodambakkam studios. The bus, 12B (Santhome to Kodambakkam) was started on October 10, 1955. Another grand fund-raiser (for cyclone relief) was organised in December 1955; it was presided over by Governor Sri Prakasa. At the event, plays and light music performances were organised.
V. Nagaiah was elected president in 1956, and it was during his time that the land in Bazullah Road, T. Nagar, was purchased with financial assistance from many actors. NSK took over the next year, and the foundation stone for the first building was laid. There was an open-air stage and a green room (which doubled up as the office during the day). After NSK’s demise, MGR took over. For the first time, a woman, Anjali Devi, was elected President in 1959. She was followed by R. Nagendra Rao. The reins shifted to MGR again for a few years before S. S. Rajendran took over in 1963 (until 1966). In 1964, the building work was completed and inaugurated. In 1967, M. V. Swaminathan took over as president, and was followed by K. R. Ramaswamy, who continued till 1971. Sivaji then took over from him in 1971. That year, the Sangam, by availing a bank loan, made plans to build a closed-door auditorium. In October 1973, the foundation stone for the auditorium was laid, and work was completed in 1979, with the auditorium being inaugurated by MGR, who was then the Chief Minister of Tamil Nadu. After Sivaji’s term, it was S. S. Rajendran who again became President. He was then followed by Radha Ravi, Vijayakanth, Sarathkumar and now, as we all know, Nasser.
courtesy - the hindu
-
-
-
-
-
நேற்று (27/04/2016) இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "ஒரு தாய் மக்கள் " ஒளிபரப்பாகியது
http://i64.tinypic.com/20z5web.jpg
-
இன்று (28/04/2016) அதிகாலை 5 மணிக்கு ஜெயா மூவிஸில் பொன்மனச்செம்மல்
எம்.ஜி.ஆர். நடித்த " பணம் படைத்தவன் " ஒளிபரப்பாகியது .
http://i66.tinypic.com/t5rcsp.jpg
-
1972
ஒரு தாய் மக்கள் படத்தில் ஒரு காட்சியில் நடிகை உதய சந்திரிகா மக்கள் திலகத்திடம் கையை காட்டி தனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று கேட்கும்போது மக்கள் திலகம் அவரது கையை பார்த்து 72ல் நடக்கும் என்று கூறுவார் .பதறிப்போன உதயசந்திரிகா அய்யோ எனக்கு 72 வயதில் தான் திருமணம் நடக்குமா என்று பரிதாபமாக கேட்கும் போது மக்கள் திலகம் எம்ஜிஆர்72 வயதில்லை , 1972ல் திருமணம் நடக்கும் என்று சிரித்து கொண்டே கூறுவார் . ஒரு தாய் மக்கள் படம் 1966ல் துவங்கி 1971ல் வெளியானது குறிப்பிடத்தக்கது .
-
1971
மக்கள் திலகம் ஒரு தாய் மக்கள் படத்தில் கூட்டுறவு பற்றியும் ,பசுமை புரட்சி பற்றியும் , மதுவின் தீமைகளை பற்றியும் மிக தெளிவாக தன்னுடைய கருத்தை கூறியிருந்தார் .
2016 தேர்தல் நேரத்தில் இன்றைய அரசியல் வாதிகள் மேடையில் கூறுவதை மக்கள் திலகம் 1971ல் தன்னுடைய படத்திலே பிரச்சாரமாக வைத்து விட்டார் .எங்கும் எதிலும் என்றும் மக்களுக்கு முன்னோடி மக்கள் திலகம் எம்ஜிஆர் என்றால் அது மிகையல்ல .
-
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னம் இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறது.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம், அவருடைய பிறந்த நாள் நூற்றாண்டில் சரித்திர சாதனை படைத்திட வேண்டும்.
‘‘எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட நம்முடைய இயக்கம் பெரிது, நமது இயக்கத்தின் வெற்றியே நம்முடைய வெற்றி’’ என்ற கொள்கை வேட்கையோடு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன் பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்றிட வேண்டும் என்று உங்கள் அனைவரை யும் கேட்டுக் கொள்கிறேன்.
chief minister- j.jayalaithaa
-
http://i63.tinypic.com/rj42sy.jpg
தினமணி
தமிழக வாக்காளப் பெரு மக்களுக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்...
By dn
First Published : 28 April 2016 11:40 AM IST
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பொதுக்கூட்டங்களில், தமிழக வாக்காளப் பெருமக்களையும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்களையும் சந்தித்து வருகின்ற மகிழ்ச்சியான தருணத்தில், இந்த மடல் வழியாகவும் உங்களோடு சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், எந்நாளும் தங்கள் குடும்பத்தின் வசமே ஆட்சி அதிகாரம் அனைத்தும் இருந்திட வேண்டும் என்று துடிக்கின்ற தீய சக்தியிடமிருந்தும், அதன் நச்சு விழுதுகளிடமிருந்தும் தமிழகத்தைக் காப்பாற்றவும்; ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புரட்சிகர அரசியல் பயணத்தைத் தொடர்ந்து நிலைநாட்டவும், நடைபெறுகின்ற தேர்தல் தான் இந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குடும்ப ஆட்சி முறை மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் முழுமையாக தங்களுக்குள்ளேயே வைத்திருப்பது ``அனைவருக்கும் சம வாய்ப்பு; என்ற மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தை சின்னாபின்னப் படுத்திவிடும்.
வாரிசு அரசியல் முறையை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழித்திட வேண்டும். ஏனென்றால், அரசியல் அதிகாரத்தின் மீது கொண்ட பேராசையைத் தவிர, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிப்பதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. புதிது புதிதாக ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் மலர வேண்டும்; அவை கோடான கோடி உள்ளங்களில் இருந்து தோன்றி வர வேண்டும்; அதன் மூலம் மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்துகின்ற ஜனநாயக ஆட்சி தொடர வேண்டும்.
சுயநல சிந்தனைகளால் நிரம்பிய தீய சக்தியை அடியோடு ஒழிக்க நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அரசியல் பாடம் பயின்ற நான், மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையான ஏழைகளுக்கு வாழ்வு; எளியோருக்கு பாதுகாப்பு; எல்லோருக்கும் சம வாய்ப்பு; ஏற்றம் பெற்ற சமுதாயம் என்ற சிந்தனையில் உறுதியாக எனது இந்த உறுதிப்பாட்டின் காரணமாகத் தான், எல்லோரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற சாதனைகளை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. அவை அனைத்தும் வரலாற்றில் நிலைபெறும் சிறப்புடையவை.
தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தற்போதைக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு செழிக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். எல்லோருக்கும் விலையில்லா அரிசி; குடும்பப் பெண்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கு மின் சாதனங்கள்; உழைக்கும் மக்களின் பசிப்பிணி போக்க அம்மா உணவகங்கள் போன்ற உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்யும் சாதனைகள் மட்டுமல்ல; எல்லோரும் தரமான கல்வி பெற்று, எல்லோரும் தகவல் தொழில்நுட்ப அறிவியலின் வளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்க்கைக் கனவுகளை நனவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கும் தொலை நோக்குத் திட்டங்கள் உள்ளிட்ட முன்னோடியான பல திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன். இந்தத் திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கின்ற ஜனநாயகப் பண்பு வளர வேண்டும். அதற்கு, நாம் வெற்றி மேல் வெற்றி குவித்தாக வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக் குழு; ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிக் குழு; மண்டலக் குழு; பூத் கமிட்டி ஆகியவற்றின் உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து, உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சியில் தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் செய்யப்பட்டிருக்கும் நற்செயல்கள் பலவற்றையும் விளக்கிக் கூறுங்கள்.
மேற்சொன்ன பணிகளை நிறைவேற்ற, தொகுதிக் குழு பொறுப்பாளர்களும், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் அவரவர் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்றுவது மிகவும் அவசியம்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பணியாற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறது.
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம், அவருடைய பிறந்த நாள் நூற்றாண்டில் சரித்திர சாதனை படைத்திட வேண்டும்.
எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட நம்முடைய இயக்கம் பெரிது, நமது இயக்கத்தின் வெற்றியே நம்முடைய வெற்றி என்ற கொள்கை வேட்கையோடு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்றிட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே வேட்பாளராகக் களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு நீங்கள் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்றிட வேண்டும்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறேன். எப்பொழுதும் தமிழக மக்களின் உயர்வு பற்றியே சிந்திக்கிறேன். தமிழகத்தில் வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வு அமைந்திட இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்ட வண்ணமே எனது அரசியல் பயணம் தொடர்கிறது.
எனது அன்புக் கட்டளையை ஏற்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் கடமை உணர்வோடு தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்திட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்
என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
-
http://i63.tinypic.com/16gkg0k.jpg
யாருய்யா அது? புண்ணியவானுகளே, ஒரு நல்ல விசயத்தை சொல்ல விட மாட்டார்களே? நம்ம ஆளுங்களே இப்பிடி. உடனே போன் போட்டுருவீங்களே. என்ன வினோதமோ?
ரவிச்சந்திரன், மேல உள்ளது நம் தலைவர் படம். இரண்டு விரலைக் காட்டுறார் அதானால் இரட்டை இலைக்கு பிரசாரம் செய்கிறார் என்று நினைத்து இதையும் தூக்கிப்பிடாதீர்கள்.
என்னதான் பண்ணாலும் தலைவர் வெற்றியை யாராலயும் தடுக்க முடியாது. தீயசக்திகள் (பொதுவா சொன்னேன். நீங்களா யாரயும் எந்த கட்சி தலைவனையும் நினக்காதீர்கள்) தோற்பது உறுதி.
கீழே இருக்கும் படம் மதுரையில் நடந்த கூட்டத்தில் புரட்சித் தலைவருக்கு புரட்சித் தலைவி செங்கோல் கொடுக்கும் படம். இந்த படத்தில தலைவர் இருக்காரு. அதான் போடறேன். பிரசாரம் செய்யலை.
http://i68.tinypic.com/5yc36s.jpg
எங்க வீட்டு மரத்துல எல்லா இலையும் இரட்டை இலையா இருக்கு என்பதை எல்லாருக்கும் கூறிக் கொள்கிறேன்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உடுக்க உடையின்றி அதனால் மானம் காக்க வழியின்றி மனமுடைந்து கிடப்போரின் தொகை எவ்வளவு ?
20-5-1962 மாலை மணி இதழில் மக்கள் திலகத்தின் கட்டுரையில் இப்படி கேட்டிருப்பார் ....
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று எம் ஜி ஆர் பிக்சர்ஸ் சார்பில் கடைசி தொழிலாளி வரைத் தொடர்புடைய அனைவருக்கும் வேட்டி சேலை தனது வாகனத்திலேயே ஏற்றி அவரவர் வீட்டிற்கே அனுப்பி வைப்பது மக்கள் திலகத்தின் வழக்கம் ....
பின்னர் மக்கள் திலகம் முதல்வரான காலத்தில் ... 1983 ம் ஆண்டு ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை துவங்கினார்
நாடு முழுவதும் உள்ள நெசவாளர் நலம் காக்க ராஜ்ஜிய சபையில் 23-8-1984 அன்று குரல் கொடுத்தார் செல்வி ஜெயலலிதா .... 1953 இல் ராஜாஜி அவர்கள் அப்பொழு சட்டப் பேரவையில் நெசவாளர் நலம் காக்கக் கோரி நிறைவேற்றிய தீர்மானம் , அதன் பின்னர் 1968 ம் ஆண்டு அப்பொழுதைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி நிறைவேற்றிய தீர்மானம் , பின்னர் முதல்வரான மக்கள் திலகம் இதே கோரிக்கையை பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களிடம் வலியுறுத்தியது , அதன் பின்னர் 1980 இல் பிரதமரான இந்திரா காந்தியிடமும் மக்கள் திலகம் இது குறித்து வலியுறுத்தியது என்பதை எல்லாம் பட்டியலிட்டு மேற்கோள் காண்பித்த செல்வி ஜெயலலிதா .... நெசவுத் தொழிலில் பெரிய நிறுவனங்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்....
முழுக்க முழுக்க தமிழக அரசாங்கத்தின் செலவிலேயே வழங்கப் படும் இலவச வேட்டி சேலை திட்டம் நெசவாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த உன்னதத் திட்டம் ... மக்கள் திலகமும் செல்வி ஜெயலலிதாவும் இதில் முக்கிய பங்கை வரலாற்றில் பெற்றிடுவார்கள் ....
courtesy net