-
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது
சில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .
20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம்ஜிஆர் சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ...... Thanks...
-
-
-
புரட்சி தலைவரின் எண்ண கனவுகளை நினைவாக்குவதே பக்தர்களின் சேவை என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டு கடுமையான ஊரடங்கு உத்தரவால் அடுத்தடுத்து இருந்த தடுப்புகளையும் சுற்றி சுற்றி விடாது அரசு ஒப்புதல் பெற்ற திரு.லோகநாதன் அவர்களின் காரில் புளியந்தோப்பு வியாசர்பாடி சூளை ஓட்டேரி ஆயிரம் விளக்கு ராயப்பேட்டை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள இதுவரை வழங்கபடாத கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் (அறக்கட்டளை) இல்லங்களுக்கு நேரில் சென்று மளிகை பொருட்களை அட்சயநாளாகிய 26.4.2020 இன்று மயிலை திரு.R.லோக நாதன் V.S.ஷிவ பெருமாள் ஆகிய நான் மற்றும் பில்டர் K.N.ராஜ்ஆகிய மூவரும் வழங்கிவிட்டு வந்தது மனநிறைவை தந்தது*.இது மேலும் தொடர தலைவர் அருள் புரியட்டும்....... Thanks...
-
மனிதநேயம் காப்போம் மக்கள் திலகத்தின் வழி நடப்போம் இன்று எங்கள் வீட்டுக்கு அருகில் மரண சம்பவம் மரணித்தவர் ஒரு ஏழை பக்கவாத நோயினால் ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குச் சென்றோம் மருத்துவர்கள் கைவிட்ட பின்பு நேற்று நாலு மணி அளவில் மரணமடைந்தார் அடிப்படையில் ஏழை மனைவி மகள் மகன் தாயார் அனைவரையும் தவிக்கவிட்டு சென்றார் மனைவியோ தனது கணவரது இறுதிச்சடங்கை செய்வதற்கு வசதி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார் கேள்விப்பட்டவுடன் எங்களால் முடிந்த பண உதவியை ஏற்பாடு செய்து கொடுத்தோம், அதன் பிறகு அக்கம் பக்கம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த பொருளுதவி செய்ய அவரது இறுதிச்சடங்கு கான வேலை தற்போது நடந்து கொண்டிருக்கின்றது இதன் மூலம் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் மரண வீட்டிற்கு செல்பவர்கள் மாலை வாங்கி மரியாதை செலுத்துகிறேன் என்று வீணாக படத்தை செலவு செய்ய வேண்டாம் தங்களால் ஆன பணம் உதவி செய்வதன் மூலம் ஏழை எளியோரின் இறுதி சடங்குக்கு உதவி செய்வதாய் இருக்கும்
மனிதநேயம் காப்போம் மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் தான் எங்களுக்குத் தெரிந்த வரை இதற்கு எல்லாம் வழிகாட்டியாய் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறார் இவன் தேவராஜ் ராதிகா திருச்சி இன்றைய தினம்26.. 04.. 2020..... Thanks Groups...
-
இது போன்ற இன்னும் பல தலைவர் வீடியோக்களை காண Like,share செய்து subscribe செய்யவும்..!!
https://youtu.be/iIjXZm-82Lo..... Thanks...
-
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த நேரம். தஞ்சாவூரில் சிவாஜி கணேசனுக்குச் சொந்தமான சாந்தி, கமலா திரையரங்குகளைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர். அப்போது, சிவாஜி தனது சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைப்பு விடுத்திருந்தார்.
எம்.ஜி.ஆர் தனது சக அமைச்சர்கள், முக்கியக் கட்சிக்காரர்களுடன் சிவாஜியின் சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில், எம்.ஜி.ஆருடன் காரில் பயணித்த அமைச்சர்கள் சிலர், ''நாங்கள் உங்களுக்காக தனி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆனால் நீங்களோ, உங்கள் போட்டியாளர் சிவாஜி வீட்டுக்குச் செல்கிறீர்களே...'' என்று ஆதங்கப்பட்டிருக்கின்றனர்.
உடனே எம்.ஜி.ஆர், ''நானும் சிவாஜி யும் எப்படி அண்ணன், தம்பி போல் பழகு கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? எங்களது போட்டி, கலை வாழ்க்கையில் மட்டும்தான். அது தனிப்பட்ட எங்களது நட்பு, பாசத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. வேண்டாத பகைமை கொண்டு எங்கள் ரசிகர்கள் மோதிக் கொள்வதிலும் அர்த்தம் இல்லை. அதை நாங்கள் விரும்பவும் இல்லை'' என்றார். அதோடு நிற்கவில்லை.
''சிவாஜியிடம் இப்போது இருக்கிற இந்த பண்ணையில் இருந்து சென் னைக்கு வைக்கோல் வழக்கமாக எடுத்து வரப்படுகிறது. அது, எனது சத்யா ஸ்டுடியோவில்தான் இறக்கி வைக்கப்படும். அந்த வைக்கோல்தான் எனது வீட்டில் இருக்கும் பசு மாடுகளுக்கும் சிவாஜி வீட்டுப் பசுக்களுக்கும் உணவு. நான் குடிக்கும் பால் சிவாஜி பண்ணையின் வைக்கோலைத் தின்று செரித்துக் கிடைக்கின்ற பால்தான்'' என்றாராம்.
நன்றி! இதயக்கனி S.விஜயன்.
ஆனந்த விகடன் இணைய பகுதியிலிருந்து........(வைக்கோல் விஷயம் எந்தளவுக்கு உண்மையா?! பொய்யா?!... விபரமறிந்தோர் விளக்கலாம்).... Thanks...
-
புரட்சிதலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே..!!✌ இது தலைவரின் புகழ் பாடும் யூடியூப் சேனல்..!! தலைவரின் படங்கள்,பாடல்கள்,வசனங்கள்,புகழ் வீடியோகள் இதில் தொடர்ந்து பதிவிடப்படும்..!! புரட்சிதலைவரின் பக்தர்கள் அனைவரும் இந்த யூடியூப் சேனலை subscribe செய்து கூடவே ️ bell பட்டனை அழுத்தி like,share செய்யவும்..!! இப்படிக்கு, புரட்சிதலைவரின் முரட்டு பக்தன் உங்கள் ✌ *சிவகாசி எம்.ஜி.ஆர்*
https://youtu.be/CUfa5n1BWOo........ Thanks...
-
-
அதெல்லாம் சரி...
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஏன் எம்ஜிஆரை மட்டும் ஏன் மதிக்கணும் ?
ஏன் மற்ற தலைவர்கள் கூட தான் எவ்வளவோ நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க..
ஆனால் எம்ஜிஆர் வித்தியாசம்
யார் கூறிய நற்கருத்துக்கள் படித்ததோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதாரத்திருந்த வழிவகுக்கிறதோ..
பூத உடலை நீத்த போதும்,
இன்னமும் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
இன்னமும் தன் மக்கள் நன்றாக இருக்கிறார்களா!!! என்று நொடிப்பொழுதும் எண்ணி எண்ணி
கவலைப்படுகிறான் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் எவரொருவர் ஆழமாக விதைக்கிறாரோ...
எவரொருவர், மக்கள் தன்னை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துக் கண்ணீர் வரச்செய்கிறாரோ.
அவர் தான் மக்களின் மனதில் நிலைத்து நிலைக்கமுடியும்...
இந்த வீடியோவைப் பாருங்க...
இவர்களெல்லாம் யார்? பதவியில் இருப்பவர்களா? பணக்காரர்களா? இல்லை, தங்களின் உன்னத்தலைவனை, நேரிலாவது பார்த்திருப்பவர்களா..? சிலர் பார்த்திருக்கவும் கூடும்
இதுபோன்ற பக்தர்களுக்கெல்லாம், ஏன் நமக்கும் கூட ஒரே ஒரு விருப்பம்...நாம் கேட்கும் ஒரே வரம்...
#வாத்தியாரே #நீ #மறுபடி #பிறக்கணும்........ Thanks...
-
-
"நவரத்தினம்" படம் பற்றி நாகை தருமன் கூறுகிறார்.......Vaidyanathan K ஏ. பி. நாகராஜன் மகனே சொன்னார். "நவரத்தினம்," இலாபம் கிடைத்தது ,என்று மேடையில் சொன்னார்...... Thanks.........
-
தலைவரைவைத்து படம் எடுத்த உப நடிகர்கள்
வீரப்பா
நாம் படத்தில் பங்குதாரர்
பட தோல்வி க்கு பிறகு அனைவரும். பிரிந்தனர்
ஆனால் வீரப்பா ஆனந்த ஜோதி எடுத்தார் ஆனால் சிவாஜியை வைத்து ஆலயமணி எடுத்தார்
கலைஞர் எங்கள் தங்கம் படம் எடுத்தார் படம் தாமதமாகி கொண்டு இருந்தது பிள்ளையோ பிள்ளை படத்தை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்
எம் *ஜி*சி அரசகட்டளை மட்டும் தயாரித்தார்
கண்ணாம்பா தாலிபாக்கியம தலைவர் எவ்வளவோ உதவினார்
கண்ணாய் பாலின கணவர். நாகபூஷணம் பிடிவாதமாக தான்தான். இயக்குநர் என்று அடம் பிடித்தார்
சந்திரபாபு துரதிஷ்டவசமாக. தயாரிப்பாளர் ஆனார் ஆரம்ப தயாரிப்பாளர் பரிசு பட தயாரிப்பாளர் சுப்பையாவும் இன்
னொருவர்.பாபு இயக்குநராக தான் இருந்தார. இரண்டு தயாரிப்பாளர்களும் பின் வாங்க எல்லா சுமையும் பாபுவின் தலையில் தலைவர் முன்பணம் வாங்கிய போதே சொன்னார். சிறிது தாமதமாகும் என்றார் பொறுமையில்லாமல் பாபு சத்யா ஸ்டூடியாவில் பெரியவருடன் நடந்த ச்சரவில் பாதிக்கப்பட்டார்
மேலும் பாபுவின் அதிமேதாவி போக்கும். வெளிநாட்டில் மூன்று திலகங்களை பற்றி கொடுத்த பேட்டி மூன்று பேரையும் பகையாளி ஆக்கி விட்டது
ராதா * நீதி மன்ற கூற்று படி பண பிரச்சினை பொறாமை இரண்டு காரணங்கள்
அசோகன் நேற்று இன்று நாளை படபாடல் கள் டூயுன். சரியில்லை என்று பலநாட்கள் கடத்தினார் தலைவர் கடைசியில் என்னிடம் கால்சீட் இல்லை அதனால்தான்
அப்படி. என்றார் அசோகன் தலைவரை விட்டு கொடுக்காமல் இருந்தார் விளைவு. ஒரு மினி. உ சு வா கிடைத்தது
சகுந்தலா வெள்ளிக்கிழமை ஷீட்டிங் நடந்து கொண்டிருந்த போது ஒருவரிடம் இருந்து போன் படம் தின்றது
நவரெத்தினம் தலைவர் எதிலும் தலையிடவில்லை படம் நல்ல விலைக்கு போனது படம் 60நாள்தான் ஓடியது வெள்ளி விழா ஓடும் என்று எதிர் பார்த்து போது.....By. mr.Elangovan Raja... Thanks...
-
எம்ஜிஆரின் உண்ணாவிரதம்!
மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி.
சில அரசியல் காரணங்களால், தமிழகத்துக்குக் கொடுத்து வந்த அரிசியை மத்திய அரசு திடீரென்று நிறுத்தியது.
இதைக் கண்டித்து 7 மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தார் எம்ஜிஆர். 1983, பிப்ரவரி 9ம் தேதி, காலை 10 மணிக்கு மெரினாவில் உண்ணாவிரதம் தொடங்கியது.
சில மணி நேரங்களிலேயே மத்திய அரசு, "வழக்கம்போல தமிழகத்துக்கு அரிசி வழங்கப்படும்" என்று அறிவித்தது..!!!.......... Thanks.........
-
இன்று (27/04/2020) காலை 11 மணிக்கு சன் லைஃப் சானலில் "உரிமைக்குரல்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது . காலை 7 மணிக்கு ஜெயா மூவீஸில் , "இதயவீணை"...... . ... Thanks...
-
-
-
-
-
-
-
-
'#எம்ஜியார் ஆட்சி தருவேன்' என்று முழங்கிய ரஜினி, அதே #எம்ஜிஆர் ஆட்சியில்தான் கைது செய்யப்பட்டார். ஏன்?
ஆம் நண்பர்களே.. அது 1979-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். 8-ஆம் தேதி காலை '#ரஜினிகாந்த்கைது' என்ற செய்தி முக்கிய நாளிதழ்களில் கொட்டை எழுத்துகளில் இடம் பிடித்தன.
'எம்.ஜி.ஆர் ஆட்சியில் நடந்த ரஜினியின் கைது செய்தியின் பின்னணி இதுதான்.
ரஜினியின் கைதுக்கு காரணமாக இருந்தவர் ஜெயமணி. வாரப் பத்திரிகை ஒன்றில், சினிமா செய்தியாளராக இருந்த ஜெயமணி, போலீஸில் அதிரடியாக அளித்த புகாரில்தான் ரஜினி கைதானார்.
''சென்னை மியூசிக் அகாடமி அருகில் சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே காரில் வந்த ரஜினிகாந்த், என் மீது மோத முயன்றார். நான் சுதாரித்து நகர்ந்து கொண்டதால் தப்பித்தேன். என் மீது காரை ஏற்ற முயற்சித்ததோடு என்னை கொலை செய்துவிடுவதாகவும் ரஜினிகாந்த மிரட்டினார்.''
-என ஜெயமணி கொடுத்த புகாரில் 1979 மார்ச் 7-ம் தேதி இரவு ரஜினி கைது செய்யப்பட்டார்.
அப்போது ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும்,
சப் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் ஆகிய இருவரும்தான் ரஜினியை கைது செய்தவர்கள்.
ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு முதலில் ரஜினி விசாரணைக்கு அழைக்கப்பட்டார். நள்ளிரவு வரையில் விசாரணை நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இ.பி.கோ 506 (மிரட்டுதல்), 336 (மற்றவர்களுக்கு ஆபத்து உண்டாக்கக் கூடிய காரியத்தில் கவனக் குறைவாக ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையின்போது வாக்குமூலமும் கொடுத்திருந்தார் ரஜினி.
''கார் ஓட்ட எனக்கு லைசென்ஸ் இல்லை. டிரைவர் இல்லாததால் காரை நானே ஓட்டினேன். ஜெயமணி என்னை தாக்கி நிறைய செய்திகளை எழுதினார். வழியில் அவரைப் பார்த்ததும் இதுபற்றி கேள்வி கேட்க நினைத்து, காரை நிறுத்தி பின்னால் இயக்கினேன்.
மோதவில்லை. அவரைக் கொலை செய்யும் நோக்கமும் எனக்கில்லை. காரைவிட்டு இறங்கியதும், ஜெயமணி செருப்பை கழற்றினார். அதனால் அவரின் சட்டையைப் பிடித்தேன். அவ்வளவுதான் நடந்தது. அவரை நான் மிரட்டவில்லை.''
-என வாக்குமூலத்தில் சொல்லி இருந்தார் ரஜினிகாந்த்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரஜினிகாந்த் மீண்டும் கைதானார். இந்த கைது ஐதராபாத்தில் நடந்தது.
இதுபற்றிய செய்தியை 'மாலை முரசு' பதிவு செய்திருக்கிறது. அதில் வந்த செய்தி இதுதான்.
'சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றிருந்தார் ரஜினி. ஜூன் 20-ம் தேதி சென்னை திரும்புவதற்காக இரவு 11 மணி விமானத்துக்கு டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது ரஜினி மது அருந்தியிருந்தார்.
ஏர்போர்ட்டுக்கு வந்ததும் அங்கிருந்தவர்களுடன் ரஜினி தகராறில் ஈடுபட்டார். தன்னுடன் வந்த நண்பர்களிடமே ரஜினி சண்டை போட்டார்.
ஏர்போர்ட் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். அவரை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள் அதிகாரிகள். அங்கிருந்த கண்ணாடிகளை ரஜினி உடைத்தார்.
இதனால் போலீஸ் அவரைக் கைது செய்தனர். அவரது விமான டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டது' என அந்த செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.'
- Vikatan Emagazine
இந்த மூஞ்சிதான் எம்ஜிஆ-ரின் நல்ல ஆட்சி தருமாம்.......... Thanks fb., Friends...
-
எம்.ஜி.ஆர்.தினமும் கேட்ட பாடல் !
'ஆண்டவன் கட்டளை', கே.சங்கர் இயக்கத்தில் சிவாஜி நடித்த படம். அதில் 'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு' என்ற கண்ணதாசன் எழுதிய பாடல் வரும். முருகனின் அறுபடை வீடுகளிலும் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சியில் நடிப்பதற்காக சிவாஜிகணேசன் சிகரெட் உட்பட எந்த பழக்கமும் இன்றி விரதமிருந்தாராம். ஒருவாரம் மேற்குறிப்பிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. சிவாஜியும்
செருப்பின்றி கடும் வெயிலில் நடித்திருக்கிறார்.
இந்த பாடல் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானது. தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டால் தான் அவருக்கு நிம்மதியும், மன அமைதியும் கிடைக்குமாம்.
"பாடல் கவிஞர் எழுதி, எம்.எஸ்* வி. இசையமைத்து, டி.எம். எஸ். பாடி,
சிவாஜி நடித்தது ஒரு சிறப்பு என்றால், இந்த பாடல் தெய்வாம்சம் கொண்டதாக இருக்கிறது. அப்படி ஒரு தன்மையுள்ள பாடல் இது. எனக்காக பாடலாக்கப்பட்ட மாதிரி இருக்கிறதே. இதில் நாம் நடித்திருக்கலாமோ என்று என்னை யோசிக்க வைக்கிறது " என்று எம்.ஜி.ஆர்., சங்கரிடம் சொன்னாராம்.
('இதயக்கனி' இதழுக்காக
திரு கொற்றவன், இயக்குனர்
திரு கே.சங்கர் அவர்களை சந்தித்து பேசி தொடராக எழுதியபோது விடுபட்டுப்போன விசயம் இது).
படம் : எம்.ஜி.ஆருடன் கே.சங்கர், உடன்
அவரது மகள் வயிற்று பேரன் சந்தீப்.
அண்மையில் காலமான அவரது மகள் விஜயலட்சுமி, பெரியவர்
திரு சக்ரபாணியின் மூத்த மகன்
திரு ராமமூர்த்தியை மணந்து கொண்டவர். ராமமூர்த்தி 'அரச கட்டளை'
படத்தின் தயாரிப்பாளர்.
Ithayakkani S Vijayan...... Thanks...
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்து திரையிடப்பட்ட
24, 25, 26 வது படங்கள்
வரிசைப் பட்டியலில், ஒவ்வொரு பதிவிலும் சிறிது முரண்பாடு உள்ளது...
சிலர் எம்ஜிஆர் நடித்த சர்வாதிகாரி தெலுங்கு படத்தை, வரிசைப் பட்டியலில் கடைசியில் சேர்த்திருக்கிறார்கள்...
சிலர் அவர் நடித்த ஏக் தா ராஜா இந்தி படத்தை கடைசியில் சேர்ந்திருக்கிறார்கள்...
இந்த முரண்பாடு ஏன் வந்தது என்று தெரியவில்லை...
சர்வாதிகாரி தமிழ்படம் வெளிவந்த 14.09.1951 அன்றே தெலுங்கு சர்வாதிகாரி வெளிவந்தது என்று சிலரும்...
05.10.1951ல்தான் வெளிவந்தது என்று சிலரும்... பதிவு செய்துள்ளார்கள்...
ஏக் தா ராஜா இந்திபடம் வெளிவந்த நாள் 15.06.1951 என்று சிலரும்,
15.12.1951.என்று சிலரும் பதிவு செய்துள்ளார்கள்........ Thanks mr. SKRK.,
-
#கட்சி ஆரம்பித்து 47-ஆண்டுகள் அதில் 30-ஆண்டுகள் ஆட்சி பீடத்தில்
தமிழகத்தை அதிக முறை ஆண்ட, ஆளுகிற, ஆண்டு கொண்டே இருக்கப்போகும் ஒரே கட்சி
இந்தியாவில் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதல்வரை கொண்ட கட்சி
கட்சி ஆரம்பித்து அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை பிடித்த கட்சி
இவற்றுக்கெல்லாம் மேலாக எந்தவித பிரதிபலனும் இல்லாமல் தலைமை மீது அளவில்லாத பாசம் கொண்ட கோடிக்கணக்கான விசுவாசமிக்க தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி
பொன்செம்மல் "புரட்சித்தலைவர்" ஆரம்பித்து, இதயதெய்வம் "புரட்சித்தலைவி" அவர்கள் வழி நடத்தும் கட்சி...
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்"........ Thanks CKS.,
-
எம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து!
"புதுமைப்பித்தன்' படத்தில் சந்திரபாபு எம்.ஜி.ஆரைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது இவர் நடிகர், புரட்சி நடிகர் என்று குறிப்பிடுவார். வசனம் கலைஞர்தான். வசனம் மட்டுமன்று அந்தப் பட்டத்தையும் கொடுத்தது கலைஞர்தான். இதனைப் பற்றி மணப்பாறை வசந்த கலா மன்றம் உறந்தை உலகப்பன் கூறுகிறார்: ""கலைஞரை எங்கள் நாடகம் ஒன்றிற்கு தலைமை வகிக்கக் கேட்டதுடன் எம்.ஜி.ஆரையும் முன்னிலை வகித்திட கூட்டிவரக் கோரினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் வருவதாக 3-4-1952-ல் தகவல் கார்டில் வந்தது. 5-4-52ல் திருச்சி தேவர் மன்றத்தில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், சினிமா நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னிலையில் என அச்சிடப்பட்டு வெளியாகியது.
✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
எம்.ஜி.ஆருக்கு ஒரு பட்டம் அளித்து நோட்டீசில் போடுவோம். நாடக மேடையில் அறிவித்துவிடலாம் என நினைத்து புரட்சி நடிகர் என வழங்கலாம் என்று முடிவுசெய்தேன். எங்களது குழுவிலுள்ள ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஜி.ஆர் என்ன புரட்சி பண்ணிவிட்டார். சினிமா நடிகர் என்றே போடுவோம் என்று தன் கருத்தைச் சொன்னார்.நான் பிடிவாதமாக என் எண்ணப்படியே செய்தேன். ஆயிரக்கணக்கான நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்தோம். மேக்கப்பைக் கூட சரியாகக் கலைத்திடாமல், கலைஞருடன் காரிலேயே 5-4-1952 மாலையே திருச்சி வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்...
✌..mgr.....✌
நாடகம் தொடங்கி இடைவேளையில் கலைஞர் அவர்களை, புரட்சி நடிகர் என எம்.ஜி.ஆரை கவுரவித்திட கோரிட, அவரும் தனக்கே உரிய பாணியில் பேசும்போது அன்பு என்பது மூன்றெழுத்து என்று சுமார் 33 மூன்று எழுத்து வார்த்தைகளை வரிசைப்படுத்தி முடிக்கும்போது, "அண்ணா' என்ற மூன்றெழுத்து, "தி.மு.க.' என்றமூன்றெழுத்து, ‘எம்ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்துக்காரருக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டத்தினை இந்தத் நாடக நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகம் செய்கிறேன்'' என்றபோது பலத்த கைத்தட்டலுக்கு இடையே எழுந்து நின்றார் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.......... Thanks.........
-
தவறு.
புரட்சித்தலைவருக்கு புரட்சிநடிகர் பட்டத்தை கொடுத்தவர் திருச்சி மணப்பாறையைச்சேர்ந்த உலகப்பன்....... Feedback ...Manithaneyam Groups... Thanks.........
-
எம்.ஜி.ஆருக்கு 'புரட்சி நடிகர்' என்ற பட்டம் வழங்கியவர் மணப்பாறையை
சேர்ந்த உறந்தை உலகப்பன். அதற்காக
எம்.ஜி.ஆரையும், மு.கருணாநிதியையும்
மணப்பாறைக்கு வரவழைத்து விழா நடத்திய உலகப்பன், கருணாநிதியைக் கொண்டே மேடையில் 'புரட்சி நடிகர்'
என்று அறிவிக்கச் செய்தார்.
1952 ல் நடைபெற்ற விழா அது.
இந்த விபரங்களையெல்லாம் மணப்பாறைக்கு நேரில் சென்று
திரு உலகப்பனை சந்தித்து பேசி படங்கள் எடுத்து 'தேவி' வார இதழில்
'எம்.ஜி.ஆர். கதை' தொடரில் எழுதினேன்.
Ithayakkani S Vijayan with Plato Rajagopalan........ Thanks........
-
மேடையில் வைத்து கருணாநிதியை அறிவிக்கச் செல்லலாமா அந்தாளு மலைமுமுங்கி நல்லவேளை இன்றாவது விவரம் தெரிந்ததே ... நாங்கள் கருணாநிதி கொடுத்ததாக நினைத்திருந்தோம் நன்றி...S.Kumar, Madurai... Thanks...........
-
Manithaneyam MGR:
Manithaneyam MGR: உண்மை இப்படி இருக்க
திமுக ஆதரவாளர்கள் கருணாநிதி தான் உங்க தலைவருக்கு புரட்சி நடிகர் பட்டத்தையே கொடுத்தார் என பொய்யாக பேசி வருகின்றனர் மேலும்
புரட்சித்தலைவரின் நினைவுநாள் சிறப்பு செய்திகளை சொல்லும் போது News 18 .Puthiya Thalaimurai and. News 7 ஆகிய சேனல்களும் அதையே திரும்ப திரும்ப பல வருடங்களாக சொல்லி வருவது பெரிய கொடுமை.......... Thanks...
-
"கணவன்", புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதை எழுதியத் திரைப்படம் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் முழக்கத்தில் மதுரை எஸ் குமார் ... எம்ஜிஆர் மன்றம்...
Sundarajan MGR: கண்ணியமிக்க
காவியநாயகனின்
கலைத்தென்றல்
கருணையின் வடிவம்
"கணவன்" படம்
கண்டுகளித்தேன்.
காணக்கிடைக்காத
தலைவரின் காட்சி
கதையும் அவர்தானே....👌👍💐....... Thanks...
-
மதுரை- தங்கம் தியேட்டர் தென் கிழக்கு ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் என்போர் ,அப்படிப்பட்ட தியேட்டரில் தலைவரின் "கணவன்" படம் ரிலீசன்று கூட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்,ஞாபகம் இருக்கிறதா... மதுரை குமார் சார்,அந்தசம்பவத்தன்று நீங்கள் தியேட்டருக்குப் போனீர்களா?!......MKR, Erode... Thanks...
-
"நினைத்ததை முடிப்பவன்", சேலத்தில் ஜெயா தியேட்டரில் ரிலீஸ் ஆனது,முதல் நாள் அன்று கூட்ட நெரிசலில் நான்கு பேர் உயிரிழந்தனர்... Thanks...
-
சேலம் -அலங்கார் 5 வாரங்கள் ,ஜெயா 11வாரங்கள் "நினைத்ததை முடிப்பவன்" , அரங்குகள் நிறைந்து வெற்றிகரமாக நடைபெற்று ஒடியது. ஒரே நாளில் 2 அரங்கு திரையிடப்பட்டது.......இது போன்ற நிகழ்வுகள் நம் புரட்சிநடிகரை தவிர வேறு எந்த நடிகருக்கு , நடிகர்களுக்கு நடந்துள்ளதா??????!!!!!......... Thanks...
-
மறக்கமுடியாத சம்பவம்... நான் திரையரங்கு போகவில்லை... இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலைவர் நிதியுதவி செய்தார். அன்றைய தி.மு.க நிர்வாகிகளை நம்பி அவர்கள் மூலமாகக் கொடுத்தார். அன்றைக்கே தி.மு.க போர்ஜரி நிதியில் பாதியை ஏப்பம் விட்டனர்கள். தலைவர் மதுரை வந்தபோது எதிர்கட்சிகள் பஞ்சாயத்து செய்தனர். மறக்கமுடியுமா?!.........SK... Thanks...
-
எம்ஜிஆாின் தமிழ் உணா்வு எப்படி பட்டது அறிவோமா!.....
ஒ௫சமயம் இதயம் பேசுகிறது அலுவகத்திற்கு தொலைபேசியில் தொடா்பு கொண்டு மணியன் இ௫க்கிறாரா என்று விசாாித்து இ௫க்கிறாா் எம்ஜிஆா் போனை எடுத்த டெலிபோன் ஆப்ரேட்டா் குட் ஆஃபடா் நுான் சாா் நீங்கசாா்?என்று கேட்டி௫க்கிறாா் எம்ஜிஆா்
நான்யா௫ என்று சொல்கிறேன் நீங்க இப்ப என்னவோ சொன்னீங்களே என்ன? என்று கேட்டாா் எம்ஜிஆா்
குட் ஆஃப்டா் நுான் னு சொன்னேன் சாா்
அம்மா நீங்களும் தமிழில் பேசுறீங்க நானும் தமிழிலே பேசுறேன் இதுக்கு நடுவில் ஆங்கிலம் எதற்கு? வணக்கம் என்று தமிழில் சொல்லாமே என்று சொல்லி விட்டு நான் எம். ஜி. ராமச்சந்திரன் பேசுறேன் னு சொல்லும்மா என்று சொல்ல அதைக் கேட்டதும் அந்த ஆபரேட்டா் பெண் தடுமாறி வாா்த்தை களைத் தந்தி அடித்தி௫க்கிறாா் நீ. பதட்டப்படாதே இனிமேல் போன் எடுத்துப் பேசும்போது வணக்கம் என்று சொல்லும்மா என்றாராம் எம் ஜி ஆா் என்னே எம் ஜிஆாின் தமிழ் உணா்வு வாழ்க எம்ஜிஆா் பரவட்டும் எம்ஜிஆாின் தமிழ் உணா்வு
நன்றி: எம் ஜிஆாின் வெற்றி ரகசியம் என்ற நுாலிலி௫ந்தது ......... Thanks...
-
#எம்ஜிஆர் #விட்ட #குத்து
புரட்சித்தலைவர் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம்...சாண்டோ சின்னப்ப தேவர் நாள் தவறாமல் சென்று பார்த்து வந்தார்...
ஒரு நாள் மாலை தி.நகர் ராஜா தெருவில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தீஸ்வர் கோயிலில் எம்ஜிஆர் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதங்களுடன் பணமும் எடுத்துக்கொண்டு, வசனகர்த்தா ஆரூர் தாஸையும் அழைத்துக்கொண்டு எம்ஜிஆரைப்பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். அறைக்குள் சென்றவுடன் விக்ரஹத்தின் மீது சாற்றப்பட்ட பூச்சரங்களை எம்ஜிஆர் கழுத்தில் போட்டு பிரசாதத்தையும் கொடுத்தார்.பணப்பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தார்.
எம்ஜிஆர் முற்றிலும் குணம் அடையாவிட்டாலும் முக்கால்வாசி உடல் நலம் தேறி, கழுத்துப்பகுதியில் முகவாய்க்குக் கீழே பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் பட்டையுடன் இருந்தார். அன்றைக்கு மருத்துவமனை அறைக்குள் இருந்த எம்ஜிஆர் குத்துச்சண்டை-பாக்சிங் வீரனைப்போல தன் இடது காலை முன்னே நீட்டி வைத்து வலது காலைபின்னுக்கு வைத்த நிலையில் நின்றபடி வலது கை விரல்களை மடித்து அந்த 'முஷ்டி'யினால் தேவரண்ணனின் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத தேவர் "அப்பா முருகா!" என்று கூறி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆருர் தாஸைப் பார்த்து "தாசு! அண்ணன் ஏன் இப்படி என் வயித்திலே குத்து விடுறாருன்னு புரிஞ்சிக்கிட்டியா? "
தாஸ்:--நல்லா புரிஞ்சுக்கிட்டேண்ணே. குண்டடி பட்டாலும் கூட, தன் பலம் தன்னை விட்டு போகலேங்குறதை உங்களுக்கு உணர்த்துறாரு. (எம்.ஜி.ஆரைப் பார்த்து) ஏண்ணே! அப்படித்தானே?
எம்.ஜி.ஆர்:-- அதேதான்...
அண்ணனுக்கு முழுக்குத்து.இதோ உங்களுக்கு(ஆரூர் தாஸுக்கு) ஒரு அரைக்குத்து என்று தன் கையை ஆரூர்தாஸின் வயிற்றை நோக்கி நீட்டினார். உடனே ஆரூர் தாஸ் தன் இரு கைகளையும் வைத்து வயிற்றை மூடிக்கொண்டு...."ஐயோ! அண்ணே! அவரு 'சாண்டோ' தாங்கிக்குவாரு.நான் வெறும் 'போண்டா' புட்டுக்குவேன், வேண்டாம். இதைக்கேட்டு இரு அண்ணன்களும் சிரித்தனர்.
தாஸ்:-- எப்பவுமே எச்சரிக்கை உணர்வோட இருக்குற நீங்க, அன்னிக்கு மட்டும் எப்படிண்ணே அவ்வளவு அலட்சியமா இருந்தீங்க?
எம்ஜிஆர்.:-- எப்பவுமே எச்சரிக்கையா இருந்தா எதுவுமே நடக்காது. எப்ப நாம் கொஞ்சம் கவனக்குறைவா இருக்கிறோமோ அப்பத்தான் ஏதாவது விபரீதம் நடக்கும்...அப்படி ஏற்கனவே நான் நிறைய அனுபவப் பட்டிருக்கேன்...ஆனாலும் நாம் சிலரிடம் வைத்திருக்கும் நம்பிக்கையினால் என்னையும் மீறி எது நடந்ததோ அது நடந்துதானே தீரும்...!!!???
அதை யாராலும் தடுக்க முடியாது இல்லியா?...... Thanks...
-
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்
செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்
பொன்மன தலைவரின் வாழ்வில் அவரின் தத்துவங்கள் தானே வென்றது..... Thanks...
-
MGR Filmography - Film 50 (1961) Poster
தலைவரின் 50வது படம் பிரமாண்ட சரித்திரபடமாகவும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சமூக படமாகவும்இல்லாமல் அமைந்ததிரைப்படம் 1959ஆம் வருடம் தாய் மகளுக்குக் கட்டிய தாலி என்றொரு .சராசரி படத்திற்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் அண்ணாதுரை கதையில் எம்ஜியார் நடித்த படம் நல்லவன் வாழ்வான். இந்த முறை அண்ணாதுரை கதையோடு நிறுத்திக் கொள்ள வசனத்தை நா. பாண்டுரங்கன் எழுத, எம்ஜியாரின் அபிமான டைரக்டரான ப.நீலகண்டன் படத்தை இயக்கினார். அரசியலில் உச்சிக்குப் போனாலும், திரையுலகில் அண்ணாதுரை மகத்தான வெற்றிகளை ஈட்டவில்லை. டி.ஆர். பாப்பாவின் இசையில் பாடல்கள் பிரபலமடைந்தாலும், படம் ஆவரேஜாகத்தான் போனது.
எம்ஜியாரின் வழக்கமான ஜோடிகள் அல்லாமல், பல படங்களில் வாம்ப்பாக நடித்த ராஜசுலோசனா இதில் அவருக்கு ஜோடி சேர்ந்ததும் ரசிக்கப்படாமல் போனதும் ஒரு காரணம்.
இந்தப் படத்தின் விசேஷம்: 'குத்தால அருவியிலே' மற்றும் 'சிரிக்கின்றாய் இன்று சிரிக்கின்றாய்' ஆகிய இரண்டு பாடல்களையும் எழுதிய வாலிக்கு இந்தப் படம்தான் எம்ஜியார் யூனிட்டில் என்ட்ரி என்பதே....... Thanks...