எனக்கென்னவோ, ஆதியைப்பார்த்தால் (ரஞ்சனைப்போல) பெண்கள் பின்னால் சுற்றுபவனாத் தோன்றவில்லை. ரேகாதான் அவனிடம் வழிகிறாளே தவிர, அவன் ரேகாவை தவறான எண்ணத்தில் அணுகவில்லை.Quote:
Originally Posted by aanaa
அவனுடைய குறிக்கோள் எல்லாம் ஆஸ்தி, பணம், தொழில், அந்தஸ்து மோகம், தான் என்ற அகம்பாவம், ஈகோ, ஆணாதிக்க வெறி இவைகள்தான். அவன் மனதுவைத்தால் எத்தனையோ அழகான பெண்களை தினம் தினம் அடைய முடியும். ஆனால் அது அவனது நோக்கமாக தெரியவில்லை. சமுதாயத்தில் தனது 'ஸ்டேட்டஸ்' உயரத்தில் இருக்க வேண்டும். அதற்காக எந்த ஒரு கிரிமினல் வேலையும் செய்யத் தயாராக இருப்பவன்.
இப்போது அவன் மேனகாவை அடைய விரும்புவது கூட அந்தஸ்து மோகத்தினாலேயேதான். 'இண்டர்நேஷனல் பிஸினஸ் உமன்' மேனகாவின் கணவன் என்ற இன்னொரு ஸ்டேட்டஸுக்காகத்தான்