திரு.எம்.ஜி.ஆர். குமார், திரு காந்தி கண்ணதாசன் தன் மனைவியுடன்
http://i57.tinypic.com/212deu.jpg
Printable View
திரு.எம்.ஜி.ஆர். குமார், திரு காந்தி கண்ணதாசன் தன் மனைவியுடன்
http://i57.tinypic.com/212deu.jpg
மேடையில் லக்ஷ்மன் ஸ்ருதி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும் காட்சி.
http://i61.tinypic.com/2gww36b.jpg
NADIGAN KURAL- 1961
http://i60.tinypic.com/33wwtbl.jpg
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகத்தின் நடிகன் குரல் -1961 இதழ் -ஆவணம் மிகவும் அருமை .பல்வேறு சினிமா செய்திகள் , திரைப்பட விளம்பரங்கள் , தயாரிப்பில் இருந்த படங்களின் ஸ்டில்கள்
அரியதொரு பொக்கிஷம் .இத்தனை ஆண்டுகள் பத்திரமாக பாது காத்து வைத்து திரியில் பதிவிட்டஉங்களுக்கு நன்றி .
1972ல் - எல்லோரையும் வியக்க வைத்த தமிழ் சினிமா மற்றும் அரசியல் நாயகன் எம்ஜிஆர் .
யாருமே எதிர்பார்த்திராத இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் விருது எம்ஜிஆருக்கு கிடைத்தவுடன் இந்தியா முழுவதும் ஒரே நாளில் எம்ஜிஆர் பரப்பரப்பாக பேசப்பட்டார் . எம்ஜிஆருக்கு பாராட்டு தந்திகளும் , லட்சக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களும்
திக்கு முக்காட செய்து விட்டது . பத்திரிகைகள் பாராட்டு மழையில் எம்ஜிஆர் நனைந்தார் .
சில விமர்சனங்களும் இருந்தது . அதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை
அக்டோபர் 1972 எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கம் என்ற ஒரு வரி செய்து தமிழ் நாட்டையே கொந்தளிக்க செய்து விட்டது . மக்கள் வெள்ளம் எம்ஜிஆரை அரவணைத்து கொண்டது .
அக்டோபர் 17ல் புரட்சி நடிகர் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார் .
ஒரு பக்கம் அரசியலில் தீவர பங்கு . மறுபக்கம் சினிமாவில் தொடர்ந்து நடிப்பு என்று இரட்டை குதிரை சவாரியில் அவருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது ..எம்ஜிஆர் படங்கள் தொடர்ந்து ஹிட் . பல புது படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் .
எம்ஜிஆர் ஒரு அதிசயம் மட்டுமல்ல . சாதனைகளின் சகாப்தம் படைத்த மன்னாதி மன்னன் .
நன்றி - கவியரசு - முக நூல்
என்னை யாரும் அழிக்க முடியாது!
கொளுத்தும் கோடை வெயிலில் காலிலே செருப்பு கூட இல்லாமல்,கை வண்டி இழுத்து செல்லும் ஏழை பாட்டாளிகள் என்னை கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு என்னை வாழ்த்துகிறார்கள்.என்னிடம் மாறாத அன்பும்,நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இம்மாதிரி வாழ்த்திக் கொண்டிருக்கும் வரை..
என்னை யாரும் அழிக்க முடியாது...
17-8-80 சாவி வார இதழுக்கு அளித்த பேட்டியில் நமது தெய்வம்..
என்னை யாரும் அழிக்க முடியாது!
கொளுத்தும் கோடை வெயிலில் காலிலே செருப்பு கூட இல்லாமல்,கை வண்டி இழுத்து செல்லும் ஏழை பாட்டாளிகள் என்னை கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு என்னை வாழ்த்துகிறார்கள்.என்னிடம் மாறாத அன்பும்,நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இம்மாதிரி வாழ்த்திக் கொண்டிருக்கும் வரை..
என்னை யாரும் அழிக்க முடியாது...
17-8-80 சாவி வார இதழுக்கு அளித்த பேட்டியில் நமது தெய்வம்..
உ.சு.வா படம் வெளிவந்த சமயம் நான் PUC (1972) படிப்பு முடித்து பொறியியல் படிப்பை மேற்க்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தேன்.
PUC கல்லூரி விடுமுறை சமயத்தில் உ.சு.வா ரிலீஸ் ஆகியது.
விடுமுறைக்கு எனது உறவினர் இருந்த செஞ்சி என்ற ஊருக்கு சென்றிருந்தேன்.
உறவினர்கள் குடும்பத்துடன், ஒரு பத்து பேர், அனைவரும் தலைவரின் ரசிகர்கள், திருவண்ணாமலைக்கு picnic செல்வது போன்று பயணம் செய்து, ரிலீசான இரண்டாவது நாள் படத்தைப் பார்த்தோம்.
அருமையான அனுபவம்.
படத்தில் தலைவர் நம்மையெல்லாம் அப்படியே மயக்கி விட்டார்.
இந்தியாவை விட்டு வேறு உலகத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வை படத்தில் ஏற்படுத்தியாருந்தார்.
அந்த மயக்கத்திலிருந்து என்னை மீட்க சில நாட்கள் ஆயின.
இந்த அனுபவத்தை மறக்க முடியுமா?
1972ல் தினத்தந்தியில் நான் படித்ததாக நினைவு என்னவென்றால், தாய்லாந்து நடிகை மேத்தா ரூங் ரெத்தா அவர்கள் உ.ச.வா படம் வெளிவரும் பொழுது இவ்வுலகில் இல்லை என்பதுதான் அந்த செய்தி.
இந்த செய்தியை அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தது மட்டும் நினைவிற்கு வருகிறது.
முழு விவரம் சரியாக நினைவில்லை.
அதனால்தான் அன்பர்கள் யாருக்காகவாவது தெரிந்திருந்திருக்குமோ என்று கேட்டு பதிவில் எழுதியிருந்தேன்.
by venkat rao his fb page the matter is true?
http://i60.tinypic.com/2ce27g4.jpg
From Facebook - Posting by Mr. Gurunathan. Thanks to him.
Evening Professor Sir,
I paste one response which I received:
22/11/2014
One of my Thai friends works at Thai Film Archives so he has contacts with many Thai actors / actresses through his job. He can try to get an appointment with Mrs Metta Roongrat. But she is now 72 years old and has not played in TV series / movies since 3 years. Anyway he cannot promise but he will try. Maybe if you have a few beautiful pictures from the movie "Ulagam Sutrum Valiban" with Metta Roongrat it could help.
Anyway let me know exactly when you plan to go to Thailand to deliver the DVD so that we can try to arrange for an appointment.
It would be nice to record this event through pictures and video. So i will ask some friends in case i am not in Thailand at that time.
Do you know if the movie "Ulagam Sutrum Valiban" was released in Thailand in 1973? I couldn't find the Thai title neither the poster if any.
----xxx---
19/11/2014
Metta Roongrat is a Thai personnality so getting her address personal address is not that easy.
Let me check with my Thai friends how we can proceeed on this. I will come back to you.
Are you digitalizing movie "Ulagam Sutrum Valiban" in HD format? Will it be possible to buy a copy from overseas?
The person whom I was in touch is Regis Madec <thaiworldview@gmail.com>
Thanks,
Thank you & Best Regards,
Regis MADEC
நமது திலகங்கள்
http://i1170.photobucket.com/albums/...psvyvaoqfg.jpg
வாலு' அப்டேட்: எம்ஜிஆர், ரஜினி, அஜித் கெட்டப்களில் சிம்பு
வாலு' படத்தின் 'தாறுமாறு' பாடலுக்கு எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் உள்ளிட்ட கெட்டப்களில் நடனமாட இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்க நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த படம் 'வாலு'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜூலை 17ம் தேதி சிம்பு சினி ஆர்ட்ஸ் இப்படத்தை வெளியிட இருக்கிறது.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் போது, 'தாறுமாறு' என்ற பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது அப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியதைத் தொடர்ந்து 'தாறுமாறு' பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சரோஜா தேவி, குஷ்பு, சிம்ரன் உள்ளிட்ட பல்வேறு நடிகைகளை வைத்து படமாக்கப்பட இருந்த 'தாறுமாறு' பாடல் தற்போது சிம்பு - ஹன்சிகா இருவரையும் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இப்பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் உள்ளிட்ட நடிகர்களின் கெட்டப்களில் ஆடி வருகிறார் சிம்பு. எம்.ஜி.ஆர் காட்சிக்கு என்று ஒரு செட், ரஜினி காட்சிக்கு என்று ஒரு செட் என தனித்தனியாக செட்கள் போடாமல், ஒரு நாள் ஒரு நடிகரின் பகுதி படப்பிடிப்பு என்று திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இப்பாடல் படப்பிடிப்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வரை நடைபெற இருக்கிறது.
ஜூலை 17ம் தேதி 'வாலு' படத்துடன் தனுஷ் நடித்த 'மாரி' படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
courtesy the hindu tamil
தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார், எம்.ஜி.ஆர்.
"இளைய தலைமுறை" படப்பிடிப்பின்போது 9 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த விஜயகுமாருக்கு தோள்பட்டை பிசகி, சில நாட்கள் ஓய்வில் இருந்தார். புதிய பட வாய்ப்பு கிடைத்து சத்யா ஸ்டூடியோ சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.
தான் நேசிக்கும் எம்.ஜி.ஆர். எதிரில் வந்ததும் ஒரு கணம் செய்வதறியாது திகைத்து விட்டார், விஜயகுமார். "வணங்கிச் செல்வதா? வழி விடுவதா?" என்று அவர் முடிவெடுத்து செயல்படுவதற்குள் எம்.ஜி.ஆரே அவரை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு நலம் விசாரித்தார்.
இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"அண்ணன் எம்.ஜி.ஆர். நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் என் கைகளை பற்றிக்கொண்டு, "கை எப்படி இருக்கிறது விஜயகுமார்?" என்று கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். வார்த்தைகள் உடனடியாக வரவில்லை. இருந்தாலும் பதட்டத்தைத் தவிர்த்து, "பரவாயில்லை. வலி குறைந்து விட்டது" என்று தெரிவித்தேன்.
அப்போதும் அவர் போய்விடவில்லை. "சினிமாவில் இந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கக் கூடாது. எந்த வகை அதிரடி காட்சி என்றாலும் அதை ஒரிஜினல் மாதிரி வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
அதன் பிறகு எந்த மாதிரி சிகிச்சைகள் தரப்பட்டன என்பது பற்றி கேட்டார். சொன்னேன். 'பிஸியோதெரபி' சிகிச்சை மூலம், கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பற்றியும் விவரித்தேன்.
பொறுமையாக கேட்டவர், "எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கிறது. இதற்கு நாட்டு மருந்து நல்ல பலன் தரும். மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் நாட்டு மருந்துக்கடை இருக்கிறது. அங்கே 'கரியபவளம்' என்ற நாட்டு மருந்து கேட்டால் தருவார்கள். அதை உரசி, சதைப் பிடிப்பு இருக்கிற இடத்தில் போட்டால் தசைப்பிடிப்பில் ஏற்பட்டு இருக்கும் இறுக்கம் சரியாகி விடும். இன்றைக்கே வாங்கி போட்டுப் பாருங்கள்" என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.
அவருக்கும் அன்றைய தினம் சத்யா ஸ்டூடியோவில்தான் படப்பிடிப்பு இருந்தது. அதனால் மதியம் 'லஞ்ச் பிரேக்'கின்போது எனக்கு அழைப்பு விடுத்தார். நான் கொஞ்சம் தயக்கத்துடன் போய் சந்தித்தபோது, "என்னுடன் சாப்பிடுங்கள்" என்று கூறினார். அந்த அன்பை தவிர்க்க முடியுமா? பாக்கியமாக எண்ணிக்கொண்டேன்.
ஒருவரை பிடித்துவிட்டால், அவர் விஷயத்தில் தனி அக்கறை செலுத்துவது எம்.ஜி.ஆருக்கு உரிய பண்பாடு என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் விஷயத்திலும் பரிபூரணமாய் உணர்ந்தேன்.
டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் வி.டி.எல்.எஸ். என்ற படக்கம்பெனி "இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தை தயாரித்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். படம் தொடங்க இருந்த நேரத்தில், திடீரென ஒருநாள் அந்த கம்பெனியின் தயாரிப்பு நிர்வாகி என்னை சந்தித்தார். "இந்தப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். 'சின்னவர்' உங்களை அவரது தங்கை கணவர் கேரக்டரில் போடச் சொன்னார்" என்றார்.
எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. 'சின்னவர்' என்றால் யார் என்று தெரியாததுதான் இதற்குக் காரணம். அப்புறம் தான் எம்.ஜி.ஆரை எல்லாரும் 'சின்னவர்' என்றுதான் சொல்வார்கள் என்று சொன்னார்கள்.
(எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி 'பெரியவர்' என்று அழைக்கப்பட்டார்)
அப்போது என் சம்பள விஷயம் பற்றி எதுவும் அந்த தயாரிப்பு நிர்வாகி பேசவில்லை. முதல் படத்தில் நான் வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்தான். அதுவும் முதலில் 200. பிறகு 300. பிறகு ரிலீசுக்கு முந்தின நாள் 500 என்று கொடுத்தார்கள். பிறகு தொடர்ந்து படங்கள் வரவர, சம்பளமும் 5 ஆயிரம், 7 ஆயிரம் என்று கூடியது. தொடர்ந்த வாய்ப்புகளில் 10 ஆயிரத்தில் நின்று கொண்டிருந்தது. சிவாஜி சாருடன் நடித்த பிறகு 12 ஆயிரம் வாங்கினேன்.
எம்.ஜி.ஆர். பட தயாரிப்பு நிர்வாகி என்னிடம், "என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். பதிலுக்கு நான், "சம்பளம் இருக்கட்டும் சார்! எந்த தேதிகள் வேண்டும் என்று சொல்லுங்க. கால்ஷீட் போட்டுக்கலாம்" என்றேன். நான் என் சம்பள விஷயம் சொல்லத் தயங்குகிறேன் என்பதை புரிந்து கொண்ட அந்த நிர்வாகி, "சரி! இப்ப பத்தாயிரம் ரூபாய் அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள். மற்றதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்" என்று பணத்தை கொடுத்தார்.
எனக்கு அதிர்ச்சி. அட்வான்சே பத்தாயிரமா? அதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளமே கிட்டத்தட்ட இதே அளவில்தான்! எனக்கு 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து என் சம்பளத்தை அதிகமாக்கியவரே அண்ணன் எம்.ஜி.ஆர்.தான்.
"இன்று போல் என்றும் வாழ்க" படப்பிடிப்பில் அவரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அருகில் அழைத்தவர், பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். படப்பிடிப்பில் மற்ற எல்லாருமே 50 அடி தூரத்தில்தான் அவருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கியிருந்த நேரம். காங்கிரஸ் ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராக இருந்தார். அவர் "எம்.பி." தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்த 40 பேர், படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
அன்று மாலை 'பாம்குரோவ்' ஓட்டலில் கட்சி பொதுக்குழுவை கூட்டியிருந்தார். "ஒருவேளை படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டால் என்னை எதிர்பார்க்காதீர்கள். எனக்கு பதிலாக இந்த தம்பியை அனுப்பி வைக்கிறேன்" என்று என்னை அவர்களிடம் சுட்டிக்காட்டிச் சொன்னார். அந்த அளவுக்கு அவர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்காக இதைச் சொன்னேன்."
இவ்வாறு கூறினார், விஜயகுமார்.
https://www.youtube.com/watch?v=wIg4q6NLl4w
thanks sailesh sir
TODAY 11.00AM WATCH SUNLIFE TV
http://i61.tinypic.com/2898x2b.jpg
http://i61.tinypic.com/9kcyoo.jpg