http://i57.tinypic.com/34zzh2q.jpg
Printable View
Mr Muthaiyan Ammu
Thanks a lot for the wonderful photos of NT in En Thambi which is my one of the favourite movie.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...df&oe=56C18E31
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...af&oe=56899FAD
தகவல் மற்றும் அழைப்பிதழ் நிழற்பட உபயம் - புதுக்கோட்டை மாவட்ட சிவாஜி மன்றம் மற்றும் திரு அண்ணாதுரை, அகில இந்திய சிவாஜி மன்றம்.
It is time to choose the next hubber to start the Part 17 of this glorious thread and there are many stalwarts who
can be given an opportunity like Mr Senthilvel,Mr Adiram,Mr Athavan Ravi to name a few. The decision of the
moderator is final.
அன்பு நண்பர்களே,
நமது திரியின் அடுத்த பாகத்தை துவக்கி வைக்க நமது ஆவணக்களஞ்சியம் திரு. செந்தில்வேல் அவர்களே பொருத்தமானவர் என்பது எனது அபிப்பிராயம்.
எனவே நண்பர்கள் அனைவரும் அவரை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
நாளின் பெரும்பகுதி
நடிகர் திலகத்திற்காக...
கற்றறிந்த படிப்பறிவு,
அந்த கலையரசரைப் பற்றி
சொல்லப்பட்டதையெல்லாம்
வாசிப்பதற்காக...
தெளிந்த நினைவாற்றல், அந்த
வாசிப்பையெல்லாம் மனனம்
செய்வதற்காக...
"அ" போட்டுத் துவங்கி, பழகி, சிறந்த எழுத்தறிவெல்லாம் அந்த அன்பு தெய்வத்தின் கீர்த்தி
எழுதுவதற்காக...
-என்றே வாழ்ந்து வரும்
இனிய நண்பர் திரு. செந்தில்வேல் அவர்களையே
திரி-17 ஐ துவக்கிடச் செய்ய வேண்டுமென்று நானும்
அன்புக் கோரிக்கை வைக்கிறேன்.
எந்தச் சுனாமிக்கும் அழியா
வண்ணம் அவர் சேகரம் செய்து
தந்திருக்கும் ஆவணப் பதிவுகளுக்கெல்லாம், நாம்
அவருக்குச் செலுத்த வேண்டிய
பதில் மரியாதைக்கு ஒரு துவக்கமாகவும் அது அமையும்
என்பது இந்த எளியவனின்
கருத்து.
நிற்க.
மதிப்புக்குரிய திரு.s.வாசுதேவன் அவர்கள்,
திரி-17 ஐ துவக்கி வைக்க,
திரியின் ஜாம்பவான்கள் இருவரின் பெயர்களையடுத்து
இந்தச் சிறுவனின் பெயரையும்
மூன்றாவதாய் சிபாரிசு செய்திருந்ததைப் பார்த்து
அதிர்ந்தாலும், மிகக் குறுகிய
காலத்தில் அவரைப் போன்ற
நல்லிதயங் கொண்டோரின்
அன்பில் நிறைந்திருக்கிற
பாக்யம் எனக்குக் கிட்டியிருப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன். நன்றிகள் அவருக்கு.
அன்பு நண்பர் திரு.செந்தில்வேல் அவர்களை
முதலில் சிபாரிசு செய்த
திரு.s.வாசுதேவன் அவர்களுக்கும்,
அதனை உரக்க வழிமொழிந்த மதிப்புக்குரிய திரு.ஆதிராம் அவர்களுக்கும்..
எனது நன்றிகள்.
From writter Mr. Sudhangan's face book,
https://scontent-sin1-1.xx.fbcdn.net...fc&oe=56B5CBEC
செலுலாய்ட் சோழன் – 96
` சரஸ்வதி சபதம்’ படத்தின் ஆரம்ப காட்சியிலேயே படம் சூடு பிடிக்கும்!
நாரதரான சிவாஜி சரஸ்வதியான சாவித்திரியை பாராட்டிக்கொண்டு வருவார்!
தன்னுடைய கோமாதா பூஜையில் வந்து கலந்து கொண்டதற்காக, நீயும் வந்து அழைப்பில்லாமேலே கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்பார் சரஸ்வதி!
அழைப்பில்லாவிட்டாலும், வரவேண்டும் வாய்ப்பு என்றிருந்தால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என்பார் நாரதர்!
`உன்னை அழைப்பதில் தவறில்லை! ஆனால் உன்னை அழைத்தால் ஏதாவது பிரச்னையை உருவாக்கிவிடுவாயே!
உடனே நாரதர் சிவாஜி இந்த இடம் இன்று `லட்சுமி கடாட்சம்’ ஆக இருக்கிறது’ என்பார்
உடனே சரஸ்வதி நாரதரை அருகில் அழைத்து,` என்ன நாரதரே இந்த இடத்தை லட்சுமி கடாட்சம் என்கீறீர்கள்!. சரஸ்வதி கடாட்சம் என்று சொல்லும்! இப்படியாக விவாதம் ஆரம்பித்து! சரஸ்வதியின் கணவர் பிரம்ம தேவனும், நாரதனும் கல்வியை விட செல்வம்தான் சிறந்தது என்பார்கள்!
உடனே வீறுகொண்ட சரஸ்வதி, செல்வம் இருக்கும் போகும், ஆனால் கல்வியே நிரந்தரம். அதனால் நான் உடனே பூலோகம் சென்று வாய் பேச வராத ஒரு ஊமையை பேசவைத்து அவனை ஒரு பெரும் புலவனாக்கி, நாடாளும் அரசர்கள் கூட அவன் காலடியில் விழ வைக்கிறேன்! என்று கிளம்பிவிடுவார்.
கதை அங்கேயே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்!
அடுத்த நாரதன் அங்கேயிருந்து அலைமகளான லட்சுமியிடம் போய் இந்த விவகாரத்தை பற்ற வைப்பார்!
அங்கே போனதும், லட்சுமி கேட்கும் போது செல்வத்தை விட கல்விதான் சிறந்தது என்பான்!
சீற்றமடைவாள் லட்சுமி!
நாரதன் சொன்னதை திருமாலும் ஆமோதிப்பார்!
உடனே லட்சுமி, ` அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்கும் ஒருவரை ராஜ்ஜியத்திற்கே ராஜாவாக்கி, படித்தவர்கள் அனைவரையும் அவர் காலில் விழ வைத்துக்காட்டுகிறேன் ‘ என்று கிளம்புவார்.
அடுத்த நாரதன் மலைமகளான பார்வதியை பார்க்க கைலாயம் போவார்!
இங்கே சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் நடக்கும் சண்டையை பற்றி அங்கே பத்த வைப்பார்!
உடனே சீறுவார் பார்வதி!
`நான் ஒருத்தி இருப்பதை அந்த இருவருமே மறந்துவிட்டார்கள். இந்த இரண்டையும் விட வீரமே சிறந்தது! வீரமில்லையேல், ஒரு நாட்டில் கல்வியும், செல்வமும் ஏது? இப்போதே பூலோகம் சென்று ஒரு கோழையை வீரனாக்கி அவன் முன்பு கல்வியையும் செல்வத்தையும் மண்டியிடச் செய்கிறேன் என்று கிளம்புவார்!!
எது சிறந்தது?
என்கிற கேள்விகள் இப்போது எழும்!
அந்த கேள்விகள் சரஸ்வதி சபதம் படத்தின் கதை!
புராண பின்னனியில் அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை!
எப்படியெல்லாம் கதை யோசித்திருக்கிறார்கள் அன்றைய இயக்குனர்கள்!
கல்வியா? செல்வமா ? வீரமா? எது சிறந்தது இதுதான் இன்றைய காலகட்டத்திலும் நம் சமூகத்தின் முன் நிற்கும் கேள்விகள்!
இன்றைக்கு நாம் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியிருக்கிறோம்!
தகவல் தொடர்பு மிகவும் எளிதாகிவிட்டது!
உலகமே ஒரு கணினியின் முன் ஒரு கிராமமாகிவிட்டது!
ஏராளமான படித்தவர்கள் இருக்கிறார்கள்!
புலம் பெயர்கிறார்கள்!
அந்நிய நாட்டுக்காக நாம் வேலை செய்கிறோம்!
இந்த இந்திய சூழலில் நாம் நமக்கே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விதான் கல்வியா / செல்வமா? வீரமா ?
நம் நிலையென்ன?
கல்வி என்பது ஞானத்திற்கு என்பது மறைந்துவிட்டது.
கல்வி என்பது செல்வம் சேர்ப்பதற்கான ஒரே வழியென்றாகிவிட்டது!
கல்விக் கூடங்கள் மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மனிதர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது!
செல்வம் இருப்பவனிடம் தாழ்பணிந்து, காரியத்தை சாதித்துக்கொள்வதுதான் வீரமென்றாகிவிட்டது!
அப்ப்படியானா இந்த கேள்விகளுக்கு விடை தான் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு ஒரு பாடல் வாயிலாக இந்த படத்தில் பதில் சொல்லியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.!
இதைவிட இந்த கேள்விகளுக்கு சிறந்த பதிலை கொடுத்துவிடமுடியுமா என்பது சந்தேகம்தான்!
இந்தப் பாடலை பெரும்பாலான் ஊடகங்கள் ஒலி, ஒளிபரப்புவதேயில்லை!
பாடல் இதுதான்!
கல்வியா செல்வமா வீரமா
அன்னையா தந்தையா தெய்வமா ?
ஒன்றில்லாம மற்றொன்று உருவாகுமா ? – இதில்
உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா ?
கற்றோர்க்குப் பொருளின்றிப் பசிதீருமா – பொருள்
பெற்றார்க்கூ அறிவின்றி புகழ் சேருமா?
கற்றாலும் பெற்றாலும் பலமாகுமா ? வீரம்
காணாத வாழ்வென்றும் வாழ்வாகுமா ?
படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா – பொருள்
படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா
படித்தவன் படைத்தவன் யாராயினும் – பலம்
படைத்திருந்தால் அவனுக் கிணையாகுமா ?
ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது – அது
ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
ஒன்றையொன்று பகைத்தால் உயர்வேது – மூன்றும்
ஓரிடத்தில் இருந்தால் நிகரேது ?
மூன்று தலைமுறைக்கும் நிதிவேண்டுமா – காலம்
முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா
தோன்று பகை நடுங்கும் பலம் வேண்டுமா – இவை
மூன்றும் துணையிருக்கும் நலம் வேண்டுமா ?
படத்தின் கதைக்கான அடிப்படை 3 கேள்விகளையும், அதன் ஆழத்தையும், அதற்கான பதிலையும் பாடலிலேயே சொல்லியிருப்பார்!
கண்ணதாசன் ஒரு படத்திற்கு பாடல் எழுதுகிறார் என்றால், அந்த படத்தின் கதையை பாடலிலேயே எளிமையாக விளக்கிவிடுவார்!
இதற்கு பல படங்களை உதாரணமாக சொல்லலாம்!
`சரஸ்வதி சபதம்’ படத்தின் இன்னொரு சிறப்பே அதன் பாத்திர தேர்ந்தெடுப்பு!
அந்த பாத்திர தேர்வைக் கண்டே மக்கள் மிரண்டு போனார்கள்!
சிவாஜிக்க்கு நாரதர், புலவன் வளையாபதி வேடம்
கலைமகளாக சாவித்திரி!
அலைமகளாக தேவிகா !
மலைமகளாக பத்மினி!
பிச்சையெடுக்கும் பெண்ணாக இருந்து மகாராணியாக மாறும் வேடத்தில் கே.ஆர். விஜயா!
கோழையாக இருந்து வீரனாக மாறும் வேடத்தில் ஜெமினி கணேசன்!
அடுத்துதான் திரைக்கதையின் சிறப்பே விளையாடும்!
சிவாஜி படங்களின் மூலமாக தமிழை கற்றுக்கொண்டேன் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு!
அதற்கு உதாரணமாக இந்தப் படத்தையே சொல்லலாம்!
மேலோகத்தில் நாரதன் கிளப்பிய புயல் இப்போது பூலோகத்திற்கு வரும்!
முதலில் அப்பாவி ஊமை ஒருவன் நந்தவனத்தில் பூ பறிக்க போகும்போது காவலர்கள் ரத்தம் வரும் வரையில் அடித்துவிடுவார்கள்!
தலைமை காவலாளி நாகேஷ் வந்து காப்பாற்றுவார்!
அந்த ஊமை ஒரு புலவரின் மகன்!
தன் புலமை தன்னோடு போய்விட்டதே என்று நொந்து கொண்டிருக்கும் புலவர்!
காயம்பட்ட பிள்ளையைப் பார்த்து கண்ணீர் வடிப்பார்!
அந்த பிள்ளையோ ரத்தக் காயத்தோடு அழுதபடி, சரஸ்வதியின் படத்திற்கு மாலை போட்டுக்கொண்டேயிருப்பார்!
அப்போது கலைமகள் வந்து ஆசீர்வதிப்பாள்!
அந்த ஊமையின் உருவம் மாறும்!
உச்சரிப்புகள் வரு!
அவன் இப்போது பாட ஆரம்பிப்பான்!
அங்கே தான் கண்ணதாசனும், நாகராஜனும் புகுந்து விளையாடியிருப்பார்கள்!
திரு.பரணி சார்...
செலூலாய்ட் சோழன்-96
கட்டுரையில், " சரஸ்வதி சபதம்" படத்தில் நடிகர் திலகம்
ஏற்ற புலவன் கதாபாத்திரத்தின்
பெயர் "வளையாபதி" என்றிருக்கிறது.
அது, "வித்யாபதி" அல்லவா?
I second the proposal by Mr.S.Vasudevan to name out Mr.S.Senthilvel to inaugurate
the elite and prestigious part 17 of our beloved NT's thread soon!!
senthil
முத்தையன்
என் தம்பி என்று அனைவரும் அழைக்கும் அன்பைப் பெற்ற தங்களின் என் தம்பி நிழற்படங்கள் ஒவ்வொன்றும் அருமை.
பாராட்டுக்கள்.
Reproduced from and courtesy: http://www.indiaglitz.com/thala-ajit...ws-145583.htmlQuote:
Ajith to play Sivaji Ganesan's famous Historical role?
https://igmedia.blob.core.windows.ne...an_281015m.jpg
We had already reported that director Vishnuvardhan has joined hands with noted novelist and screenwriter Balakumaran to film one of his historical stories. It is now rumored the story deals with the building of the Thanjavur Temple during the times of Raja Raja Cholan. Vishnuvardhan is said to be keen on casting his favourite hero Thala Ajith as the great Chola King.
It is worth remembering that Nadigar Thilagam Sivaji Ganesan has won many accolades playing King in ‘Raja Raja Cholan’ which was the first Cinemascope film in Tamil cinema. If things work out Ajith will only be the second major star to play Raja Raja Cholan and the millions of his fans will be delighted to see him in majestic period costumes.
17 ஆம் திரியை துவக்கி வைக்குமாறு என்னை வரவேற்ற ராகவேந்திரா அவர்கள்
ஆதிராம் அவர்கள்
வாசு அவர்கள்
சிவாஜிசெந்தில் அவர்கள்
ஆதவன் ரவி அவர்கள்
ஆகியோருக்கு
முதலில்
என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரியில் எனக்கு முன்பே இருக்கும் சீனியர்களில் ஒருவர் திரியை
ஆரம்பித்து வைக்க வேண்டும்
என்பதுதான் எனது விருப்பம்.நியாயமும் கூட.
எல்லோரும் அவரவர் பங்களிப்புகளில் திரி செல்ல வேண்டும்.ஆரம்பத்தில் எழுதியவர்கள் முதற்கொண்டு எல்லொரும் திரிக்கு பங்களிப்பு செய்ய ஆவண செய்ய வேண்டும்.
Courtesy: Tamil Hindu
சினிமா எடுத்துப் பார் 32:
எஸ்பி.முத்துராமன்
அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து மூன்றாவது முறை யாக படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்தத் தயாரிப் பாளர் அருப்புக்கோட்டை எஸ்.எஸ்.கருப்பசாமி. அந்தப் படம் ‘ரிஷிமூலம்’. சிவாஜிகணேசனுடன் கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் உள் ளிட்டவர்கள் இதில் நடித்தார்கள். இயக்குநர் மகேந்திரன் சார் படத்துக்கு கதை - வசனம் எழுதினார்.
என்னுடன் கொண்ட நட்பு முறையில் நான் இயக்கிய கமல், ரஜினி நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’, கமல் நடித்த ‘மோகம் முப்பது வருஷம்’, பார்த்திபன் நடித்த ‘தையல்காரன்’ போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதி தந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்துக்கு ‘முள்ளும் மலரும்’ என்ற வித்தியாசமான படத்தை கொடுத்தவர். சிறந்த இயக்குநர், சிறந்த எழுத்தாளர். நான் இயக்கிய வெற்றிப் படங்களில் அவருடைய பங்களிப்பும் உண்டு.
இயக்குநர்கள் சங்கம் நடத்திய ‘டி40’ என்ற நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரம் பாலசந்தரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். அப் போது கே.பாலசந்தர் சார் ரஜினிகாந்திடம் ‘‘உனக்குப் பிடித்த இயக்குநர் யார்?’’ என்று கேட்டார். ரஜினி சொன்ன பதில்: இயக்குநர் மகேந்திரன். இது மகேந்திர னுக்கு ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு.
கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாததால் ஏற் படும் கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து நகரும் கதைக்களம்தான் ‘ரிஷி மூலம்’. கணவன்- மனைவி கதாபாத் திரங்களில் சிவாஜியும் கே.ஆர்.விஜயா வும் நடித்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகன். படத்தில் கே.ஆர்.விஜயா தன் பிடிவாதத்தால் கணவனிடம் கோபித் துக்கொண்டு 15 ஆண்டுகள் பிரிந்து வாழ்வார்.
அத்தனை ஆண்டுகால இடைவெளிக் குப் பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடத்தை செண்டிமெண்டாக நெகிழ்ச்சியோடு படமாக்க திட்டமிட் டோம். அண்ணன் சிவாஜியிடம், ‘‘நீங்கள் இருவரும் சந்திக்கும்போது வசனமே இருக்காது. முக பாவனையை மட்டும் குளோஸ் அப் காட்சிகளில் எடுக்கப் போகி றேன். ஒருவரது கண்களை இன்னொரு வரது கண்கள் பார்க்க வேண்டும். இருவரது கண்களை மட்டும் குளோஸ் அப்பில் எடுப்பேன். நீங்கள் சொல்ல வரும்போது வாய் பேசத் துடிக்கும். விஜயா அவர்களின் காதுகள் கேட்க காத்திருக்கும். உங்கள் முகத்தில் பேசும் பாவனை, விஜயா முகத்தில் பேசுங்கள் என்ற பாவனை… இப்படி குளோஸ்அப் பாவனைகளில் காட்சியைச் சொன் னேன். சிவாஜிக்கும், புன்னகை அரசிக்கும் நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும்! கண்கள் பேசின… உதடுகள் துடித்தன… முக பாவத்திலேயே நடித் தார்கள். வசனமே இல்லாமல் மூன்று, நான்கு நிமிடங்கள் நகரும் அந்தக் காட்சி பாராட்டுகளைப் பெற்றது.
சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா இருவரும் சமாதானம் ஆன பிறகு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். இளையராஜாவின் துள்ளல் இசை; ‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்… சிவாஜியும், விஜயாவும் வெளுத்துக் கட்டினார்கள். அவர்களைப் போல காதலர்கள், திருமண தம்பதிகள்கூட அப்படி ஓர் உணர்வை காட்ட முடியாது.
அந்தப் பாடலை கே.ஆர்.விஜயா கணவர் வேலாயுதத்தின் ஊரான கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையில் எடுத்தோம். பசுமை சூழ்ந்த அந்த மலைப் பகுதிகளில் படமாக்க திட்ட மிட்டு நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் இடங்களைத் தேர்வு செய்தோம். அதை சிவாஜி அவர்களிடம் சொன்னபோது ‘‘முத்து… அண்ணனை ரொம்ப அலைய விடாதீங்க. நான் என்ன உங்கள மாதிரி ஓடி ஆடுறவனா? மலை மேல எல்லாம் ஏறாம கீழேயே எடுத்து முடிப்பா…’’ என்றார்.
அந்தப் பாடலை படமாக்க தொடங் கினோம். முதலில் கீழே இரண்டு, மூன்று ஷாட்களை எடுப்பது, அப்படியே 10 அடி தள்ளிப்போய் அங்கே சில ஷாட்களை எடுப்போம். இந்த இடத்தில், அந்த இடத் தில் என்று மெல்ல மெல்ல ஏறிக் கொண்டே போய் மலை ஏறிய களைப்பே தெரியாமல் மலை உச்சிக்கு அண்ணனை அழைத்துப் போய்விட்டோம். மலை உச்சியில் இருந்து அந்த இடத்தை பார்த் தவர், ‘‘அருமையான இடம். எப்படியோ என்னை மலை உச்சிக்குக் கொண்டு வந்து, நீ எடுக்க நினைச்ச காட்சியை எடுத்து சாதிச்சுட்டே’’ என்றார். இதுதான் கதாநாயகன் போக்கில் போய் சாதித்துக்கொள்வது என்பதாகும்.
அப்பா, அம்மா, மகன் சென்டிமெண்ட் காட்சிகள், சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, சக்ரவர்த்தி நடிப்பு, மகேந்திரன் சார் வசனம், இளையராஜா இசை, கவியரசர் பாடல் இப்படி எல்லாம் இணைந்து அந்தப் படம் வெற்றி அடைந்தது. படத்தின் 100-வது நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினோம். விழா மேடையில் தயாரிப்பாளர் கருப்பசாமி, அண்ணன் சிவாஜிக்கு வைர மோதிரம் அணிவித்தார். ‘‘ஒரு நல்ல படம் கொடுத்துட்டே’’ என்ற தோரணையில் அண்ணன் சிவாஜி என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையே எனக்கு வாழ்த்தாக இருந்தது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். கருப்பசாமியைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். சரியாக திட்டமிட்டு ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பவர். படத்தில் ஒரு செட்யூல் படப்பிடிப்பு முடிந்த உடனே என்னிடம் வந்து, ‘‘இதுவரைக்கும் இத்தனை லட்சம் செலவு’’ என்று எழுத்துபூர்வமான கணக்கை காட்டுவார். ‘‘ஒவ்வொரு செட்யூலுக்கும் என்ன செலவாகிறது என்பது ஒரு இயக்குநருக்கு தெரிய வேண்டும்’’ என்பார். இது அவசியமான ஒன்று. சினிமா எடுக்கும்போது செலவை முழுமையாக தெரிந்து வைத்துக்கொண்டு எடுத்தால் நிச்சயம் நஷ்டம் வராது. நாங்கள் சின்ன பட்ஜெட் படங்களும் எடுத்தோம், பெரிய பட்ஜெட் படங்களும் எடுத்தோம். எல்லாவற்றுக்கும் சரியான திட்டமிடல் இருந்ததால் படம் பட்ஜெட்டுகளுக்குத் தகுந்த மாதிரி எடுக்க முடிந்தது.
நடிப்புக்கு இலக்கணமான அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களுக்கு தன் வரவு- செலவு பற்றி ஒன்றும் தெரியாது. நடிப்பு… நடிப்பு… நடிப்பு… இதுதான் அவரது சுவாசம். அவர் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அவரது சகோதரர் வி.சி.சண்முகம்தான் முறையே சேமித்து முதலீடு செய்து வைத்தார். அண்ணன், தம்பி இருவரும் அப்படி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இன்றைக்கும் சிவாஜிகணேசன் குடும் பத்தைச் சேர்ந்த ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி, துஷ்யந்த், விக்ரம்பிரபு, ஹரிசண்முகம் எல்லோரும் ஒற்றுமை யுடன் இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. கூட்டுக்குடும்ப பெருமையை உணர சிவாஜி குடும்பத்தைப் பாருங்கள்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1374503
தினமலர் - 28-10-2015
சிவாஜி சிலை வழக்கு : அரசு மேல்முறையீடு
சென்னை : சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற கால அவகாசம் கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. காலஅவகாசம் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியாகியிருந்த நிலையில், இந்த மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த சிவாஜி சிலை விவகாரத்தில் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மீது தொடுக்கப்பட்டுள்ள அவமதிப்பு வழக்கையும் ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.