-
வணக்கம் அன்பு நெஞ்சங்களே ! தற்போது சன் லைஃப்'ல் , புரட்சி தலைவரின் , *"உரிமைக்குரல் *" காவியம் . . இயக்குனர் ஸ்ரீதருக்கு மறுவாழ்வு தந்த படம். மெல்லிசை மன்னரின் முகப்பிசையே அதிரடி என்றால் பாடல்கள் அனைத்தும் சர வெடி. அதிலும் , *விழியே கதை எழுது , கல்யாண வளையோசை , ஒரு தாய் வயிற்றில்* . . பாடல்கள் இன்னும் நூறாண்டுகள் தாண்டியும் ஓங்கி ஒலிக்கும் . பின்னணி இசையிலும் புரட்சியே செய்திருப்பார் திரு. *எம்.எஸ்.வி* அவர்கள். குறிப்பாக தலைவர் ரேக்ளா வண்டியில் வரும்போதெல்லாம் ஒலிக்கும் அந்த *தீம் மியூசிக்* . . ஆஹா அருமை. ரிக்ஷா காரன் படத்துக்கு பின் மிகவும் சுறுசுறுப்பான , துள்ளலான மக்கள் திலகத்தை இப்படத்தில் நாம் காணலாம் . லதாவுடனான காதல் காட்சிகளில் இளமை துள்ளலான உற்சாகம் , அண்ணன் சஹஸ்ரநாமத்துடன் வரும் சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ச்சி , நம்பியாருடன் ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் ஆக்ரோஷம் . . தலைவர் பட்டையை கிளப்பியிருப்பார் . அதுவும் , அந்த க்ளைமாக்ஸ் சண்டைக்கு முன்பு வயல்காட்டில் அவர் பேசும் வீர வசனம் . .* இயற்கை நடிப்பில் தலைவரின் *விஸ்வரூபம்* . லதா அவர்களுக்கு அவரது திரை வாழ்வில் ஒரு முக்கியமான படம் இது. மக்கள் திலகத்துக்கு இணையான கதாபாத்திரத்தில் அவருக்கு ஈடு கொடுத்து மிக சிறப்பாக நடித்திருப்பார் . காமெடிக்கு நாகேஷ் இருந்தாலும் பஞ்ச் வசனங்களால் கலக்கியிருப்பவர் , தேங்காய் தான் . விறுவிறுப்பான திரைக்கதை , அழகான கிராமத்து இயற்கை காட்சிகள் , ஜனரஞ்சகமான இயக்கம் , இனிமையான பாடல்கள் & இசை , எல்லாவற்றுக்கும் மேலாக பொன்மனச் செம்மலின் இளமைத் துடிப்பான நடிப்பு . . இவை அனைத்தும் சேர்ந்து இப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை பரவசம் கொள்ள வைக்கின்றது . மொத்தத்தில் *உரிமைக்குரல்* தலைவரின் அன்பு ரசிகர்களுக்கு என்றென்றும் இனிய விருந்து . . ...... Thanks...
-
ஸ்ரீ MGR. வாழ்க
சித்திரை 13 ஞாயிறு
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் அருமை தலைவன் எம்ஜிஆரு க்குஅருகில் இருப்பவர் பெயர்
சைதை துரை சாமி
இவர் ராஜ விசுவாசி
எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலகட்டத்திலேயே எம்ஜிஆர் மன்றம் வைத்தவர்
1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தவுடன்
சென்னை நகரில் அண்ணா திமுகவின் முக்கிய பிரமுகராக வாழ்ந்தவர் இவர்
அண்ணா திமுகவின் மூத்த தலைவர்களில் முதல் கட்டத்தை சேர்ந்தவர்
1980/ 1984 ஆண்டுகளில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர்
எம்ஜிஆர் இறந்த பிறகு ஜானகி அம்மையாரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதற்காக முழுமூச்சில் இறங்கி பாடுபட்டவர் இவர்
ஜானகி அம்மையாருக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்
ஜானகி அம்மையார் முதலமைச்சராக பதவியேற்றார்
எம்ஜிஆர் குடும்பத்திற்கு துரோகம் செய்யாதவர்
எம்ஜிஆர் அவர்களைப்போல் ஏழை தொண்டர்களுக்கும்
ஏழை மக்களுக்கும் பண உதவி செய்து கொண்டு வருபவர்
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் சைதை துரைசாமி அவர்கள்தான்
இந்த அற்புதத்தை எம்ஜிஆர் நடத்திக் காட்டுவார்....... Thanks PM
-
மருதநாட்டு இளவரசி
14.04.1950
திருச்சி ஜூபிடரில் 133 நாட்கள் ஓடிய வெற்றிபடம்.
கதாபாத்திரமாக காண்டீபன்
ஜோடி வி.என்.ஜானகி
தலைவருக்கும் ஜானகி
அம்மாளுக்கும் காதல்
மலர்ந்தது வாழ்வில்.
இசை வி.எஸ்.ஞானமணி
வசனம்.கலைஞர்
இயக்குநர் ஏ.காசிலிங்கம்.
இரண்டு கைகளிலும்
கத்தி சண்டை சில
ஆட்களுடம் இரு கத்தியை சுழற்றும்
காட்சி காணக்கிடைக்காத காட்சி நம் தலைவர்
இந்த படத்தில் இருந்து தான்
வேகம் பிறந்தது....... Thanks...
-
ஜெனோவா 15.06.1953
ஓடிய நாட்கள் 133.
கதாபாத்திரமாக சிப்ரேஸா(நாட்டின் மன்னன்)
இது ஒரு கிறிஸ்துவ படம்.ஜோடி பி.எஸ்.சரோஜா
இசை முதன்முறையாக
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தது.இயக்குநர்.எப்.நாகூர்
வசனம். சுரதா இளங்கோவன் ... Thanks...
நெடுமாறன்.
-
சபாஷ் மாப்பிள்ளே 31.08.1961
கதாபாத்திரமாக வாசு
ஜோடி மாலினி
இயக்குனராக எஸ்.ராகவன்(மாலினி யின் கணவர்)
வசனம் ஏ.கோவிந்தன்.
சிறந்த நகைச்சுவை படம்.படம் பரவாயில்லை, வசூல் நன்றாக செய்தது.
ராகவன்,மாலினியின் நட்புக்காக நடித்து கொடுத்தார். படத்தில் எம்.ஜி.ஆரும், mr.ராதாவும் போட்டி போட்டுக்கொண்டு நகைச்சுவை காட்சிகளில் மிளிர்ந்தனர்......... Thanks...
-
#உறந்தைஉலகப்பன்...
எம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து!
"புதுமைப்பித்தன்' படத்தில் சந்திரபாபு எம்.ஜி.ஆரைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது இவர் நடிகர்,
புரட்சி நடிகர் என்று குறிப்பிடுவார். வசனம் கலைஞர்தான். வசனம் மட்டுமன்று அந்தப் பட்டத்தையும் கொடுத்தது கலைஞர்தான்.
இதனைப் பற்றி மணப்பாறை வசந்த கலா மன்றம் உறந்தை உலகப்பன் கூறுகிறார்: ""கலைஞரை எங்கள் நாடகம் ஒன்றிற்கு தலைமை வகிக்கக் கேட்டதுடன் எம்.ஜி.ஆரையும் முன்னிலை வகித்திட கூட்டிவரக் கோரினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் வருவதாக 3-4-1952-ல் தகவல் கார்டில் வந்தது. 5-4-52ல் திருச்சி தேவர் மன்றத்தில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், சினிமா நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னிலையில் என அச்சிடப்பட்டு வெளியாகியது.
எம்.ஜி.ஆருக்கு ஒரு பட்டம் அளித்து நோட்டீசில் போடுவோம். நாடக மேடையில் அறிவித்துவிடலாம் என நினைத்து புரட்சி நடிகர் என வழங்கலாம் என்று முடிவுசெய்தேன்.
எங்களது குழுவிலுள்ள ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஜி.ஆர் என்ன புரட்சி பண்ணி விட்டார். சினிமா நடிகர் என்றே போடுவோம் என்று தன் கருத்தைச் சொன்னார்.
நான் பிடிவாதமாக என் எண்ணப்படியே செய்தேன். ஆயிரக்கணக்கான நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்தோம். மேக்கப்பைக் கூட சரியாகக் கலைத்திடாமல், கலைஞருடன் காரிலேயே 5-4-1952 மாலையே திருச்சி வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்...
நாடகம் தொடங்கி இடைவேளையில் கலைஞர் அவர்களை, புரட்சி நடிகர் என எம்.ஜி.ஆரை கவுரவித்திட கோரிட, அவரும் தனக்கே உரிய பாணியில் பேசும்போது அன்பு என்பது மூன்றெழுத்து என்று சுமார் 33 மூன்று எழுத்து வார்த்தைகளை வரிசைப்படுத்தி முடிக்கும்போது, "அண்ணா' என்ற மூன்றெழுத்து, "தி.மு.க.' என்ற மூன்றெழுத்து, ‘எம்ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்துக்காரருக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டத்தினை இந்தத் நாடக நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகம் செய்கிறேன்'' என்றபோது பலத்த கைத்தட்டலுக்கு இடையே எழுந்து நின்றார் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்...
💐 வளர்க புரட்சித்தலைவர் புகழ் 💐
#இதயதெய்வம்........ Thanks fb
-
MGR Filmography Film 51 (1961) Poster
"தாய் சொல்லை தட்டாதே"
ரகசிய போலிஸ் வேடத்தில் எம்ஜியார் நடிக்க, விருவிருப்பான சண்டைக் காட்சிகள், தாய்ப்பாசம், காதல் காட்சிகள், இனிய பாடல்கள், என்று ஒரு முழு எம்ஜியார் ஃபார்முலாவுடன் அமைந்த படம் வெற்றி பெற்றதில் வியப்பேதுமில்லை. ஏறத்தாழ, எம்ஜியாரின் எல்லா படங்களிலும் வெற்றி கதாநாயகியாக தோன்றிவந்த சரோஜாதேவி, எம்ஆர் ராதா, அசோகன் ஆகியோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, ஆரூர்தாசின் கதை வசனம் எழுத, இயக்கம் வேறு யார், எம்ஏ திருமுகம்தான்.
கண்ணதாசனின் பாடல்களுக்கு தேவர் ஃபிலிம்சின் ஆஸ்தான ம்யூசிக் டைரக்டரான கேவி மகாதேவன் இசையமைத்தார். மொத்தம் எட்டு பாடல்கள்; அனைத்துமே பிரபலமாயின. அவற்றில் சிரித்துச் சிரித்து எனும் டிஎம்எஸ் சுசீலா டூயட் இன்றளவும் எவர்க்ரீனாகத் திகழ்கிறது. எம்ஜியார் சரோஜாதேவி ஜோடியை மேலும் பல படங்களில் தொடரும்படிச் செய்த பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு. கண்ணாம்பாவின் ஆவேச நடிப்பும் படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று........ Thanks...
-
#தலைவர் முதல்வரான அன்று...
1977-ம் ஆண்டு ஜூன் 30 அன்று,
இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அது அரசியல் சட்ட ரீதியாகவும், சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட
பதவி ஏற்பு விழா!
ஆனால், சம்பிரதாய பதவி ஏற்பு முடிந்ததும் புரட்சித்தலைவர் அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார்.
சென்னை அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல, அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும்
20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூடி வங்கக்கடலாய் ஆர்ப்பரித்தது. அப்போது புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார் அந்த சரித்திர நாயகன் இதயதெய்வம் புரட்சித்தலைவர்.
அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார் தலைவர். பின்னர் உரையாற்றினார்.
அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது, அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு, உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.
இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும்.
உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.
மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.
இதனை எங்கள் மனத்தில் இருத்தி, லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.
உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.
இந்த உயர்ந்த லட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுத்தேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று உறுதியிட்டுக் கூறினார், புரட்சித் தலைவர்.
அப்பொழுதும், அதற்குப் பின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!
அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.
இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார், புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.!!!
இதயதெய்வம் புரட்சித்தலைவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமை. தலைவரை முகமுகமாய் தரிசித்த நம் போன்ற தலைவர் பக்தர்களும் பிறவிப்பயனை அடைந்தவர்களே...!!!
💐 புரட்சித்தலைவர் புகழ் வளர்க 💐
#இதயதெய்வம்....... Thanks...
-
[தலைவர் தான் ஒரு நாட்டின் “முதல்மந்திரி” என்ற தற்பெருமை இல்லாமல் எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்தினார். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பார். அவர்களிடம் நாம் மக்களுடைய சேவகர்கள் என்று அடிக்கடி சொல்வார். மற்ற மந்திரிகளிடமும், 1960-ல் சினிமாவில் பிரபலமான மக்கள் திலகம் அவர்கள் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கைவண்டி இழுத்து செல்லும் தொழிலாளிகளுக்கு செருப்புகள் வாங்கி கொடுத்தார். இது சென்னை நகரம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் உள்ள கைவண்டி தொழிலாளர்களுக்கும் காலில் செருப்பு இல்லாதவர்களுக்கும் செருப்பு வாங்கி கொடுக்க வேண்டும் என்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாக, தன்னுடைய சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார்.
இதே போல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கும் மழை பெய்யும் காலங்களில் அவர்களுக்கு மழை கோட்டு வாங்கி கொடுத்தார். அந்த காலத்தில் மனிதனை வண்டியில் உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்வார்கள். அதற்கு கை ரிக் ஷா என்று பெயர். இப்படி மனிதன் மனிதனை உட்கார வைத்து இழுத்து செல்லக்கூடாது இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் இவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அப்போது, உள்ள அரசாங்கத்தாரிடம் கேட்டு கொண்டார். அதன்பிறகு அந்த கைரிக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்படி இதுமாதிரியான எவ்வளவோ விஷயங்கள் உண்டு. இவைகள் எல்லாம் அரசியல் ரீதியாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் இது அவருடைய வரலாற்றில் வரவேண்டிய விஷயங்கள்..... Thanks...
-
கண்கணட தெய்வமாக எம்ஜிஆரை கொண்டாடும் மக்கள்
பாமர மக்கள் நல்வழி காட்ட திரையை ஆயுதம் ஆக்கி வென்றதால்
மது போதை நாடாமல் வாழவைத்தற்க்கு
ஒரு கடையில் ஒரு வீட்டில் எம்ஜிஆர் படம் பூஜிக்க படுகிறது என்றால் அங்கு மனிதநேயம் நிறைந்த இடம் என்று பொருள் இப்படி வாழவைத்ததால் வணங்கினர் எம்ஜிஆரை தெய்வமாக மக்கள்
வாழ்க எம்ஜிஆர் புகழ்..... Thanks...
-
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் வசிக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்தகாயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரைவர் மறுத்தார். பெற்ற மனம் கேட்குமா? மகனைக்காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்துவாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக்கூறிவிட்டார். எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம்பிக்கை பிறந்தது அந்தத்தாய்க்கு... எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின்நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டார். அந்த தாயின்வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார். சூரியனைக் கண்ட பனி போல டிரைவரின்கவலையும் அச்சமும் மிச்சமில்லாமல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவிசெய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார். நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப்பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர்... அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த நெகிழ வைக்கும் பதில் இது...!!! ‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத்தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் தம்பியாக நினைத்துத்தான் உதவிசெய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். அந்த வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும் அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’ ‘ஆனந்த ஜோதி ' திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவரல்ல , அதன்படியே வாழ்ந்தவர்... நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல்....... Thanks...
-
திரை உலகின் சாதனை மன்னன் :::
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கினார். அவர் நடித்த படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தன. அவரை வைத்து படமெடுக்க படாதிபதிகள் போட்டி போடுவார்கள். அவர் நடிக்கும் படம் என்றால் பூஜை போடும் தினத்தன்று எல்லா ஏரியாக்களும் விற்பனையாகிவிடும்.
ஆனால் அத்தகைய இமாலய நிலையை அவர் எளிதில் அடைந்துவிடவில்லை. மிக மிகக் கடுமையாக போராடி படிப்படியாக உயர்ந்து தான் அந்த உன்னத நிலையை அடைந்தார் .
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதே அவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். எதிர்ப்பு ஏற்பட்டால் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். லட்சியத்தை அடையும் வரை சற்றும் ஓயக் கூடாது .
சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அதைத்தான் செய்தார்கள் மக்கள் திலகமாக விளங்கிய எம்ஜிஆரும் அதையே செய்தார்.
அவருடைய முகம் திரையில் தெரிந்ததுமே ஆயிரமாயிரம் ரசிகர்கள் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி திரைப்படக் கொட்டகையிலேயே தங்கள் பக்தியை வெளிப்படுத்திய ரசிகர்களும் உண்டு.
ஆனால் ஆரம்பகாலத்தில் அதே முகம் திரையில் தோன்றுவதற்கு இலாயக்கானதாக இல்லை என்று அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த டைரக்டர் ஒருவர் சொன்னார் என்பதைக் கேட்கும்போது பலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம் ஆனால் அது உண்மை.
ஆரம்ப நாட்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை படங்களில் நடிப்பதற்காக சந்தர்ப்பம் கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது, ஒரு டைரக்டர் அவருடைய முகத்தை பார்த்துவிட்டு அவருடைய முகநாடி இரட்டையாக அமைந்திருப்பது போல் காணப்படுவதால் அவருடைய முகம் அழகாக தெரியாது என்று கூறி அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க மறுத்துவிட்டார்.
பொதுவாக வளரத் துடிக்கும் எந்த நடிகரும் அத்தகைய வார்த்தைகளை கேட்டதும் பெரிதும் மனமுடைந்து போவார்கள். நடிப்பு துறையில் இறங்க வேண்டும் என்னும் எண்ணத்தையே அவர்கள் கை விட்டு விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.
ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அந்த டைரக்டர் சொற்களைக் கேட்டு மனம் உடைந்து போகவில்லை நடிப்புத் துறையிலிருந்து ஒதுங்கிவிட நினைக்கவில்லை. தன்னுடைய முகம் திரையில் தோன்ற அதற்கு முற்றிலும் ஏற்ற வகையிலேயே இருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
எதிர்காலத்தில் திரையுலகில் தான் மிகப் பெரிய புரட்சியை உண்டு பண்ணப் போகிறோம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்பது அவருக்கு மிக மிக நன்றாக தெரியும்.
எனவே அவர் அந்த டைரக்டர் வார்த்தைகளைக் கேட்டு ஒன்றும் சொல்லவில்லை அமைதியாகவும் மௌனமாக வீடு திரும்பிவிட்டார்.
உலகில் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்தவர்களின் மனோநிலையைக் கூர்ந்து கவனித்தால் மற்றோர் உண்மை புலப்படும் . அவர்கள் தங்களைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். தங்களுடைய திறமையையும் எதிர்காலத்தையும் மிகமிக நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும். அப்படித்தான் திரையுலகில் நுழைவதற்குத் தான் சிரமப்பட வேண்டியிருந்தாலும் நுழைந்தபின் அத்துறையில் நிச்சயம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்று நம்பிக்கை அவருக்கு எப்போதும் இருந்து வந்தது. அது யாருடைய சொற்களை கேட்டும் குறைந்துவிடவில்லை.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....... Thanks...
-
உண்மை தலைவர்
கண்பட்டாலே புண்ணியம் அதிலும் அவரின் நேரடிபார்வை, அவரைதொட்டவர்கள்,அவர்தூக்கிய மழலைகள் அனைவரும் இன்று உயர்ந்த இடத்தில், தலைவர் ஒரு தெய்வபிறவி (இல்லை) தெய்வம். கல்விகண் திறந்த கடவுள். வாழ்க அவர் புகழ். அவரின் ரசிகனாக,தொண்டனாக, இன்று பக்தனாக இருப்பதற்கு நாம் பெருமைகொள்வோம். ....... Thanks...
-
வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் .
நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்
புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
அப்போதும் சரி...!
இப்போதும் சரி...!
இனி எப்போதும் சரி...!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்......... Thanks...
-
பாரத்,பாரத ரத்னா,புரட்சித்தலைவர்,மக்கள் திலகம்,Dr.MGR,காவியத் தலைவன்,வாத்யார்,இதயக்கனி.பொன்மனச் செம்மல்,இது தவிர கலையுலக சூப்பர் ஸ்டாா்,அரசியல் மெகா ஸ்டார்,எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்,தோல்வியையே எப்போதும் பரிசாக கொடுத்த சிங்கத் தலைவன்,மன்னாதி மன்னன்,ராஜராஜன்,அரசியலிலும்,சினிமாவிலும்ரோல் மாடல் மக்கள் மனதை விட்டு நீங்காதவர், நம் தலைவர்....... Thanks...
-
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!....... Thanks..
-
He is Sarithira Nayagan. That's MGR. He is a real Mass Hero of yester years not like now reel hero. Don't bother of the normal and down trodden people. He is still living in their hearts....... Thanks...
-
வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆர்
விருந்தோம்பல்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவர்க்கு.
பொருள் : அனுதினமும் தன்னை நாடிவரும் விருந்தினருக்கு விருந்திட்டு உபசரிப்பவனும் இனிவரும் விருந்தினரை எதிர்நோக்கி காத்திருப்பவனுமான ஒரு அற்புதமான மனிதனுக்கு விருந்திட்டு மகிழ்ச்சி அடைய வானத்திலிருக்கும் தேவர்களுமே காத்திருப்பார்கள்.
விளக்கம் : தன் வருமானத்தை விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்திற்காகவே சேர்த்து வைக்கும் உத்தம குணம் கொண்ட ஒருவன், யாரையும் வீட்டிற்கு வெளியில் காக்க வைத்து தான் மட்டும் உணவு உண்ண மாட்டான். தன்னை வாட்டும் பசியை போக்கும் வல்லமை இவருக்கு மட்டும்தான் இருக்கின்றது என்று நம்பி வருபவரை அன்னமிட்டு ஆதரிக்கப் மேன்மையானவனின் வீட்டில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ மகாலக்ஷ்மி மனம் விரும்பி நிரந்தரமாக தங்குவாள். அவனுடைய நிலத்தில் எதையும் விதைக்க வேண்டிய அவசியமில்லாமல் பயிர் செழித்து வளரும். எப்போதும் விருந்தினர்களை எதிர்பார்த்து அன்பு மனதோடு காத்திருக்கும் அந்த அற்புதமான உத்தமனுக்கு விருந்தளித்து மகிழ வானத்திலிருக்கும் தேவர்களே இருகரம் நீட்டிக் காத்திருப்பார்கள் !
இந்தக் குறளுக்கு பொருத்தமான ஒரு மாமனிதர் மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டும்தான்.
விருந்தோம்பல் என்னும் அரிய பண்பு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் இளமைப் பருவத்திலேயே அவரிடம் காணப்பட்ட ஒன்று. திரைத்துறையில் நுழைந்த ஆரம்ப காலங்களில் மாடர்ன் தியேட்டர்ஸில் நடிக்கும் போதே தன்னோடு நாலு பேரையாவது சாப்பிட வைத்து மனம் மகிழ்ந்தவர் அவர்.
தன்னுடைய இளமைக் காலத்தில் உண்ண உணவில்லாமல் பசியால் பலநாள் துடித்ததை அவர் மறந்ததே இல்லை. பசி என்பது என்ன என்பதை உணர்ந்தவன் நான் என்று வெளிப்படையாக சொல்ல நாட்டிற்கே முதல்வரான போதிலும் அவர் தயங்கியதில்லை.
கொடைவள்ளல் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் அடுப்பில் முதன் முதலாக எந்த நேரத்தில் அக்னி தேவனை ஆராதித்து தீயை ஏற்றினார்களோ யாருக்கும் தெரியாது . ஏனென்றால் இரவும் பகலும் அது அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. அதனால் உண்டான உணவு தன்னை சாப்பிட்டவர்களின் வயிற்றுப் பசியை அனுதினமும் அழித்துக் கொண்டே இருந்தது.
தன்னைப் பார்க்க யார் வந்தாலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கேட்கும் முதல் கேள்வி, சாப்பிட்டாயா? என்பது தான். அடுத்த வார்த்தை போய் சாப்பிட்டுட்டு வாங்க .... என்று அனுப்பி வைப்பது தான். எத்தனை நாள் பட்டினியால் வாடி இருந்தாலும் அந்த ஒரு வார்த்தை, கேட்பவரை உயிர்ப்பித்து விடும்.
கொடைவள்ளல் எம்ஜிஆரின் வீட்டு சமையல் பாத்திரங்களை பார்த்தாலே பிரமிப்பு வரும். ஒரே நேரத்தில் அறுபது இட்லிகள் வேகு மளவு இருந்த இட்லி பாத்திரமே அதற்குச் சாட்சி.
அவருடைய வீட்டில் பாமரர் சாப்பிட்டாலும் பணக்காரர் சாப்பிட்டாலும் ஒரேவிதமான சாப்பாடே பரிமாறப்படும். தன்னோடு யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கும் அதே வகையான உணவே பரிமாறப்பட வேண்டும் என்பது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கட்டளை. படப்பிடிப்புத் தளங்களில் லைட்மேன் முதல் மற்ற உதவியாளர் வரை சாப்பிட்டார்களா என்பதில் அதிக அக்கறை காட்டுவார்.
ஒரு மனிதனுக்கு அளவிட முடியாத செல்வத்தைக் கொடுத்தாலும் மேலும் வேண்டும் என்றுதான் கேட்பான். ஆனால் எத்தனை அறுசுவை உணவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல் சாப்பிட முடியாமல் போதும் என்று மறுத்து விடுவான். ஏனென்றால் மனிதனுக்கு திருப்தி தரும் ஒரே விஷயம் உணவுதான் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் செல்வது வழக்கம்.
இன்னும் ஒரு அற்புதமான கருத்தையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். பணம் இருப்பது பெரிதல்ல . அதைப் பிறருக்காக செலவு செய்வதும் கூட பெரிதல்ல . பிறருடைய சுவைக்கு உணவு படைப்பது தான் மிகப்பெரிய காரியம் என்று சொல்வேன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிக்கும் படப்பிடிப்புத் தளத்தில் கலைஞர்கள், அரங்க உதவியாளர்கள், லைட்மேன், உடை அமைப்பாளர் , துணை நடிகர் நடிகையர்கள் இவர்களோடு சேர்ந்து தான் சாப்பிடுவார். அவர்கள் வெட்கத்துடன் தயங்கினாலும் அவர்களுடன் வேடிக்கையாகப் பேசி சந்தோசப்படுத்துவாராம். தனக்கு ஏதேனும் ஸ்பெஷலாக உணவுப்பொருள் பரிமாறப்பட்டால், அது மற்றவர்களுக்கும் பரிமாறப்படுகிறதா என்று கவனிப்பார். அப்படி பரிமாறப்படாவிட்டால் பரிமாறுபவரை கூப்பிட்டு,
இந்த ஸ்பெஷல் ஐட்டங்களை இந்த தோழர்களுக்கும் பரிமாறுங்கள் இவங்க நல்லா இருந்தாத்தானே நாம நல்லா இருக்க முடியும் என்று சொல்லிச் சிரிப்பார்.
இது ஏதோ ஒரு படப்பிடிப்பில் நடந்த நிகழ்ச்சி அல்ல. எல்லா இடங்களிலும் எங்கெல்லாம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்னும் அன்னதாதா இருக்கிறாரோ அங்கெல்லாம் நடந்திருக்கும் உண்மை நிகழ்ச்சி.
பிறர் பசி பொறுக்காத மேன்மையானவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அவரை பழித்தும் இழித்தும் பேசியவர்களும் கூட அவருடைய விருந்தோம்பலின் மேன்மையை குறை சொல்ல மாட்டார்கள். விருந்தோம்பல் என்னும் உயரிய மாண்புக்கு கண்ணெதிர் சாட்சியாய் நம்மோடு வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மேலும் கோடிக்கணக்கான நல்ல இதயங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இதய தெய்வம் எம்ஜிஆர் தன் புகழுடலோடு வானுலகம் சென்ற போது வள்ளுவர் சொன்னது போலவே அந்த அன்னதாதாவுக்கு அங்கிருந்த தேவர்களும் அன்போடு இருகரம் நீட்டி வரவேற்று அன்பின் விருந்திடிருப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை....
என்றும் என்றென்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க........... Thanks.........
-
#தலைவரின்_திரைப்பயணம்_சிறிய #தொகுப்பு_இன்றைய #தலைமுறைகளுக்காக
தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்த போதிலும் ஒரு சிலருக்கு எம்ஜிஆரின் திரையுலகப் பயணம் குறித்த சுவாரஸ்யமான சங்கதிகள் அனைத்தும் தெரிந்திருக்கும் என்று கருத முடியாது. அப்படிப்பட்டவர்கள் மட்டுமல்ல, எம் ஜி ஆர் என்ற ஆளுமையின் சுவாரஸ்யமான திரைப்பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறைக்கும் பயனளிக்கும் விதமாக இந்த வாரம் எம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்து மேலும் சில புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
எம்ஜிஆர் கலையுலகில் இருந்து அரசியல் வானில் முதல்வாரன பிறகு ஒப்பந்தமான திரைக்காவியங்கள்...
உன்னைவிட மாட்டேன்
புரட்சிபித்தன்
உங்களுக்காக நான்
மக்கள் என் பக்கம்
நல்லதை நாடு கேட்கும்
சமூகமே நான் உனக்கே சொந்தம்
நானும் ஒரு தொழிலாளி
அண்ணா நீ என் தெய்வம்
தியாகத்தின் வெற்றி.
அண்ணா பிறந்த நாடு
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜ்
ஊரே என் உறவு
மீண்டும் வருவேன்
பைலட் ராஜ்
எல்லை காவலன்.
எம்ஜிஆர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களும் - கம்பெனிகளும்...
ADVERTISEMENT
1. சதிலீலாவதி - மனோரமா பிலிம்ஸ்
2. இருசகோதரர்கள் - பரமேஸ்வர் சவுண்டு பிக்சர்ஸ்
3. தட்ச யக்ஞம் - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்ட
4. வீரஜெகதீஷ் - வி.எஸ்.டாக்கிஸ்
5. மாயாமச்சேந்தரா – - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்
6. பிரகலாதா - சேலம் சங்கர் பிலிம்ஸ்
7. சீதாஜனனம் - சியாமளா பிக்சர்ஸ்
8. அசோக்குமார் - முருகன் பிக்சர்ஸ்
9. தமிழறியும் பெருமாள் - உமா பிக்சர்ஸ்
10. தாசிப்பெண் - புவனேஸ்வரி பிக்சர்ஸ்
11. ஹரிசந்திரா - ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ்
12. சாலிவாகனன் - பாஸ்கர் - பிக்சர்ஸ்
13. மீரா - சந்திரபிரபா சினிடோரியன்
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்...
நாடோடி மன்னன்
ராஜா தேசிங்கு
அடிமைப்பெண்
நாளை நமதே
குடியிருந்த கோயில்
ஆசைமுகம்
மாட்டுக்கார வேலன்
நீரும் நெருப்பும்
சிரித்து வாழ வேண்டும்
எங்கவீட்டுப் பிள்ளை
பட்டிக்காட்டுப் பொன்னையா
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்ததை முடிப்பவன்
கலையரசி
நேற்று இன்று நாளை
ஊருக்கு உழைப்பவன்
எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் ஆசிரியர்கள்...
திரு. தஞ்சை ராமையாதாஸ்
திரு.மாயவநாதன்
திரு. பாபநாசம் சிவன்
திரு. கா.மு.ஷெரீப்
திரு.மு.கருணாநிதி
திரு.கு.சா.கிருஷ்ணமுர்த்தி
திரு.ஆத்மநாதன்
திரு.கே.டி.சந்தானம்
திரு.ராண்டர்கை
திரு.உடுமலை நாராயணகவி
திரு.சுரதா
திரு.பட்டுக்கோடடை கல்யாணசுந்தரம்
திரு.லட்சுமணதாஸ்
திர.கு.மா. பாலசுப்பிரமணியன்
திரு.அ.மருதகாசி
திரு.முத்துக்கூத்தன்
திரு.கண்ணதாசன்
திரு.வாலி
திரு.ஆலங்குடி சோமு
திரு.அவினாசிமணி
திரு.புலமைபிததன்
திரு.விந்தன்
திரு.நா.காமராசன்
திரு.முத்துலிங்கம்
ரோஷனரி பேகம்
திரு.பஞ்சு அருணாசலம்;
எம்ஜிஆர் நடித்த வண்ணப் படங்கள் 40 (இதில் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்ற காவியங்கள் 35) இது தவிர மற்ற காவியங்கள் 10 வாரங்களுக்கு கீழ் கிடையாது.
108 அடி உயர கட் - அவுட்...
உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின்என் அண்ணன் காவியத்திற்கு மட்டும் தான்.
திரைப்படம்: அரங்கு சேலம் அலங்கார்.
திரு.எம்.ஜி.ஆர் இயக்கிய திரைப்படங்கள்...
1. நாடோடி மன்னன்,
2. உலகம் சுற்றும் வாலிபன்,
3. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர்...
செல்வி ஜெ.ஜெயலலிதா – 28 படங்கள்,
திருமதி சரோஜாதேவி – 26 படங்கள்,
எம் ஜி ஆரை அதிகப்படங்களில் இயக்கியவர்...
திரு.ப.நீலகண்டன் - 17 படங்கள்
திரு.எம்.ஏ.திருமுகம் - 16 படங்கள்
எம் ஜி ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம்...
தேவர் பிலிம்ஸ் - 16 படங்கள்
எம் ஜி ஆர் திரைப்படங்களுக்கு அதிகம் இசை அமைத்தவர்...
திரு.எம்.எஸ்..விஸ்வநாதன் 49 படங்கள்
திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்
அதிக பாடல்கள் பாடியவர்கள்...
திரு.எ.எம்.சௌந்தரராஜன், திருமதி.பி.சுசிலா
வெற்றிவிழா கண்ட திரைப்படங்கள்...
100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை -86 படங்கள்
வெள்ளி விழா கண்டவை -12 படங்கள்
வண்ணப் படங்கள்(கலர்) -40 படங்கள்
300 நாட்களுக்கு மேல் ஓடியது -2 திரைப்படங்கள் ( என் தங்கை
உலகம் சுற்றும் வாலிபன்)
தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ் படம் - மலைக்கள்ளன்
தமிழ் திரையுலகின் முதல் வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யவப்பட்டவை - 60 படங்கள்
இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை - 9 படங்கள்.
முதன்முதலில்...
முதன் முதலில் தணிக்கையில் A சான்றிதழ் பெற்ற தமிழ் படம் - மர்மயோகி
முதல் பாதி கருப்பு & பாதி வண்ணப்படம் - நாடோடி மன்னன்
முழுநீள வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
இந்தியாவின் சிறந்த நடிகர் - ரிக்க்ஷாக்காரன்............... Thanks...........
-
எம்.ஜி.ஆரிடம் நமக்கு பிடித்தது என்ன?
எம்ஜிஆரிடம் எனக்கு மிகவும் பிடித்தது
1. கட்சி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தந்த மாண்பு .
2. நான் ...எனது ..என்ற வார்த்தையை ஒரு நாளும் கூறாத அடக்கம் .
3. அண்ணாவை என்றென்றும் மறக்காத பணிவு .
4. காலில் விழும் அடிமைத்தனத்தை அடியோடு வெறுத்த பிதாமகன் .
5. அரசாங்க சொத்திற்கும் மக்கள் வரிப்பணத்திற்கும் மரியாதை தந்தவர் .
6. பங்களா , எஸ்டேட் என்று அநியாய மாக வாங்கி சொத்து சேர்க்காதவர் .
7. குற்றவாளி என்று பெயர் வாங்காத ஒரே உன்னத தலைவர்
8.எதிரிகளையும் நண்பனாக்கி கொண்ட நல்லவர் - வல்லவர்
9. மக்கள் மனதில் நேற்றும் வாழ்ந்தார் . இன்றும் வாழ்கிறார் . நாளையும் வாழ்வார் எம்ஜிஆர்.
10. தன் வாழ்நாளுக்குப் பிறகு தன் சொத்துக்களின் பெரும்பகுதியை சமுதாயத்தில் நலிந்தவர்க்கு எழுதி வைத்தவர்.
11. தன் திரைப்படக் கருத்துக்கள் மற்றும் பாடல்கள் மூலமாக மக்கள் மனதில் வாழ்பவர்.
12. புகைப்பிடித்தல், மது, போன்ற தீய பழக்கங்களை தன் திரைப்படங்களில் கூட காட்டாமல் தனி மனித ஒழுக்கம் பேணியவர்.
13. தன் கொள்கைகளுக்கு ஒத்து வராத திரைப்படங்களில், பணம் பெரிதென நினைக்காமல் நடிக்க மறுத்தவர்.அதனாலேயே மற்ற சக நடிகர்களைப் போல படங்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாதவர். இருப்பினும் படங்கள் குறைவாக இருந்தாலும், வேறு எந்த நடிகர்களை விடவும் இன்றும் அவரது படங்களும், பாடல்களும் தொலைக்காட்சியிலும், திரையரங்குகளிலும் அதிக அளவில் திரையிடப்படுகின்றன.ரசிகர்களும், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் விரும்பி பார்த்தும், கேட்டும் மகிழ்கிறார்கள்.......... Thanks.........
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 14 திங்கள்
MGR பக்தர்களே
எம்ஜிஆர் சரோஜாதேவி தோன்றுகின்ற இந்த பாடல்காட்சி
எங்க வீட்டுப் பிள்ளை என்ற சினிமா படத்திற்காக எடுக்கப்பட்டது
படத்தின் நீளம் அதிகமாக இருந்த காரணத்தினால் இந்த பாடல் காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்
++++++++++++++++++++++++++++++++
நன்றி நன்றி நன்றி
MGR அவர்களை திமுக வில்இருந்து
நீக்கிய
கருணாநிதி அவர்களுக்கு நன்றி
1949 ஆண்டு
தி.மு.க வை ஆரம்பித்தவர்அண்ணா
MGR தி.மு.க வில் சேர்ந்தது
1952 ம் ஆண்டு
+++++++++++++++++++++++++++++++++
முதல்வர் கருணாநிதி அவர்கள் 1970 1971 / ஆம் ஆண்டில் குமுதம் பத்திரிகை யில் நெஞ்சுக்கு நீதி என்று
தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார்
நான் முதல் முதலில் எம்ஜிஆர் அவர்களை சந்தித்தது கோவையில் உள்ள சினிமா ஸ்டுடியோவில் நான்MGR அவர்களைசந்தித்தபோது
எம்ஜிஆர் அவர்கள் கதர் வேஷ்டி கதர் சட்டை போட்டு கழுத்தில் ருத்ராச்சக்கொட்டை அணிந்திருந்தார்
எம்ஜிஆர் அவர்களின் நிறம்
ரோஸ் கலந்த எலுமிச்சம்பழ கலர்
எம்ஜிஆர் அவர்களும் சினிமா உலகில் புதுமுகம் நானும் சினிமா உலகில்புதுமுகம்
எப்படியாவது எம்ஜிஆரை திமுகவில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்
அண்ணா எழுதிய புத்தகங்களை எம்ஜிஆரிடம் படிக்க கொடுப்பேன்
எம்ஜிஆர் அவர்கள் காந்திய புத்தகங்களை என்னிடம் கொடுப்பார்
MGR அவர்களை எப்படியாவது திமுகவில்
சேர்த்துவிடவேண்டும் என்று நீண்டநாள்
முயர்சி செய்து நான் அண்ணாவிடம்
அழைத்து செண்றேன் எண்று கட்டுரை
எழுதியிருந்தார்
++++++++++++++++++++++++++++++++++
அடுத்த நாள் தினசரி பேப்பரில்
நடிகர் S.S.R. அவர்களின் ( முதல்மனைவின் அண்ணன் நடிகமணி T.V .நாராயணசாமி அவர்கள் ஒருஅறிக்கை விட்டார்
MGR ரைபோன்ற அழகான. MGRயைபோல கத்தி சண்டை தெரிந்த. .
MGR. ரைபோல் சிலம்பாட்டம்தெரிந்த
எம்ஜிஆரை போல் இரக்கசுபாவம்உள்ள
MGR ரைபோன்றதர்ம சிந்தனையுள்ள
நடிகர் திமுகவிற்குதேவைஎண்று
நான்தான்
MGR அவர்களை அண்ணா விடம் அழைத்து சென்றேன் எண்று அவர்
ஒரு அறிக்கை விட்டார்
எம்ஜிஆர் பக்தர்களே
முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி வரலாற்றிலும்
நடிகமணி டிவி நாராயணசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலும்
எம்ஜிஆர் அவர்களை அண்ணாவிடம் அழைத்துச்சென்று திமுகவில் சேர்த்தது
நான்தான் என்று இருவரும் அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள்
இதிலிருந்து ஒரு செய்தி தெரிய வருகிறது
எம்ஜிஆர் அவர்கள் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று
ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் நமக்கு புகழ் கிடைக்கும் மாலை மரியாதை கிடைக்கும் என்று திட்டமிட்டு எம்ஜிஆர் அரசியலுக்கு வரவில்லை
எம்ஜிஆர் திமுகவில் சேர்ந்த பிறகு
அதனுடைய வளர்ச்சிக்கு கடுமையாகப் பாடுபட்டார்
தான் சினிமா மூலம் சம்பாதித்த பணத்தை திமுக தொண்டர்களுக்கும் திமுக தலைவர்களுக்கும் கொடுத்து உதவினார்
ஆனால் எம்ஜிஆர் துரோகம் செய்து
திமுகவை கைப்பற்ற நினைக்கவில்லை
எம்ஜிஆர் துரோகம் செய்து திமுக கொடி எனக்குத்தான் வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்ல வில்லை
எம்ஜிஆர் துரோகம் செய்து உதயசூரியன் சின்னம் எனக்குத்தான் வேண்டுமென்று
கோர்ட்டுக்கு செல்லவில்லை
எம்ஜிஆர் துரோகம் செய்து திமுகவின் தலைமை நிலைய கட்டிடம் எனக்குத்தான் வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்லவில்லை
திமுகவில் இருந்து கொண்டே முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு பக்கத்திலிருந்து கொண்டே
தனியாக டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை கொல்லைப்புற வழியாக சந்தித்து
முதலமைச்சர் கருணாநிதியை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கி விட்டு
தான் முதலமைச்சராக வருவதற்கு எம்ஜிஆர் முயற்சி எடுக்கவில்லை
+++++++++--++++++++++++++++++++?+++
எம்ஜிஆர் பல முதலமைச்சர்களை ஆட்சியில் அமர்த்தியவர்
இந்தியாவில் உள்ள நடிகர்களில் மக்கள் சக்தி அதிகம் உள்ளவர் MGR
ஆகவே தனிமனிதனாக அண்ணா திமுகவை உருவாக்கினார்
தன் மனைவி ஜானகி அம்மையாருக்கு சொந்தமான கட்டிடத்தை அண்ணா திமுக தலைமைக் கழகத்திற்கு இலவசமாக கொடுத்தார்
அண்ணா திமுகவிற்கு கொடியை உருவாக்கினார்
அண்ணா திமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை உருவாக்கினார்
தனிமனிதனாக மூன்று முறை முதலமைச்சராக வந்தார்
எம்ஜிஆரிடம் உள்ள பழக்கம் தான் சம்பாதித்த பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவுவது
பணத்தை மட்டும் கொடுக்கவில்லை முதலமைச்சர் பதவிகளையும் பல பேர்களுக்கு கொடுத்தவர் எம்ஜிஆர்
அவர் முதலமைச்சராக இருந்தபொழுது
யாருடைய சொத்துக்களையும் மிரட்டி எழுதி வாங்கவில்லை
கட்சியினுடைய மூத்த தலைவர்களை வாடா போடா என்று தரம் கெட்ட வார்த்தை யில்பேசவில்லை
அவர் மேல் ஊழல் விசாரணை கமிஷன் கிடையாது
அவர் மரணமடைந்த பிறகு கோர்ட் குற்றவாளி என்று அவருக்கு தீர்ப்பு கூறவில்லை
++++++++++++++++++++++++++++++++++
எம்ஜிஆரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கிறோம்
என் தலைவன் தன்னுடைய சொந்த செல்வாக்கில் தான் முதலமைச்சராக வந்தாரே தவிர
சினிமா மார்க்கெட்டை இழந்து மரியாதை இழந்து
அடுத்தவர் கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றி என் தலைவன் எம்ஜிஆர் முதலமைச்சராக வரவில்லை
என் தலைவன் முதலமைச்சராக வந்தபிறகுபல லட்சம் கோடி கொள்ளை அடிக்கவில்லை
ஆகவே எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றோம்
+++++++++++++++++++++++++++++++++
MGR திமுகவில் சேர்ந்த பிறகு
1952 / 1957 / 1962/ 1967 / 1971. ஆகிய
ஆண்டுகளில் நடந்த சட்டமன்றபொது தேர்தல்களிலும்
பட பாராளுமன்ற தேர்தல்களிலும் பலஇடைத்தேர்களிலும் சென்னை மாநகராட்சி தேர்தலிலும் உள்ளாட்சி
தேர்தல் களிலும் MGR அவர்கள் திமுகவிற்கு தமிழ்நாடு முழுவதும் வேனில் சென்று பிரசாரம் செய்தார்
அந்த காலத்தில் இந்தியாவில் MGRஅவர்கள் தான்
வேனில் நின்றபடி படி பிரசாரம் செய்த
முதல் அரசியல் வாதி
MGR அவர்களை
திமுக வில் இருந்து நீக்கியபிறகுதான்
கருணாநிதி அவர்கள் வேனில்தமிழ்நாடுமுழுதும் சென்று பிரசாரம் செய்யும் நடைமுறைக்கு வந்தார்
+++++++++++++++++++++++++++++++++
கருணாநிதி அவர்கள் MGR ரை கட்சியிலிருந்து நீக்காமல் இருந்திருந்தால்
MGR அவர்கள் மரணம் அடையும் வரை திமுகவிற்கு பாடுபட்டு
பிரசாரம் செய்து
கருணாநிதி அவர்களை
தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சர்
பதவியில் அமர வைத்திருப்பார்
கருணாநிதி அவர்கள்
MGRரை கட்சியில்
இருந்து நீக்கிய காரணத்தால் தான்
MGR தனிக்கட்சி ஆரம்பித்து
தனிமனிதனாக மூன்று முறை
முதலமைச்சரானார்
அதன் பின் MGRன் புகள் உலகம்முழுதும்
பரவியது
ஆகவேதான்
MGR ரை கட்சியில் இருந்து நீக்கிய
கருணாநிதி அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
++++++++++++++++++++++++++++++++
தீயசக்திகருனாநிதியால்
செய்ய முடியாத காரியத்தை
நல்ல சக்திசெயலலிதா செய்து முடித்தார்
அது என்ன காரியம்
அதிமுக வில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியிலும்
அதிமுக ஆட்சி நிகழ்ச்சியிலும்
MGR பெயரை சொல்ல விடாமல் செய்தார்
எம்ஜிஆருக்கு கட்டவுட் கிடையாது
எம்ஜிஆருக்கு பிளக்ஸ் போர்டு கிடையாது
கட்சி விளம்பரங்களில் எம்ஜிஆர் படங்கள் கிடையாது
தினசரி பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களில் எம்ஜிஆர் படம் கிடையாது
வால் போஸ்டரில் எம்ஜிஆர் படத்தை சிறிதாக போடுவது
அண்ணா திமுக மேடையில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசுவது கிடையாது
எம்ஜிஆருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டால் கொடுப்பது கிடையாது
அண்ணா திமுக பொதுக் கூட்டத்தில் முன்பு எம்ஜிஆர் நடித்த சினிமா படத்தில் வருகின்ற கொள்கை பாடல்கள் ஒலிபரப்பு செய்வார்கள்
ஆனால் ஜெயலலிதா முதலமைச்சர் ஆகிய பிறகு ஜெயலலிதாவை புகழ்ந்து பாடிய பாடல்களை தான் அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் ஒலிபரப்பு செய்தார்கள்
அனைத்து அரசு திட்டங்களுக்கும் ஜெயலலிதா பெயரை வைத்துக் கொண்டார்
எம்ஜிஆர் பெயரில் ஒரு டிவி கூட ஆரம்பிக்காமல்
ஜெயலலிதா பெயரில் நான்கு டிவியை ஆரம்பித்தார்
எம்ஜிஆர் விசுவாசிகளை கட்சியிலிருந்து ஓரம் கட்டினார்கள்
எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியில் உட்கார்ந்துகொண்டு
எம்ஜிஆரால் கிடைத்த முதலமைச்சர் பதவியை பயன்படுத்தி
எம்ஜிஆருக்கு இவ்வளவு துரோகங்களையும் ஜெயலலிதா செய்தார்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது பழமொழி
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே என்பதும் பழமொழி
குரு துரோகம் செய்யாதே என்பதும் பழமொழி
இப்படிப்பட்ட துரோகத்தை நான் எடுத்துச் சொல்லும்போது
சில எம்ஜிஆர் ரசிகர்களுக்கு என் மீது மன வருத்தம் வருகிறது
எம்ஜிஆரின் உண்மையான ரசிகர்களே
இவ்வளவு துரோகத்தையும் இவ்வளவு கெடுதலையும் கருணாநிதி செய்தால் கருணாநிதி ஒருஅயோக்கியப் பயல் தீயசக்தி என்று கூறிஇருப்போம்
++++++++++++++-+++++/+++++++++++
தீய சக்தி கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபொழுது
சென்னை நகரில் புதிதாக. ஒரு எம்எல்ஏ தொகுதியை உருவாக்கினார் அதற்க்குஅண்ணா நகர் தொகுதி என்று பெயர் வைத்தார்
++++++++++++++++++++++++++++++++
நல்ல சக்தி ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தோம்
+++++++++++++++++++++++++++++++
சென்னையில் எழும்பூர் பூங்காநகர் என்று இரண்டு தொகுதிகள் உள்ளன
இதில் ஏதாவது ஒரு தொகுதிக்கு எம்ஜிஆர் சட்டமன்றத் தொகுதி என்று பெயர் வையிங்கள் எண்று
நல்ல சக்தி ஜெயலலிதாவிடம்
மனு கொடுத்தார்கள் MGR ரசிகர்கள்
அவர்களுக்கு
நெற்றியில் பட்டை நாமம்
போட்டார் ஜெயலலிதா
பாவம் MGR ரசிகர்கள்
+++++++++++++++++++++++++++++++++
MGR முதலமைச்சராக வருவதற்கு
MGR அவர்களை திமுகவிலிருந்து நீக்கிய
கருணாநிதி அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இப்படிக்கு
மன்றம் வைத்து
கட்சி ஆரம்பித்து கட்சி வளர்த்த
MGR பக்தன்
+++++++++++++++++++++++++++++++++
என்னைபோன்ற கோடிக்கணக்கான
MGR ரசிகர்கள் கட்சி வளர்த்த காரணத்தால் தான்
செயலலிதா வைப் போன்ற வர்கள்
குறுக்கு வழியில் கட்சிக்குள்
வந்து உல்லாசமாக பதவியை
அனுபவித்தார்
என்னைப் போன்ற கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் அடி உதை பட்டு வருமானத்தை இழந்து கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது....... Thanks to PM & KN
-
14.ரிக்சாக்காரன் பட வசனங்கள் பின்வருமாறு.
அசோகன்: உன்னை யார் இங்கே உள்ள விட்டது.
எம்ஜிஆர் :ஒரு கொலைகாரனுக்காக
வாதாட வேண்டாம் என வக்கீலிடம் சொல்லதான் வந்திருக்கிறேன்.
அசோகன் :ஒரு ரிக்சாக்காரனுக்கு இவ்வளவு திமிரா
எம்ஜிஆர் :ஊரார் சோற்றிலே உடம்பு வளர்க்கிற ஒரு கொலைகாரனுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது உழைச்சு பிழைக்கிற
ரிக்சாக்காரனுக்கு ஏன்
இருக்க கூடாது.
அசோகன்; என்னை மிருகமாக்காத
எம்ஜிஆர் :இனிமேல் தான் ஆகப்போறியா.
சுந்தர்ராஜன் :என்ன இங்கு கலாட்டா?
எம்ஜிஆர் :கலாட்டா ஒன்னும் இல்லீங்க
அனாதையாக இருக்கும்
இந்த பச்சிளங்குழந்தையைப்
பாருங்க
அசோகன் :ஓஹோ
இந்த குழந்தையைக் காட்டி 5 ,10 வாங்கலாமுன்னு வந்தியா
எம்ஜிஆர்:சே.!அது உன் புத்தி.
சுந்தர்ராஜன் :என்னப்பா எங்கவந்து என்ன
பேசுறே?
எம்ஜிஆர் :ஐயா கொலையை நேரிலே பார்த்த நீங்களே இப்படி பேசலாமா?
சுந்தர்ராஜன் :எல்லாம் எனக்கு தெரியும்
நீ போகலாம்.
அசோகன்:ஹா ..ஹா ..
எம்ஜிஆர்; இந்த சிரிப்பை உன்னை நெருப்பாகப் போகிறது.
உன்னை தூக்குமேடையிலே ஏத்துறவரைக்கும் நான்
ஓய மாட்டேன்
உறங்க மாட்டேன்.
இந்த குழந்தையின்......Rickshawkaran Conversations.....By KN... Thanks...
மீது ஆணை. என்பார்.
-
திரை உலகின் சாதனை மன்னன் :::
சரித்திரம், சகாப்தம் படைத்த சக்கரவர்த்திகளின், சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,......
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கினார். அவர் நடித்த படங்கள் வசூலில் சரித்திரம் படைத்தன. அவரை வைத்து படமெடுக்க படாதிபதிகள் போட்டி போடுவார்கள். அவர் நடிக்கும் படம் என்றால் பூஜை போடும் தினத்தன்று எல்லா ஏரியாக்களும் விற்பனையாகிவிடும்.
ஆனால் அத்தகைய இமாலய நிலையை அவர் எளிதில் அடைந்துவிடவில்லை. மிக மிகக் கடுமையாக போராடி படிப்படியாக உயர்ந்து தான் அந்த உன்னத நிலையை அடைந்தார் .
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதே அவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். எதிர்ப்பு ஏற்பட்டால் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். லட்சியத்தை அடையும் வரை சற்றும் ஓயக் கூடாது .
சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் அதைத்தான் செய்தார்கள் மக்கள் திலகமாக விளங்கிய எம்ஜிஆரும் அதையே செய்தார்.
அவருடைய முகம் திரையில் தெரிந்ததுமே ஆயிரமாயிரம் ரசிகர்கள் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்துவார்கள். தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி திரைப்படக் கொட்டகையிலேயே தங்கள் பக்தியை வெளிப்படுத்திய ரசிகர்களும் உண்டு.
ஆனால் ஆரம்பகாலத்தில் அதே முகம் திரையில் தோன்றுவதற்கு இலாயக்கானதாக இல்லை என்று அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த டைரக்டர் ஒருவர் சொன்னார் என்பதைக் கேட்கும்போது பலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம் ஆனால் அது உண்மை.
ஆரம்ப நாட்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரை படங்களில் நடிப்பதற்காக சந்தர்ப்பம் கேட்டு அலைந்து கொண்டிருந்தபோது, ஒரு டைரக்டர் அவருடைய முகத்தை பார்த்துவிட்டு அவருடைய முகநாடி இரட்டையாக அமைந்திருப்பது போல் காணப்படுவதால் அவருடைய முகம் அழகாக தெரியாது என்று கூறி அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க மறுத்துவிட்டார்.
பொதுவாக வளரத் துடிக்கும் எந்த நடிகரும் அத்தகைய வார்த்தைகளை கேட்டதும் பெரிதும் மனமுடைந்து போவார்கள். நடிப்பு துறையில் இறங்க வேண்டும் என்னும் எண்ணத்தையே அவர்கள் கை விட்டு விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.
ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அந்த டைரக்டர் சொற்களைக் கேட்டு மனம் உடைந்து போகவில்லை நடிப்புத் துறையிலிருந்து ஒதுங்கிவிட நினைக்கவில்லை. தன்னுடைய முகம் திரையில் தோன்ற அதற்கு முற்றிலும் ஏற்ற வகையிலேயே இருக்கிறது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
எதிர்காலத்தில் திரையுலகில் தான் மிகப் பெரிய புரட்சியை உண்டு பண்ணப் போகிறோம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்பது அவருக்கு மிக மிக நன்றாக தெரியும்.
எனவே அவர் அந்த டைரக்டர் வார்த்தைகளைக் கேட்டு ஒன்றும் சொல்லவில்லை அமைதியாகவும் மௌனமாக வீடு திரும்பிவிட்டார்.
உலகில் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்தவர்களின் மனோநிலையைக் கூர்ந்து கவனித்தால் மற்றோர் உண்மை புலப்படும் . அவர்கள் தங்களைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். தங்களுடைய திறமையையும் எதிர்காலத்தையும் மிகமிக நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரும். அப்படித்தான் திரையுலகில் நுழைவதற்குத் தான் சிரமப்பட வேண்டியிருந்தாலும் நுழைந்தபின் அத்துறையில் நிச்சயம் சரித்திரம் படைக்கப் போகிறோம் என்று நம்பிக்கை அவருக்கு எப்போதும் இருந்து வந்தது. அது யாருடைய சொற்களை கேட்டும் குறைந்துவிடவில்லை.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புகழ் வாழ்க.......... Thanks.........
-
இதயக்கனி செய்தியில் சிவாஜி*கணேசன் நடித்து 1964ல் வெளியான ஆண்டவன் கட்டளை*படத்தின் ஆறு மனமே ஆறு என்கிற*பாடல் நாள் தவறாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கேட்டு வந்ததாகவும், அது மாதிரி பாடல் எனக்காக அமைந்தது*போல் உள்ளது. இதில்*தான் நடித்திருக்கலாமோ என்று யோசிக்க வைக்கிறது*என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இயக்குனர் சங்கரிடம் கூறியதாகவும், திரு.கொற்றவன்*என்பவர் , இயக்குனர் சங்கரை சந்தித்து*பேசி தொடராக*எழுத*முற்பட்டு விடுபட்டு போன விஷயம் என்று பதிவாகியுள்ளது .
இப்போது , எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன்,*இயக்குனர் சங்கர்*எவரும்*உயிருடன் இல்லை. இதுவரை எந்த எம்.ஜி.ஆர். பக்தரோ, ரசிகரோ*இதுபற்றி*அறிந்ததாக தெரியவில்லை.* எந்த பத்திரிகையிலும் வெளியான செய்தியாக தெரியவில்லை .* அனுமானத்தின் பேரில் வெளியாகிற தகவல்களுக்கு எந்த ஆதாரமும்*இருப்பதில்லை.**
நான் இதயக்கனி வாசகர் .* இதயக்கனி மாத இதழ் சார்பில்*நடைபெறும்*விழாக்களில்*பங்கேற்றுள்ளேன ். இதயக்கனி மாத இதழில்*பல நல்ல செய்திகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை புகழ்ந்து வெளியாகி வருவதில்*மகிழ்ச்சி. ஆனால் ஆண்டவன் கட்டளை*பாடல் பற்றிய செய்தி உண்மையல்ல என்று கருதுகிறேன்.* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்து 37ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில்*, இப்படிப்பட்ட செய்திகள் அவருக்கு*புகழ் சேர்க்காது .* ஏனென்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த*போது* வெளிநாட்டவர் அவரது*படங்கள்*சிலவற்றை பார்க்க முற்பட்டபோது* , நான் நடித்த*படங்களை மட்டுமல்லாமல், தம்பி சிவாஜி*கணேசன் நடித்த தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களையும் பார்த்தால்தான் , தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்*என்று பேட்டி அளித்துள்ளதை நான் பத்திரிகைகளில் படித்துள்ளேன் .**
எனவே இதயக்கனி செய்திகளில் இது போன்ற உண்மைக்கு புறம்பான செய்திகள் இனியும்*வெளிவராது*என்று நம்புகிறேன் .........எழுத்தாக்கம் by. திரு லோகநாதன் Sir... Thanks......
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 14 திங்கள்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவரின் பெயர்
A.C.சண்முகம்
1980 ஆண்டு / ஆரணி தொகுதிகளில் போட்டியிட்டு MLA பதவிக்கு வந்தார்
1984 ஆண்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு
M.P. பதவிக்கு வந்தார்
இவரை பத்திரிக்கையிலும் அரசியல்வாதிகளும் தொண்டர்களும்
ஆரணி சண்முகம்
என்று தான் அழைப்பார்கள்
இவர் சென்னை மதுராவயலில்
MGR பல்கலைக்கழகத்தை சொந்தமாக உருவாக்கினார்
எம் ஜி ஆர் மறைந்த பிறகு
ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்த. M.P. .எம்பி களில் இவரும் ஒருவர்
இவர் உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
இவர் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்....... Thanks...
.
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 14 திங்கள்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர்கள்
சரவணன் ராஜகோபால்
அவருடைய அன்புத் தந்தை
எம்ஜிஆர் பக்தர்களே
சரவணன் ராஜகோபால் அவர்கள்
சென்னையில் கனரா வங்கி உயர் அதிகாரியாக பணிபுரிகிறார்
எம்ஜிஆர் அவர்களின் மீது தீவிர அன்பும் பாசமும் கொண்டவர்
பல எம்ஜிஆர் பிறந்த நாள் விழாக்களுக்கு தன்னுடைய சொந்தப் பணத்தை வாரி வழங்கியவர்
தமிழ்நாட்டில் எந்த மூலையில் எம்ஜிஆர் பிறந்த தின விழா நடந்தாலும் அந்த விழாவில் கலந்து கொள்பவர்
நானும் ஒரு எம்ஜிஆர் விழாவில் தான் ஐயா சரவணன் ராஜகோபால் அவர்களை சந்தித்து பேசினேன்
அன்பானவர் பண்பானவர் பாசம் ஆனவர்
இன்று இவருக்கு இனிய பிறந்தநாள்
இவரும் இவருடைய குடும்பத்தினர் அனைவரும் இவருடைய குழந்தைகளும்
பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு காலம் நோய் நொடியில்லாமல் பண செழிப்புடன் வாழ்க வாழ்க என்று உலகில் உள்ள அனைத்து எம்ஜிஆர் பக்தர்களின் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
/////////////////////////////////////?///////////?
இந்தப் படத்தில் சரவணன் ராஜகோபால் அவர்கள்
தன்னுடைய தந்தையை அரவணைத்து கொண்டுள்ளார்
இந்த வயதான தந்தை தன் மனதுக்குள் என்ன நினைக்கிறார் தெரியுமா
இந்தக் காலத்தில் திருமணம் நடந்தவுடன் தாய் தந்தையரை ஒதுக்கி விடுகிறார்கள்
ஆனால் நமது மகன் சரவணன் ராஜகோபால் அவர்கள்
நம் மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்துள்ளாரே என்று அந்த தந்தை பெருமைப்படுகிறார்
தாய் தந்தையரின் ஆசிர்வாதத்துடன்
சரவணன் ராஜகோபால் அவர்கள் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்.......PM.,. ... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 13 ஞாயிறு
முகநூல் எம்ஜிஆர் பக்தர்களே
1969 ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது
அருமைதலைவர் எம்ஜிஆருக்கு பக்கத்தில் அமைச்சர்
K.ராஜாராம்
சேலம்
இவர் திமுகவின் ஆரம்ப காலகட்ட தலைவர்
இவர் கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்
1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்த பொழுது
கருணாநிதி மந்திரிசபையில் இவர் அமைச்சராக பணிபுரிந்தார்
கருணாநிதி அவர்களின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்த பிறகு
இவர் அண்ணா திமுகவில் சேர்ந்தார்
1984 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது
இவர் / பனைமரத்துப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
1984 எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார்
எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சராக உருவாக்கிய எம்எல்ஏக்களில்இவரும் ஒருவர்
இவர் நம் கட்சிக்கு இடையில் வந்தாலும்
எம்ஜிஆர் மரணமடையும் வரை எம்ஜிஆருக்கு விசுவாசமாக இருந்தார்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதவர்... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 13 ஞாயிறு
அருமை தலைவரோடு
வளர்மதி /பிடி சரஸ்வதி
இந்தப் படம் 1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்த பொழுது எடுத்த படம்
++++++++++++++++++++++++++++++++
இந்தப் படத்தில் பிஸ்கட் கலர் சேலை அணிந்து முதலாவது நபராக நிற்பவர் பெயர்
வளர்மதி
இவர் ஒரு பயங்கரமான முரட்டு எம்ஜிஆர் ரசிகை
1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தவுடனேயே இவர் கட்சியில் சேர்ந்து கொண்டார்
இவர் தமிழ்நாடு முழுவதும் சென்று அண்ணா திமுக பொதுக்கூட்டத்தில் பேசி கட்சி வளர்த்த எம்ஜிஆர் ரசிகை
1984 ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்
எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சர் ஆகிய எம்எல்ஏக்களிள் இவரும் மிக மிக மிக முக்கியமானவர்
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதவர்
எம்ஜிஆர் மறைந்த பிறகு இவர் ஜானகி அணியில் இருந்தார்
தமிழ்நாடு முழுவதும் ஜானகி அணி பொதுக்கூட்டங்களில் பேசினார்
எம்ஜிஆர் உயிரோடு இருக்கும்பொழுதே ஒரு துரோகி ராஜீவ்காந்தியின் மூலமாக எம்ஜிஆரை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்க முயற்சி செய்தார்
இந்த சதிச் செயல்களை தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி எல்லாம் சென்று பொதுக் கூட்டத்தின் வாயிலாக மக்களிடம் எடுத்துக் கூறினார்
அந்த துரோகியை இவர்திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்தை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை வன்னைஸ்டெல்லா என்ற திமுக பேச்சாளரை விட கேவலமாக பேசினார்
அந்தத் துரோகியை இவர் திமுக பேச்சாளர் கோடம்பாக்கம் குமாரை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர்
வெற்றிகொண்டான் அவர்களைவிட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் நன்னிலம் நடராஜனை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர்
முரசொலி அடியார் அவர்களை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் கேரளா சுந்தரம் அவர்களை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் கோவை ராமநாதனை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் நெல்லை நெடுமாறனை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர் இளம்வழுதியைவிட கேவலமாக பேசினார்
அந்த துரோகியை இவர் திமுக பேச்சாளர்
ராதாரவியை விட கேவலமாக பேசினார்
அந்த துரோகி யைஇவர் திமுக பேச்சாளர் சினிமா நடிகர் எஸ் எஸ் சந்திரனை விட கேவலமாக பேசினார்
இவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இடி முழக்கத்தை போல் கைதட்டல் விண்ணைப் பிளக்கும்
எம்ஜிஆர் குடும்பத்தின் உண்மையான விசுவாசி இவர்...... Thanks...
-
ஸ்ரீ MGR. வாழ்க
சித்திரை 12 சனி
எம்ஜிஆர் பக்தர்களே
நம் அருமை தலைவன் எம்ஜிஆருக்கு அருகில் இருப்பவர் பெயர்
J. பங்க ராஜ்
இவரை ஜேப்பியார் என்றுதான் அழைப்பார்கள்
J. P. R.
மாவீரன் J. P. R.
இவர் ஒரு போலீஸ்காரர்
இந்த பெயர் தமிழ்நாட்டு மக்கள்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்
அண்ணா திமுக தொண்டர்கள் அனைவருக்கும் தெரிந்த பெயர்
///////////////////////////////////////////////////
1988 எம்ஜிஆர் அவர்கள் மறைந்த பிறகு ஜானகி அம்மையாரை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்
ஜானகி அம்மையார் பதவியேற்ற பிறகு முதல் முறையாக
சட்டசபை கூடியது
ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள்
அப்பொழுது ஜானகி அணி எம்எல்ஏக்களுக்கும் ஜெ அணி எம்எல்ஏக்களுக்கு ம் கைகலப்பு ஏற்பட்டது
சட்டசபை காவலர்கள் வந்து அனைத்து எம்எல்ஏ களையும் வெளியேற்றினார்கள்
சட்டசபைக்கு வெளியே உலக நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்தும்
வந்திருந்த
T.V. மற்றும் பத்திரிகை நிருபர்களும் குவிந்து இருந்தார்கள்
அவர்களிடம் சென்று ஜெ அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள்
எங்களை ஜானகி அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடித்து விட்டார்கள்
வேஷ்டி சட்டையை எல்லாம் கிழித்து விட்டார்கள்
இதோ பாருங்கள் இந்த எம்எல்ஏ டவுசருடன் நிற்கிறார் இவருடைய வேஷ்டியை காணவில்லை
இதற்கெல்லாம் காரணம்
J.P.R. அவர்கள்தான்
J P R அவர்கள் தன்னுடைய
அடியாட்களைவிட்டு
எங்கள் அணி எம்எல்ஏக்களை எல்லாம் அடித்து உதைத்து விட்டார்கள்
சட்டை வேஷ்டி எல்லாம் கிழித்து விட்டார்கள்
சில எம்எல்ஏக்களுக்கு வேஷ்டி கிடையாது
டவுசர் ரோடு நிற்கின்றார்கள்
ஆகவே நாங்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு சென்று
எங்கள் நிலைமையை எடுத்து கவர்னரிடம் கூறுவோம்
என்று பத்திரிகை நிருபர்களிடம் கூறிவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள்
அடிபட்ட எம்எல்ஏக்கள் அனைவரையும் ஒரு பஸ்சில் ஏற்றி கவர்னர் மாளிகைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்கள்
அந்தப் பஸ்சை கவர்னர் மாளிகைக்கு ஓட்டிச் சென்றவர் ஒரு எம்எல்ஏ
அவருடைய பெயர் மேட்டூர் நாச்சிமுத்து M.L.A.
+++++++++++++++++++++++++++++++++
அன்று டிவியிலும் மாலை பத்திரிக்கைகளிலும்
2 செய்திகள் முக்கிய செய்திகளாக வெளிவந்தது
1. ஜேப்பியாரின் ஆட்கள் சட்ட சபைக்குள் நுழைந்து ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை அடித்து உதைத்தனர்
2. அடி வாங்கிய ஜெயலலிதா ஆதரவு எம்எல்ஏக்களை
கவர்னர் மாளிகைக்கு பஸ்சில் அழைத்து சென்றபோது
அந்த பஸ்சை ஓட்டி யவர் ஒரு எம்எல்ஏ
அவருடைய பெயர் மேட்டூர் நாச்சிமுத்து
இப்படித்தான் இந்தியா முழுவதும் உள்ள தினசரி பத்திரிக்கைகளிலும் செய்தியை வெளியிட்டார்கள்
இந்தியா முழுவதும் உள்ள டிவி களிலும் இந்த செய்தியைக் கூறினார்கள்
+++++++++++++++++++++++++++(++++(+(
அடுத்து சில மாதங்களில்
எந்த ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஜானகி அம்மையாரின் ஆட்சியைக்கவிழ்க்க துணை போனாரோ அந்த நாச்சிமுத்து வை
எந்த ஜெயலலிதாவிற்காக சட்டசபையில் அடி உதை வாங்கினாரோ அந்தநாச்சிமுத்துவை
எந்த ஜெயலலிதாவிற்காக கவர்னர் மாளிகைக்குபஸ்சைஓட்டிச் சென்றாறோ
அந்த நாச்சி முத்துவை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கிவிட்டார்
++++++++++++++++++++++++++++++
கழகத் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
எனக்கு எதிராக துரோகச் செயலில் ஈடு பட்ட காரணத்தினால்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
மேட்டூர் நாச்சிமுத்து
அவர்கள் இன்றுமுதல் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்
அவருடன் கழகத் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
என்று பொன்மனம் பத்திரிக்கை யில்
ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்
ஜெ அணியின் அதிகாரப் பூர்வ நாளேடு பொன்மனம் பத்திரிக்கை
இதன் முதலாளி திருநாவுக்கரசு
++++++++++++++++(++++++++++++++++++
உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உதவிய ஜே பி ஆர் வாழ்க
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காத. ஜே பி ஆர் வாழ்க...... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 10. வியாழன்
MGR பக்தர்களே
நம் அருமைத்தலைவன்
MGR அவர்களுக்குப்பின்னால் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பவர்
பெயர்
ஜெமினி S.S. வாசன்
MGR. அவர்கள் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமான
திரைப்படம் / சதிலீலாவதி
சதிலீலாவதி சினிமாவிற்க்கு வசனம்
எழுதியவர் / S.S. வாசன்
பிறகு இவர் / ஆனந்தவிகடன் / என்றபத்திரிக்கையை / தொடங்கினார்
இந்த நேரத்தில் சென்னையில் இ ருந்தஒரு
சினிமா ஸ்டுடியோ நஸ்டத்தில் இயங்கிய
காரணத்தினால் அதைவிற்பதற்க்கு முடிவெடுத்தார்கள்
அந்த ஸ்டுடியோவை / S.S. வாசன்
விலைக்கு வாங்கினார் / அதற்க்கு
ஜெமினி ஸ்டுடியொ என்று பெயர்
வைத்தார்
அந்தக்காலத்தில் தமிழ் நாட்டில் தயாரிக்கின்ற. கலர் சினிமா படங்களை
கழுவி பிரிண்ட் எடுப்பபதற்கு பம்பாயிலுள்ள
பிலிம் செண்டர் / கலர் லேப்பபிற்குத்தான் தமிழ் நாட்டைச்சேர்ந்தவர்கள் செல்வார்கள்
இதையரிந்த / S.S.வாசன் அவர்கள்
சென்னையில் / ஜெமினி கலர்லேப்
ஆரம்பித்தார். அது ஈஸ்ட்மென் கலர்லேப்
அடுத்து MGR நடித்த 100 படம் ஒளிவிளக்கு
இந்த படத்தை S.S.வாசன் ஜெமினி ஸ்டுடியோ சார்பில் தயாரித்தார்
இவர் மரணம் அடைந்தபிறகு இவருடையமகன்
S.S.பாலன்
ஸ்டுடியோநிர்வாகத்தைபார்த்தார்
MGR நடித்த / சிரித்து வாழவேண்டும்
சினிமா படத்தை S.S.பாலன் இயக்கினார்
இவர் ஆரம்பித்த பத்திரிக்கைதான்
ஜூனியர் விகடன்
++++++++++++++++++++++++++++++++++
MGR இறந்தபிறகு ஜூனியர்விகடன் / தராசு / இந்த
இரண்டுபத்திரிக்கைகளும்
போட்டி போட்டுக்கொண்டு
மணம் திறந்த பேட்டி / என்று MGR கட்சியைசேர்ந்தவர்களிடம்பேட்டிஎடுத்து
வெளியிட்டார்கள்
ஜூனியர்விகடன் வெளிவந்து மூண்றுநாட்களுக்குப்பிறகு
தராசு பத்திரிக்கைவெளிவரும்
சியாம் / என்பது தராசு பத்திரிக்கை
ஆசிரியர் பெயர்
++++++++++++++++++++++++++++++++++
S.S.பாலன் / சியாம் / இப்பொழுது
உயிரோடு உள்ளார்கள்
அவர்கள் ஆபிசுக்கு போன் போட்டு இந்த செய்தி உண்மையா பொய்யா என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
/////////////////////////////////?////////////////////
1988
எம்ஜிஆர் அவர்கள் மரணம் அடைந்த பிறகு
மனம் திறந்த பேட்டி என்று வெளிவந்தது
அதை இப்பொழுது நான் பதிவிடுகிறேன்
///////////////////////////////////////////////////?
1972 MGR அண்ணா திமுகவை ஆரம்பித்த நாளிலிருந்து
1977 ஆண்டுவரை அண்ணா திமுக மேடைகளில் பேசிக் கொண்டிருந்தவர் பெயர்
ஜி கே சுப்பிரமணியன்
இவர் சிறுவயதில் இருந்தே எம்ஜிஆர் ரசிகன்
இவருடைய பொதுக்கூட்டம் நிறைய வித்தியாசமாகவே இருக்கும்
இவர் மேடைக்கு வரும் பொழுது சினிமா நடிகரை போல்முகத்திற்க்கு மேக்கப் போட்டுக் கொண்டு தான் வருவார்
கையில் தப்பு
என்ற ஒரு இசைக்கருவியை வைத்திருப்பார்
மேடையிலே பேசிக்கொண்டிருப்பார்
திடீரென்று இடையிலே எம்ஜிஆர் பட பாடல்களை டேப் அடித்துக்கொண்டே பாடுவார் ஆடுவார்
இவருடைய பொதுக்கூட்டத்தை
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கெம்பட்டி காலனியில்
ராமர் கோயில் வீதியில் கேட்டேன்
அதன் காரணமாக இவருடைய பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் நிறைய பேர் வருவார்கள்
இந்த செய்தி எம்ஜிஆர் அவர்களுக்கு நீண்ட நாட்களாகவே தெரியும்
சட்டசபை பொதுத் தேர்தலின்போது எம்ஜிஆர் அவர்கள் திடீரென்று
1980 ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது
பவானிசாகர்
தொகுதி சட்டமன்ற அண்ணா திமுக வேட்பாளராக
G.K. சுப்ரமணியன் அவர்களை எம்ஜிஆர் வேட்பாளராக அறிவித்தார்
சுப்பிரமணியன் வெற்றிபெற்றார்
இவரை சுப்பிரமணியன் எம்எல்ஏ என்றால் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது
G.K.S. நவரசம் என்றால்தான் கட்சித் தொண்டர்களுக்கும் தெரியும் பொது மக்களுக்கும் தெரியும்
இவர் எம்ஜிஆரின் குடும்பத்திற்கு ரெண்டகம் நினைக்காதவர்
உப்பிட்ட எம்ஜிஆரை உயிருள்ளவரை நினைத்துக் கொண்டிருந்தவர்
எம் ஜி ஆர் மறைந்த பிறகு ஜானகி அணியில் இருந்தார்
+++-+++++++-++++++++++++++++++++++
ஜானகி அணியும் ஜெஅணியும் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து விட்டது
ஆனால் இவர் அரசியலில் ஈடுபடாமல் வீட்டிலேயே இருந்தார்
அப்பொழுது அண்ணா திமுக வில் இருந்த எஸ்டி சோமசுந்தரம் எஸ்எஸ்ஆர்
இவர்கள் எல்லாம் பதவிக்காக மாமா வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்
ஜே அணியில் இருந்தவர்
கோவை தம்பி / சினிமா தயாரிப்பாளர்
இந்த நேரத்தில் கோவைத்தம்பி அவர்கள்
முன்னாள் எம்எல்ஏ நவரசம் அவர்களை சந்தித்து
கட்சி ஒன்று சேர்ந்து விட்டது
ஆகவே நீங்கள் சென்னை வந்து ஜெயலலிதாவை சந்தியுங்கள் என்று அழைத்துள்ளார்
அதற்கு நவரசம் அவர்கள்
எம்ஜிஆர் உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே எம்ஜிஆரை முதலமைச்சர் பதவியிலிருந்துஇறக்குவதற்கு ஜெயலலிதா திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்
எம்ஜிஆர் இறந்த பிறகும்
ஜெ அணி சார்பில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்திலும்
ஜெ அணி சார்பில் கொடுக்கப்படுகிற பத்திரிக்கை விளம்பரங்களிலும்
எம்ஜிஆர் உருவத்தை சிறிதாக போட்டார்கள் எம்ஜிஆர் பெயரை இருட்டடிப்பு செய்தார்கள்
ஆகவே நான் வந்து ஜெயலலிதாவை சந்திக்க விரும்பவில்லை என்று கூறி யிருக்கிறார்
கோவைத்தம்பி அவர்கள் நவரசம் அவர்களை அடுத்து அடுத்து சந்தித்து ஜெயலலிதாவிடம் அழைத்து சென்றுள்ளார்
கோவைத்தம்பி அவர்களும் நவரசம் அவர்களும் இப்பொழுது ஜெயலலிதா வீட்டிற்கு உள்பகுதியில் அமர்ந்து உள்ளார்கள்
ஜெயலலிதா அறையிலிருந்து வெளியில் வந்து ஒருவர்
வரிசைப்படி ஒவ்வொருவரையும் அறைக்குள் அனுப்பி கொண்டு இருப்பார்
அவர் இப்பொழுது நவரசம் அவர்களுக்கு அருகில் வந்து
நீங்கள் பொதுச்செயலாளர் அறைக்குள் செல்லும் பொழுது
உங்கள் கையில் உள்ள மோதிரத்தை கழட்டி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்
பொதுச் செயலாளருக்கு இது பிடிக்காது என்று கூறியுள்ளார்
தமிழ்நாட்டிலுள்ள எம்எல்ஏக்களில்
தாமரைக்கனி / நவரசம் / இவர்கள்தான் எம்ஜிஆர் படத்தை பெரிதாக பதித்து மோதிரம் அணிந்துள்ள எம்எல்ஏக்கள்
உடனே நவரசம் அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்காமல் ஜெயலலிதாவின் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்
பின்னால் ஓடிவந்த கோவைத்தம்பி அவர்கள்
இவ்வளவு தூரம் வந்துவிட்டு ட பொதுச் செயலாளரை பார்க்காமல் போகக்கூடாது வாருங்கள் வாருங்கள் என்று கையை பிடித்து இழுத்து இருக்கிறார்
அதற்கு நவரசம் அவர்கள் சொன்ன பதில்
என் உடம்பில் ஓடுவது எம்ஜிஆர் ரத்தம்
மேடையில் பேசிக் கொண்டிருந்த என்னை சட்டசபையில் பேச வைத்தவர் எம்ஜிஆர்
எனக்கு விழுந்த மாலை மரியாதையும் நான் உண்ணும் உணவும் எம்ஜிஆர் கொடுத்தது
எம்ஜிஆர் மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு ஜெயலலிதாவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறிவிட்டு வந்துவிட்டார்
அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கோவை தம்பியும் நானும் சந்தித்துக் கொண்டோம்
அப்பொழுது கோவைத்தம்பி என்னிடம் கூறினார்
நீங்கள் சென்ற பிறகு நான் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் சென்றேன்
ஜெயலலிதா அவர்கள் என்னை பார்த்து
யாரையோ நீங்கள் கூட்டி வருகிறேன் என்று கூறி இருந்தீர்களே எங்கே அவர் என்று கேட்டார்
நான் மோதிரம் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஜெயலலிதாவுடன் கூறினேன்
ஜெயலலிதா மிகவும் கோபமாக என்னைப் பார்த்து
உன்னை போன்றவர்களை கட்சியில் வைத்துக் கொண்டு என்னால் மாறடிக்க முடியாது
என்று கூறி தன் கையிலுள்ள ஒரு புத்தகத்தை எதிர்புறம் உள்ள ஜன்னல் மீது வீசி எறிந்தார்
நானும் வெளியே வந்து விட்டேன்
எனக்கு ம்அரசியல் தேவை இல்லை இனிமேல் மீண்டும் நான் சினிமா தயாரிக்க திட்டமிட்டு உள்ளேன்
என்று கோவைத்தம்பி அவர்கள் என்னிடம் கூறினார்
எம்ஜிஆர் இறந்த பொழுது ஜானகி அம்மையாரை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு கோவைத்தம்பி கடுமையாக முயற்சி செய்தவர்.... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 11 வெள்ளி
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் நம் அருமை தலைவனை
வணங்குபவர் பெயர்
வி பி பாலசுப்பிரமணியன். இவர் ஒரு வழக்கறிஞர்
துணை சபாநாயகர்
வேடசந்தூர் தொகுதி
++++++++++++++++++++++++++++++++++
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை
,இந்தத் தொகுதியில்
நஞ்சுண்டையா
. என்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தான்
தொடந்து எம்எல்ஏவாக வருவார்
இந்த சூழ்நிலையை மாற்றி அமைத்தவர் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
1977. ஆண்டு வாசன் என்பவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தார் MGR
1980 ஆண்டு வி பி பாலசுப்ரமணியன் என்பவரை வேட்பாளராக எம்ஜிஆர் அறிவித்தார்
வி.பி. பாலசுப்பிரமணியன் வெற்றி பெற்றார்
1984 ஆண்டு மீண்டும் அதிமுக வேட்பாளராக பாலசுப்பிரமணியனை
வெற்றிபெற வைத்தார் MGR
உப்பிட்ட MGR குடும்பத்திற்கு உறுதுணையாக இருநதவர்
உண்டவீட்டிற்கு ரெண்டகம்
நினைக்காதவர்
ஜானகி அம்மையாரை முதலமைச்சராக கொண்டுவந்தவர்
இவர் சிறந்த பேச்சாற்றல் உடையவர்
இவர் சட்டசபையில் பேசும்பொழுது
மயான அமைதியாக இருக்கும் சட்டசபை
அனைத்துக் கட்சியை சேர்ந்தவர்களும் இவருடைய பேச்சை உன்னிப்பாக கவனிப்பார்கள்
வேடசந்தூர் மிகவும் வறச்சியானதொகுதி அந்தததொகுயில்பலமில்களை உருவாக்கியவர் இவர்
வேடசந்தூரில் இருந்து கரூர்
செல்லும் ரோட்டில் பல மில் / பல. தொழிற்சாலைகளை
இவர் காலத்தில் உறுவாக்கினார்
இவரைபோன்ற. MGR ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான் ஜெயலிதா எடப்பாடி முதல்வராக. வர முடிந்தது
இவரைப்போன்ற எம்ஜிஆர் ரசிகர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது... Thanks...
-
அடேங்கப்பா இன்றாவது அவர் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது என்றீரே !
ஆனாலும் ,, காங்கிரஸ் , கட்சிகூட காமராசர் கக்கன் போன்ற தலைவர்களால் , வேறு பல தொண்டர்களால் வளர்க்கப்பட்டதே. ஆனால் அதெல்லாம் அந்ததந்த காலகட்டத்தில் அவ்வளவே . அதையும் கட்சி சார்பற்ற மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே சாத்தியம்.
ஆக திரு எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு , அவர் கட்சி பல்வேறு புதுப்புது தொண்டர்களால் தான் காப்பற்றப்பட்டு வருகிறது . அவர் கட்சி ஆட்சியும் தொடர்கிறது.
இங்கே தொடர்வதற்கு யார் காரணமாகிறார்களோ அவர்களின் உழைப்பே காரணமாகிறது. காலத்துக்கு காலம் தொண்டர்கள் வேறுபடுகிறார்கள் . புதுப்புது இரத்தம் கட்சியில் பாய்வதால்தான் கட்சி அழிவின்றி சாதிக்க முடியுமேயன்றி வேறில்லை.
அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த தலைமைக்கு விசுவாசிகளால் மட்டுமே கட்சி உயிர்ப்போடு இருக்கிறதே அன்றி , முன்னர் ஒரு தலைமைக்கு விசுவாசமாக இருந்தவரால் மட்டும் அடுத்தடுத்த தலைமைகளை வெற்றி கொள்ளச் செய்ய இயலாது.
எத்தலைமைக்கும் , எத்தகைய விசுவாசி இருப்பினும் , மக்கள் ஏற்று வாக்களித்து வெற்றி காணச் செய்யாவிடில் ( காங்கிரஸ் போல ) அத்தலைமையாளோ , அவர் விசுவாசிகளாலோ எவ்வித பிரயோஜனமும் இல்லை.......Fb... Thanks...
-
உண்மை உரக்க சொல்கிறேன் இவரை போன்ற தொண்டா்கள் இ௫ந்தால்தான் கட்சி ஆலமரமாக வளா்ந்து இ௫க்கிறது அதை கட்டி காக்க எம்ஜிஆா் பெயரை உரக்கச் சொல்லுங்கள் வெற்றி மேல் வெற்றி வ௫ம் வாழ்க எம்ஜிஆா்...... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 8 செவ்வாய்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர் மொடக்குறிச்சி சுப்புலட்சுமி
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் முதல் முதலாக எம்ஜிஆர் முதல்வர் பதவி ஏற்றார்
அவரது அமைச்சரவையில் கோவை மாவட்டத்தின் சார்பாக அமைச்சராக பதவியேற்றவர்
சுப்புலட்சுமி
அமைச்சரவை பட்டியலில் சுப்புலட்சுமியின் பெயரை பார்த்தவுடன் எங்களைப் போன்ற ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் மன்றம் வைத்து அண்ணா திமுகவை வளர்த்தவர் களுக்கு அதிர்ச்சியாக இருந்தன
காரணம் கட்சியில் புதுமுகமாக இருந்தார்
சுப்புலட்சுமிக்கு எம்ஜிஆர் அமைச்சர் பதவி கொடுத்து இருந்தார்
சுப்புலட்சுமி ஆசிரியர் தொழில் பார்த்தவர்
1980 ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அண்ணா திமுக தோல்வி அடைந்தன
சிவகாசி /கோபிசெட்டிபாளையம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதியில் தான் அண்ணா திமுக வெற்றி அடைந்தது
அதன் காரணமாக அண்ணா திமுக ஆட்சியை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்தார்
இந்த சோதனையான காலகட்டத்தில் நாஞ்சில் மனோகரனும் சுப்புலட்சுமியும் அண்ணா திமுகவை விட்டு ஓடிவிட்டார்கள்
அடுத்த மூன்று மாதங்களில் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் எம்ஜிஆர் அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார்
தனி மனிதனாக பம்பரமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எம்ஜிஆர் தன்னுடைய சொந்த செல்வாக்கில் மீண்டும் ஆட்சியை பிடித்தார்
இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களைப் பார்த்து கேட்ட கேள்வி
என்ன காரணத்திற்காக என் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார்கள்
என்னுடைய ஆட்சி ஊழல் ஆட்சியா
நான் ஊழல் செய்து சொத்து சேர்த்தேனா
அடுத்தவர்களுடைய சொத்துக்களை நான் மிரட்டி எழுதி வாங்கினேனா
என் அண்ணன் குடும்பமோ என்னுடைய உறவினர்கள் குடும்பமோ அரசியலில் தலையிட்டு பலகோடி ரூபாய் சம்பாதித்தார்களா
தமிழ்நாட்டு மக்களளே அதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்
அந்தப் பதில் உங்கள்வாக்குசீட்டு மூலமாக இந்த உலகிற்கு தெரிய வேண்டும்
இவ்வாறு ஊழல் செய்யாத. நம் உத்தமத் தலைவன்
அடுத்தவருடைய தோட்டம் காடுகளை பங்களாக்களை மிரட்டி எழுதி வாங்காத
வள்ளல் எம்ஜிஆர் மேடையில் முழங்கினார்
/////?///////////////////////////////////?????/?
1980 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில்
அமைச்சர் காளிமுத்து அவர்கள் பேசியதாவது
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்திரா காங்கிரசு கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட்டது
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசை இந்தியா முழுவதும் வெற்றியடைய செய்து உள்ளார்கள்
திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள்
இந்த சட்டசபைத் தேர்தலில் எம்ஜிஆரிடம் சிக்கி
திமுக காங்கிரஸ் கூட்டணி
தேர் சக்கரத்தில் சிக்கிய. தேங்காயை போல் சிதறி விடும்
இதோ என் தலைவர் புறப்பட்டுவிட்டார்
தரங்கெட்ட வர்களிடமிருந்து தாய்நாட்டை காக்க. புலி என புறப்பட்டுவிட்டார் புரட்சித்தலைவர்
என் தலைவன் எம்ஜிஆர் அமைதியாக இருக்கிறார் என்பதற்காக
அவரை இளக்காரமாக நினைத்து விடாதீர்கள்
எம்ஜிஆர் அவர்கள்
அலைகள் இல்லாத. பசிபிக் மகா சமுத்திரத்தை போன்றவர்
ஆரவாரம் இல்லை என்பதற்காக அந்தக் கடலுக்கு சக்தி இல்லை என்று நினைத்து விடாதீர்கள்
ஏனென்றால் உலகத்திலேயே மிகவும் ஆழமான கடல் பசிபிக் மகா சமுத்திரம்
அந்தக் கடலை போன்றவர்தான் எங்கள் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்
இந்தியாவிலேயே மக்கள் சக்தி கொண்ட ஒரே தலைவன் எங்கள் எம்ஜிஆர் அவர்கள் தான்
இன்னும் சில நாட்களில் என் அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இரண்டாவது முறை ஆட்சியில் அமரப் போகிறார்
இவ்வாறு காளிமுத்து பேசினார்
///////////////////////////////////////////////////
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இவர் எப்படி எம்எல்ஏ ஆனார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட எம்ஜிஆரிடம் மனு கொடுத்திருந்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனாரை எம்ஜிஆர் அண்ணா திமுக வேட்பாளராக அறிவித்தார்
சுப்புலட்சுமியின் கொழுந்தனார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்
வேட்பு மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் அதில்சில தவறு இருந்த காரணத்தினால் அவர் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்கள்
இப்பொழுது எம்ஜிஆர் அவர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது
வேட்பு மனுவில் டம்மி வேட்பாளராக சுப்புலட்சுமி அவர்கள் மனு கொடுத்திருந்தார்
இதை அறிந்த எம்ஜிஆர் அவர்கள் சுப்புலட்சுமி அவர்களை அண்ணா திமுக வேட்பாளராக மொடக்குறிச்சி தொகுதிக்கு அறிவித்தார்
இப்படி குறுக்கு வழியில் எம்எல்ஏ ஆனவர் சுப்புலட்சுமி
பிறகு அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து விட்டு ஓடி விட்டார்...... Thanks...
-
1980 புதுவை சட்டமன்ற பொது தேர்தலுக்கு இந்த அம்மாவைத்தான் தலைவர் அனுப்பி வைத்தார் ! சிறப்பாகத்தான் பணியாற்றினார் ! மது விலக்கு - தமிழகத்தோடு புதுவை இணைப்பு என்ற கோஷத்தால் தோல்வியை தழுவ வேண்டியதாகிவிட்டது ! மந்திரக்கோல் மைனரோடு தி மு காவில் தஞ்சம் பிறகு ! ..... Thanks
-
Purachi thalaivar ponmana semmal endrum makkala vazavaidhavar makkalin kadawol avarudaiya kodikannan sothukalai makkalluku varri vazavaidhavar makkalin kadawol adharkku pirrakku vandha varkal athanayum kollaiyadichi vaikkara arrashiyal vadhi Kal adhikkam endrum kodikanakkana thondarkallil nannum orvan Dr MGR thalaivar pukal marayadhu kodiyel oruvar purachi thalaivar Ennum 1000varusam annallum Dr MGR thalaivar pukal marayadhu kodiyel oruvar.......Fb.... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 7 திங்கள்
எம்ஜிஆர் பக்தர்களே
1980 ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது
அடுத்து மூன்று மாதங்களில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது
1980 ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்
அப்பொழுது கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது
அப்பொழுது எடுத்த படம்
1977 / 1980/ 1984 / ஆண்டுகளில் 3 முறை எம்ஜிஆர் முதல்வராக பதவி ஏற்றார்
அப்பொழுது எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்கள் யார் / அவர்களுடைய பெயர் என்ன
,இன்று நான் அந்த. கால. நிகழ்ச்சி களை நினைத்துப் பார்த்தேன்
1980 அருமை தலைவர் எம்ஜிஆர் உடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது
கட்சியில் இருந்து பல அமைச்சர் பயல்களும் பல எம்எல்எ பயல்களும்
பல மாவட்டச் செயலாளர் பயல்களும்
பல நகரச் செயலாளர் பயல்களும்
துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார்கள்
அப்பொழுது எங்களைப் பார்த்து எதிர்கட்சி காரர்கள் கிண்டல் செய்வார்கள்
எம்ஜிஆரின் கூடாரம் காலியாகி விட்டது என்று எங்களை கிண்டல் செய்வார்கள்
அவர்களுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம்
MGR. கட்சியை விட்டு எந்த தொண்டனும் போகவில்லை
வயித்து சோத்துக்கு வந்த எம்எல்ஏபயல்களும் மந்திரி பயல்களும் ஓடிவிட்டார்கள்
மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எம்ஜிஆர் வருவார் என்று நாங்கள் பதிலடி கொடுப்போம்
இந்த சோதனையான காலகட்டத்தில்
மார்க்கெட் இழந்த எந்த நடிகையும் எம்ஜிஆர் கட்சிக்கு வரவில்லை
எம்ஜிஆர் தனிமனிதனாக
மூன்று முறை முதல் அமைச்சராக
வந்தார்
எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அவர்களின் பெயர்
/////////////////////////////////?//////////????
தமிழ்நாட்டின் முதலமைச்சர்
எம்ஜிஆர்
கே ஏ கிருஷ்ணசாமி
ஆர் எம் வீரப்பன்
எஸ் ஆர் ராதா
நாராயணசாமிமுதலியார்
பொன்னையன்
காளிமுத்து
குழந்தைவேலு
ராகவா னந்தம்
டாக்டர் ஹண்டே
விஜயலட்மி / வீரபாண்டி / கொலைசெய்யப்பட்ட பூலாவாரி
சுகுமாரனினன் தங்ஙை
P.T. சரஸ்வதி
ராஜாமுகமது
ஆனூர் ஜெகதீசன்
அரங்கநாயகம்
எட்மண்ட்
V.V. சாமிநாதன் / புவனகிரி
முத்துச்சாமி / ஈரோடு
திருநாவுக்கரசு
எஸ் என் ராஜேந்திரன்
விஜயசாரதி / அரக்கோணம்
கோமதி சீனிவாசன் / வலங்கைமான்
நல்லுசாமி / திருச்சி/ 2. வது தொகுதியில் போட்டியிட்டவர்
எம் ஆர் கோவேந்தன் / பேராவூரணி
ஒரத்தநாடு வீராச்சாமி
திருச்சி சௌந்தரராஜன்
எஸ் டி சோமசுந்தரம்
பண்ருட்டி ராமச்சந்திரன்
நெடுஞ்செழியன்
ராஜாராம் / பனைமரத்துப்பட்டி
பா.உ. சண்முகம்
Y.S.M.யூசுப்
கிருஷ்ணராயபுரம் சௌந்தர பாண்டியன்
கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
நாஞ்சில் மனோகரன்
மொடக்குறிச்சி சுப்பு லட்சுமி
இவர்கள் அனைவரும் அமைச்சராக பதவி வகித்தவர்கள்
எம்ஜிஆர் என்ற ஒரு தனி மனிதன் உருவாக்கிய அமைச்சரவையில்
இவர்களெல்லாம் அமைச்சராக இருந்தவர்கள்
இந்த அமைச்சர்களில்
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பல அமைச்சர் பயல்கள் இருக்கிறார்கள்
எம்ஜிஆரால் பதவி பெற்றவர்கள்
எம்ஜிஆருக்கு துரோகம் செய்தால்
ஊழல் விசாரணை கமிஷனில்சிக்கி
வாய்தா வாய்தா வாய்தா வாய்தா வாய்தா என்று 18 வருடம் வாய்தா வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும்
அடிபட்டு உதைபட்டு நல்ல மரணம் அடைய மாட்டார்கள்....... Thanks...
-
ஸ்ரீ MGR வாழ்க
சித்திரை 6. ஞாயிற்றுக்கிழமை
எம்ஜிஆர் பக்தர்களே
இந்தப்படத்தில் இருப்பவர்கள்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி
அவருடைய மனைவி மீனாட்சி அம்மாள்
அருமை தலைவன் எம்ஜிஆர் அவர்கள்
ராமாயணத்தில் வருகின்ற. ராமர் லட்சுமணனை போல் நம் கண் முன்னால் வாழ்ந்தவர்கள்
சக்கரபாணி எம்ஜிஆர் அவர்கள்
///////////////;///////////////////////////?////////
இந்திய சினிமா உலகத்தை சேர்ந்தவர்கள் யார் சென்னை வந்தாலும்
சென்னை ஸ்டுடியோக்களில் நுழைந்து
பெரியவர் இருக்கிறாரா என்று கேட்டால் அது எம் ஜி சக்கரபாணி அவர்களைத்தான் குறிப்பிடும் வார்த்தை
சென்னை சினிமா ஸ்டுடியோக்களில் நுழைந்து
சின்னவர் வந்துவிட்டாரா என்று கேட்டாள்
அது எம்ஜிஆர் அவர்களைத்தான் குறிக்கும்
அண்ணன்-தம்பி இருவரையுமே
பெரியவர் / சின்னவர் / என்ற அடைமொழியோடு தான் சினிமா உலகில் அழைப்பார்கள்
///////////////////;/;;///////////////;/////////;//////
நாம் எம்ஜிஆர் குடும்பத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோம்
பெரியவர் சக்கரபாணி அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வோம்
பெரியவர் எம் ஜி சக்கரபாணி அவர்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள்
7. ஏழு ஆண் குழந்தைகள்
3 மூன்று பெண்குழந்தைகள்
++++++++++++++++++++++++++++++++++
சத்தியபாமா என்ற மணி
ராமமூர்த்தி
பிரபாகர்
சந்திரன்
சுகுமார்
லீலாவதி
விஜயலட்சுமி
ராஜேந்திரன்
பாலு
விஜயகுமார்
இந்த 10 குழந்தைகளுக்கும் பெயர் வைத்தவர் நம் அருமை தலைவன் எம்ஜிஆர்
++++++++++++++++++++++++++++++++++
சத்யபாமா
சுகுமார்
பாலு
இந்த மூன்று பேரும் இறந்து விட்டார்கள்
++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவில் உள்ள நடிகர்களில் எம்ஜிஆரை போல் சினிமா உலகை கொடிகட்டி ஆண்டவர் யாரும் கிடையாது
இந்தியாவில் உள்ள முதலமைச்சர் களிலே எம்ஜிஆரை போல் மக்கள் செல்வாக்கு உடையவர்கள் யாரும் கிடையாது
எம்ஜிஆர் தமிழ் நாட்டில் பல ஆட்சியை உருவாக்கியவர்
பல
முதலமைச்சர்களை உருவாக்கியவர்
தான் முதலமைச்சராக கொடிகட்டி வாழ்ந்தபோதும்
தன் அண்ணன் தம்பி மாமன் மச்சான் குடும்பத்தினரே அரசியல் பக்கம் அண்டவிடாமல் செய்தவர் எம்ஜிஆர்
,முதலமைச்சரின் அண்ணன் தம்பி மாமன் மச்சான் எல்லாம் இன்று பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார்கள்
ஆனால் பெரியவர் சக்கரபாணியின் குடும்பத்தினர் அரசியலிலோ ஆட்சி அதிகாரத்திலோ தலையிட்டவர்கள் கிடையாது.... Thanks...
-
உறவினர்கள் யாரும் தலையிட கூடாது என்று பொது அறிக்கையே வெளியிட்டவர் நம் தலைவர் ! அருமை ! வாழ்த்துகள் !... Thanks...
-
இருவரும் மாணிக்க கற்கள், அண்ணன்தம்பி பாசத்திற்கு எடுத்துக்காட்டு, ஆட்சி, அதிகாரத்தில் எம்ஜிஆர் குடும்பத்தினர் எந்த பலனும், சலுகையும் அடையாதவர்கள்... உயிர்காத்த
லீலாவதிக்கே எதுவும் செய்யவில்லை, ஒரு வார்டு மெம்பராக பதவி வகிப்பவன் என்ன வழியில் சம்பாரிக்கிறான், மக்கள்செல்வாக்கில்உச்சத்தில்இருந்தவள்ளல்எப்படிதன்ன டக்கத்தோடுஆட்சிசெய்தார், சிலதறுதலைகள்முதல்வராகபதவியில்இருந்துஆடிய, ஆட்டம்தான்என்ன, சம்மந்தமேஇல்லாதநாயைதன்னோடுசுயலாபத்திற்குசேர்த்துக் கொண்டுஅவளும், இவளும்சேர்ந்துஉடல்முழுக்கநகை, நட்டுக்கள்அணிந்துபோஸ்கொடுப்பது, உறவுப்பிள்ளைகளைஉதரிதள்ளிவிட்டுநாய்ஒருவனைவளர்ப்பமகன ்என்றுநாடகம்ஆடி, பலகோடிசெலவுசெய்துஅசிங்கப்பட்டு, இறப்பில்தெளிவின்மை, இப்படிப்பட்டநாயைஉத்தமர், தெய்வம்எம்ஜிஆர்நினைவுஆலயத்தில்புதைத்துதலைவரின்புகழ ைகெடுத்துவிட்டான்களே, இதுஎன்னடாஉலகம்,....... Thanks...