Originally Posted by
venkkiram
இனி ஒவ்வொரு வருடமும் கமல் கையில் எப்போதுமே மூன்று படங்கள் வெளியிடப்படமால் தேக்க நிலையில் இருக்கத்தான் போகிறது. இப்போ மருதநாயகம், வாமனமார்க்கம் எனவும் செய்தி. தலைவன் இருக்கின்றான், யாவரும் கேளிர் என்ற முன்பு சொல்லப்பட்ட சில படங்கள். பேசாமா, இந்த நட்சத்திர அந்தஸ்து பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொலைக்காட்சி உலகத்தில் நுழைந்துவிடலாம் கமல். குறைந்தபட்சம் வெளியீடு சம்பந்தமாக தேக்கம் இருக்காது. ரெண்டரை மணி நேரத்திற்குள் இத்தனை பாட்டு, இப்படியெல்லாம் காம்ப்ரமைஸ் என சொல்லிக்கொள்ளத் தேவையில்லை. பாகம் 1, பாகம் 2 என எவ்வளவு வேணாலும் ஒரு படைப்பாளி செதுக்கலாம்.