-
பரம பதம் அடைவ தற்கு என்ன வேண்டும்
...பாழும் மனம் அலையும் செய்கை தடுக்க வேண்டும்
நரனாய்ப் பிறந்த பின்பு கூட ஏன் தான் ஏக்கம்
.. நல்ல நல்ல எண்ணங் கொண்டால் நலமே பூக்கும்
கரத்தை நன்கு இணைத்துத் தோளின் மேலெ தூக்கிக்
..காக்க வென்றே சிவனை நெஞ்சில் கூவி அழைத்தால்
வரத்தைக் கையில் பற்றி வேகம் எடுத்தே வருவான்
..வந்தே உனக்கு சொர்க்க வாசல் தந்தே செல்வான்..
-
செல்வான் சந்திரன்
மூடும் அல்லி முகம்
வருவான் சூரியன்
விரியும் செந்தாமரை
தூரத்துக் காதல்தான்
தீராத மோகந்தான்
மாறாத மறையாத
மயக்குகின்ற நியதி
-
நியதி இது தான்
என்று சொல்லியிருந்தாலும்
செய்வதேயில்லை
வருடாந்திர்க் காரியங்கள்
பெற்றோர்களுக்கு..
அவர்கள் மறைந்த
சில் வருடங்களில்
வருடா வருடம் சோகமான சிந்தனைகள்
படிப் படியாகக்குறைந்து
இப்போது
ஓ அப்பா நாள்
ஓ அம்மா நாள் எனத் தான்
நினைக்க முடிகிறது...
நியதி ம்ம்
ஒரு சில வருடங்கள்
கோவிலுக்கு அன்னதானத்திற்கு
அனுப்பியது தான்
அது தவிர வேறேதும்
செய்யவில்லை
பெற்று வளர்த்து
படிக்க வைத்து ஆளாக்கியவருக்கு..
ம்ம்
அன்னிய தேசத்தில்
என்ன செய்ய முடியும் என
மனதை சமாதானப் படுத்திக் கொண்டாலும்..
ஒரு வேளை
என் காலம் முடிந்து
அவர்களைப் பார்க்க முடிந்தால்..
எப்படியும் குழ்ந்தை தானே
மன்னிச்சுடலாம் எனச் சொல்ல்வார்கள்
என்ற எண்ணம் தான்
காரணமா என்ன..
-
என்ன விளையும் என்று தெரியாதா விதைத்தவனுக்கு
எப்போது பயிர் முதிருமென தெரியாதா விவசாயிக்கு
என்ன ஆவார் பிள்ளைகள் தெரியாதே பெற்றவருக்கு
எதிர்பாராத அதிரடி புரட்சிகள் உலகினில் அரங்கேறுது
-
அரங்கேறுது வர்ற் 26ம் தேதி
குழந்தைய ஆசீர்வாதம் பண்ண வாங்க..
மேலும் வளரணுமின்னு..
அழைப்பிதழ் அட்டையில்
அதீத மேக்கப்புடன்
பாவம் காட்டாமலேயே
பயந்த மருண்ட விழிகளுடன்
பத்து வயதுச் சிறுமி..
முழுப் புகைப்படத்தில்
சிவந்த கால்களுடன்
செம்பஞ்சுக் குழம்பா
இல்லை ஆடிச் சிவந்ததா..
சரி வருகிறேன்
என்று சொன்னாலும்
நான் செல்லவில்லை..
-
செல்லவில்லை கோவிலுக்கு
செய்யவில்லை பூசைகள்
சொல்லவில்லை மந்திரங்கள்
சலனமில்லை மனதில்
சறுக்கவில்லை நெறிகளில்
சொர்க்கமில்லை புறவெளியில்
-
புறவெளியில் எண்ணங்கள் மயங்குகின்ற போது
..புலன்களும்தான் சிச்சிறிதாய் துடிப்படங்கும் நேரம்
உறவுகளை, உணர்வினிலே உறைந்திருக்கும் நட்பை..
..உளத்துள்ளே திரைப்படமாய் ஓட்டுகின்ற வேளை
சிரத்துள்ளே நினைவலையை ஒருமித்தே வைத்து
..சிந்தையுளே இறையருளைத் துதிக்கின்ற போது
பரபரக்கும் பூவுலகின் வாழ்வுபோது மென்று
..பக்குவ்த்தை அடையுமனம் அமைதிபெறும் நன்றாய்..
-
நன்றாய் இருக்கிறதா சாப்பாடு
குறிப்பால் அறிவாள் சமைத்தவள்
முகம் சொல்லும் திரும்ப கேட்கும்
ஆவல் சொல்லும் கவனமாய் அமைதியாய்
ரசித்துப் புசிக்கின்ற பாங்கு சொல்லும்
வார்த்தையால் பாராட்டத் தேவையில்லை
-
தேவை யில்லை என்று சொல்லி திரும்பி நின்ற வேளையில்
பாவை யுந்தன் விழியில் கோபம் கனன்று அங்கே பார்க்கையில்
நாவை நன்றாய் உதட்டில் சுற்றி ஈரம் கொள்ள வைத்திட
கோவைப் பழத்தின் வண்ணம் மின்னும் இதழும் மேலும் சிவந்ததே
-
சிவந்ததே வானம்
அழகானதே புவனம்
மல்ர்ந்ததே வதனம்
பிறந்ததே கானம்