டியர் வாசு சார் - இமாலய சாதனை - ராகவேந்திரா சாரை தொடர்து ! படிக்க படிக்க அலுக்காத பதிவுகளில் உங்களதும் ஒன்று .
Ravi
:):smokesmile:
Printable View
டியர் வாசு சார் - இமாலய சாதனை - ராகவேந்திரா சாரை தொடர்து ! படிக்க படிக்க அலுக்காத பதிவுகளில் உங்களதும் ஒன்று .
Ravi
:):smokesmile:
ஒரு சின்ன rewinding - kind attention to Mr Ragavendra and Mr Gopal
Dear Raghavendra and Gopal Sirs ------ an appeal to you both !!
Dear Ragavendra /Gopal sirs
உங்கள் பதிவுகள் அருமை , உங்கள் குணம் - அடுத்தவர்களை , அவர்களின் திறமையை உடனே பாராட்டும் எண்ணம் மிகவும் பெருமைப்பட வைக்கின்றது - இந்த திரியில் என்னை பங்கேற்க தூண்டிவிட்டது , உங்களின் தீவிர NT பக்தி , வாசுவின் அருமையான தமிழ் நடை , முரளியின் அசராத உழைப்பு , கோபாலின் deep rooted passionate R&D on NT , கார்த்திக்கின் எழுத்துக்கள் , கண்படின் பதிவுகள் , நட் 360 யின் உழைப்பு, கக் சிரின் அயராத உழைப்பு , சின்ன கண்ணனின் நகைச்சுவை கலந்த மென்மையான பதிவுகள், நம் அன்பின் மொத படைப்பு Pammalar அண்ட் சாரதா மேடம் ( இன்னும் சில மேதைகளை விட்டிருந்தால் மன்னிக்கவும்) -NT திரி யின் புகழ் ,உண்மையான , நிரூபிக்கப்பட்ட ஆவணங்கள் வேறு எந்த திரியுலும் இல்லை , வரபோவதும் இல்லை - என்ன பக்தி அண்ட் என்ன உழைப்பு !!
இப்படி வேகமாக போகும் திரியில் வேண்டாமே சார் Speed Breakers , உள் பூசல் – எல்லோருடிய எண்ணமும் NT யை பற்றி இருக்கும் போது ஏன் இந்த war of words ?
ஒரு இரண்டு பதிவுக்குள் இப்படி ஒரு அட்வைஸ் ஆ ???
தயுவு செய்து என்னை தவறாக எண்ணவேண்டாம் - இந்த திரி வேகமாக போகவேண்டும் & எல்லோருடிய உழைப்பும் அவசியம் - யாரும் விரோதிகள் இல்லை NT யை தப்பாக சொல்பவர்களை தவிர, இந்த பேராசையில் தான் எழுதிகிறேன் - இன்னும் பலர் இந்த திரிக்கு வந்து பெருமை சேர்ப்பார்கள் , அந்த நாள் வெகுதூரம் இல்லை - அருமையாக எழுதுவோம் for அடுத்த generation , அன்புடன் பழகுவோம் , எதிரிகளை ஓட வைப்போம் , சர்ச்சை தூண்டும் வார்த்தைகளுக்கு விடை கொடுப்போம் -
Shall be grateful if anyone compiles the list of contact nos , e mails of all the Veterans of this hub ( I can do this if I get the details from each one of you) , சில முரண்பாடான பதிவுகளை discuss செய்துவிட்டு போஸ்ட் பண்ணலாம் - எனது சிறிய வேண்டுகோளுக்கு செவி கொடுத்ததிற்கு மிகவும் நன்றி.
எதாவது அனுபவத்துக்கு மீறி எழுதிருந்தால் மன்னிக்கவும்- இந்த திரிக்கு மிக பெரிய பெருமை சேர்க்கும் நீங்கள் இருவரும் ஒன்றுபட்டால் அந்த நாள் ஒரு இனிய நாள் அதுவே நாங்கள் எல்லோரும் வேண்டும் நாள்.
ஏன் அந்த இனிய நாள் இன்றாக இருக்ககூடாது ?
நன்றி - அன்புடன் ரவி
------------
Response from Mr Gopal
Mr.Ravi,
உங்கள் யோசனைக்கு மிக மிக நன்றி சார். மிக சிறந்த பதிவு உங்களுடையது. நான் சொல்வது என்னவென்றால்,தமிழ் நாடே நடிகர்திலகத்தின் ரசிகர்களை கொண்டது. இதில் மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள்,மற்ற நடிகர்களை ரசிப்பவர்களும் அடங்குவர். நாம் எல்லோரையும் அணைத்து போய் அவர் புகழை பரப்பலாமே? அனாவசிய விமர்சனங்களை தவிர்க்கலாமே? அவருடைய உன்னத காவியங்களை இன்னும் பெருமை படுத்தி,அதன் அருமையை எல்லோரும் உணர செய்யலாமே?இதுவே எனது கட்சி.நடிகர்திலகத்தை போலவே அவர் பக்தனான எனக்கும் வாழ்க்கையில் நடிக்கவோ,தமிழ் நாட்டு பாணியில் அரசியல் பண்ணவோ தெரியாது.
நானும்,ராகவேந்தர் சாரும் நண்பர்களே. முரண்பாடு ,எங்கள் நெருக்கத்தை அதிகமாக்கியே உள்ளது.இது திரியை எந்த விதத்திலும் பாதிக்காது.கவலை கொள்ளாதீர்கள்.
-----
Response from Mr.Ragavendra
Dear Ravi,
தங்களுக்கும் சரி, மற்ற நண்பர்களுக்கும் சரி என் பணிவான நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோபாலும் நானும் கொள்கையைப் பொறுத்த வரையில் இரு துருவங்களாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும் அதற்காக சண்டையெல்லாம் கிடையாது.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நான் தீவிரமாக இருப்பவன். அவரை நடிகர் என்கிற வட்டத்திற்குள் அடக்காமல் ஒரு சிறந்த தேசியவாதியாக, தமிழகத்தின் சிறந்த தலைவராக எண்ணிப் போற்றுகிறவன். அவருடைய கஷ்டங்களை அவருடைய உழைப்பை சிறு வயதிலேயே பார்த்தவன், காங்கிரஸை விட்டு வெளியே வந்த போது உடன் இரவு பகலாக தொகுதியில் சுற்றிச் சுற்றி உழைத்தவன், அதனைப் பெருமையுடன் எண்ணி மகிழ்பவன். மற்ற எந்தத் தலைவரை விட பல மடங்கு அதிக தகுதி வாய்ந்த தலைவராக அவரைத் தான் நான் கருதுகிறேன். நேர்மையின் சின்னமாக உண்மையாக வாழ்ந்து காட்டியவர், வெறும் வாய் ஜாலத்திற்காக அல்ல. தேர்தலில் தோல்வியடைந்து விட்டார் என்பதற்காக அவரை அரசியலில் இருந்து ஒதுக்கிப் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையையே தேசியவாதியாக, தேச பக்தனாக வளர்த்து விட்டவர் அவர். வாழ்க்கையிலும் அதை செயல் படுத்தினார். அவருக்காக இன்றும் ஏராளமான ரசிகர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைத்து வருகின்றனர். நம்முடைய சக்தியினை அதுவும் செயல் வடிவம் தந்தால் பல திருப்புமுனைகளை வரலாற்றில் ஏற்படுத்தக் கூடிய வலிமை வாய்ந்த சக்தியினை எதிர்காலத் தலைமுறைக்கும் அரசியல் தூய்மைக்கும் பலனளிக்கும் வகையில் பயன் படுத்த வேண்டும் என்பதே என் ஆவல்.
அரசியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். அதற்காக வேண்டும் என்று சொல்பவர்களை தவறாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய நிலைமையில் அரசியலில் நேர்மையாளர்களும் நல்லவர்களும் வராமல் இருப்பதற்கு காரணமே இந்த மேம்போக்கான வாதங்கள். அரசியலுக்கு லாயக்கில்லை என்கிற ஒரு சொற்றொடர், ஒரு தேசத்திற்கே நன்மை ஏற்படுவதற்கு தடைக்கல்லாக இருப்பதை மக்கள் உணர வேண்டும். இந்த தடைக்கல்லை உடைத்தெறிந்து நல்லவர்களையும் நேர்மையாளர்களையும் இரு கரம் கூப்பி வரவேற்று உற்சாகப் படுத்தி ஆதரவளித்தால் தான் அரசியலில் தூய்மையையும் நேர்மையையும் நாம் எதிர்பார்க்க முடியும்.
அதற்காக நான் தற்போது எந்த இயக்கத்தையும் ஆதரிக்கச் சொல்ல வில்லையே. யாரையாவது குறிப்பிட்டுச் சொன்னால் அப்போது என்னை யாரும் சுட்டிக் காட்டலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாராவது தென்பட்டால், அதுவும் நடிகர் திலகத்தை தலைவராக ஏற்று அவர் வழி நடப்பதாக உறுதி கொண்டு அதனை நடைமுறையும் படுத்தினால் அப்போது இந்த சக்தி அதற்கு பயன் படட்டுமே. காரணம் நடிகர் திலகத்தைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர் நிச்சயம் அவருடைய கொள்கைகளையும் தத்துவங்களையும் ஏற்று செயல் படுத்துவார் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.
இது தான் என் நிலைப்பாடு.
இதில் எனக்கு யாருமே ஆதரவு தரவில்லையென்றாலும் நான் அதைப் பற்றிக் கவலைப் பட மாட்டேன். தனியாக என்றாலும் கூட என்னுடைய எண்ணம் நிச்சயம் இங்கே கருத்தாக பிரதி பலித்துக் கொண்டிருக்கும்.
இவர்களின் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் இந்த திரியின் வேகத்தையும் , NT யின் மேல் இவர்கள் வைத்துள்ள பக்தியையும் என்றுமே குறைக்காது என்பதே மேல்கொண்ட பதிவுகளின் சாரம்
Ravi
:smile2::smokesmile:
எஸ்.எல்.,
நீங்கள் இருவருக்கும் நல்லவராக காட்டி கொள்ள முயன்று,இரு பக்கமும் ,ரசிக்க முடியாத கோமாளி போல ஆகி கொண்டிருக்கிறீர்கள்.கொஞ்சம் திருத்தி கொண்டு,உங்கள் மனதிற்கு பிடித்ததை மட்டுமே சொல்லுங்கள் ,செய்யுங்கள்.போதும்.
ரவி சார்,
தங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடே. என்னால் இந்த திரியில் எந்த குழப்பமும் வராது. நான் யாரையும் எதிரியாக கருத மாட்டேன்.கோபம் வந்தால் திட்டி விட்டு போய் கொண்டே இருப்பேனே தவிர,விரோதம் கொள்ளும் மனப்பாங்கு என்றுமே இருந்ததில்லை.இருக்காது.
திரு.கோபால் அவர்களே !
ஒரு கோமாளிதான் மற்றவர்கள் துன்பநிலையில் இருக்கும்போது அவர்களை சாந்தபடுத்த மகிழ்விக்க முடியும். அந்த வகையில் நான் கோமாளிதான் & அதில் நான் பெருமை கொள்வேன் !
என்னமோ நீங்கள் ஒருவர் தான் நடிகர் திலகத்தின் உண்மையான பக்தன் என்பதுபோல காட்டிகொண்டு அதே நடிகர் திலகத்தை சிலேடையாக தாக்கி எழுதுவது, நேரிடையாக தாக்கி எழுதுவது என்னமோ பெரிய சத்திய கீர்த்தி போல உங்களை நீங்கள் project செய்து கொள்கிறீர்கள் காலம் காலமாக !
இதில் அடுத்தவர்களை தேவையில்லாமல் திட்டுவது இதெல்லாம் நல்ல செயல் என்று எண்ணி பதிவு வேறு செய்கிறீர்கள். உங்களை மற்றவர்களால் நோகடிக்க எவ்வளவு நேரம் தேவைப்படும் ? எண்ணி பார்கிறீர்கள அதை ?
சாதாரண மனிதனான உங்களிடம் ஒரு கோடி குறைகள் உள்ளன ! முதலில் அதைஎல்லாம் போக்கிக்கொண்டு நடிகர் திலகம் எப்படி இருந்திருக்கவேண்டும், என்ன செய்திருக்கவேண்டும் என்று LIST போடுங்கள் ! அவர் இருந்தபோது இதை சொல்லும் துணிவு உங்களுக்கு இருந்திருக்க வேண்டியது தானே ? DO NOT DRIVE IN BACKSEAT !
http://www.youtube.com/watch?v=luJPiOyqqLo
உங்கள் எழுத்துக்களிலும் பல தவறுகளை சுட்டிகாட்டமுடியும் மற்றவர்களால் என்பதை மறந்து விடாதீர்கள். School of acting என்ற ஒரு விஷயத்தை எழுதியவுடன் அஹந்தை தலைகேருகிறதோ, நடிகர் திலகத்தையே உரிமை என்ற பெயரில் திட்டுவதற்கு ?
இப்பொழுது கூறுகிறேன்...கேளுங்கள் ! அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுத பழகிகொள்ளுங்கள் ! உங்களுடைய school of acting எழுத்தை எல்லோராலும் ரசிக்கமுடியும் என்று எண்ணி இறுமாப்பு கொண்டீர்களேயானால் மிக பெரிய தவறான எண்ணம் !
உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதையெல்லாம் இங்கே விவரணம் என்ற பெயரில் பக்கங்களை நிரப்பாதீர்கள் ! Don t try to establish as if you are more knowledgeable .
பாமரனும் படித்து அறிந்து மகிழும் வண்ணம் எழுத முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.
dear vasu sur,
my solid answer for you NO 3 AS OUR DISCUSSIONS ARE FOCUSED AROUND THE THE PERFORMANCES OF THE LRGEND ONLY AND NOT THEIR COMMERCIAL SUCCESS AND OTHER FACTORS, THAT WAY RAGHAVENDER IS ABSOLUTELY RIGHT,
Dear Vasu Sir
இரண்டு கண்களில் எந்த கண் சிறந்தது என்பதைப்போல உள்ளது இந்த நிலைமை. நடிகர் திலகம் - நடிப்பிற்கு திலகமானவர் என்பது பொருள். ஆகையால் கப்பல் ஒட்டிய தமிழன் மட்டும் நடிப்பு அல்ல ! மிருதங்க சக்ரவர்த்தி மட்டும் நடிப்பு அல்ல ! ஒரு கருடா சௌக்யமா கூட நடிப்புதான் ! ஒரு சிரஞ்சீவி கூட நடிப்புதான் ! ஒரு சந்திப்பு கூட நடிப்புதான் ! இவ்வளவு ஏன் ? ஒரு LORRY DRIVER RAJAKANNU கூட நடிப்புதான் !
இலை முழுவதும் நெய்கலந்த சோறும் ஒரு அப்பளமும் வைத்திருந்தால் யாரும் உண்பதற்கு சிறிது தயங்குவர்.
சிலருக்கு பொரியல் தேவைப்படும், சிலருக்கு கூட்டு, சிலருக்கு பருப்பு, சிலருக்கு பச்சடி, சிலருக்கு ரசம், சிலருக்கு சாம்பார், சிலருக்கு தயிர், சிலருக்கு மோர் ...!
ஆக ! வெறும் சோற்றைமட்டுமே நெய்விட்டு அப்பளத்துடன் பிசைந்து யாராலும் எப்போதும் சாபிட்டுகொண்டிருக்க முடியாது !
சில நேரங்களில் இது ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் சப்பாத்தி மட்டுமே கிடைக்கும்..! இருந்தாலும் அதுவும் ஒரு உணவு தான் !
ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் சப்பாத்தியாவது கிடைத்ததே என்று சந்தோஷப்படும் கூடமும் நம் நாட்டில் உண்டு என்பதுவே எனது கருத்து !
Vasudevan Sir,
Congrats on your 4000th post.
எஸ்.எல்,
இந்த வகை படங்களால்,நடிகர்திலகம், அப்போதைய வளரும் தலைமுறையிடமிருந்து அந்நிய பட்டார். அவருடைய 1981-1987 வரை படங்கள் போர் என்றே ஒதுக்க பட்டன.(ஒரு சில மிக நல்ல படங்களை தவிர)
அவரும் ,ஒரு நடிகரின் முக்கிய கடமையான, உடலையும் மனதையும் பராமரித்து, ஒரு சீனியர் நடிகருக்கு வேண்டிய சீரான, குறைந்த ,இடை வெளி விட்ட தரமான தேர்ந்தெடுத்த படங்களை மட்டுமே செய்யவில்லை.அப்படி ,ஒரு தேர்ந்த பக்தனான நானே வெறுத்த படங்களை தூக்கி பிடித்து எழுதுவது எந்த விதத்திலும்,இங்கு வரும் பொதுவான பார்வையாளர்களுக்கு சுவைக்காது.
என்னை பொறுத்த அளவில்,அவரின் மிக மிக நல்ல படங்கள் (நடிப்பிலும்) ஒரு 50 என்றால், மிக நல்ல படங்கள் இன்னொரு 60-70 ,நல்ல படங்கள் இன்னொரு 50 என்று கணக்கு வைத்தாலே 160-170 தேறுமே? நான் commercial அளவுகோலை மட்டும் பார்க்கவில்லை. தேனும் பாலும்,பாலாடை போன்ற படங்கள் கூட நல்ல படங்களே என் பார்வையில். ஆனால் தர்மராஜா,சிரஞ்சீவி,சுமங்கலி,ஊருக்கு ஒரு பிள்ளை,தராசு போன்றவைகளை பற்றி நாம் விஸ்தாரமாக எழுதினால்.... சாரி.....
ஏனைய்யா ,எனக்கு ஆயிரம் வேலைகள்,கடமைகள் எல்லாம் விட்டு விட்டு,ஓய்வு நேரத்தில் வேறு ஏதாவது செய்து,ரிலாக்ஸ் செய்வதை விட்டு,உங்களுடன் ஆசையாய் பழகுவதும் ,உரிமைஎடுப்பதும்,போராடுவதும், அந்த தெய்வத்தின் புகழை மேலும் உயர்த்தி,உரக்க சொல்லத்தானே?
உங்களுக்கு என் எழுத்து புரிந்ததா இல்லையா என்று சொல்லுங்கள் போதும்.அடுத்தவருக்கு புரிந்ததா என்பதை அடுத்தவர்கள் சொல்லட்டும்.நான் எப்படி எழுத நினைக்கிறேனோ,அப்படித்தான் எழுதுவேன். குற்றமிருந்தால் தாராளமாக விமர்சியுங்கள்.
கடைசியாய் ஒன்று.....
வேண்டாம்.வருத்த படுவீர்கள்.விட்டு விடலாம்.
வாசுவின் 4000 ஆவது பதிவுக்கு ஆவலாக இருக்கும் நேரத்தில், விவாதங்கள் தொடர வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். ராகவேந்தர் சாரின் தேவையற்ற provocation இவ்வளவையும் செய்து ,என்னை பொங்க வைத்தது. மற்ற படி, என் வழிக்கு வராத வரை ,நான் யாரையும் எதுவும் சொல்லவோ,விமர்சிக்கவோ போவதில்லை.அவரவருக்கு பிடித்ததை எழுதி கொள்ளுங்கள். சங்கிலி,தராசு என்று போட்டு என்னுடைய உலக அதிசயத்தை ,ஸ்கூல் திரியில் இழிவு படுத்தினால், சும்மா இருக்க மாட்டேன்.
வாசு சார் ஒரு ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு இன்னும் அனைவரிடமிருந்தும் பதில் வரவில்லை. அதற்குள் மீண்டும் மற்றவர்களைப் பற்றியும் தன்னைப் பற்றியும் கூறிக் கருத்துக்களைத் திணிப்பது எந்த விதத்தில் ஜனநாயகம். வாசு சார் அனைவரின் கருத்துக்களையும் அறிந்து ஒரு தீர்வு செய்யும் வரையில் பொறுக்க வேண்டியது தானே நியாயம். அதற்குள் என்னைப் பற்றி தேவையற்ற பதிவு ப்ரொவொகேஷன் என்று எழுதினால் நான் அமைதியாக இருக்க வேண்டுமா..
வாசு சார் நீங்களே சொல்லுங்கள்...
Nadigar Thilagam Films in TV Channels – 11.11..2013 – 17.11.2013
Lakshmi Vanthachu – 11.11.2013 – Zee Tamizh – 2.30 pm
Paalaadai – J Movies – 13.11.2013 – 1 pm
Padikkadha Medhai – J Movies – 16.11.2013 – 1 pm
Enga Mama – Mega 24 – 13.11.2013 – 8.30 am
Vazhkkai – Mega 24 – 17.11.2013 – 8.30 am
Gnana Oli – Mega 24 – 16.11.2013 – 2.30 pm
Punniya Bhoomi – Mega 24 – 12.11.2013 – 6 pm
Nermai – 13.11.2013 – Mega 24 – 6 pm
Bhaktha Thukaram – 16.11.2013 – Mega TV – 9.30 am
Santhippu – 16.11.2013 – Mega TV – 12.00 noon
Vaa Kannaa Vaa – 13.11.2013 – Mega Tv – 1.30 pm
Bandham – 12.11.2013 – Murasu TV – 7.30 pm
Uthama Puthiran – 16.11.2013 – Murasu TV – 7.30 pm
Bandham – 15.11.2013 – Polimer TV – 2.00 pm
Bandha Pasam – 12.11.2013 – Raj Digital – 10.00 am
Vaazhkkai – 17.11.2013 – Zee Tamizh – 2.30 pm
நண்பர்களே,
குறிப்பாக வாசு சார்
தங்களுடைய தீர்ப்பு அல்லது தீர்வு வருவதற்கு முன்னரே கோபால் சாரின் பதிவுகள் மீண்டும் மீண்டும் மற்றவர்களைப் புண்படுத்தும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன.
நடிப்புப் பள்ளித் திரியில் நடிகர் திலகத்தின் நடிப்பிலக்கணம் மக்களுக்கு எப்படி பயன் படுகிறது, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வகை காட்சியமைப்பு இரண்டு படங்களில் வரும் போது அதை எவ்வாறு அவர் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார் என்பது ஒரு இலக்கணமாக, பாடமாக அமைந்துள்ளது. அதற்கு உதாரணம் பணி ஓய்வுக் காட்சி. ஒரே பணி ஓய்வுக் காட்சி, இரண்டு வெவ்வேறு தொழிலில் இருப்பவர்கள் அதனை எப்படி அணுகுகிறார்கள் என்பது தான் இதனுடைய context. வியட்நாம் வீடு மற்றும் சிரஞ்சீவி இரு படங்களிலும் பதவி ஓய்வு பெறும் போது அந்தந்த பாத்திரம் எப்படி அணுகும் என்பதைத் தான் ஒப்பீடாக அங்கு பதிந்திருக்கிறேன். அந்த இரு பதிவுகளையும் தங்கள் பார்வைக்குக் கீழே தருகிறேன்.
இதன் தொடர் பதிவுQuote:
நடிகர் திலகமும் நடிப்பிலக்கணமும்
சிரஞ்சீவி பணி ஒய்வுக் காட்சி
நடிகர் திலகத்தின் படங்களில் ஒரே மாதிரியான சூழலில் வெவ்வேறு படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், பாத்திரப் படைப்பு இவற்றைப் பொறுத்து அவருடைய நடிப்பில் வேறுபாடுகள் காணப் படும்., அப்படியான ஒரு சூழல் தான் பணி ஓய்வு. நடிகர் திலகம் திரைப்படங்களில், வியட்நாம் வீடு திரைப்பட பணி ஓய்வு காட்சி உலகப் பிரசித்தம். அதைப் பற்றி பலவாறு விவாதிக்கப் பட்டுள்ளது. அதே பணி ஓய்வுக் காட்சியில் உலகப் பெரு நடிகரின் நடிப்பில் மற்றோர் பரிமாணத்தை இப்போது காண உள்ளோம்.
டேவிட் சிரஞ்சீவி .. TOPAZ எனப்படும் கப்பல் துப்புரவுத் தொழிலாளி. தன் தொழிலை உயிருக்கும் மேலாக மதிப்பவன். தான் உயிருடன் இருக்கும் வரையில் அத்தொழிலைச் செய்ய வேண்டும் என விரும்புபவன். ஆங்கிலோ இந்தியன். தன்னுடைய பணியில் மூழ்கி விட்டால் காலம் நேரம், நாள் தேதி எதையும் பார்க்காமல் பணியாற்றுவான். தன்னுடைய வயதையே மறந்து விடுவான். உடல் முதுமையடைந்தாலும் மனம் முதுமையடையாது.
அப்படி ஒரு நாள் பணியாற்றும் போது கப்பல் கேப்டனிடமிருந்து அழைப்பு. அவருடைய உழைப்பில் தங்கள் மனதைப் பறி கொடுத்தாலும் கடமை நிமித்தம் அவரை அழைத்து அவருடைய ஓய்வு அறிவிப்பை சொல்ல வேண்டும். காரணம் முதல் நாள் அவர் ஓய்வு பெற்று விட்டதை அறியாமல் அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அப்படி அழைக்கப் பட்ட பின் அந்த கேப்டன் அவரிடம் ஓய்வைப் பற்றி சொல்வதாக்க் காட்சி யமைப்பு.. கேப்டனுடன் சக மாலுமிகளும் கப்பல் டாக்டரும் இருக்கிறார்கள்.
டாக்டர் மெல்ல மெல்ல உரையாடலைத் துவக்கி அவருடைய சேவையைப் பாராட்டி பின்னர் ஒரு வழியாக அவருடைய ஓய்வு அறிவிப்பினைக் கூறுகிறார். அதைக் கேட்டதும் சிரஞ்சீவி எப்படி பாதிக்கப் படுகிறான் அதற்கு அவனுடைய Reaction என்ன இது தான் இந்த காட்சியின் Concept.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும். தன் உணர்ச்சிகளை அதிகம் வெளிக் காட்டமாட்டார். அப்படி வெளிப்படுத்தினாலும் அதில் ஒரு பக்குவம் இருக்கும். ஒவ்வொரு பிரேமிலும் மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பினைத் தந்துள்ளார். இதை காட்சி வாரியாக இங்கே காணலாம்.
டாக்டராக வி.கோபால கிருஷ்ணனும், கேப்டனாக ஜெய்கணேஷும் மிகச் சிறப்பாக நடித்துள்ளது பாராட்டத் தக்கதாகும். அதுவும் ஓய்வைப் பற்றிய விஷயத்தை ஜெய் கணேஷ் தயங்கித் தயங்கி சொல்வது அவருடைய கேரக்டரின் மேல் இருக்கும் மதிப்பினை பல படி உயர்த்துகிறது.
இப்போது காட்சியைப் பார்ப்போம்.
http://youtu.be/J5kQWsRaMsA
எடுத்த வுடனேயே அறைக்குள் சிரஞ்சீவி நுழையும் போது அவருடைய நடையைக் கவனியுங்கள். எப்போதும் போல் பணியில் இருக்கும் போது சகஜமாக பழகும் தோரணையில் உரிமையோடு காலை வணக்கம் சொல்வதைப் பாருங்கள்.
Good Morning all of you என்று சொல்லும் போதே அந்த உரிமையைத் தன் குரலில் வெளிப்படுத்தி விடுவார்.
கேப்டனும் மற்றவர்களும் பதில் வணக்கம் சொல்கிறார்கள்.
சிரஞ்சீவி.. “கூப்பிடனுப்பினீர்களாமே.”
கேப்டன்.. “நாங்கள் கூப்பிட்டது டோபாஸ் சிரஞ்சீவியை அல்ல, அங்கிள் சிரஞ்சீவியை”
சிரஞ்சீவி... புரியாமல் விழிக்கும் பார்வை...
கேப்டன்.. “இன்னுமா புரியலே.. ஐ வாண்ட் டு சீ அங்கிள் டேவிட் சிரஞ்சீவி”
... இந்த இடத்தில் கேப்டன் மறைமுகமாக தன் கருத்தை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்.
சிரஞ்சீவி.. கேப்டனின் உள் மனதில் இருப்பது தெரியாமல், அவர் உடை மாற்றிக் கொண்டு வரச் சொல்கிறார் என்பதாகப் புரிந்து கொண்டு Now I got it எனச் சொல்லி புன் முறுவல் பூக்கிறார் Just a minute please என்று கூறி விட்டு வெளியேறுகிறார். இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தில் கவனியுங்கள். கேப்டன் உள் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் யதார்த்தமான அர்த்தம் புரிந்து கொண்டு சிரிப்பதை.
கவனியுங்கள், உடை மாற்றிக் கொண்டு சாதாரண உடையில் அறைக்குள் வரும் போதே அவருடைய நடை உடை பாவனையில் ஒரு முதியவரின் ஆளுமை வெளிப்படுவதை..
இந்த இடத்தில் சிரஞ்சீவியை ஒரு பயணியைப் போல், வயதில் மூத்த ஒருவருக்கு தரும் மரியாதையைத் தரும் வகையில் எழுந்து நிற்கிறார்கள். Good Morning Uncle என காலை வணக்கம் செய்கிறார்கள். சிரஞ்சீவி அமருங்கள் எனச் சொல்லும் போது, நீங்கள் உட்கார்ந்தால் தான் நாங்கள் உட்காருவோம் எனச் சொல்கிறார்கள்.
இப்போது நடிகர் திலகம் அமரும் தோரணையைப் பாருங்கள். அதில் தன்னுடைய டோபாஸ் உத்தியோகத்தை மறக்காமல் அவர்களைத் தன் உயரதிகாரிகளாகவே தொடர்ந்து பாவித்து கை கட்டிக் கொண்டு அமர்வதை.
கேப்டன்... “நீங்கள் இந்த கப்பலுக்கு செஞ்ச சேவைகளெல்லாம் எண்ணிப் பார்க்கிறோம். அது, ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு செய்கிற பாசம் மிகுந்த காரியங்கள் மாதிரி எங்க கண்ணு முன்னாடியே தெரியுது.”
சிரஞ்சீவி... அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறார்..
இந்த புன்னகையைப் பாருங்கள்...
கேப்டன்.. “ஒரு முறை புயலில் இந்த கப்பல் சிக்கிக் கிட்டப்போ உங்க புத்தி கூர்மையாலே அதைக் காப்பாத்தினீங்களே. அந்த இன்சிடெண்ட் இன்னும் ரிகார்ட்ஸ்லே எவர்கிரீனா இருக்கு...”
இந்த இடத்தில் கேப்டனின் முக பாவத்தில் தான் சொல்ல வந்த்தை சொல்லப் போகிறோம் என்கிற முஸ்தீபு ஆரம்பிக்கிறது.
ஜெய்கணேஷின் சிறப்பான நடிப்பு இக்காட்சிக்கு சிறப்பு.
சிரஞ்சீவி.. ஏதும் பேசாமல், ஏதோ என்னால் ஆனதை செய்ய முடிந்த்தே என்கிற சந்தோஷம் என்பதைத் தன் முகத்தின் புன்னகையால் உணர்த்துகிறார்.
இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள்..
கேப்டன்.. “அங்கிள்,, இந்த கப்பல்லே எந்த இடத்திலே என்ன கோளாறு வந்தாலும் உடனே நீங்கள் வந்து சரி பண்ணிடுவீங்க. டோடலி, யூ ஆர் ஏன் ஆல்ரவுண்டர். “
சிரஞ்சீவி.. இதற்கும் அடக்கமான புன்னகை. பதில் ஏதுமில்லை.
இங்கும் நடிகர் திலகத்தின் புன்னகையில் சற்றே வித்தியாசத்தைப் பாருங்கள்.
கேப்டன்.. சற்றே உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு ஒரு கேப்டன் என்கிற தொனியைத் துவக்குகிறார். “அங்கிள் இந்த கப்பலுக்கு நீங்க செய்திருக்கிற காரியங்களெல்லாம் வெறும் காரியங்களல்ல.. காவியங்கள்... இருந்தாலும் யூ ஆர் வெரி வெரி சிம்பிள் அண்ட் ஹம்பிள்..”
சிரஞ்சீவி... கேப்டன் வெட்கமும் கூச்சமும் மேலிட ஏதோ சொல்ல வருகிறார்.
டாக்டர் மறித்து... “இன்னும் உங்களைப் பத்தி சொல்ல வேண்டியது நெறைய இருக்கு...”
சிரஞ்சீவி... சிரிக்கிறார்..
கேப்டன்..... “அங்கிள்... நீங்க விரும்பியிருந்தா இதை விட பெரிய நிலைக்கே போயிருக்கலாம்.. ஆனா துப்புரவுத் தொழிலையே தொடர்ந்து செய்து அதற்கு ஒரு தெய்வீகத் தன்மையே கொடுத்துட்டீங்க..”
சிரஞ்சீவி.. ஏதோ விஷயம் இருப்பதை இப்போது தான் உணர்கிறார். தன் மனதில் ஏற்படும் சந்தேகத்தைக் கேட்க விழைகிறார். “கேப்டன்... நீங்க பேசிட்டீங்க.. கொஞ்சம் நான் பேசலாமா...”
இதைச் சொல்லும் போது நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். இந்த வார்த்தைகளை அப்படியே உணர்வாய் பிரதிபலிப்பதை..
கேப்டன் ... “Of course...”
சிரஞ்சீவி ... சிரிக்கிறார்... “நீங்க என்னைப் பத்தி நெறைய சொல்லிட்டீங்க.. நெறையைத் தான் சொன்னீங்களே தவிர குறையை சொல்ல்லே. அதையும் சொல்லியிருந்தீங்கன்னா என்னை நான் திருத்திக்கிறதுக்கு கொஞ்சம் வசதியா இருந்திருக்கும். அவ்வளவு தான்... வெல்.. இப்போ எதுக்காக இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்க..”
ஓய்வு அறிவிப்பினைக் கேட்ட வுடன் தன்னுடைய மனத் துடிப்பினையும் ரீ.யேக்ஷனையும் அங்கே வெளிக் காட்ட விருப்பமில்லாமல் வெளியில் வந்து விடுகிறார். பார்ப்பவர்கள் எல்லோரும் ஏதோ விழுந்து புரண்டு காட்சியை டிராமா ஆக்கி விடுவார் என்று நினைக்கும் போது அதைப் பொய்யாக்கி அமைதியாக ஆனால் உடல் மற்றும் மன வலியை மட்டும் வெளிக்காட்டுகிறார். மன சாட்சி அவருக்குள் புகுந்து அவருடைய சேவை மனப்பான்மையை எடுத்துச் சொல்லி சகஜ நிலைமைக்கு மாற்றுகிறது. இப்போது அறைக்குத் திரும்ப எத்தனிக்கும் போது அவருடைய தோரணையைப் பாருங்கள்.
அவருடைய மனசாட்சி சொல்லும் ஒரு வரி... நினைத்தாலே புல்லரிக்க வைக்கிறது..
“கண்ணீரால் கரைந்து போகும் சாதாரண சிரஞ்சீவியில்லை நீ.. காலத்தை வென்று நிற்கும் மாபெரும் சிரஞ்சீவி... கேரி ஆன் மேன். கேரி ஆன் பெல்லோ.. கேரி ஆன்...”
சிரஞ்சீவி.. யூ ஆர் கரெக்ட்.. என்று ஒரு விரலை உயர்த்தி சொல்லி சமாதான மடைந்து சிரிக்கிறார்.. ஓ வாட் ஏ foold ஐ எம்...
யாருக்காவும் காத்திருக்காமல் அலைகள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்வது போல் சிரஞ்சீவியும் தொடர்ந்து தன் சேவையாற்ற செல்வதை சிம்பாலிக்காக காட்டுவது பாராட்டுக்குரியது. இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இங்கே பாராட்டைப் பெறுகிறார்கள்.
அறைக்குள் நுழைகிறார் சிரஞ்சீவி. தன்னுடைய லட்சியம் தான் வளர்ந்த இந்த கப்பலிலேயே கடைநிலை ஊழியனாகவே சாக வேண்டும் என்பதாக கூறி சென்னை சென்றடையும் வரை இக்கப்பலில் துப்புரவுத் தொழிலாளியாகவே பணி புரிய அனுமதி கோருகிறார். கேப்டன் அனுமதித்து அவருக்கு கப்பலில் வி.ஐ.பி. அந்தஸ்துடன் மரியாதை தரச் சொல்லி மேலிட உத்தரவையும் கூறுவதுடன் காட்சி முடிகிறது.
……..
இந்தக் காட்சியில் என்ன இருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். உன்னிப்பாக்க் கவனித்தால் புரியும். குறிப்பாக புதியதாக நடிக்க வருபவர்களுக்கு இந்த காட்சியும் விளக்கமும் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். முதன் முதலில் காமிரா முன் நடிக்க வருபவர்களுக்கு இப்படி ஒரு காட்சியை விவரிக்கும் போது எந்த விதமான ரியாக்ஷன் தர வேண்டும் என புரியாமல் விழிப்பார்கள். அல்லது ஹாலிவுட் சினிமாக்களைப் போல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஸ்டட்டில் நடிப்பு என்ற சாக்கில் முகத்தை கான்க்ரீட் சுவரைப் போல் வைத்திருப்பார்கள்.
அப்படி நடிக்க வரும் புதியவர்களுக்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு இலக்கணப் புத்தகமாக விளங்குவது சிறப்பு. இது வெறும் பேச்சு வழக்கில் கூறப் படுவதல்ல. உண்மையான கூற்றாகும். ஒவ்வொரு காட்சிக்கும் அவருடைய நடிப்பு எப்படி இலக்கணமாக விளங்குகிறது என்பதை நாம் இங்கே கோபால் சாரின் பதிவுகளின் மூலம் தெளிவாக ஏற்கெனவே அறிந்து வருகிறோம். அதனுடைய தொடர்ச்சியாக துணைப் பதிவுகளாக என்னுடைய பதிவுகளைத் தர விரும்புகிறேன். அதில் ஒன்றே இந்த சிரஞ்சீவித்துவமான காட்சி.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு நடிப்பிலக்கணம், நடிப்பு அகராதி என்பதை இந்தத் திரியின் மூலம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.
சிரஞ்சீவி
தயாரிப்பு குருராம் மூவீஸ்
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன்
ஒளிப்பதிவு – எம்.சி.சேகர்
கதை வசனம் – எஸ்.ஜெகதீசன்
படத்தொகுப்பு, இயக்கம் – கே.ஷங்கர்
வெளியான நாள் 17.02.1984
Quote:
வியட்நாம் வீடு-சிரஞ்சீவி ... பணி ஓய்வுக் காட்சி ... ஒப்பீடு
வியட்நாம் வீடு திரைப்படத்தின் நாயகன் பத்மநாபன் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன். தொழிலை தெய்வமாக நினைப்பவன்.
டேவிட் சிரஞ்சீவி ஒரு ஆங்கிலோ இந்தியன். இவனும் தொழிலை தெய்வமாக நினைப்பவன்.
பத்மநாபன் இந்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன். சற்று உணர்ச்சி வசப் படுபவன். சிரஞ்சீவியும் இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்தாலும் எதையும் ஆழ்ந்து உணர்ச்சி வசப் படாமல் அணுகக் கூடிய திறமை பெற்றவன்.
இருவருமே பணியாற்றும் தொழிலில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வாழ்பவர்கள்.
இருவருக்குமே தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் கட்டத்தை முற்றிலும் மறந்து பணியாற்றி, மேலதிகாரிகள் சொன்ன பிறகே அதனை உணருகிறார்கள்.
ஆனால் அந்த பணி ஓய்வினை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள், அதற்கு அவர்களுடைய Reaction என்பது தான் இங்கு வேறு பாட்டைக் காண்பிக்கிறது.
ஒரு நடிகன் தன் பாத்திரம் வாழ்நாள் முழுதும் பேசப் பட வேண்டும் என்றால் அதனை நன்கு உணர்ந்து அதனுடைய contextஐ நன்றாகப் புரிந்து கொண்டு தன்னுடைய சொந்தத் திறமை, சிந்தனை அனைத்தையும் பிரயோகித்து அதனுள் புகுந்து, அப்பாத்திரத்தை நிலை நிறுத்த வேண்டும். இதனை வலியுறுத்துவது நடிகர் திலகத்தின் படங்களே.
இப்படி ஒரு காட்சி வரும் போது ஒரு புது நடிகனுக்கு சிந்தனை சட்டென்று தோன்றாது. இயக்குநர் விளக்கினாலும் கூட எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரே எடுத்துக் கூற வேண்டும் என்கிற நிலைமை தான் பொதுவாக நிலவி வருகிறது. இந்த மாதிரி சூழ்நிலையில் ஒரு நடிகனுக்குக் கை கொடுப்பவை நடிகர் திலகத்தின் படங்களே.
இந்த பணி ஓய்வுக் காட்சியில் பத்மநாபன், மிகவும் உணர்ச்சி வசப் பட்டுத் தன்னுடைய நிலையை எண்ணிப் பெரிதும் வருந்துகிறார். காரணம் அவருக்கு அதை நம்பித் தான் வாழ்க்கை, அது மட்டுமல்ல அவர் ஆற்றக் கூடிய கடமைகள் காத்திருக்கின்றன. நிர்ப்பந்தங்கள் அவருடைய ஓய்வின் வலியை அதிகப் படுத்துகின்றன. இதனால் அவருடைய Reaction உணர்ச்சி வசப்ப்ட்ட தாய் இருக்கும்.
சிரஞ்சீவி அதற்கு நேர் மாறான பாத்திரம். ஒரு விநாடி ஓய்வுச் செய்தி வருத்தம் அளித்தாலும் அதனை சுதாரித்துக் கொள்ளக் கூடிய வலிமை அவனுக்கு உண்டு. இதே போல் அந்தக் காட்சியில் மேலதிகாரிகளிடம் தன்னுடைய Reactionஐக் காட்டாமல் வெளியில் வந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அதற்கேற்பத் தன்னை நிதானப் படுத்திக் கொள்கிறான்.
திரைப்படங்களில் ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறு படங்களில் மீண்டும் இடம் பெறும். அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் இது பல முறை நிகழ்ந்துள்ளது. அவற்றை அவர் எப்படிக் கையாண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு அது மிகச் சிறந்த இலக்கணப் புத்தகமாகவும் Reference bookஆகவும் திகழும்.
இந்த இரு பதிவுகளையும் நான் தயார் செய்வதற்கு எனக்குப் பிடித்த நேரம் கிட்டத் தட்ட ஐந்து மணி நேரங்கள். இரவு முழுதும் உறங்காமல் கண் விழித்து ஒவ்வொரு காட்சியின் வசனத்தையும் தனித்தனியே டைப் செய்து காணொளி தயார் செய்து அளித்திருக்கிறேன். சாதாரணமாக இந்த மாதிரி பதிவுகளுக்கு குறைந்தது 10 மணி நேரங்களாவது பிடிக்கும்.
இந்த உழைப்பையும் இந்த நேரத்தையும் வீணடிக்கச் சொல்கிறார் கோபால்.
இந்தப் பதிவில் யாரைப் புண்படுத்தும் படியான கருத்துக்கள் உள்ளன. தனிப்பட்ட முறையில் யாரையாவது மனம் புண்படும் படி எழுதியிருந்தால் பதிவினை எடுத்து விடலாம்.
ஆனால் இவர் இந்த பதிவை எடுக்கச் சொல்வது ஏன். அதுவும் நடிகர் திலகத்தின் நடிப்பைில் உள்ள இலக்கணத்தையும் நடிப்பில் இரு வேறு நிலைகளைப் பற்றிய ஓர் ஒப்பீட்டினையும் எடுக்கச் சொல்வது நியாயமா ... இதை நீங்கள் அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டுச்சொல்லுங்கள்..
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய பதிவை எடுக்க வேண்டுமா
ராகவேந்தர் சார்,
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.தாங்கள் சிரஞ்சீவியை பதித்ததில் விஷம நோக்கம் இல்லையென்று?
எங்கே ஒரு நடிகன் முன்னிலை படுகிறானோ, அங்கு சினிமா கலை செத்து விடுகிறது. நல்ல திரைகதை,பாங்கான வசனங்கள், சினிமா மொழியறிந்த இயக்குனர்,கேமரா மேன்,எடிட்டர் உள்ள போதுதான் ,ஒரு நடிகன் தன்னை பாத்திரத்தின் வாயிலாக வெளிபடுத்தி கொள்ள முடியும்.அந்த பாத்திரத்துடன் மக்கள் ஐக்கியமாகவேண்டும்.
இது பள்ளி கூட தனி நடிப்பு போட்டியல்ல. ஒரு சீனில் பிரமாத படுத்தி விட்டார் என்று சொல்ல. முழு படத்தில்,ஒரு சீனில் கூட , நன்றாக நடிக்கவில்லைஎன்றால் அவரை கொண்டாடவா செய்வோம்?அதல்ல பிரச்சினை. இங்கு நமக்குள் பேசி,பிரத்யேக ரசனையை பதிவு செய்யவில்லை. வருங்காலத்திற்கு ஆவணகளை விட்டு செல்கிறோம்.பொறுப்புணர்ச்சியுடன் செயல் படுவது அவசியம்.
விஷமத்தனமான பதிவுகளைப் போடுவதற்கு ஓரிரு வரிகள் போதும். இதற்காக யாரும் நாள் கணக்கில் மணிக் கணக்கில் உழைப்பையும் நேரத்தையும் செலவிட மாட்டார்கள். தங்களுடைய எண்ணம் தாங்கள் ஒருவர் மட்டுமே இங்கு புத்திசாலி, மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்கிற அணுகுமுறையில் அமைதந்துள்ளதால் தங்களுக்கு அப்படித் தோன்றுகிறது.
தங்கள் பதிவுகளுக்கு என்னால் விளக்கம் அளிக்க முடியும். தங்களுடைய ஒவ்வொரு கருத்தினையும் ஆணித்தரமாக என்னால் மறுக்க முடியும். இதற்கு மேல் வளர்க்க வேண்டாம் என விரும்புகிறேன்.
வாசு சாரின் 4000வது பதிவை வரவேற்க ஆவலாய் இருக்கிறேன்.
பத்மநாபன் ஓய்வு பெறும் போது துடித்தோம். அவருடன் நாமும் கவலை பட்டோம்.
இந்த சிரஞ்சீவி ஓய்வு பெறும் போது அப்படி நடந்ததா?
தலைவரின் "இனியவை நாற்பது" (என அடியேன் கருதுவது)
Parasakthi,Manohara,Andha Naal,Edhir Paradhathu,Rangoon Radha,Uthama Puthiran
Veerapandiya Kattabomman,Bhaaga Pirivinai,Dheivapiravi,Padikkadha Medhai,Pava Mannippu
Pasamalar,Palum Pazhamum,Kappal Ottiya Thamizhan,Padithaal Mattum Podhuma,Bale Pandiya
Aalayamani,Paar Magale Paar,Aandavan Kattalai,Pudhiya Paravai,Thiruvilaiyadal,Thillana Mohanambal
Uyarndha Manidhan,Deiva Magan,Vietnam Veedu,Sumathi En Sundhari,Gnana Oli,Gauravam,Thangapathakkam
Mudhal Mariyathai,Thevar Magan,Thiruvarutselvar,Thirumal Perumai,Thirumbi Paar,Sivandha Mann,Raja,Aval Yaar
Neelavanam,Enga Mama,Ethiroli
அப்படியே "இன்னா நாற்பது" எடுக்கப்போனால் எண்பது கூட தேறுகிறது..
ஆனால் அந்த பட்டியல் பிறகு...
I own up my words. Hindu Mythology allows even Gods to Err and Slip. My God also slipped. This will not demean our God. But some persons with stupid notions try to highlight and Glorify the slips as the achievement ,make a mockery of the God and himself. Let him correct himself first.When I requested something,how dare he denied to do it on our request ?(Whenever he was hurt,we obliged him)
போயி மத்த திரிகள பாருங்கோய்யா எப்பிடி அவுங்களுக்குப் புடிச்ச ஆக்ட்டருங்கள தூக்கி வச்சி கொண்டாட்ராங்கன்னு பத்து பைசாக்கு தேராத படத்தத் கூட எப்பிடி ஒசத்தி எழுதறாங்க அதனால் அவுங்க ஆளுங்க மவுசு தேஞ்சிடுதா போயி கதுக்கங்கயா காதல்வாஹனம் தெர்திருவிழா படத்தக் கூட எம்ஜியார் திரிய்லே பெர்மையா எழுதுறாங்க இத்த எழுதலான்னு எழுதக்கொடாதுன்னு சொல்றதக்கு நீங்கயாரு ஓய் இவுங்கதேன் சிவாஜி பேர கெடாமா பாதுக்கப் போராங்களாம் இங்க இஷ்டப்பட்த எழுத அல்லாருக்கும் ரைட்ஸ் இருக்கு என்னாமோ வந்துட்டாங்க பெரிய தொரைங்க எழதறது ஒரு எழவும் புரியல மண்ணும் புரியல இங்க அல்லாரும் சிவாஜி நடிச்ச அத்தன படங்களப் பத்தி படிக்கனும்னு ஆசப்பட்ரமாதிரி தெரியது சும்மா ரெண்டு மூணு ஜென்மங்க வந்து குட்டய கொழப்பதீங்க அல்லத்திலேயும் சிவாஜி சூப்பரத்தேன் ஆக்ட்டு குடுதுக்கிராறு சொம்மா பழய படத்த போட்டு அருக்காம புதுசப் பத்தி தைறியமா எழுதுங்கப்பா என்னாமோ இந்தப் பூச்சண்டிகெல்லாம் பயந்த்கினு கோவாலு சாரு உன் திரிய்லேயே உன்ன கவனிக்க்னுமு நெனச்சேன் நான் ராகவேந்திரனுக்கு எழுத சொன்னா நீ அங்க மரியாதயே இல்லாம என்னப்பத்தி எழுத்திற்க நீ என்னா பெரிய கொம்பா மரியாத குடுத்து மரியாத வாங்கு புதுசா வரவனுக்கு எப்பிடிமரியாத தரதுன்னு முதல்ல கத்துகினுவா கோவாலு கம்னு கெட தவக்கள மாறிகத்தாத அப்புறம் உன்னைய மாறி சொல்றேன் வேறமாறி ஆயிடும் மூடிகினு போ திரிய கெடுக்காத
ஆஹா, அற்புதம் ராகவேந்தர் சார். நீங்கள் பண்ணாமல் விட்ட அமர்க்களம் இது ஒன்றுதான்.இப்போது அதுவும் ஆரம்பித்து விட்டது.
அட்து நாம் இருவர்பத்தி Sivaji Ganesan School of Acting திரியல எழுதப் போரேன் யார் இன்னாசெஞ்சிடரான்னு பாத்துடலாம்.
After 80's NT has given memorable performance in Bandham, Vellai Roja,
Oorum Uravum, En Asa Rassave etc., Mr Gopal has used very unfortunate
words and made derogatory comments on NT which crores of NT's fans
will not tolerate. It is better for him not to write/use such words on NT.
For Crores of NT's fans all the movies of him are gems and only in this
thread it is possible to comment on NT because of the tolerance and
maturity level of NT's fans & Hubbers. Whatever work done by Gopal has
become nothing because of his utterances on NT.
If you are such a big fan, crores of people behind you why couldnt you make chiranjeevi,oorum uravum,nam iruvar,nermai,tharasu ,sumangali,iru medhaigal Etc Etc a thumping success? Dont even dare to lift your finger at me. You people are out here to bring shame to him and not to sing his glory. Anyway,I dont need your Dumb Accolades.
Mind your words Gopal You are the curse of this thread.
It is better stop your writing on NT.
திரி ஒருத்தர்வூட்டு நெலமா அவருமட்டும் நாத்து உட்ரதுக்கு. பொது நிலம்யா யாருவேண்ணா எழுதலாம் ஆனாக்கா சிவாஜி திரியலசிவாஜிய யாரும் வய்யகூடாது சொரனயுல்லவன் சோத்துல உப்புபோட்டு துன்றவன்யாரும் அத பொருத்துக்கமாட்டான் இந்த திரியில இருக்குரவங்க சூடுசொரன உள்ளவங்கன்னு நம்புறன்
சிவாஜி என்ற மாமனிதர்.
ஒரு விஷயத்தில் மட்டும் எனது ஏழு வயதில் இருந்து உறுதியாக இருந்துள்ளேன்.அதை ஈடுபாடு,வழிபாடு,அதீத திறமையால் கட்டுண்டல் எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். அது நடிகர்திலகத்தின் மீது நான் கொண்ட நாளும் வளரும் பக்தி.எனக்கு அவர் உலகத்திலேயே சிறந்த நடிகர் என்பதே போதுமானதாய் இருந்தது.(இந்த விஷயத்தில் Joe கட்சிதான்).
அந்த கலைஞன் பிறக்கும் போதே ஒளி வட்டத்துடன்,நடிப்பு என்ற கவச குண்டலம் கொண்டு பிறந்ததால் எவராலும் எக்காலத்திலும் வெல்ல முடியாதவராகவே திகழ்ந்தார்,திகழ்கிறார்,திகழ்வார்.அவருடைய கவச குண்டலத்தை ,அனுபவத்தால் பெற்ற ப்ரம்மாஸ்திரங்களை கவர, பல அரசியல் இந்திரர்கள் மாறி மாறி வேடமிட்டு பார்த்தனர்.ஆறு பேர் சேர்ந்து அந்த கர்ணனை அழிக்க முடிந்தது.இந்த நடிப்பு கர்ணனோ ,ஆறு கோடி பேர் மனதில் சிரஞ்சீவியாய் வாழ்வதை கர்ணனே வந்து உலகத்துக்கு நிரூபித்து நிலை நாட்டியாயிற்று.
ஆனாலும் நான் கற்றதும்,பெற்றதும்,உணர்ந்ததும் எனக்கு ஒன்றை ஓங்கி உரைப்பது அவர் ஓர் மாமனிதரும் ஆவார் என்று.
நடிப்பை பற்றித்தான் மாய்ந்து மாய்ந்து எழுதி கொண்டிருக்கிறோமே ? நான் வியக்கும் அவரின் மற்ற குணங்களை ,அம்சங்களை வைத்து பாகம் 11 ஐ தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.
இது சத்திய சோதனைக்கு நிகரான உண்மை பதிவுகள் .
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்ற சொல்லுக்கேற்ப இந்திய கூட்டு குடும்ப மதிப்பு சார் மாண்பின் உயர் பிரதிநிதி.
அசைக்க முடியா தேசிய உணர்வு,இறை பற்று,மனதுக்கு உண்மையான வாழ்க்கை .
வெகுளித்தனம் கொண்டு இவர் பெரியோர்,இவர் சிறியோர் என்று பாராமல் எல்லோரிடமும் உண்மையாய் பழகி உரிமை எடுத்து மனம் திறப்பார்.
எல்லாவற்றிலும் ஒரு முழுமையான அர்ப்பணிப்பு(Perfection ) காட்டுவதுடன்,பிறரிடமும் எதிர்பார்ப்பார் .
கற்றோரை மிக மதிப்பார்.ஆலோசனை கேட்பார். ஆசிரியர்களை போற்றி மதிப்பார்.
சக கலைஞர்களிடம் மிக மிக பெருந்தன்மை காட்டுவார்.வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடோ, பழியுணர்வோ ,கெடுக்கும் எண்ணமோ அவர் மனதில் துளிர்த்ததே இல்லை.
பொது காரியங்களுக்கு நிறைய நன்கொடைகள் விளம்பரம் இல்லாமல் வழங்கியுள்ளார்.
சினிமா,அரசியல்,பொது நிகழ்ச்சி எல்லாவற்றிலும் நேரம் தவறாமையை கடை பிடித்து,மற்றவர் நேரத்தையும் மதித்தவர்.
நடிப்பை பற்றியே சிந்தனை,காரிய கவனம் கொண்ட தனிமை விரும்பி என்றாலும் ,நகைச்சுவை உணர்வுடன் பிறருடன் எளிமையாக மனம் திறப்பார்.
மனம், உடல் இரண்டையுமே மிக மிக சுத்தமாக பராமரித்தவர்.
கடைசி வரை உலக புகழ் பெற்றும் தன் அடிப்படையை மறக்காத குணம் மாறாதவர்.
தன் படங்களே தனக்கு விளம்பரம் தேடி கொள்ளும் என்ற நம்பிக்கையில் product ,Quality இரண்டையும் மட்டுமே நம்பியவர். collection சாதனை செய்த தன் படத்தை பற்றியே பிறர் சொல்லி தெரிந்து கொண்டவர். தன் தொழில் தவிர பிற விஷயங்களில் ஆலோசனை கூறுவாரே தவிர தலையிட மாட்டார்.
பல தயாரிப்பாளர்களை ,இயக்குனர்களை உருவாக்கி உள்ளார்.இவரை மட்டுமே நம்பிய முக்தா,பாலாஜி போன்றோர் சிறப்பாக வாழ்ந்தனர்.
ஜாதி ஒழிப்பு என்றெல்லாம் பாவ்லா காட்டாமல்,அதை ஒரு நிதர்சன உண்மையாகவே கொண்டு ,வேறுபாடு பாராமல் எல்லா சாதியினரிடமும் சம அன்பு காட்டி ,சமமாகவே உணர்த்துவார்.
இளைய தலைமுறை வளரும் நடிகர்களுக்கு இவரளவு வாய்ப்பளித்து உயர உதவியவர்கள் யாருமில்லை.
தன் சம்பத்த பட்ட படங்களாக இருந்தாலும் மனதில் உள்ளதை உள்ள படி விமர்சிப்பார்.
அறவே ego இன்றி யாராவது ஏதாவது தன் மனம் கோணும் படி உளறினாலும் மன்னிப்பார்.
நண்பர்களை மிக நம்புவார். வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்.
படங்களின் Quality க்காக அவர் தன்னை வருத்தி கொண்ட அளவு யாரும் செய்ததில்லை.
பிற மாநில, பிற நாட்டு கலைஞர்களிடம் மிக இணக்கம் காட்டி ,அவர்கள் மதிப்பை பெற்றார்.
யாராவது ஏதாவது சிறப்பாக செய்து விட்டால் ,யாரென்று பாராது மிக மனம் திறந்து பாராட்டுவார்.
தன் சுய image building பற்றி கவலையே பட்டதில்லை.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதே இல்லை.
பொது வாழ்வில் தூய்மை கொண்டவர். தன் நன்மைக்காக ரசிகர்களை பயன் படுத்தவே விரும்ப மாட்டார்.அவரவர் படிப்பை,தொழிலை,குடும்பத்தை கவனிக்கவே சொல்வார்.
நல்ல விஷயங்கள் எந்த மொழியில்,திசையில் இருப்பினும் தேடி கொண்டு வருவார்.
தன் திறமை ஒன்றையே நம்பி,வெளிப்படையாய் வாழ்ந்தவர்.
தன் கடைசி படத்திலும், உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் ,அதே அர்பணிப்புடன் வேலை செய்தவர்.
OM, Shanthi Shanthi Shanthi....
Deleted.
http://www.youtube.com/watch?feature=player_profilepage&v=UCW0qmIrA8E
Watch it from 23:20
It is really painful to observe that ego problems pop up and we detract from our main objective of taking the name and fame of NT to the generations to come. No actor in this world is an exception that few of his movies may fail or even not upto the expected standards. NT has also been put into this annoying situation of some of his movies not really utilizing his acting calibre purely due to the director's misconceptions. The glory of NT has always been growing with the successive rereleases of his classics.Let us concentrate on bringing more and more cult classics of our NT back to their form instead of wasting our time and energy on such trivial issues. As NT's fans are showing maturity let us accept the fact that some of his movies need not be brought on a focus in this thread but we keep them by heart as his fans.
hello everybody,
my name is kiruba.due to some of the unwanted postings i am not properly introduce myself. sorry.i am not a hardcore sivaji fan.but i like and admire the legend.i saw his earlier films like vetrikku oruvan, oorum uravum vasandhathil oru nal raja mariyadhai keezh vanam sivakkum rishimulam en asa rasave nethibathi marumagal lashmi vanthachu lorry driver rajakannu kalthoon sadhanai rjarishi etc.in rajarishi he acted as viswamithra muni.wonderful job done by sivaji.i saw that movie four times.pl.anyone can write about that movie
sl .. நீங்கள் சொல்வது கொஞ்சம் ஏற்ற்குக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஒன்றுமே கிடைக்காத பட்சத்தில் சப்பாத்தி கிடைக்கும் என்ற கருத்து .. அப்படி பட்ட நிலை நடிகர்திலகத்திற்கு வரவேண்டியதில்லை ஒருபடமும் இல்லை ஒரு லாரி டிரைவர் ராஜாக்கண்ணு இருக்கட்டும் என்ற நிலை நடிகர் திலகத்திற்கு தேவையில்லாதது . நாங்கள் மீண்டும் மீண்டும் பாசமலரயோ கப்பலோட்டிய தமிழனையோ பார்த்து மகிழ்ந்து கொள்வோம் .. ஒரு ஜயமாலினியுடன் குத்தாட்டம் என்றெல்லாம் தேவையில்லாதது . அது ஒரு புறமிருக்க இங்கே கோபால் சிரஞ்சீவி, தாம்பத்யம் போன்ற படங்கள் தனக்கு பிடிக்காத ஒன்று என்று சொன்னதில் தவறொன்றுமில்லையே . நான் நடிகர்திலகத்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த படங்கள் எல்லாம் நீங்கள் செய்திருக்க கூடாது என்று சொல்வேன் .. அது என் அபிப்ராயமே . அதே போல் கோபால் சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இதற்காக வரிந்து கட்டிக்கொண்டு அவரை இந்த திரியை விட்டே ஓட்டும் விதமாக உள்ளது உங்கள் பதிவு. நடிப்பின் இலக்கணம் நடிகர் திலகம் அவர் நடித்த எல்லா படங்களும் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
dear rajeshkvr
sivaji sila padangal may be not good BUT NOT HIS ACTING TALENTS THAT IS OUR TARAGA MANDRAM which has been very well proved by nt. BLAMING NT FOR THAT IS NOT WISE,My repeated request that not to write oe speak on these lines,
No body questions his Acting talent.. but see his romance in Thamabathyam Vs his romance in iru malargal etc.. Thambtathyam was kind of kiddish. As a fan we are saying such films definitely did not add any value to NT . May be some stupid producers and directors used NT's name for making business.. that's all
I'm not here to say all movies in 80's & 90's were bad NO. There were good movies where in NT's potential was exploited .Vaazhkai was one, Anbulla appa etc
for me lorry driver raja kannu was a movie where in the whole team made fool out of themselves..
As the trends changed in late eighties say 84 onwards he could not get good movies and the dircters also make his name for business purpose for which NT could not do any thing, i fully agree theselines. but my point is that still he did justice to that roles it is all business of the dirctors producers who exploiited. we can not interfere here.
This is a very generic reply sir(We cant interfere .. who want to interfere . all we r saying is films like lorry driver etc are not of NT's calibre )
Anyways all i'm saying is Gopal sir has all right to say about a film. People should not pounce on him ..
i'm at peace now ..
கோபால் சார் நீங்கள் முன்னர் எழுதிய சில பதிவுகள்
விடயத்தில் எனக்கு மிகவும் மனக்கவலை உள்ளது
ஆனால் சிவாஜி என்ற மாமனிதர் பற்றி
எழுதியிருந்தீர்களே அவ்வளவும் உண்மை
என் மனதில் உள்ளதை அப்படியே வரிக்கு வரி
எழுதியுள்ளீர்கள் மிகவும் மகிழ்ச்சி சார்
நீங்கள் அவரைபற்றி எழுதியவை
அவ்வளவும் உண்மை உண்மை உண்மை
உங்களுக்கு கோடான கோடி நன்றி கோபால் சார்