வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுவதில் மகிழ்ச்சி
விட்டு போன பா series இருந்து மறுபடியும் தொடங்கிறேன்
பொதுவாக நம்மவர் நடித்த படங்கள் திரை உலகுக்கு ஒரு inspiration அக இருந்து வந்தது , சொல்ல போனால் இருந்து கொண்டே இருக்கிறது
அப்படி பட்ட ஒரு படம் தான் இந்த படிக்காத மேதை
இந்த படத்தின் பாதிப்பில் இருந்து வந்த படங்களை சொன்னால் கிட்ட தட்ட ஒரு அரை டாசன் படங்கள் தேறும் அதில்
முக்கியமான படங்கள் என்றல் பெயர் சொல்லும் பிள்ளை , முத்து எங்கள் சொத்து , பொன்மனசெல்வன் etc
இந்த படத்தின் கதை ஒரு நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும் ஒரு கூட்டு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் அதில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுக்கு ஒரு எடுத்துகாட்டு , இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க நம்மவரை விட்டால் வேறு யார் , அதுவும் நம்மவர் நிஜ வாழ்கையிலும் ஒரு மிக பெரிய கூட்டு குடும்பத்தின் தலைவர் அல்லவா
இந்த படத்தில் நம்மவர் ரோல் கோமாளிக்கும் , வெகுளிக்கும் இடையில் உள்ள ஒரு மெல்லிய வித்தியாசத்தை அழகாக நம்ம கண் முன்னே கொண்டு வந்து இருப்பார்
படம் titles போடும் பொழுதே இயக்குனர் படம் பார்க்கும் அனைவரையும் ஒரு கூட்டு குடும்பத்திற்கு உள்ளே கொண்டு சென்று விடுவார்
முதல் காட்சியில் மிக பெரிய கூட்டு குடும்பத்தின் தலைவர் ரங்கா ராவ்க்கு அறுபதம் கல்யாணம் என்ற மங்களகரமான சம்பவத்தில் இருந்து தொடங்கிறது
தொடர்ந்து அவர் தன் குடும்பத்தின் அங்கத்தினர் எல்லோரையும் அறிமுகபடுதுகிறார் , அதில் ரங்கன் (சிவாஜி) ஒரு பூசனிக்காயை வைத்து கொண்டு அறிமுகம் ஆகும் காட்சி இமேஜ் என்ற பிம்பத்தை உடைத்து விடுகிறது , அந்த ஒரு காட்சியில் மட்டும் இல்லை படம் முழுவதும் தான்.
இந்த படத்தில் நடிகர் திலகத்தின் முடி கூட நடித்து விடுகிறது . அவர் கர்லா கட்டை யை வைத்து கொண்டு மிகவும் அகண்ட மார்பை காட்டும் அழகு , எமனுக்கு எமன் படத்துக்கு ஒத்திகையாக இருக்குமோ , சிவாஜி கல்யாணத்துக்கு ஒத்து கொள்ளும் பொழுது , அவருக்கு அத்தை மேலே இருக்கும் நம்பிக்கை யை காட்டுகிறது .
கல்யாணம் ஆன பிறகும் கூட தன் மனைவி சௌகார்விடம், தன் மாமா , அத்தை பற்றி பேசுவதும் , அவர்களின் மீது தன் மனைவி யை விட கனிவாக இருக்கிறார் ,
ரங்கா ராவ் வின் நிலைமை மோசம் ஆன உடன் , மகன்களால் உதசின படுத்த படும் பொழுது , ரங்கன் மட்டும் அப்படியே இருக்கிறார்
எல்லோரும் NT வேலைக்கு சென்ற உடன் அவர் வாங்கி வரும் cigarette வங்கி வாரும் காட்சியை பற்றி சொல்வார்கள் , ஆனால் எனக்கு ரங்கா ராவ் NT யிடம் தனியாக பேச வேண்டும் , வெளியே போ என்று சொல்லும் பொழுது NT அதை ஒரு வித அர்த்தத்தில் எடுத்து கொள்ளும் இடம் என்னக்கு மிகவும் பிடித்த காட்சி . தன் தங்கையை வேண்டாம் என்று மறுத்த பையன் யை தெரியாமல் காப்பாத்துவதும், தெரிந்த உடன் விருட் என்று செல்வதும் , அதை வைத்தே பிரச்சனைகளை தீர்ப்பதும் அருமையான திரைகதை, இந்த படத்தில் NT உடை , சாதரண வேஷ்டி ,சட்டை தான் ,அதுவும் அந்த சட்டையும் மிகவும் லூஸ் ஆக இருக்கும் . இந்த படத்தை பற்றி சொல்லி கொண்டே போகலாம்
அதே போலே இந்த படத்தின் inspiration ல் எடுக்க பட்ட படங்களில் கதாநாயகன் வெளியே சென்ற உடன் பணக்காரன் ஆகி விடுவர் , ஆனால் இந்த படத்தில் அந்த மாதிரி cinematic liberties எதுவும் இல்லை , மாறாக நம்ம எல்லோர் வாழ்கையிலும் நடக்கும் விஷயம் போலே , மிகவும் இயல்பாக (நல்லவர்க்கு எல்லாம் நல்லதே நடக்கும் ) ரங்கன்
மொத்தத்தில் ரங்கன் இன்றும் நம் இடையே வாழ்ந்து கொண்டே இருக்கிறார்