-
1978 இல் துரை இயக்கத்தில் ரஜினிகாந்த்,ஸ்ரீகாந்த்,ஜெயசித்ரா,பிரமீள,பண்டர ிபாய் நடித்து
வெளிவந்த கருப்பு வெள்ளை படம்
மெல்லிசை மாமணி குமார் அவர்கள் இசையில்
விசு கதை என்று நினவு
ரஜினிகாந்த்,ஸ்ரீகாந்த் இருவரும் அண்ணன் தம்பிகள்
இதில் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு பயந்தவர் நன்றாக படித்து
அரசாங்க வேலைக்கு செல்லுவர் .ஸ்ரீகாந்த் படிக்காமல் குடும்பத்துக்கு அடங்காமல் ஊதாரியாக இருப்பார். பிரமீள ஏழை வீடு பெண்
ரஜினியை திருமணம் செய்து கொண்டு ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரஜினியை லஞ்சம் வாங்க வைத்து அவரை ஜெயிலுக்கு அனுப்பி நல்லதொரு இல்லற வாழ்க்கையை தொலைத்து விடுவார்
அதே நேரத்தில் ஜெயசித்ரா பணகார வீட்டு பெண் ஸ்ரீகாந்தை கல்யாணம் செய்து கொண்டு அவரை திருத்தி நல்லதொரு குடும்ப தலைவியாக விளங்குவார் . ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
இந்த படத்தின் டைட்டில் இன்னும் நினைவில் இருக்கிறது
முதலில் ஸ்ரீகாந்த் படம் போட்டு ரஜினிகாந்த் என்று எழுத்தில் போடுவார்கள் பிறகு ரஜினிகாந்த் படம் போட்டு ஸ்ரீகாந்த் என்று எழுத்தில் போடுவார்கள்
இதற்கு விகடனின் விமர்சனம் "ஆரம்பமே குழப்பம் .."
விசு இதே கதையை 10 ஆண்டுகள் கழித்து கொஞ்சம் கதையை மாற்றி
கல்பனாவை அக்காவாகவும் நிழல்கள் ரவியை அவரது கணவராகவும்
எஸ் வீ சேகர்,பாண்டியன் இருவரையும் அண்ணன் தம்பி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவர்களுக்கு ஜோடியாக முறையே கோகிலா மற்றும் ஜெயஸ்ரீயை நடிக்க வைத்து அவர் பாணியில் திருமதி ஒரு வெகுமதி என்ற பெயரில் இயககி வெளியிட்டார்
சதுரங்கம் படத்தில் பாலா வாணி குரல்களில் ஒரு அருமையான மெலடி டூயட்
இந்த பாட்டின் காட்சி அமைப்பு பார்தீங்கன்ன
ரஜினிக்கு திருமண பந்தம், உடல் உறவு அப்படின்னா என்னனே தெரியாது . வெகுளி . அவருக்கு எல்லாவற்றையும் விளக்குவதற்கு
ஒரு மலையாள சினிமாவுக்கு டிக்கெட் எடுக்க சொல்வதும்
அங்கே இருக்கிற போஸ்டர் பார்த்து இந்த பாட்டு வருவது போலவும்
கனவு பாடல்
"வாத்சாயன "
பாலா ஆரம்பிக்கும் போதே ஒரு வித உற்சாக குரலிலும்
முதல் அடியை பாட தொடர்ந்து வாணி தன்னுடைய உற்சவ குரலில்
அடுத்த அடியை தொடர ஒரே மதனோற்சவம் தான்
"மதனோற்சவம் ரதியோடு தான் ரதி தேவியோ பதியோடு தான்
உயிரோவியம் உனக்காக தான் உடல் வண்ணமே அதற்காக தான்
மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ
மீனாடும் கண்ணில் விழுந்து நானாடவோ
தேனாடும் செவ்விதழ்தன்னில் நீராடவோ ஹோ
புரியாத பெண்மை இது பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை என்னென்ன லீலை
மதனோற்சவம் ரதியோடு தான் ரதி தேவியோ பதியோடு தான்
கார்கால மேகம் திறண்டு புயலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது
கார்கால மேகம் திறண்டு புயலானது
கண்ணா கைகள் இரண்டு சதிராடுது
ஓஓஓஒ அலங்கார தேவி முகம்
அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம் ஒரு கோடி இன்பம்
மதனோற்சவம் ...ரதியோடு தான் ...ரதி தேவியோ ...பதியோடு தான்....
மெலிதான கிடார் இசை பாடல் முழுவதும் பரவி இருப்பதை காணலாம்
மற்றுஒரு பாடல் சுசீலாவின் குரலில் மகேந்திராவை கிண்டல் செய்வது போல் "அட அபிஷ்டு நோக்கும் நேக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி " வரும் .அவ்வளுவு இம்ப்ரெஸ் செய்யவில்லை
-
இன்றைய ஸ்பெஷல் (14)
இந்தப் பாடல் அன்பு கார்த்திக் சாருக்காக.
கார்த்திக் சாருக்குப் பிடித்தமான அவருடைய 'ஓமர் ஷெரிப்' கலக்கும் டூயட்.
1974-இல் வெளிவந்த 'கை நிறைய காசு' திரைப்படம் ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரிந்த படம்.
http://i1.ytimg.com/vi/lVEG-4vPTdM/hqdefault.jpg
நாகேஷ் இரட்டை வேடம் ஏற்றிருந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், சி.ஐ.டி.சகுந்தலா, பிரமிளா, தேங்காய், எல்.காஞ்சனா முதலானோர் நடித்திருந்தனர்.
சற்றே வித்தியாசமான திரைக்கதை. அப்பாவி நாகேஷ் ஒருத்தர். அவர் மனைவி பிரமிளா. கஷ்ட ஜீவனம். குழந்தையையும், மனைவியையும் தவிக்க விட்டு விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் போது சி.ஐ.டி.சகுந்தலா வந்து காப்பாற்றுகிறார். தன் தந்தையிடமிருந்து கணிசமான தொகையும் வாங்கி தந்து நாகேஷுக்கு உதவுகிறார். நாகேஷ் மறுபடி சந்தோஷமாக வாழ நினைக்கிறார். சகுந்தலாவையும் காதலிக்கிறார்.
ஆனால் சகுந்தலா அவருக்கு உதவி செய்யக் காரணம் என்ன?
இதன் பின்னணியில் நடக்கும் சகுந்தலா கும்பலின் சதி வேலை என்ன?
நாகேஷைப் போலவே தோற்றம் கொண்ட இன்னொரு வில்லன் நாகேஷ் தன் மேல் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு இன்ஷூர் செய்து, அப்பாவி நாகேஷைக் கொன்றுவிட்டு, பின் தான் செத்துவிட்டதாக தன் பார்ட்னர்களான சகுந்தலா, லியோபிரபு மூலம் போலீசையும், சட்டத்தையும் நம்ப வைத்துவிட்டு, பின் தலைமறைவாகி இன்ஷூரன்ஸ் பணம் கைக்குக் கிடைத்தவுடன் தன் பார்ட்னர்களுடன் வெளிநாட்டுக்கு ஓடிவிட பிளான் செய்கிறார்.
அவரது பிளான் சக்சஸ் ஆனதா?... அப்பாவி நாகேஷ் கொலை செய்யப்பட்டாரா? இல்லையா என்பதுதான் மீதி கதை.
சங்கர் கணேஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்கள். ஏ.பி.ராஜ் இயக்கம். பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்.
ஓரளவிற்கு விறுவிறுப்பாகவே நகர்ந்த படம் இது. இன்ஸ்பெக்டராக துப்பு துலக்கும் 'தேங்காய்' படத்திற்கு பக்க பலம். அப்பாவி நாகேஷின் தங்கையாக எல்.காஞ்சனா அவரைக் காதலிக்கும் ஸ்ரீகாந்த்.
கண்ணாடி அணிந்த குடும்பப் பெண் பிரமிளா.
'அருணோதயா' தயாரித்த இப்படத்திற்கு மவுலி கதை வசனம் எழுதியிருந்தார்.
இப்படம் டைட்டில் தொடங்கும் போது கணேஷ் (சங்கர்) பாடிய 'கைநிறையக் காசு... பை நிறைய நோட்டு' பாடல் அப்போது பிரசித்தம். வித்தியாசமான பாடலும் கூட
இனி 'இன்றைய ஸ்பெஷல்' பாடல் காட்சி பற்றி.
ஸ்ரீகாந்துக்கும், எல்,காஞ்சனாவிற்கும் ஓர் அருமையான வேகமான டூயட். ஸ்ரீகாந்த் மிக அழகாக தோற்றமளிக்கிறார். எல்.காஞ்சனாவும் சேலையில் அழகாகவே காட்சி தருகிறார்.('வீரபாண்டியக் கட்ட பொம்மனி'ன் உள்ளம் கவர்ந்த குழந்தைச் செல்வம் 'மீனா'', 'சொர்க்கமிருப்பது உண்மை என்றால்' என்று நம் ஆனந்தை மயக்கப் பார்க்கும் கவர்ச்சிப் பெண்.) ஜோடிப் பொருத்தம் சூப்பர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சுசீலாவும் பாடும் பாஸ்ட் பீட் பாடல் இது. பாலாவின் கொஞ்சும் குழைவும், செல்லச் சிரிப்பும் அமர்க்களம். இரட்டையர்கள் உற்சாகமாகப் போட்ட டியூன். எழுந்து ஆட்டம் போட வைக்கும் பாடல். அதிகம் கேட்க முடியாத, பார்க்க முடியாத பாடல்.
இப்போது பார்க்கலாம்.. கேட்கலாம்.... மகிழலாம்.
https://i1.ytimg.com/vi/6CK6X7jzCpA/mqdefault.jpg
டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூவனம் முத்து மாணிக்கம் உன்முகம் உன்முகம்
உன்முகம் உன்முகம்
ஏய் வாடி கண்ணு வாடி இங்கே கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில் ஆட வேண்டும்
கூட வேண்டும்
கூடும் போது பாட வேண்டும்
கொடிவிட்ட பூவினில் மோதுது காத்து
காரணம் கேட்டுவிடு
மணி மின்னும் கைகளை தோள்களில் கோர்த்து
மயக்கத்தைத் தீர்த்து விடு
மயக்கத்தைத் தீர்த்து விடு
பொன் மலர்ச் செண்டுகள்
கண்களில் கண்டதும்
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
பொய்கையின் வண்டுகள் ஆடாதோ
டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூவனம் முத்து மாணிக்கம் உன்முகம் உன்முகம்
உன்முகம் உன்முகம்
நாட்டியப் பாவையின் பூட்டிய மேனி தீட்டிய ஓவியமோ
அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில் பூட்டிய காவியமோ
பூட்டிய காவியமோ
ஊட்டிய பாலிடை
ஊறிய தேனென
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
ஊட்டிய பாலிடை
ஊறிய தேனென
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
நாளைய இன்பங்கள் ஆயிரமோ
டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்
வண்ணப் பூவனம் முத்து மாணிக்கம் உன்முகம் உன்முகம்
உன்முகம் உன்முகம்
ஏய் வாடி கண்ணு வாடி இங்கே கைகள் உன் பக்கம்
இந்த மாங்கனி உந்தன் மார்பினில் ஆட வேண்டும்
கூட வேண்டும்
கூடும் போது பாட வேண்டும்
லாலலஹோ லாலலஹோ லாலலஹோ லாலலா
http://www.youtube.com/watch?feature...&v=6CK6X7jzCpA
-
1 Attachment(s)
1978 இல் வெளிவந்த இன்னொரு கருப்பு வெள்ளை படம்
ஆனந்த பைரவி
ரவிச்சந்திரன் கே ஆர் விஜய ஜெயதேவி
(இந்த ஜெயதேவி நிறைய தமிழ் படம் எடுத்தாங்க கமல் கூட இதயமலர் படத்திலும் வருவாங்க )
இந்த படத்தோட டைரக்டர் மோகன் காந்தி ராமன்
சக்கரவர்த்தி திருமகள் னு MT நடித்த படத்திற்கு அச்சிச்டன்ட் டைரக்டர் ஆ வொர்க் பண்ணினதா ராண்டார் கை ஹிந்துவில் எழுதி இருக்கார்
படத்தை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை
ராமானுஜம் னு ஒருத்தர் மியூசிக் டைரக்டர்
இவர் மியூசிக் டைரக்டர் பார்த்தசாரதி சார் தம்பி .
இந்த ராமானுஜம் பையன் பரத் னு பெயர் சின்ன பையன் ஆ இருந்த போது கொஞ்ச நாள் திருநெல்வேலியில் அவங்க பாட்டி வீட்டில் தங்கி படித்து கொண்டு இருந்தான் . இந்த பரத்தை ஒரு நாள் காலேஜ் முடித்து விட்டு சென்னையில் சந்தித்தேன். அப்போதுதான் அவங்க அப்பா மியூசிக் டைரக்டர் ராமானுஜம் அன்ன பறவை,ஆனந்த பைரவி போன்ற படங்களுக்கு எல்லாம் இசை அமைப்பாளர் என்று சொன்னான்
இந்த ராமானுஜம் இசை அமைத்து அவள் ஒரு கவரிமான் னு ஒரு படம் விளம்பரம் பார்த்த நினவு. MGR அண்ணன் பையன் MGC சுகுமார் நடிபதாக . ஆனால் படம் வெளி வந்ததா என்று தெரியவில்லை
இந்த ஆனந்த பைரவியில் நல்ல நல்ல சாங் எல்லாம் உண்டு
எல்லாம் சிலோன் ரேடியோ ஹிட்
1. பாலா சுசீலா குரலில் - ரவி கே ஆர் விஜய
"சிரித்தால் அந்த சிரிப்பில் ஒரு மோஹம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்"
2.TMS சுசீலா குரலில் - ரவி ஜெயதேவி
"கோடி கோடி இன்பம் அது கொண்டு வந்த சொந்தம்
ஆடி மாத வெள்ளம் நீ ஆனந்த பைரவி "
3. வாணியின் குரலில் - இந்த பாடல் வெறும் ஆடியோவில் மட்டும் கேட்டால் பரத நாட்டியம் பாடல் போல் இருக்கும் . ஆனால் உண்மையில் பரதநாட்டியம் பாடல் அல்ல
"தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என் தலைவனின் திருமேனி தங்கம்
பகைவர்கள் முன்பு அவன் சிங்கம்
என்னை பார்த்து விட்டால் காதல் பொங்கும்
அம்மம்மா "
ரவி கொஞ்சம் தொப்பை வைத்து பெல்ஸ் (பாட்டம் 40 இருக்கும்) எல்லாம் போட்டு கொண்டு வருவார்
www.youtube.com/watch?v=Htt8veSRgI0
-
வாசு சார்
வெரி rare சாங்
இந்த படம் கொஞ்ச நாள் முன்னால் முரசுவிலோ அல்லது லைப் சேனல் இலோ பார்த்தேன் படம் தொடர்ச்சி இல்லாமல் விட்டு விட்டு வந்தது
பிரமீள அடக்கம் ஒடுக்கமாய் நடித்த ஒரு படம்
-
1978 புது செருப்பு கடிக்கும்
mb ஸ்ரீனிவாசனின் இசையில் ஜெயகாந்தன் எழுதிய
பாலாவின் குரல்
கிட்டத்தட்ட ரெஹ்மானின் "தங்க தாமரை மகளே வா அருகே தத்தி தாவுது மனமே " பாடலை நினவு படுத்தும் . ரெஹ்மான் ஏகப்பட்ட வாத்திய கருவிகளை உபயோகித்து இருப்பார் . ஆனால் இந்த பாடலில்
மிக குறைந்த கருவிகளே
சிததிர பூ சேலை சிவந்த முகம்
முத்து சுடர் மேனி மூடி வைத்த முழு நிலவோ
இந்த பாட்டு விடியோ கிடைக்குமா சார்
இந்த படம் வெளியவே வரவில்லை என்று கேள்விபட்டேன்
உண்மையா சார்
-
Krishna sir
only audio song is available.
http://youtu.be/oijasCnOmNg
-
தேங்க்ஸ் வினோத் சார்
நானும் கேட்டேன்
மிக்க நன்றி
சித்திரப்பூ சேலை
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச்சுடர் மேனி எழில்
மூடிவரும் முழு நிலவோ
மூடிவரும் முழு நிலவோ
சித்திரப்பூ சேலை
மீன் கடிக்கும் மெல்லிதழை
நான் கடித்தால் ஆகாதா
தேனின் ருசி தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனோ
சித்திரப்பூ சேலை
மஞ்சள் பூசும் இடமெல்லாம் என்
மனம் பூசல் ஆகாதா
கொஞ்சம் என்னை குங்குமமாய்
குழைதெடுத்தால் வாறேனோ
சித்திரப்பூ சேலை
படிக்கட்டில் ஏறி வரும்
பாததேழில் பார்பதற்கு
படிக்கட்டின் இடையிலே ஒரே
பலகையை மாறேனோ
சித்திரப்பூ சேலை
முக்காலும் துணி மறைத்து நீ
மூலையிலே போய் நின்று
உன் சொக்காயை இடுகையில்
நான் சொக்காகி மூலை சுவராகி
முன்னின்று பாரேனா
சித்திரப்பூ சேலை
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச்சுடர் மேனி எழில்
மூடிவரும் முழு நிலவோ
மூடிவரும் முழு நிலவோ
சித்திரப்பூ சேலை
பாலா பாடலை முடிக்கும் போது
-
மாலை வணக்கம் கிருஷ்ணா சார்,
தூள் கிளப்பிக் கொண்டு இருக்கிறீர்கள். வேலை முடிந்து மதியம் வந்து 'இன்றைய ஸ்பெஷல் போட்டு' கொஞ்சமா ரெஸ்ட்.
-
கிருஷ்ணா சார்,
ஸ்ரீதேவியை 'சாய்ந்தாடம்மா' சாய்ந்தாடு என்று மடியில் கிடத்தி 'கண்ணன் என்ன சொன்னான் சிறு பிள்ளையே... கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே' என்று பாடுபவர் தானே ஜெயதேவி.
-
கிருஷ்ணா சார்,
'சதுரங்கம்' பாடல் ஆய்வு கலக்கல். செம ஹிட்டான ஒரு பாட்டு.