முரளி அய்யா,Quote:
Originally Posted by Murali Srinivas
வணக்கம். நலமா. நான் கேள்விப்பட்டது என்னவென்றால் நிழல்கள் படத்தில் வரும் பொன்மாலை பொழுது தான் அதிக வாரஙகள் வந்ததாம் ! கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ! அதாவது வருடம் 1979-80-81 ?
Printable View
முரளி அய்யா,Quote:
Originally Posted by Murali Srinivas
வணக்கம். நலமா. நான் கேள்விப்பட்டது என்னவென்றால் நிழல்கள் படத்தில் வரும் பொன்மாலை பொழுது தான் அதிக வாரஙகள் வந்ததாம் ! கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ! அதாவது வருடம் 1979-80-81 ?
நேற்று மனதோடு மனோ தொடரில் திரு மனோ இப்பாடலை பாடிக்காட்டினார். பாடும்போது சும்மா இல்லாமல் நடிகர்திலகத்தைபோல பாடுகிறேன் என்று நிறைய குரங்குதனங்களை செய்தது மனதை மிகவும் வாட்டியது. இப்போது எல்லாருமே சிவாஜியைபோல நடித்துவேண்டுமென்றே அவரை தாழ்த்துவது மிகவும் கண்டிக்கதக்கதாகும்.Quote:
Originally Posted by RAGHAVENDRA
S .P பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் நடிகர் திலகம் நடித்த ராஜா திரைபடத்தின் "இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு என்னை விட்டு வேறு யாரு உன்னை தொடுவார் " பாடலை பற்றி யாருமே சொல்லவில்லையே அதே போல் பாட்டும் பரதமும் திரைபடத்தில் "மை சாங் இஸ் போர் யு " பாடலையும் சொல்லலாம்
நட்புடன்
மேலும் அண்ணன் ஒரு கோயில் திரைபடத்தில் "நாலு பக்கம் வேடர் உண்டு நடுவிலே மான் இரண்டு காதல் இன்ப காதல் அம்மம்மா" என்ன ஒரு பாடல் பாலுவும் வாணியும் குரலின் இளமை இனிமை மறக்க முடியுமோ
நட்புடன் gk
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 32
கே: அமெரிக்கா சென்ற நடிகர் திலகம் தங்களுக்கு (பேசும் படத்திற்கு) என்ன கொண்டு வந்தார்? (எம்.கோவிந்தசாமி, கல்கந்தை, காட்மோர்)
ப: "உலகிலேயே சிறந்த பத்திரிகைக்காரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்" என்று சொன்னாரே, அது போதாதா!
(ஆதாரம் : பேசும் படம், ஆகஸ்ட் 1962)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 33
கே: சிவாஜி அவர்களையடுத்து நடிப்பில் ஒரு சகாப்தம் என்று யாரைக் கூறலாம்? (நெல்லை சுவாதி, சென்னை - 33)
ப: நெருங்கி வரக் கூட யாருமிருப்பதாகத் தெரியவில்லையே.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 15.10.1983)
அன்புடன்,
பம்மலார்.
டியர் ஜோ சார்,Quote:
Originally Posted by joe
தங்களது கருத்துக்களை மனப்பூர்வமாக ஆமோதிக்கிறேன்.
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 34
கே: சிவாஜிக்கு சிலை வைத்த முதல்வர் கருணாநிதி அவருக்கு மணிமண்டபம் கட்டுவாரா? (டி.கே.சங்கர், பசுபதிகோயில்)
ப: சிவாஜி மீது இன்றைய முதல்வர் கலைஞர் வைத்திருக்கும் மதிப்பு உணர்வுபூர்வமானது. நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அவர் குறை இல்லாமல் நிறைவு செய்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16-31 ஆகஸ்ட் 2006)
அன்புடன்,
பம்மலார்.
டியர் ஜோ, பம்மலார் மற்றும் நண்பர்களுக்கு,Quote:
Originally Posted by pammalar
தங்களுடைய கருத்துக்களிலிருந்து நான் சற்று மாறுபட வேண்டியுள்ளது. அன்புச் சகோதரர்கள் ராம்குமார் மற்றும் பிரபு அவர்கள் நடிகர்திலகத்தின் லட்சிய நிறுவனமான சிவாஜி பிலிம்ஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களைத் திறம்பட தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். படத்தயாரிப்பு என்பது லாபம் நஷ்டம் இரண்டையுமே சந்திக்கும் தொழில். அவர்களுக்குள்ள பல தொழில் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்த நிறுவனங்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி வருவதே மிகப் பெருமை வாய்ந்த விஷயமாகும். நமக்குத் தெரிந்த பல கலைஞர்கள் தங்கள் வாழ்நாளில் மிகப் பெரும் சாதனையாளர்கள், அவர்களின் வாழ்நாளுக்குப் பிறகு சரியான வாரிசுகள் இல்லாமலும் பேணுவோர் இல்லாமலும் சுவடற்றுப் போகும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சிலர் வாரிசுகள் இல்லாமலோ, அல்லது இருக்கும் வாரிசுகளும் சொத்துகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ கருத்து வேற்றுமை, குடும்பப் பிரச்னைகள் உண்டாதல் போன்ற பல காரணங்களினால் காலத்தின் வேகத்தில் கரைந்து போயுள்ளனர். அப்படி தந்தை வழி போற்றிப் பேணும் தனயன்களை அதுவும் தமிழ்த் திரையுலகில் விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்களில் தலையாயதாய் அமைந்து இன்றும் நடிகர் திலகத்தின் புகழ் பாடிவரும் அவருடைய தனயன்களை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். அதே சமயம் அனைத்துக்கும் அவர்களே செய்யவேண்டும் என எதிர்பார்ப்பது சரியானதாக இருக்காது என்பது என் தனிப்பட்ட எண்ணம். அதுமட்டுமல்ல, நடிகர்திலகத்திற்காக சிலை வைத்த கலைஞரின் அரசு நிர்வாகமே இதையும் எடுத்து செய்திருக்க வேண்டும். மற்ற அரசு செயல்முறைகளையெல்லாம் கலைஞர் சொல்லும் வரை இவர்கள் செய்யாமல் இருப்பார்களா அல்லது நிறைவேற்றாமல் இருக்கிறார்களா. இது முழுக்க முழுக்க அரசு இயந்திரம் முனைப்பெடுத்து செய்ய வேண்டிய வேலை. யாருக்காகவும் கேட்க வேண்டியதில்லை. முன்னர் சிலை வைத்த தலைவர்கள், கலைஞர்களுக்கெல்லாம் இவ்வாறு தான் நடந்துள்ளதா என்பது தெரியவில்லை. அரசாங்க அதிகாரிகள் கலையுணர்வோடும் நடிகர் திலகம் என்கின்ற மாமனிதரிடம் உள்ளன்போடும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு தானாக நடந்திருக்க வேண்டிய காரியம் இது.
அதற்கு மேலும் உந்துதல் தேவைப்பட்டால் இதை செய்ய வேண்டியது ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற அமைப்புகள் ஆகும். அந்த வகையில் இவற்றுக்கு உந்துதல் செய்ய வேண்டியவர்கள் தங்கள் பணியை துரிதப் படுத்தினால் இவை காலாகாலத்தில் நடக்கும்.
மேலும் நமக்கு மிக முக்கியமாக பல பணிகள் நடிகர் திலகத்தின் புகழ் சேர்க்க நடக்க வேண்டியுள்ளன. முக்கியமானது மணி மண்டபம். அப்படிப்பட்ட பெரிய பெரிய காரியங்களின் போது அவர்களின் உதவி நிச்சயம் தேவைப்படும். அப்போது கேட்காமலே முன்வந்து செய்யக் கூடியவர்கள் நடிகர் திலகத்தின் புதல்வர்கள்.
அன்புடன்,
ராகவேந்திரன்
டியர் ராகவேந்திரன் சார்,
இந்நானிலத்தில், நமது நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், நமது நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர்களுக்கு மட்டுமே இருக்கின்ற மாபெரும் விசேஷ சிறப்பு சக்திகள் (SPECIAL VETO POWERS), குறித்தே திரு.ஜோ அவர்கள் எழுதியுள்ளார். நானும் அதனை ஆமோதித்துள்ளேன்.
அன்புடன்,
பம்மலார்.