Deleted.
Printable View
Deleted.
நான் எங்கும் ஓடவில்லை.
நான் வந்த புதிதில் போட்ட பதிவு. இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமே.
My possting in April- 2012.
Raghavendran Sir,
Please do not mistake me for my intervention.It calls for some explanation.As an ardent ,a born devotee of Acting God,I supported his later movies and felt happy about their successes and wished for his longevity as an actor.But here,we are talking about an acting God not a mortal.We are happy with his successes and proud to talk about it loudly to the world.(thats why I started my myth series)I feel that this thread is not to talk among ourselves but should serve as a future Documentary evidence and a kind of reference point for the youngsters to know about him.
NT remained a good actor till his Pooparikka varugirom ,no doubt,but he remained the best in the world from 1952 to 1974.(Thanga Padakkam as last).Barring Avanthan Manithan,Rojavin Roja,Deepam,Annan oru Koil,Naan Vazha Vaipen,Thunai,Mudhal Mariadhai and Thevar Magan where we could rejoice the glimpse of his adaption to the neo- cinema so called realistic.If someone wants to glorify mediocrity as a showpiece of his talence,sorry guys,I am not your associate.
I request all of you not to be over-enthusiastic to market the sub-mediocre Films of his(He did plenty in later part of his career)and unimaginative but good performances,you are not doing justice to present him as the best in the world.Let us talk about his Natural , controlled,versatile performances from 1952-1958,Stylised method acting from 1958-1965, and his free flowing &improvised , unique style of acting from 1966-1974&His extrodinary acting merging with young talence in Thunai,Mudhal Mariadhai and Thevar Magan at later years.
Despite my reservations,I chose some of his later movies for appreciation in my guidelines for movie selections.Dont think that a junior is trying to dictate terms but we should not lose track of our prime objective of introducing NT in proper perspective to the young minds.
Every creative genius has a shelf life for his creativity and beyond the creative life span they bask in the good will and past glory to cash on the past hard work during their productive Span. It happened to many great Novelists,Artists,Cricketers(Tendulkar) and let us accept this as a fact of life and go on.But our Acting God had the verve and Fire till his last breath and proved time and again to the young generation in later year movies also.
I only request you to abstain from certain Movies with better bench marks set by others(Same genre or theme) and obvious lack of congruence in Energy,Physique,agility,cheer in some of his later movies.We dont criticise but avoid glorifying it.
But Success or failure is not a criteria for our selection here but a class and watcheable presentation is the main objective.
வாசு சார்,முரளி சார்,
நீங்கள் என்னை நன்கு புரிந்து கொள்வீர்கள்,எனக்கு நடிகர்திலகம் மீது உள்ள மாறா பக்தியை புரிந்து, என் சொல்லில் செயலில் உள்ள நேர்மையை உணர்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
வாசு ,இனி தொந்தரவு தர மாட்டேன். உனது 4000 ஆவது முத்தை எதிர்நோக்கி ,அனைவரையும் போல ஆவலுடன் காத்திருக்கிறேன்.
what happened to 'Saraswathi Lakshmi'?
now Saruswathi Luxmi..
same or different?
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
There is always a better (private message or sending an email) option......... instead of using red color font and the largest possible font size and challenging like annamalai rajini :)
இன்னாய்யா இந்த திரிய்க்குவந்த சோதன நல்லா பதிவுபோட்டவுங்கள ஒரே ஆளு வைஞ்சி திட்டி ஊட்டுக்குஅனுப்சுட்டாரு ராகவேந்தறு முரலி வாசு இன்னோரு வாசு கண்னன் ரவி கார்த்திக்குன்னு அம்க்கலம்மா போய்கிட்டு இருந்த திரிய்யஊத்தி மூட்டாரு ஒருத்தர் எப்பிடி போய்கினு இருந்ததிரி ஒரே ஆளால ஊத்திமூடிகிச்சே புன்னியவான்நல்லா இருக்கட்டும் இந்தஆள உசுபிவிட்டுட்டு இதுக்கு ரெண்டுபேரு சைன்சப் வேற போடுராங்க நல்லவங்க பாவத்த கொட்டிகிட்டா இப்பிடித்தேன் ஆவும் திரிய்யக் காப்பாத்துங்கய்யோ
Ullaththil Nalla Ullam
https://www.youtube.com/watch?featur...&v=3k8ZqQ7Wmr0
இன்று பிறந்த நாள் காணும் திரு.சுப்பிரமணியம் ராமஜெயம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
My Hearty wishes to mr.Subramaniam Ramajayam.Many Many Happy Returns of the Day Sir.
happy birthday subramaniyam ramajayam sir
இன்று (13-11-2013) நடிகர்திலகம் சிலை சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருகிறது. நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பிலும் ரசிகர்களின் குரலை ஒலிக்க மூத்த வழக்கறிஞர் திரு.பிரபாகரன் ஆஜராகிறார்.
சிலை அதே இடத்தில் தொடரும் அளவிற்கு தீர்ப்பு அமையும் என்று நம்புவோம். நன்றி.
http://www.youtube.com/watch?v=QIzx7LW5EoY
My Hearty Welcome to Mr.Kiruba as I read his introduction.Looking for your valuable contributions.
Deleted.
நாமெல்லாம் இறைவனுக்கு நடமாடும் கோவில்கள்.நம் நடிப்பு தெய்வத்தின் நடமாடும் நினைவு சின்னங்கள். அவருடைய சிலைக்கு எந்த குந்தகமும் நேராது. தமிழர்கள் அந்த அளவு நன்றி மறப்பார்களா என்ன?
Dear Subramanyam Ramajayam Sir,
Wishing you many more happy returns of the day.
Regards,
R. Parthasarathy
Happy birthday Subramaniyam Ramajayam sir
Wishing & praying for success in Court case for NT's statue
Welcome Kiruba sir looking forward to your participation
Happy Birth day to Mr. Subramaniyam Ramajeyam Sir.. Happiness always
உங்களுக்கெல்லாம் நான் எப்படித்தான் புரிய வைப்பது? என் நெஞ்சை பிளந்து காட்டினால் அதில் நடிகர்திலகம் மட்டுமே தெரிவார். அந்த அளவுக்கு அவர் மேல் அதீத பக்தி கொண்டவன் நான். இன்றைக்கு கோர்ட் தீர்ப்பு வருகிறது என்று நேற்று பூரா தூக்கமில்லாமல் தவித்தவன். அவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள இயலாததால்,தனியாக இந்தியா ஒரு முறை வந்து சிலையை வணங்கி போனவன் நான். அவரை ஒரு குறிப்பிட்ட உலக தரத்தில் நிலை நிறுத்த விரும்பும் போது, சில தரமற்ற பதிவுகள் அவர் பெருமையை குலைப்பதாக உணரும் போது, கலங்கி துடிக்கிறேன். அதுவும் அந்த தெய்வத்தின் புகழுக்கு களங்கம் வர கூடாதே என்றுதான்.
என்னை இன்னும் இந்த திரி நண்பர்கள் புரிந்து கொள்ள மறுத்தால், நான் செலவழித்த நேரம் ,பட்ட பாடுகள் விரயமே.
இன்னும் என்னதான் செய்வது?சொல்வது?விரக்தியும்,வேதனையுமே மிஞ்சுகிறது.
நீங்கள் பக்தன் என்று தெய்வத்திற்கு தெரிந்தால் போதாதா கோபால் சார்? மற்ற பக்தர்களுக்கு என் தெரியவேண்டும்.?
மேலும் தெரியாததை தெரிந்தது போலவும், தெரிந்ததை தெரியாதது போலவும் காட்டிக்கொள்வது மனிதஇயல்பல்லவா?
"புரிந்தது புரியாதது;தெரிந்தது தெரியாதது அனைத்தும் அறிவோம் யாம்!" என்பது தெய்வத்தின் வாக்கல்லவா?
கவலையை விடுத்து, கடமையை தொடருங்கள்.
.
Mr Vasu Sir,
Awaiting your golden post. Come soon and give a fitting
reply those who are tarnishing the fame of NT.
Dear Gopal சார் - நீங்கள் நல்லவரா அல்லது கெட்டவரா என்ற கேள்வி ஏன் அடிக்கடி எழும்புகிறது ?? உங்கள் நடை , எளிமை , அலசல் எல்லாமே நீங்கள் NT யின் பால் தாங்கள் கொண்டுள்ள பக்தியை உலகுக்கு கண்டிப்பாக பறை சாற்றும் . நீங்கள் செலக்ட் பண்ணும் வார்த்தைகள் தான் மற்றவர்கள் மனதை மிகவும் புண் படுத்துபவைகளாக உள்ளன - நீங்கள் தான் 11th part யை அருமையாக ஆரம்பித்தீர்கள் - ஆனால் முடிவில் எழுதும் ஆர்வம் எல்லோர்க்குமே குறைந்துவிட்டது –
நானும் இன்னும் பலரும் இந்த திரியில் பங்கு கொள்ள செய்ய வைத்தவை
1. அருமையான தமிழ் நடை
2. எல்லோரும் ஒரு குடும்பத்தை சேர்த்தவர்கள் என்ற உணர்வு
3. யாரையும் யாருக்கும் மட்டம் செய்ய தெரியாது என்ற நம்பிக்கை
4. மற்றவகளின் மனதை புண்படுத்த தெரியாத நண்பர்கள்
5. NT யின் நல்ல குணங்களை தன் உரிமை யாக்கிகொண்ட பல நல்ல உள்ளங்கள் கொண்ட திரி
6. நல்ல ஆவணகள் கொண்ட திரி
7. புதியதாக வருபவர்களை எல்லோரும் சேர்ந்து வரவேற்கும் பண்பு
8. மற்ற திரிகள் அண்ணாந்து பார்த்து கொண்டு வியந்துகொண்டிருக்கும் திரி
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ---- ஆணால் இப்பொழுது மற்ற திரிகளுக்கு வடை பாயசம் சாப்பாடு கிடைத்ததுபோல் சில பதிவுகள் அமைந்துவிட்டன
நான் எது சரி எது தவறு என்று சொல்ல வரவில்லை - ஆனால் நம்முடைய வேகதிருக்கு கண்டிப்பாக தடை விழுந்துவிட்டது - இந்த அழகிய திரி , உங்களால் துவங்கப்பட திரி ஏன் இப்படி சோகமான ஒரு முடிவை தேடிகொண்டது என்று எண்ணும் போதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது . ராகவேந்திர சாரின் 5000 பதிவை எல்லோரும் ஒரு மனதாக பாராட்டினோம் - வாசு சாரின் 4000 பதிவுக்காக ஏங்கி கொண்டிருக்கிறோம் - உங்கள் பிறந்த தினத்தையும் பிராத்தனைகள் மூலம் ஆண்டவனிடம் சந்தோஷமாக வேண்டிகொண்டோம் - ஆனால் ஏன் சார் திரி இப்படி உடையவேண்டும் ? - நீங்கள் தான் உடைக்கிறீர்கள் என்று சொல்லவில்லை - உடை படுவதற்கு மறந்தும் நாம் ஒரு காரணமாக இருந்து விட கூடாதே என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இதை எழுதிகிறேன்.
உங்களை இதுவரை நான் பார்த்ததில்லை - பேசினதும் இல்லை - ஆனால் உங்கள் மீது ஒரு தனிப்பட்ட அன்பும் , மரியாதையும் , நீங்கள் துவக்கின இந்த திரி என்னிடம் உண்டாக்கிவிட்டது சேர்த்த கொஞ்ச நாட்களிலே .... அந்த உரிமையில் தான் இந்த பதிவை எழுதிகிறேன் - எல்லோரும் உங்களை போல எண்ண முடியாது - அவரவர் கருத்துக்கள் அவரவர்களுக்கு முக்கியம் - என்னை கூட நீங்கள் கேட்டிர்கள் - " உன் கருத்துக்கும் நட் க்கும் என்ன சம்பந்தம் என்று " நீங்கள் கலாயத்ததாகவே வைத்துகொண்டாலும் , எனக்கு நான் எழுதியது சரியாகத்தான் படுகிறது - சில பதிவுகளை பதிக்கும் முன் ஏன் நாம் பேசிக்கொள்ள கூடாது ? நாம் எல்லோரும் ஒரே தெய்வத்தின் பக்தர்கள் தானே - ஏது நமக்கு ஈகோ? - ஏது நமக்கு விரோதம் ?
சில படங்கள் நமக்கு பிடிக்கா விட்டாலும் மட்டவர்களுக்கு பிடித்திருந்தால் , நாம் அந்த பதிவுகளை படிக்காமல் சென்று விடலாமே ! நம் எண்ணங்களை பதித்து ஏன் மற்றவர்களை புண்படுத்த வேண்டும் - அழகாக ஓடிகொண்டிருக்கும் திரியின் வேகத்தை ஏன் குறைக்க வேண்டும் ? நாம் NT இடம் இருந்து கற்றுக்கொண்ட பல பாடங்களில் - மற்றவர்களை புண்படுத்த கூடாது என்பது தானே தலையான ஒன்று -உங்களுக்கு கோபம் வரும் போதல்லாம் - ஒரு பேப்பரில் கண்ணா பின்னா என்று எழுதி பிறகு அந்த பேப்பரை கிழித்துவிடுங்கள் - அதை பதிவு மட்டம் செய்யாதீர்கள் - நீங்களே பிறகு உணர்வீர்கள் - அந்த கோபம் தேவை இல்லாத ஒன்று என்று ----
There is a saying -" If you kick your pet in front of others , others may stone at it "- Our NT is always great !! and no one could match with him in the past - no one can in present and definitely no one in future - let us forget the indifference and take this thread forward with glory and pride .
அன்புடன்
Ravi
:smile2::smokesmile:
ரவி,
தங்கள் கருத்து எனக்கு புரிகிறது. இங்கு உள்ள முக்கால்வாசி பதிவர்களுடன் எனக்கு உயரிய நட்பு உண்டு. தற்போது வந்த பிரச்சினை என் ஈகோ சம்பந்த பட்டதில்லை. நான் இதில் தீவிரமாக இருந்து எல்லோரிடம் வாங்கி கட்டி கொள்ளும் போது,எப்படி என் ஈகோ உயரும்? நடிகர்திலகத்தை நான் மிக மிக மிக உயரிய பீடத்தில் ,எல்லா கடவுள்களையும் விட இன்னும் உயரமாக வைத்துள்ளேன். அவர் புகழுக்கு தகுதியில்லாத பதிவுகள் வரும் போது வெகுண்டு விடுகிறேன். (நான் அந்த பதிவு வேண்டாம் என்று நண்பர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.)சுடும் வார்த்தைகளை தவிர்க்கவே எண்ணுகிறேன். ஞான ஒளி அண்டனி போல கோபத்தில் என்னை மறக்கிறேன். உங்கள் பதிவு இதமாக உள்ளது.நன்றி.
http://tamil.oneindia.in/movies/news...ay-187304.html
என்னுடைய விருப்ப பாடகிகள் வரிசையில் என்றுமே முதலாக இருக்கும் சுசிலா அம்மாவின் பிறந்த நாள் இன்று. (78 வது)
கடந்த முறை எம்.எஸ்.வீ ஐயா அவர்களின் பேரன் திருமண வரவேற்பில்,தங்கள் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றது எனது மோட்ச வாயில்.
அம்மாவின் சிறந்த இருபது(Solo) என் பார்வையில்.....
1)சொன்னது நீதானா
2)எங்கே நீயோ நானும் அங்கே
3)ஒரு நாளிரவு பகல் போல் நிலவு
4) காதல் சிறகை காற்றினில் விரித்து
5)நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
6)மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம்
7)அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்
8)என்னை எடுத்து தன்னை கொடுத்து
9)அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
10)சொல்லவோ சுகமான கதை சொல்லவோ
11)இதய வீணை தூங்கும் போது
12)பெண் பார்த்த மாப்பிள்ளைக்கு கண்ணீரும் தெரியவில்லை
13)கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ
14)மனம் படித்தேன் உன்னை நினைப்பதற்கு
15)நீராடும் கண்கள் இங்கே
16)என்ன என்ன வார்த்தைகளோ
17)மாலை பொழுதின் மயக்கத்திலே
18)காதல் எனும் வடிவம் கண்டேன்
19)உன்னை நான் சந்தித்தேன்
20)பார்த்த ஞாபகம் இல்லையோ
32 ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே
33 நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
34 ஓராயிரம் மேடையில் ஆடினாள் (சுசீலாம்மா தானே)
35 அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வீழ்ந்தது..
(யோசிச்சுப் பாத்தா எல்லாம் தேவிகானாஸ்!! - ஒன்றைத் தவிர ம்ம் கண்ணா என்னவோ போடா :) )
தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்.
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததிலலை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள் நாங்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர், நடிப்புக்கு நடிப்பு சொல்லிகொடுக்ககொடிய, தமிழை வாழ வைக்க கூடிய நடிகர் திலகம் நம்முடன் இருந்தார் அவரால் தமிழ் வளர்ந்தது , அவர் வளர்த்த தமிழால் , தமிழ் நாடு தன் மதிப்பில் உயர்ந்தது - இன்று பேசும் த்மில் கொலை வெறியாக தமிழ் நாட்டை சுட்டு எரித்து கொண்டிருக்கின்றது .
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
• இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.
:):smokesmile:
The tile of my above posting was cut short - it should be read as " அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ? ஒரு நண்பனின் எண்ண ஓட்டங்கள் "
Ravi
:):smokesmile:
//இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.// நன்னாவே எழுதியிருக்கேள் ரவி..அதே சமயம் அதை எந்த ஊடகத்துல எழுதியிருக்கேள்னு பார்க்கறச்சே (வலை) - சுசீலாம்மா நினைப்பு வருது - நினைத்தால் சிரிப்பு வரும்...:)
கலாய்க்காமல் ,துணை பதிவு போட்டு விடுகிறேன்.(இருக்கும் ஒரே நண்பரையும் பகைத்தால்.....)
...இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் ஆக போகும் நடிகர்திலகம் படத்துக்கு, குடும்பத்தோடு பிளான் போட்டு திருவிழா போல் தியேட்டர் செல்லும் மஜா.
ஆதிராம் சார்..ஹி ஹி.. :) ஆனா மண் ஒட்டலை
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்....
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
இப்படித்தான் NT யின் சில படங்கள் - தனிப்பட்ட முறையில் நல்ல படங்களாக இருப்பினும் சிலர் கண்ணோட்டத்தில் அவைகள் தாழ்ந்து விடுகின்றன -
பார்வைகள் பல விதம் ஆனால் பக்தி ஒன்றுதான் என்று தெரிய படுத்தவது அவசியமாக போய் விடுகின்றது. Even the intention is good , others look at the actions only . Actions also need to be equally good . Let this thread gain the glory that got hidden in some postings
:):smokesmile: .
ஹோ வென்று பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது வெள்ளம் அந்த ஆற்றில்.. கரையில் இருந்தவர்கள் மூவர்..குரு, அவரது சீடன், பின் பார்க்கப் பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டுகின்ற அழகுடன் -கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒந்தொடி கண்ணே உள - என திருவள்ளுவர் இந்தப் பெணணைத் தான் பார்த்து எழுதியிருப்பாரோ என்பது போன்ற - ஜகஜ்ஜோதியான மிகப் பேரழ்கான இளம்பருவம் பூத்துக் குலுங்கும் இளம் பெண்..ம்ம்
*
அந்த இளம்பெண் குருவினை வணங்கி : ஐயன் மீர்.. இந்த ஆற்றை நான் கடக்க உதவுவீர்களா..” எனக் கேட்க கருணை கொண்ட அந்த குரு அதற்கென்ன பெண்ணே என் முதுகில் ஏறிக் கொள்.. நான் நீச்சலடித்து அக்கரையில் உன்னை விடுகிறேன் என்றார்..
*
குரு ஆற்றில் பாய பெண் அவர் முதுகில் அமர அவர் நீச்சலடித்தார்..பின்னால் சீடனும் கஷ்டப் பட்டவண்ணம் நீந்தி அக்கரையை அடைய, அந்த ப் பெண் குருவிடம் நன்றி சொல்லிச் சென்று விட்டாள்..
*
குருவும் சீடனும் தங்கள் ஆஸ்ரமத்திற்குச் சென்றனர்..வழி முழுவதும் சீடன் பேசவில்லை.. இருவரும் மாற்றுடை அணிந்து வகுப்பறைக்கு வந்த பின்பும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் சீடன்..
*
குரு கேட்டார்..”வாட் ஹேப்பண்ட் மை சைல்ட்” சிஷ்யன்,”ஓ..லார்ட்.. நீங்கள் வயதில் பெரியவர்கள், அறிவிலும்..அதுவும் துறவு வேறு கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆனால்..” ஏவி.எம். ராஜனுக்கு அடைப்பது போல் சீடனுக்கும் நெஞ்சை அடைத்த்து..”எப்படி அந்த பியூட்டிஃபுல் யங்க் லேடியை உங்கள் முதுகில் ஏற்றிக் கொண்டு வந்தீர்கள்..தவறல்லவா.. இது முறையோ இது தகுமோ இது தரும்ம் தானோ..” எனக் கேட்டான்..
*
குரு மென் சிரித்து.”ஓஹ்..மை பாய்.. இதானா உன் டவுட்..ஆக்சுவல்லி ஸ்பீக்கிங்..அந்தப் பெண்ணை ஆற்றின் அக்கரையிலேயே நான் இறக்கி வைத்து விட்டேன்.. நீ தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறாய்” என்றாராம்..
**
அதுபோலவே ரவி சார் – என்.டியைப் பற்றியும் இந்த இழையைப் பற்றியும் குட்டிக் கதைகள் வாயிலாக நீங்கள் எழுதும் விளக்கங்களை குருவைப் போல எங்களால் இறக்கி வைக்க முடியவில்லை..மனதில் சுமந்து கொண்டே இருக்கிறோம்.. ! :)
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
C. Ramachandran.
Dear Subramaniam Ramajayam Sir,
Wishing you tons of happiness and joy on your special day. Happy Birthday !!!!!!
Anand
Dear Subramaniam Ramajayam Sir,
Many more happy returns and may god bless you with good health and peace .
Ravi
:smile2::smokesmile:
Dear Chinna Kannan Sir
பலத்த மழை பெய்து ஓய்ந்தால் போல உள்ளது நமது திரி - கோபால் சாரின் அலசல் நடை எங்கே? ராகவேந்திர சாரின் அற்புத படைப்புகள் எங்கே? 5000 பதிவுகள் 5 கோடியாக வேண்டும் என்று எல்லோரும் வாழ்த்திணோமே - அந்த மை இன்னும் உணரவில்லையே - கார்த்திக் சாரின் Item Girls களின் Personal life போல திரியும் வெரிசிண்டு உள்ளதே - முரளி சாரின் தமிழ் நடையும் , வாசு சாரின் உழைப்பும் இந்த, KC சாரின் பாராட்டுக்களும் திரியில் மீண்டும் கிடைக்க வேண்டும் - இந்த உள் அர்த்தத்தில்தான் " அந்த நாட்கள் மீண்டும் வந்திடாதோ " என்று என் ஆதங்கத்தை பதித்தேன் - உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி - இந்த திரியில் மீண்டும் பல கைகள் தட்டும் சத்தம் கேட்கவேண்டும் - மீண்டும் கூடுவோம் , கூட்டு பிராத்தனையில் நிச்சயம் பலன் கிடைக்கும் .
Ravi
:smile2::smokesmile:
சங்கிலி
சங்கிலி எனக்கு ரொம்பபுடிச்ச ஆக்சன் படம்.சிவாஜிக்கு ரெண்டு வேஷம்.போலிஸ் சங்கிலி மொரட்டு சங்கிலி அப்படின்னு அறுமையாநடிப்பாரு.வில்லன் நம்பியாறு போலீஸ் சரவணன கொன்னுடுவாரு.போலிஸ் சரவணன் மாதிரி இருக்கற கைதி சங்கிலிய சரவணன் மாதிரி மாத்தி சுந்தரராசன் வில்லன் கூட்டத்த ஒழிப்பாரு.போலிஸ் சரவணன் கம்பீரம் காட்டுவாரு,அவரு வில்லன் நம்பியாரை கண்டு புடிச்சதும் லாரி ஏத்தி முதல்லே அவுர கொன்டுவாங்க.பாவமா இருக்கும்.அப்புறம் ஜெயில்ல இருக்கிற மொரடன் சங்கிலி சரவணனா மாருவாறு.ரொம்ப ஜோரா மொரடனா நடிப்பாரு.ஜெயில்ல சங்கிலி கட்டி அவரு இழுத்துவரும் போது ஜோரான உறுமுற நடிப்பு அப்புறம் போலிஸ்ஸ்டேஷன்ல சரவணன் மாறி மாத்தி நடிக்கறது ஜம்முன்னு இருக்கு.சின்னப் பையன் மாறி ஜோரா சண்டை போடுவாறு சரவணன் குழந்தகிட்ட சங்கிலி பாசம் காட்றது ரொம்ப நல்லாஇருக்கும்.சிரிபிரியா கூட கூல்கிளாஸ் போட்டுகிட்டு சிவாஜி அழகா இருப்பாரு.ஒரு டூயட்பாட்டு ஸ்டையிலா இருக்கும்.பிரபு முதல் படம் அப்பாவும்புள்ளையும் செமத்தியா ஒரு சண்ட போடுவாங்க.இங்கிலீஷ் படம் மாறி செட்டுல்லாம் பெருசா போட்டு இருப்பாங்க.போலிஸ்,முரடன்,அந்த முரடனே மறுபிடி போலிஸ்னு நிறய சிவாஜிக்கு நடிக்க சான்சு.அவரு நடிப்புக்கு கேக்கவா வேணும்.போலிஸ் டிரஸ்ல நல்லா இருப்பாரு இந்தி வில்லன் கூட பேருதெரியல மண்டபத்துல போடுற பைட்டு ஆத்தாடி அருமை படம் சுருசுருன்னு வேகமா ஓடும்.இந்தபடம் நல்லாதானே ஓடுச்சு.மொததரம் எழுதி இருக்கேன்.பக்கவீட்டு பொண்ணு ஹெல்ப் பண்ணுச்சி.தப்பு இருந்தா பொருத்துக்குங்க.கொஞ்சகொஞ்சம்மா திருத்திக்குறேன்.ரொம்ப புடிச்சபடம்.இன்னொன்னு எல்லாம் நெறையகதையா எழுதிரீங்க.சிவாஜியப் பத்தி ஒன்னையும் காணமே நெறையா வெட்டியாயில்ல இருக்கு.சிறுவர் மலர் படிக்கிரமாறி இருக்கு.சொந்தப்பெருமையும் சைன்சப் பதிவுமாத்தான் இருக்கு ஒரே போர்ர் அடிக்குதுப்பா.யாராச்சும்நல்லதா ஒருபதிவு போடுன்க.எனக்கும் வரல்ல
கிருபா சார்,
உங்கள் பதிவு அசத்தல். நடையை மிகவும் ரசித்தேன்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.