https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e6&oe=59B1E57A
Printable View
நடிகர் திலகத்தின் வெற்றிச் சாதனைகளோடு ஒப்பிட முடியாமல் போனவர்கள் ஒரு கட்டத்தில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டனர் அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சிவாஜி யாருக்கும் உதவிகள் செய்யாதவர் என்பது,
உண்மையிலேயே அந்தப் பொய் பிரச்சாரம் இன்று வரையிலும் நிலைத்து நிற்பதை நம்மால் காணவே முடிகிறது, சாமான்யமானவன் பொய்யை எளிதில் நம்பி விடுகிறான், அது தேர்தல் வரையும் ஊடுருவி நாட்டையும் சீரழித்து விடுவதை நாம் கண்டு விட்டோம்,
இனைப்பில் நடிகர் திலகம் அளித்த உதவி பற்றிய நாளேட்டின் செய்தி,
அடுத்த படம் மெரினாவில் உள்ள சிலை, நடிகர் திலகத்தின் சிலை பெற்று உள்ள சிறப்பு உலகின் எந்த தலைவருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...70&oe=59B21BD9
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e8&oe=59751710
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரின் , சமீபத்திய, " தங்கப்பதக்கம் " தமிழ் திரைப்படம் தொடர்புடைய ஒரு கருத்தினை கண்டபோது, சுவைமிகுந்த விறுவிறுப்பு நிறைந்த - அந்த திரைப்படத்தினை மீண்டும் காணும் ஆவல் கொண்டு...கண்டு ரசித்தேன்... ரத்தமும் சதையுமாக ஒரு காவல் துறையின் வீரமிக்க, கடமை தவறாத காவல் துறை அதிகாரியாக நடிகர்திலகம் வாழ்ந்த ஒரு அற்புதமான திரைப்படத்தினை பார்த்து ரசித்து சுவைத்தேன், படத்தின் காட்சிகளின் சிறப்பினில் என்னை மறந்தேன்...என்பதே உண்மை.
இன்றைய காவல்துறையினரை உயர்வு படுத்தி.. கதையின் நாயகனை கடமை வீரனாக உயர்வு படுத்தி.. நாயகனை பிரம்மாண்டப்படுத்தும், காவல் துறையினரை வீரமிக்கவர்களாக...துணிவுடைய சிங்கங்களாக உருவகப்படுத்தும்... சமீப காலப் படங்களான, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, மூன்று முகம், காக்கி சட்டை, சாமி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு.. சிங்கம் 1 -2 -3 போன்ற... படங்களுக்கு அடித்தளமிட்ட,
அந்த காவியத்தினை ஆம்..." தங்கப்பதக்கம் " எனும் காவல்துறையினரின் பெருமையினை 1974 - ஆம் வருடத்திலேயே உயர்த்திப்பிடித்த நடிகர்திலகத்தின்..ஒப்பற்ற காவியங்களில் ஒன்றான... சிறந்த படத்துக்கான தங்கப்பதக்கம் வழங்கி இருக்கவேண்டிய...ஒரு திரைப்படமான... அந்த படத்தினை காணும்போது மெய்சிலிர்த்தது.
அகமகிழ்ந்தேன்...கதையின் போக்கினில் கரைந்து போனேன்...
இப்படியும் இந்த கதாபாத்திரத்தினை மனதுக்குள் வடிவமைத்து கதையினை உள்வாங்கி...நடிப்பினை வெளிப்படுத்த இயலும் எனும் கலைக்குரிசிலின் திறம் கண்டேன்.. ஆஹா... என்ன ஒரு அருமையான நடிகர் நடிகையரின் கூட்டணி...இதனை நடிப்பு என்று கூறவே இயலாதே.. கதாபாத்திரங்கள் அத்துணை பேரும் கண்முன்னே வாழ்ந்து காட்டி இருந்தனர்.
கடமையினை தனது உயிராக கருதும் ஒரு காவல் துறை அதிகாரி, அன்பான மனைவி, அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை..
குடும்பத்தினர் மீது மட்டற்ற பாசம் கொண்டிருந்தாலும்... எந்த நிலையிலும் தனது கடமையினை விட்டு கொடுக்காத அந்த இரும்பு மனிதருக்கு வாய்த்த மகனோ...ஒரு திருடனாக, மாறி எதிரே நின்று சவால் விட...கடமையா, குடும்பமா, மகன் என்ற பாசமா ? என்ற கேள்விக்கான விடையே இந்த திரைப்படம்.
சிறுவயதில் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதை அப்பா கண்டிக்க, கோபமுற்ற மகன் வீட்டில் பணத்தினை திருடிக்கொண்டு ஓடி மும்பை சென்று அங்கே ஒரு திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறுவர் சீர்திருத்த சிறையினில் அடைபட்டு தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆகியும் சிறையில் பழக்கமான நண்பர்கள் துணையுடன் மாபெரும் கொள்ளை செயல்களை நடத்தி தந்தைக்கே சவால் விடும், சவடால் காட்டும் அற்புதமான பாத்திரம், வில்லன் கதாபாத்திரத்தினில் ஸ்ரீகாந்துக்கு இந்தப்படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம்...மறக்க இயலாத ஒரு கதாபாத்திரம்... நடிகர் திலகம் எனும் இமயத்தினை தைரியமாக எதிர்கொண்டு...வித்தியாசமான முறையில் தனது பங்களிப்பினை சிறப்பாகவே செய்துள்ளார்...
பாசத்துக்குரிய ஒரே மகனான ஸ்ரீகாந்துக்கு பரிந்து பேசுவதா...நியாயத்துக்கு நேர்மைக்கும் காவலனாக இருக்கும் பிரியத்துக்குரிய கண்ணின் மணியான கணவனுக்கு துணையாக நிற்பதா என்று...பாசப்போராட்டத்தில் வென்று காட்டியுள்ளார் கலையரசி K.R. விஜயா அவர்கள்... அவரின் நடிப்பும் கதறும் கதறலும்...நம்மை கலங்க வைக்கிறது...
இந்தப்படத்துக்கான வெற்றிக்கு கதை வசனம் மிகப்பெரும் பலம் என்றே கூற வேண்டும். காட்சிக்கு காட்சி...கைத்தட்டல்களை பெற்றுத்தரும் வகையிலும் நடிகை நடிகையர்களுக்கு பெயர் வாங்கி தரும் வகையிலும் ரசிகர்களின் மனதில் வேல் போல பாயும் வண்ணம் கூரான வசனங்கள்.. இன்றைய இயக்குனர் மகேந்திரன் அந்த காலக் கட்டத்தினில் வசனகர்த்தா... கதைக்கேற்ப பொருத்தமான வசனங்கள் படத்தின் விறுவிறுப்பினில் முக்கிய பங்கேற்கும் வண்ணம் அமைத்துள்ளார்.
படத்தின் ஆரம்பத்திலேயே லேட்டாக வீட்டுக்கு வரும் சௌத்ரியை, கே.ர்.விஜயா. ஏன் லேட்டு என்று உரிமையுடன் கேட்டு, போலீஸ்காரன்.. ன்னா ஆயிரம் வேலை இருக்கும் வீட்டுக்கு சரியான நேரத்தில் வரமுடியுமா...என்று வெடிக்கும் கணேசனை,
ஷூ...இது..போலீஸ் ஸ்டேஷனும் இல்லை.. நீங்க இப்போ இன்ஸ்பெக்டர்...ம் இல்லே ...ஒழுங்கா..கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க... மொதல்ல யூனிபார்மை கழட்டிட்டு வாங்க..என்று அதட்டி...விட்டு, ...
மீண்டும் கே.ஆர். விஜயா...கோபமாக பேசுவதும்... யூனிபார்மை கழட்டியதும், சௌத்திரி, ஒரு கொலைகாரனை பிடிச்சேன்...அவன்கிட்டேர்ந்து ஸ்டேட்மென்ட் வாங்கறதிலே கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... என்று... சாந்தமாக பதிலளிப்பதும்...அப்படியே...அந்த காட்சி, இருவருக்குமான கிண்டலுடன் கூடிய காமெடியாக மாறி, பிறகு பாசத்துடன் கூடிய உருக்கமான காட்சியாக மாறுவதுவும் ரசமான காட்சி.
அதைப்போல வேறொரு காட்சியில் ஜெகனுக்கு முதலிரவுக்கு அலங்காரங்கள் அனைத்தையும் செய்து விட்டு...பார்த்தால்..அவர்கள் உங்கள் அறையில் படுத்து தூங்கி விட்டார்களே...என்ற இடத்தினில் உள்ள ஜனரஞ்சகமான காட்சிகள்..மறுநாள் காலையில்... முகத்தில் குங்குமத்துடன் சிவாஜி படுக்கையில் இருக்க காபி கொண்டு வரும் பிரமிளா...பார்த்து சிரித்துவிட்டு ஓட...K.R. விஜயாவிடம்...என்னது இது...என்று விபரம் கேட்டுவிட்டு...ஐயோ..கர்மம்..கர்மம் மானமே போச்சு... எவ்வளவு இயல்பான காட்சிகள்...
கணவன் மனைவியாக நடிகர் திலகம் மற்றும் விஜயாவின் நடிப்பு வெகு அன்யோன்யம், மிக இயல்பாக நடிப்பு என்று கூற இயலாதவண்ணம் அற்புதமான பெர்பார்மன்ஸ் .
வழக்கம் போல நடிகர் திலகத்தின் படங்களில் லட்டு மாதிரியான கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு கலக்கும் மேஜர் சுந்தர ராஜன், V.K. ராமசாமி போன்றோரின் கதாபாத்திரங்களும் அவர்களால் மிகவும் அருமையான முறையில் கையாளப்பட்டு இருக்கிறது..
நான்கே பாடல்கள் ஆனால் நான்கும் நான்கு முத்துக்கள் என்றே கூறவேண்டும். இசையமைப்பும், பாடல்களும் பாடல் வரிகளும், படமாக்கிய விதமும், காட்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போன்ற நடிகர் திலகத்தின் நேர்த்தியான அங்க அசைவுகளும், ஆடும் ஸ்டைலும், முக பாவனைகளும் நெஞ்சை அள்ளுகிறது... பாடல் காட்சிகள் படத்தின் வேகத்துக்கு தடை என்று கூற இயலாது...காட்சியோடு அத்துணை நேர்த்தியாக பொருந்தி உள்ளன...அதுவும் மெல்லிசை மன்னர் புகுந்து விளையாடி உள்ளார்..காவிய வரிகளை தந்து பாடல்களை நம் மனதில் பதிய காரணமானவர் காவிய கவிஞர்... கண்ணதாசன் அவர்கள். பாடல் வரிகளுக்கு அவ்வளவு அழகாக உயிர்கொடுக்கும் பணியினை செய்தவர் பாடகர் திலகம்...T.M . சௌந்தர ராஜன் அவர்கள்.. அவருடன் துணைக்கு தேன் குரலரசி P.சுசீலா அவர்கள்.. தத்தி செல்லும் முத்து கண்ணன் சிரிப்பு...பாடலுக்கு திருவாளர் சாய்பாபா அவர்களும் கானக்குயில் வாணி ஜெயராம் அவர்களும் குரல் கொடுத்து சிறப்பித்துள்ளனர்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் பாடல் காட்சி...
இந்தப்பாடல் ஆரம்பிக்கும் சமயம்...நடிகர் திலகம்..வெகு இயல்பாக ஜோக்கடித்துக்கொண்டு..மிக ஜாலியாக மனைவியை கலாய்த்துக்கொண்டு இருப்பது போல காட்சி அமைந்திருக்கும்...பாடலின் முடிவில் வரப்போகும் அதிர்வினை மனதில் இருத்தியே...இப்படி அமைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
ஒரு தலைசிறந்த நடிகரிடம்...எப்படி எல்லாம் காட்சிகளை வைத்து அவரின் திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார் பாருங்கள்...ஒவ்வொரு காட்சியும் அவரின் ஒவ்வொரு பரிமாணத்தினை வெளிப்படுத்தும் வண்ணம் அமைத்துள்ளார்.
ஒரு பெரிய பொறுப்பில் உள்ள காவல் துறை அதிகாரியின் அந்த கம்பீரமும், நகைச்சுவை உணர்வும் கொண்ட கலவையாக காட்சியளித்து பாடலுக்கு நடனமாடுவதில் கூட...அந்த கண்ணியம் குறையாது...தனக்கே உரித்தான ஸ்டைலுடன் ஆடுவது அவருக்கு மட்டுமே உரித்தான பாணி. அவர் பாட கேட்கும்போது... K.R..விஜயாவின் அந்த வெட்கத்துடன் கூடிய நாணம்...ஆகா...அற்புதம்... காட்சிக்கு எவ்வளவு பொருத்தமாக வரிகளை போட்டிருக்கிறார் பாருங்கள்...
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் அன்புமணிவழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க எங்கள் வீடு கோகுலம் ;
என் மகன் தான் கண்ணனாம் தந்தை வாசுதவனோ
தங்கமான மன்னனாம்
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் கொண்டது
பிள்ளைச் செல்வம் என்னும் வண்ணம கண்ணன் பிறந்தான்
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் என்னும் பேரைக் கண்ணன் வளர்ப்பான்
வெள்ளம் போல ஓடுவான் வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான் கண்ணன் என்னைத் தேடுவான்
மாயம் செய்யும் மகன் வந்தது ஆயர்பாடி பயம் கொண்டது
அந்தப்பிள்ளை செய்யும் லீலை நான் அறிவேன் இந்தப்பிள்ளை
நலம் கொள்ளவும் என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து நான் வளர்த்தேன் (நல்ல)
கோலம் கொண்ட பாலனே கோவில் கொண்ட தெய்வமாம்
தாயின் பிள்ளைப் பாசமே தட்டில் வைத்த தீபமாம்
பாசம் என்று எதைச் சொல்வது பக்தி என்று எதைச்சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் எங்கும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா (நல்ல)
படத்தினில் என்னை கவர்ந்த இடங்கள் பல உண்டு...
மிகப்பெரும் ரவுடியாக ஆரம்பத்தினில் வரும் மேஜரை...பண்ணையாராக/ மைனராக வரும் மனோகர் ஆகியோரை சண்டையிட்டு கைது செய்யும் ஸ்டைல் , அவர்களை எதிர்கொள்ளும் விதம்...கிண்டலான அந்த பேச்சு... போகிற மாட்டை போக்கில் விட்டு பிடிப்பது போல மனோஹரை வளைத்து கைது செய்து கொண்டுசெல்லும் லாவகம்..
அந்தந்த இடங்களிலும் பொருத்தமான வசனங்கள்... ஜெகனை கைது செய்து அழைத்து செல்லும் காட்சியில்
அப்பாவும் மகனும் சவால் விட்டுக்கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான அந்த காட்சி...
ஜெயிலில் இருந்து திரும்ப வந்ததும் ஜெகன் தனி வீடு பார்த்துக்கொண்டு போக முயலும் அந்த காட்சிகள்...
வேறொரு காட்சியினில் இரும்பு மனிதராக கண்டிப்பு, கறார், பேர்வழியாக இருக்கும் சௌத்ரி...தீபாவளியன்று...வெடி வெடிக்க அஞ்சுவதும்...மனைவி வெடிக்கு நெருப்பு வைக்க போகும்போது...இவர்...பயந்து...பதறுவதும்...ரசமா ன காட்சிகள்.
குடும்ப நண்பர் ராமசாமியின் அலுவலகத்துக்கு சென்று...அவரறியாமல் வேலைக்காரனிடம் இருந்து காபியை வாங்கிக்கொண்டு வைத்துவிட்டு...அப்போதும் அவர் கவனிக்காமல் பின்புறம் வந்து தோளை பிடித்து விட கூற...இவரும் வந்து தோளை பிடித்து விட்டு...க்கொண்டு... ஷூ காலால் ஓங்கி ஒரு உதை விட்டுக்கொண்டே... உரிமையுடன் பேசும் பாங்கு... வீகேயாருடன் உள்ள காட்சிகள் அனைத்துமே...இருவரின் இயல்பான உரிமையுடன் கூடிய நண்பர்களாக நடிக்கும் நடிப்பும் காண்பதற்கு வெகு அழகு...
சுமைதாங்கி சாய்ந்தால் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அந்த துயரத்துடன் கூடிய முகபாவமும் நடிப்பும், மனைவியிடம் காட்டும் அன்யோன்யமும்...பாசமும் நெஞ்சை அள்ளும்... காட்சியினை படமாக்கிய விதமும், பாடலினை இவர் உச்சரிக்கும் நேர்த்தியும்...வெகு.. அருமை.. மனிதர் எந்த கோணத்தில் பார்த்தாலும் அழகுதான்...கம்பீரம்தான்.
சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
மணித்தீபம் ஓய்ந்தால் ஒளி எங்குப்போகும் (சுமை)
சிரித்தாலும் போதும் தெய்வங்கள் கூடும்
சிலைபோலச் சாய்ந்தால் கலை எங்கு போகும்
குலமங்கை கூந்தல் கலைந்தாடலாமா
மலர்சூடு கண்ணே மணவாளன் முன்னே (சுமை)
மணமாலை கொண்ட மதுரை மீனாட்சி
நடமாட வேண்டும் நான் தேடும் காட்சி
அலமேலு மங்கை துணை உண்டு கண்ணே
அலங்கார மஞ்சம் நிதம் காக்கும் உன்னை
இந்தப்பாடல் காட்சி காண..க்.. காண திரும்ப பார்க்கத்தூண்டும் நடிப்பு...அற்புதமான முகபாவம்...தனது பிரியம், நேசம், காதலுக்குரிய துணைவி... எழ இயலாமல் அமர்ந்த சூழலில் அவரை வைத்து வீல்சேரில் தள்ளிக்கொண்டே சோகத்தினை நெஞ்சிலே சுமந்து...உணர்வுடன் பாடும் காட்சி காணும் அனைவரையும் கலங்க வைக்கும்.. டிஎம்மெஸ்ஸின் குரல் மிகப்பெரும் பிளஸ் பாயிண்ட் இந்த காட்சிக்கு...
ஜெகன் வேலை பார்க்கும் வங்கியில் பணம் திருடு போய்விட்ட காட்சியில் உள்ள வசனம்...நச் ...ரகம்...
மிஸ்டர் ஜெகன்நாத், விசாரணை முடியற வரைக்கும் எங்கேயும் வெளியூர் போயிட மாட்டீங்களே...
எங்க அப்பாவும் அம்மாவும் எம்மேல ரொம்ப பிரியம் உள்ளவங்க சார்...வெளியூருக்கு எங்கேயும் என்னை தனியா அனுப்ப மாட்டாங்க சார்.
ஆனா...வேலூர் போணும்னா...தனியாத்தான் போகணும்....
மேஜர் சுந்தர் ராஜனுக்கு அற்புதமான வாய்ப்புகள்.
நடிகர் திலகத்தின் படங்களில் கிடைக்கும் இதிலும் நடிப்பதற்கு அற்புதமான வாய்ப்புள்ள இடங்கள் பல. குறிப்பாக தன் மகள், சவுத்ரி வீட்டு மருமகளாகி உள்ள சூழலில் அவர் வீட்டுக்கு வந்து பேசும் காட்சிகள்...மருமகனுக்கு அறிவுரை கூறும் இடம், மருமகனை காப்பாற்ற தான் குற்றத்தினை ஏற்றுக்கொண்டு சரணடையும் இடம்.. என்று அழகான வாய்ப்புகள்...அத்தனை இடங்களிலும் வெளுத்துக்கட்டுகிறார்.
சோ அவர்களின் காமெடி படத்துக்கு மிகப்பெரும் பலமே...படம் முழுவதுமே..அன்றைய அரசியலை தைரியமாக விளாசி இருக்கிறார்.
மீட்டிங்கில்...
அமெரிக்காவையும்..ஜெர்மனியையும் எச்சரிக்கிறேன்...என்னிடம் விளையாடாதீர்கள்...
நான் மனது வைத்தால் உங்கள் நாடுகளில் பூகம்பம் வெடிக்கும்...
மீட்டிங்கில்...ஒரு கிழவியை மேடைக்கு கொண்டுவந்து தாய்க்குலமே...தாய்க்குலமே.. என்று கட்டிப்பிடித்து கொண்டு போட்டோ எடுத்து முடித்ததும்...டேய்...கிழவியை நவுத்துடா...இங்கே நின்னுட்டு கழுத்தறுக்குது...
கையூட்டு வாங்கும் அரசியல் வாதியாகவும், நேர்மையான கான்ஸ்டபிள் ஆகவும் இரட்டை வேடத்தில் பின்னி இருக்கிறார். அன்றைய காலகட்டத்தினில் எம்ஜியார், கலைஞர் இருவரையும் அரசியல் ரீதியாக அவர்களின் அணுகுமுறைகளை மிக தைரியமாக வாரி விட்டுள்ளார். அவர் பகுதிக்கான வசனங்கள் நிச்சயம் அவருடையதுதான் போலும், அவர் வருகின்ற காட்சிகள் அத்தனையும் சர வெடிதான். உதவிக்கு சுருளி ராஜன் வேறு.
சுருளி, அண்ணே..நம்பாளு ஒருத்தரு... எதிர்க்கட்சி நண்பரோட...கொஞ்சம்..தகராறு... தம்பி..கொஞ்சம் மில்லில இருந்துருக்காரு...
சண்டைலே... கத்தியால வயித்துல கிழிச்சுருப்பாரு..போல இருக்கு
குடல் வெளியே வந்துருச்சாம்..
நியாயமா பாத்தா..வெளியே வந்த கொடலைதான் ஜெயிலுக்குள்ளே போட்டிருக்கணும்...
எங்காளு ஒருத்தர் காரை ஏத்தி ஒரு குழந்தைய.. கொன்னுட்டாராம்...
கொழந்தை ஸ்பாட்டுலே...யே செத்து போச்சாம்...
இதைப்போய் ஒரு பெரிய கேசா..எடுத்துட்டு..யாரோ கான்ஸ்டபிள் சுந்தரமாமே எங்க ஆளை பிடிச்சு உள்ளே போட்டுட்டாராம்..
அப்பாயிசம்னா.. என்னன்னு தெரியுமா...ஒனக்கு...
கொழந்தை இருக்கா..செத்து போச்சே...
சாகலே...சாகலே...இதோ பாருங்க..செத்து போன குழந்தையோட தகப்பன்
தன்னோட கொழந்தை சாகலைன்னு எழுதிக்கொடுத்த லெட்டர்...
எங்.. காள .. வெளியே விட்டுட்டீங்கன்னா..எல்லாருக்கும் நல்லது...
என்ன சார் வெளயாடுறீங்களா...?
காரியம் ஆனா நாங்க விளையாட மாட்டோம்..காரியம் ஆகலைன்னாதான்..விளையாடுவோம்...
அட செத்துப்போன குழந்தையாவது...கண் முழிச்சு இதுதான் எங்கப்பான்னு சொல்லுதா..அதுவும் கெடயாது... நீங்க ஒரு நியாயத்துக்கும் கட்டுப்படாம போனா எப்புடி...
அப்பாயிசம்னா..தெரியுமா...ஒனக்கு...
என்ன சார் ஒரே அடியா குழப்பறீங்க...
அதுதான்...அப்பாயிசம்...
தாய்க்குலமே...என்ன அப்புடி கேட்டுட்டீங்க..ஒருவேளை ..அவங்கப்பா..நான் திரட்டுற நிதிக்கு அவரால முடிஞ்ச ஏதாவது... குடுத்தாருன்னா....
இந்த நாட்டுலே..ஆயிரக்கணக்கான பேரு நாட்லே கிளிஜோசியம் பாக்குறாங்க...கிளி இல்லாம கஷ்டப்படறாங்க...அவர்களுக்கெல்லாம் கிளி வாங்கி குடுக்கப்போறேன்...
ரோட்ல குப்பை பொறுக்கறவங்க...பல பேரு கோணி இல்லாம கஷ்டப்படறாங்க...அதுக்காக கோணி வாங்கி குடுக்கப்போறேன்...
கிளி மறுவாழ்வு திட்டம்...கோணி வழங்கு திட்டம்...
பணத்தை சிக்கனமாதான் செலவு செய்வேன்...ஒரே ஒரு லட்சம் கிளி வாங்குவேன்...
அந்த கிளியெல்லாம் குட்டி போட்டதும்..
என்னது குட்டியா...
ஆமாம்...எல்லாருக்கும் கிளிக்குட்டி குடுப்பேன்... ஒரு ரூபாய்க்கு மூணு கிளி...
சோ அவர்கள் நடித்த படங்களில் இதுவும் அவரின் பெயர் சொல்லக்கூடிய ஒரு படமே... அதுவும் குறிப்பாக அந்த கால கட்டத்தில், எம்ஜியாரை இவ்வளவு தைரியமாக விமர்சித்தவர் சோ..வாகத்தான் இருக்கமுடியும்...அதுவும் கூறும்கருத்துகள் மறுக்கமுடியாத மாபெரும் உண்மையும் கூட.
ஜெகன் வேலை பார்க்கும் சிட்பன்ட் நிறுவனத்தில் கொள்ளை போன இரண்டு லட்ச ரூபாயினை ஜெகன்தான் திருடி இருக்க வேண்டும் என்று போடும் நாடகம்...அதன் தொடர்ச்சியாக பணத்தினை வெளியாக்கும் யுக்தி...காட்சிகள் ருசிகரமானவை...
ஜெகன் கைது நிகழ்வுக்கு பிறகு..அடுத்த காட்சியில்...
லட்சுமி...சாப்டாச்சா...
ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
விமலா...சாப்பிடலியாம்மா....
(கண்ணீருடன்)...ஒரு நாளைக்கு சாப்பிடலேன்னா..உயிரா..போயிடும்...
ஆல்ரைட்.. ஆல்ரைட்..டயமாச்சு சாப்பிட வாங்க...
(அப்போதும் யாரும் வரவில்லை..)
இப்போ வரப்போறீங்களா இல்லையா.. I... Say....come on...
என்ற ஒரு அதட்டலில் இருவரும் ஓடிவர.. அவர்களுக்கு நடிகர் திலகம் உணவு பரிமாறிக்கொண்டே... சாப்பிடு..சாப்பிடு... என்று.. அவர்களை சாப்பிட வைத்து....
விமலா..நான் என்னமா தப்பு செஞ்சேன்...அப்படி ஏதாவது செஞ்சிருந்தா சொல்லு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்...
லஷ்மி..ஒரு மாணவன் தப்பு பண்ணுனா...ஆசிரியர் தண்டிக்கறது இல்லையா..பிள்ளைங்க தப்பு பண்ணுனா..பெற்றோர்கள் தண்டிக்கறது இல்லையா..? குற்றம் செய்யறவங்க யாரா...இருந்தாலும்...தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும்...நாளைக்கு நானே ஒரு தப்பு பண்ணுனா...கூட S.P..ங்கறதால என்ன விட்டுடவா..போறாங்க.... ..நெவர்...
கைலே விலங்கு போட்டு ரோட்ல அழைச்சிட்டுதான் போவாங்க...
நான் இதுவரைக்கும் எவ்வளவோ..குற்றவாளிகளை கைது பண்ணிருக்கேன்...நீ சந்தோஷப்பட்டிருக்கே..
ஆனா இன்னிக்கு நம்ப வீட்டுக்குள்ளையே ஒரு குற்றவாளியை கைது பண்ணியிருக்கேன்... அதுல ஒங்களுக்கு வருத்தம்...
ஏன்னா.. குற்றவாளி ஒனக்கு மகன்...
அவளுக்கு கணவன்...
ஆனா ஒன்னு மாத்திரம்...எல்லாரும் மறந்துட்டீங்க... அவன்... எனக்கும் மகன்...
பெண்கள்.. நீங்கல்லாம்...தாங்க முடியாம அழுதுடறீங்க...
ஆனா ...நான்... வெளியில் சொல்ல முடியாம... (கைகளால் நெஞ்சிலே தட்டிக்கொண்டு...கண்களில் நீர் நிறைய...) கலங்குகின்ற காட்சி...
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி பாடல் காட்சியும் படமாக்கப்பட்ட விதமும், நடிப்பும், பாடல் வரிகளும், பாடிய விதமும்...அற்புதம்...நெஞ்சை பிழியும் அற்புதமான ஒரு காட்சி. பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா... இதற்கு மேலும் இந்த காட்சிக்கு இதைவிட சிறப்பாக வரிகள் போட இயலுமா..என்று சவால் விட்டிருக்கிறார் கவியரசு..
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?
நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.
படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் ஒன்று...அந்த என்கொயரி காட்சி...மிஸ்டர் சவுத்ரி...ஹாஸ்ப்பிட்டல்லேர்ந்து கைதி தப்பிச்சு போக நீங்களும் ஒரு காரணம் ன்னு கம்பளைண்ட் வருதே....என்று துவங்கும்...அந்த காட்சியில் துவங்கும் வேகம்...
மிஸ்டர் சவுத்ரி...சாரி...என்கொய்ரி ன்ற முறைல...உங்களையே நான் கேள்வி கேட்க வேண்டியதா போச்சு..
நோ...சார்...நோ...சார் ஒங்க சீட்ல இருந்தா நானும் அப்புடிதான் சார் கேட்பேன்...
(டெலிபோன் வர)
ஓ..ரியலி ...மிஸ்டர் சவுத்ரி..ஒரு குட் நியூஸ்...அந்த கைதியை...பிடிச்சுட்டாங்களாம்..
ஓ Is It... வெரி குட்...சார்..
தப்பி ஓட முயற்சி பண்ணுனானாம்..ஷூட் பண்ணிட்டாங்களாம்...
ஓ...பைன் சார்...
(அடுத்து ஒரு போன்...வர) ஓ... அப்புடியா...
மிஸ்டர்..சவுத்ரி..
(அதே விரைப்புடன்) எஸ் சார்...
எ.. பேட் நியூஸ் பார் யூ...ஒங்க மனைவி..இறந்துட்டாங்களாம்....
இங்கே துவங்கும்...ஒரு அற்புத நடிப்பின் துவக்கம்...
உணர்வுகள் உடலை தடுமாற செய்ய..தடுமாற்றத்துடன்...சுதாரித்துக்கொண்டு ..
நான் வீட்டுக்கு போலாமா சார்...
இறுகிய முகத்துடன்...வீட்டுக்கு வந்து...படியேறி...வந்து...மனைவியை...சடலமாக காணும் பொழுதினில்.... (மருமகள் விமலா..கதறிக்கொண்டே காலில் விழுகிறார்...)
லட்சுமி நான் வந்து ரொம்ப நேரமாச்சு,
ஏன் என் கூட பேச மாட்டேங்குற...
நான் யூனி பார்ம்லே இருக்குறப்போ பேச பயப்படுவே....
இதோ பார் நான் யூனிபாம் இல்லாம.. வந்துருக்கேன்...
பேச மாட்டியா...பேசும்மா..
நான் நேரம் கழிச்சு வருவேன் நீ எனக்காக தூங்கா ம காத்துக்கிட்டு இருப்பே...
இப்போ நான் நேரத்தோட வந்திருக்கேன்.
இப்போ நீ போயிட்டியே.... ...?
நான் என்னம்மா தப்பு பண்ணுனேன்... ...?
ஏம்மா என்னை விட்டுட்டு போயிட்டே...?
எனக்கு யாருமே இல்லியேம்மா...
என்ன தனிமரமா ஆக்கிட்டு போயிட்டியேம்மா....
என்னால தாங்க முடியலேம்மா... என்று கூறிக் கொண்டே... வேரறுந்த மரமாக வீழ்ந்து கதறும் காட்சி...மைகாட்...மறக்கவே இயலாது...அந்த நடிப்பினை வழங்க இனி யாரால் இயலும்....
நடிகர் திலகத்தின் படங்களில் நிச்சயம் முத்தாரமாக விளங்கும் படங்களில் இதுவும் ஒன்று...மீண்டும், இந்தப்படத்தினை மறு வெளியீடு செய்யவேண்டும்...நிச்சயமாக இன்றைய தலைமுறையினரை கூட கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...af&oe=59C10A01
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c7&oe=59B8022F
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...63&oe=59AE052B
(முகநூல் விருந்து)
இன்று நடிகர் திலகம் வலியுறுத்திய "நீதி"
இருக்கிறது " வானவில்" தொலைக்காட்சி சேனலில் பிற்பகல் 1:30 க்கு
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...93&oe=59C1EB35
http://i1065.photobucket.com/albums/...pskovljlga.jpg
http://i1065.photobucket.com/albums/...psq7ykcabm.jpg
http://i1065.photobucket.com/albums/...psguea7yzm.jpg
http://i1065.photobucket.com/albums/...psfnilth1s.jpg
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7a&oe=59AEB5F6
18.7.1976 நாகர்கோவில்,வடிவீஸ்வரம்,தேர்தல் பிரச்சாரம்
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக இருக்கும் நடிகர்திலகத்தின் திரைப்படங்கள்,
காலை 11 மணிக்கு சன் லைப் சேனலில் "ஞான ஒளி",
பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
" முரடன் முத்து "
பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில்...
" இரு மேதைகள்"
இரவு 7:30 க்கு முரசு டிவியில்
" ஜல்லிக்கட்டு "
கண்டு மகிழ்வோம்
http://i501.photobucket.com/albums/e...pspzknrjuq.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4937-1.jpg
சிவாஜிக்கு போட்டி சிவாஜி தான்
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 1952 முதல் 2017 வரை சிவாஜி அவர்களுக்கு வேறு யாரும் போட்டியாக இருக்கவில்லை நமது தலைவருக்கு போட்டி...யாக நமது தலைவரே தான் இருந்துள்ளார்.
ஒரே நாளில் இரண்டு படங்கள் பல முறை வெளியிட்டு இரண்டு முறை 100 நாள் ஓடிய வரலாறு வேறு யாருக்கும் இல்லை.
அடுத்தடுத்த நாள் படங்களை தைரியமாக வெளியிட்டு ஒரே கலைஞன் நமது நடிகர்திலகமே.
ஒரு வார இடைவெளியில் படங்களை வெளியிட்டவரும் நமது கலைக்குரிசிலே.
ஒரே வருடத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்ட ஒரே நடிகரும் நமது தேசியதிலகமே.
ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழா படங்களைத் தந்தவரும் நமது சரித்திரநாயகனே.
ஒரு படம் 50 நாளைத் தாண்டி 100வது நாளை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது நமது நடிகர்திலகத்தின் வேறு படம் வெளிவந்து போட்டியாக அமைந்து பல படங்கள் 100 நாளை தொடாமல் போயிருக்கிறது.
இப்போது சிவாஜி அவர்கள் இல்லை இனியாவது வேறு யாராவது போட்டிக்கு வருவார்களா என்று எதிர்பார்த்தால் மூன்று அல்லது இரண்டு அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு படங்களை வெளியிட்டு அதுவும் 100 நாளை நெருங்க முடியாத இந்த தருணத்தில்
மதுரையில் மே 19ல் ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவந்து தற்போது 26 முதல் தொடர்ச்சியாக மதுரை அலங்கார் திரையரங்கில் இரண்டாவது வாரத்தை தொடர்கிறது.
அதே நேரத்தில் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மே 26 முதல் ஊட்டி வரை உறவு திரைப்படம் வெளிவருகிறது.
இரண்டு தியேட்டருக்கும் அதிகபட்ச துாரம் ஒரு கிலோ மீட்டர் தான் இருக்கும்.
இப்போது உச்சத்தில் உள்ள நடிகர்களாலும் இந்த சாதனையை செய்யமுடியாது என சவால் விடலாம்.
ராஜபாரட் ரங்கதுரைக்கு போட்டியாக ஊட்டி வரை உறவா அல்லது ஊட்டி வரை உறவுக்கு போட்டியாக ராஜபாரட் ரங்கதுரையா
எதுவாயினும் நமது மக்கள்தலைவர் மண்ணை விட்டு மறைந்தாலும் இன்றும் அவர் படங்களுக்கு அவர் படமே தான் போட்டியாக உள்ளது ரசிகர்களாகி நமக்கு பெருமை தானே இதயங்களே....
மதுரையில் நகரெங்கும் ராஜபாரட் ரங்கதுரை மற்றும் ஊட்டி வரை உறவு திரைப்படத்தின் போஸ்டர்கள் அருகே அருகே ஒட்டப்பட்டிருப்பதால் அனைவரும் வியப்போடு பார்த்துச் செல்கின்றனர்.
படத்தின் போஸ்டர் புகைப்படங்கள் நமது இதயங்களின் பார்வைக்கு
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7a&oe=59A33824
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...38&oe=59A7F555
*** திகைக்க வைக்கும் நடிகர் திலகம் திரைப்பட சாதனைகள்,
நடிகர் திலகம் அறிமுகம் ஆன பராசக்தி வெளிவந்த வருடம் 1952 முதல் 1962 வரையிலான பத்து ஆண்டுகளில் வெளிவந்த ஒட்டுமொத்த நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 432 ஆகும்,
அந்த 432 படங்களில் வெற்றிப் பெற்ற படங்களின் எண்ணிக்கை என பார்த்தோம் என்றால் அது 101 படங்கள் மட்டுமே,
(வெற்றிப் பெற்ற தமிழ் சினிமாக்கள் என்ற பல்வேறு நூல்களில் இருந்து இத்தகவலை பெற முடிகிறது,)
அந்த வெற்றிப் பெற்ற 101 படங்களில் நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்கள் மட்டுமே 53 திரைப்படங்கள் ஆகும்,
அதாவது நடிகர் திலகம் பத்து ஆண்டுகளில் நேரடி தமிழ்ப் படங்கள் நடித்தது 78 படங்கள் ஆகும்( பிற மொழிகளில் 5 படங்களில் நடித்தார்)
அடுத்து முக்கிய நடிகராக விளங்கிய
.................................................. ...........................
ஏனைய ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பில் வந்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை 31 படங்கள் மட்டுமே,
நடிகர் திலகம் நடிப்பில் வசூல் ரீதியாக வெற்றிப் பெற்ற படங்களின் பட்டியல்,
*** நூறு நாட்களுக்கும் மேல் ஓடியவை
1) பராசக்தி
2) திரும்பிப் பார்
3) மனோகரா
4) எதிர்பாராதது
5) காவேரி
6) மங்கையர் திலகம்
7) நான் பெற்ற செல்வம்
8) பெண்ணின் பெருமை
9) அமரதீபம்
10) வணங்காமுடி
11) புதையல்
12) உத்தம புத்திரன்
13) பதிபக்தி
14) சம்பூர்ண ராமாயணம்
15) அன்னையின் ஆணை
16) சபாஷ் மீனா
17) வீரபாண்டிய கட்டபொம்மன்
18) மரகதம்
19) பாகப்பிரிவினை
20) இரும்புத்திரை
21)தெய்வப்பிறவி
22) படிக்காத மேதை
23) விடிவெள்ளி
24) பாவ மன்னிப்பு
25) பாச மலர்
26)ஸ்ரீவள்ளி
27) மருத நாட்டு வீரன்
28) பாலும் பழமும்
29) பார்த்தால் பசி தீரும்
30) படித்தால் மட்டும் போதுமா
31) ஆலயமணி
** 75 நாட்களுக்கும் மேலாக ஓடி வசூலைப் பெற்று தந்த படங்கள்
32) பணம்
33) இல்லற ஜோதி
34) அந்த நாள்
35) கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
36) தூக்கு தூக்கி
37) கள்வனின் காதலி
38) தெனாலிராமன்
39) ராஜா ராணி
40) ரங்கோன் ராதா
41) மக்களை பெற்ற மகராசி
42) தங்க மலை ரகசியம்
43) அம்பிகாபதி
44) பாக்கியவதி
45) சாரங்கதாரா
46) காத்தவராயன்
47) தங்கப் பதுமை
48) பாவை விளக்கு
49) புனர் ஜென்மம்
50) நிச்சய தாம்பூலம்
51) பலே பாண்டியா
52) வடிவுக்கு வளைகாப்பு
53) பந்த பாசம்
.......................................
** ஏனைய அனைத்து நடிகர்களின் நடிப்பில் வந்த வெற்றிப் படங்கள், 30
1)ஔவையார்
2) தேவதாஸ்
3) ரத்தக்கண்ணீர்
4) கணவனே கண் கண்ட தெய்வம்
5) மிஸ்ஸியம்மா
6) நல்லத் தங்காள்
7) டவுன் பஸ்
8) குல தெய்வம்
9) பாச வலை
10) ரம்பையின் காதல்
11) சதாரம்
12) எங்க வீட்டு மகாலட்சுமி
13) மாயா பஜார்
14) முதலாளி
15) நீல மலைத் திருடன்
16) பூலோக ரம்பை
17) மாலையிட்ட மங்கை
18) வஞ்சிக் கோட்டை வாலிபன்
19) கல்யாணப்பரிசு
20) மணி மேகலை
21) மின்னல் வீரன்
22) வண்ணக்கிளி
23) எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
24) கைதி கண்ணாயிரம்
25) களத்தூர் கண்ணம்மா
26) பாக்யலட்சுமி
27) குமுதம்
28) தேன் நிலவு
29) நெஞ்சில் ஓர் ஆலயம்
30) சாரதா
31) காலம் மாறி போச்சு
இப்போது. தெரிந்து கொள்ளலாம் நடிகர் திலகத்தின் இமாலய சாதனையை
பத்து ஆண்டுகளில் வெளிவந்த படங்களில் ( 83/432) 20% பங்களிப்பை நடிகர் திலகம் அளித்தது போன்று உலகில் எவரும் கொடுத்ததில்லை, அப்படியே நடித்து இருந்தாலும் வெற்றி பெற்ற படங்களை கொடுத்து இருக்க முடியாது ( 53/101)
பதிவைப் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்..
----------------------------------------------------------------------------------------------
சில பின்னூட்டங்கள்
E நடிகர் திலகம் ஒரு சாதனை நாயகன்.அவரது படத்தின் வெற்றியை அவரது மற்றொரு படம்தான் முறியடித்து இருக்கிறது
(ஆமாம் சார், நீங்கள் சொல்லும் அடிப்படையில் எத்தனையோ படங்கள் வெள்ளி விழா வாய்ப்பை இழந்தன, குறிப்பாக உத்தம புத்திரன் 23 வாரங்கள் ஓடிய நிலையில் நடிகர் திலகத்தின் அடுத்த படத்திற்காக மாற்றிய சூழ்நிலை)
............
சிவாஜி சினிமாக்கள்,,, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதையல்கள்,,, நடிகர் திலகத்தின் சம்பளம் ஆரம்பம் முதலே அவரது உழைப்புக்குத் தகுந்ததை விட வெகு குறைவு,,, தன்னை நம்பி படம் எடுக்கும் எந்த ஒரு தயாரிப்பாளரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பது அவர் எண்ணம்,,, படத் தயாரிப்பு செலவுகளையும் அநாவசியமாக இழுத்து விட மாட்டார்,,, பெரிய பேனர்கள் சிறிய தயாரிப்பாளர்கள் அனைவரையும் ஒரே மாதிரித் தான் நினைப்பார்,,, ஆகவே அவரது படங்கள் குறைந்த பட்சம் 50 நாட்கள் ஓடினாலே தயாரிப்பாளர்கள் போட்ட முதலை தாண்டி லாபம் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்,,, ",,, சிவாஜியை நம்பி ரிஸ்க் ஆன சபஜெக்ட் செய்தாலும் கூட முதலுக்கு மோசம் வராது,,, ஆகவே மேற்குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் நல்ல வருமானம் ஈட்டியவை,,, அடுத்தடுத்து சிவாஜியை வைத்து படங்கள் பண்ணவே எல்லா தயாரிப்பாளர்களும் விரும்புவர்,,, ஏனெனில் வசூல் சக்கரவர்த்தி சிவாஜி தான்,,, கொசுறு தகவல் "கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" 100 நாட்கள் ஓடிய படம் என்று நினைக்கிறேன்,,,
( சார், அருமையாக புரியுமாறு நடிகர்திலகத்திற்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருந்த உறவு முறையை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள், தயாரிப்பாளர்கள் லாபம் பார்த்த காரணத்தால் தான் குறுகிய காலத்தில் நடிகர்திலகம் அத்தனை எண்ணிக்கையிலான படங்களை கொடுத்து இருக்கிறார்,)
( நடிகர் திலகத்தின் நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியலை பொறுத்த மட்டில் நடிகர் திலகத்தின் தொடர்பான புத்தகங்கள் தந்திருக்கும் விவரங்கள் மட்டுமே, அதையே தான் nadigar Thilagam. Com லிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது,
எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடுதான் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி நூறு நாட்கள் ஓடிய படம் என்று)
.................................................. ...........
தமிழ்வாணன் எழுதிய புத்தகத்தில் சிவாஜியை சுற்றிதான் சினிமா வியாபாரம் இருந்தது என்று எழுதினார் .அதை நீங்களும் படித்திருக்கலாம்
.........................................
அண்ணாச்சி இதில் கள்வணின் காதலி 100நாள் படம் தானே படம் நன்றாக ஓடியது என்று எனது சித்தப்பா என் சின்ன வயதில் சாென்ன ஞாபகம்
.................................................. ...
மக்களைப் பெற்ற மகராசி முதல் வட்டாரத் தமிழ் பேசி வெளிவந்த வெற்றிப்படம் அதாவது இதில் காெங்குத் தமிழ் பேசி நமது தலைவா் அசத்தியிருப்பாா் படத்தை தயாாித்தவா் வி கே ராமசாமி அவா்கள் வி கே அவா்களை தயாாிப்பாளராக உயா்த்தியவா் நமது தலைவா்தான்
( உண்மை வி.கே.ஆர் அவர்களை தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த படம், சிறந்த நடிகர் என சினிமா ரசிகர்கள் மூலம் நடிகர் திலகத்திவிற்கு பட்டம் வழங்கப்பட்டது)
(வி.கே.ஆர் அவர்களிடம் எந்த வித முன் பணமோ, சம்பளமோ பெற்றுக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம், படம் பெரும் வசூலைக் குவித்தது,)
.................................................. .........
தங்கமலை ரகசியமும் 100நாள் படம் என என் சித்தப்பா சாெல்லியிருக்கிறாா் அப்போது டாா்ஜான் என்று நமது தலைவரை சாென்னாா்களாம்
( அறியப்பட்ட செய்திதான், எனக்கும் இது போன்ற ஆதங்கம் இருக்கிறது, நடிகர் திலகத்தின் வெற்றி பெற்ற 100 படங்கள் ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்று,
இந்த பதிவின் மூலம் நண்பர்கள் யாராவது ஆதாரம் கொடுக்கிறார்களா என்று பொறுத்து பார்ப்போம்)
......................................
நான் கேள்விப்பட்டதை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.நடிகர்திலகம் அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கமாட்டர் என்பதற்கு ஒர் உதாரணம். தங்கபதக்கம் படத்தில் ஒர் காட்சியில் நடிகர்திலகம் அவர்கள் சாப்பிட்டு விட்டு டைனிங் டேபிளிலிருந்து எழுந்து வருவது pol ஓர் காட்சி. அதற்கு திரு மகேந்திரன் அவர்கள் டின்னர் ஏற்பாடு செய்வதாக கூறினார்.அதற்கு நமது நடிகர்திலகம் அவர்கள் அதெல்லாம் தேவையில்லை என கூறிவிட்டு அந்த காட்சியில் சாப்பிட்டு விட்டு வருவது pol பல்லை துருத்திக்கொண்டு வருவார். அந்த காட்சி படத்தில் மிகவும் தத்ரூபமாக வந்ததை கண்டு திரு மகேந்திரன் அவர்கள் நெகிழ்ந்து போனார்.
(சரியான தருணத்தில் தேர்ந்த உதாரணம் சார்,
மிக்க நன்றி)
.................................................. ..............
ஒரு சின்ன அரசியல் விவாதம், உடனே அரசியல் நமக்கு வேண்டாமே என்று சொல்லி விடாதீர்கள் பணி புரியும் அலுவலகத்தில் உள்ளவர்கள் மத்தியில் நடந்தது
இன்றைய அரசியல் நிலைமை குறித்து ஆளுக்கு ஆள் ஒரு கருத்து அவரவர்கள் தான் சார்ந்த கட்சிகளை விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக விவாதித்தனர், அதாவது ஒரு குரூப் திமுக சார்பு அவர்களுக்கு எதிர் குரூப் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், இன்னும் பிற கட்சிகளின் சார்பு ஆதரவாளர்கள்,
சில நிமிடங்கள் விவாதித்தவர்கள் இறுதியாக என்னைக் கிளறினார்கள் அதாவது அ...வர்களின் கேள்வி "யாருக்கு தகுதி இருக்கிறது இந்த நாட்டை ஆள்வதற்கு"
அதற்கு சாதாரணமாகத்தான் கூறினேன இப்போதும் சரி அல்லது பெருந்தலைவருக்குப் பின ஆணடவர்களும் சரி யார் தான் நேர்மையின் வழி வந்தவர்கள் இருக்கிறார்கள், அல்லது இந்த நாட்டின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிள்ளைகள் யாராவது இருக்கிறார்களா? அவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறது என கூறுவதற்கு என் நான் சொன்ன மாத்திரம் ஒரு நண்பர் ஆவேசப்பட்டுவிட்டார், அட என்ன சார் உங்களுடைய எண்ணம் அந்த தகுதி சிவாஜிக்கு மட்டுந்தான் இருக்குதுன்னு சொல்ல வருவீங்க " என்னமோ சிவாஜியின் அப்பா என்ன சுதந்திர போராட்ட தியாகி போல "
ஒரு கனம் நம்மால் உடனடியாக எதுவுமே பதில் பேச முடியவில்லை,
"அடப் பாவிகளா சிவாஜியின் அப்பா சுதந்திர போராட்ட தியாகிதானே, சிவாஜி இந்த உலகிற்கு பிறந்த போது அவரது தந்தை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதனால் 7 ஆண்டுகள் சிறையில் வாடினாரே" ,
இந்த வரலாற்று செய்திகள் எல்லாம் வரும் தலைமுறைக்கு எப்படி தெரிய படுத்தப் போகிறோம்?
சிவாஜியின் வரலாறு தெரியாமல் போனதால் தானே சிலர் சிலை விஷயத்திலும் மணி மண்டபம் தொடர்பாகவும் கூட எதிர் கருத்து தொடுக்கும் நிலை இருக்கிறது..
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c9&oe=59AF6F75
( from face book)
நாகர்கோவில் வசந்தம் பேலஸ் தினரி 4. காட்சிகளக வெற்றி வாகை சூடுகிறார் ரங்கதுரை
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...45&oe=59B1F420
புதிய படங்களை ஒரம் கட்டும் தலைவரின் சாதனை
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9d&oe=59B4D70E
இன்று (28-5-2017) பிறந்தநாள் காணும்
திரு ராகவேந்திரா அவர்கள் மேலும்
பல பிறந்தநாள் காண வாழ்த்துக்கள்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b0&oe=59BBC3FB