மீண்டும் திரிக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பர் சிவாஜி தாசனுக்கும், புதிதாக இணைந்திருக்கும் அன்பு நண்பர் ஆதவன்ரவி அவர்களுக்கும்
நல்வரவு கூறி வரவேற்கிறேன் ! வாழ்க! வளர்க!
Printable View
மீண்டும் திரிக்கு வருகை தந்திருக்கும் அன்பு நண்பர் சிவாஜி தாசனுக்கும், புதிதாக இணைந்திருக்கும் அன்பு நண்பர் ஆதவன்ரவி அவர்களுக்கும்
நல்வரவு கூறி வரவேற்கிறேன் ! வாழ்க! வளர்க!
சிவாஜி சமூக நல பேரவையின் தலைவர் அன்பு நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு ,
எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ! எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!
தலைவர் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைப்பதென அறிவித்த தமிழக அரசின் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். சென்ற மாதம் தலைநகர் சென்னையில் திரு.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உண்ணாநோன்பு தான் இந்த அறிவிப்புக்கு மிக முக்கிய காரணமாக கருதுகிறேன். எனவே ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் அவருக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
சந்திரசேகர் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் உழைப்புக்கு உடனே பலன் கிடைத்து விட்டது உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளும் வளமான உடல் நலமும் வழங்கிட வேண்டுகிறேன்
என்றும் உங்கள் முயற்சிக்கு சிவாஜி ரசிகர்கள் துணையிருப்பார்கள்
இன்று நீங்கள் அனுபவிப்பதோ முப்பெரும் விழா - வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றி - மணிமண்டப அறிவிப்பு - உங்கள் பிறந்த நாள் விழா
இத்திரிக்கு மகுடம் சேர்ப்பது போல் கவிதை மழை பொழியும் திரு.ஆதவன் அவர்களையும் திரு. சிவஜிதாசன் அவர்களையும் அன்போடு வரவேற்கிறேன்
கடற்கரை சிவாஜி சிலையையும் பாதுகாத்து மணிமண்டபமும் அமைக்கப்போகும் உலக சிவாஜி ரசிகர்களின் இதயங்களை குளிர்வித்து கொண்டிருக்கும் தமிழக முதல்வருக்கு எங்கள் நன்றிகள் கோடி
மணி மண்டபம் கட்டுபவருக்காக சித்திர மண்டபத்தில் முத்துக்களைக் கோர்க்கிறார் நடிகர்திலகம் !
https://www.youtube.com/watch?v=ig46cl5coVo
திரு.சந்திரசேகர் சார், தங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்கள் பிறந்தநாளன்று மணிமண்டபம் அரசு சார்பில் கட்டப்படும் என்ற செய்தியைத் தவிர தங்களுக்கு வேறொன்றும் பெரிதல்ல என்பது ஒவ்வொரு உண்மையான சிவாஜி ரசிகனுக்கும் தெரியும். நான் தங்களிடம் முன்பே கூறியது போல் உங்கள் உழைப்பு அதுவும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழ்பரப்ப தாங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் வீண்போகாது.
தாங்கள் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் என் உள்மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது என்னவெனில் நாளையோ அல்லது என்றோ நடிகர்திலகத்திற்கு மணிமண்டபம் அரசு கட்டும் பட்சத்தில் அந்த விழாவிற்கு என்னை அழைப்பார்களோ இல்லையோ ஆனால் நமது அண்ணன்மார்கள் தளபதி ராம்குமார் மற்றும் இளையதிலகம் பிரபு அவர்களை நிச்சயம் அழைப்பார்கள் அது போதும் எனக்கு, பார்வையாளர்கள் வரிசையில் இருந்து நான் விழாவை ரசிப்பேன் என்று கூறினீர்களே. அப்படியே நடந்தாலும் தங்கள் பிறந்தநாளன்று மணிமண்டபம் அரசே கட்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு நமது நடிகர்திலகமே தங்களுக்கு பரிளித்து விட்டார்.
அன்புள்ள சிவாஜி அவர்களால் உண்மையான அன்பு உள்ளவர்களே தங்களால் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கு புகழ் சேர்க்க முடியாவிட்டாலும் புகழைக் காப்பவர்களின் செயலுக்கு இடைஞ்சலாக இருக்காதீர்கள்.
நீங்கள் என்னதான் செய்தாலும் நாங்கள் வணங்கும் நடிகர்திலகமே எங்கள் நண்பா் சந்திரசேகர் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசளித்து விட்டார்.
நண்பர் சந்திரசேகர் அவர்களே மற்றவர்கள் ஆசியைப் பற்றி கவலைப்படாதீர்கள், நடிகர்திலகத்தின் ஆசி அனைவரையும் விட உங்களுக்கு அதிகமாகவே கிடைக்கும்.
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.
அன்பு நண்பர் கவிஞர் ஆதவன் ரவி மற்றும் சிவாஜிதாசன் இருவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுத் தந்த அதிசிய நடிகர் சிவாஜி.
அன்பின் சந்திர சேகர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் மணிமண்டப அறிவிப்பிற்கான பாராட்டுக்களை, அலைபேசியிலும், திரியிலும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது எண்ணமெனும் நானெடுத்து வண்ண மலர்ப் பூத்தொடுத்து நன்றியெனும் மாலைதனை காணிக்கையாக்குகிறேன்.