சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி `சூப்பர் ஸ்டார்'. சினிமாவுக்குத் தகுதியானவர்களை கண்டுபிடித்து அவர்களை சினிமாவுக்கென தயார் செய்யும் இந்த நிகழ்ச்சிக்கு நடிகை சிம்ரன் நடுவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி பற்றி நடிகை சிம்ரன் கூறியதாவது:
இது சின்னத்திரை வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கும். நடிப்புக்கான திறமை இருந்தும், அதற்கான முயற்சிகள் இருந்தும் பலரால் தங்கள் சினிமாக் கனவை நிறைவேற்ற முடியவில்லை. அப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களின் கலை விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் நிகழ்ச்சியே சூப்பர் ஸ்டார். இந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருந்து நடிப்புக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கிறேன்.
இந்த நிகழ்ச்சி பற்றி முன்னரே அறிவித்து அதன்முலம் கலையார்வம் கொண்டவர்களை சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் ஒன்றுகூட்டினோம். இப்படி இரண்டாயிரம் பேரை சந்தித்து பேசியதில் முடிவாக 50 ஆண்களும் 50 பெண்களுமாக மொத்தம் நூறு பேர் தேர்வாகியிருக்கிறார்கள். இவர்களின் கலைத்திறன், ஆர்வம், திறமை வெளிப்பாடு இதையெல்லாம் கருத்தில் கொண்டு திறமையானவர்களை திரைக்குத் தருகிறோம். இப்படி தேர்வு பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படங்களில் நடிகர்களாக அறிமுகம் செய்யப்படுவார்கள்.ஹீரோ, ஹீரோயின்கள் மட்டுமின்றி வில்லன், காமெடி, குணசித்ரத்தில் வெளிப்படுபவர்களும் நடிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.''
சில்வர்லைன் பிலிம்பேக்டரி தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ராம்குமார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் விஜய்ஆதிராஜ்.
Quote: