Quote:
Originally Posted by P_R
:lol:
Printable View
Quote:
Originally Posted by P_R
:lol:
வேலப்பர் தினத்தை முன்னிட்டு....
பிடிபிழைத்த வேலெறிந் தலுத்தோய்
அம்பெய்திடாதே கானமுயல் நோக்கி -வாழ்வில்
குடிகெடுக்கும் சமரங்களுண்டு
என்றும் வாய்த்திடாத கனாக்களே ஊக்கி
எண்ணித் துணிக கருமம் தணிந்தபின்
எண்ணுவம் என்பது அழுக்கு
கனிநோக்கி தொடக்கங்கள் செய்தவ்வழியே
இனிநோக்கும் நாளினிக்க வேண்டுபவனாய்
பனிமூட்டம் நீக்கிதெளிந் திட்ட பாதை
நனிநன்றாய் தேர்செலுத்த எனக்கும் ஆசை
சனிபகவன் அவனளிப்பு மறுப்பு என்றோ
மணிகண்டன் அருளென்றோ, விடுத்தல் என்றோ
அணிலளவே நம் வாழ்வில் நம்பங்கென்று
நுனிநாக்கில் புறந்தள்வர் மெய்ஞானியர்
பணிவாகக் அதைக்கேட்டு சந்தேகிப்பேன்
"துணிவென்றால் பெரியவற்றை சிந்தியாது
பனியுருகி வரும்வெள்ளம் எதிர்கொள்வர்போல்
கணிக்காமல் வருவற்றை ஏற்பதுதானா ?"
எனக்கந்த விடுத்தலையேற் பதுதான் கடினம்
தனியன்கள் இதைப்போல எழுதிவிட்டு
பணிவன்பாய் பின்வருமிச் சுலோகஞ் சொல்வேன்:
கனியன் பூங்குன்றன் சொல் "தீதும் நன்றும்..."