Quote:
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை தாடி என்பது பெரும்பாலும் காதல் தோல்வியின் அடையாள சின்னம். சிலபல தருணங்களில் குடும்ப சோக சூழல்களின் வெளிப்பாடும் கூட அண்ணன் தங்கை பாசத்தின் கல்வெட்டுக் காவியமான பாசமலர் கண்மூடித்தனமான சகோதர பாசம் நடைமுறையில் எத்துனை இன்னல்களைக் கொணர்ந்து நாயகனை புதர் போல தாடி மண்டிய முகத்துடன் அலைய வைத்து தியாகம் எனும் சோக முடிவுக்கு வழிவகுத்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி !
தாடியையும் மீறி கண்களின் தீட்சண்யத்திலும் புருவங்களின் ஏற்ற இறக்கத்திலும் நெற்றிச் சுருக்கங்களிலும் சோகத்தின் கதிர் வீச்சை நடிக மாமன்னர் வெளிப்படுத்தி நமது கண்களில் நீர் கசிய வைத்திருக்கும் விதம் நடிப்பின் வானவில் வர்ண ஜாலமே!!