http://i1039.photobucket.com/albums/...psyjmo0pyf.jpg
Printable View
அதிகமான சிவாஜி ரசிகர்களின் வீடுகளில் அலங்கரித்த போடேடோக்களில் இதுவும் ஒன்று http://i1039.photobucket.com/albums/...pskdbka9df.jpg
கோவையில் தெய்வமகன் பல வருடங்களுக்கு முன் திரையிட்டபோது வெளியிடப்பட்ட நோட்டீஸ்
http://i1039.photobucket.com/albums/...ps6xz9rwma.jpg
சென்னையில் தெய்வமகன்
திரையிட்டபோது நடந்த இந்த நிகழ்வை தெரிந்தவர்கள் யாரேனும் எழுதுங்கள்.
நன்றி.
செந்தில்வேல்,
தங்களுடைய அபாரமான பணியினைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. பக்கம் பக்கங்களாக எழுதப்படுவதையெல்லாம் தங்களுடைய நிழற்படங்களே கூறி விடுகின்றன. குறிப்பாக மேலே காணப்படும் நிழற்படம் உண்மையிலேயே மிக மிக மிக அபூர்வமான ஒன்று. தந்தையார் சின்னையா மன்றாயர் தன் தவப்புதல்வன் நடிகர் திலகத்தை அன்புடன் அரவணைக்கும் இந்த நிழற்படத்திற்காக தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
What theaters they are tryng FOR SIVAKAMIYIN SELVAN IN CHENNAI
Raghavendran sir
http://i1028.photobucket.com/albums/...psjjlpip6w.jpg
* "அமாவாசை எப்போ.?"
என்று பாட்டி கேட்ட போது
உன்னைத்தான்
நினைத்துக் கொண்டிருந்தேன்
நிலவே..!"
* " நேரங்கெட்ட நேரத்தில்தான்
வந்து தொலைக்கிறது
இந்தக் காதல்..
நூலக அமைதியில்
தும்மலைப் போல.
- இந்த மாதிரி நிறைய காதல கவிதைகள் எழுதியிருக்கிறேன்.
நிறையப் பேர் பாராட்டியிருக்கிறார்கள்.
" நீ போட்ட காதல் வகுத்தலில்
எனக்குக் கிடைத்த
ஈவு : கண்ணீர்.
மீதி : உயிர்."
-என்கிற என் கவிதையைப்
படித்து விட்டு, ஒரு சிலர்
"உனக்கு காதல் தோல்வியா?"
என்று கூடக் கேட்டிருக்கிறார்கள்.
காதலை எழுதி, எழுதி.. எனக்கும் காதலுக்குமான
காதல்தான் அதிகமாயிற்றே
தவிர, என் காதல் படித்துக்
கோபமுற்று "ராஸ்கல்" என்று
பல் கடித்து, செருப்பு கழற்றிக்
காட்டுவதற்குக் கூட ஒருத்தி
எனக்கு வாய்க்கவில்லை.
மென்மையும்,மேன்மையுமாய்..
இனிமையும், இதமுமாய்..
இந்தப் பாடல் பார்க்கக் கிடைத்த போது, இப்படிப் பாடி
சந்தோஷிக்கவாவது ஒருத்தி
எனக்குக் கிடைத்திருக்கலாம்
என்று ஏக்கமாய்ச் சிந்தித்திருக்கிறேன்.
------------------------------
இருளில் மிதக்கும் இரவு.
இரவில் மிதக்கும் நீர்நிலை.
நீர்நிலையில் மிதக்கும் படகு.
படகில் மிதக்கும் காதல்.
காதலோடு அதில் மிதக்கும்
காதலர்கள்.
அழகே உருவாக கலைச் செல்வி.
அசத்துவதன்றி வேறொன்றறியா நடிகர் திலகம்.
கண்களைச் சிரிக்கச் செய்து
விட்டு, நம்மை வேடிக்கை
பார்க்கிற அவரது குறும்பு.
மெல்லிசை மாமன்னர் தந்த,
இனிப்புச் சாறு உள்வைத்த
பாட்டுக் கரும்பு.
இந்தப் படத்தில்தான் இந்தப்
பாடலென்பதறியாமல்
"தர்மம் எங்கே" படத்தினூடே
இந்தப் பாடல் பார்த்த சந்தோஷம்...
கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கையில், தபால்காரர்
"மணி ஆர்டர்" தந்தது போன்ற
சந்தோஷம்.
https://youtu.be/XiSD-cp9KgU
செந்தில்வேல் சார்,
அருமையான ஆவணப்பதிவுகளுக்கு நன்றி.