டியர் ராகவேந்திரன் சார், பாராட்டுக்கு நன்றி !
டியர் ஜோ சார், நன்றி !
டியர் பார்த்தசாரதி சார், மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் ராகவேந்திரன் சார், பாராட்டுக்கு நன்றி !
டியர் ஜோ சார், நன்றி !
டியர் பார்த்தசாரதி சார், மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
நடிகர் திலகமும் திரை இலக்கியத்திலகமும்
http://i1094.photobucket.com/albums/...alaignar-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
PR- Wonderful writeup on padikkatha mEdhai... (idhellaam appadiyE varradhu thaan... illa)
We had a wonderful time watching this beauty. We laughed out when Rangan mentions "ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)..."
We felt the pain when Rangan realizes that SVR is gone!
The innocence Rangan had was genuine. Nowhere we thought he was playing the character. Flawless portrayal of Rangan. I need to watch it again.
செஞ்சோற்றுக்கடன் தீர்த்தான் 'கர்ணன்' அன்று...
செய்நன்றிக் கடன் தீர்த்தான் 'பாபு' இன்று...
'பாபு' சொல்லும்போதே நா இனிக்கிறது. ஆனால் மனம் கனக்கிறது. கைரிக்ஷாவண்டி இழுத்த எங்கள் பாபுவை மறக்க முடியுமா?..
தனக்கு ஒருவேளை சாப்பாடு போட்ட செய்நன்றிக்காக ஒரு நல்ல மனிதனின் குடும்பம் அத்தலைவனை இழந்து தவிக்கும் போது,அந்தக் குடும்பம் தழைக்க காலமெல்லாம் கைரிக்ஷா இழுத்து அவர் மகளை தன் மகளாக பாவித்து, அவளைப் படிக்க வைத்து உழைப்பாலும்,முதுமையாலும் உருக்குலைந்து தன்னை முழுவதுமாக அந்தப் பெண்ணின் வாழ்வுக்காகத் தியாகம் செய்து தன்மானத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் உயிர் நீக்கும் கவரிமானான எங்கள் பாச பாபுவை மறக்க முடியுமா?...
சுட்டெரிக்கும் வெயிலிலே கால்களில் மிதியடி கூட இல்லாமல் தார் ரோடுகளில் கைரிக்ஷாவை சிரித்த இன்முகத்தோடு இழுத்துக் கொண்டு ஓடும் எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...
ரிக்ஷாவில் காதலியை அமரவைத்து அழகு பார்த்து நகர்வலம் வரத்தெரியாமல் அவளிடம் தன் வயிற்றுப் பசியை மட்டும் தீர்த்துக் கொண்டு பின் அவளையும் பறிகொடுத்துவிட்டு அனாதையாக நின்ற பாபுவை எங்களால் மறக்க முடியுமா?...
'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' என்று பாசச் சோற்றினை எங்களுக்கெல்லாம் ஊட்டி ஊட்டி வளர்த்த எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...
பழுத்த முதுமை அடைந்த பின்னர் முதுகு வளைந்து கால்கள் அகன்று நொடித்து தள்ளாடிய ஓட்டமாய் இருமிக்கொண்டே தன்னை வருத்தி ,ஓடாய்த் தேய்ந்து, கைரிக்ஷாவண்டி இழுத்து உருத்தெரியாமல் போன பாபுவை எங்களால் மறக்க முடியுமா?...
தான் வளர்த்த பெண்ணின் திருமணத்திற்கு அவளுக்குத் தெரியாமல் சென்று சாப்பாட்டுப் பந்தியில் கூட இடம் கிடைக்காமல் பிச்சைக்காரன் போல் விரட்டியடிக்கப்பட்டு சோதனைகளின் சுமைதாங்கியாய் தன் உயிரை விடும் எங்கள் பாபுவை மறக்க முடியுமா?...
எல்லாவற்றுக்கும் மேல் உடல் வருத்தி, உச்சி வெயிலில் கைரிக்ஷா இழுத்து, முதுமைத் தோற்றத்தைக் கொண்டுவருவதற்கு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் தாடி ஒட்டி, முகம் ரணகளமாக சுருக்கங்கள் ஏற்றி ,அந்த இளம் வயதில் கண்களை ஒளி குன்றச் செய்து ஒரு அழுக்குக் கைலியையும், கிழிந்த சட்டையும் அணிந்துகொண்டு மேக்-அப் என்ற பெயரில் தன் மேனியினை நோக வைத்து (மாஸ்க் போன்ற நவீன மேக்-அப் சாதனங்கள் இல்லாமல்)அரும்பாடுபட்டும் பட்டபாட்டிற்கு பலனே இல்லாமல்,"நீ உண்மையான ரிக்ஷாக்காரன் இல்லை...உனக்கு சிறந்த நடிகர் அவார்டும் இல்லை ...உன்னைவிட சிறந்த ரிக்ஷாவாலாக்களெல்லாம் இருக்கிறார்கள்" என்று சொந்த மண்ணில் பிறந்தவர்களாலேயே நிராகரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்ட பச்சைத் துரோகத்தைத் தான் எங்களால் மறக்க முடியுமா?...
அத்தனை துரோகங்களையும் தாண்டி, "நீதானடா நடிகன்" என்று உலக நாடுகள் அனைத்தும் (சொந்த மண்ணைத் தவிர) உச்சி முகர்ந்து எங்கள் பாபுவைப் பாராட்டி,பாராட்டி கௌரவித்து,உயரிய உரிய பட்டங்கள் அளித்து மகிழ்ந்து, உள்ளம் குளிர்ந்து ஆனந்தக் கூத்தாடுகிறதே... அந்த ஆனந்த அங்கீகாரத்தைத்தான் எங்களால் மறக்க முடியுமா?...
'பாபு' 40- ஆவது ஆண்டு நிறைவு விழா
http://i1087.photobucket.com/albums/..._000005494.jpg
http://i1087.photobucket.com/albums/..._000016279.jpg
http://i1087.photobucket.com/albums/..._000212921.jpg
http://i1087.photobucket.com/albums/..._000003440.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
http://i1087.photobucket.com/albums/..._000462915.jpg
http://i1087.photobucket.com/albums/..._001288207.jpg
http://i1087.photobucket.com/albums/..._002143215.jpg
http://i1087.photobucket.com/albums/..._004941038.jpg
http://i1087.photobucket.com/albums/..._077401479.jpg
http://i1087.photobucket.com/albums/..._085596247.jpg
Thank you parthasarathy, pammalar, RC and Murali sir.
Yeah a totally captivating performance. Ranga Rao's performance in this film is one of my father's favourites. He keeps quoting "indha thuNi ellAm salavaikku pOgudhA, illai salavailErndhu varudhAmmA" many times :lol:Quote:
Originally Posted by Murali Srinivas
We were flipping chanels Sunday evening and just saw the scene where RangaRao asks Rangan to leave the house. One of my favourite scenes in the film as I mentioned once here (ungaLukku oNNum theriyAdhu mAmA :lol:). Thereafter we were totally glued to the film.
டியர் பிரபு சார்,
தங்களின் படிக்காத மேதை ரங்கனின் அட்டகாசங்கள் பற்றிய ஆய்வு மிகப் பிரமாதம். அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.ரங்கனைப் பற்றி லட்சம் பக்கங்கள் எழுதலாம். அப்படிப்பட்ட அற்புதப் புதையல் அந்த ரங்கர். நன்றி சார்,
அன்புடன்,
வாசுதேவன்.