Dear Karthick Sir,
It was a re-enactment of those lovely days and how we were all overwhelmed by our Greatest Actor in the world.
An excellent Tribute by you for our Great Man.
Anm
Printable View
Dear Karthick Sir,
It was a re-enactment of those lovely days and how we were all overwhelmed by our Greatest Actor in the world.
An excellent Tribute by you for our Great Man.
Anm
டியர் பிரபுராம்,
எப்போதும் விடிவெள்ளி படம் தான் உங்கள் பதிவைக் கண்டதும் என் நினைவுக்கு வருகிறது. நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர்களைத் தங்களுடைய பெயரில் பதித்து என்றைக்கும் மறக்க முடியாத பெயரோடு திகழ்கிறீர்கள்.
எங்கிருந்தோ வந்தான் பாடலின் முடிவில் அந்த வீட்டின் வாசலில் நுழைவார், நுழையும் போதே வீட்டில் ஒரு விதமான அமைதி நிலவும், அதனைத் தான் உணர்வதைத் தன் முகத்திலேயே காட்டுவார், பின் ஒவ்வொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டே வருவார். அந்தக் காட்சி கிட்டத்தட்ட45 விநாடிகள் ஓடும், அதன் பிறகே ரங்கராவ் படத்தைப் பார்ப்பார். ஆனால் அந்த 45 விநாடிகள், பொதிகை ஒளிபரப்பில் இடம் பெறவில்லை. ஏதாவது தொழில் நுட்பக் காரணமாயிருந்திருக்கலாம். அதன் பிறகு அவர் உள்ளே கண்ணாம்பா அவர்களை அந்தக் கோலத்தில் கண்டதும் தன் உணர்வினைக் கட்டுப்படுத்த இயலாமல் தன் சோகத்தை வெளிப்படுத்துவார்.
உலகத்தில் எத்தனை நடிப்புக்கல்லூரிகள் உள்ளதோ அத்தனையிலும் பாடம் எடுக்க நிர்ணயிக்க வேண்டிய நடிப்பு....
இந்தப் படத்தைப் பற்றிய தங்களின் அற்புதமான கருத்துரை அத்தனை ரசிகர்களின் உள்ளத்தையும் பிரதி பலித்தது.
தங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
டியர் கார்த்திக்,
அக். 18, 1971ஐ கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். மறக்க முடியுமா அந்த நாட்களை...
தீபாவளியன்று சென்னையில் பார்க்க முடியாவிட்டாலும், உடனேயே ஒரு வாரத்தில் சென்னை திரும்பி முதல் வேலையாக சாந்தி திரையரங்கில் அட்டெண்டன்ஸ் கொடுத்து விட்டுத் தான் மறு வேலை...
பகல் காட்சிகளில் தாய்மார்களின் படையெடுப்பு... 0.84 பைஸா டிக்கெட்டுகள் கொடுக்கும் போதே 1.25 பைஸா டிக்கெட்டும் 1.66 டிக்கெட்டும் கொடுத்து விடுவார்கள். பால்கனி டிக்கெட் பெரும்பாலும் முன் பதிவிலேயே நிறைந்து விடும். 84 பைஸா டிக்கெட்டும் 1.25 பைஸா டிக்கெட்டும் ஆளுக்கு ஒரு டிக்கெட், 1.66 மட்டும் சில சமயங்களில் தாய்மார்கள் ஆண்களுக்கும் சேர்ந்து வாங்கிக் கொள்ளலாம். இது பொதுவாக அனைத்துத் திரையரங்குகளிலும் இருந்த நடைமுறை. இந்த டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக பங்களா தேஷ் அகதிகளுக்காக 5 பைஸா, 10 பைஸா அல்லது 40 பைஸா, என்று டிக்கெட் கட்டணத்தின் அடிப்படையில் வரியாக கூடுதலாக வசூலிப்பார்கள். அரங்கமே களையாக இருக்கும். மாலைக்காட்சிகளுக்கோ, கேட்கவே வேண்டாம், கார்களுக்குப் போக மீதம் மனிதர்களுக்கு என்ற அளவிற்கு வாகன நிறுத்துமிடம் நிறைந்திருக்கும்.. அந்த மாலையும் இரவும் சந்திக்கும் நேரங்களில், பிரகாசமான ஒளி விளக்கில் புதிதாய்க் கட்டிய தோரணங்களும் ஏராளமான ரசிகர் மன்ற ஸ்டார்களும் கண்ணைப் பறிக்கும் வண்ணம் அமர்க்களமாய் இருக்கும்.
என்ன இருந்தாலும் அந்தக் காலத்துத் திரையரங்க அமர்க்களங்களைக் காணக் கண் கோடி வேண்டும், தவம் செய்திருத்தல் வேண்டும்.
அன்புடன்
பாபு திரைப்படத்திற்காக பொம்மையில் வெளிவந்த விளம்பரத்தின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...bommai05fw.jpg
இந்த விளம்பரத்தினைப் பாருங்கள்... கம்ப்யூட்டர் என்றால் என்ன வென்று தெரியாத காலத்தில், ஈஸ்வர் ராவ் அவர்கள் தன் தூரிகையில் தத்ரூபமாக நடிகர் திலகத்தின் பாத்திரத்தைத் தீட்டியிருப்பதை...
இந்த ஈஸ்வர் அவர்களின் விளம்பரங்களுக்காக நான் தீவிர ரசிகனாகவே ஒரு சமயத்தில் ஆகி விட்டேன் என்றால் அது மிகையன்று... நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரும்பாலும் ஈஸ்வர் அவர்களின் வரி ஓவியம் தவறாமல் இடம் பெற்று விடும், அது தினத் தந்தியில் முழுப் பக்கத்தில் பிரசுரமாகும் போது அதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருந்ததும் உண்டு.
பாபு திரைப்படத்தைப் பற்றி பொம்மை இதழில் வெளிவந்த படத் தொகுப்பின் நிழற்படங்கள்
http://i872.photobucket.com/albums/a...bommai04fw.jpg
http://i872.photobucket.com/albums/a...bommai03fw.jpg
http://i872.photobucket.com/albums/a...mmai0102fw.jpg
பாபு படத்தைப் பார்த்தோம், சிறந்த நடிகர் விருது வழங்கப் படவில்லை என்பதைப் பற்றியும் விவாதித்தோம்... ஆனால் திரையில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே அவர் பெற்ற விருதை நாம் அறிய வேண்டாமோ... இன்று வரை யாருக்கும் இப்படிப் பட்ட பெருமை கிடைத்தாய் நாம் அறியவில்லை...
முதலில் இந்த நிழற்படத்தைப் பாருங்கள்...
http://i872.photobucket.com/albums/a...sakthiadfw.jpg
தான் திரையில் தோன்றுவதற்கு முன்பாகவே தனக்கென்று ஒரு பத்திரிகையின் முகப்பில் விளம்பரம் வரப் பெற்றவர், அதுவும் தன் குரலுக்கு...
யாரையாவது சுட்டிக் காட்டுங்களேன்...
டியர் mr_karthik,
பொன்மனம் படைத்த "பாபு" பற்றிய தங்களின் பதிவுக்கட்டுரை 24-காரட் தங்கம். தீபாவளித் திருநாளான அக்டோபர் 18, 1971 அன்று நடந்த "பாபு" நிகழ்வுகளை தங்கள் எழுத்தின்மூலம் ஒளிப்பேழையாகத் தந்து அசத்திவிட்டீர்கள்.
"பாபு" வருகைக்கு முன் இருந்த சூழல்...
அக்காவியத்தின் ஆரம்பநாள் அமர்க்களங்கள்...
இத்திரைஓவியம் குறித்த ஒரு மினி திறனாய்வு...
"பாபு"வின் பிரம்மாண்ட வெற்றி பவனி...
என ஒரே பதிவில் ஒரு தகவல் பிரளயத்தையே தந்து "பாபு"வின் வெற்றிக்கீரிடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை பதித்துவிட்டீர்கள் !
தங்களுக்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்களுடன் கூடிய உளப்பூர்வமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
"பாபு"வை மறக்க முடியுமா என வினவி மறக்க முடியாத பதிவுகளை அளித்து விட்டீர்கள் !
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி !
டியர் ராகவேந்திரன் சார்,
"பராசக்தி", "பாபு" ஆவணப்பதிவுகள் பிரமாதம், பாராட்டுக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா
கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா
சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்
பராசக்தி
[17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்
புகைப்பட ஆல்பம்
http://i1094.photobucket.com/albums/...ekaran16-1.jpg
http://i1094.photobucket.com/albums/...ekaran5a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...ekaran14-1.jpg
http://i1094.photobucket.com/albums/...aran12-1-1.jpg
தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
20.10 - மறக்க முடியாத நாள்
இதே நாளில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன் சீனாவுடனான யுத்தம் தொடங்கிய நாள் ...
(இந்திய சீன யுத்தத்தைப் பற்றி அறிய வைக்கியின் இணைப்பில் காணுங்கள்)
எங்கெங்கு காணினும் யுத்த சூழல்... மாலையானால் கும்மிருட்டு, ஊரடங்கு உத்தரவு அமல், யாராயிருந்தாலும் ஏதேனும் விமான சத்தம் கேட்டால் உடனே படுத்து விட வேண்டும்... பொருட்கள் ரேஷனில் அளவுடன் தான் வழங்கப் படும்...
குழந்தைகளாகிய நாங்கள் பள்ளி விட்டு வரும் போது முழங்கிக் கொண்டே வருவோம்... இந்தியா வாழ்க, சீனா ஒழிக....
அந்த நாட்களை இன்று நினைவு கூர்வதற்கு காரணம் ரத்த திலகம் படம்...
இந்தியாவில் நிலவிய யுத்த சூழலை அப்படியே படத்தில் பிரதிபலித்தார்கள் தாதாமிராசியும் நடிகர் திலகமும். அதை நமக்கு பாடல் மூலம் தந்தார்கள் கவியரசர், கேவிஎம் டிஎம்எஸ் கூட்டணி....
ஏராளமான நினைவுகள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம்...
தற்காலத் தமிழ் மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு, யுத்த சூழல் எல்லாம் என்ன வென்றே தெரியாது...
அந்தப் போர் சூழலை ஒலி வடிவில் தெரிந்து கொள்ள புத்தன் வந்த திசையிலே பாடலைக் கேளுங்கள்.
புத்தன் வந்த திசையிலே போர்