Page 296 of 401 FirstFirst ... 196246286294295296297298306346396 ... LastLast
Results 2,951 to 2,960 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

  1. #2951
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இதுவரை பதிவு செய்தது நான் சில ஆண்டுகளுக்கு முன் இங்கே எழுதியதின் மீள் பதிவுகள். இப்போது முதல் எழுதப் போவது இதுவரை எழுதாத புதிய பதிவுகள். ஆனால் ஒரு எச்சரிக்கை. நடுநடுவே நாம் அலசப் போகும் காலகட்டத்திற்கேற்ப மீள் பதிவுகள் வரலாம். கடந்த பதிவின் இறுதி பகுதி. 1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமாவின் ஓபனிங் ஷோ முடிந்த பிறகு தோன்றிய எண்ணங்கள்.

    ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.

    இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

    அந்த நாள் ஞாபகம்

    பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றி வீச்சை முதல் நாள் அளவிட முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். ஆனால் படம் பெரிய லெவலுக்கு போகப் போகிறது என்பது முதல் பத்து நாட்களிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது. ஒரு படம் நன்றாக போகிறது என்றால் காட்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு Q இருக்கும். காட்சி நேரத்திற்கு சற்று முன்போ அல்லது அந்த நேரத்திலோ Full ஆகும். ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அது மதியமோ மாலையோ இல்லை இரவுக் காட்சியோ படம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே ஹவுஸ் புல் போர்டு விழுகிறது, ஒவ்வொரு ஷோவிற்கும் heavy returns என்றல் படம் பிரமாதமாக போகிறது என்று அர்த்தம். அதுதான் சென்ட்ரலில் நடந்துக் கொண்டிருந்தது. சர்வ சாதாரணமாக 15 நாட்களில் நடைபெற்ற 50 காட்சிகளும் Full.

    இதே நேரத்தில் நியூசினிமாவில் ஞான ஒளி 10 வாரங்களை கடந்து 71 நாட்களை நிறைவு செய்கிறது. மே 5 அன்று 101 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து பட்டிக்காடா பட்டணமாவிற்காக மாறிக் கொடுத்த ராஜா ஷிப்டிங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. நடிகர் திலகத்தின் பழைய படங்களும் பல்வேறு அரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில்தான் கணேஷா திரையரங்கில் பாவ மன்னிப்பு படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

    எத்தனையோ படங்கள் வரலாம், எத்தனையோ பேர் நடிக்கலாம். ஆனால் காலத்தை வென்ற இதிகாச காவியங்கள் என்று ஒரு சிலவற்றைத்தான் வரலாறு குறித்து வைக்கும். அப்படிப்பட்ட இதிகாச காவியம் என்று வரலாறு கூறும் கர்ணன் அந்த காலகட்டத்தில்தான் மதுரை தினமணி திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்தப் படத்தின் மதுரை ராமநாதபுரம் விநியோக உரிமையை அந்நேரம் வாங்கியிருந்தவர் ஒரு சின்ன விநியோகஸ்தர். மதுரை டவுன் ஹால் ரோட்டில் தானப்ப முதலி தெரு வந்து சேரும் இடத்தை ஒட்டி அமைந்திருந்த டெல்லி வாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சற்றே diagonal -ஆக எதிர்புறத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அந்த சந்தின் dead end என்று சொல்லக்கூடிய இடத்தில்தான் அந்த விநியோகஸ்தர் அலுவலகம் அமைந்திருந்தது. படத்தை வெளியிட்ட அவரும் [அவர் பெயர் அவர் கம்பெனி பெயர் இப்போது நினைவில் இல்லை) தினமணி திரையரங்க உரிமையாளரும் மலைத்து போகும் வண்ணம் கர்ணன் சக்கை போடு போட்டது. நான்கு வாரங்கள் ஓடி ஒரு புதிய சரித்திரம் படைத்தது. அங்கிருந்து ஆரம்பித்து MR ஏரியா முழுக்க சாதனை படைத்தது. வாங்கின விலையை விட பல மடங்கு லாபம் அந்த விநியோகஸ்தருக்கு. அப்போது மட்டுமா 1978-ல் நவம்பர் மாதம் மீனாட்சியில் திரையிட்ட போதும் தொடர்ந்து 50 காட்சிகள் Full ஆகி அங்கிருந்து ஒரு பெர்ய ரவுண்டு வந்தது. அப்போது வெளியிட்டவர் வேறொருவர் .இது போல் எத்தனையோ முறை கர்ணன் சாதனை புரிந்திருக்கிறது. யார் வெளியிட்டாலும் வெற்றி பெறும் காவியம் கர்ணன். அந்த பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்.

    இப்படி புதிய பழைய படங்களின் ஓட்டம் கொடுத்த சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் நான் முன்பே குறிப்பட்டது போல் தயாரிப்பில் இருந்த படங்கள் மற்றொரு பக்கம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்து வெளிவரப் போகும் தர்மம் எங்கே, 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கிய வசந்த மாளிகை, பிப்ரவரி 2-ல் துவங்கிய ராஜ ராஜ சோழன், ரோஜாவின் ராஜா, என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72, ராஜாவின் 100-வது நாளன்று விளம்பரம் வந்த பாலாஜியின் அடுத்த படமான நீதி, மன்னவன் வந்தானடி, கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை, சித்ரா பௌர்ணமி போன்ற படங்களின் அணிவகுப்பு நடிகர் திலகத்தின் ரசிகர்ளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. இதை தவிர சினி பாரத்தின் பாரத விலாஸ் [அப்போது பெயரிடப்படவில்லை என நினைக்கிறேன்], முக்தாவின் தவப்புதல்வன், கோமதி சங்கர் பிலிம்ஸின் பொன்னுஞ்சல் மற்றும் தாய் ஆகியவையும் படப்பிடிப்பில் இருந்தன. கருப்பு வெள்ளை என்பதால் சற்று எதிர்பார்ப்பு குறைவு என்ற போதிலும் தவப்புதல்வனின் ஸ்டில்கள் ஆர்வத்தை மூட்டியிருந்தன. அதிலும் நடிகர் திலகம் ஜிப்பா அணிந்து மிக அழகாய் தோன்றிய ஸ்டில்ஸ், தான்சேன் மேக்கப் மற்றும் கையில் மைக்கை வைத்து நிற்கும் ஸ்டில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பொன்னுஞ்சல் படத்திற்கு ஆகாயப் பந்தலிலே பெரிய attraction-ஆக இருந்தது. சுருக்கமாக் சொன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விருந்தோ விருந்து என்று சொல்ல வேண்டும்.

    (தொடரும்)

    அன்புடன்

  2. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2952
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முரளி சார்..மிக்க நன்றி..

  5. #2953
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    கண்ணா! உங்கள் தமிழார்வத்தையும் கவிதை எழுதும் திறன் பற்றியும் மற்றவர்கள் புகழ்வதை படித்திருக்கிறேன். ஆனால் நேரிடையான வாசிப்பு அனுபவம் இல்லை. உங்கள் நடிகர் திலகம் அந்தாதி படிக்கும் போதுதான் தெரிகிறது. அந்த பாராட்டுகளுக்கெல்லாம் நீங்கள் தகுதியானவர்தான் என்று. முச்சங்கம் கணடு தமிழ் வளர்த்த நமது ஊரின் வித்தல்லவா? அது எப்படி சோடை போகும்? வாழ்த்துகள்!
    நிறைய எழுதுங்கள்! அன்புடன்
    Well Said Murali Sir
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #2954
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    கண்ணா! முச்சங்கம் கணடு தமிழ் வளர்த்த நமது ஊரின் வித்தல்லவா? அது எப்படி சோடை போகும்? வாழ்த்துகள்!
    ஒண்ணு கூடிட்டாய்ங்கைய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க .
    ஏதேது ,மண் வெறி முற்றி,என்னை கூட, திருவள்ளுவர் பஸ்ஸில் போகும்போது மதுரை பஸ் ஸ்டாண்டு வழியாக போனவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் என்பாய் கர்கள் போல. அவிங்களை ......
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2955
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    Well Said Murali Sir
    அன்பின் சந்திர சேகர் சார் நன்றி

    //ஒண்ணு கூடிட்டாய்ங்கைய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க // கோ..பா..ல்.. என்னப்பூ இப்படிச் சொல்றீங்க.. நாங்க எங்கிட்டு இருந்தாலும் ஒத்துமையாத் தான் இருப்போம்ல..//திருவள்ளுவர் பஸ்ஸில் போகும்போது மதுரை பஸ் ஸ்டாண்டு வழியாக போனவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்// அட ஆமாம்..இப்பத் தான் புரியுது நீங்க எப்படி நல்லா எழுதறீங்கன்னு..

  8. #2956
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சின்னகண்ணன் சார் ,

    தமிழில் நன்றாக கவிநயத்துடன் எழுதி உள்ளீர்கள் , இப்படியும் எழுதலாமோ ? நான் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்

  9. Thanks chinnakkannan thanked for this post
  10. #2957
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    டியர் kc சேகர் சார்,

    கர்ணன் படத்துடன் உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி

  11. #2958
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி சார்

    எங்களையும் மதுரைக்கு அழைத்து சென்று விடுகிரிர்கள் உங்கள் எழுத்தின் மூலமாக

    நீங்கள் திரையில் பார்த்த அத்தனை படங்களை பற்றியும் எழுத வேண்டும் , குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களில் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படங்களை பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை (உதரணமாக திரிசூலம் , தில்லானா , சிவந்த மண் இன்னும் பல )

  12. #2959
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது -35

    சென்ற பதிவில் கருத்து அதிகம் உள்ள படத்தை பற்றி எழுதியாதை தொடர்ந்து இந்த பதிவில் 1975 ல் வெளி வந்த action adventure படமான வைர நெஞ்சம் படத்தை பற்றி தான் இந்த தடவை அலசி உள்ளேன்

    கதை :

    ஒரு வங்கியின் உரிமையாளர் வங்கியில் ஊழல் செய்து விட்டு , அதை சரி கட்ட முடியமால் தற்கொலை செய்து கொள்ளுகிறார் , அவர் இறந்த பிறகு அவர் மகன் முத்துராமன் அவர் தந்தையின் பதவியில் அமர , அவருக்கு அவர் தந்தை எழுதிய கடைசி கடிதம் கிடைகிறது , அதில் தான் செய்த ஊழல் பற்றி அவர் எழுதி குறிபிடுகிறார் , இன்னும் சில நாட்களில் ஆடிட்டிங் செய்ய இருப்பதால் , முத்துராமன் பயத்தில் உறைந்து போய் இருக்கிறார் , அந்த நேரத்தில் முத்துராமனை அணுகிறது ஒரு கொள்ளை கும்பல் . அதாவது கொள்ளை நடந்தால் தவறு மறைந்து விடும் என்பது அந்த கொள்ளை கும்பலின் தலைவரின் ஆசை வார்த்தை , அதற்க்கு உடன் படுகிறார் முத்துராமன்
    கொள்ளை நடந்து விடுகிறது , ஆனால் அதை பார்த்து விடுகிறார் முத்துராமனின் தங்கை பத்மப்ரியா .

    அடுத்த காட்சியில் நடிகர் திலகம் கடத்தல்காரனாக அறிமுகம் ஆகிறார் , பிறகு தான் தெரிய வருகிறது , அவர்
    கடத்தல்காரன் இல்லை , நடந்த பேங்க் கொள்ளையை கண்டு பிடிக்க வந்து இருக்கும் துப்பறியும் அதிகாரி என்று , முத்துராமன் அதிர்ச்சி அடைகிறார் , தன்னை இயக்கம் , ஆட்டி படைக்கும் கொள்ளை கும்பல் தலைவனிடம் இந்த விஷயத்தை சொல்ல , நடிகர் திலகத்தை கொள்ள முத்துராமனை பணிகிறார் , முத்துராமன் நடிகர் திலகத்தை கொன்றாரா? அந்த கொள்ளை கும்பலின் தலைவன் யார் ?

    இந்த கேள்விகளுக்கு பரபரப்பாக விடை சொல்லும் படம் தான் இந்த
    வைர நெஞ்சம்.

  13. #2960
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாத்திரங்களின் பங்களிப்பு :

    நடிகர் திலகம் :

    திருடானாக அறிமுகம் ஆகி பின்பு துப்பறியும் அதிகாரி என்று தெரிய வரும் பொது இப்போது பார்த்தாலும் விறுவிறுப்பு , இவர் பாத்திரம் travel பண்ணும் விதத்தில் தான் இந்த படத்தின் மர்ம முடிச்சு அவிழ்க்க படுகிறது

    படம் ஆரம்பித்து அரை மணி நேரம் பிறகு தான் நாயகனின் அறிமுகம் , புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் கைவனம் , வேலை கோட் போட்டு கொண்டு அவர் நடந்து வரும் பொது மிக அழகான, மிக இளைமையான நாயகனாக தெரிகிறார் , அதற்க்கு அப்புறம் வழியில் நடக்கும் சண்டை , பெட்டிக்கு டபுள் டோர் என்று james bond முத்திரை அதிகம்

    தன்னை தான் தன் நண்பரின் தங்கை சந்தேகிறார் என்பதை அறிந்து கொண்டும் அதற்கு அதிகமாக அலட்டி கொள்ளாமல் அவர் வேலையை பார்ப்பது கூல் attitude .
    தன்னை அதிகமாக சந்தேகித்து டைரக்ட் ஆக கேள்விகளை கேட்கும் பொது அவர் உண்மையை கொட்டும் இடம் படத்தின் ட்விஸ்ட் , நடிகர் திலகத்தின் ஸ்டாம்ப்

    பல james bond படத்தில் ஒரு emotional bonding என்பது இருக்காது , ஆனால் நடிகர் திலகம் காதல் காட்சிகளில் கலக்கி இருப்பார் , அதற்க்கு அவர் தோற்றமும் ஈடு கொடுக்கும்

    முத்துராமன் :

    செகண்ட் ஹீரோ - நடிகர் திலகத்தின் பல படங்களில் இந்த படத்தில் இவர் பாத்திரம் சந்தர்ப்ப சூழ்நிலையால் தன் அப்பாவின் தவறுக்காக இவர் தப்பு செய்ய போக , இவர் மாட்டி கொள்ளுகிறார் . தன் நண்பர் துப்பறியும் அதிகாரி என்பதை அறிந்து அவர் முகத்தில் பல reactions , தன் நண்பரை கொலை செய்ய அவர் நிர்பந்திக்க படும் பொது , அவர் அதை செய்வதும் ,பிறகு குற்ற உணர்ச்சியால் துடிப்பதும் நன்றாக செய்து இருப்பார்
    பத்மப்ரியா :
    ஒரு James Bond படத்தில் நாயகிக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்குமோ இந்த படத்திலும் அதே அளவு தான் , காதல் காட்சிகளில் நன்றாக நடித்து இருக்கிறார் , நடிகர் திலகத்தை அவர் சந்தேக்கும் காட்சிகள் , முதலில் மோதல் , பிறகு காதல் என்று வழக்கம் போலே காட்சிகள் . இவர் நாயகனுக்கு உதவும் காட்சிகளில் கதையின் நாயகியாகவும் செயல் படுகிறார்

    வில்லனாக பாலாஜி :

    இவர் பாத்திரத்துக்கு அதிகம் வலு சேர்த்து இருக்கலாம் படத்தின் வெற்றி விச்சு அதிகம் ஆகி இருக்கும்

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •