-
19th April 2016, 12:09 AM
#11
Junior Member
Senior Hubber
சிவாஜி பாட்டு-6
------------------
தாளமும்,வேகமுமாய்
மனுஷனை அசத்திய பாடலிது.
"லட்சுமி வந்தாச்சு"படம் எங்கள்
ஊரில் வந்த போது,
இதன் இயக்குநரான
அமரர்.ராஜசேகர் இயக்கிய
"மாவீரன்",இன்னொரு திரையரங்கில் ஓடிற்று.
ஒரே ஒரு தெரு தாண்டி
கொஞ்ச தூரம் நடந்தால் வந்து
விடுகிற திரையரங்கில் ஓடிய
மாவீரனுக்குப் போகாமல்
இரண்டரை கி.மீ.தாண்டி நான்
போய் லட்சுமி வந்தாச்சு
பார்த்ததற்கு..படம் பரிசாயிற்று.
இந்தப் பாட்டு- கூடுதல்
சந்தோஷம் தந்த பரிசாயிற்று.
--------
மிகச் சிரமப்படுத்தும் நீளமான
ராகப் பாதையில் கவனமாய்ப்
பயணிக்கும் அமரர்.மலேஷியா
வாசுதேவன் அவர்களின்
கம்பீரக் குரல்..
மழைக்குப் பிறகான
மண்வாசனை தரும் இதத்தை
மனதுக்குத் தந்த ரவீந்திரன்
அவர்களின் இனிய இசை..
ஜெயசித்ராவும்,ரேவதியும்
பச்சை பரப்பிய புல்வெளியில்
சுழன்றாடும் நாட்டியம்..
நாயகராய் நம் நடிகர் திலகம்..
வெற்றிக் கூட்டணியில்
ஜெயிக்கிறது பாட்டு.
-------
குதிக்கும் உடம்பும்,கொத்து
முடி சதிராட்டமும், தாளம்
போகிற போக்கிற்குத் தானாய்
மாறும் முகபாவமுமாய்..
பின்னுகிறார் நம்மாள்.
"நீ ஒரு"-வலது கையால்
அழகான அபிநயம்.
"பிருந்தாவனம்"- இரண்டு
கைகளாலும் ஒரு
புல்லாங்குழலைக்
கற்பித்து,கிருஷ்ணன் போல்
வாசித்து, முகத்தில் ஒரு நடன அசைவு.
ஒரே ஒரு வார்த்தை.
ஒரு நூறு விளக்கம்.
அய்யன் தரும் ஆச்சரியங்கள்
எங்களுக்குப் பழக்கம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
19th April 2016 12:09 AM
# ADS
Circuit advertisement
Bookmarks