Page 14 of 54 FirstFirst ... 4121314151624 ... LastLast
Results 131 to 140 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

  1. #131
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Hi KR,
    This is for your kind information.I never came to this thread on my own but got dragged by three of your friends. But I am surprised the way people with differing views are treated here . Anyway ,Thanks to Rajaram,Venki&Poem . Bye.
    Last edited by Gopal.s; 18th August 2014 at 04:33 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Hi KR,
    This is for your kind information.I never came to this thread on my own but got dragged by three of your friends. But I am surprised the way people with differing views are treated here . Anyway ,Thanks to Rajaram,Venki&Poem . Bye.
    ஒரு ஆளுமையின் குணாதியங்களை விமர்சனம் செய்வதாகட்டும், அவரது பங்களிப்பை மற்றவர்களோடு ஒப்பிட்டு தரம் பிரிப்பதலாகட்டும் .. இருமுனை கத்திபோன்றது. நான் முன்பே சொன்னதுதான். உங்களின் பதிவில் கலகத்தனமே மேலோங்கியுள்ளது. அதனால் எதிர்வரும் விளைவுகளுக்கு நீங்களும் சமபாதியில் பொறுப்பேற்க வேண்டியதுதான். ஜெயமோகன் விஷயத்தில் கூட, அக்கட்டுரைகளின் சாராம்சத்தைக் கூட நீங்கள் தொடவில்லை. ஆனால் ஏழாம் மனிதர்கள், விஷ்ணுபுரம் என உரையாடலின் எல்லைகளை விட்டு தாண்டிச் சென்று அடம்பிடிக்கிறீர்கள். என்ன செய்வது? நான் முன்பே சொன்னதுபோல ஒரு நூல் பிடித்தாற்போல உங்களால் ராஜா விஷயத்தில் உரையாடல் நிகழ்த்த முடிவதில்லை என மீண்டும் மீண்டும் சபையில் நிரூபணம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ராஜா என வரும்போது ஒரு சாதாரண வெகுஜனப் பார்வைகளில் ஒன்றான "ராஜா வந்தார்-வென்றார்-சென்றார்" பாணியிலேயே ஒரு புரிதலை வைத்துக்கொண்டு அதையொட்டியே உங்களின் அபிப்ராயங்களை வளர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த நிலையில் இருந்துகொண்டு இங்குள்ள ராஜா ரசிகர்களோடு உங்களால் ஒரு அடி கூட உரையாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பது என் பார்வை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. Likes appushiva liked this post
  5. #133
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Venkki,

    I am not averse to arguments. You people want me to start with worship but the same is not possible. But the way ,your guys are mud-slinging the fellow hubbers like attributing illness,family,disrespectful expressions (it can be with public figures not with fellow hubbers in personal way). But I have no problem with you and Poem.But that "Guy" from U.S ,K.R sounds funny and weird.Anycase,I am going to write objectively on Ilayaraja avoiding technical descriptions but as you stated on Emotional-based ,cultural-linked enlisting his achievements and weak points. You are most welcome to voice your views.
    Last edited by Gopal.s; 18th August 2014 at 08:38 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #134
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ஒரு ஆளுமையின் குணாதியங்களை விமர்சனம் செய்வதாகட்டும், அவரது பங்களிப்பை மற்றவர்களோடு ஒப்பிட்டு தரம் பிரிப்பதலாகட்டும் .. இருமுனை கத்திபோன்றது. நான் முன்பே சொன்னதுதான். உங்களின் பதிவில் கலகத்தனமே மேலோங்கியுள்ளது. அதனால் எதிர்வரும் விளைவுகளுக்கு நீங்களும் சமபாதியில் பொறுப்பேற்க வேண்டியதுதான். ஜெயமோகன் விஷயத்தில் கூட, அக்கட்டுரைகளின் சாராம்சத்தைக் கூட நீங்கள் தொடவில்லை. ஆனால் ஏழாம் மனிதர்கள், விஷ்ணுபுரம் என உரையாடலின் எல்லைகளை விட்டு தாண்டிச் சென்று அடம்பிடிக்கிறீர்கள். என்ன செய்வது? நான் முன்பே சொன்னதுபோல ஒரு நூல் பிடித்தாற்போல உங்களால் ராஜா விஷயத்தில் உரையாடல் நிகழ்த்த முடிவதில்லை என மீண்டும் மீண்டும் சபையில் நிரூபணம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ராஜா என வரும்போது ஒரு சாதாரண வெகுஜனப் பார்வைகளில் ஒன்றான "ராஜா வந்தார்-வென்றார்-சென்றார்" பாணியிலேயே ஒரு புரிதலை வைத்துக்கொண்டு அதையொட்டியே உங்களின் அபிப்ராயங்களை வளர்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த நிலையில் இருந்துகொண்டு இங்குள்ள ராஜா ரசிகர்களோடு உங்களால் ஒரு அடி கூட உரையாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பது என் பார்வை.
    இசை அல்லது கலை என்பது மரபு,பாரம்பரியம் மற்றும் பிரத்யேக இன ,குண ,மனம் கொண்ட முன்னோர்களின் பங்களிப்பின் சங்கிலி கண்ணி நீட்சி. பழையதை ஒப்பிடாமல் ,இன்றைய பங்களிப்பை மட்டும் கொண்டாட முடியாது. நடுவில் மாட்டியவர்க்கோ பழையது,புதியது இரண்டும் அளவு கோலாய் நிற்பதை தவிர்க்க இயலாது.

    ஒரு எழுத்தாளனையோ அல்லது இசை கலைஞனையோ ,அவன் படைப்புகளை அவன் தனிப்பட்ட வாழ்க்கையின் கூறுகளை கொண்டு(பிரத்யேக வெற்றி-தோல்விகள்,வியாபாரம் இவைகளும் சேர்ந்த) அளப்பதை தவிர்ப்பவன் நான்.

    ஆனால் தமிழனாக,தமிழ் சூழலில்,இந்த ஆளுமைகள் பொதுவில் உதிர்க்கும் தத்துவ முத்துக்களை பொருக்க ,ஒரு பெரும் கூட்டமே அலையும் போது ,இவற்றை விமரிசிப்பதும் நம் சமூக கடமையாகி விட்டது.திருக்குறளும் ,சங்கங்களும் தோன்றிய அறிவு பூமியில், திருடாதே,பொய் சொல்லாதே,தூங்காதே என்று சொல்வதற்கே ,ஒரு நாயகர் தேவை பட்ட புண்ணிய பூமியில் அவதரித்த அதிர்ஷ்டம் செய்தவர்கள் நாம்.


    இந்த சூழலில் ,திடீர் நாயகர்களை உருவாக்கி,பழைய சாதனைகள் புறம் தள்ள படும் போது ,அதுவும் 80களின் ஒரே agenda கொண்ட கும்பல் ஒன்று, nostalgia ,பரிச்சயம், limited exposure கொண்டு ஆளுமைகளை ,வலை தளத்தில் உருவாக்குவது தவிர்க்க முடியாதது. ஆனால் கலையின் தன்மையையே ஒரு ஆளுமைக்குள் அடக்கி சுரங்களை முதலில் கண்டவர்,மனங்களோடு இணைப்பை ஏற்படுத்தி கொண்ட முதல் படைப்பாளி என்று கலையையும் ,ஆளுமையையும் வைத்து அவியல் பண்ணும் போது ,என்னை மாதிரி கி.மு முதல் நேற்று வரை கலை,இலக்கிய தொடர்ச் சியோடு ஓரளவு பரிச்சயம் கொண்டவர்களின் ஒப்பீட்டால் நன்மை விளையுமே அன்றி,எக்காலமும் கலகம் உண்டாகாது.

    புதிதாக வெட்ட பட்டதானாலும் கிணற்றிலேயே நீந்தி களிக்காமல் ,மிக பழமையான,புது புனல்களும் சங்கமமாகும் கடலில் நீந்துவதே எனக்கு உவப்பானது.



    வலையை வைத்து கலையை கண்டறிய முடியாது. கலகத்தை வைத்து ஓரளவு கண்டறிய தலை படலாம்.
    Last edited by Gopal.s; 18th August 2014 at 09:46 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #135
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by kr View Post
    guys: Why waste time with this guy? He thinks rehman makes good music and is comparable and better than ilaiyaraja. We dont think so. I have never seen the same brilliance that i see in ir's compositions in others.
    kr,


    கோபாலுக்கு ராஜா சாரின் இசையை தவிர வேறொன்றும் அவரிடம் பிடிக்கவில்லை.அவ்வளவு தான். அவர் ரஹ்மானை உயர்த்தி ராஜாவை மட்டம் தட்டி பேசவில்லை. - அப்படி பேசினாலும் தவறில்லை. இருவருமே தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் அவர்கள் சரியாக பயணிக்கிறார்கள். ஒப்பிட்டு பேசுவதால் அவர்கள் இருவரும் குறைந்து விட போகிறார்களா என்ன?

    கோபாலின் பதிவுகளை படிக்கும் போது அவருடைய தன்னம்பிக்கை தெரியும். நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. என்னுடைய கோபம் எல்லாம் ராஜா சாரை கோபாலும் இன்னொருவரும் மதுரகீதங்கள் திரியில் (நிறைய ஓல்ட் கிளாசிக் பாடல்கள் அங்கு கிடைக்கும் ) சற்று மரியாதை குறைவாகவும் ஏளனமாகவும் பேசிவிட்டார்கள் என்பது தான். ஒரு முறை இரு முறை அல்ல.. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம். - அது நிச்சயம் தவறு, இதை சொன்னால் மறுபடியும் கோபால் ஏதாவது எழுதுவார். சொல்லி விட்டு போகட்டும்.


    ஒரு மாறுதலுக்காக, யாரவது ராஜா சாரை பற்றிய துணுக்கு செய்தி இருந்தால் எழுதுங்களேன்... ஒரு ரேர் போட்டோ இருந்தாலும் ஓகே தான்.


    போயம், வெங்கிராம்: நன்றி.

  8. #136
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கிராமஃபோன்: இளையராஜாவின் பாடல் பெற்ற ஸ்தலங்கள்!

    http://tamil.thehindu.com/opinion/co...cle6325467.ece
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. Likes rajaramsgi liked this post
  10. #137
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    "பக்தி மணம் கமழும் இசைஞானியின் படைப்புகள்" சிறப்புக் கருத்தரங்கு ஆகஸ்ட் 16, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் !!!


    Attachment 3482

    No coverage found on recent the function yet.. but a photo and his comments about girivala pathai encroachments on the link http://tamilcinema.com/ilayarajas-vi...iruvannamalai/

  11. #138
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    அப்போது நான் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொறியியல் இரெண்டாவது ஆண்டு படித்த நேரம். என் தாத்தாவிடம் கெஞ்சி கூத்தாடி அவருடைய காரில் இருந்த ஓஷன் கேசட் ப்ளேயரை கழட்டி வாங்கி வந்து ரூமில் செட் பண்ணி வைத்திருந்தேன். அம்ப்லிபயர் வழியாய் , பானையில் ஸ்பீக்கர் கட்டி ஹாஸ்டல் ரூமில் எந்த நேரமும் ராஜா சாரின் பாடல்கள் தூள் பறப்பது வழக்கம். .

    வேதம் புதிது மற்றும் கொடி பறக்குது ஆகிய இரண்டு படங்களிலும் அடி வாங்கிவிட்டு, கல்கியில் என் உயிர் தோழன் தொடரை பாரதிராஜா எழுதி வந்தார். ராஜா சாரை மனதில் வைத்து தான் இதை எழுதி இருக்கிறார் என்று நினைத்து நானும் விடாமல் கல்கி படித்தேன். முடிவுரை எழுதாமல், திடீரென தொடரை நிறுத்தி விட்டார். பிறகு அதையே படமாக்கி வெளியிட இருந்தார்.


    ராஜா சாரும் பாரதிராஜாவும் இனைந்து மீண்டும் வேலை செய்ய போவதாய் விளம்பரம் வந்தது. இவர்கள் சேர்ந்து விட்டார்கள் என்று தெரிந்த எங்களுக்கு படம் மற்றும் பாடல் வெளியீட்டுக்காக காத்திருந்த நாட்கள் நரக வேதனையான நாட்கள்.


    ஒரு வழியாய் படம் வெளியீடு என்று விளம்பரம் வந்தது, ஆனால் சிதம்பரத்தில் படம் ரிலீஸாகவில்லை. எங்கெங்கு ரிலீஸ் என்று தெரியாமல், நண்பர்கள் ரமேஷ் மற்றும் பாலாவோடு கடலூர் சென்றேன். அங்கும் ரிலீஸ் இல்லை. மிகுந்த ஏமாற்றத்தோடு அரங்கேற்ற வேலை படம் பார்த்துவிட்டு வந்தோம். ஆனால் என் உயிர் தோழன் ஏக்கம் போகவில்லை.


    மற்றொரு நாள் கும்பகோணத்தில் படம் வெளியீடு என்று தெரிந்து ஏக குதுகூலம். (பாண்டியன் திரை அரங்கம் என்று நினைவு) ஆனால் கையில் காசு இல்லை. அதே ரமேஷ், பாலாவோடு ரயிலில் டிக்கட் எடுக்காமல் கும்பகோணம் சென்று என் உயிர் தோழன், டிக்கட் எடுத்து, பார்த்தோம். கடலோர கவிதைகளுக்கு பிறகு மூன்றாண்டு காலம் காத்திருந்து, குயிலு குப்பம் மூலமாய் பம்பர் பரிசு அடித்தது. பாடல் கேட்ட முதல் முறையே சொக்கி போய் இன்று வரை என்னுடைய ஆல் டயம் க்லாசிக்ஸில் இடம் பெற்றிருக்கிறது. மிகவும் தாமதாய் சிதம்பரம் லேனாவில் வெளியிட்டார்கள். பாரதிராஜா கிட்டார் வாசிக்க, ராஜா சார் அருகில் இருப்பது போல் விளம்பரம் வந்தது, . இப்போது நினைத்தாலும் சுகமாய் இருக்கும்.


    பொறியியல் மூன்றாம் ஆண்டில் புது நெல்லு புது நாத்து வந்தது . இதிலும் ஒரு பம்பர் பரிசு. இந்த படத்தில்2. பூ பூ பூ பூ பூத்த சோலை.. சிட்டான் சிட்டான் குருவி, இந்த ஹம்மிங் நினைவிருக்கிறதா? முதலாவது இடை இசையில் ஹே ஹே, ஹெ ஹ ஹே ஹே, ஆஹ ஆஹா அஹா ஹா ஹா..... இதே ஹம்மிங் சரணத்தின் வரிகளின் நடுவில் ஹா ஹா என்று..... கொஞ்சுவார் ராஜா சார். எனக்காக இந்த பாடலின் ஹம்மிங்கை கூர்ந்து கேளுங்கள். . புது நெல்லு புது நாத்து வந்த நேரம் காலேஜ் கல்சுரல்ஸ்..பாண்டிச்சேரி சென்று சரக்கு வங்கி வந்து குடித்து விட்டு விடாமல் தினமும் பார்த்த படம் இது. படம் பார்த்து விட்டு வந்து மறுபடியும் சரக்கு பிறகு கல்சுரல்ஸ்.. நல்ல நேரம் அதெல்லாம்


    கடைசி வருடம் படிக்கும் போது நாடோடி தென்றல்..மறுபடியும் பம்பர் பரிசு: மணியே மணி குயிலே. படம் ஆரம்பித்த 25 வது நிமிடத்தில், ரஞ்சிதாவுக்கு கார்த்திக் மூக்கு குத்தி விடும் காட்சி: ஒரு 2 நிமிடம் வரும் கட்சிகளும் பின்னணி இசையை எதோடு ஒப்பிடுவது? எதிர் நீச்சலிடும் வாத்து, நீர்வீழ்ச்சி, கிரேன் காட்சி, மயில் இறகால் ரஞ்சிதாவின் மூக்கை வருடும் கார்த்திக்.. - குடுத்து சிவந்த கரமல்லவா ராஜா சாருக்கு, இந்த 2 நிமிடம் வரும் இசைக்கு மயங்காதவன் முற்றும் துறந்த ஞானி தான், சந்தேகமே இல்லை. இந்த படத்தை கல்லூரியின் கடைசி நாளில் எங்கள் வகுப்பிலிருந்து அனைவரும் சென்று வடுகனாதனில் பார்த்தோம். இதுவும் மறக்க முடியாத படம்.


    மறுபடியும் இந்த இருவரும் இனைந்து திரைப்படத்தில் வேலை செய்யாவிட்டாலும், தெற்கத்தி பொண்ணு சீரியலுக்கு டைட்டில் பாடல் போட்டு குடுத்திருக்கிறார். இவர்கள் மீண்டும் இனைந்து ஒன்னும் புதியதாய் கிழிக்க போவதில்லை. ஆனால் சேர்ந்திருந்த காலங்களில் வந்த முத்துகளின் விலை கொஞ்ச நஞ்சம் இல்லை.
    Last edited by rajaramsgi; 20th August 2014 at 02:18 AM.

  12. Thanks venkkiram thanked for this post
    Likes Gopal.s, mappi, venkkiram liked this post
  13. #139
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    இதை இப்போது இங்கு எழுத காரணம்? என் உயிர் தோழன் முழு படத்தையும் நேற்று யாரோ ஒரு புண்ணியவான் யூடியூபில் ஏற்றி இருக்கிறார். அதை முழுவதும் பார்த்து விட்டு தான் தூங்கினேன்.மனம் முழுவதும் நான் கல்லூரி படித்த காலகட்டத்தில் வந்த பாரதிராஜா - ராஜா சார் படங்கள் நினைவில் வந்து வாட்டி எடுத்து விட்டது. அதனால் இங்கு கிறுக்க வேண்டியதாகி விட்டது.



    https://www.youtube.com/watch?v=yUrIBNQu-84


    https://www.youtube.com/watch?v=ZqCcGTVVlTU
    Last edited by rajaramsgi; 20th August 2014 at 01:45 AM.

  14. Thanks mappi, venkkiram thanked for this post
    Likes venkkiram liked this post
  15. #140
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    வசிகரிக்கும் நடை ராஜாராம்! தொடர்ந்து எழுதுங்க ..

    நாடோடித் தென்றல் படத்தை நானும் எனது பள்ளி நண்பன் ஒருவனும் மயிலாடுதுறை கோமதி தியேட்டரில் கண்டு களித்தோம். பனிரெண்டாம் வகுப்பு முடிந்து நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்களுக்காக மயிலாடுதுறைக்கு வந்து சென்று கொண்டிருந்த காலக் கட்டம். இளையராஜா- பாரதிராஜா அதுவும் ஒரு பீரியட் படம். படைப்பாளிகளுக்காகவே திரைப்படம் பார்க்கும் பழக்கம் அரும்பிக் கொண்டிருந்த பருவம் அது.

    பாடல்கள் முன்னரே வெளியாகி எங்கு சென்றாலும் மணியே மணிக்குயிலே, யாரும் விளையாடும் தோட்டம், சந்தன மார்பிலே பாடல்கள் காற்றில் கரைந்து கொண்டே இருந்தன. வைரமுத்து இல்லாத இடத்தை ராஜாவே ஆக்ரமித்து பாடல்கள் முழுவதையும் எழுதியிருந்தார். தியேட்டரில் பத்து பதினைந்து நபர்கள்தான் இருப்பார்கள் மொத்தமாகவே எங்களையும் சேர்த்து. பால்கனியில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தோம். முதல் இருபது நிமிடங்களுக்கு எங்களால் படத்தோடு ஒன்றமுடியவில்லை. காரணம் திரைக்கு மிக அருகே அமர்ந்திருந்த ஒருவர் படத்தை ஒன்றுக்கு மேற்பட்ட படத்தை பார்த்திருப்பார் போல. ஒவ்வொரு வசனத்தையும் திரையில் வருவதற்கு முன்னரே மிகவும் சத்தமாக எழுப்பிக் கொண்டிருந்தார். பால்கனியிலிருந்து ஒருவர் பொறுமையிழந்து கீழே இறங்கி திட்டிவிட்டு வந்தபிறகே எல்லோராலும் பின்னணி இசை, வசனங்களோடு ஒன்ற முடிந்தது.

    நீங்கள் குறிப்பிட்டிருந்த மூக்கு குத்தும் காட்சியின் பின்னணி இசை காவியமான ஒன்று. பாடல்கள் மட்டுமே படத்தின் தூணாக இருந்ததை உணர்ந்த போதுதான் பாரதிராஜாவும் கமலைப் போலவே (விக்ரம்) சுஜாதாவின் கதையை படமாக்கி மோசம் போய்விட்டாரே, இவருக்கு செல்வராஜ் போன்றவர்கள்தான் லாயக்கு என நினைத்தேன்.

    இன்றைக்கும் இப்படத்தை இப்படி சிலாகித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் இசைஞானியின் பாடல்களும், பின்னணி இசையும் மட்டுமே. கார்த்திக்கும் நடிப்பில் சொதப்பியிருப்பார். நடிப்பு என்றால் என்ன விலை எனக் கேட்டும் ரஞ்சிதா ஒரு புதுமுகம். ஜனகராஜ் பாண்டியன் யாருக்குமே சொல்லிக் கொள்வதுபோல அழுத்தமான காட்சிகள் இல்லை.

    படத்தோடு பார்க்கும்போது 'ஏலமலை காட்டுக்குள்ள' பாடல் எங்கேயோ கொண்டு சென்றது. மலேசியா வாசுதேவன் குரல் விஸ்வரூபம் எடுத்த பாடல் அது. ஏக்கமான அதே நேரத்தில் இயலாமை, சோகம் என பலவித உணர்ச்சிகளை கொட்டி செதுக்கியிருப்பார். ஒரு கணம் ஒரு யுகமாக - பாடலில் ராஜா தனது டூயட் பாடல்களின் புகழ்பெற்ற இணை குரலான ஜானகியோடு சேர்ந்திருப்பார். மணியே மணிக்குயிலே - ராஜா ஆரம்பித்துக் கொடுக்க மனோவும், ஜானகியும் சிறப்பாக பாடி முடித்திருப்பார்கள். பள்ளி முடிந்து கல்லூரி சென்றபிறகும் அடிக்கடி எல்லோராலும் கேட்டு ரசிக்கப் பட்ட பாடல். (அதுவும் விடுதியில் இரவு நேரங்களில்) "சந்தன மார்பிலே" - மனோ-ஜானகி குரல்களில்.. ஜானகிக்கு கிடைத்த மூன்று பாடலுமே ஒன்றுக்கொன்று வேறுபடும் உணர்வு பாடல்கள். பன்முகத் திறமைக்கே பிறந்த பாடகி அல்லவா அவர்.. எல்லாவற்றிலும் முத்திரை பதித்திருப்பார். மால்குடி சுபா - அப்போதைய நேரத்தில் நவீன, வசிகரிக்கும் குரல். மேற்கத்திய வகைப் பாடலான (படத்தில் மேற்கத்திய பெண் பாடுவது) ஆல் த டைம் மூலம் ராஜா சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்திருப்பார்.

    அடைமொழி என்னவோ இயக்குனர் இமயம். ஆனால் இமயத்தின் படைப்பை இந்த நொடிவரை தாங்கிப் பிடிப்பதே ராஜாதான்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  16. Thanks appushiva thanked for this post
    Likes appushiva, Gopal.s liked this post
Page 14 of 54 FirstFirst ... 4121314151624 ... LastLast

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •