Page 281 of 400 FirstFirst ... 181231271279280281282283291331381 ... LastLast
Results 2,801 to 2,810 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2801
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாசு சார்
    இந்த மனம் ஒரு குரங்கு டைரக்டர் ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி தானே
    நமது அறிவாளி டைரக்டர்
    I think so krishna sir.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2802
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    துளசி மாடம் பதிவுகள் நன்று கிருஷ்ணா சார். இப்படத்தின் பாடல்கள் பார்த்திருக்கிறேன் பலமுறை. ஆனால் படம் பார்த்ததில்லை இதுவரை . ஆம்பிள்ளை போல, அவர் அண்ணன் போலவே இருக்கும் சந்திரகாந்தாவைப் பிடிக்காது. (அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து தவிர)

    அதே போல் ஆடும் மயிலே ஆட்டமெங்கே பாடல் எனக்கு அறவே பிடிப்பதில்லை. ஏன் என்று தெரியாது. ஆனால் மையைத் தொட்டு எழுதியவர் கிளாஸ். ரொம்பப் பிடிக்கும்..
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2803
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vasudevan Sir,

    Thanks a lot for the Pesum Padam pose of Our NT as well as

    the photos from Kathavarayan.

    Advance congratulation for your 5000 posts and awaiting your memorable
    post from you about NT.

    Regards

  5. #2804
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜஸ்ட் ரிலாக்ஸ்.



    இயக்குனர் வரிசை சி.வி.ராஜேந்திரன்.





    படம்: கலாட்டா கல்யாணம்

    இசை: மன்னர்

    நடனம்: தங்கப்பன் மாஸ்டர்

    ஒளிப்பதிவு டைரெக்டர்: பி.என்.சுந்தரம்

    பாடல்: 'உறவினில் 50 50... உதட்டினில் 50 50'



    ரொம்ப அழகான பாடல் ஒன்று சி.வி.ராஜேந்திரன் இயக்கிய 'கலாட்டா கல்யாணம்' திரைப்படத்திலிருந்து.

    இந்தப் பாடலை இயக்கிய விதத்திலும் தன்னுடைய முத்திரையை, வித்தியாசத்தை உணர்த்தியிருப்பார் ராஜேந்திரன்.

    நடிகர் திலகம் நாயகனாக இருந்தாலும் இப்பாடல் எ.வி.எம். ராஜனுக்கும், துணை நடன நடிகை ராஜேஸ்வரிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.

    காதலிக்கும் ஜோதிலஷ்மியை விட்டு விட்டு ராஜேஸ்வரி மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் ராஜன் அவருடன் இணைந்து பாடும் காட்சி.

    இந்த ராஜேஸ்வரி என்ற நடிகை சுமார் ரகம்தான். சற்றே நீண்ட முகம். பார்க்க சுமார்தான். ஆனால் ஆட்டம் படு ஜோர். நல்ல உயரமும் கூட. குட்டைப் பாவாடை கவுனுடன் அருமையான கஷ்டமான ஸ்டெப்களை ஆடியிருப்பார். முகபாவங்களிலும் தேறி விடுவார். ராஜனும் பயபக்தியுடன் நடிகர் திலகத்தை மனதில் நினைத்துக் கொண்டே அவரைப் போலவே டிரெஸ் அணிந்து, அவரைப் போலவே செய்ய முயற்சிப்பார் வழக்கம் போல. இந்தப் பாடலில் 'கியூட்'டாகவே இருப்பார்.

    இப்பாடலில் டாப் ஆங்கிளிலிளிருந்து சில ஷாட்களை அற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள். காமெரா மாடி மேலிருந்தே அழகாக சுழலும்.

    மிக அழகான ஷாட்கள். குண்டு பலப் உள்ளே எரிய வெளியில் இருக்கும் லேம்ப் ஷேடோவுக்கு மேல்புறம் ராஜனின் முகம் சைட் குளோஸ்-அப் பிலும், லேம்பிற்கும், ஷேடோவிற்கும் இடைப்பட்ட இடைவெளியில் ராஜேஸ்வரியின் முகமும் தெரிவது போல அசத்தலான காட்சி ஒரு சில வினாடிகளில் நாம் பார்ப்பதற்கு முன்னேயே கடந்து போய் விடும்

    அதை இங்கு ஸ்டில்லாக அளித்திருக்கிறேன்.



    'கன்னம் தனி
    இவளுடைய கன்னம் கனி
    சின்னக் கிளி
    இனிய மொழி என்றும் ஹனி'



    ராஜன் கையில் வைத்திருக்கும் சிறு சிறு வட்ட வடிவ கண்ணாடித் துண்டுகள் பதித்த அட்டையை நம் பக்கம் திருப்பும் போது ராஜேஸ்வரியின் பல முகங்கள் அதில் பிம்பங்களாய் தெரிவது ராஜேந்திரனின் திறமையான காமிரா கோண ரசனைக்கான அத்தாட்சி காட்சி. குருவை மிஞ்சின சிஷ்யனாகி விடுவார். இந்தக் காட்சியை பதட்டமில்லாமல் சில வினாடிகள் நீட்டித்திருப்பார் ராஜேந்திரன். அதனால் நிதானமாக பார்த்து நாம் என்ஜாய் செய்யலாம். ராஜேஸ்வரியின் கால்கள் வலதும் இடதுமாக (அதுவும் மிக அகலமாக கால்களை விரித்து வைத்து) மாறி மாறி ஆடுவது நடன இயக்குனர் தங்கப்பனின் பெண்டு நிமிர்த்தும் பணி.

    இரண்டாவது சரணத்தில் அந்த ஷெனாயின் தேவாமிர்த இன்னிசையின் போது மறுபடியும் காமெரா டாப் ஆங்கிளில் பயணிக்கும். கீழே ராஜேஸ்வரி குட்டைப் பாவாடையை சுழற்றியபடி ஆட, மேலிருந்து காமேரக் கோணத்தின் பார்வையில் ராஜேஸ்வரி ஆடுவது குடை ராட்டினம் சுற்றுவது போல் இருக்கும். அதுவல்லாமல் ஒரே கோணத்தில் இல்லாமல் காமிராவை சாய்த்து வேறு காட்சியை சாய்வாக எடுத்திருப்பார்கள். பி.என்.சுந்தரம் fantastic job.

    அடுத்து மோக போதையை உண்டாக்கும் வரிகள்.

    'முத்துச்சரம் மடியில் விழும் பத்துத்தரம்
    வெள்ளிக்குடம் சுவை அமுதை அள்ளித் தரும்'

    பொல்லாத கவிஞனய்யா இந்த 'வாலு' வாலி .

    இரண்டாவது வரி ஒலிக்கும்போது ராஜேஸ்வரி 'அதை' ராஜனுக்கு உணர்த்துவது போல நமக்கு உணர்த்தும் உடல் மொழி. 'வெள்ளிக்குடம்' எனும் போது அவர் தோள்பட்டைகளை ராஜன் அருகில் சற்றே குலுக்கி மோக போதை பார்க்கும் பார்வை. கைகளை நெஞ்சுப் பக்கமாய் வேறு கொண்டு போய் காட்டுவார். யப்பா! அநியாயம் போங்க.

    பாட்டு உற்சாகமாய் போய் முடியும் தருவாயில்,

    'முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர'

    அங்கு ஒரு டிராமா போட வரும் நடிகர் திலகமும், நாகேஷும் வந்த காரியத்தை ஒரு வினாடி மறந்து, அந்த டியூனின் தாளத்திற்கு ஏற்ப கால்களை சற்றே எம்பிக் குதித்தாவாறே ஒருவரையொருவர் மெய்மறந்து வெட்கத்துடன் பார்த்துக் கொள்ளும் அழகை வர்ணிக்கவே முடியாது. (அதுவும் நடிகர் திலகம் சிறு குழந்தை போல நாக்கை வேறே சற்று வெளியே நீட்டி நாணுவார்)

    பாடல் முழுக்க பரவி பாடலுடனேயே இழைந்து வரும் அம்சமான இசைக்கருவிகளின் சங்கமம் புரியும் விந்தைகள் அருமையிலும் அருமை.

    ராட்சஸியை எத்தனையோ முறை புகழ்ந்தாலும் இப்பாடலை அவர் அளித்திருக்கும் சுகமே அலாதி சார். பின்னிப் பெடல் எடுக்கிறார். ஈஸ்வரி குரலுடனேயே '50 50, பாதி பாதி, ஆஹ் ஆஹ ஹூ' என்று இணைந்து வரும் சி.எஸ்.கணேஷ் (சங்கர் கணேஷ்) அவர்களின் குரலும் காலாகாலத்துக்கும் மறக்க முடியாது.

    பார்த்து அனுபவியுங்கள் வினாடி வினாடியாக.

    என்னுடய ஈஸ்வரியின் டாப் 5 களில் இது ஒன்று.

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டேன்.

    Last edited by vasudevan31355; 2nd August 2014 at 07:55 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks Russellmai thanked for this post
    Likes Gopal.s liked this post
  7. #2805
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நம் தலைவர் ராகவேந்தர் ஆக்ஞை படி உட்செல்ல ஆசை. ஆனால் நம் மக்களின் தலைக்கு மேல் பயணம் செல்வதாக எனக்கு மிக நல்ல பெயர். இதை மேலும் பறந்து கெடுக்க வேண்டுமா?

    ராகங்களுக்கு ,இசையின் ஸ்வரங்களுக்கு ஒரு சின்ன முன்னோட்டம் கொடுக்கிறேன். பிடித்திருந்தால் சற்றே தொடர்வேன்.

    ஏழு சுரங்களே சங்கீதத்தின் அடிப்படை. Tonal and Pitch இரண்டுமே அடிப்படை.சுருதி,சுரம் என்று சொல்லலாம்.

    ஏழு சுரங்கள் ஸ (ஸட்சமம்),ரி (ரிஷபம்),க (காந்தாரம்),ம(மத்தியமம்),ப (பஞ்சமம்),த (தைவதம்),நி (நிஷாதம்) என்று வழங்க படும்.

    இதில் ஸ ,ப ஒன்றே ஒன்று. ம வில் இரண்டு. ரி,க ,த,நி யில் தலா மூன்று 2+2+12 என்று பதினாறு சத்த மாறுபாடுகள்.

    இதை ஸட்ஜமம்(S ) ,சுத்த ரிஷபம் (R 1),சதுஸ்ருதி ரிஷபம்(R 2),ஷட்ஸ்ருதி ரிஷபம்(R 3),சுத்த காந்தாரம்(G 1)சாதாரண காந்தாரம் (G 2),அந்தார காந்தாரம்(G 3),சுத்த மத்யமம்(M 1),பிரதி மத்யமம் (M 2),பஞ்சமம் (P )சுத்த தைவதம்(D1),சதுஸ்ருதி தைவதம் (D2),ஷட்ஸ்ருதி தைவதம் (D3),சுத்த நிஷாதம் (N 1),கைசிகி நிஷாதம்(N 2),காகலி நிஷாதம் (N 3) என்று பதினாறு பகுப்பு..(விவாடி எனப்படும் tainted swaras சேர்ந்து)

    கொஞ்சம் உள்ளே போனால் G 2=R 3, R 2=G 1,D2=N 1, N 2=D3 என்று இவை சேர்ந்தே வராத பகுப்புகள். ரொம்ப குழப்ப மாட்டேன்.(இவைகளின் சேர்க்கை சாத்யமில்லாததால் 16 சுர சத்தங்கள் 12 என்றே கருத பட வேண்டும்.)

    மேற்கத்திய இசையில் ஸ =C . ரி =D . க =E . ம=F .ப=G . த= A .நி =B .(5 வெள்ளை கட்டைகள் முழு pitch ,7 கருப்பு கட்டைகள் -பாதி pitch )

    இப்போது 72 மேளகர்த்தா ராகங்கள் எப்படி என்று பார்ப்போம். மேளகர்த்தா ராகங்களுக்கு நிபந்தனை உண்டு. 7 சுரங்கள் கட்டாயம் வர வேண்டும்.(பரி பூர்ணம்).மேலே போவது(ஆரோகணம் ),கீழே வருவது (அவரோகணம்) சீராக (குதிக்காமல்)இருக்க வேண்டும்.ஸ வில் தொடங்கி ஸ வில் முடிய வேண்டும்.

    இப்போது 12 சத்த மாறுபாடுகளில் ச,ப இரண்டுடன் மற்ற இணைப்புகள் 2x6x 6=72 வரும்.இதை சத்தங்களின் கணிதம் என்று குறிப்பிடலாம். permutation &Combination (வரிசை பகுப்பும் ,சேர்மானங்களும்)போட்டால் வரும் விடை.

    இதில் 12 பகுப்புகளில் ஆறு ,ஆறு ராகங்களாக group செய்ய பட்டுள்ளது.

    உதாரணங்கள்-

    சுபபந்துவராளி - S R 1 G 2 M 2 P D1 N 2 S ' என்ற சேர்மானம்.

    கீரவாணி S R 2 G 2 M 1 P D1 N 3 S ' என்ற சேர்மானம்.

    நடபைரவி - S R 2 G 2 M 1 P D1 N 2 S '.என்ற சேர்மானம்.

    நீங்களே ஊகிக்கலாம். இப்படி மாற்றி மாற்றி சேர்க்கும் இணைவில் உள்ள சாத்யகூறுகளை. என்ன ஒன்று கணிதம் போல dry ஆக இல்லாமல், கேட்க நன்றாக ,இசைவாக இருக்க வேண்டும்.

    ஜன்யம் மற்றும் மற்ற சாத்திய கூறுகளை பிறகு அலசலாம்.
    Last edited by Gopal.s; 4th August 2014 at 04:37 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #2806
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வீர திருமகன் பாடல்கள் எல்லாம் அருமை என்றாலும், எனது பிடித்தம் ராட்ஷஷியின் கேட்டது கிடைக்கும்.(இன்னொன்று வெற்றிலை போட்ட ,வாசு போட்டு விட்டார்). interlude கேட்டால் பின்னால் வரும் பட்டத்து ராணிக்கு ஒத்திகை மாதிரி இருக்கும்.

    அப்பப்பா என்ன ஒரு பாட்டு!!!

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes Russellmai liked this post
  10. #2807
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வண்ணக்கிளி-1959

    இந்த படத்தில் கே.வீ.மகாதேவன் இசை விஸ்வரூபம் எடுத்து ஒளிர்ந்தது. இதற்கு முன் எந்த ஒரு படத்திலும் இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்கள் ஒரே படத்தில் குவிந்ததில்லை. கிராமிய இசையில் அவ்வளவு மெருகு.ஈர்ப்பு.variety .படம் ஜெயிக்க இசை ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது.கே.வீ.மகாதேவன் முதலாளி,வண்ணக்கிளி படங்களில் தான் ஒரு trend setter என்று நிரூபித்தார்.

    சித்தாடை கட்டிக்கிட்டு (கள்ளபார்ட் நடராஜன் பின்னியெடுத்திருப்பார்)



    சீர்காழியின் இரண்டு மந்திர பாடல்கள். ஆத்தில தண்ணி வர,மாட்டுகார வேலா





    வண்டி உருண்டோட அச்சாணி தேவை



    அடிக்கிற கைதான் அணைக்கும் (டி.லோகநாதன் பின்னியிருப்பார்)

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Likes Russellmai liked this post
  12. #2808
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வண்ணக்கிளி பாட்டுக்கள்... வாவ்..

    கோபால்ஜி.... விட்டுப்போன சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா ...தனியா அழுதுகிட்டு நின்னுச்சு..

    அதையும் சேத்துக்குங்க..



    இதைத் தவிர "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜகத்திலே" என்று ஒரு பி.எஸ். பாட்டு இருக்கு

    http://www.inbaminge.com/t/v/Vannakk...thile.vid.html

  13. Likes Russellmai, Gopal.s liked this post
  14. #2809
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Madhu. Both are Nice Songs worth mentioning though not in the same league of other ones.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. #2810
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புறாவிற்காக இளவரசர் பாடிய வசந்த முல்லை இன்றும் பிரபலம்.
    ஆனால் இந்த அழகின் இலக்கணம் ,ஆண்மையின் சிகரம் ,இளமையின் தலைமையாய் , இளவரசர் பாடும் காதல் கீதம்.ராஜ சுலோச்சனாவுடன் அழகிய காதல் பாடல்.

    என்னுடைய விருப்ப பாடல்களில் ஒன்று.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •