Page 149 of 400 FirstFirst ... 4999139147148149150151159199249 ... LastLast
Results 1,481 to 1,490 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1481
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalaiventhan View Post
    நன்றி திரு. சுந்தராஜன் அவர்களே, நல்ல ரசனை உள்ளவர் நீங்கள் என்று கருதுகிறேன். சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படத்தில் எனக்கு பிடித்த பாடலை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
    ஓஹோஹோஹோ மனிதர்களே, ஓடுவதெங்கே சொல்லுங்கள்..
    உண்மையை வாங்கி பொய்களை விட்டு உருப்பட வாருங்கள்.
    நன்றி.
    அன்புடன் : கலைவேந்தன்.

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.


    சுந்தர்ராஜன் சார்

    நீங்கள் ஒரு முகம் காட்டும் கண்ணாடி மாதிரி என்று கூறும்போது நீங்கள் நம்பவில்லை.

    இப்போது பாருங்கள் உங்கள் முன் இந்த பாடலை திரு கலைவேந்தன் அவர்கள் பாடி அற்பனிகிறார்

    நன்றி கூறுங்கள் சார் !

    Rks
    Last edited by RavikiranSurya; 10th September 2014 at 05:55 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1482
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    லட்சுமி கல்யாணம் - Part II

    கவியரசர் கண்ணதாசனின் அண்ணனும் தயாரிப்பாளருமான AL. ஸ்ரீனிவாசன் தயாரித்த படம்.

    நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது? சாதாரணமான கதாபாத்திரங்கள் கூட அவர் கை பட்டால் மின்னும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாசத்தையும் மனித நேயத்தையும் அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்ட அவரது எந்த ரோலும் சோடை போனதில்லை. இந்த கதிர்வேலுவும் அப்படித்தான். கதிர்வேலு என்ற பெயரே ஒரு புதுமை. இதற்கு முன்போ அல்லது இதற்கு பின்போ இது போன்ற ஒரு பெயர் தாங்கிய காரக்டர் அவர் செய்ததாக நினைவில்லை.

    அந்த காலக்கட்டத்தில் [60 -70 களில்] பொது விழாக்களில் எப்படி தோன்றுவாரோ அது போன்ற ஜிப்பா குர்தா உடையில் சில காட்சிகளில் வருவார். மற்றப்படி அணியும் உடை சாதாரண பாண்ட்-ஷர்ட், லைட் மேக்கப். ஒரிஜினல் சுருண்ட முடி. ஜோடி கிடையாது.

    அவரின் அறிமுக காட்சியிலே லட்சுமியை எப்படி ஒரு தங்கையாக பாவிக்கிறார் என்பதை உணர்த்தி விடுவார். நகைச்சுவையாக நக்கல் பண்ணுவதில் நடிகர் திலகத்தை மிஞ்ச ஆளே கிடையாது. கிராம முனுஸிப் பதவியை பயன்படுத்திக் கொண்டு சிரித்த முகம் காட்டும் நரி குணமுள்ள நம்பியாரை அவர் கிண்டலாக வெறுப்பேற்றுவது எல்லாமே டைமிங்காக இருக்கும். தன்னை பற்றி ஊர் பெண்கள் எல்லாம் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று நம்பியார் சொல்லும் போது அங்கே ஒரு பெண்மணி விளக்குமாறு வாங்கிக் கொண்டு வர உங்களுக்காக இல்லேங்க, அவங்க வீட்டிற்கு வாங்கிட்டு போறாங்க என்பது, பிறந்த நாள் விழாவில் இவர்தான் கிராமத்திற்கே பெரிய ஆள் என்பது போல் இவர் ஒருத்தர் போதும் என்பது, சொந்தக்கார மாப்பிள்ளையிடம் எப்படியாவது லட்சுமியைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்று சுத்தி சுத்தி வரும் நம்பியாரை அவர் டீல் செய்யும் அழகே அழகு.

    இது இப்படியென்றால் ஒவ்வொரு முறை கல்யாணம் நடத்த முயற்சிக்கும் போது ஏற்படும் தடைகள், அப்போது அவரின் உணர்வுகள்!

    நம்பியாரின் பேச்சை கேட்டு கல்யாணத்தை நிறுத்தும் வி.எஸ். ராகவனிடம் அவர் பேசம் தொனி மாறிக் கொண்டே வரும். முதலில் சாதாரணமாக நியாயத்தை எடுத்துக் கூறும் அவர் ராகவனின் பிடிவாதத்தை பார்த்துவிட்டு கெஞ்சலும் கோபமுமாக பேசுவதை சொல்வதா, அதையும் மீறி ராகவன் வெளியே சென்று விட நீ பேசினதால்தான் அவர்கள் கிளம்பி போகிறார்கள் என்று சௌகார் சொன்னதும் ஓடிப் போய் அவர்களை கெஞ்சி காலில் விழ முயற்சிப்பதை சொல்வதா, ஒரேடியாக மறுத்துவிட்டு அவர்கள் காரில் ஏறி சென்றவுடன் உச்சக்கட்ட ஆத்திரத்தில் அவர்களை சபிப்பதும் மண்ணை வாரி தூற்றுவதையும் சொல்வதா, பின்னியிருப்பார் பின்னி.

    இதற்கு நேர்மாறாக இரண்டாவது முறை எஸ்.வி. ராமதாஸ் தன் தாயோடு கல்யாணத்தன்று காலையில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு கிளம்பி போய் விட, லட்சுமி வீட்டிற்கு விஷயம் சொல்ல வரும் அந்தக் காட்சி! இவர் மாப்பிளையுடன் வரப்போகிறார் என மகிழ்ச்சியாய் காத்திருக்கும் சௌகார், தலை தாழ்ந்து கலங்கிய முகத்துடன் வரும் நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் என்ன விஷயம் என்று பார்வையாலே கேள்வி கேட்க வசனமே இல்லாமல் கண்ணீர் நிறைந்திருக்கும் கண்களையும் துடிக்கும் உதடுகளையும் முகபாவத்தையும் மட்டுமே வைத்து நடந்ததை வெளிப்படுத்தும் நடிகர் திலகம், உள்ளிருந்து வரும் லட்சுமி, அவளைப் பார்த்ததும் அவள் அருகில் நெருங்கி அவளிடமும் வசனமே பேசாமல் கண் அசைவிலேயே விவரம் சொல்லும் நடிகர் திலகம், பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்த தவிக்கும் லட்சுமி, இனி என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் அங்கிருந்து விலகி அப்போதும் அந்த கண்கள் மட்டுமே தன் இயலாமையை வெளிப்படுத்த வீட்டை விட்டு வெளியேறும் காட்சி, நடிகர் திலகத்தின் நடிப்பு வரலாற்றில் குறிப்பிட வேண்டிய ஒன்று. வசனமே இல்லாமல் இதற்கு முன்பும் நவராத்திரி கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தாலும் கூட இது சிறப்பு வாய்ந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

    அவரின் இயல்பான நடிப்பிற்கு உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். நண்பனின் வீதியில் வைத்து அவன் தங்கையை பற்றியும் அவளின் வெட்கத்துடன் கூடிய நடையைப் பற்றியும் விசாரிக்க உள் அறையிலிருந்து சக்கர நாற்காலியில் வெளியே வரும் அந்தப் பெண்ணை பார்த்தவுடன் அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி! நண்பனும் தாயும் சினிமா பாணியில் முகம் திருப்பி அழ, அங்கேயும் எந்த வசனமும் இல்லாமல் நண்பனின் தாயிடம் என்ன இது என்பது போல் கையை மட்டும் நீட்டி கேட்கும் இடம் இருக்கிறதே, சூப்பர்!

    முதல் இரண்டு திருமண முயற்சிகளிலும் இரண்டு வெவ்வேறு உணர்வுகளை காட்டிய நடிகர் திலகம், வி.கோபாலகிருஷ்ணனை போலீஸ் கைது செய்து அழைத்து செல்லும் போது எனக்கு கொடுத்த வாக்கை நீ காப்பாத்தலேனாலும் நான் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்துவேன் என்று அனுப்பி வைக்கும் காட்சியில் இன்னொரு முகம் தெரியும்.

    கதாபாத்திரமாக அவர் கோவப்படும்போது எப்போதுமே அது பார்வையாளனுக்கு பளிச்சென்று மனதில் பதியும்! இதிலும் அப்படியே! கல்யாணத்தை நடத்த விடாமல் தடை போடும் நம்பியாரை கொல்ல அரிவாளுடன் கிளம்பும் ஆவேசம், நம்பியாரின் ஆட்களுடன் சிலம்பு சண்டை போடுவது, அனைத்து மனிதர்கள் மீதும் கோவப்பட்டு மனிதனே இங்கே இல்லையே என்று யாரடா மனிதன் இங்கே என்று பாட்டாய் வெடிப்பது, எத்தனை முயற்சி எடுத்தும் பலன் இல்லையே எனும்போது விரக்தியில் கோயில் சன்னதியில் ஆத்திரப்படுவது இவைகளின் மூலம் ரௌத்திர பாவத்தை தரிசிக்கலாம் என்றால் ஜாலியான சிவாஜியை போட்டாளே பாடலிலும் தங்கத் தேரோடும் வீதியிலே பாடலிலும் பார்க்கலாம்.

    படத்தில் மிகுந்த இளமையாக இருப்பார் நடிகர் திலகம். மேக்கப் இல்லாமலே வசீகரிப்பார்.போலீஸ் குண்டடிப்பட்டு மயங்கி கிடக்கும் வெயிட்டான மேஜரை தன் தோள் மேல் தூக்கி போட்டுக் கொண்டு அண்டர் கிரௌண்ட் tunnel-இல் நடப்பது அவரது உடல் வலிமையை பறைசாற்றும்.

    நடிகர் திலகத்திற்கு அடுத்தபடியாக முக்கியமான பாத்திரம் சௌகார். பொதுவாகவே சௌகார் பற்றி அழுது வடிந்து சோகத்தை பிழிவார் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இந்தப் படத்தில் அப்படிபட்ட சோகத்திற்கு ஸ்கோப் இருந்தும் அந்த trap-ல் சிக்கி விடாமல், கணவன் இல்லாமல் பலபேர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியும் கூட தைரியத்தை கைவிடாத ஒரு பெண்மணியின் குணாதிசயத்தை நன்றாக வெளிக் கொணர்ந்திருப்பார். அழுகை தவிர்த்து அவர் காட்டும் அந்த தைரியம் அதிலும் மகளே தன்னை சந்தேகப்படும் போது அதை சமாளிக்கும் திறன் எல்லாமே சௌகார் எவ்வளவு தேர்ந்த நடிகை என்பதை காட்டும்.

    வெண்ணிற ஆடை நிர்மலா, கதையின் நாயகியாக வருவார். குறைவின்றி செய்திருப்பார். சுருட்டு சுந்தரம் பிள்ளையாக நம்பியார். இதில் வித்தியாச வில்லன். வழக்கம் போல் கண்ணை உருட்டி உள்ளங்கையை பிசையும் வில்லத்தனம் இல்லாமல் வீண் பொல்லாப்பு மற்றும் வம்பு பேச்சின் மூலமாக வில்லத்தனம் செய்யும் ரோல். அதிலும் குறிப்பாக ஒரு காட்சி சொல்லவேண்டும். வரும் மாப்பிள்ளைகள் எல்லாம் இவர் பேச்சை கேட்டு திரும்பி போய் விட நடிகர் திலகத்தின் நண்பன் பாலுவாக வரும் வி.கோபாலகிருஷ்ணன் இவரை போய்யா என்று சொல்லிவிட இடிந்து போய் உட்கார்ந்திருப்பார். கல்யாணத்தன்று அவரை கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி வந்தவுடன் அவர் துள்ளிக் குதிக்கும் காட்சியில் நம்பியார் சிறப்பாக செய்திருப்பார்.

    முதலில் வந்து பெண் பார்க்கும் மாப்பிள்ளையாகவும் பிறகு இறுதியில் லட்சுமியை திருமணம் செய்துக் கொள்பவராக பாலாஜி, அவரின் தந்தையாக வி.எஸ்.ராகவன், சிவாஜியின் தந்தையாக வி.கே.ஆர். அவரவர் பாணி நடிப்பை வழங்கியிருப்பார்கள். இந்த அவரவர் பாணி என்று சொல்லும்போது லட்சுமியின் அத்தையாக வரும் சி.கே சரஸ்வதியையும் அவர் கணவனாக வரும் ஏ.கருணாநிதியையும் சேர்த்துக் கொள்ளலாம். லட்சுமியின் முறைப் பையனாக சோ. அவர் துக்ளக் ஆரம்பிப்பதற்கு முன் வந்த படம் என்பதால் அரசியல் வசனங்கள் இல்லை. கதையின் முக்கிய திருப்பத்திற்கு காரணமாக வரும் லட்சுமியின் தந்தை ரகுநாதனாக மேஜர்.

    (தொடரும்)

  4. Likes KCSHEKAR liked this post
  5. #1483
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    லட்சுமி கல்யாணம் - Part III

    ஏ.எல்.ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை படத்தயாரிப்பாளர் என்ற பெயர் மட்டுமே. ஒரு படத்தை எப்படி திட்டமிட்டு தயாரிப்பது, அதை குறிப்பிட்ட காலத்தில் எப்படி வெளியிடுவது போன்றவை அவருக்கு கை வராத கலை. ஜெமினி, சிவகுமார் ஆகியோரை வைத்து ஏ.பி.என் இயக்கத்தில் கந்த லீலா என்ற பெயரில் படம் தயாரித்தார். அது இடையில் வைத்து நின்று போனது. அந்நேரம் வெளியான திருவிளையாடல் படத்தின் இமாலய வெற்றியை பார்த்த விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தை இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று பிரஷர் கொடுத்தனர். ஏ.எல்.எஸ் மற்றும் ஏ.பி.என். இருவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் வீரபாகு ரோலை ஏற்றதும் படம் கந்தன் கருணை என்று பெயர் மாற்றப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதும் நமக்கு தெரிந்ததே. அது 1967 ஜனவரியில் வெளியானது. அப்போதே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் லட்சுமி கல்யாணம். பிசியான ஆர்டிஸ்ட்களை வைத்து படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அவர்களின் கால்ஷீட் கிளாஷ் ஆக வழக்கம் போல் வெளியிட தாமதமானது.

    கதை வசனம் பாடல்கள் கண்ணதாசன். சிவாஜி வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தங்கையை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று சொல்லும் இடத்திலும், நம்பியாரை வெட்டுவதற்காக அரிவாளுடன் கிளம்பும் சிவாஜியை நிர்மலா தடுக்கும் காட்சியிலும் மட்டும் இடம் பெறும் தூய தமிழ் வசன பாணியை தவிர்த்து விட்டால் வசனங்கள் இயல்பான தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும். கிழவங்கதானே இப்போதெல்லாம் லவ் பண்றாங்க போன்ற சில கிண்டல் வசனங்களும் உண்டு.

    ஒளிப்பதிவு இயக்கம் GOr நாதன். ஒளிப்பதிவு ஓகே. ஆனால இயக்குனர் பொறுப்பை அவரிடம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. படத்தில் குறை என்று சொன்னால் படத்தின் மையப் பகுதியான மேஜர் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார் ஏன் அவரை போலீஸ் தேடுகிறது, அவர் யாரை எதற்காக கொலை செய்தார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் ஏற்பட்ட பிழையா இல்லை கால்ஷீட் பிரச்சனைகளினால் எடுக்க முடியாமல் போய் விட்டதா என்று தெரியவில்லை. அது போல நம்பியாரின் ஆட்களுடன் நடிகர் திலகம் போடும் சிலம்பு சண்டை காட்சியையும் இன்னும் சற்று நன்றாக எடுத்திருக்கலாம்.

    கவியரசரின் சொந்தப் படம் எனும் போது மெல்லிசை மன்னர் விட்டு விடுவாரா?

    1. போட்டாளே! போட்டாளே! உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே! - சோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வரும் பாடல். சிவாஜி, சோ மற்றும் நிர்மலாவிற்கு முறையே டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன் மற்றும் ஈஸ்வரி பாடியிருப்பார்கள். கேரக்டரின் தன்மையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு உள்வாங்குவார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் ஒரு ஷாட் உதாரணம். நிர்மலாவை பார்த்ததும் பாலாஜிக்கு பிடித்து விடுகிறது. இதை நடிகர் திலகமும் உணர்ந்து விடுவார். அவருக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இந்தப் பாடலின் ஒரு சரணத்தின் இடையில் நிர்மலா அந்த ஹாலில் தனியாக ஒரு இடத்தில் போய் ஆட, ஆசையுடன் பாலாஜி அங்கே சென்று நிர்மலாவின் கைப்பற்ற முயற்சி செய்ய, இதை கவனித்து விடும் நடிகர் திலகம் இயல்பாக இருவருக்கு இடையில் நுழைந்து ஒரு அண்ணனின் நிலையிலிருந்து நிர்மலாவின் கையை தான் பற்றி பாலாஜியை ஒரு லுக் விட்டுக் கொண்டே ஸ்டெப் போட்டு போவார். இதை எந்த இயக்குனரும் அவருக்கு சொல்லித் தராத நுணுக்கம். இதே பாடலின் இன்னொரு சரணத்தில் முட்டாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும் என்ற வரியை கவனித்து கேளுங்கள், சிவாஜிதானே பாடியிருப்பார். டி.எம்.எஸ். என்று தவறுதலாக போட்டு விட்டார்களோ! படம் வெளி வருவதற்கு முன் இறுதி சரணத்தில் வரும்

    கண்ணா உன் ஆட்சியிலே

    கல்யாண சீசன் வரும்

    என்ற வரியை பற்றி அது கண்ணாவா இல்லை அண்ணாவா என்று ரசிகர்கள் இடையில் ஒரு விவாதம் இருந்தது. காரணம் படம் வெளியாகும் போது அண்ணாவின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த நேரம்.

    2. ராமன் எத்தனை ராமனடி - படத்தின் மிகப் பிரபலமான பாடல்- சுசீலாவின் தேன் குரலில்.

    பாலாஜி பெண் பார்க்க வரும்போது நிர்மலா சிதார் வாசித்துக் கொண்டே பாடுவதாக அமைந்திருக்கும் கண்ணதாசன் ராமன்களை வைத்து விளையாடியிருப்பார். பாடலின் நடுவில் திரையில் ஒரு பகுதியில் [வேறு சில நடிகர்களை வைத்து எடுத்த] ராமாயணக் காட்சிகள் இடம் பெறும். நிர்மலாவின் நடனமும் உண்டு. பாடல் முடிந்தது கூட தெரியாமல் அனைவரும் மெய்மறந்து இருப்பார்கள். அது பாடல் கேட்பவர்களுக்கும் பொருந்தும் என சொல்லலாம்.

    3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.

    நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே

    பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா

    எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!
    [மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]

    இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.

    4. பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - மீண்டும் சுசீலாவின் தேன் குரல்.

    இரண்டாவது முறையும் திருமணம் தடைபட, சௌகார் கையாகலாத கோவத்தில் நிர்மலாவை ராசியற்றவள் என்ற அர்த்தத்தில் திட்டி விட, கண்ணனிடம் சென்று நிர்மலா நியாயம் கேட்கும் பாடல். கண்ணதாசனின் பேனாவிற்கு சரியான தீனி.

    5. வெட்டவெளி பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.எஸ்.

    நடிகர் திலகம் விரக்தியில் பாடும் பாடல். இங்கேயும் சமுதாய சாடல்கள் இருக்கும். கோவிலின் முன்னால் நின்று நடிகர் திலகம் பாடுவதாக வரும் வரிகள் பளீரென்று இருக்கும்.

    தெய்வம் ஆளவில்லையென்றால்

    பேய்கள் ஆட்சி செய்யும்ம்மா!

    என்ற வரிகளின் போது 42 வருடங்களுக்கு முன்பு கேட்ட கைதட்டல் இன்றும் காதில் ஒலிக்கிறது.[ஆனால் தமிழகத்தின் நிலைதான் மாறவில்லை]

    6. தங்க தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா- டி.எம்.எஸ்-சீர்காழியார்.

    கல்யாண மாப்பிள்ளையாக வி. கோபாலகிருஷ்ணனை வைத்து ஊர்வலம் வரும்போது நம்பியாரையும், சி.கே.சரஸ்வதியையும் கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகமும் வி.கே.ஆரும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப் பாட அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

    இப்போது பட ரிலீசிற்கு வருவோம். முதலில் சொன்னது போல படம் எப்போதெல்லாம் combination கால்ஷீட் கிடைத்ததோ அப்போதெல்லாம் எடுத்த படம். ஆகவே இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சொல்ல முடியாத சூழல் [ஒழுங்காய் எடுத்த படம் மட்டும் பார்த்து ரிலீஸ் பண்ணினார்களா என்ற கேள்வி எழுவது காதில் விழுகிறது]. 1968 தீபாவளிக்கு [அக்டோபர் 21] வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் எங்க ஊர் ராஜா ஏற்கனவே தீபாவளிக்கு கமிட் ஆகியிருந்தது. ஏ.விஎம் வேறு உயர்ந்த மனிதன் நவம்பர் 29 ரிலீஸ் என்று அறிவித்து விட்டார்கள்.இனியும் காத்திருந்தால் பொங்கல் ஆகி விடும். அப்போதும் படங்கள் ரிலீசிற்கு இருக்கின்றன. சரி பரவாயில்லை என்று துணிந்து நவம்பர் 15 அன்று ரிலீஸ் செய்து விட்டார்கள். இங்கேதான் கவனிக்க வேண்டும்.

    1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் சிந்தாமணியில் வெற்றிகரமாக 132 நாட்கள் ஓடிய பிறகு வெள்ளைக்கண்ணு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு சக்கைப் போடு போட்டது. இவை எல்லாம் போதாதென்று உயர்ந்த மனிதன் ஒரு மாதத்தை நிறைவு செய்யும் போது அடுத்த வெளியீடாக 1969 ஜனவரி 1 அன்று அன்பளிப்பு வெளியாகிறது.

    லட்சுமி கல்யாணம் கமர்ஷியல் படம் இல்லை. பொழுது போக்கு படம் இல்லை. கலர் இல்லை. கருப்பு வெள்ளை படம். டூயட் இல்லை. ஏன், ஜோடியே இல்லை. சராசரி ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இத்தனை இல்லைகளையும் தாண்டி, போட்டிக்கு நின்ற நடிகர் திலகத்தின் படங்களையும் சமாளித்து இந்த படம் பெற்ற வெற்றி இருக்கிறதே, அது சாதனை. அதுதான் சாதனை.

    தில்லானா -132 நாட்கள்

    எங்க ஊர் ராஜா - 85 நாட்கள்

    உயர்ந்த மனிதன் - 105 நாட்கள்

    லட்சுமி கல்யாணம் - 60 நாட்கள்.

    ஆம் மதுரை ஸ்ரீதேவியிலும், கோவையிலும் 60 நாட்கள். இந்தப்படமே எதிர்பாராமல் வெளியானதால் பல ஊர்களிலும் தியேட்டர்கள் பொங்கலுக்கு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. ஆகவே மதுரையில் பொங்கலுக்கு வேறு படத்திற்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.

    ஆறு மாதங்களுக்கு ஒரு படம் வெளியிட்டு ஒட்டப்பட்டவை அல்ல சிவாஜி படங்கள். இது போன்ற எதிர்மறையான சூழலிலும் தனது படங்களே தனது படங்களுக்கு போட்டியாக வரும் நேரத்திலும் வெற்றிகளை அடைந்தவர் நடிகர் திலகம்.

    சிவாஜி ரசிகர்கள் எப்போதும் தலை நிமிர்த்தி நெஞ்சுயர்த்தி சொல்வோம். 80 வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் நடிப்புக் கலையிலும் சரி, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளிலும் சரி வரலாறு படைத்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் ஒருவரே.

    இந்தப்படத்தைப் பற்றி நடிகர் திலகமே தனது ஒரு வரி விமர்சனத்தில் "இவ்வளவு பெரிய ரசிப்பை நானே எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார் என்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாம் புரிந்துக் கொள்ளலாம்.

    அன்புடன்

  6. Likes KCSHEKAR liked this post
  7. #1484
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

    A COLOSSAL LOSS - A Short Tribute to 'Sivaji' Ganesan

    In picking Parasakthi as the movie of the month for July 2001, I mentioned that it marked the beginning of an era in Tamil cinema by introducing 'Sivaji' Ganesan to the silver screen. Sadly, the same month now marks the end of the era as the legendary actor passed away on Saturday, July 21. The bulk of his movie career and most of his memorable performances happened before I was old enough to understand and enjoy movies. But some of his later performances gave ample notice of his immense talent and I have also enjoyed several of his older movies on video. Here is a short tribute to the great actor.

    Seeing Parasakthi made me realise that Sivaji's debut was unlike that of the other actors I have known. While actors like his peer MGR and later, Rajnikanth and Kamalhassan, appeared in small roles initially before climbing the rungs of success, Sivaji was perched at the top right from the beginning. His performance in his very first film belied his inexperience in front of the camera as he effortlessly portrayed the youth disgusted at the way society treats him and his sister. While his long monologue in the climactic courtroom scene is legendary, he made his mark with almost every scene he appeared in, be it crying, delivering strong dialogs or dancing a few steps.

    Both MGR and Sivaji laid out their cinematic paths clearly with MGR being the mass hero and Sivaji being the class hero. While MGR swept up the adulation of the masses with his 'man of the people' roles and squeaky clean image, Sivaji impressed the connoisseurs with his versatility, wide variety of roles and acting talent. Image was no concern as he played good guy and bad guy, old man and young man, handsome playboy and scarred loner, with equal ease. His rich baritone voice and talent at reeling off pages of dialogs with perfect tone and timing made so many of his roles memorable and his lip-syncing for the songs frequently made people forget that he actually had a playback singer.

    Some of his most famous roles early in his career were as historical and mythological personalities. On screen, he was transformed into whoever he was depicting and people began identifying those historical figures based on his portrayal. When we talk about personalities such as 'Chatrapati' Sivaji, Veera Pandiya Katta Bomman or Karnan, the image we conjure up is invariably based on Sivaji's appearance as the character. That is the impact his performances have had on public consciousness. His majestic bearing, stylised walk and booming voice were some of the features that stood him in good stead in mythologicals with his role as Lord Siva in Thiruvilaiyaadal being a prime example.

    Among social roles too, there is almost no role that Sivaji has not played in Tamil cinema. Fans looked forward to his movies, confident that he would present them with a new persona, replete with a new getup and unique mannerisms, in each new movie and rarely were they disappointed. The affectionate brother in Paasamalar, the strict police inspector in Thanga Padakkam, the haughty lawyer in Gowravam, the naadaswaram astist in Thillaanaa Mohanaambal and the loyal servant in Padikkaatha Medhai are just a few of the characters that cannot be forgotten that easily by Tamil cinema viewers. He dabbled in double roles as early as Uthama Puthiran, effortlessly distinguishing between the two roles. Multiple roles were handled just as easily, with the three roles in Dheiva Magan and the unprecedented(and unmatched) nine roles in Navarathri.

    One of the earliest movies in which I saw Sivaji on the big screen was Vellai Roja, the crime thriller where he portrayed both the calm church father as well as the loud but efficient police inspector. Since Sivaji had his roots in stage dramas, some of his later performances were seen as overacting but he proved that under the right director, he still delivered the goods. Two such memorable performances were in Mudhal Mariyaadhai and Thevar Magan. He displayed sadness and comedy in equal portions in Bharatiraja's Mudhal Mariyaadhai, where he played a man wedded to a shrew and found enjoyment in the company of a younger woman. As Kamalhassan's strict but affectionate father in Thevar Magan, he was majestic and his quick end left us wishing he had a larger role. It was unfortunate that none of the other directors utilised his potential fully. His last significant role turned out to be as Rajnikanth's father in Padaiyappa while his final role was as a good-hearted grandfather trying to unite his grandson with his lover in Poopparikka Varugirom. But neither of these were roles deserving of bringing down the curtain on such an illustrious career.

    It was one of the cruel ironies that Sivaji, who found so much fame outside Indian shores, never won the national award for acting from the Indian Government. The only consolation for this is that the awards themselves have become highly politicised, as evident from the fact that MGR won the award for Rickshakkaaran. But there was no shortage of accolades from other sources for Sivaji. He won the Afro-Asian film festival award in 1960 for his performance in Veerapandiya Kattabomman and was awarded the title of Chevalier, the Order of Arts and Literature by the Ministry of Culture, Government of France. At home, he received the Padmashri and the Dadasaheb Phalke award. The only recognition he received at the national lever for his acting was the special jury award for Thevar Magan.

    After close to 50 years in the Tamil cinema, the thespian has finally passed away. He will definitely live on in our hearts through his movies but his death is a colossal loss to the Tamil film industry and its millions of fans and he will definitely be missed.

    May his soul rest in peace

    © 2001 Balaji Balasubramaniam
    http://www.bbthots.com/reviews/views/sivaji.html

  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  9. #1485
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    போதும் என்று நினைத்தாலும் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே? நண்பர்களே.. மீண்டும் நாங்களாக ஆரம்பிக்காத நிலையில், பிரச்னைகளை கிளப்புவது நீங்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களின் வினாக்களுக்கும் கேலிகளுக்கும் எதிர்விளைவே இந்த பதில்...

    கேள்வி கேட்க வந்திருக்கும் ஜோ அவர்களே, ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் மட்டும் ஓடியதன் மர்மம் என்ன? என்று ஏற்கனவே கேள்வி எழுப்பினீர்கள். அதற்கு நான் விளக்கமும் அளித்தேன். ஆனால், இப்படி கேள்வி கேட்பவர், முதலில் நான் நேற்று எழுப்பிய திரிசூலம் ரூ.2 கோடி வசூலித்தது என்று சொல்வதற்கான ஆதாரம் எங்கே? என்று கேட்டதற்கு, முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு ஆயிரத்தில் ஒருவன் பற்றி கேள்வி கேளுங்கள்.
    ஒரு காலத்தில் உங்கள் நடிகர் கதாநாயகராக இருந்திருக்கலாம். கடைசியில் அவர் மார்க்கெட் இழந்து துணை நடிகராகத்தான் படங்களில் தலைகாட்டினார். 1992ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ஒரு படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த துணை நடிகர் பட்டம் கிடைத்ததே. அது ஒன்றே போதுமே உங்கள் நடிகர் ஒரு துணை நடிகர்தான் என்பதற்கு? உடனே, எங்கள் தலைவர் சிறிய வேடத்தில் ஆரம்பத்தில் நடிக்கவில்லையா? என்று கேட்காதீர்கள். திறமையால் முன்னேறி கதாநாயகனாக உயர்ந்தவர் கடைசி வரை கதாநாயகனாக திகழ்ந்தார். ஆனால்,நீங்கள் வாழ்ந்து கெட்டவர்கள்.
    ஆயிரத்தில் ஒருவன் பற்றி நீங்கள் செய்யும் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். 3 ஆண்டுகளுக்கு முன் உங்கள் தியேட்டரிலேயே ரிலீஸ் ஆகி ஒரு வாரம் தாக்குப்பிடிப்பதற்குள்ளாகவே தியேட்டரில் ஈயாடிய படத்தை, இப்போது உங்களைப் போலவே நாங்களும் ஆவலுடனும் உற்சாகத்துடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அது... சோகபார்ட் சொங்கித்துரை ஆவதை பார்க்க.

    அன்புடன்: கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

  10. #1486
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    திரு கலைவேந்தன் ,
    உங்கள் புரிதலை பார்த்து எனக்கு மெய் சிலிர்க்கிறது.இந்தியாவின் சூப்பர் ஸ்டார் திரு அமிதாப் பச்சன் இப்போது ஒரு சில தனக்கு பிடித்த முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துகொண்டிருக்கிறார் அதனால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியுமா?
    அதேபோல தேவர்மகனுக்காக நடிகர்திலகத்துக்கு கொடுக்கப்பட்டது சிறந்த நடிப்பிற்கான ஒரு சிறப்பு விருதே தவிர துணை நடிகருக்கான விருது அல்ல ( அதுசரி, சில்க்சட்டையோடு ,கவர்ச்சி கதாநாயகியோடு ரிக்ஸா ஒட்டியதற்காக தேசியவிருது "வாங்கிய" வர்கள் அல்லவா ,அதுதான் விருதை பற்றி பேசுகிறீர்கள் ,,பேசுங்கள்)
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  11. #1487
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,

    உங்கள் பதிலுக்கு நன்றி. சிவாஜி உங்கள் சாப்பாட்டில் மண் அள்ளி போடவில்லை என்பதையாவது ஒப்புக் கொண்டதற்கு மற்றொரு நன்றி. நான் சொன்ன வாசகத்தை எனக்கு திருப்பி சொல்லியிருக்கிறீர்கள். நண்பரே நீங்களும் உங்கள் நண்பர்களும் சிவாஜியை தரமற்ற விதத்தில் விமர்சித்தது போல நான் இன்று வரை எம்ஜிஆர் அவர்களை ஏதேனும் ஒரு வார்த்தையேனும் தவறாக பேசியிருக்கின்றேனா? அவர் படங்களைப் பற்றி ஏதேனும் எதிர்மறை கருத்து சொல்லியிருக்கின்றேனா? சிவாஜி எம்ஜிஆர் படங்களின் ஓட்டம் அல்லது வசூல் இவை இரண்டை தவிர வேறு வகையான ஒப்பீடுகளை நான் எழுதியதேயில்லை. எம்ஜிஆர் விரோதம் என்ற மனோபாவத்தை நான் வெளிப்படுத்தியிருந்தால் நீங்கள் சொன்ன வாசகம் எனக்கு பொருந்தியிருக்கும். அப்படியில்லை எனும் பட்சத்தில் உங்கள் திருப்திக்கு இப்படி எழுதி கொள்ளலாம்.

    மற்றொரு குற்றச்சாட்டு நான் சில உண்மைகளை மன்னிக்கவும் உங்கள் கருத்துப்படி சில நிகழ்வுகளை பதிவு செய்தது உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறீர்கள். சிவாஜி ரசிகர்களை விட என் எழுத்துக்களை உன்னிப்பாக படிப்பவர்கள் நீங்களும் மற்ற எம்ஜிஆர் ரசிகர்களும் என்பது எனக்கு தெரியும். அதிலும் பழைய வரலாற்று நிகழ்வுகளை எழுதும்போது மிகவும் உன்னிப்பாக கவனிப்பீர்கள் என்பதும் தெரியும். நான் பலமுறை சொல்லியிருப்பது போல உண்மைகளை மட்டுமே நான் எழுதுவேன். அதனால்தான் எங்கள் மதுரையில் சவாலே சமாளி 80 காட்சிகளும் ராஜா 78 காட்சிகளும்தான் தொடர்ந்து அரங்கு நிறைந்தது என்பதை நான் மறைக்கவில்லை. அது மட்டுமல்ல ரிக்க்ஷாகாரன் 115 காட்சிகள தொடர்ந்து அரங்கு நிறைந்ததையும் நான் பதிவு செய்திருக்கின்றேன். 43 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள்தானே யாருக்கு தெரியப் போகிறது என்று உண்மையை நான் மறைக்கவில்லை. எப்படி அந்த உண்மைகளை மறைக்கவில்லையோ அதே போல் திரு C .தங்கம் அவர்களுடனான நட்பையும் விவரித்தேன், எனக்கு அவரிடம் பிடித்தது இரண்டு விஷயங்கள். சிவாஜி எம்ஜிஆர் போட்டி உச்சக்கட்டத்தில் இருந்த காலகட்டத்தில் கூட அவர் எங்களோடு பழகிய முறை. இரண்டாவது விஷயம் எனக்கு 12 வயது என்றால் அவருக்கு அப்போதே 25 வயது இருக்கும். ஆனால் இவன் சிறுவன்தானே என்று நினைக்காமல் அவர் பேசிய பழகிய விதம். உங்களைப் போன்றவர்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியாது. அன்றைய நாட்களில் [எனக்கு தெரிந்தவரை] மதுரையில் எம்ஜிஆர் மன்றங்கள் அதன் செயல் தலைவர்கள் என்று சொன்னால் திரு தங்கம், திரு கிருபானந்தம், திரு ராஜேந்திரன் மற்றும் திரு நவநீதகிருஷ்ணன் ஆகியோர்தான். 1972 செப்டம்பரில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் கறுப்புக் துணியில் சிவப்பு தாமரை சின்னம் பொறித்த கொடியை ஏற்றியவர்கள் இவர்கள்தான். ஆனால் அதில் நவநீத கிருஷ்ணனை தவிர அதிமுகவில் மற்ற மூன்று பேர்களுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான பதவிகளோ வேறு எதுவுமே இறுதி வரை அடைய முடியாமல் போனார்கள். தங்கம் அவர்களைப் பொறுத்தவரை 1978-ல் மதுரை மாநகராட்சி தேர்தலில் அவரது சொந்த வார்டான 34-ம் வார்டில் [மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்திருக்கும் கரிம்ஷா பள்ளிவாசல் 1,2 தெருக்களை உள்ளடக்கியது] போட்டியிடக் கூட அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. எம்ஜிஆர் அவர்களிடம் நேரிடையான தொடர்பு உடையவர் என்பதனால் எப்படியும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வேட்பு மனு தாக்கல் செய்த அவருக்கு வேட்பு மனு வாபஸ் வாங்கும் நாள் வரை சீட் கிடைக்கவில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அவர் வாபஸ் வாங்கவுமில்லை. ஆனால் எம்ஜிஆர் அவர்கள் மேல் தங்கம் வைத்திருந்த விசுவாசத்தின் காரணமாக தன்னுடைய சொந்த வாக்கையும் குடும்பத்தினரின் வாக்கையும் கூட தனக்கு அளித்துக் கொள்ளாமல் அதிமுக வேட்பாளரான தாஜுதீன் [என்று நினைவு] அவர்களுக்கு அளித்தவர். வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்கப்பட்டபோது தங்கம் வாங்கியிருந்த வாக்குகள் 0. [அப்போதைய குமுதம் இதழில் கூட இது பற்றி செய்தி வந்ததாக நினைவு]. எம்ஜிஆர் அபிமானிகளால் கருணாநிதிக்கு அடுத்தபடியாக எதிரியாக பார்க்கப்பட்ட மதுரை முத்து போன்றவர்கள் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிமுகவின் முதல் மேயராகவும் ஆக்கப்பட்டபோது தங்கம் போன்ற விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டனர். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்ற போதினும் தங்கம் என்ற நண்பருக்காக மனம் வருந்தி நான் எழுதியதுதான் அது. இந்த விளக்கத்தை கூட இப்போது எழுதுவதன் காரணம் எம்ஜிஆரை எப்படியாவது குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது அல்ல அந்த வரிகள் என்ற உண்மையை சொல்லத்தான். இந்த 1978 மதுரை மாநகராட்சி தேர்தல் விஷயங்களை நான் எழுதிக் கொண்டிருக்கும் தொடரில் அந்த காலகட்டம் வரும்போது எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் உங்களைப் போன்றவர்கள் எம்ஜிஆர் பற்றி எதுவும் எழுதக்கூடாது என்று சொல்லும்போது நான் இனி எம்ஜிஆர் தொடர்பான விஷயங்களை அவை வரலாற்று நிகழ்வுகளை சொல்வதாக இருந்தாலும் எழுதாமல் விட்டு விடுகிறேன். இதனால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.

    இறுதியாக சிவாஜி மேல் நீங்கள் எவ்வளவு "மதிப்பு" வைத்திருகிறீர்கள் என்பதனை நீங்கள் அவரை ஒப்பிட்டிருக்கும் பட்டியல் பார்த்தாலே தெரிகிறது. நண்பரே ஒரு கலைவேந்தன் அவரை எப்படி எடை போடுகிறார் என்பதை வைத்து நடிகர் திலகத்தின் மதிப்பும் தமிழ் திரையுலகில் அவர் இடமும் தமிழ் சமுதாயத்தில் அவர் இடமும் முடிவு செய்யப்படுவதில்லை.

    இத்தனை நாள் உங்களுடன் interact செய்தது போதும். உங்கள் விருப்பப்படி நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். நன்றி!

    அன்புடன்

  12. Likes KCSHEKAR liked this post
  13. #1488
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு,

    உங்கள் பதிவிற்கும் கண்ணியமான வார்த்தைகளுக்கும் நன்றி. நடிகர் திலகம் திரியில் பங்களிப்பாளர்கள் யாரும் உங்களுக்கு தொந்தரவு தர மாட்டார்கள். நண்பர் RKS அவர்களைப் பொறுத்தவரை எனக்கு தெரிந்து அவர் react செய்வாரே தவிர தானாக act செய்ய மாட்டார். அவர் தரப்பிலிருந்து உங்களுக்கு தொந்தரவு இருக்காது என்பதற்கு நான் பொறுப்பு.

    உங்களுக்கு பிடித்த நடிகர் திலகத்தின் 25 பாடல் பட்டியலுக்கு ஒரு சிறப்பு நன்றி!

    அன்புடன்

  14. #1489
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    அதேபோல தேவர்மகனுக்காக நடிகர்திலகத்துக்கு கொடுக்கப்பட்டது சிறந்த நடிப்பிற்கான ஒரு சிறப்பு விருதே தவிர துணை நடிகருக்கான விருது அல்ல
    ஓ! இதைத் தான் கிண்டல் பண்ணுறாங்களாமா ?
    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை-ன்னு போயிட்டே இருக்கணும் .. விடுங்க .விடுங்க .

  15. #1490
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி சார்,

    கலைவேந்தனுக்கு பிடித்த எஸ்.வீ.சுப்பைய்யா பாணியில் ,ஒரே ஒரு விண்ணப்பம். நான் நாலு வார்த்தை பேசிக்கலாமா?

    இந்த நேரத்தில் ,அற்ப காரணங்களுக்காக சுயநலத்திற்காக ,சீதா,நவகிரகம் போன்ற பாடல்களை ஆராய்ந்து கொண்டு யார் எப்படி போனால் என்ன என்று ஒருவர், ஒன்றைரையனா பதிவுகளுக்கு காவியம் பாடி பாராட்டுரையில் ஒருவர், தொலைந்ததை தேடி பாட்டு கொணரும் பணியில் மற்றவர்,மாற்று முகாம் மலர் வேலையில் ஒருவர் என்று பிளவு பட வேண்டிய நேரமா இது சுயநல வாதிகளா?ஒரு தமிழின் பெருமையான உண்மை தமிழனை ,ஒரு பஜனை கூட்டம் இழிவு படுத்தும்
    போது ,சும்மாவா இருப்பது? ச்சீ.....
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •