-
5th November 2014, 12:56 PM
#2611
Regular Hubber
Originally Posted by
esvee
இன்னும் 36 மணி நேரத்தில் இனிய பிறந்த நாள் கொண்டாட உள்ள நண்பர் திரு கோபால்
அவர்களுக்கு இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . 7ந் தேதி பிறந்த நீங்கள் பல பெருமைகளுக்குசொந்தக்காரர் . எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க என்றும் இன்று போல் என்றும் வாழ்க என்றும் உங்களை வாழ்த்துகிறேன் .
Advance birthday wishes Gopal Sir. I log in only to view your posts. In my opinion, you are the ultimate amongst the NT fans in terms of quality of analysis and indepth knowledge and understanding of the great. Best wishes Sir. Pls continue to contribute. Pls explore new territories of our idol . May be something on Deiva Magan or Navarathiri . Special request .
-
5th November 2014 12:56 PM
# ADS
Circuit advertisement
-
5th November 2014, 02:05 PM
#2612
Junior Member
Veteran Hubber
Best wishes for a happy birth day Mr. Gopal. May His Almighty continue to shower all his blessings for your sustained happiness.
regards, senthil
Last edited by sivajisenthil; 5th November 2014 at 02:21 PM.
-
5th November 2014, 03:12 PM
#2613
சந்திரசேகர் சார்,
நீங்கள் தினமலர் நாளிதழுக்கு எழுதிய கடிதம் மிக சரியான முறையில் எழுதப்பட்ட ஒன்று. ஆனால் அவர்கள் அதை பிரசுரிப்பார்களா என்பது சந்தேகமே! இதுவரை நம்முடைய அனுபவத்தின் வாயிலாக நாம் பார்த்த வரையில் அது ஆனந்த விகடன் ஆகட்டும், குமுதம் ஆகட்டும் தினமலர் ஆகட்டும் இல்லை oneindia போன்ற இணையதளங்கள் ஆகட்டும் அவர்களின் தவறுகளை அவர்கள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அதுவும் தவிர இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் "சிவாஜி விரோத" மனோநிலை கொண்டவர்கள் இந்த நிறுவனங்களின் பின்புலத்தை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் வண்ணம் செய்திகளை திரிப்பதிலும் வல்லவர்கள்.
எது எப்படியிருப்பினும் அவர்கள் பிரசுரிக்கிறார்களோ இல்லையோ தவறான தகவல் வரும்போது அதை சுட்டிக்காட்டி உங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது பாராட்டுக்குரியது. ஒரு நாள் நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கையில் தொடருவோம்!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th November 2014, 03:16 PM
#2614
அருமை நண்பர் சித்தூர் வாசு அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்.
உங்கள் மனோநிலை, நமது திரியின் பழைய பதிவுகளை படிப்பதனாலும் அதை மீள் பதிவு செய்வதனாலும் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி, திருப்தி ஆகியவற்றை நான் முழுமையாக புரிந்துக் கொள்கிறேன். அதை குறை சொல்லவும் விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் இருக்கும் பழைய பதிவுகளை எல்லாம் மீள் பதிவு செய்தால் இந்த திரியை பார்வையிடும் படிக்கும் ஏராளமான வாசகர்களுக்கு அது ஒரு ஏமாற்றமான அனுபவத்தைத்தான் கொடுக்கும். எழுதியதையே மீண்டும் மீண்டும் மீள்பதிவு செய்கிறார்களே இவர்களுக்கு எழுதுவதற்கு வேறு விஷயம் இல்லை போலிருக்கிறது என்ற தவறான முடிவிற்கும் அவர்கள் வந்து விடும் அபாயமும் இருக்கிறது.
நமது ஹப்பில் ஏன் இணையதள உலகத்திலேயே அதிகமாக வாசிக்கப்படும் நேசிக்கப்படும் திரிகள்/வலைப்பூக்களில் நமது நடிகர் திலகம் திரி முதன்மையான இடங்களில் இருக்கிறது என்பதை நான் இங்கே பலமுறை பதிவு செய்திருக்கிறேன். ரசிகர்களை தவிர்த்து பொதுவான பலரும் அதை அறிவார்கள், உடன்படுவார்கள். எனவேதான் நமக்கு பொறுப்பு கூடுதல். எண்ணிக்கை குறைந்தாலும் தரம் குறையாமல் பார்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. Quality matters more than quantity. அதனால்தான் அதிகமான வீடியோ பதிவுகள், மீள் பதிவுகள் போன்றவற்றை தவிர்க்க சொல்கிறேன்.
மீள் பதிவுகளே கூடாது என்று சொல்லவில்லை. அது தேவைப்படும் இடத்தில உதாரணமாக Filmography திரியில் ஒவ்வொரு படத்தைப் பற்றிய செய்திகள் பதிவிடும்போது அதற்கு பொருத்தமாக முன்னர் சுவாமி பதிவிட்ட விளம்பரங்கள், பத்திரிக்கை செய்திகள் தேவையான இடங்களில் விமர்சனங்கள் ஆகியவற்றை ராகவேந்தர் சார் பதிவிடுகிறார். இங்கும் அது போல் உதாரணமாக இப்போது திரிக்கு வராமல் இருக்கும் சாரதா போன்றவர்களின் பதிவுகளை இடலாம். புதிய வாசகர்களுக்கு அது சுவையாக இருக்கும். இப்போதும் பங்களிப்பு செய்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோரின் பதிவுகள் மீள் பதிவு செய்யப்படும்போது புதியது எது பழையது எது என்ற குழப்பங்கள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது.
நான் சொல்வதை சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இதையெல்லாம் மனதில் நிறுத்தி நாம் பதிவுகளை இட வேண்டும் என்று வாசுவை மட்டுமல்ல அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
-
5th November 2014, 03:18 PM
#2615
Junior Member
Newbie Hubber
தற்காப்புக் கலையை மையமாக வைத்து ஒரு படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு கலை வேந்தன் என்று தலைப்பிட்டுள்ளனர்.
Read more at: http://tamil.filmibeat.com/news/kala...rt-031643.html
-
5th November 2014, 08:27 PM
#2616
Senior Member
Devoted Hubber
துள்ளின இடத்தில துள்ளாமல்
இங்கவந்து ஏன் இந்தத்துள்ளல்?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th November 2014, 08:32 PM
#2617
Junior Member
Seasoned Hubber
பார்த்ததில் பிடித்தது - 46
அன்பை தேடி
முக்தா ஸ்ரீனிவாசன் , சிவாஜி , ஜெயலலிதா என்ற புது combination சேர்ந்து பணிபுரிந்த படம்
முக்தா ஸ்ரீனிவாசன் படத்தில் நாயகன் பாத்திரத்தை சித்தரிக்கும் பொது அவர் ஒரு வித நோயினால் பாதிக்கப்பட்டவர் போல் சித்தரிக்க படுவார்
பிறகு மெல்ல அதில் இருந்து மீண்டு தனக்கு உள்ள பலவீனங்கள் அனைத்தையும் தாண்டி வெற்றி அடைவது போலே கதை அமைக்க படும். இது தான் முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இயக்கம் படத்தில் உள்ள basic plot . உளவியல் ரீதியாக இது போன்ற கதைகள் வெற்றி பெற சாத்தியகூறுகள் அதிகம் , காரணம் , படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எதோ ஒரு வகையில் ஒரு shortcoming அதாவது ஒரு குறை இருக்கும் , படத்தின் நாயகன் வெற்றி பெறுவதை போல் காட்சிகள் இருந்தால் தாங்களே வெற்றி பெற்றுவிட்டதை போல் எண்ணி ஆனந்தம் அடைவார்கள் .
இந்த படத்தில் நாயகன் கனவு காணும் வியாதியால் அவஸ்தை படுகிறார் , தன் வேலைக்காரன் மற்றும் உறவினர்கள் அனைவராலும் உதாசீன படுத்த படுகிறார் . அவருக்கு அதரவு அவர் அக்கா மற்றும் அக்கா குழந்தை இந்திரா . குழந்தை இந்திரா உடன் கடைக்கு செல்லும் பொது குழந்தையை தொலைத்து விடுகிறார் , மறுநாள் குழந்தை இறந்து விட்டதாக செய்தி வர , அக்காவும் , அக்காவின் கணவரும் இருவரும் நாயகன் ராமுடன் இருக்க பிடிக்காமல் வெளியே சென்று விடுகிறார்கள்
தன் அக்கா , மாமா இருவரும் அனுபவிக்கும் வேதனையை தானும் அனுபவிக்க வேண்டும் அது தான் நீதி என்று ராமு நினைத்து , தனக்கு பிறக்க போகும் குழந்தையை தன் அக்கா மாமா இருவருக்கும் கொடுத்து விட நினைக்கிறார் , ராமு சொன்ன படி செய்தாரா , குழந்தையை கொன்றது யார் , பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதே மீதி கதை
சிவாஜி அவர்கள் இந்த படத்தில் எடுத்து கொண்டு இருக்கும் பாத்திரம் சற்று வித்யாசமான பாத்திரம் , எதை பற்றியாவது நினைத்து கொண்டு தான் அதுவாகவே மாறி விட்டதாக கற்பனை செய்து கொள்ளும் பாத்திரம் , முதலாளி என்ற தோரணை இல்லாமல் , தன்னிடம் வேலை பார்க்கும் நபர்கள் செய்யும் திருட்டு வேலைக்கு வேறு வழி இல்லாமல் துணை போகும் பாத்திரம் , பொதுவாகவே ஒரு நபரை திட்டி , அவமானம் செய்யும் பொது அவர் confidence level கம்மி ஆகி விடும் , நாட்கள் செல்ல செல்ல தன்னம்பிக்கை குறைந்து அவநம்பிக்கை , பயம் வந்து விடும் , இதை தன் கண்களால் அற்புதமாக பிரதிபலிக்கிறார் நடிகர் திலகம் ,ஒவ்வொரு முறையும் தன்னை அவமானம் படுத்தும் நபர்களை அவர் கடந்து செல்லும் பொது நம் மனது வலிக்கிறது
கனவு கான்பாது என்பது நாயகனின் குறை , ஆனால் அதை லாவகமாக பயன்படுத்தி , ஒரு சில காட்சிகள் என்றாலும் அதை நன்றாக செதுக்கி இருப்பார் இயக்குனர் ஸ்ரீநிவாசன்
cricket bowler , புத்தர் , இளவரசன் என்று ஒரு சில நிமிடங்களே வந்தாலும் நம் மனதில் பதிந்து விடுகிறது , குறிப்பாக அந்த புத்தர் பாத்திரத்தில் நமாவர் கண்ணில் தெரிந்த கனிவு , பின்னாடி தெரியும் ஒலி , சலனம் இல்லாத முகம் simply outstanding
தன் அக்கா குழந்தையின் சாவுக்கு காரணம் தான் தான் என்று மருகுவதும் , தன் தாய் தந்தை போல் இருந்த அக்கா மாமா வெளியே போகும் பொது வெடித்து அழுவும் காட்சிகள் நடிகர் திலகத்தின் acting stamp
முதல் பாதியில் அடி வாங்கும் சிவாஜி பிற்பாதியில் அடி கொடுக்கும் பொது நம் கை தட்டாமல் இருக்க முடியவில்லை
அதும் ஒரு மனிதர் கோழையாக இருந்து விட்டு வீரனாக மாறும் பொது அடிக்க தெரியமால் ஆனால் ஒரு வித வெறி உடன் அடிப்பான் , அதை அழகாக பிரதிபலித்து இருப்பார் நடிகர் திலகம்
கடைசி காட்சியில் சோ அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசி காண்பிக்கும் பொது ஒரு வித dumb expression மட்டும் கொடுத்து விட்டு நிற்கும் இடத்தில சிரிப்பை வர வைக்கிறார்
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
5th November 2014, 08:34 PM
#2618
Junior Member
Seasoned Hubber
ஜெயலலிதா இந்த படத்தில் சற்று வயதானவராக தெரிகிறார் , அறிமுக காட்சியில் தன்னை வம்பு இழுத்து கேலி செய்யும் நபரிடம் அவர் துடுக்குத்தனமாக சண்டை போடுவதும் , சிவாஜியிடமும் அதே போன்று நடந்து கொண்டு பின்பு சிவாஜியின் குணம் புரிந்து அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளுகிறார் , சிவாஜியின் பயத்தை போக்க , அவர் கையாளும் உக்தி , முதலில் குழந்தையை பிரிய சம்மதித்து விட்டு , பிறகு தாய்பாசம் காரணமாக குழந்தையை பிரிய மறுக்க , மீண்டும் சொன்ன சொல் தவறமால் இருக்க உயிரை கூட துச்சமாக நினைத்து உயிர் விட நினைக்கும் பொது , நம் மனதில் நின்று விடுகிறார்
சோ
வழக்கம் போல் அரசியல் நையாண்டி செய்கிறார் , அதிலும் இந்திரா என்ற குழந்தையின் பெயரை வைத்து இவர் அடிக்கும் லூட்டி , அரசியல் எனக்கு பொழுதுபோக்கு , கட்சி விட்டு கட்சி மாற இவனால் முடியாது என்று நகைச்சுவை தோரணம் காட்டுகிறார் , சில காட்சிகளில் குணசித்திர பாத்திரமாகவும் முத்திரை பதிகிறார்
மேஜர் சுந்தராஜன் :
நடிகர் திலகத்தின் பெரும்பாலான படங்களில் நடித்து இருக்கிறார் , பல படங்களில் நல்ல substance உள்ள author backed ரோல் ல் நடித்து கலக்கி இருப்பார் , இந்த படத்தில் நடிகர் திலகத்தின் மாமாவாக நடித்து இருக்கிறார் , பொதுவாக அவரை திட்டுவதும் , ஆனால் அந்த கண்டிப்புக்கு பின்னல் அவர் நல்ல வரவேண்டும் என்ற அக்கறையும் வெளிப்படும் , தன் மகள் சாவுக்கு காரணமாக இருக்கும் சிவாஜியின் மேல் ஆத்திரம் அடையாமல் வீட்டை அவர் பொறுப்பில் விட்டு செல்லுவதும் , தான் வளர்த்த பையன் தன்னை எடுத்து எரிந்து பேசிய உடன் அப்படியே stun ஆகி நிற்கும் காட்சியிலும் , கடைசியில் சிவாஜியின் மனதை அறிந்து கண்ணீர் வடிக்கும் காட்சியிலும் , மகளை பிரிந்து சோகத்தால் வாடும் காட்சியிலும் நிறைவாக நடித்து இருக்கிறார்
சிவாஜி தன் மாமாவின் அறையில் அவர் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தனக்கு தானே பேசுவதை அவர் பார்த்து ரியாக்ட் பண்ணும் காட்சி அருமை
விஜயகுமாரி :
தன் தம்பிக்காக வருத்த படும் அக்காவாக அருமையாக பொருந்தி இருக்கிறார் , முதல் பாதியில் தம்பிக்காக வாதாடும் அவர் , பிற்பாதியில் தன் கணவரை தம்பி எடுத்து எரிந்து பேசியுடன் , இவர் கோப படும் காட்சி , அதற்கு சிவாஜி கொடுக்கும் பதிலும் அருமை
சுபா :
சிவாஜியின் தலையில் தீப்பட்டி வைத்து விட்டு , அதை வைத்து அவரை அவமானம் படுதும் காட்சியிலும் , அதே போல் தானும் சிவாஜியிடம் tit for tat வாங்கும் இடத்தில நன்றாக ஸ்கோர் செய்து இருக்கிறார்
மனோரமா :
முதலில் திருட்டு பொருள் விக்கும் பொது நகைச்சுவைக்கு உதவுகிறார் , அதுவும் சோவின் மூக்கு போடி டப்பாவை மனோரமா திருடி அதை அவரிடமே விற்கும் காட்சி நல்ல தமாஷ்
பிற்பாதியில் குணசித்திர பாத்திரத்துக்கு மாறி அதிலும் நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார்
பாடல்கள் – MSV
புத்தி கேட்ட பொண்ணு ஒன்னு பாடலில் நடிகர் திலகத்தின் நடனமும் , கலைச்செல்வியின் நடனமும் மாஸ் steps , பாடலும் தாளம் போட வைக்கும் .
சித்திர மண்டபத்தில் பாடல் கிளாஸ் நடிகர் திலகம் யுவராஜாவாக , ஜெயலலிதா மிஸ் மெட்ராஸ் என்ற பாத்திரத்தில் அற்புதமாக பொருந்தி இருப்பார்கள் பாடல் வரிகளும் , பாடல் எடுத்த விதமும் அற்புதமாக பொருந்தி இருக்கும் , அவர்கள் உடை perfect
அம்மாவும் அப்பாவும் வெள்ளை பூனைகள் பாடலில் நடிகர் திலகத்தின் அப்பாவி முகபாவனைகளை காணலாம்
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
5th November 2014, 08:55 PM
#2619
Senior Member
Devoted Hubber
[quote=kcshekar;1178951]நடிகர்திலகத்தைப் பற்றி அவதூறு பேசுவது, எழுதுவது என்றால் பலருக்கும் லட்டு சாப்பிடுவது போல இருக்கிறது. அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுக்குப் பிறகும் அவரது புகழ் ஜொலிப்பதைக் கண்டு பொறுக்காதவர்கள் தொடர்ந்து இதுமாதிரி செய்கிறார்கள்.
தினமலர் நாளிதழுக்கு நான் எழுதிய கடித நகல்:
quote]
சந்திரசேகர் சார் தங்கள் முயற்ச்சிக்கு
எனது மனமார்ந்த நன்றி
கடிதம் அனுப்பியதுடன் அல்லாமல்
நேரே சென்று நம்முடைய ஆட்சேபனையை தெரிவிப்பது
கூடுதல் பயன் அளிக்குமென நினைக்கின்றேன்
ஏனைய நண்பர்களுடன் கலந்தாலோசித்து
முயற்ச்சி செய்யுங்கள் நன்றி.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th November 2014, 06:01 AM
#2620
Junior Member
Newbie Hubber
கலைவேந்தன்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
சில விஷயங்களை மட்டுமே தொட்டு விட்டு செல்வேன்.
1)நடிகர்திலகத்திற்கு தொழிலில் போட்டி இருந்ததே இல்லை. அவர் முடி சூட்ட பட்ட வெள்ளித்திரை மன்னன்.இது இறுதி வரை தொடர்ந்தது.தொடரும்.
2)அவருக்கு திறமையில் போட்டி என்றாலும் உலகளாகிய அளவில் மார்லோன் பிராண்டோ போன்ற ஒரு சிலருடன் மட்டுமே.அவர்கள் கூட ,சிவாஜி கிட்டே நெருங்க முடிந்த காரணம் ,சரியான இடத்தில் பிறந்ததால் மட்டுமே.
3)அவருக்கு போட்டியாளராக தன்னை காட்டி கொள்ள விரும்பியவர்கள்,சில கீழ் மட்ட அரசியல் செய்து ,சிறு தொல்லைகள் மட்டுமே கொடுக்க முடிந்தது.(இது ராம.அரங்கண்ணல் விவரிப்பில் எப்படி திட்டமிடப்பட்டது அன்று ஆதார பூர்வமாக புத்தகங்களில் வெளியான ஆவணம்)
4)எந்த ஒரு திறமையாளரும்,அரசியலில் எப்படியாவது வெற்றி கண்டால் மட்டுமே அங்கீகரிக்க பட வேண்டும் என்ற ஒரு தவறான முன்னுதாரணம் தமிழ் நாட்டில் ஏற்பட்டு ,நடிக்க வந்தோர் அரசியல் செய்வதும்,அரசியல்வாதிகள் நடிப்பதும் வாடிக்கையாகி விட்டது.எது ஒன்றும் நடந்து முடிந்து விட்டதால் அங்கீகரிக்க பட்ட நற் சரித்திரம் ஆகி விட முடியாது.
5)நாமெல்லோரும் பெருமை கொண்டு ,ஒன்று பட்டால் மட்டுமே,தமிழினம் உலகளவில் மதிக்க படும்.நம் மொழி அதற்குரிய உயர்வை அடையும்.நம் திறமைகளில் நாம் பெருமை காணுவதை விடுத்து,நம் உன்னத கலைஞர்களை நாமே புறம் தள்ள கூடாது.
6)சிவாஜி , ஒரு தாகூர் ,சத்யஜித்ரே வங்காளத்தால் போற்ற படும் அளவு,அனைத்து தமிழர்களாலும் போற்ற பட வேண்டிய உன்னத தமிழ் .கலைஞர் .
7)தற்போது அனைவரும் கல்வி பெற்று முன்னேறிய அறிவு சூழலில்,சிறு வயதில் அறியாமை சூழலில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் மறு பரிசீலனை செய்ய பட்டு , பொய்மை விட்டு, திறமையின் பின்னே அணிவகுக்க நாம் அனைவரும் கற்க வேண்டும்.
8)எனக்கு மற்றோர் நல்ல படங்களை அங்கீகரிப்பதால், என் நடிப்பு தெய்வத்தின் மீது என்னுடைய பற்றுதல் கேள்விக்குரியதாகி விடுமென்றோ,என் தெய்வத்தின் படங்களையே நான் விமரிசிப்பதால் அவர் மீது உள்ள பக்தியில் களங்கம் விளையுமென்றோ ,மூட நம்பிக்கையில் திளைத்து , சுலோகங்கள் பாடி கொண்டிருக்கும் மனநிலை என்றுமே வராது. ஏனென்றால் நான் பெரியாரின் அறிவு பாசறையில் வெளி வந்த பகுத்தறிவாளன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
Bookmarks