Page 266 of 400 FirstFirst ... 166216256264265266267268276316366 ... LastLast
Results 2,651 to 2,660 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2651
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    எவற்றின் நடமாடும் நிழல் நான்? என்னை பார்க்கவே கண்ணாடி தேவை பட்ட, என்னை புரியவே உறவுகள் தேவை பட்ட பலவீனன் நான்.என்னுடைய ஆடைகள்,உண்ணும் உணவு,இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளே மற்றவர்களின் கருணையாலேயே கிடைத்தது.யாரோ ஒரு முகம் தெரியா விவசாயி,நெசவாளர்,கட்டிட உழைப்பாளி என்று பலர் என் வாழ்கை தரத்தை மேம்படுத்தி ,தியாகம் செய்துள்ளனர். நமக்காகவே பிறந்தது போல பல உயிரினங்கள் நமக்காக எத்தனை தியாகங்கள் புரிந்துள்ளன?இவற்றுக்கு,இவர்களுக்கு மேலானவன் எனும் நினைவை தகர்க்க போராடுவதே ,என் அய்யன் பெரியார் எனக்களித்த பால பாடம்.



    வெற்றி பெற்ற மனிதனா? கேள்வி தொடர்கிறது. லட்சிய வேலி ,என் வாழ்க்கையை ,நான் தொடங்கியிருக்க வேண்டிய இடத்தில், இவ்வளவு கடின உழைப்புக்கு அப்புறமே நிறுத்தியுள்ளது.



    என்னை அறிந்து, மற்றவர்களை பயன் படுத்தி என்னை வளர்த்து கொண்டு,என் புகழை உயர்த்தி கொண்டேனா?பண பலம் பெருக்கி கொண்டேனா? இல்லை. எனக்கு கிடைத்தது போல பல மடங்கு ,என்னை சார்ந்தவர்களுக்கு கொடுத்தே வந்துள்ளேன். எனக்கு சேர வேண்டியதை விட்டதுமில்லை. அல்லாததை தொட்டதும் இல்லை.



    என் கொடுப்பினை----பெருமையாய் சொல்லி கொள்ளும் விதத்தில் ,தாய்-தகப்பன் ,சகோதர-சகோதரிகள் ,நண்பர்களை வழங்கி என் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை விதி வள படுத்தியது.இதில் எனக்கு திருப்தியே.



    அருமையான தேர்வு எனக்கு மிக மிக சிறந்த வாழ்வின் இணையை அளித்தது. என்னை புரிந்த வியாபார வட்டங்கள்,நட்பு வட்டங்கள் என் தேர்வின் படி,எனக்கு நிறைவை அளித்தன. அற்புதமான குழந்தைகள் என் ஜனநாயக முறை வளர்ப்பினால் ,என்னை தாண்டி சென்று என்னை குளிர்விக்கின்றனர்.இதில் எனக்கு வெற்றியே.



    என்னை சேர்ந்தோருக்கு, என்னால் வாழ்வில் ஏதோ ஒன்று வழங்க பட்டே வந்தது. என் பழக்க வழக்கங்கள் ,சூழ்நிலையை,சகமனிதர்களை ,சக ஜீவிகளை காக்கும் பொருட்டே அமைந்தன.இதில் எனக்கு வெற்றியே.



    என் சுயம் , உறவு முறை பழகியவர்களை சக மாணவன்,உடன் வேலை பார்த்தவன். தலைமை நிர்வாகி என்ற மாறும் நிலையில் நினைவுருத்தாமல் ,கோபால் என்ற மனிதனாக நினைக்க செய்து ,இனிக்க செய்தது.இதில் எனக்கு வெற்றியே.



    உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் அறியும் துடிப்பு இருந்தாலும், சிலவற்றை நன்கு அறிந்து துய்த்தேன் .இதில் எனக்கு கரை கண்ட பெருமிதமே.



    காணும் உலகம் கையில் வந்த வாலிபம். நான் சுவைக்காதவை பூவுலகில் இல்லாதவையே என்ற விதத்தில் அத்தனையையும் ருசித்தேன் ,சுவைத்தேன்.(கண்ணதாசன் ,ஓமர் கய்யாம் எல்லாம் எனக்கு கீழேதான்). இதில் திருப்தி இல்லா விட்டாலும், ஓரளவு நிறைவே.(இன்னும் இருக்கிறது பாக்கி. முக நூலில் தெரியும்)



    இதை மீறி ,குறைகளும் உண்டு. இயற்கை எனக்களித்த சிறப்புகளை, இன்னும் மனிதம் வளப் பட ,மகிழ்வுற பயன்படுத்தி ,நாம் வளர்ந்திருக்கலாமே என்பதே.



    குறை,நிறை அனைத்தையும் மீறிய சில நெறிகளில் நான் கர்வ படுவதுண்டு.



    கடவுள் என்ற ஒருவன் இருந்தால், என்னை தமிழனாக படைக்க தேர்வு செய்தமைக்காக. உலகில் சிலருக்கே அமைந்த பாக்கியம்.



    என்னை தமிழில் தோய்ந்து, சுவைக்க வைத்து, உண்மை தமிழனாய் வாழ வைத்தமைக்காக.



    சக மனிதர்களை,அவர்கள் புகழின் அளவு கொண்டு பூசிக்காமல்,தலை வணங்காமல், திறமையின்,உண்மையின், அளவு கண்டே என் விருப்பங்கள் தேர்வு கண்டன. எனக்கும் ,உலகுக்கும் ஒவ்வாதவை புறம் கண்டே உள்ளன என் தேர்வில்.



    எனக்கு மிக சிறந்த நட்பு வட்டத்தை மிக குறுகிய நாட்களில் அளித்த மையம் திரிக்கு நன்றி.



    என் வாழ்வின் அழகியல் தேர்ந்தெடுப்பை அர்த்தமுள்ளதாக்கி,என்னை தொடர்ந்து காத்து வரும் கலைதெய்வம் சின்னைய்யா கணேச மூர்த்திக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    உங்களுடைய பதிவை படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது...இது ---> நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை கண்டிருக்கிறது ..பல விந்தையான மனிதர்களை சந்தித்திருக்கிறது.

    இந்த வழக்கு விசித்திரமும் அல்ல...வழக்காட வந்திருக்கும் நான் விந்தையான மனிதனும் அல்ல..வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படகூடிய ஜீவன் தான் நான்.

    கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்...கோவில் கூடதேன்பதர்க்காக அல்ல ! கோயில் கொடியவரின் கூடாரமாக இருக்ககூடாதேன்பதர்க்காக.

    பூசாரியை தாக்கினேன்...அவன் பக்தன் என்பதற்காக அல்ல..! பக்தி பகல் வேஷம் ஆகிவிட்டதை கண்டிப்பதற்காக !

    உனக்கேன் அக்கறை ...உலகத்தில் எவருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்...நானே பாதிக்கப்பட்டேன் ....நேரிடையாக பாதிக்கப்பட்டேன்...!

    சுயநலம் என்பீர்கள்..!

    ஆம்...இதுவும் ஒருவகை சுயநலம்தான்..! ஆகரத்திர்க்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தபடுத்துகிறதே...மீன் ! அதை போல !

    என்னை குற்றவாளி என்கிறார்களே...இந்த குற்றவாளியின் பாதையை சிறிது பின்னோக்கி பார்த்திருந்தால்...இவன் கடந்துவந்துள்ள காட்டாறுகள் எத்துனை என்பதை கணக்கு பார்த்திருக்க முடியும்...!

    பாட்டுக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்...படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன...

    தென்றலை தீண்டியதில்லை நான்...! தீயை தாண்டியிருக்கிறேன்.....!

    கேளுங்கள் ..தீர்ப்பு எழுதும் முன் கேளுங்கள் என் கதையை ....

    சார் இந்த நடை ஞாபகம் வந்தது.....!

    rks
    Last edited by RavikiranSurya; 7th November 2014 at 11:28 AM.

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2652
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    நன்றி எம்கேஆர்சாந்தாராம் :

    " பாவ மன்னிப்பு " - பெரிய பெரிய ஜாம்பவான்களின் கூட்டணியின்

    சங்கமம் ! சிவாஜி கனேசன், ஏ.வி.எம், விஸ்வனாதன் - ராமமூர்தி,

    ஜெமினி கனேசன், எம்.ஆர்.ராதா, டி.ஸ்.பாலையா, எஸ்.வி. சுப்பையா,

    கண்ணதாசன், டி.எம்.எஸ், பி.சுசீலா, பி. பி. சீனிவாசன் ,தேவிகா, சாவித்திரி, ஏ.பீம்சிங்,

    ஜி.விட்டல் ராவ், ஜி.கே.வெங்கடேஷ் போன்ற ஜாம்பவான்களின்

    படைப்பு ! இந்து, முஸ்லிம், கிருஸ்தவம் ஆகிய மதங்களின்

    ஒற்றுமையை அருமையாக கவிதையாகப் படைத்த படம் !

    விஸ்வநாதன் - ராமமுர்த்தி யின் மைல் கல் !

    பி.பி. எஸ் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை !

    இவ்வளுவு இருந்தும் நம் அரசு என்ன அவார்ட் அல்லது

    ரிவார்ட் கொடுத்தது ? மத்திய அரசு, மத நல்லினக்கணத்தை

    அருமையக காட்டும் "பாவ மன்னிப்பை " , அதன் பாடல்கள்

    இரண்டை கத்திரி கொண்டு வெட்டியது !


    அந்த பாடல்கள் எவை ?



    பாட்டு 1


    " பாலிருக்கும் பழமிருக்கும், பசி இருக்காது "


    பி.சுசீலா அவர்கல் மெல்லிசை மன்னரின் வுடன் பாடிய பாட்டு.

    பிறப்பால் இந்துவாகவும், வளர்ப்பால் முஸ்லிம் ஆகும் ஓர்

    வாலிபனை, கிருஸ்தவப் பெண் காதல் கொண்டு பாடுவது

    போல் அமைந்த பாட்டு !

    அதன் இறுதி பாராவில் உள்ள வரிகளைப் படியுங்கள் :



    " காதலுக்கு ஜாதி இல்லை, மதமும் இல்லையே,


    கண்கள் பேசும் பாஷையிலே பேதம் இல்லையே,


    வேதம் எல்லாம் காதலையே மறுப்பதில்லையே,


    அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே "





    காதல் என்பது எல்லோருக்கும் வரும், அவர் யாராக

    இருந்தாலும் காதல் வரும் ! இதைத்தான் கண்ணதாசன்

    அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றார் !

    ஆனால், தன்னிச்சை - மன்னிக்கவும் - தணிக்கையாளரள்

    அதை ஒத்துக் கொள்ளவில்லை !

    அவர்கள் " வாதம் " :

    " இந்த வரிகள் குறிப்பட்ட சில மதத்தினரை புண் படுத்தும்,

    எனவே மதக் கலவரம் மூளும், ஆகையால் இதை மாற்ற

    வேண்டும் என்று கூறிவிட்டனர் !

    கண்ணதாசன் எவ்வளுவு சமாதானம் சொல்லியும் அவர்கள்

    செவி சாய்க்கவில்லை 1

    என்ன செய்தார் கவிஞர் ?

    கடுங்கோபத்துடன் எழுதினார், ஆனால் அந்தக்

    கோபத்திலும் மாற்றி எழுதும்போது கவிதைத்துவம் ச்றிதும்

    குறையாமல் எழுதினார் !

    என்ன எழுதினார் ?


    " காதலுக்கு ஜாதி இல்லை, மதமும் இல்லையே,


    கண்கள் பேசும் பாஷையிலே பேதம் இல்லையே,


    வேதம் எல்லாம் காதலையே மறுப்பதில்லையே,


    அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே "




    என்று மாற்றி எழுதினார் !


    இப்போது கூட இசைத்தட்டிலும், இலங்கை வானொலியிலும்


    " குரு வை " விடுவதில்லை !


    வெள்ளித்திரையில் மட்டும் தான் " மேகம் " வந்து மறைகிறது !


    பாடல் : " வந்த நாள் முதல் "



    இந்த பாடலை அறியாத தமிழனே கிடையாது !

    மிகவும் புகழ் பெற்ற பாடல் !

    முதலில் இந்த பாடலை யாரை வைத்துப் பாடுவது என்ற குழப்பம் வந்தது.

    முதலில் டி. ஏ. மோதி அவர்களைப் பாட வைத்தார்கள், உம்,,,... உம்,,,

    சுகமில்லை! பின்னர் மெல்லிசை மன்னர்களின் உதவியாளராக இருந்த

    ஜி.கே. வெங்கடேஷ் அவர்களைப் பாடவைத்தார்கள்.,,,ம்ம்,, ம்ம் ,, ,ம்

    ஓ.கே, - இருந்தும் முழுமையான திருப்தி இல்லை ! என்னினும் வெங்கடேஷ்

    அவர்களின் பாடலை சோகமான சூழ்னிலைப் பாடலுக்கு பயன் படுத்திக்

    கொண்டார்கள்.



    இருந்தாலும் வேலை இன்னும் முடிய வில்லை.

    இதை எல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டிருந்த டி.எம்.எஸ்

    அவர்கள் மெல்லிசை மன்னரிடம் கூறினார் :


    " அண்ணே நீங்கள் யார் யாரையோ கூப்பிட்டு பாட வைத்துள்ளீர்கள்,

    என்னை நீங்கள் பாட வைத்தால் அந்த பாடலை நான் " ஊதித் "

    தள்ளிடுவேன் "


    என்று சொன்னாராம். கிராமிய மணம் கமழும் பாடலை பாடிப்

    பழக்கப்பட்ட உங்களுக்கு இந்த பாடலை எப்படி பாடுவீர்கள் என்று

    எம்.எஸ்.வி கேட்டாராம்.எனினும் பின்னர் டி.எம்.எஸ் பாடா சந்தர்ப்பம்

    கொடுக்கப்பட்டு, பின்னர் அந்தப் பாடல் டி.எம். எஸ் - ஆல் மேலும்

    மெருகேறியது அனைவரும் அறிந்ததே !




    அனால் தணிக்கையாளர்கள் இந்த அழகான பாடலையும் " வெட்டு- குத்து "

    செய்தனர் !

    அந்தப் பாடலில் நடுவில் வரும் " பாரா " வைப் படியுங்கள் :


    " பறவையை கண்டான் - விமானம் படைத்தான்,


    பாயும் மீன்லளில் படையினைக் கண்டான்,


    எதிரொலி கேட்டான் -- வானொலி படைத்தான்,

    எதனை கண்டான் மதங்களை படைத்தான் ? "






    இந்த மதம் என்ற சொல்லைக் கேட்டதும் அவர்களுக்கு " மதம் "

    பிடித்துவிட்டது ! இந்த மதம் என்ற சொல்லால் பிரச்சனை

    என்பது அவர்கள் கூற்று ! என்ன கூத்து இது !

    " ஒரு நாள் மட்டும் " கேர்ல் பிரண்ட் " ஆக வர்ரியா " என்ற

    பாடல் வரிகளில் பிரச்சனை இல்லை போலும் !- இப்போது !

    அது கிடக்கட்டும்,,,,,.



    "வந்த நாள் முதல் " பாடலில் " மதம் " என்ற் சொல்லை

    மாற்றச் சொன்னார்கள். கண்ணதாசனும் மாற்றினார் !


    எப்படி ?




    " பறவயைக் கண்டான் - விமானம் படைத்தான்,


    பாயும் மீன்களில் படையினைக் கண்டான்,


    எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்,


    எதனைக் கண்டான் பணம் தன்னை படைத்தான் ? "



    திரையில் " பணம் " என்று வரும்,

    ஆனால் இசைத்தட்டில் " மதம் " என்று வரும் !


    ஆனால் என்னிடம் " பணம் " மட்டும்தான் உள்ளது !


    அதாவது " பணம் " என்று வரும் பாடல் மட்டும் உள்ளது !


    " மதம் " என்னிடத்தில் இல்லை !


    ஆனால் " பணம் " பாட்டில் அதிகப்படியான ஒரு " பாரா "

    வரும் !

  5. Likes Russellmai, kalnayak liked this post
  6. #2653
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    படம் : " வளர் பிறை " ( 1962 )

    நடிகர், நடிகையர்கள் :

    சிவாஜி கணேசன், சரோஜா தேவி, டி.எஸ். பாலய்யா,

    எம்.வி. ராஜம்மா, எம்.ஆர். ராதா, கே.ஏ. தங்கவேலு, எம்.சரோஜா,

    நாகய்யா, லீலாவதி, சி.கே.சரஸ்வதி, நாகேஷ்.


    கதை வசனம் - ஜாவர் சீத்தாராமன்,

    பாடல்கள் : கண்ணதாசன்.

    இசை : கே.வி. மகாதேவன்

    இயக்கம் : D. யோகானந்த்.


    கதை சுருக்கம் :

    ( எனக்குத் தெரிந்தவரை ! )


    கிருஷ்ணாபுரம் !

    இங்கேதான் இந்த கதை நடக்கின்றது !

    தர்மலிங்கம் பிள்ளை ( டி.எஸ். பாலய்யா ) ) கிருஷ்ணாபுரத்தில் ஒரு

    பெரிய மிராசுதார் ! அவரது தந்தை ( நாகய்யா ) , தர்மலிங்கத்திற்கு:

    30 வேலி நிலமும், மூன்று தோப்புக்களும் எழுதி வைத்து காலமானார்.

    அத்தோடு அவர் போய்விடவில்லை !

    தர்மலிங்கத்தின் தந்தை , அவருக்கு :

    3 வாக்கியங்களையும் தன் சொத்துக்களாக மதிக்கும்படி எழுதி

    வைத்துச் சென்றார் !


    அந்த 3 வாக்கியங்களும் என்ன ?

    1. " எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும் "

    2. " ஒன்று பட்டால் உண்டு வாழ்வு "

    3 . " தீயாரைக் காண்பதும் தீதே "



    என்பதே அந்த வாக்கியங்கள் ! அந்த வாக்கியங்களை அவர்கள்

    வாழ்க்கையில் பின்பற்றினால் அவர்களுக்கு நல்ல முன்னேற்றம்

    ஏற்படும் என்றும் சொல்லிவிட்டு மறைந்தார் !


    தர்மலிங்கம் பிள்ளைக்கு :

    கனகு ( சிவாஜி கணேசன் ) என்கிற மகனும், சுந்தரி ( லீலாவதி )

    என்கிற மகளும், நல்லம்மை ( எம்.வி. ராஜம்மா ) என்கிற நல்ல

    மனைவியும் வாய்த்தனர் !


    சிறு வயதிலிருந்தே பார்வை இழந்திருந்த கனகு சரியாக பள்ளிக்குப்

    போகமுடியவில்லை. பின்பு பார்வை திரும்பப் பெற்ற பின் படிப்பில்

    கவனம் செலுத்த முடியாமல் " வாளா " இருந்து விடுகிறான் !

    " எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும் " என்கிற வாக்கியத்தை

    மறந்துவிடுகிறான் !


    ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட தர்மலிஙம் பிள்ளை வேறு

    ஓர் ஊரில் உள்ள ஜோசியரைப் பார்த்துவிட்டு இரயிலில் ஊருக்குத்

    திரும்பும்போது ரயிலில் தனது பணப்பையை தவற விடுகிறார் . அந்த

    பணப்பையைக் கண்ட பிக்பாக்கட் மணி (எம்.ஆர். ராதா ) அந்த

    பணப்பையை தர்மலிஙம் கையில் கொடுக்காமல் தானே வைத்துக்

    கொள்கிறான் ! அது மட்டுமா ! இரயிலில் பணமில்லாமல் தவிக்கும்

    தர்மலிங்கம் பிள்ளைக்கு , நல்லவர் போல் நடித்து , அவர் பணத்தையே

    அவருக்கு உதவி செய்வது மாதிரி கொடுத்து நல்லவன் போல் நடிக்கிறான் ,

    மணி !

    " தீயாரைக் காண்பதும் தீதே "

    இதை அப்போது தர்மலிஙம் பிள்ளை அறியவில்லை !


    இப்படியாக பிக் பாக்கட் மணி, தர்மலிங்கம் அன்புக்கு பாத்திரம் ஆகிறான் !

    அது மட்டுமா ! தர்மலிங்கம் பிள்ளை வீட்டிற்கு அடிக்கடி வந்து போக

    ஆரம்பிக்கிறான் !

    அது மட்டுமா ?

    தர்மலிங்கம் பிள்ளையின் கல்யாண ஆகாத இளம் பெண் ஆனான

    சுந்தரியை " ஒரு தலையாக காதல் " கொண்டு அவளை மணக்கத்

    துடிக்கிறான் ! இந்த சமாச்சாரத்தை அறிந்த கனகு அதற்கு தடையாக

    இருந்து மணியை எச்சரிக்கிறான் ! சுந்தரியை மணந்து அதனால் தர்மலிங்கம்

    சொத்தையும் அபகரிக்க சூழ்ச்சி போடும் மணி , தர்மலிங்கம் பிள்ளையின்

    அதிகமான ஜோசியப் பித்தை அறிந்து ஜோசியம் மூலம் கனகுவை பழி

    வாங்க திட்டம் தீட்டுகின்றான் ! இந்த சமயத்தில் வேறு ஓர் ஊரிலிருந்து

    கனகு, அனாதைப் பெண் ஆன சிவகானியை ( சரோஜா தேவி ) யை

    தன் வீட்டிற்கு அழைத்து வருகிறான். இது தர்மலிங்கத்திற்குப் பிடிக்கவில்லை !

    ஆனால் நல்லம்மை , சிவகாமியை ஆதரிக்கின்றாள். காலம் போகப் போக ,

    கனகுக்கும் , சிவகாமிக்கும் காதல் வருகின்றது ! ஆனால் தர்மலிங்கம் பிள்ளை

    ( வழ்க்கம் போல ) காதலுக்கு குறுக்கே நிற்கின்றார் !

    இதனால் மணம் உடைந்த சிவகாமி தற்கொலைக்கு முயல, கனகு அவளைத்

    தடுக்க, பின்னர் இருவரும் தற்கொலைக்கு ( " புன்னகை மன்னன் " பாணியில் ! )

    முயல, தக்க சமயத்தில் ( ! ) நல்லம்மை வந்து அவர்களைக் காப்பாற்ற-

    கனகுக்கும் சிவகாமிக்கும் " டும் டும் டும் ! " வழ்க்கம் போல இந்த " டும் டும் "

    ( கல்யாணம் ) தர்மலிஙம் பிள்ளைகுப் பிடிக்கவில்லை ! கனகு, சிவகாமியைத்

    திருமணம் செய்துகொண்டதை ஊர் அறிந்தால் , தன் மகளுடைய திருமணம்

    பாதிக்கும் என்று கருதி, தன் மகள் சுந்தரியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்!

    பெண் பார்க்கும் படலம் நடக்கின்றது ! பெண் பார்க்க வந்தவர்கள் ,

    சிவகாமியைப் பார்த்து :

    " தர்மலிங்கம் பிள்ளை ! யார் அந்தப் பெண் ? " என்று கேட்க ,

    தர்மலிஙம் பிள்ளை : " ஐயா, அவள் எங்கள் வீட்டு வேலைக்காரி !"

    என்று சொல்ல,

    கனகுவோ : " இல்லை ஐயா, அவள் என் மனைவி ! "

    என்கிற உண்மையை சொல்ல..........

    பெண் பார்க்க வந்தவர்கள் , " என்ன இந்த குழப்பம் ? "

    என்று குழம்ப.......

    அதனால்...

    சுந்தரியின் கல்யாணம் நின்று விடுகிறது !


    ஆத்திரம் அடைந்த தர்மலிஙம் பிள்ளை , கனகுவைப் போட்டு

    " சாத்து " , " சாத்து " , " அடி " , " அடி " - என்று அடித்து விட்டு அவனை

    வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் ! தன் தந்தை சொன்ன அடுத்த வக்கியமான :

    " ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"

    என்பதை மறந்து விடுகிறார் !

    "தன்னால்தான் இந்த குடும்பத்தில் இந்த கதி ! "- என்று கருதி சிவகாமி வீட்டை

    விட்டு வெளியேறி விடுகிறாள் !

    இதற்கிடையில் வீட்டை விட்டு வெளியேறின கனகு தன் தந்தையின் நெல்

    கிடங்கில் தங்குகிறான் ! அப்போது பிக் பாக்கட் மணி இதுதான் நல்ல சமயம்

    என்று எண்ணி அந்த கிடங்கில் உள்ள நெல்லை விற்று பணமாக்கி, தர்மலிஙத்திடம்

    " கிடங்கு தீப்பற்றி எரிந்து நெல் எல்லாம் சாம்பல் ஆகிவிட்டது " என்று புளுகி ,

    உண்மையிலே நெல்கிடங்குக்கு தீ வைக்கிறான் ! நெல் கிடங்கில் தீப் பிடித்து

    எரிவதைப் பார்த்த கனகு அதிர்ச்சியில் ஊமை ஆகி

    விடுகிறான் !


    பின் கனகுக்கு பேச்சு வந்ததா ?

    சிவகாமி என்ன ஆனாள் ?

    மணியின் சூழ்ச்சி வென்றதா ?

    தர்மலிங்கம் பிள்ளை அந்த 3

    வாக்கியங்களையும் உணர்ந்தாரா ?


    " வெள்ளித்திரையில் " காண்க ! ( எங்கே இருக்கிறது அந்த வெள்ளித் திரை...)இந்த திரை காவியத்தை காண சந்தர்ப்பம் கிடைக்குமா ???

  7. Likes Russellmai, kalnayak liked this post
  8. #2654
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    படம் : " தவப் புதல்வன் "



    பாட்டு : " கிண்கிணி கிண்கிணி என வரும் மாதாக் கோவில்

    மணியோசை "



    கிருஸ்மஸ் பண்டிகைக்காக பொருத்தமாக இந்த பாடலை

    வழங்குகிறேன். மற்ரபடி இதில் உள்ள ஒரே மாற்றம்

    தணிக்கையாளர்கள் வேலையா அல்லது படத்தயாரிபாளர்கள்

    வேலையா என்பதை சிவா போன்றவர்கள்தான் சொல்லவேண்டும் !


    இந்த படத்தில் வரும் அனைத்துப் பாடல்களும் புகழ் பெற்ரவை !

    அதில் இந்த " கின்கிணி " பாட்டு , " மாலைக் கண் " ( இப்பொதெல்

    லாம் " மாலக் கண் " நோய் எல்லாம் " கிளினிக் " பாக்க முடிய

    லை ! பெண்களை " சைட் " அடிக்கும் " கடைக் கண் " பார்வையை

    பார்க்கிறேன் ! ) நோயால் அவதிப்படும் சிவாஜி கணேசன்

    இரவில் கண்பார்வை இல்லாமல் கிருஸ்மஸ் தாத்தா வேடம்

    அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழ்ங்கி விட்டு செல்வார்.

    தான் இந்த நோயால் அவதிப் படுவதை தன் அம்மாவுக்குத் தெரி

    யாமல் இதை செய்வார் ! காட்சியும் பாடலும் நன்றாக இருக்கும் !



    இந்தப் பாடலில் சிவாஜி குழந்தைகளின் பெயர்களைச் சொல்லி

    ஒவ்வொரு குழந்தைக்கும் என்னென்ன பரிசு என்பதை குறிப்பிட்டு

    சொல்லி பரிசுகளை வழங்குவார் ! எப்படி ?




    " ஆடை அழகி மேரி உனக்கு முத்து மாலை பரிசு ! "


    மேடைப் பேச்சு மோகன் உனக்கு தங்கப் பேனா பரிசு !


    பாட்டு பாடும் பாபு உனக்கு பட்டு சொக்காய் பரிசு !


    ஆட்டம் ஆடும் ராஜு உனக்கு டான்ஸ்ஸு பாப்பா பரிசு !


    சீருடை தாங்கிய ஷீலா பொண்ணுக்கு " சிக்லெட் " பாக்கெட்

    பரிசு "


    நூற்று நூறு என மார்க்கு வாங்கிய நூர்ஜகானுக்கு வாழ்த்து !




    என்று பாடுவார் !



    இதில் " ஷீலாப் பொண்ணுக்கு " அவர் " சிக்லெட் " பாக்கெட்

    பரிசு தருவதில் தான் சிக்கல் !


    அந்த காலத்தில் " சிக்லெட் " என்பது ஒரு நிறுவனம்

    தயாரித்த " சூயிங்கம் " ஆகும் !

    குழந்தைகளுக்கு " சூயிங்கம் " பரிசு கொடுப்பது என்பது

    குழந்தகளுக்கு " சூயிங்கம் " சாப்பிடசொல்லி ஊக்கப் படுத்துவது

    ஆகும் என்று எண்ணியதால் என்னவோ அந்த காலத்தில்

    இந்தப் படத்தை திரையில் பாக்கும்போது டி.எம். எஸ்

    அவர்கள் " சிக்லெட் பக்கெட் " என்னும் இடத்தில் " சிக்லெட் "

    என்ற சொல்லை எடுத்து அதற்கு பதில் ஓர் இசையைப்

    புகுத்தி பின்னார் வெறும் " பாக்கெட் பரிசு " என்றே

    தியேடரில் வரும் !


    ஆனால் இசைத்தட்டில் " சிக்லெட் பாக்கெட் " என்பதே வரும் !


    ஆனால் அப்போது திரையில் வெட்டியதை ( சிக்லெட் )

    இபோது வரும் வி.சி. டி யில் பார்த்தால் வெட்டியதைக்

    காணோம் ! " ச்க்லெட் பாக்கெட் " என்றே வருகிறது !

    ஒரு வேளை " சிக்லெட் " கம்பெனி மூடிவியதால் என்னவோ

    அல்லது வி.சி.டி க்கு தணிக்கை இல்லாததால் என்னவோ

    " சிக்லெட் " வெட்டவில்லை !

  9. Likes Russellmai, kalnayak liked this post
  10. #2655
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    படம் : " நெஞ்சிருக்கும் வரை " ( 1967 )


    மாபெரும் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய மறக்கமுடியாத படங்களில் இதுவும் ஒன்று !

    முதலில் ஸ்ரீதர் அவர்கள் இந்தப் படத்தை எடுக்கும் எண்ணம் எதுவும் இல்லை. அப்போது இந்தியா - பாகிஸ்தான்ன் போர்

    வந்தபோது யுத்தம் உச்சக் கட்ட நிலையில் இருந்த போது , 1963 - ல் நடந்த இந்தியா - சீனா யுத்தத்தின் போது எடுத்த

    " இரத்த திலகம் " மாதிரி நாமும் ஒரு படம் எடுக்கலாம் என்று என்ணி சிவாஜி மற்றும் பலரை ராணுவ உடை போட்டு

    " நெஞ்சிருக்கும் வரை " என்கிற தலைப்பில் படம் எடுத்தாக எனக்கு நினைவு ! அந்தப் படத்தின் " ஸ்டில்ஸ் " கூட அந்த கால

    " பேசும் படம் " பத்திரிக்கையில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்தப் படம் சில ஆயிரம் அடிகள் நன்றாக வந்து

    வளர்ந்து வரும் நிலையில் திடீரென்று டாஷ்கண்ட் ஒப்பந்தம் நடந்து , பிரதமர் லால் பகதுர் சாஸ்திரிக்கும் - பாகிஸ்தான் பிரதமர்

    அயுப்கான் -க்கும் சமாதானம் ஆகி இந்தோ- பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது ! எல்லாம் நன்மைக்கே !

    ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் தலையில் கை வைத்துக்கொண்டு மறு கையால் நகத்தை கடிக்க ஆரம்பித்தார் ! ( ஸ்ரீதர் அவர்கள்

    நகம் கடிக்கிறார் எண்றால் அவர் " டென்ஷன் " உடன் உள்ளார் என்று பொருள் ! ) அந்த சமாதானப் புறா பறக்கும்போது " நெஞ்சிருக்கும்

    வரை " எங்கே வெளி விடுவது ? எனவே அந்தப் படத்தை கை விட்டார், நிறைய பணம் செலவாகி விட்டது. எனினும் படத்தில் நடித்தவர்களுக்கு, அவர்களை ஒன்றும்

    கொடுக்காமல் திருப்பி அனுப்ப முடியாது. அப்போது ஸ்ரீதருக்குத் தோன்றியதுதான் இப்போதய " நெஞ்சிருக்கும் வரை " ( 1967 )

    இந்தப் படத்தை " லோ பட்ஜெட் " - ல் எடுக்க வேண்டிய நிலைமை !

    எனவே புதுமை விரும்பி ஸ்ரீதர் அந்த சமயத்திலும் ஒரு புதுமையை செய்தார் ! உங்கள் எல்லோருக்கும் தெரியும் ! சிவாஜி முதற்கொண்டு

    படத்தில் நடித்த எல்லோருக்கும் " மேக்- அப் " இல்லை ! மிக சிக்கனமாக படத்தை முடித்தார் !

  11. Likes Russellmai, kalnayak liked this post
  12. #2656
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    படம் : " நிச்சய தாம்பூலம் "



    பாடல் : " படைத்தானே, படைத்தானே "



    சிவாஜி கணேசன், ஜமுனா, நம்பியார் போன்றவர்கள் நடித்து,

    விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை மழையில் உருவான படம்

    தான் " நிச்சய தாமபூலம் "

    b.s. ரங்கா என்கிற கன்னடத் தயாரிப்பாளர் எடுத்த படம்.

    இவர் " தென்றல் வீசும் " , " பட்டிக்காட்டு பொன்னையா " போன்ற

    படங்களையும் எடுத்துள்லார்.

    மெல்லிசை மன்னர், ரங்கா அவர்களிடம் அளவு கடந்த பாசம் !

    ஊதியத்தை வாரி வழங்குவார், இசை அமைப்பில் தலைஇடமாட்டார்,

    எனவே ரங்கா படங்களில் பாடல்கள் " சூபர் ஹிட் " ஆகும் !


    " நிச்சய தாம்பூலம் " படத்திலிம் பாடல்களுக்கு பஞ்சமே இல்லை !

    அவைகளின் தரத்திற்கும் பஞ்சமே இல்லை !


    1. " ஆண்டவன் படச்சான், என் கிட்டே கொடுத்தான் " - டி.எம்.எஸ்

    2. " பாவாடை தாவணியில் பார்த்த உருவமா " - டி.எம்.எஸ்

    3. " மாலை சூடும் மண நாள் "

    4." நெத்தியிலே ஒரு குங்கும பொட்டு " - சுசீலா

    5. " இது வேரு உலகம் , தனி உலகம் " - டி.எம்.எஸ்- ஈஸ்வரி

    6." படைத்தானே " - டி.எம்.எஸ்

    7. " அலங்காரம் . அலங்காரம் " - ஈஸ்வரி, எஸ்.சி. கிருஷ்ணன்


    இவைகளைத்தவிர, " பாடினார், கவிஞர் பாடினார் " பாட்டு இந்த

    படத்திற்காக பாடப்பட்டு பின்னர் அந்த பாடல் " தென்றல் வீசும் "

    படத்தில் சேர்க்கப் பட்டது .

    இப்போது நாம் எடுத்துக் கொண்ட பாடல் " படைத்தானே "

    பாடல் !



    சரி, வழக்கம் போல விஷயத்திற்கு வருவோம் !



    நம் தணிக்கையாளர்கள் " படைத்தானே " பாடலை என்னதான்

    செய்தார்கள் என்று கேட்கிறீர்கள் !






    முதலில் பாடலைப் படியுங்கள் :




    " படைத்தானே, படைத்தானே,


    மனிதனை ஆண்டவன் படைத்தானே,


    வளர்த்தானே, வளர்த்தானே,


    மனதனில் கவலைகள் வளர்த்தானே.


    கொடுத்தானே, கொடுத்தானே,


    பழரசம் ஆண்டவன் கொடுத்தானே,


    பிரித்தானே , பிரித்தானே,


    மனதையும் கவலையும் பிரித்தானே ! "




    இதில் " பழரசம் " என்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை !

    இப்போது என்னென்னெவோ வார்த்தைகள் பாட்டுக்களில்

    வருகின்றன, ஆனால் அப்போது " பழரசம் " பிடிக்காமல் போய்விட்டது !


    சிறந்த அரங்க அமைப்பு,

    சிறந்த ஒலிப்பதிவு,

    சிறந்த இசை அமைப்பு,

    சிறந்த பிண்னனிக் குரல் ( டிஎம எஸ் )

    அதைவிட " படைத்தானே " என்று டி எம் எஸ் சொல்லும்போது

    தன் இரண்டு கைகளையும் உயரே தூக்கி " ஸ்டைலாக " நடந்தும்,

    பாடிக்கொண்டே வரும் சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி மக்களின்

    கைதட்டல் காதை செவிடாக்கும் !

    இந்த அருமையான தருணத்தில் ,,,,,,,,,.........,,,,,,,.............



    ,,,,,........................,,................... ....................................


    நம் தணிக்கையாளர் செய்த வேலை எங்கே அப்போது தெரியும்,

    புரியும் ? !




    எனவே " பழரசம் " மாற்றப்பட்டது !


    எப்படி ?





    " படைத்தானே, படைத்தானே,


    மனிதனை ஆண்டவன் படைத்தானே,


    வளர்த்தானே, வளர்த்தானே,


    மனதனில் கவலைகள் வளர்த்தானே.


    கொடுத்தானே, கொடுத்தானே,


    மறதியை ஆண்டவன் கொடுத்தானே "




    ஆமாம் " பழரசம் " என்பதற்குப் பதிலாக " மறதி " யைப் போட்டார்கள் !



    "என்னப்பா இது சின்ன சொல்தானே , இதை ஏன் பெரிசு படுத்து

    கிறாய் "


    என்று நீங்கள் என்னைக்கேட்கலாம் !


    " மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரிதல்லவா ? "


    கண்னதாசனின் இந்த அருமையான வரிகளை அவர்கள் எப்படி

    கை வைக்கலாம் ? என்பதே என் கேள்வி !

  13. Likes Russellmai, kalnayak liked this post
  14. #2657
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    " நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம் "- " நீதி "


    ( முதலில் இந்த பாடல் " இன்று முதல் குடிக்க மாட்டேன் " என்று

    எழுதப்பட்டது ! மெல்லிசை மன்னர் அந்த வரிகளை ஆட்சேபித்து

    " பொய்யைச் சொன்னாலும் ஒழுங்காகச் சொல்லனும் " என்று

    சொல்லி " நாளை முதல் குடிக்க மாட்டேன் " என்று மாற்றினார் ! )

  15. Likes Russellmai, kalnayak liked this post
  16. #2658
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    நன்றி எம்கேஆர்சாந்தாராம் வீயார்

    " ஞாயிறும் திங்களும் " - சில தகவல்கள் !

    1965 -ம் வருடம் " திருவிளையாடல் " படம் வெளிவந்து அந்த படத்தில்

    கே.பி. சுந்தரம்பாள் " ரி - என்டரி " ஆனதை அறிந்த " ப " வரிசை படப்

    புகழ் ஏ. பீம்சிங் அவர்களின் உதவியாளர் சடகோபன் என்பவர்

    தான் தயாரிக்கும் " ஞாயிறும் திங்களும் " படத்திற்கு கே.பி. சுந்தராம்பாள்

    அவர்களை நடிக்க வைக்க விரும்பினார் ! இதற்காக அவரும் அந்த

    படத்தின் கதை வசனகர்த்தாவான வலம்புரி சோமநாதனும்

    கொடுமுடிக்கு பயணம் செய்து " கொடுமுடி கோகிலம் " ( அறிஞர்

    அண்ணா , கே.பி.சுந்தராம்பாளை அப்படித்தான் அழைப்பாராம் ! ) விடம்

    சென்று தங்கள் படத்தில் நடிக்க மிகவும் வற்புறித்தனர். நீண்ட

    விவாதங்களுக்கு பின்னர் கே.பி. எஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் !

    படத்தில் கே.பி. சுந்தராம்பாள் நடிக்க சிவாஜி யை விட அதிக சம்பளம்

    அவருக்கு தரப்பட்டதாம் !

    ( சொன்னவர் : வலம்புரி சோமநாதன் ! )

    செளகார் ஜானகி , முத்துராமன் , வி.கே. ராம சாமி, நாகய்யா

    ஆகியோர் நடித்தனர்.


    கதைச் சுருக்கம் :


    சுந்தராம்பாள் ஒரு வசதியான பங்களா வாசி. அவருடைய ஒரே

    மகள் : தேவிகா. தேவிகா ஒரு " கிரிக்கெட் " பிரியர் !

    ( அந்த காலத்திலேயே " கிரிக்கட் " பைத்தியங்கள்

    உண்டு போலும் ! )

    தேவிகா படிக்கும் கல்லூரியில் சிவாஜி கணேசனும் படிக்கிறார் !

    தமிழ் சினிமாவின் எழுதாத சட்டத்தின் படி பணக்கார கதாநாயகி

    தேவிகா , ஏழை கதாநாயகன் சிவாஜியை " லவ் " ட்டுகிறார் !

    ( " பட்டினும் மெல்லிய பூவிது " பாடல் வரும் சமயம் ! )


    இந்த சமயத்தில் " கிரிக்கட் பைத்தியம் " தேவிகா , கிரிக்கட் ஆட

    ஜப்பானின் தலை நகர் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொள்கிறார் !

    ஏழை சிவாஜி, தேவிகாவின் பிரிவினால் தவிக்கிறார். அவரது " டாடி "

    - வி.கே. ராமசாமி ! வழக்கம்போல ஏழை கதாநாயகனுக்கு ஒரு தங்கை !

    பெயர் : ( நடிகை ) ஜீவலட்சுமி !

    இப்போது " உல்டா " லவ் !

    அதாவது ஏழை - சிவாஜியின் தங்கை , பணக்கார முத்துராமனைக்

    காதலிக்கிறார் !


    இப்படியாக கதை " நகரும்போது " ........ ஒரு நாள் இரவு .....

    சரியான பேய் மழை ! வீட்டுக்குத் திரும்பிப் போகும் சிவாஜி கணேசன்

    மழையில் " தொப்பலாக " நனைகிறர் ! மழைக்கக ஒரு வீட்டில்

    ஒதுங்குகிறார் ! அந்த வீடு யாருடைய வீடு ?

    ஊகித்து விட்டீர்களா !

    கே.பி. சுந்தராம்பாளின் வீடு !

    மழையில் அவதிப்படும் சிவாஜியை , கேபி எஸ் " உள்ளே வாப்பா "

    என்று வாஞ்சையுடன்அழைக்கிறார் . உள்ளே வந்த சிவாஜியின்

    கள்ளமற்ற நடவடிக்கையை பார்க்கிறார் ! அவரிடம் " பாச மழை "

    பொழிகிறார் ! மழையில் நனைந்த சிவாஜி அந்த " பாச மழையிலும் "

    நனைகிறர் ! சுந்தராம்பாள் , சிவாஜியின் ஏழ்மை நிலைமையை

    உணர்கிறார் ! அவருக்கு உதவ முன் வருகிறர் !

    எப்படி ?

    சிவாஜியை தன் மகனாக "தத்து " " எடுத்து

    அவரை காப்பாற்றும் எல்லைக்கும் போகிறார் ! சுந்தராம்பாளும்

    சிவாஜியும் தாய் - மகன் ஆக மாறி விடுகின்றனர் !


    " உனக்கு ஒரு அண்ணனைக் காட்டுகிறேன், பார் ! "


    டோக்கியோவில் இருந்து திரும்பி வந்த தேவிகாவைப் பார்த்து சுந்தராம்பாள் ,

    சிவாஜியை சுட்டிக் காட்டி சொல்லும் வசனம் ! எப்படி இருக்கும் தேவிகாவுக்கு ?

    தன் காதலன் , அண்ணனாக மாறியதை எந்தப் பெண்னும் பொறுக்கமாட்டாள் !

    தற்கொலை செய்து கொள்ள தேவிகா முயலுகிறார். அவரை சிவாஜி கணேசன்

    தடுத்து அவருக்கு ஆறுதலை சொல்கிறார்.


    சிவாஜி சொல்லுகிறார் : " நான் அம்மாவுக்கு சில கடமைகளை செய்து

    தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறேன் . நீ இப்படி சோகமான முடிவுக்கு

    வந்தால் அந்த கடமைகளை முடிக்க முடியாமல் போய்விடும் ! "


    வேறு வழி இன்றி தேவிகா தற்கொலை முடிவை கை விடுகிறார் !

    பின்னர் என்ன ஆனது ? ............... !


    தேவிகா கன்னியாஸ்திரி ஆகி சிவாஜியை விட்டு பிரிந்து

    விடுகிறார் !

    " ஞாயிறும் - திங்களும் " எப்போது ஒன்று சேரும் ?

    நடக்கிற காரியமா இது !


    படத்தின் " டைட்டில " ஐக் கேட்ட கேபிஎஸ் இப்படி சொன்னார் :

    " ஞாயிறும் திங்களும் " எப்படி ஒன்று சேரும் ?

    அப்படி சேர்ந்தாலும் அது அமாவசை ஆகிவிடுமே ! " என்றாராம் !


    படம் சுமார் 7000 அடிகள் வளரும்போது படத் தயாரிப்பாளர் சடகோபன்

    அகால மரணம் அடைந்துவிட படம் வளர வில்லை . படம் வெளி

    வராதது குறித்து மிகவும் மனம் வருந்தியவர் : மெல்லிசை மன்னர் !

    மெல்லிசை மன்னரின் இசையில் ஏறக்குறைய எல்லாப் பாடகர்களும்

    பாடிய போது கே பி எஸ் முதன் முதலாக இவர் இசையில் பாடியும்

    படம் வெளி வராது போனது குறித்து மிகவும் வருந்தினார் மெல்லிசை

    மன்னர் !


    " நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் "

    என்பது எவ்வளவு அருமையன வார்த்தை !


    படம் கிட்டத் தட்ட முடிவடைந்து, க்ளைமாக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப் பட வேண்டிய நிலையில் நின்று விட்டது. இந்தப் படம் முழுதும் முடிவடைந்து வெளிவந்திருந்தால் கீழ்க்கண்ட சிறப்புகள் நிலைத்திருக்கும்
    1. முதன் முதலில் டோக்யோவில் எடு்க்கப் பட்ட தமிழ்ப்படமாக இருந்திருக்கும்
    2. மெல்லிசை மன்னரின் இசையில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய பாடல் இடம் பெற்ற தமிழ்ப்படம் என்று விளம்பரப் படுத்த்ப் பட்டிருக்கும்
    3. நடிகர் திலகமும் கே.பி.சுந்தராம்பாள் அவர்களும் இணைந்து நடித்த முதல் சமூகப் படமாக இருந்திருக்கும். ( மகாகவிகாளிதாஸ் பழங்கால புலவர்களைப் பற்றிய படம். கே.பி.சுந்தராம்பாள் நடித்த் மற்றொரு சமூகப் படம் உயி்ர் மேல் ஆசை)

    இப்படிப் பல சிறப்புகளை உள்ளடக்கிய இப்படம் வெளிவராமல் போனது துரதிருஷ்டமே.

  17. Likes Russellmai, kalnayak liked this post
  18. #2659
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    படம் : " திருமால் பெருமை "

    சிவாஜி கணேசன் திரை உலகத்திற்கு வந்த புதிதில் திராவிட கட்சிகளடம் சேர்ந்து நாத்திகனாக இருந்தார்.

    கடவுளைக் கும்பிடுவதும் கோவிலுக்கும் போவது கிடையாது.


    இந்த சமயத்தில் பிரபல " ப " எழுத்து புகழ் இயக்குனர் ஏ. பீம்சிங் சிவாஜி நடித்த " ராஜா ராணி " படத்தை

    இயக்கிக் கொண்டிருந்தார். அந்த படத்தில் சிவாஜியும் நடித்திருப்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

    பீம்சிங் அவர்கள் தன் தம்பி ஒருவர் திருப்பதியில் உள்ளதாகவும் அவரைப் பார்ப்பதற்கு திருப்பதிக்கு

    போகப் போவதாகவும் சிவாஜியிடம் சொன்னார். இதனைக் கேட்ட சிவாஜி , பீம்சிங் கிடம் :

    " பீம் பாய், நானும் திருப்பதிக்கு உங்களோடு வரப்போகிறேன்" என்று சிவாஜி சொன்னதும் பீம்சிங்

    திடுக்கிட்டார் ! நாத்திக கொள்கள் உடைய தி.மு.க கட்சிக்காரர் எப்படி திருப்பதிக்கு செல்லமுடியும், அப்படி

    திருப்பதி டவுனுக்கு சென்றால் கோவிலுக்கு போகாமல் இருப்பாரா என்று சிவாஜியைப் பற்றி பீம்சிங்

    எண்ணத் தொடங்கிவிட்டார் ! எனினும் ஒருவர் " நானும் வருகிறேன் " என்று சொல்லும்போது

    " வேண்டாம் " என்று சொல்வது நாகிரீகம் அல்ல என்று கருதி பீம்சிங் " சரி " என்று சொல்லிவிட்டார்.

    சிவாஜி அப்போது " காவேரி " படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்த படத்தின் தயாரிப்பாளரான லேனா

    செட்டியாரிடம் ( எம்ஜிஆர் நடித்த " மதுரை வீரன் " படத்தை எடுத்தவர் ) " செவர்லெட் " காரை வாங்கி

    அதில் பீம்சிங், சிவாஜி, ஒளிப்பதிவாளர் ஜி.விட்டல் ராவ்ம் மற்றொரு ஒளிப்பதிவாளர் லோகநாதன்

    ( பின்னாளில் கே.பாலசந்தர் படங்களுக்கு பணியாற்ரியவர் ) ஆக 4 பேர் அந்த காரில் திருப்பதிக்கு

    பயணமாயினர். வழியில் சோதனையாக பலத்த மழை, காருக்குள்ளே தண்ணிர் புகுந்துவிட்டது! பலத்த

    மழையால் சாலை வழி தெரியவில்லை. பீம்சிங் , " திரும்பி சென்னைக்கு போய் விடலாம் " என்றார்.

    ஆனால் சிவாஜியோ கேட்கவில்லை. எப்படியும் திருப்பதி கோவிலுக்கு போய்த்தான் ஆகவேண்டும்

    என்று சொல்லிவிட்டார் ! வேறு வழியின்றி லோகநாதனும், பீம்சிங்கும் வண்டி விட்டு இறங்கி " டார்ச் "

    விளக்கு ஒளி காட்ட ( அந்த காலத்திலேயே லோகநாதன் " சிறந்த " ஒளிப்பதிவாளர் ஆகிவிட்டார் ! ) அந்த

    ஒளி விளக்கில் திருப்பதிக்கு செல்ல 10 மணி நேரம் பிடத்தது ! சென்ற உடனே அவர்கள் கோவிலுக்கு

    சென்றனர். திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை சிவாஜி கணேசன் கண்டு மனம் மகிழ்ந்தார் ! எப்பேர்ப்பட்ட

    மனிதனும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்தால் அவனின் மன நிலை சாந்தமடையும் ! இது

    எனது அனுபவத்தில் கண்ட உண்மை ! திருப்பதி கோவிலுக்கு செல்ல நீண்ட வரிசை, பல மணி நேரம்

    தரிசனத்திற்காக நிற்க வேண்டும், மலை ஏற வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகளால் இனி மேல்

    திருப்பதி கோவிலுக்கு போகவே வேண்டாம் என்று முடிவெடுத்தாலும், ஏழு மலையானை தரிசித்துவிட்டு

    வீட்டுக்கு வந்தால்....... " மறுபடியும் திருப்பதிக்கு போகலாமா " என்று எண்னத் தோன்றும் ! அதுதான்

    ஏழுமலையானின் மகிமை !



    சிவாஜி கணேசன் திருப்பதி கோவிலுக்கு போய் வந்தது அறிந்து அவரது கட்சியை சேர்ந்த பலர் சிவாஜியை

    விமர்சிக்கத் தொடங்கி விட்டனர் , சிலர் கோபம் கொண்டனர் . !

    இதனால் கட்சிக்குள் சிவாஜிக்கு எதிர்ப்பு கிளம்பியது. பார்த்தார் சிவாஜி கணேசன் ! தி.மு.க கட்சியிலிருந்து

    விலகிமார் ! " காங்கிரஸ் " கட்சியில் சேர்ந்தார் !



    ஆத்திகராய் மாறினவுடன் பக்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ! ஏ.பி. நாகராஜன் அவர்கள்

    துணையோடு முதலில் நடித்த பக்தி படம் " சம்பூர்ண ராமாயணம் " . படம் படு " ஹிட் " ஆனது ! அந்த

    படம் வந்த பொழுதில் " ராமாயத்தில் ராமபிரானின் மனைவி பெயர் என்ன ? " என்று பள்ளி மாணவனைக்

    கேட்டால் பத்மினி என்று சொல்லும் அளவுக்கு படம் " ஹிட் " ஆனது !

    பின்னர் சிவாஜி தொடர்ந்து

    " திருவிளையாடல் "

    " சரஸ்வதி சபதம் "

    " திருவருட்செல்வர் "

    "கந்தன் கருணை "

    " திருமால் பெருமை "

    என்று பக்தி படங்களில் நடித்து பெரும்புகழ் கொண்டார் !


    திருமாலாக நடிக்கும் சிவகுமாரின் கட்டை விரலில் உள்ள பொன்நகையை கழட்ட முடியாமல் திருமங்கை

    ஆழ்வார் ஆன சிவாஜி, பின்னர் தன் வாயை வைத்து கடித்து நகையை எடுக்கப் போகும் காட்சியில் நடிகர்

    சிவகுமார் பதறிவிட்டாராம் ! ஏன் என்றால் வெறும் காலோடு நடிக்கும் சிவகுமாருக்கு அந்த படப்பிடிப்பு

    நடந்த இடம் அந்த ஊர் மக்கள் தங்கள் " இயற்கை உபாதை" கழிக்கும் இடம் என்பது தெரியும் ! எனெவே

    சிவகுமார் அவர்கள் சிவாஜியிடம் இந்த விஷயத்தை சொல்லியும் சிவாஜி பொருட்படுத்தாமல் அந்த

    காட்சியில் நடித்தார் ! நடிப்பில் காட்டும் அக்கறை சிவாஜிக்கு உண்டு என்பது இந்த ஒரு நிகழ்ச்சி போதுமே !


    கடைசியில் தொண்டரடிப்பொடியாழ்வார் முன் திருமால் தோன்றி ஆசி வழங்குவதோடு படம் முடிவடைகிறது,

    ஆனால் ஒரு பாடலோடு !

    " திருமால் பெருமைக்கு நிகரேது "

    என்று தொடங்கும் பாடல். இந்த பாடலில் திருமாலின்

    10 அவதாரங்களைவிளக்கி டி.எம்.எஸ் பாடும் பாடல் !


    1. மச்ச அவதாரம்

    2.கூர்ம அவதாரம்

    3. வராக அவதாரம்

    4. நரசிம்ம அவதாரம்

    5. வாமனன் அவதாரம்

    6. பரசுராம அவதாரம்

    7. ராம அவதாரம்

    8. பலராம அவதாரம்

    9. கண்ணன் அவதாரம்

    " கல்கி அவதாரம் "


    பழைய 78 rpm இசைத்தட்டில் இரண்டு பக்க இசைத்தட்டாக வந்த பாடல், எல்லா அவதாரங்களையும்

    விளக்கி பாடு பாட்டில் கடைசி அவதாரம் ஆன கல்கி அவதாரத்தை சொல்லும் முன்

    " விதி நடந்ததென மதி முடிந்தனெ வினையின் பயனே உருவாக நிலை மறந்தவரும் நெறி இழந்தவரும்

    உணரும் வண்னம் தெளிவாக இன்னல் ஒழித்து புவி காக்க நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்

    " கல்கி " அவதாரம். " என்று வரும் !


    ஆனால் திரையில் , அதாவது " திருமால் பெருமை " படத்தை முதலில் திரை இட்டபோது அந்த

    பாட்டில் கல்கி என்கிற சொல் நீக்கப்பட்டுவிட்டது ! பின்னர் எப்படி பாட்டு இருந்தது ?" - என்று

    நீங்கள் கேட்கலாம் . டி.எம்.எஸ் திரையில் பாடுவார் :


    " விதி நடந்ததென மதி முடிந்தனெ வினையின் பயனே உருவாக நிலை மறந்தவரும்

    நெறி இழந்தவரும் உணரும் வண்னம் தெளிவாக

    இன்னல் ஒழித்து புவி காக்க நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்----

    ------ அவதாரம் "


    " கல்கி " என்று சொல்லாமல் வெறும் அவதாரம் என்றே சொல்லி பாட்டை முடித்துவிடுவார்கள் !


    அதாவது பெருமாள் , எதாவது ஓர் அவதாரம் எடுக்கட்டும் , ஆனால் உலகத்தை அழிக்க வரும்

    கல்கி அவதாரம் எடுக்க வேண்டாம் என்று நம் தணிக்கையாளர்கள் நினைத்தாகளாம் !

    அதனால் கல்கி என்ற சொல் எடுக்கப்பட்டது ! அப்போது இருந்த நிலையில் கல்கி அவதாரம் தேவை

    இல்லை !

  19. Likes Russellmai, kalnayak liked this post
  20. #2660
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Sivaji Ganesan's acting edge over Oscarites! 5: Humphrey Boghart slides before NT!

    இந்திய நண்டுகளின்,அதிலும் குறிப்பாக நம் தமிழ் நண்டுகள், தனித்தன்மை: ஒரு நண்டு மேலே செல்ல முற்பட்டால் கீழிருக்கும் நண்டு அதன் காலைப் பிடித்து இழுத்து விடும், தனக்கும் அதேநிலைதான் என்பதை மறந்து!

    கூரை ஏறி கோழி பிடிக்க (Sivaji Statue and Baratha Rathnaa) முடியாத நாம் வானமேறி வைகுந்தம் (Life time achievement Oscar) போவது எப்போது?
    விரக்தியே மேலிடுகிறது , நம் வாழ்நாளில் நாம் ஆராதிக்கும் நமது நடிப்பிலக்கணத்திற்கு உரிய பெருமை வந்தடைவதை கண்டு உவகை கொள்வோமா!?


    Humphrey Bogart (December 25, 1899 – January 14, 1957) was an American screen actor who, with performances in films during the 1940s such as The Maltese Falcon, Casablanca, and The Big Sleep, became widely regarded as a cultural icon. In 1999, the American Film Institute ranked Bogart as the greatest male star in the history of American cinema.
    Bogart's breakthrough as a leading man came in 1941, with High Sierra and The Maltese Falcon. The next year, his performance inCasablanca raised him to the peak of his profession and, at the same time, cemented his trademark film persona, that of the hard-boiled cynic who ultimately shows his noble side. Other successes followed, including To Have and Have Not (1944); The Big Sleep(1946); Dark Passage (1947) and Key Largo (1948), with his wife Lauren Bacall; and The Treasure of the Sierra Madre (1948); In a Lonely Place (1950); The African Queen (1951), for which he won his only Academy Award; Sabrina (1954); and The Caine Mutiny(1954). His last film was The Harder They Fall (1956). During a film career of almost 30 years, he appeared in 75 feature films.

    Casablanca : The all time entertainer with a poignant story line from Boghart! Such a complicated show of expressions to moods could be just pooh-poohed by our NT having an edge over Bogharts portrayals!





    Love failure/family feuds naturally prompts a hero to become a zero resorting to drinks!! NT’s style of succumbing to love failure in a fabulous extension of Boghart’s portrayal! NT, the original by himself, like Boghart!! NT’s close-up expressions are matchless compared to Boghart’s stone faced dialogue deliveries! Still awards elude our icon since he is born in TN where we follow the strategy of Indian Crabs preventing one crab from moving up and getting prevented by another crab from behind as quoted once by our respected Rajiv Gandhi!





    Reference courtesy : Wikipedia and You Tube
    Last edited by sivajisenthil; 7th November 2014 at 07:54 PM.

  21. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •