Page 269 of 400 FirstFirst ... 169219259267268269270271279319369 ... LastLast
Results 2,681 to 2,690 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2681
    Junior Member Junior Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    10
    Post Thanks / Like

    Thai - Naadala Vantharu

    A song from film Thaai.


  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2682
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    நேற்று என் மகன் (9 வயது) பள்ளியிலிருந்து(சிங்கையில்) வந்த பின்னர் நடந்த உரையாடல்..

    "அப்பா .. எங்க தமிழ் வகுப்புல இன்னிக்கு மூவி போட்டாங்க ..என்ன மூவி தெரியுமா ?"
    "என்ன மூவிப்பா "
    "கர்ணன்"
    "வாவ் ..முழுப்படமுமா "
    "கொஞ்சம் கொஞ்சமா போடுவாங்க .. இன்னிக்கு கிளைமாக்ஸ் ..இன்னிக்கும் நான் அழுதுட்டேன் .தியேட்டர்ல அழுத மாதிரி " (சிரிக்கிறான்)
    "ஹா ஹா .. ஏன் கர்ணன் படம் போட்டாங்க ?"
    "அதுல தான் அந்த தமிழ் வசனம் மெஜஸ்டிக்கா .. சிவாஜி கணேசன் பேசுறது .. நாங்க கத்துக்கணுமில்ல"
    "அதானே "
    "அப்பா ..ஏன் கடைசியில (உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் டியூனை சொல்லி) பாட்டுக்கப்புறம் கர்ணன் Blood -ஐ எடுத்து அந்த வயசானவன் கிட்ட கொடுக்குறார்"

    அதற்கு நான் நீண்ட விளக்கம் கொடுக்க .. மகாபாரதம் பற்றி சிறிது நேரம் கேள்வி - பதில் விளக்கம் நீடிக்கிறது.
    Last edited by joe; 8th November 2014 at 09:31 AM.

  5. Thanks Gopal.s thanked for this post
  6. #2683
    Junior Member Junior Hubber
    Join Date
    Dec 2009
    Posts
    10
    Post Thanks / Like

    One more song from film Thaai

    One more song from film Thaai



  7. Likes Russellmai liked this post
  8. #2684
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    பார்த்தீர்களா கோபால்

    நீங்கள் என்னதான் சொன்னாலும் உங்களை இந்த நேரத்தில் காப்பாற்றியவர் நம் மக்கள் திலகத்தின் பாடல் வரிகள்

    என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் .

    நமது வாழ்க்கையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் மக்கள் திலகத்தின் காவியப்பாடல்கள் தான் உதாரணமாக காட்ட முடியும் என்பதை, சரியான சந்தர் ப்பத்தில் உணர்வுப்பூர்வமாக உரைத்திட்ட சகோதரரர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி ! பாராட்டுக்கள் !

  9. #2685
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    யுகேஷ் பாபு,

    தங்கள் பண்பான பதிலுரைக்கு நன்றி. எனக்கு பதிலுரைக்கும் சந்தர்ப்பமே கொடுக்காமல், சால்ஜாப்பும், துதிகளும் நிறைந்த பதிவே.

    நான் யாரையும் மோசமாக விமர்சித்ததில்லை. உண்மைகளை மட்டுமே எழுதுவேன்.pti அமைப்பின் உயர் அதிகாரி, பல ஆங்கில தினசரிகளின் மேலாளர்கள்,தமிழ் நாட்டின் மிக பிரபலமான பத்திரிகை எல்லாவற்றிலுமே என் மிக நெருங்கிய உறவுகள் நிறைந்திருந்தன. ஆர்வம் கொண்டவன் என்ற வகையில் ,பல விஷயங்களை துருவி வாங்கியவன்.

    வேண்டாமே. ரொம்ப உட் புக வேண்டாம். சிலைகளை உடைக்க சொன்ன பெரியார் எங்கே? தன்னையே சுய விமர்சனத்திற்கு ஆட்படுத்தியவர்கள் பெரியார்,அண்ணா போன்றவர்கள். கடைசியில் வழிதோன்றல்கள் , துதி பாடிகளாய் முடிந்தது துரதிருஷ்டமே.

    என்னத்தை சொல்ல?
    நீங்கள் ஆர்வம் கொண்டு விஷயங்களை துருவி வாங்கியிருந்தாலும் அதில் உண்மைகள் அல்லவா இருக்க வேண்டும். உங்களுக்கு பொய்யான தகவல்கள் அளிக்கும் அந்த சிலர் மக்கள் திலகத்திடம் எந்தவித ஆதாயமும் கிடைக்காதாதல் தங்களிடம் அவரைபற்றிய எதிர் மறையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்றே கருத முடியும்.

  10. #2686
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    sss,
    இவ்வாறு மற்றொருவர் எழுதியதை பதியும் போது அவர் பெயரை குறிப்பிடுங்கள் ..அல்லது சுட்டியை பகிருங்கள் . அது தான் முறை.
    அன்புள்ள ஜோ அவர்களே
    பதிவின் ஆரம்பத்தில் சாந்தாராம் அவர்களுக்கும் , மற்றொன்றில் வீயார் அவர்களுக்கும் நன்றி சொல்லி உள்ளேன்.
    மேலும் பல செய்திகளில் இருந்து நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டும் தனியே பிரித்து நான் இங்கு தந்துள்ளேன்.
    எனவே சுட்டியை அப்படியே கொடுக்க வில்லை. தங்கள் கருத்துக்கு நன்றி.

  11. Likes joe liked this post
  12. #2687
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    வழிதோன்றல்கள் , துதி பாடிகள் தங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதாயம் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே நேர் மறையான கருத்துக்களை சொல்லும் உலகினில் நான் உள்ளோம்...
    அப்படி என்றால் நேர் மறையான கருத்துகள் சொல்பவர்கள் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று எண்ணியே போலியாக நடிக்கிறார்கள். தற்போது சமூகத்தில் நிகழும் நிறைய நிகழ்வுகளில் அதை நாம் கண் கூடாக பார்க்கலாம்.

    இப்படி எந்த சுயநல ஆதாயமும் எதிர் பாராமல் இருக்கும் ரசிகர் கூட்டம் ஒன்று உண்டு என்றால் அது நடிகர் திலகத்துக்கு மட்டும் தான்..ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னமும் நம்மை நடிப்பால் வசம் செய்த அந்த ஒப்பில்லா நடிகனுக்கு விசுவாசிகள் உலகெங்கும் வியாபித்திருப்பது ஆச்சரியம் இல்லையே...

  13. Likes Russellmai liked this post
  14. #2688
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    நான்தான் உங்களிடம் சொன்னேனே, எந்த வாக்குவாதமும் வேண்டாமென்று? நண்பர் RKS அவர்களிடமும் அதைதான் எப்போதும் சொல்கிறேன். காரணம் அதனால் எந்தப் பலனுமில்லை.

    நண்பர் கலைவேந்தன் நமது ஹப்பில் உறுப்பினராக நுழைந்ததே ஒரு நோக்கத்தோடுதான். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் assignment என்பது அனைத்து பதிவுகளிலும் சிவாஜியை அல்லது அவர் ரசிகர்களை தாக்குவது அல்லது கிண்டல் செய்வது. மேலும் சிவாஜியை யாரேனும் [கலை, அரசியல் எந்த தளத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம்] பாராட்டினால் பாராட்டியவர் முன்னொரு காலத்தில் அல்லது பிற்காலத்தில் எம்ஜிஆர் ரசிகராக இருந்தார் என்று நிறுவுவது. இதனால் என்ன லாபம் என்று கேட்க கூடாது.

    உதாரணமாக உ.சு.வா புத்தர் கோவில் சண்டைக் காட்சி பற்றிய பதிவில் சம்மந்தமில்லாமல் திருச்சி சிவா பற்றி குறிப்பு வரும். திருச்சியில் எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தார், எம்ஜிஆர் மாதிரி இறுக்கமாக ஜிப்பா அணிவார், வலது கையில் வாட்ச் கட்டுவார் என்றெல்லாம் இருக்கும்.. நல்ல வேளை இவரும் எம்ஜிஆர் மாதிரி வலது கையில்தான் சாப்பிடுவார் என்று சொல்லாமல் விட்டாரே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியதுதான். காரணம் என்ன தெரியுமா நீயா நானா நிகழ்ச்சியில் சிவா, நடிகர் திலகத்தைப் பாராட்டி பேசி விட்டார். அதை சிலாகித்து ஜோ போன்றவர்கள் நடிகர் திலகம் திரியில் எழுதியும் விட்டார்கள். எப்படி விட முடியும்?

    அது போன்றே சம்மந்தமில்லாமல் பல்லாண்டு வாழ்க பற்றிய பதிவில் சிவாஜி [என்று பெயர் சொல்லாமல்] சாதி பெயரை சொல்லிக் கூப்பிடுவார் என்று எழுதுவார். அதே பதிவில் நீதிக்கு தலை வணங்கு படத்தில் வரும் காட்சி பற்றி குறிப்பிடுவார், தியாகம் படத்தை மறைமுகமாக தாக்குகிறாராம். எஸ்எஸ்ஆர் அவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற உண்மையை பதிவு செய்தால் பிடிக்காது. எம்ஜிஆர்தான் மேலவை உறுப்பினரான (எம்எல்சி) முதல் நடிகர் என்பார். சிவாஜி மீது காழ்புணர்ச்சி இல்லை என்பார். ஆனால் சிவாஜியை ஒரு x y z நடிகர்களோடு சேர்த்துதான் நல்ல நடிகர் என்பார். ராஜ ராஜ சோழன் சென்னை ராம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள்தான் ஓடியது என்பார். அது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்பதை நாம் ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்தாலும் தவறான தகவலை தந்து விட்டேன் என்று ஒப்புக் கொள்ளும் அடிப்படை கண்ணியம் கூட இருக்காது. ஆனால் நமக்கு கண்ணியம் பற்றி கிளாஸ் எடுப்பார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். So, அவர்கள் agenda-வில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

    இதை தவிர அவர்களுக்கு external pressure வேறு. நினைவிருக்கும் என நம்புகிறேன். காதல் வாகனம் படத்திற்கு 5/10 மார்க் போட்டு விட்டு வினோத் பட்ட பாடு!

    இது தவிர வேறொரு வித technique-ம் கடைப்பிடிக்கப்படும். குறிப்பிட்ட படம் இவர்கள் குறிப்பிடும் அத்தனை நாட்கள் ஓடவில்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் அதை தொடர்ந்து எழுதுவார்கள். அலிபாபா சென்னை சித்ரா, பிரபாத் சரஸ்வதி அரங்குகளில் [மதுரை வீரன் அதே அரங்குகளில் வெளியாகி விட்டதால்] 100 நாட்கள் ஓடவில்லை. ஆனாலும் 100 நாட்கள் என்றே எழுதுவார்கள் இதை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். அது போன்றே மதுரையில் நம் நாடு 21 வாரம் என்றே எழுதுவார்கள். உண்மையில் ஓடிய நாட்கள் 133. அப்படியென்றால் 19 வாரம். இதை பற்றி வேறொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒன்றை சுட்டிக் காட்டினார். எப்போதும் 21 வாரம் என்றே குறிப்பிடுவார்கள். 147 நாட்கள் என்று எழுத மாட்டார்கள் என்றார். காரணம் நாட்களை சொன்னால் யாரவது கேள்வி கேட்டு விடுவார்கள். ஆகவேதான் வாரம் என்று குறிப்பிடுவார்கள் என்றார். ஓடியிருந்தால் சரி ஆனால் அத்தனை நாட்கள் ஓடவில்லையே என்று நான் கேட்க அத்தனை நாட்கள் ஓடவில்லை என்பது நம்மைப் போன்ற சிலருக்கு மட்டும்தானே தெரியும். என்றார் நண்பர். ஏன் இப்படி என்ற கேள்விக்கு நண்பர் காரணம் சொன்னார். சிவந்த மண் சென்னை குளோப் தியேட்டரில் அதிகபட்சமாக 145 நாட்கள் ஓடியது. அதைவிட இது அதிகம் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நுண்ணரசியல்தான் என்றார். அவர் மேலும் சொன்னார். இதற்கு மேலும் உங்களைப் போன்ற மதுரைக்காரர்கள் அழுத்திக் கேட்டால் அதே மதுரை மீனாட்சியில் ஒளி விளக்கு 147 நாட்கள் ஓடியது [21 வாரம்] அதனால் வந்த confusion என்று சொல்லி விடுவார்கள் என்றார்.

    பணக்கார குடும்பம் 100-வது நாள் விளம்பரத்தில் கோவை சேலம் நகரங்களில் ஷிப்டிங் அரங்குகளில் ஓடியதையும் சேர்த்து கொடுத்திருப்பார்கள். அதை வைத்து 7 அரங்குகள் என்பார்கள். ஏன் தெரியுமா 1964-ல் நமது கை கொடுத்த தெய்வமும் நவராத்திரியும் 6 அரங்குகளில் 100 நாட்கள் ஓடின. அதை விட அதிகம் என்று நிறுவ இப்படி பதிவு வரும். விளம்பரத்தை பார்க்கும்போது இது ரிலீஸ் தியேட்டர் இது ஷிப்டிங் தியேட்டர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதுவும் 50 வருடங்களுக்கு முந்தைய விளம்பரத்தை பார்க்கும்போது? இப்படி ஒவ்வொரு பதிவின் பின்னாலும் உள்ள நுண்ணரசியலை சொல்லிக் கொண்டே போனால் அதற்கே பல பக்கங்கள் ஒதுக்க வேண்டி வரும்.

    இதை இப்போது இத்தனை விளக்கமாக சொல்லக் காரணம் இனிமேலாவது நீங்களும் சரி நண்பர் RKS அவர்களும் சரி இதைப் பற்றியெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் செய்யாமல் விட்டு விடுங்கள் என்று சொல்லத்தான். நீங்கள் இந்த திரியில் தொடரும்வரை நடிகர் திலகம் பற்றி மட்டுமே பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்

  15. Likes kalnayak, Harrietlgy, JamesFague liked this post
  16. #2689
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    செல்வகுமார் சார்,

    உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. இப்போது பதிவிட்டது போல் காலையிலும் நீங்களே பதிவிட்டிருக்கலாம். யுகேஷ் பாபுவின் பெயரில் வந்த பதிவு உங்களுடையது என்பது படிக்கும் போதே புரிகிறது. இளைய சகோதரர் யுகேஷ் எப்படி பதிவிடுவார் நீங்கள் எப்படி பதிவிடுவீர்கள் என்பது ரெகுலராக இரு திரிகளையும் படிப்பவர்களுக்கு தெரியும். சரி பரவாயில்லை.

    நண்பர் கோபால் எழுப்பிய கேள்விகள் அவற்றுக்கு உங்கள் பதில்கள் இவற்றுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 1970-ல் வெளிநாடுகளில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு அதற்காக செலவழிக்கப்பட்ட அந்நிய செலாவணி குறித்து அமலாக்ப் பிரிவு [enforecement wing] ஒரு விசாரணை நடத்தியதும் அதை அடிப்படையாக வைத்து எப்படி எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து வெளியேற வைக்கப்பட்டார் என்பது பற்றியும் raw அல்லது IB பிரிவில் தலைவராக இருந்தவர் [அவர் பெயர் நினைவில் இல்லை] 1988- 89 காலகட்டத்தில் விகடன் குழுமத்திலிருந்து வெளி வந்துக்கொண்டிருந்த ஜூனியர் போஸ்ட் இதழில் தன அனுபவங்களை தொடராக எழுதும் வேளையில் குறிப்பிட்டிருக்கிறார். நீங்களும் படித்திருக்க கூடும். ஆனால் ஒப்புக் கொள்ள உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆகவே கோபால் சொன்ன விஷயங்கள் hearsay மட்டுமல்ல, பத்திரிக்கையில் வெளிவந்ததும் கூட.

    நீங்கள் அதை பொய் செய்தி என்று சொன்னதனால் இதை குறிப்பிட நேர்ந்தது. மேலும் எம்ஜிஆர் அவர்களின் திரியில் கோபாலின் பதிவிற்கு நீங்கள் பதிலுரைக்கும்போது எச்சரிக்கிறேன் போன்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தியிருப்பது சரிதானா? வருங்கால சமுதாயத்திற்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியராக பணிபுரியும் உங்களைப் போன்றவர்கள் இது போன்ற மிரட்டல் தொனி வார்த்தைகளை பயன்படுத்துவது வருத்தத்துக்குரியது. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

    அன்புடன்

  17. Thanks eehaiupehazij thanked for this post
  18. #2690
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    நம் நாடு திரைப்படத்தின் வெளியீட்டு நாளான 7-ம் தேதி, மக்கள் திலகம் திரியில் அப்படம் பற்றிய ஆவணங்களை (இன்னும் இரண்டு படங்களுக்கும் சேர்த்து) பதித்திருந்தனர். அனைத்தும் நன்றாக இருந்தன.

    அதில் வேலூர் நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் வேலூர் & திருச்சி ரசிகர்மன்ற நோட்டீஸ்கள் இரண்டை பதிவிட்டிருந்தார். முன் ஜாக்கிரதையாக 'பார்வைக்கு மட்டும் விவாதத்துக்கு அல்ல' என்றும் தலைப்பிட்டிருந்தார்.

    அவற்றில் வேலூர் ரசிக நண்பர்கள் வெளியிட்டிருந்த நோட்டீஸில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டிருந்தனர். நம்நாடு படத்துக்கு முன்வந்த அடிமைப்பெண் சாதனைகளைக் குறிப்பிடும் வண்ணம் இரண்டு விஷயங்களை சொல்லியிருந்தனர். அவை

    'சென்னையில் நான்கு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே வண்ணப்படம்'

    'தூத்துக்குடியில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம்'

    என்பவையே.

    ஆனால் அவ்விரண்டு சாதனைகளையும் அதிக நாட்கள் அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

    அடிமைப்பெண்ணின் பின்னாடியே வந்த 'சிவந்த மண்' இவ்விரண்டு சாதனைகளையுமே முறியடித்தது.

    (இந்தப்பதிவும் சும்மா தகவலுக்குத்தான், விவாதத்துக்கு அல்ல)

  19. Likes kalnayak, Harrietlgy, JamesFague liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •