மஞ்சள் குங்குமம் ஏறக்குறைய ஆங்கில "லவ் ஸ்டோரி" கதையேதானே...
ரவிச்சந்திரனின் படிப்புக்காக கான்சர் பேஷண்ட் ஷீலா வெளியே சொல்லிக்காம சித்தாள் வேலையெல்லாம் செஞ்சு செங்கல் தூக்கி நடந்து விழும்போது தியேட்டரில் "இந்தப் பொண்ணு மத்த படத்திலே நடிக்கிறது போல டான்ஸ் ஆடினால் நிறைய சம்பாதிக்கலாம். என்னத்துக்கு இந்த வேலை செய்யுது?" என்ற கமெண்ட் கூட கேட்ட ஞாபகம்
சோகப் பொங்கலில் "என் காதல் கண்மணி" ஒரு முந்திரிப் பருப்பு என்றால் தேங்காய், மனோரமாவின் "ரா ரான்னா வா வா" பாட்டு ஒரு வெல்லக் கட்டி.
ராஜேஷ் சார் போட்ட நடன இயக்குனர் சலீம் பற்றிய பதிவு மீட்டிய நினைவு அலைகள் கோபி கிருஷ்ணாவிடம் சென்று அங்கிருந்து நடிகர் திலகத்திடம் வந்து சேர்ந்து விட்டது .சர்வம் சிவா(ஜி) அர்ப்பணம்
மென்மையான காதல் ..காதலை பற்றி நாயகியின் கேள்விக்கு நாயகன் பதில் சூப்பர்.
பின்னர் நாயகன் கேள்விக்கு நாயகின் நாணமும் , காதலை பற்றிய தன்னுடைய வெளிப்பாட்டை
பாடலாக தந்த அருமையான காட்சி . ஜேசு தாஸ் - சுசீலா இருவரின் மதுர குரலில் மக்கள் திலகமும் - லதாவும் காதலர்களாக தோன்றும் காட்சி மனதை மயக்கும் பாடல் .
பாரதியாரின் பல பாடல்கள் பிடிக்கும் .. இந்தக் குறிப்பிட்ட பாடல் இசை எல்.வைத்திய நாதன்.. குரல் ஜேசுதாஸ் நீரஜா நடிப்பு ரகுவரன் (அறிமுகம்) அனிதா - படம் ஏழாவது மனிதன்..ரிலீஸானது தேவி தியேட்டர்..(படத்தில் எல்லாப் பாட்டுமே பாரதி பாடல் தான்..வெகு இனிமை) படம் சுமார் தான்..ரகுவரன் நெடு நெடுவென வளர்ந்த சிகப்புத் தென்னை மரம் கணக்காக இருக்க கதானாயகி (முகம் நினைவிலில்லை) குள்ளம் தான்(குனிந்து தான் முத்தா கொடுக்க முடியும்!)
பாயுமொளி நீயெனக்கு...
பார்க்கும் விழி நானுனக்கு...
தோயும் மது நீயெனக்கு...
தும்பியடி நானுனக்கு...
வாயுரைக்க வருகுதில்லை...
வாழி நின்றன் மேன்மையெல்லாம்...
தூய சுடர் வானொளியே...
சூரையமுதே...
கண்ணம்மா....
வீணையடி நீயெனக்கு...
மேவும் விரல் நானுனக்கு...
பூணு(ம்)வடம் நீயெனக்கு...
புது வைரம் நானுனக்கு...
வானமழை நீயெனக்கு...
வண்ண மயில் நானுனக்கு...
பானமடி நீயெனக்கு...
பாண்டமடி நானுக்கு...
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமரு நல்லழகே...
நல்லழகே...
ஊனமரு நல்லழகே...
ஊறுசுவையே...கண்ணம்மா...
Bookmarks