எஸ்.வரலக்ஷ்மியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று இப்பாடல். இது நம் குழந்தை படத்தில் இடம் பெற்றதாக இந்த இணைய தளம் குறிப்பிடுகிறது. ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியவிலலை. ஓவியக் கலை தெரிந்தால் போதுமா இவரைப் புகழின் உச்சியில் கொண்டு போன பாடல். கேளுங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
கேட்கும் போதே கால்கள் தாளமிடும் இனிய பாடல். கண்டசாலாவின் இனிய குரலில் அன்றும் இன்றும் என்றும் நெஞ்சைக் கொள்ளை கொண்ட பாடல்.. துள்ளித் துள்ளி எங்கோ போறாய் என்று நம்மை கேட்க வைக்கும் ரம்மியமான பாடல்.
இப்படத்தில் மற்றொரு பிரபலமான பாடல் மாடப்புறா பாடுதம்மா... இதுவும் கண்டசாலா பாடியது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
பெண்ணரசியில் இடம் பெற்ற இனிமையான பாடல் ... திரை இசைத் திலகம் இசையில் திருச்சி லோகநாதன் (பெண் குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரியினுடையதா அல்லது கே.ராணயினுடையதா) பாடிய சூப்பர் டூயட் பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
ஆஹா... என்ன அருமையான ரம்மியமான காட்சி... இன்றைய மிமிக்ரி கலைஞர்களெல்லாம் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும்.. குழந்தைகள் ஒரு ரயில் பணத்தை பாடலில் என்ன விஷுவலாகத் தந்திருக்கிறார்கள்.. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என கேள்விப் பட்டிருக்கிறோம். இதை அந்த ரகத்தில் சேர்க்க்லாம்.
1955ல் வெளிவந்த வள்ளியின் செல்வன் திரைப்படத்தில் குழந்தைகள் ஒன்றாக ஒரு ரயில் பயணத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவதைப் பாருங்கள்.
இப்பாடலில் குழந்தைகள் குரலில் ஒரு வாப்ளிங் வரும். அது பின்னாளில் ஒரு பிரபலமான இசையமைப்பாளரின் பாடலில் இடம் பெற்றது. கண்டு பிடியுங்கள்.
காணொளி வழங்கியவர்... நம்ம கிரேட் டிஎஃப்எம்லவர் அவர்கள் தான். நம் உளமார்ந்த நன்றி... அவருக்கு
Last edited by RAGHAVENDRA; 19th August 2014 at 07:13 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
"நானோ உன் அடிமை" பாடல் ஒரிஜினலாக "உன்னை நான் சந்தித்தேன்" என்ற பெயரிடப்பட்ட படத்துக்கு சொந்தமானது.
( வாணி ஜெயராமின் " நிலாவை நேற்று பார்த்தது" இடம் பெற்ற அதே படம்தான்..) .. அதன் பின் "தியாக உள்ளம்" என்று பெயர் மாற்றப்பட்டு வெளிவந்தது.
ஆனால் "தியாக உள்ளம்" என்று பெயரிடப்பட்ட சுமித்ரா நடித்த படம் "அவள் ஒரு காவியம்" என்ற பெயரில் வெளியானது என்று படித்தேன்.
இரண்டையும் ஒன்றாக்கி அந்தப் பாட்டை இந்தப் படம் என்று யூ டியூபில் போட்டு ஒரு முடிவே கட்டி விட்டார்கள். ( முக நூலில் ஒருவர் சண்டைக்கே வந்து விட்டார். யூ டியூபில் சொன்னப்புறம் நீங்க யாரு வேற படம் என்று சொல்வதற்கு என்று.... )
நம்ம ஜீ-க்கள் இதை விலாவாரியாக கண்டு பிடித்துக் கொடுக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
ஆஹா,
மது,வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற வகையில் ஜெய்கணேஷ், முத்து ராமன்,சுமித்ரா போன்றோர் நடித்த 70 களின் படங்களின் ஆராய்ச்சியில் தாங்கள் காட்டும் ஈடுபாடு அடடா?
என்ன பண்ணி தொலைவது,நண்பராக போய் விட்டீர். ஏற்கெனவே எனக்கு மிக மிக நற்பெயர். பிழைத்து போங்கள் .
Last edited by Gopal.s; 19th August 2014 at 07:17 AM.
கிஷோர் குமார் பாடிய ஈனா மீனா டீகா சூப்பர் ஹிட்டானாலும் ஆனது. அது இந்தியாவின் பல மொழிகளிலும் பயன்படுத்தப் பட்டது. தமிழ் மட்டும் விதிவிலக்கா என்ன... அதிசயப் பெண் திரைப்படம் இன்று வரை மக்கள் நினைவில் நிற்பதற்கு இந்தப் பாடல் தானே காரணம். பாடகர் திலகம் மற்றும் பாடகியர் திலகம் இருவருமே பாடியதாச்சே.
ஆனால் அதே அதிசயப் பெண் திரைப்படத்தில் எஸ் எம் எஸ் அவர்கள் இன்னொரு ஹிட் பாடலைத் தந்துள்ளார்... மகர வீணை தனது மடியின் நாத மகிமை அறியுமோ என்ற இந்தப் பாடல் தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இசையரசி ஏன் நம் மக்கள் மனதில் ஆளுமை பெற்றிருக்கிறார் என்பதற்கு மிகச் சிறந்த சான்று இப்பாடல். நாடி நரம்பெல்லாம் அப்படியே மெலிதாகி நாம் அப்படியே வான் வெளியில் பறந்து விடுவோம்... இந்தப் பாட்டின் பல்லவி அப்படியே சுசீலா அவர்களுக்குப் பொருந்தும்..
பாடலாசிரியர் யார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. வாலி என்று சிலரும் இல்லை என்று ஒரு சிலரும் கூறுகின்றனர். வாலியின் பாடல்கள் பட்டியல் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இதே அழகர் மலைக் கள்வன் படத்தில் திருச்சி லோகநாதனின் சூப்பர் மெலடி பாடல்.. இந்தப் பாடல்களெல்லாம் நம்மை அந்தக் காலத்திற்கும் அந்த இடத்திற்கும் நம்மை அழத்து சென்று விடுகின்றன.
தேன் தூங்கும் பொதிகை மலைச் சாரலிலே நாமெல்லாம் ஒரு சுற்றுலா போவோமா..
போகும் போது பஸ்சை நல்ல கண்டிஷனாக வைத்து எடுத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் இந்தப் பாடலைப் போல் திடீரென நின்று விடும் அபாயம் உள்ளது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks