Page 315 of 397 FirstFirst ... 215265305313314315316317325365 ... LastLast
Results 3,141 to 3,150 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3141
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "]அண்ணனவன் சொல்லிய சொல்லை
    நான் எந்நாளும் மறப்பது இல்லை


    ஹலோ சின்னக் கண்ணன், கல்நாயக், எப்படி இருக்கீங்க?

    இங்கு வந்து உங்களோடு உரையாடுவது, இனிமையான மாலை வேளையில் பூங்காவில் அமர்ந்து ஜாலியாக அரட்டை அடிப்பது போன்ற மகிழ்ச்சியை கொடுத்தாலும் வேலை பளுவால் அடிக்கடி வரமுடியவில்லை. மன்னிக்கவும். என்றாலும், சில நாட்கள் திரியை படிக்க முடியாவிட்டாலும் மொத்தமாக ஒருநாள் எல்லாவற்றையும் படித்து விடுவேன்.

    கல்நாயக்,

    ராஜண்ணா ஜெராக்ஸ் மெஷினில் இருந்து இன்னொரு வெள்ளை பேப்பர் கேட்டதை படித்து சிரித்து கண்ணில் தண்ணீரே வந்து விட்டது. சஸ்பென்ஸாக கொண்டுபோய் எதிர்பாராமல் முடித்துள்ளீர்கள். அப்புறம் நிலா பாடல்கள் இன்னும் எவ்வளவு ஸ்டாக் இருக்கு? எனக்கே நீங்கள் சொன்ன பிறகுதான் ராணி சம்யுக்தாவில் 2 நிலாப் பாடல் ஞாபகத்துக்கு வந்தது. பாடல்களுக்கு நன்றி.

    சின்னக்கண்ணன்,

    வாஸந்தி கதையை சுருக்கமாக சுவையாக கூறியுள்ளீர்கள். ...... இந்தக் கண்ணா இருக்கானே(அடியேன்தான்) கொஞ்சம் மார்வாடி கஞ்சூஸ் ......... என்று உங்களை நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது சும்மா நகைச்சுவைக்காக என்று கருதுகிறேன். நாங்கள் கண்கூடாக பார்ப்பது எழுத்தில் அள்ளித்தரும் கர்ணன் நீங்கள். வல்லாரை சாப்பிட்டால் போன ஜென்ம ஞாபகம் கூட உங்களுக்கு வந்து விடும் போலிருக்கிறதே.
    ----------

    பிள்ளையோ பிள்ளை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சொல்லப் போனால் இது மக்கள் திலகத்துக்கு வரவில்லையே என்று ஏங்க வைத்த பாடல்.

    ஏழையின் சிரிப்பில் இறைவன்
    இருப்பதை சொன்னான் தலைவன்
    அண்ணணவன் சொல்லிய சொல்லை
    நான் எந்நாளும் மறந்தது இல்லை...

    திரு.மு.க.முத்து நல்ல தோற்றம் கொண்டவர். நல்ல நடிகர். நன்றாக வசனம் பேசக் கூடியவர். இனிய குரலில் பாடும் திறனும் உண்டு. என்றாலும் மக்கள் திலகத்தை காப்பியடிக்காமல் தனக்கென்று ஒரு பாணியில் நடித்திருந்தால் அவர் திரையுலகில் இன்னும் சில ஆண்டுகள் தாக்குப் பிடித்திருப்பார் என்பது என் கருத்து. இந்தப் பாடலில் நடை, உடை, ஆக்க்ஷன் என அப்படியே மக்கள் திலகத்தின் ஜெராக்ஸ் ஆக இருப்பார்.

    இவரைப் பற்றி கலைஞர் கருணாநிதி அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தார். ஆனால், பிள்ளையோ பிள்ளை, துஷ்ட பிள்ளையாகிவிட்டது.

    இன்று பாடகர் திலகத்தின் பிறந்தநாள். அவரது நினைவாக இந்தப் பாடல் இடம் பெறட்டுமே.

    அதோடு, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் பிறந்த நாளும் இன்றுதான். எனக்கு சங்கீதத்தில் அவ்வளவு பாண்டித்யம் கிடையாது. ஏதோ எனக்கு தெரிந்த முத்து. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். முத்துசாமி தீட்சிதரை மதிப்பவர்கள் என்னை கோபிக்காதீர்கள். இதற்குதான் நாவை அடக்க வேண்டும் என்பது.

    பேரறிஞர் அண்ணா முதல்வரான பிறகு மக்களிடம் திருக்குறள் நெறி பரவட்டும் என்ற நோக்கத்துடன் பஸ்களில் திருக்குறள் எழுதிவைக்கும் முறையை கொண்டு வந்தார். சட்டப் பேரவையில் முதல்வர் அண்ணா இதுகுறித்து பேசும்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டு,

    யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு.

    என்ற குறள் பஸ்களில் எழுதப்பட்டுள்ளது. இது யாருக்கு? ஓட்டுநருக்காக? நடத்துனருக்கா? இல்லை பஸ்சில் செல்லும் பொதுமக்களுக்கா? என்று கேள்வி எழுப்பினார்.

    ஓட்டுநரை சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். நடத்துனருக்கு என்றால் நடத்துனர்கள் கோபித்துக் கொள்வார்கள். மக்களுக்கு என்றால் கேட்கவே வேண்டாம்.

    என்ன பதில் சொல்லப் போகிறார் என்று சபையில் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்க,

    வெற்றிலைக் கறையேறிய காவிப் பற்கள் தெரிய இளநகை பூத்தபடி,

    அந்தக் குறள் நாவுடைய எல்லாருக்கும்

    என்று ஒரே போடாக போட்டார், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தால் சப்- பெலோஷிப் என்ற அறிஞர் பட்டம் கொடுத்து கவுரவிக்கப்பட்ட அறிவின் சிகரம் அண்ணா.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. Likes kalnayak, rajeshkrv liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3142
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாங்க கலைவேந்தன் .. நலமா.. வீ ஆல்ஸோ மிஸ்டு யூ..

    நன்றி தங்கள் ரசனைக்கும் பாராட்டுதலுக்கும்..

    யாகாவாராயினும் முக்கியமான குறள்.. ஆழம் மிக்கது..அதுவும் பேரறிஞரின் நகைச்சுவை அழகு.


    இந்தாங்க உங்க பாட்டு.. அப்புறம் நானும் அரசியல் பேசுவேனே!



    வல்லாரை சாப்பிட்டா முன் ஜென்மம் நினைவு வந்தாக்க நான் எந்த ராஜாவா இருப்பேன்.. திங்க்கிங்க்க்..

    இங்கே ஓமானிற்கு நேற்று ஓமானின் மன்னர் ஹிஸ் மெஜஸ்டி சுல்தான் காபூஸ் வெளிநாட்டில்(ஜெர்மனி) மருத்துவம்செய்து விட்டுத் திரும்பி வந்தார் - கிட்டத் தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு.. எல்லார் உள்ளத்திலும் ஒரு ரிலீஃப் அண்ட் மகிழ்ச்சி..உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது..

    (ஹப்பாடி.. நானும் நாட்டு நடப்பைப் பத்திச் சொல்லிட்டேன்)

  5. Likes kalnayak liked this post
  6. #3143
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாங்க கலைவேந்தன் வாங்க.
    அறிஞர் அண்ணாவின் சட்டசபை நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு கலகலப்பூட்டிவிட்டீர்கள். நன்றியும் வாழ்த்துகளும். அப்பப்ப வாங்க. எங்க ரெண்டு பேருக்கும் தனியா இங்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஏதோ அப்பப்ப ராஜேஷ், ராஜ்ராஜ், உங்களை மாதிரி வர்றவங்கள பாத்துதான் பயமில்லாம தெம்பா இருக்கோம்.

    நிலாப் பாடல்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. நூறைத் தொட்டாலும் தொடலாம். முதல் வரிகளில் நிலா வரும் பாடல்களை நான் போட்டு முடித்தபின், பாடலின் இடையிலே நிலா வரும் பாடல்களை சி.க. எழுதுவார்... (என்று நினைக்கிறேன்).
    Last edited by kalnayak; 24th March 2015 at 07:10 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. #3144
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,
    வல்லாரை சாப்பிட்டு முன் ஜென்மத்து நினைவு வந்து நீங்க ராஜாவாதான் இருக்கணும்னு அவசியமா என்ன? சாதாரண...

    இல்லை. இல்லை வள்ளுவராகவோ, கம்பராகவோ, இளங்கோவாவோ, பாரதியாவோ பெரும் புலவரா நீங்க இருந்திருக்கக் கூடாதான்னு கேட்கிறேன்.

    உங்க நாட்டு நடப்பை கேட்டுட்டு கலைவேந்தன் கொஞ்சமாவது 'ஏன்தான் இந்த நாட்டு நடப்பை சொன்னோம்? இந்த நாட்டு நடப்பை சொன்னதுல என்ன பிரச்சினை?'-னு யோசனை பண்ணியிருப்பாரா? அப்படி பண்ணியிருந்தார் என்றால் உங்களுக்கு வெற்றிதான்.
    Last edited by kalnayak; 24th March 2015 at 06:38 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  8. Likes chinnakkannan liked this post
  9. #3145
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹையாங்க்.. நான் ஜஸ்ட் தானே சொன்னேன்..// உங்க நாட்டு நடப்பை// நான் வேலைபார்க்கும் நாட்டின் நடப்பை என வைத்துக் கொள்க.. என் நாடு நம் தேசம் இந்தியா தான்..

    ஏன் ஓய் முன் ஜன்மத்தில் ராஜாவாக இருந்திருக்கப் படாதா.. ம்ம் சரி அட்லீஸ்ட் கல்யாண் குமாராவாவது இருந்திருப்பேன் என நினைக்கிறேன் ( நெஞ்சம் மறப்பதில்லை.. !)

    தேனடி மீனடி மானடி செவ்வாய் மின்னும் சித்திரக் கன்னம் வா வா

    Last edited by chinnakkannan; 24th March 2015 at 06:52 PM.

  10. Likes kalnayak liked this post
  11. #3146
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி கல்நாயக்,

    நிச்சயம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருகிறேன். சின்னக்கண்ணனைப் பற்றி நீங்கள் சொன்ன கருத்துதான் எனக்கும். புலமை மிகுந்த அவர் போன ஜென்மத்தில் பெரும் புலவராக இருந்திருக்கலாம்.

    நன்றி சின்னக்கண்ணன்,

    இளைஞர்கள் நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே? விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்களே? என்ற வருத்தம் எனக்கு உண்டு. நம்மைப் போன்றவர்களுக்குத்தான் நன்கு தெரியுமே? (கல்நாயக்கையும் சேர்த்துதான் சொல்கிறேன்)

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. Thanks kalnayak thanked for this post
  13. #3147
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    என்ன சி.க. போயும் போயும் சினிமா ராஜாவா இருந்திருப்பேன்-னு (இல்லை நடிகர் கல்யாண் குமாராக) சொல்றீங்க.

    ஆசைப்படுறதுல நிஜ ராஜாவாக ஒரு ராஜராஜ சோழனாவோ, ராஜேந்திர சோழனாவோ, கரிகால் சோழனாவோ, குலோத்துங்க சோழனாவோ, மஹேந்திரவர்ம பல்லவனாகவோ, நரசிம்ம பல்லவனாகவோ (வேணாம் பாண்டியன் நெடுஞ்செழியனா இருந்திருப்பீங்கன்னு சொல்ல மாட்டேன். - முரளி உங்க கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறார்; வேறு பாண்டிய மன்னர்களாகவோ) ஏன் வட நாட்டு அரசர்களாவோ, பிற நாட்டு அரசர்களாகவோ நீங்க முன் ஜென்மத்துல இருந்திருக்கக் கூடாதா?

    தேனடி மீனடி பாட்டு எனக்கும் பிடிச்ச பாட்டு. நெஞ்சம் மறப்பதில்லை படமும்தான். அனேகன்-னு அதே படத்தை ரீமேக் உல்டா பண்ணியிருக்காங்க தெரியுமா உங்களுக்கு?
    Last edited by kalnayak; 24th March 2015 at 07:18 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  14. #3148
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கல்நாயக்,

    நெஞ்சம் மறப்பதில்லை என்றதும் நினைவு வந்தது. ‘நிலவுக்கும் மலருக்கும் ஜாதியில்லை’ எனக்கு பிடித்த பாடல். இதையும் உங்கள் பட்டியலில் சேர்க்கலாம். அப்புறம்... வஞ்சிக்கோட்டை வாலிபனில் பி.லீலாவின் தேன் குரலில் ‘வெண்ணிலவே தண் மதியே’ பாடல்.

    எனது பதிவுக்கு லைக் போட்ட திரு.ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  15. Thanks kalnayak thanked for this post
  16. #3149
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நன்றி கலைவேந்தன்,

    என் நினைவிலேயே கிட்டத்தட்ட மேலும் இருபது நிலாப் பாடல்கள் வைத்துள்ளேன். அவைகளை பதிவிட்டதும் மற்ற பாடல்களுக்கு தேடலாம் என்று இருக்கிறேன். நீங்கள் சொன்ன பாடல்களை சமயம் வரும்போது பதிவிடுகிறேன்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  17. #3150
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஸாரி, கல்நாயக்

    நான் தவறாக சொல்லி விட்டேன். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வருவது ‘அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை...’. அது உங்கள் பட்டியலில் சேராது. கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. ஹி..ஹி..

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •