Page 329 of 397 FirstFirst ... 229279319327328329330331339379 ... LastLast
Results 3,281 to 3,290 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3281
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    தெலுங்கு வெலுகு நீடலு தமிழில் தூய உள்ளம்

    இதோ நிலவுப்பாடல் (சந்திரிகா என்றால் நிலவு என்று பொருள்)


  2. Likes chinnakkannan, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3282
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நன்றி ராஜேஷ் தூய உள்ளம் பாடலுக்கு. இந்த பாடலை கேட்டிருக்கிறேன். படத்தின் பெயர் தெரிந்ததில்லை. தெரிந்து கொண்டேன். இது போன்ற வித்தியாசமான நிலாப் பாடல்களை தாருங்கள். சிறப்பாகவே இருக்கிறது.
    Last edited by kalnayak; 7th April 2015 at 04:06 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. #3283
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,
    நிலாவா நிலான்னு சொல்றது தப்பு (?) சரி நிப்பாட்டிக்கறேன். ஆனா நிலாப் பாட்டு வருவதை எப்படி சொல்றது? இதுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கலாமா? வேற வழியில்லை. உதாரணத்துக்கு நீங்க அன்பே ஆருயிரே நிலாப் பாட்டு கொடுத்திருக்கீங்க. அதை மதி பாட்டு, சந்திரன் பாட்டுன்னு சொல்ல முடியாதே!!! காலங்கார்த்தாலே உங்களை குழப்பி விட்டுட்டேனா? வந்த காரியம் முடிஞ்சது.

    போறதுக்கு முன்னால், சந்திரபாபு பாட்டும், கண்ணெதிரே தோன்றினால் பாட்டும் நன்று. சந்திரபாபு பாட்டில் சற்று சோகம் இழையாடுகிறதே. அவரது பாட்டு என்றாலே உற்சாகம் விளையாட வேண்டுமே. எனிவே இரண்டும் பிரபலமான பாடல்கள்தான்.*
    Last edited by kalnayak; 7th April 2015 at 09:58 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  6. #3284
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    திங்கள் பாடல் 60: "தென்றல் தான் திங்கள் தான்"
    -----------------------------------------------------------------------

    வசந்த் இயக்கத்தில் வந்த படம். அஞ்சுவும், ரமேஷ் அரவிந்தும் ஆடுகிறார்கள், ராஜாவின் இசைக்கு. K.J.யேசுதாஸும், சித்ராவும் பாடுகிறார்கள் கவிஞர் வாலி/மு.மேத்தா பாடலை. (சி.க., உங்களுடைய மு.மேத்தா வரிசையில் இந்த பாடல் இல்லை. நீங்கள் அல்லது ராஜேஷ் வந்து யார் என்று உறுதி செய்ய வேண்டும்). இதில் கவிஞர் தென்றலும் திங்களும் தினமும் சிந்துது என்கிறார்கள். அதுக்கு மேல் அவைகளைப் பற்றி சொல்லவில்லை. நல்ல இனிமையான பாடல்தான்.

    பாடல் வரிகள்:
    -----------------------
    தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
    உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
    ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
    ஆசை ஊற்று காதில் கானம் பாட
    நெஞ்சோடு தான் வா வா வா கூட

    காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்
    தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்
    பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற
    தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர
    தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை
    தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில் பாய்ந்திடும் என் எண்ணங்கள்
    நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட (தென்றல் தான் திங்கள்...)

    பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது
    பூவாடை மூடும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது
    நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும்
    தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும்
    தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை
    கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில்
    நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட (தென்றல் தான் திங்கள்...)

    காணொளி:
    -----------------


    பாட்டை கேட்டதும் கேளடி கண்மணியே என்று சொல்லத் தோன்றுமே!!!

    குறிப்பு: திங்கள் பாடல் எழுதுவதால் யாரும் அஞ்சவேண்டாம். நான் மார்கழித் திங்கள், சித்திரைத் திங்கள் போன்ற திங்கள்களை எழுத மாட்டேன்.
    Last edited by kalnayak; 7th April 2015 at 03:04 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. #3285
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    திங்கள் பாடல் 61: "அற்றைத் திங்கள் வானிடம்"
    ----------------------------------------------------------------------

    விஷால், மம்தா நடிப்பில் வித்யாசாகர் இசையில், மதுபாலக்கிருஷ்ணன் மற்றும் சுஜாதா பாட (யார் எழுதிய பாடலோ தெரியவில்லை) வந்த பாடல். வானத்திலே கீதுப்பா நிலா அப்படின்னு சொல்லிகீது. சாரிங்கோ, இதுக்கெல்லாம் காணொளி மட்டும் போதுமுங்க!!!



    சிவப்பதிகாரம்-னு சொல்லாமலே தெரியுமே!!!
    Last edited by kalnayak; 7th April 2015 at 04:08 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  8. #3286
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    thendral than thingal than - lyrics piraisoodan

  9. #3287
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நிலாவா நிலான்னு சொல்றது தப்பு (?)// நிலான்னு சொல்லலாம் நிலவு என்றால் தான் கிரணம் என்று அர்த்தமாம். பிறைசூடனும் வருவார் என் வரிசையில்..

    அற்றைத் திங்கள் வானிடம் - எழுதிய கவிஞர் யுகபாரதி.. நல்ல பாட்டு.. அதே படத்தில் இன்னொரு பாடலும் வரும்..

    சித்திரையில் என்ன வரும்
    வெயில் சிந்துவதால்
    வெக்க வரும்

    நித்திரையில் என்ன வரும்
    கெட்ட சொப்பனங்கள்
    முட்ட வரும்

    கண்ணான கண்ணுக்குள்ளே
    காதல் வந்தால்
    உண்மையில் என்ன வரும்

    தேசங்கள் அத்தனையும்
    வென்று விட்ட
    தித்திப்பு நெஞ்சில் வரும்

    இதுவும் வெகு அழகான பாடல்.. திடுமென சீரியஸ் படத்தில் (சிவப்பதிகாரம்) இந்த இரண்டு பாடல்களுமே அருமை..இதுவும் யுக பாரதி தான்.. அதுவும் விஷால் மம்தாமோகன் தாஸ் ( கான்ஸர் அவரைத் தாக்குவதற்கு முன் எடுத்த படம் என நினைக்கிறேன்) ஜோடி வெகு அழகு..

    மா விளக்கு போல நீ
    மனசயும் கொளுத்துற
    நாவிடுக்கு ஓரமா
    நாணத்த பதுக்குற

    யாரும் இறச்சிடாத
    ஒரு ஊத்து போல தேங்கி
    ஆகி போச்சு வாரம்
    இவ கண்ணு முழி தூங்கி // செம அழகிய வரிகள்..





    தென்றல் தான் திங்கள் தானுக்கும், அற்றை த் திங்கள் வானிடமுக்கும் நன்றிங்க கல் நாயக்..
    Last edited by chinnakkannan; 7th April 2015 at 06:15 PM.

  10. #3288
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாடினார் கவிஞர் பாடினார் – 8

    **

    சிலோனில் ஒரு டீக்கடை..

    அந்த டீக்கடையினுள்ளே ஒரு ரேடியோ.. ஆக சிலோன் ரேடியோ.. அதற்குள் ரேடியோ சிலோன்…!

    ஒரு சாய் போடுங்க..

    வந்த் இளைஞனுக்கு இருபத்திரண்டு வயதிருக்கலாம். கொஞ்சம் முரடான முகம் கலைந்த தலை.. கொஞ்சம் சற்றே சிவந்த கண்கள்..அழுக்கான உடை..

    .மத்தியானம் நான்கு மணி ஆனதினால் இசைக்களஞ்சியம்..

    துள்ளித் துள்ளி சலசலத்து ஓடும் இசை....படிக்காத மேதையில் வரும் சீவிமுடிச்சு சிங்காரிச்சு பாட்டிற்கு முன் வரும் மியூசிக்.. முடிந்து இசைக்களஞ்சியம்..

    தொபக்கென வடிகட்டியில் ஊறியிருந்த தேனீருடன் தள தள தள தள என -இளம்பெண்ணைப் பார்க்கும் இளந்தாரி மனசைப் போல- கொதித்துக் கொண்டிருந்த பாலைக் கொஞ்சூண்டு நாசுக்காய் ஒருகிளாஸில் விட்டு இன்னொரு கிளாஸை எடுத்து சர் சர்ரென நுரை பொங்க ஆற்றி பெஞ்சில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம் கடைக்காரர் கொடுக்கவும் இசைக்களஞ்சியத்தில் முதல்பாடல் இது இன்ன படத்தில் எழுதியவர்…எனச் சொல்லி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா பாட்டை ப் போட…

    சூடு சூடாய் நல்லமரக்கலரில் நுரைபொங்க இருந்த டீயை ஒரு முறை சிப்பிய இளைஞன் நிறுத்திவிட்டான்.. பின் முழுப்பாடலையும் கேட்டான்..

    டீ கிளாஸ் கையிலேந்திய படியே… குடிக்காமல்.. பாடல் கேட்கக் கேட்க கண்கள் கலங்கின.. பொசுக்கெனப் பொங்கிடும் வெள்ளம் போலக் கண்களில் நீர்.. சொய்ங்க் என வழுக்கிக் கன்னத்தில் வீழ, “ஏன் கரையறீயள்” எனக் கேட்டார் திகைத்துப் போன கடைக்காரர்..

    உஷ்.. என்றான் இளைஞன்..பாடலை முழுக்கக் கேட்டுவிட்டு, “இந்தப் பாட்டு எழுதினதுயாரு..”

    “இவர்..ப்பா.. என்ன விஷயம்..ஏன் அழறே”

    “எனக்கு என்னோட அம்மா நினைவுக்கு வந்துடுச்சு..பாவி நான்.. போகாதேன்னு சொல்லிச்சு.. இந்தவூர்லயே இருன்னு சொல்லிச்சு..எனக்கு கண்டி ஊரு.. அதவுட்டுட்டு..அவளயும் விட்டுட்டு இந்தக் குன்னாகத்துக்கு வந்துட்டேன்.. அது அப்பா இல்லாம எவ்ளோ கஷ்டப் பட்டிருக்கும் என்ன வளக்க…ஆளாக்க.... பாவி நான் பாவி..”

    “இதுவே பழையபாட்டாச்சுதே..இப்பத்தான்கேக்குறியள்”

    “ஓமம்..ம்ம் நான் ஒடனேபஸ்ஸ்டான் போய் ஊருக்குப் போறன்” சொன்ன இளைஞன் டீக்காசுகொடுத்துவிட்டு நடந்தான் டீயைக் குடிக்காமலேயே..

    அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லுமுன்…

    **
    ”அஸ்ஸலாமு அலைக்கும்..

    அலைக்கும் அஸ்ஸலாம்..”

    “செளக்கியமா பாய்..”

    “செளக்கியம்..சொல்லுங்கள்..”

    “ராமாயணக் கதையை முழுக்கப்படம் எடுக்கறோம்..உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்..”

    “ஆமாம்..”

    “அதுல ராவணன் அரசவைல்ல பாடற மாதிரி பாட்டு வருது”

    “சரி”

    ”அதுக்கு ஒங்க தோஸ்த் மருத காசி கிட்ட பாட்டுக் கேட்டோம்”

    “சரி” மெல்லப் புருவம் உயர்ந்தது

    “அவர் சொன்னார்..அவரும் எழுதுவாராம்.. நீங்களும் எழுதணுமாம்..ரெண்டு பேருக்கும் வேறவேற மெட்டு..ரெண்டுல மிகச் சிறந்ததா இருக்கறத படத்துல உபயோகப் படுத்திக்கலாம்னு சொன்னார்.. பாய்..கோச்சுக்கப் படாது.. அவருக்கு என்ன பேமண்ட் தர்றோமோ அதையே உங்களுக்கும் தந்திடறோம்..ஆனா படத்துல வரலைன்னா கோபிச்சுக்கவும் கூடாது”

    “இது என்ன..பிரம்மாண்டமா படம் எடுக்கறீங்க..அதுவும் உங்க இதிகாசத்த..சிறந்ததில் சிறந்தது வரணும்னு ஆசைப்படறதுல தப்பில்லையே.. ஸ்டூடியோக்கு நான் வரணுமா.. கொஞ்சம் உடல் நிலை சரியில்லையே..எப்போ வரணும்..”

    “அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம்..இதோ டேப்ரெகார்டர் கொண்டு வந்துருக்கோம்.. அதுல மெட்டு பதிஞ்சுக்கிட்டு வந்துருக்கோம்.. ஐயா கேட்டு எழுதித் தந்தீங்கன்னா ஸ்டூடியோ போய் ரிகார்ட் பண்ணிடுவோம்..”

    “சரி..வந்தது வந்தீங்க.. நம்ம வீட்டு வெஜிடபிள் பிரியாணியைச் சாப்பிட்டுப்பாருங்க..”

    “வெஜிடபிள் பிரியாணியா” வந்திருந்தவர்கள் புருவம் உயர்த்த கவிஞர் புன்சிரித்தார்.. “ ஆமாம் நான் வெஜிடேரியன் தான்.. நான்வெஜிடேரியனில்லை..”

    வந்த பிரியாணிக்கும் கவிஞரின் மனம் போலே சுவை..

    பின்னர் கவிஞர் எழுதிக் கொடுத்த பாடல் என்னாயிற்று..

    அதைப் பார்க்குமுன் கவிஞர் யாரெனத் தெரிந்து கொள்ளலாம்..கவி கா.மு.ஷெரிஃப்..

    தன்னைப் பற்றிஅந்த மகா கவிஞர் என்ன சொல்கிறார்..

    சிந்தனை என்ற கலப்பை கொண்டு
    ...செய்ய தமிழாம் நிலமதனை
    வந்தனை செய்தே உழுதுழுது
    ...வார்த்தை களென்ற எருவுமிட்டு
    நிந்தனை யற்ற எதுகை மோனை
    ...நீண்ட வரப்பும் எடுத்துக் கட்டி
    அந்தம் மிகுந்த கவிதைப்பயிர்
    ...ஆக்கும் ஏழைப் பாட்டாளி நான்.

    மிகப் பழகுதற்கு எளியவர் கவி கா.மு ஷெரிஃப். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர். (1914-1994) முதலில் பாட்டெழுதிய படம் பொன்முடி. பின் மந்திரி குமாரியில் வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்.. மேலும் பாடல்கள் பார்க்குமுன்..

    *

    ராமாயணப் படத்திற்காக மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொடுத்தார் கவி.கா.மு.ஷெரீஃப்.. ஆனால் சம்பூர்ண ராமாயணத்தில் அது இடம்பெறவில்லை.. மருதகாசி ராவணனுக்காக எழுதிய வீணைக் கொடியுடைய வேந்தனே இடம் பெற்றது..கவிஞர் கோபமெல்லாம் கொள்ளவில்லை..எனக்குக் கிடைத்தால் என்ன என் நண்பன் பெற்றாலென்ன என்ற உயர் பண்பு.

    பல வருடங்கள் கழிந்தன.. ஒரு தயாரிப்பாளர் கவி.கா.மு ஷெரீஃபிடம் வந்தார்..

    “சொல்லுங்க”

    “சிவனோட விளையாடல்கள் பற்றிப் படமெடுக்கிறோம்”

    “சரி”

    “எல்லாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதிட்டார்.. ஒரே ஒரு பாட்டு பாக்கி..”

    “ம்ம்..அதுக்கு நான் எழுதணுமா”

    “இல்லை நீங்க ஏற்கெனவே எழுதிட்டீங்க”

    “ நானா..” வியந்தார் கவிஞர்..
    “ஆமாம்..சம்பூர்ண ராமயணத்திற்காக ராவணன்பாடற மாதிரி இருக்கற பாட்டு..இங்கே எங்க படத்துல சிவன் பாடற மாதிரி இருந்தா நல்லா இருக்கும் ”

    :”சிவனடியான் பாடற பாட்ட சிவன் பாடறாரா..யா.அல்லாஹ்.. சரி”

    "உங்களோட பாடலோட ஆரம்ப வரிகளை மட்டும் வச்சுக்கலாம்னு இருக்கோம்..மிச்சத்தைக் கண்ணதாசன் எழுதித் தரேன்னு சொல்லியிருக்கார்.ஆனா உங்க அனுமதி பெற்ற பிறகுதான் எழுதுவேன்னு சொல்லியிருக்கார்....”

    “சரி”

    வந்தவர் மகிழ்ந்தார்..”இன்னும் ஒன்று..”

    “சொல்லுங்க”

    “:இது சொல்லக் கஷ்டமா இருக்கு.. எல்லாப்பாட்டும் கண்ணதாசன் எழுதியிருக்கார்..இந்த ஒருபாட்டுக்கு ஒங்க பேர ப்போடறதுக்குப் பதிலா கண்ணதாசன் பேரையே போட்டுடலாம்னு எனக்கு ஒரு சின்ன எண்ணம்..”

    “சின்ன எண்ணம் ம்ம்”

    “நான் கண்ணதாசன் கிட்ட கேட்டுட்டேன்.. ஷெரீஃப் அண்ணனுக்குச் சரின்னா எனக்கும் சரின்னுட்டார்.. நீங்க தான் சொல்லணும்..”

    “அதுக்கென்ன சரி.. என்னது இது..”

    அழகாய் எவர்சில்வர் தட்டினில் பணக்கட்டுகள் கூடவே வெற்றிலை பாக்கு பழம்..

    இந்தப் பாட்டுக்கான சன்மானம்..

    “என்னங்க நீங்க..” கவிஞர் சிரித்தார்.. ஒரே பாட்டுக்குல்லாம் ரெண்டு தடவை சன்மானமா.. ம்ஹூம் வேண்டாம்..அதுவும் சிலவரிகளுக்கா..ம்ஹூஹூம்..”

    ரெண்டு தடவையா..

    ஆமா.. மொததடவையே வாங்கிட்டேனே அந்தத் தயாரிப்பாளர் கிட்ட.. ஸோ.. நீங்க பாட்டின் வரிகளை உபயோகப் படுத்திக்குங்க படத்துல..அப்புறம் கண்ணதாசன் தம்பி பேரையே போட்டுக்கிடுங்க..பணம் நீங்களே வச்சுக்குங்க..

    வந்தவர்கள் அதிர்ந்து பின் ஏதும் பேசாமல் வெளியேறினர்.

    அந்தப் பாடல் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற”பாட்டும் நானே பாவமும் நானே”

    //எந்த அளவுக்கு இந்தச் சம்பவம் உண்மை எனத் தெரியாது.. வலையிலும், நண்பர்களிடமும் கேட்டு அவர்கள் உண்மை என்று சொன்னதினால் எழுதியிருக்கிறேன்.. முழுப் பாடலையும் அவர் தான் எழுதினார் என்று சொல்கிறார்கள்..யோசித்துப்பார்த்தால் கண்ணதாசனின் வரிகளும் கலந்திருப்பதாக எனக்குப் படுகிறது...// அப்புறம் எழுதிய சம்பவங்களின் வர்ணனை எல்லாம் என் கற்பனை//

    இதே சம்பவத்தை வைத்து சமீபத்தில் குமுதம் இதழில் சிறுகதை ஒன்றைச் சிறப்பாக எழுதியிருந்தார் கவிஞர் வைரமுத்து.. மார்க்கம் என்ற தலைப்பில்.. அதில் வரும் பாடலாசிரியரின் பெயர் கவி.அப்துல்லா..

    *
    டீக்கடையில் டீ அருந்திய இளைஞனின் மனதைத் திருந்த வைத்த பாடல் அன்னையின் ஆணை படத்தில் வரும்

    பத்துமாதம் சுமந்திருந்து பெற்றாள்
    பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
    வித்தகனாய் கல்விபெற வைத்தாள்
    மேதினியில் நாம் வாழச் செய்தாள்!

    அன்னையைப் போலொரு தெய்வமில்லை - அவள்
    அடிதொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை
    துன்பமும் தொல்லையும் ஏற்றுக்கொண்டே நம்மை
    சுகம்பெற வைத்திடும் கருணை வெள்ளம்!

    நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு
    நாழிகை நம்பசி பொறுக்கமாட்டாள்
    மேலெல்லாம் இளைத்திடப் பாடுபட்டே
    மேன்மையாய் நாம் வாழச் செய்திடுவாள்!

    வெகு எளிய வரிகள்..பெற்றெடுத்த அன்னையைப் பற்றி வெகு சிறப்பாகப் போற்றும் வரிகள் எளிதில் மறக்கவொண்ணாத வரிகள்..எனில் முழுதாய்க் கொடுத்திருக்கிறேன்..

    கவி.கா.மு.ஷெரீஃபின் மற்ற பாடல்களும் எளிமை எளிமை தான்..அவரைப் போலவே..

    சில பிரபலமான பாடல்கள்...இதைப் பார்த்தாலே தெரியும்..எவ்வளவு எளிய வரிகள் கொண்டவை என்று..

    சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

    , வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,

    பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

    நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்

    ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே

    ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?

    அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,

    பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா

    உலவும் தென்றல் காற்றினிலே

    அதுவும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..

    இன்றும் எவ்வளவு பொருந்துகிறது..,
    *

    “கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்” – இது கவி. கா.மு.ஷெரீப் சொன்ன முத்து.

    எந்த நிலையிலும் யாரிடமும் போய் நிற்காதவர் கவிஞர்..வாழ்க்கையின் சவால்களை அதன் வழியிலேயே ஏற்றுக் கொண்டவர்..சிறந்து வாழ்ந்து அழகிய பல நூல்கள் படைத்து குணச்செம்மலாய் இருந்து மறைந்தவர்.கவி.கா.மு.ஷெரீஃப்.

    *

    என்ன பாடல் போடலாம்..

    பெண்ணைப் பார்ப்பது மையல் கொள்வது எக்காலத்திலும் இருப்பது தான்..அது எல்லாருக்கும் புரியும் வண்ணம்பாடலில் கொண்டு வரவேண்டும்..

    இந்தப்பாடலைக் கேட்டாலே தெரியும்..

    தூக்கம் கண்ணைக் சொக்கக் கண்டேன்
    தூங்கும் போது கனவு கண்டேன்..
    கனவிலேயும் அந்தப் பெண்ணே
    கண்ணெதிரே நிற்கக் கண்டேன்

    வானில் முழு மதியைக் கண்டேன்
    வனத்தினிலே பெண்ணைக் கண்டேன்..

    (யார் நடிகர் நடிகையர் தெரியவில்லை/ க. நா. கோச்சுக்காதீங்க..)

    வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்,



    *
    அடுத்ததாக வரப்போகும் கவிஞர் பிறைசூடனுக்கு என்னாயிற்று..

    இளையராஜா பாட்டிற்குப் பாட்டெழுத வேண்டும். மெட்டெழுதுவதற்குக் காஸெட் ஒரு நாள் முன்னமே வந்தாயிற்று.. ஆனாலும் ரெகார்டிங்கிற்காக டாக்ஸியில் கிளம்பி பாதி தூரம் போகும் வரை அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை..அப்புறம் என்ன செய்தார்..

    அடுத்த எபிசோட்ல சொல்றேனே..

    அப்புறம் வாரேன்
    Last edited by chinnakkannan; 8th April 2015 at 11:14 AM.

  11. Likes kalnayak, Gopal.s, rajeshkrv liked this post
  12. #3289
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
    ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!
    அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை! கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசை என்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!
    மக்கள் திலகத்தை வைத்து அதிகமான திரைப்படங்களைத் தயாரித்த மாபெரும் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத் தேவர் ஆவார். அத்தனைப் படங்களிலும் அற்புத இசையமைப்பு கே.வி.மகாதேவன் அவர்கள். பாடல்கள் அனைத்தும் கவியரசு கண்ணதாசன் அவர்களே!!
    தேவர் படங்களென்றால் விறுவிறுப்பும், சண்டைக் காட்சிகளும் விலங்குகளைச் சாகசம் செய்ய வைத்த வித்தியாசமான படைப்பாகவும் ஒருபுறமிருக்க, தேனான இசையில் நம்மை மயக்கும் தெள்ளுத் தமிழ்ப்பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இவ்வரிசையில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்கள் - இன்றும் சாகாவரம் பெற்றவையாக மக்கள் மனதில் உலா வந்து கொண்டிருக்கின்றன. திரைக்கதையின் ஓட்டத்தில் தொய்வின்றி இருக்க தேவரின் பார்முலா ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளியிலும் சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் இடம் பெற வேண்டுமென்பதாகும்.
    தாய்க்குப் பின் தாரம் எனத் தொடங்கி.. த வரிசையில்.. அதுவும் மக்கள் திலகம் கதாநாயகனாக.. தர்மம் தலைகாக்கும், தாயைக் காத்த தனயன், தாய் சொல்லைத் தட்டாதே.. தனிப்பிறவி என பட்டியல் நீளும்!
    இவ்வரிசையில் அமைந்த தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் விளைந்த பாடலொன்று காதல் சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் நடத்தியதுபோல விளங்குகிறது!
    ஒரு பெண்ணை வர்ணித்துப் பாடல் புனைவது.. மரபாக நடந்து வருகின்ற ஒன்றுதான்.. அதிலே கண்ணதாசன் பாணி இதுவோ..
    கட்டித் தங்கம் வெட்டியெடுத்து
    கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
    காதல் என்னும் சாறு பிழிந்து
    தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
    தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!... (கட்டி)
    தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
    சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் - தான்
    கிட்டக் கிட்ட வந்தது கண்டு
    எட்டி எட்டிச் சென்றது வண்டு!... (கட்டி)
    தங்கரதம் போல வருகிறாள்! - அல்லித்
    தண்டுகள் போலே வளைகிறாள்!
    குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
    கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!... (கட்டி)
    காலையில் மலரும் தாமரைப் பூ! - அந்திக்
    கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
    இரவில் மலரும் அல்லிப்பூ! - அவள்
    என்றும் மணக்கும் முல்லைப் பூ!... (கட்டி)
    காதல் ரசம் பொழியும் பாடலாகவே எல்லோரும் நோக்கும் இந்த வரிக்கு (பம்மல்) கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத் தலைவி பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமனாதன் அவர்கள் தந்த விளக்கமிதோ..
    குங்குமப் பூ போல் சிரிக்கிறாள்..
    ஒரு பெண் குங்குமப்பூ போல் சிரிக்க வேண்டும். குங்குமப்பூ எப்படியிருக்கும்? இதழ் எப்படியிருக்கும் என்பதை நோக்கும்போது .. மிகச் சிறிய கோடு விழுந்ததுபோல். தெரியுமாம்.. அதுதான் அந்தப்பூவின் இதழ் திறப்பு.. பெண்கள் அப்படித்தான் மெல்லிய புன்னகை புரிந்தால்தான் அழகு! (எனவேதான் பொம்பளை சிரிச்சா போச்சு என்கிற பழமொழி கூட வந்துள்ளது).



  13. Likes kalnayak, rajeshkrv liked this post
  14. #3290
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
    ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!
    அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை! கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசை என்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!// ஹாய் யுகேஷ்.. இந்த வரிகள் நீங்கள் எழுதியவையா.. நீங்கள் எழுதியதாக இருந்தால்... வாவ்...வெரி நைஸ்ங்கோவ்.. இல்லை வலையில் இருந்து எடுத்திருந்தீர்கள் என்றால் - மிக்க நன்றி யுகேஷ்

    கட்டித் தங்கம் எனக்கும் பிடிக்கும்.. கொஞ்சம் யோசித்தால்..

    தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
    சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் - தான்
    கிட்டக் கிட்ட வந்தது கண்டு
    எட்டி எட்டிச் சென்றது வண்டு!. இந்த வரி புரியலை.. ஒரு வேளை பாடல் காட்சியை மறுபடி பார்த்தால் புரியுமோ என்னவோ..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •