Page 328 of 397 FirstFirst ... 228278318326327328329330338378 ... LastLast
Results 3,271 to 3,280 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3271
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சந்திரன் பாடல் எங்கேயோ படிச்சது:
    எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்காக கவிஞர் வாலி " அவன் ஒரு நிலவு" என்று நாயகனை (மக்கள் திலகம்) குறிப்பிட்டு ஒரு பாடல் எழுதி இருந்தாராம். கவியரசர் அதைக் கேள்விப்பட்டு, வாலியை ஒரு முறை சந்தித்த போது "பெண்களைத்தானே நிலவு" என்று சொல்வார்கள். நீங்கள் ஆண் மகனை நிலவு என்று சொல்லி பாடல் எழுதி இருக்கிறீர்களே என்று கேட்டாராம். அதற்கு வாலி நீங்கள் கூடத்தான் 'குலமகள் ராதை' படத்தில் நாயகனை சந்திரன் என்று விளித்து பாடல் எழுதி இருக்கிறீர்கள் என்றாராம்.கண்ணதாசன் சிரித்து அதற்கு காரணம் அந்த திரைப் படத்தில் நாயகனின் பாத்திரப் பெயர்சந்திரன். அதனால் அப்படி எழுதினேன் என்றாராம். (சந்திரன் பாடல்கள் 51 மற்றும் 56). அதற்கு வாலி "இங்கே நாயகனின் பெயரே சந்திரன்தான்" என்று சொல்லவில்லையாம். வேறு என்ன சொன்னார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

    அப்புறம் அந்த நிலவுப் பாடல் 'எங்க வீட்டுப் பிள்ளை'யில் இடம் பெறவில்லை. அந்த பாட்டு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3272
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப் பாடல்களைப் பற்றி படிக்கும்போது, சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கோள்களின் நிலவுகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!!!

    எல்லோருக்கும் தெரியும் சூரியனை மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் சுற்றி வருகின்றன. முதல் இரண்டு கோள்களான புதனுக்கும், வெள்ளிக்கும் நிலாக்கள் இல்லை. பூமியை சுற்றிவரும் நிலாவைத்தான் நாம் பார்க்கிறோம். பாடல்களில் எல்லா கவிஞர்களும் பாடுவது இந்த நிலாவை வைத்துத்தான்.* இந்த நிலாவின் பெயர்தான் சந்திரன்(!!!) ஆங்கிலத்தில் Luna என்பார்கள்.

    செவ்வாய் கிரகத்திற்கு 2 நிலாக்கள் உள்ளன. அவைகளின் பெயர்கள்: Deimos மற்றும் Phobos. செவ்வாயில் குடியேறுபவர்கள் இந்த இரண்டு நிலாக்களையும் கண்ணால் கண்டு கழிக்கலாம். ஒரு நிலாவை ஆணாகவும், மற்றொன்றை பெண்ணாகவும் கருதி கவி பாடலாம். எந்த பிரச்சினையும் வராது. வந்தால் அடுத்த கிரகங்களில் குடியேறலாம். காரணம்? தொடர்ந்து படியுங்கள்.

    வியாழன் சூரிய மண்டலத்தின் பெரிய கிரகம். அதற்கு 67 நிலாக்கள் உள்ளன. அதன் பெயர்கள் எல்லாவற்றையும் இங்கே கொடுத்தால் நீங்கள் படிக்க மாட்டீர்கள். இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன். அந்த பெயர்களை உங்களில் யாராவது கேள்விப் பட்டிருக்கலாம்: Ganymede, callisto, Io, Europa, Himalia, Elara, Metis, Hegomone, Arche, Kallichore மற்றும் S2003/J16 இருந்து S2010/J2 வரை.

    சனி சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கிரகம். அதற்கு 62 நிலாக்கள் உள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள்: Titan, Rhea, Lapetus, Dione, Tethys, Enceladus, Mimas, Hiperion, Phoebe, Janus, Pandora, Helene, Albiorix, Atlas, Pan, Telesto, Calypso, YMir.

    யுரேனஸ்க்கு 27 நிலாக்கள் உள்ளன. அவைகளில் சில: Titania, Oberon, Umbriel, Ariel, Miranda, Sicorax, Puck, Portia, Juliet, Caliban, Belinda, Cressida, Rosalind

    நெப்டியூன் 14 நிலாக்களை கொண்டுள்ள கிரகம். Triton, Proteus, Nereid, Larissa, Galatea, Naiad, Neso போன்றவைகள் அவைகளில் சில.

    பொய் கிரகமான ப்ளூட்டோவிற்கும் Hydra, Nyx, Charon, Kerboros, Styx என்று 5 நிலாக்கள் உள்ளன.

    மனிதன் இந்த கிரகங்களில் குடியேறினால் நிலவுகளுக்கு பஞ்சமே இருக்காது. அதனால் எழுதும் கவிதைகளுக்கும் வெரைட்டி கிடைக்கும். உற்சாகமாக இருக்கும்.

    மற்றும் சில பொய் கிரகங்களுக்கு 4 நிலாக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதையும் சேர்த்தால் 182 நிலாக்கள் உள்ளன. அறிவியல் ஆய்வாளர்கள் இன்னும் பல நிலவுகளை கண்டு பிடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றையும் இங்கிருந்தே பார்க்கும்படி செய்திருந்தால் கவிஞர்களுக்கு நிலாப் பஞ்சமே வந்திருக்காது. பார்க்கலாம்.
    Last edited by kalnayak; 6th April 2015 at 06:30 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  4. Thanks Gopal.s thanked for this post
    Likes Gopal.s liked this post
  5. #3273
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சரிதான் கலை. அடாணாவில் ஒன்றிரண்டு பாபநாசன் சிவன் பாட்டுக்கள் நாற்பதுகளிலும் உண்டு.
    54 இல் ரத்த கண்ணீரில் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசைதான்.(பேர் மட்டும் c .s .ஜெயராமன் என விஸ்வநாதன் பேட்டியொன்றில் அறிந்தது
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #3274
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அப்படியா?... படத்தின் டைட்டிலில் ‘சிதம்பரம் ஜெயராமன்’ என்று போடுவார்கள். அதனால்தான் கூறினேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. #3275
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    நிலாப் பாடல்களைப் பற்றி படிக்கும்போது, சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கோள்களின் நிலவுகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!!!

    எல்லோருக்கும் தெரியும் சூரியனை மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் சுற்றி வருகின்றன. முதல் இரண்டு கோள்களான புதனுக்கும், வெள்ளிக்கும் நிலாக்கள் இல்லை. பூமியை சுற்றிவரும் நிலாவைத்தான் நாம் பார்க்கிறோம். பாடல்களில் எல்லா கவிஞர்களும் பாடுவது இந்த நிலாவை வைத்துத்தான்.* இந்த நிலாவின் பெயர்தான் சந்திரன்(!!!) ஆங்கிலத்தில் Luna என்பார்கள்.

    செவ்வாய் கிரகத்திற்கு 2 நிலாக்கள் உள்ளன. அவைகளின் பெயர்கள்: Deimos மற்றும் Phobos. செவ்வாயில் குடியேறுபவர்கள் இந்த இரண்டு நிலாக்களையும் கண்ணால் கண்டு கழிக்கலாம். ஒரு நிலாவை ஆணாகவும், மற்றொன்றை பெண்ணாகவும் கருதி கவி பாடலாம். எந்த பிரச்சினையும் வராது. வந்தால் அடுத்த கிரகங்களில் குடியேறலாம். காரணம்? தொடர்ந்து படியுங்கள்.

    வியாழன் சூரிய மண்டலத்தின் பெரிய கிரகம். அதற்கு 67 நிலாக்கள் உள்ளன. அதன் பெயர்கள் எல்லாவற்றையும் இங்கே கொடுத்தால் நீங்கள் படிக்க மாட்டீர்கள். இருந்தாலும் சிலவற்றை சொல்கிறேன். அந்த பெயர்களை உங்களில் யாராவது கேள்விப் பட்டிருக்கலாம்: Ganymede, callisto, Io, Europa, Himalia, Elara, Metis, Hegomone, Arche, Kallichore மற்றும் S2003/J16 இருந்து S2010/J2 வரை.

    சனி சூரிய மண்டலத்தின் இரண்டாவது பெரிய கிரகம். அதற்கு 62 நிலாக்கள் உள்ளன. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள்: Titan, Rhea, Lapetus, Dione, Tethys, Enceladus, Mimas, Hiperion, Phoebe, Janus, Pandora, Helene, Albiorix, Atlas, Pan, Telesto, Calypso, YMir.

    யுரேனஸ்க்கு 27 நிலாக்கள் உள்ளன. அவைகளில் சில: Titania, Oberon, Umbriel, Ariel, Miranda, Sicorax, Puck, Portia, Juliet, Caliban, Belinda, Cressida, Rosalind

    நெப்டியூன் 14 நிலாக்களை கொண்டுள்ள கிரகம். Triton, Proteus, Nereid, Larissa, Galatea, Naiad, Neso போன்றவைகள் அவைகளில் சில.

    பொய் கிரகமான ப்ளூட்டோவிற்கும் Hydra, Nyx, Charon, Kerboros, Styx என்று 5 நிலாக்கள் உள்ளன.

    மனிதன் இந்த கிரகங்களில் குடியேறினால் நிலவுகளுக்கு பஞ்சமே இருக்காது. அதனால் எழுதும் கவிதைகளுக்கும் வெரைட்டி கிடைக்கும். உற்சாகமாக இருக்கும்.

    மற்றும் சில பொய் கிரகங்களுக்கு 4 நிலாக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதையும் சேர்த்தால் 182 நிலாக்கள் உள்ளன. அறிவியல் ஆய்வாளர்கள் இன்னும் பல நிலவுகளை கண்டு பிடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றையும் இங்கிருந்தே பார்க்கும்படி செய்திருந்தால் கவிஞர்களுக்கு நிலாப் பஞ்சமே வந்திருக்காது. பார்க்கலாம்.
    கல்நாயக்,

    நீங்கள் மறைக்க முயற்சித்தாலும் உங்களை அறியாமல் திறமை வெளிப்பட்டு விடுகிறது என்று கூறினேன். நான் கூறியதை நிரூபித்ததற்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  8. #3276
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    விஸ்வநாதன் தொடருக்கு ,ஒரு விஸ்வநாதன் ரசிகர் என்ற வகையில் கலை வேந்தன், கார்த்திக் இவர்களின் அபிப்ராயம் எதிர்கொண்டுள்ளேன். முரளி,வாசு ,சி.க ,கல்நாயக் ஏற்கெனெவே சொல்லியாயிற்று.

    உங்கள் புரிதல், எழுத பட்ட முறை ஆகியவற்றை பற்றி சொன்னால் தொடர்வேன். எனக்கு சண்டைகளை விட,இது போல எழுத்துக்களே மனநிறைவை அளிக்கின்றன.ராகவேந்தர் சொல்ல மாட்டார்.(அவர்தான் ரவிகிரன் ரசிகராகி like போட்டு கொண்டுள்ளார். குலைப்பதைஎல்லாம் அவர் கண்டு கொள்வாரா என்ன)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #3277
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    எனக்கு சண்டைகளை விட,இது போல எழுத்துக்களே மனநிறைவை அளிக்கின்றன.
    ஆஹா.... இதைத்தான் கோபால் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். உண்மையை சொல்கிறேன். இதை மட்டுமே நீங்கள் செய்து கொண்டிருந்தால் உங்களை அசைக்க முடியாது. கருத்துக்கள் ஒருவருக்கொருவர் வேறுபடத்தான் செய்யும். கோபம் வரும்போது உடனுக்குடன் பதில் சொல்வதை தவிர்த்து, நேரம் எடுத்துக் கொண்டு மறுநாள் சொல்லுங்கள். அப்போது, உங்கள் நகைச்சுவையே உங்களுக்கு கைகொடுக்கும். திரு.ரவி சார் கூறியபடி, ரசனை மற்றும் கருத்துக்களின் வேறுபாட்டுக்காக நாம் பிரிந்து நிற்காமல் கைகோர்த்து செயல்பட்டால் எவ்வளவோ உன்னதங்களை படைக்க முடியும். நீங்கள் கூறியிருப்பது போல, மனநிறைவை அளிக்கும் எழுத்துக்களை மட்டும் நீங்கள் எழுதினால், பாராட்டுக்கள் குவியும். உங்கள் உழைப்புக்கும் திறமைக்கும் கிடைக்கும் நியாயமான அங்கீகாரத்தை பார்த்து எல்லாரும் மகிழ்வோம்.

    மெல்லிசை மன்னரின் இசையில் நான் கவனிக்காத, (கவனிக்க தெரியாத) புதிய பரிமாணங்களை கொடுத்துள்ளீர்கள். இந்த அளவு அவரது இசையை நுணுகி ஆராய்ந்து எழுத எவ்வளவு திறமை வேண்டும்? டூயட்டை முகாரி ராகத்தில் போடுவது என்பது எவ்வளவு வித்தியாசமான சிந்தனை? அதை கவனித்து சொல்ல எவ்வளவு ரசனை வேண்டும்? அற்புதம். தொடருங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் மன நிறைவைத் தாருங்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Thanks Gopal.s thanked for this post
    Likes kalnayak, rajeshkrv liked this post
  11. #3278
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அஹோ வாரும் கல் நாயக்
    ம்ம் இவ்ளோ நிலாக்களா இருக்கு.. எனக்குத் தெரியாதே.. ஆமாம் மத்த கிரகங்கள்ள இருக்கிற நிலாக்கள் எல்லாம் ஒட்டுக்க வருமா அதாவது ராத்திரி ஒண்ணா வருமா..(அப்படி வந்தா அது ஸ்டார்ஸ் மாதிரின்னா இருக்குமில்லியா)

    அப்புறம் நிலாவ நிலவுன்னு சொல்றது தப்பாக்கும் (என்னோட குருநாதர்கள் சொல்லியிருக்காங்க) புரியலை.. நிலா வை மதி, சந்திரன்னு சொல்றது தான் கரெக்ட்டாம்.. நிலவு ந்னா அந்த மதியிலிருந்து வெளிப்படுகிற கிரணங்கள்..என அர்த்தமாம்..

    அப்புறமேல்ட்டு எனக்கு கல்லூரியில் அஸ்ட்ரானமி ஆன்சிலரியா இருந்தது.. ம்ம் நிலா கிரகம்னு சொல்லாம அதுல ஏதோகணக்கெல்லாம் போட்டுப் பார்த்த நினைவு..

    ம்ம் தேடிவந்த திங்கள் திங்களில் செவ்வாய் செவ்வாயில் வெள்ளி சேர்த்தெடுத்தேன் அள்ளி..சேர்த்தணைத்தேன் கையில் அள்ளின்னு பாட் நினைவுக்கு வருது..

    நன்றிங்க்ணா.. நல்ல இன்ஃபர்மேட்டிவ் போஸ்ட் கொடுத்ததுக்கு..ஒங்களுக்காக ஒரு நிலாப் பாடல்!


  12. Likes kalnayak liked this post
  13. #3279
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எங்கே எங்கே சந்திரபாபு...




    கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
    காதிலே கேட்டதும் கதைபோல் ஆனது..


    //தொடருங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் மன நிறைவைத் தாருங்கள்// ம்ம்ம்ம்...எல்லாம் அந்த ஈஸ்வரனின் மகிமை..



  14. Likes kalnayak liked this post
  15. #3280
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    கோபால்,
    மேலொட்ட படித்த வரையில் உங்கள் எம்.எஸ்.வி ஆய்வு அருமை அற்புதம்.
    இன்னும் அதை ஆழ்ந்து படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன் விரைவில்..

    கல் நாயக் நிலா பாடலக்ளின் அணிவகுப்பு அற்புதம். உங்கள் பட்டியலில் இடம்பெறாத பாடல்களை தர முயற்ச்சிக்கிறேன்

    சி.க உங்கள் நகைச்சுவை கலந்த எழுத்துக்கு மன்றத்தில் எல்லோரும் அடிமை என்று சொல்வதில் எவ்வளவு பெருமை

  16. Thanks Gopal.s, kalnayak, chinnakkannan thanked for this post
    Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •