-
30th November 2014, 03:29 PM
#1821
Senior Member
Senior Hubber
ம்ம்.. கடலோரம்னு பாட் போட்டாச்சா..அங்கிட்டிருந்து எஸ்வி. சாரும் கலைவேந்தன்சாரும் வந்துடுவாங்க..( ஹி.ஹி. நானும் தான்)
மடந்தை அழகினை மாண்புறக் கூட்டும்
கடலோரம் வீசிய காற்று..
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th November 2014 03:29 PM
# ADS
Circuit advertisement
-
30th November 2014, 03:35 PM
#1822
Junior Member
Platinum Hubber
[QUOTE=chinnakkannan;1186666]ம்ம்.. கடலோரம்னு பாட் போட்டாச்சா..அங்கிட்டிருந்து எஸ்வி. சாரும் கலைவேந்தன்சாரும் வந்துடுவாங்க..( ஹி.ஹி. நானும் தான்)
வந்துட்டேன் சி.க .சார்
என்ன ஒரு ரம்மியமான பாடல் . கடலோரம் ... தங்க தாரகை மஞ்சுளா ... புன்னகை மன்னன் எம்ஜிஆர்
பாடகர் திலகம் .. வாலிப வாலி ...மெல்லிசை மன்னர் ...கூட்டணி மனதை மயக்கும் மதுர பாடல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th November 2014, 03:38 PM
#1823
Senior Member
Diamond Hubber
//ஏப்ரல் 14 நடிகர்திலகம் 'கௌரவ வேடம்' என்று டைட்டில் கார்ட் போட்ட ஆனால் படம் முழுவதும் வரும் 'வாழ்க்கை அலைகள் ' நெல்லை சென்ட்ரல் ரிலீஸ். பாலா சுசீலா இணைந்த குரல்களில் 'உன் கண்களிலோ கனிகள் ' பாடல் நெல்லை வானொலி ஞாயிறு இரவு நேயர் விருப்பம் 8-8.30 நிகழ்ச்சியில் படு பிரபலம் //.
கிருஷ்ணா!
நீங்கள் எழுதியிருந்த நடிகர் திலகம் நடித்த 'வாழக்கை அலைகள்' படத்தின் உங்களுக்கும், எனக்கும் மிக விருப்பமான, நெருக்கமான பாடல் இதோ. என்ஜாய் செய்யுங்கள்.
மிக அரிய தூள் பாடல்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்
உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
உன் சிரிப்பினிலோ மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
வளைந்து போனேன்
மகிழ்ந்து போனேன்
வளைந்து போனேன்
மகிழ்ந்து போனேன்
என் தோள்களிலே என் விழிகள்
காணும் ஜாலங்கள்
நான் சொல்வதென்ன வடிவழகே
காதல் கோலங்கள்
நீ துடிதுடித்து தழுவுகின்ற
சொந்தம் கோடி
நீ துடிதுடித்து தழுவுகின்ற
சொந்தம் கோடி
நாம் புதியதோர் பருவங்களில் காதல் ஜோடி
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்
வந்து வந்து வந்து வந்து (சுசீலா அமர்க்களம்)
வந்து என்ன செய்தியோ
நல்ல வயது வந்ததே
தாகம் தாபம் தாகம் தாபம்
தாபமானதென்ன சொல்லடி
ஆசையென்ற தாகம் தான்
ஓ... முத்த முத்திரை வீசவே
எல்லை இங்கு ஏனடி
எல்லை இங்கு ஏனடி
ஆ... ஆ
மொட்டு விரிந்த பூவெல்லாம்
மாறிடும் அழகுமணி
வெட்கமென இக்கணம்
தொட்டுப் படர்ந்த கண்மணி
திருமஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது
திருமஞ்சள் நூலால்
இனி வளைக்கும் காலம் வந்தது
மனம் இணைந்த இக்கணம்
மண நாளாய் மாறுது
மனம் இணைந்த இக்கணம்
மண நாளாய் மாறுது
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன்
உருகிப் போனேன்
உன் சிரிப்பினிலே மணிகள்
உன் கருங்குழலோ வலைகள்
வளைந்து போனேன்
மகிழ்ந்து போனேன்
Last edited by vasudevan31355; 30th November 2014 at 03:50 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
30th November 2014, 03:52 PM
#1824
Senior Member
Senior Hubber
//உன் கைகளிலோ தளிர்கள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன் // வாலி? ஆனால் இப்பாடல் கேட்டிருக்கிறேன்..நைஸ்.. உருகிப்ப்போனேன் உருகிப்போனேன் என உருகுதல் அழகு.. நன்னி வாசுண்ணாவ்
-
30th November 2014, 05:01 PM
#1825
Originally Posted by
chinnakkannan
//உன் கைகளிலோ தளிர்கள்
உன் கண்களிலோ கனிகள்
உன் கைகளிலோ தளிர்கள்
உருகிப் போனேன் // வாலி? ஆனால் இப்பாடல் கேட்டிருக்கிறேன்..நைஸ்.. உருகிப்ப்போனேன் உருகிப்போனேன் என உருகுதல் அழகு.. நன்னி வாசுண்ணாவ்
வாசு
உருகி போனேன் உறங்கி போனேன் கிறங்கி போனேன் மயங்கி போனேன்
என்ன பாடல் பாலாவின் ரம்மியமான குரல் உடன் கலக்கும் சுசீலா அம்மா
இதன் ஒரிஜினல் தெலுகு பாடல் இருந்தால் அதுவும் கேட்டு பார்க்க வேண்டும் .
முத்த முத்திரை வீசடி
எல்லை இங்கு ஏதடி
எல்லை இங்கு ஏதடி
இந்த வரிகளை பாலா பாடி முடிக்கவும் சுசீலாவின் ஹம்மிங் மார்வலஸ் .பாடல் முழுவதும் ஒரு flute இசை தொடர்ந்து கொண்டே இருக்கும் .சக்கரவர்த்தியின் நல்ல மெலடி
நன்றி வாசு .
நண்பர் சி கே நீங்களும் இந்த பாடலை ரசித்து உள்ளீர்கள். இந்த பாடல் krishnamaraaju வாணிஸ்ரீ ஜோடியில் . பாடல் எழுதியது வாலியா ,கண்ணதாசனா என்று நினைவில் இல்லை
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
30th November 2014, 05:45 PM
#1826
Senior Member
Senior Hubber
உருகுதல் என்றால் என்ன.. மெல்ட்டிங்க் பாய்ண்ட்.. உருக்குதல் மெல்ட்டிங்..அப்படியே உருகிட்டேம்ப்பா அவளோட கண்ணோரம் கண்மை கொஞ்சமாய்க் கரைஞ்சு அவள் பார்த்த பார்வையிலே - எனச் சொல்லும் காதல்ர்கள் உண்டாக்கும்..
ம்ம்.. இந்த உருகும் தன்மை ஆடவர்களுக்குத் தான் நிறைய உண்டோ.. ஸோ என்ன சொல்ல வர்றேன்னா..அதான் உங்களுக்கே தெரியுமே
முதலில் வருவது அலைபாயுதே கண்ணா ஆணும் பெண்ணும் பாடும் பாடல்..
நிலை பெயராது சிலை போலவே நின்று நேரமாவதறியாமலே
வினோதமான முரளீதரா..அலைபாயுதே கண்ணா..
//கதறி மனம் உருகி நான் அழைக்கவோ//
அலைபாயுதே படத்தில் வந்தாலும் முன்னால் வந்த புதிய சங்கமம் என்ற படத்தில் வெகு அழகாக இருக்கும் கேட்க.. பிரபு சுஹாசினி சாருஹாசன்..யாராவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால் அவங்களுக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் பார்க்கும் போது வழங்கப் படும்!
**
மனிதனென்பவன் தெய்வமாகலாம்ல பிபிஎஸ் இப்படிச் சொல்றார்..
//உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம் //
*
பாதகாணிக்கைல செக்கச் சிவந்த இதழோ இதழோ பவழம் பவழம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூ மலரும்னு ஜெமினி பிபிஎஸ் வாய்ஸ்ல ஜொள்ளு விடறார்..எஸ்.ஜே என்னடான்னா இப்படி உருகறாங்க..
//அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு //
களத்தூர் கண்ணம்மால ஏ.எம்.ராஜா.. ஜெமினிக்காக...
//அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே //
*
ம்க்கும்.. நம்ம யூத்க்கு ப் பிடிச்ச பாட்டு..அந்தக்கால மூக்கோட அந்தக்கால ஸ்ரீ தேவி..ப்ளஸ் யங்க் கமல்ஹாசன்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி ..அதுல..
//வெள்ளிப்பனி உருகி மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன் //
இப்படி வருது..
**
நிறைய உருகற பாட்டு இருக்கு..புதுசுலயும்..உருகுதே மருகுதே ஒரேபார்வையாலே, மன்னிப்பாயாவிலயும் உருகுது வரும்..
சரி சரி..வந்ததுக்கு ஸ்ரீ தேவி பாட்..
ராகம் ஆபேரின்னு போட்டிருக்கு..சரியான்னு க்ருஷ்ணா ஜி தான் சொல்லணும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th November 2014, 06:15 PM
#1827
Senior Member
Diamond Hubber
நன்றி கிருஷ்ணா சார், சி,க ,சார்
கிருஷ்ணா! இன்னொரு பாடல். 'வாழ்க்கை அலைகள்' தெலுங்கு 'ஜீவன தீராலு' படத்திலிருந்து 'கெரட்டானிக்கி ஆராட்டம்' என்ற அற்புதமான பாடல்.
நம்ம 'டைகர்' உர்ர்ர் ... கிருஷணம்ராஜ் மற்றும் ஜெயசுதா பங்கு பெறும் பாடல். சக்கரவர்த்தி மியூசிக். சுசீலா அம்மாவின் குரல் அப்படியே கொல்லிமலைத் தேனாய் இனிக்கிறது. உடன் நம்ம பாலா.
மிக மிக அழகான அற்புதமான பாடல். சி.நாராயண ரெட்டியின் பாடலுக்கு இசை சக்கரவர்த்தி.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th November 2014, 06:19 PM
#1828
Senior Member
Diamond Hubber
//அலைபாயுதே படத்தில் வந்தாலும் முன்னால் வந்த புதிய சங்கமம் என்ற படத்தில் வெகு அழகாக இருக்கும் கேட்க.. பிரபு சுஹாசினி சாருஹாசன்..யாராவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால் அவங்களுக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் பார்க்கும் போது வழங்கப் படும்!//
சி.க சார்,
அவ்வளவுதானா? இதெல்லாம் ரொம்ப அநியாயங்காணும். அவ்வளவு லேசுல கிடைக்கிற பாடலா? என்ன விளையாட்டா இருக்கா? சாக்லேட் 5 ரூவாதான்.
Last edited by vasudevan31355; 30th November 2014 at 06:40 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th November 2014, 06:29 PM
#1829
Senior Member
Diamond Hubber
மாலை மதுரம்.
'வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல்
வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா'
எமன் ராஜம் ஜெமினியையும் விட்டு வைக்கவில்லை.
இப்பாடலில் ஜெமினியின் மானரிஸங்கள் சிரிப்பை சுலபமாய் வரவழைக்கின்றன.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th November 2014, 06:35 PM
#1830
Senior Member
Diamond Hubber
சி.க சார்!
என்ன ஒரு உருகல்! அதற்கேற்ற பாடல்கள் உங்கள் திறமைக்கு ஒரு உரை கல்.
முக்கியமான இதை விட்டு விட்டீர்களே!
'நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே'(சதாரம்)
இன்னொன்னு சூப்பர். 'முருகா என்றதும் உருகாதா மனம்'.
நீங்கள் கன்னியைப் பார்த்து உருகினால் நான் கந்தனைப் பார்த்து உருகுவேனாக்கும். ம்க்கும்.
Last edited by vasudevan31355; 30th November 2014 at 06:40 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks