-
19th May 2015, 01:22 PM
#3841
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 88
செந்தாழம்பூவில் -----
பள்ளம் சிலர் உள்ளம் - என ஏன் படைத்தான் ஆண்டவன் - பட்டம் தர
தேடுகின்றேன் - எங்கே அந்த நாயகன் ??
மலையின் காட்சி - இறைவன் ஆட்சி -------
மறவேன் மறவேன் - அற்புத காட்சி -
மறையும் சூரியன் நாளை என்று சொல்லும் அழகு - நாளை என்று ஒன்று உனக்கு உண்டு - உன் மீது நம்பிக்கை வை என்று சொல்லி விடை பிரியும் அழகு - பாடலையும் - பாட்டின் வர்ணனைகளையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் - கொஞ்சம் கூட உணர்ச்சியும் , முகத்தில் கொஞ்சம் கூட ரசிப்புத்தன்மை இல்லாமலும் நடிக்க வேண்டுமென்றால் சரத் பாபுவைத்தான் அழைக்க வேண்டும் . பாடலை மட்டுமே ரசிப்போம் ...
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th May 2015 01:22 PM
# ADS
Circuit advertisement
-
19th May 2015, 01:35 PM
#3842
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 89
இந்த மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா.......
இந்த பாடலையோ , பாடலின் வரிகளையோ
எவ்வளவு பாடல்கள் இருந்தும் என்ன , இனி வந்தும் என்ன - இந்த ஒரு பாடலுக்கு ஈடு இணையாகுமா ?
நேப்பாளத்தில் ஒரு பூகம்பம் வரலாம் - ஏன் இந்த திரியிலும் வாசு மூலம் பாலா என்ற பூகம்பம் மீண்டும் மீண்டும் வரலாம் - எத்தனை பூகம்பங்கள் வந்தாலும் இந்த ஒரு பாடலை அசைக்க முடியாது , அழிக்க முடியாது நம் மனதில் இருந்து !!
பெண்
மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்:
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்:
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா....
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா......வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு........ இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா....
பெண்:
தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்.....உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான........ மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்.......
ஆண்:
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
பெண்
:
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா.....
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா......
பிரித்த கதை சொல்லவா
ஆண்
:
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா.....
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
பெண்:
அன்பே ஆரிராரோ ஆரிராரோ....
ஆரிராராரிரோ....
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ...
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
19th May 2015, 01:47 PM
#3843
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 90
உன் கண்ணில் நீழ் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி -------
என்கண்ணில் பாவை அன்றோ கண்ணமா - என்
உயிர் நின்னதன்றோ !!!
--------
உன்னை கரம் பிடித்தேன் - வாழ்க்கை ஒளிமயமானதடி ----
எப்படிப்பட்ட வார்த்தைகள் - ஒரு நல்ல மனைவி அமைந்துவிட்டால் வாழ்க்கை சுடர் விடும் என்னாளுமே - அவளை மணந்ததினால் , சபையில் புகழும் என்றும் நிலைக்கும் .
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th May 2015, 02:06 PM
#3844
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 91
செவ்வானமே பொன்மேகமே ! -
படம் : நல்லதொரு குடும்பம்
இளைய ராஜா
பாடுபவர்கள் - கல்யாணி மேனன் ; சசிரேகா , டி .ல் மகாராஜன் . S P ஜெயச்சந்திரன்
அம்சவணி ராகம் என்று நினைக்கிறேன் . அருமையான ஒரு பாடல் .
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th May 2015, 02:18 PM
#3845
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 92
எத்தனை அழகு கொட்டி கிடக்கின்றது இந்த பாட்டில் - பாட்டின் நாயகரை விட்டு விடுவோம் - அவர் தான் அழகுக்கு எல்லாம் அழகாயிட்றே !! - இசை ஞானியின் முத்திரை பதித்த பாடல் ( ஆபேரி ராகம் ) வாணிஸ்ரீ நதியுடன் நடித்த கடைசி படம் . எவ்வளவு ரம்மியமான மலை பொழுது - சுற்றிலும் இயற்கையின் அரசாட்சி - அழகு மிகுந்த காதலர்கள் - வேறு என்ன வேண்டும் ?!
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
என்னை பூவைப் போல சூடினாள்
சிந்து நதிக்கரை ஓரம்
.
.
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா
.
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்
.
.
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணைந்து கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணைந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வான வெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா
.
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
19th May 2015, 02:35 PM
#3846
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 93
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவிற்கு பனித்துளிகள் - நீ முகம் கழுவதினால்
இப்படி கற்பனையில் மிதக்கும் ஒரு பாடல் இதோ உங்களுக்காக
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th May 2015, 02:41 PM
#3847
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 94
Relaxing music without words !! Pic on Sunrise and Sunset
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
19th May 2015, 03:03 PM
#3848
Senior Member
Senior Hubber
வாங்க ரவி..சமஸ்க்ருத கானங்களை எல்லாம் அப்புறம் தான் கேட்கணும்.. உ.க. நீ.வ கதிரவனுக்கு ரிலேட் பண்ண உம்மால் மட்டும் தான் முடியும்..சரத்பாபு இப்பவும் அப்படியே தானிருக்கார்..இல்லியோ..சிந்து நதிக்கரையோரம் பிடிக்கும்..ஆனால் செவ்வானமே பொன்மேகமே கொஞ்சம் ரேர் பாட்டு தான் இல்லியோ.. தாங்க்ஸ் ஃபார் த சாங்க்ஸ்.. தொடரட்டும் உம் தொண்டு..
-
19th May 2015, 03:14 PM
#3849
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 95
Beautifully sung marriage procession from the movie: Fiddler On The Roof
From others :
This is a beautiful song because it represents life. Sunrise and Sunset. Sunrise might be the best moment in your life which is usually described as youth while sunset might be associated with old age, death and the end of the good times. In which case, life is portrait so well in such few words. You can even put the song more meaning when you consider that the parents happiness was when their children were small and when they were strong and young but now that their children are getting married... they must say good bye to that happiness but they will welcome the happiness of the new weds. After all, the new weds will experience a life with children of their own and the happiness that brings.
Jerry Bock wrote the original musical score or the play. However, John Williams won the Oscar for the adapted score. This particular segment, though, is purely Bock's composition. The same goes for the rest of the songs on their own. I believe John Williams mainly contributed to the music in-between the main musical numbers, and it won him his first Oscar.
வாழ்க்கை என்பது சூரியன் தோன்றி மறையும் நேரம் தான் - இந்த இரண்டு நிகழ்ச்சிக்குள் நடந்து முடிவது தான் வாழ்க்கை - நாம் குழந்தைகளாக பிறக்கிறோம் - யாரோ இருவர் நமக்கு தந்தை -தாய் என்று அறிமுகம் செய்யப்படுகிறார்கள் - வளர்கிறோம் அவர்கள் அரவணைப்பில் - சூரியன் உச்சிவானில் வருகிறான் - நாம் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறோம் - நமக்கும் திருமணம் நடக்கின்றது - நம் கரங்களை நம் தாய் - தந்தையிடம் இருந்து யாரோ பிரிக்கிறார்கள் - கரங்களை புதிதாக மனைவி என்ற ஒரு புது பெண்ணிடம் ஒப்படைக்கிறார்கள் - அவள் நம்மை அழைத்துச் செல்கிறாள் -- சூரியன் மேற்கு திசையை நோக்கி நகர்கிறான் --- நமக்கு குழந்தைகள் பிறக்கிறார்கள் - இருவரின் துடிப்பினிலே வரும் இளம் பூக்கள் -- வேகமாக வளர்கிறார்கள் - அவர்களின் கரங்களை பற்றிய நம் கரங்கள் வேகமாக விடுவிக்கப்படுகின்றன - ஆமாம் அவர்களுக்கு திருமணமாம் - இனி நம் உதவி தேவை இல்லை அவர்களுக்கு - மேற்கில் மறைய முயற்சி செய்கிறான் சூரியன் , நம்மை பார்த்து சிரித்தபடி -- youTube இல் அவர்களின் வாழ்க்கை பயணிக்கின்றது - நம் உடம்பிலும் பல Tube கள் இணைக்கப்படுகின்றன - எதோ வெண்டிலேட்டேராம் - நாம் தான் முடிவு எடுக்க வேண்டும் - tube எல்லாவற்றையும் எடுத்துவிட - நம் படுக்கையின் அருகில் யாரோ சொல்கிறார்கள் --- சூரியன் மேற்கில் மறைகிறான் - நாமும் கண்களை மூடிக்கொள்கிறோம் -- வாழ்க்கை இவ்வளவு தான் - இதில் என்ன நீ பெரியவன் , நான் பெரியவன் என்று ???
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th May 2015, 03:25 PM
#3850
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 96
இதுவரை நீங்கள் பார்த்திருக்க முடியாத காட்ச்சிகள் - உலகத்தின் மிக அழகு என்று ஒன்றை சொல்ல முடியுமானால் அது காலை கதிரவனின் உதயமும் , மாலை நம்மிடம் இருந்து அவன் விடை பெரும் அழுகு மட்டும்தான் - வேறு எதுவுமே ஒரு மாயை தான் .
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks