-
12th October 2014, 08:02 AM
#241
Senior Member
Diamond Hubber
இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்துள்ள மானா பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் புகழ்பாடும் அருமையான கட்டுரை.
'நான் சிவாஜி கட்சி'
Last edited by vasudevan31355; 12th October 2014 at 08:24 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
12th October 2014 08:02 AM
# ADS
Circuit advertisement
-
12th October 2014, 08:36 AM
#242
Junior Member
Newbie Hubber
நான் சொல்வதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் பிற விஷயங்களை,மனம் கவர்ந்த விஷயங்களை
பகிர்வதை தடை படுத்தவில்லை.பிறர் சுதந்திரங்களை தடை படுத்தவில்லை. உன் கையை நீட்டி நீ ரிலாக்ஸ் பண்ணும் போது ,அங்கே கடினமான உழைப்பை நல்கும் ஒருவரின் கண்ணை,மூக்கை குத்தி விட்டால் ,அதை அவர் எடுத்தும் சொன்னால் கேட்டு திருந்த வேண்டுமல்லவா?
1)படித்ததில் பிடித்த மற்ற பதிவுகளை ,relevant ஆக இருந்தால் ,ஜோ மாதிரி link கொடுத்தால் போதும் .cut paste பண்ணும் அவசியம் சில சமயம் நேரும். பதிவுகளில் மற்றவர் மனம் கோணும் படி ஏதேனும் இருப்பின் ,edit செய்வதற்கே cut paste உதவும். அல்லது நம் பதிவுக்கு support ஆனா சில விஷயங்களை ,உதவிக்கு அழைக்க cut paste பயன் படுத்தலாம். நமக்கே தெரியாமல்,நாமே படிக்காமல்,சம்மந்தா சம்மந்தமில்லாமல் ,40 cut paste ஒரே நாளில் போடுவது ,அல்லது ஒன்றுமே எழுதாமல் வீடியோ மட்டும் போட்டு ஜல்லியடிப்பது, சம்மந்த பட்ட நபருக்கு relaxation .ஆனால் என் போன்ற,வாசு போன்ற,முரளி போன்ற,கார்த்திக் போன்ற,ராகவேந்தர் போன்ற, sincere பதிவாளர்களுக்கு எரிச்சல் தரும்.
2)அதே மாதிரி முழு பக்க படத்தை ,முழுவதும் quote செய்து, அருமை சார் என்ற ஒற்றை வரி பதிவு,சில திரிகளில் பக்கம் நகர்த்தி ,பாகம் தேடும் உத்தியாக மேற்கொள்ள படுகிறது. moderator என்பவர்,சும்மா
வெட்டிதான் அத்திரிகளில். அப்படியாவது சாதனை செய்கிறார்களாம்!!!!
என்னைத்தை சொல்ல?எனக்குத்தான் அகந்தை,கோபக்காரன்,பிறர் மனதை புண் படுத்தி இன்பம் அடைபவன் என்ற நற்சான்றிதழ்.
ஏனைய்யா, விமர்சனங்கள்,ஆய்வுகள்,கவிதைகள்,அங்கதம்,அறிமுகங்கள் ,நுண்கலைகள்,மனோதத்துவ உளவியல்,சிறந்த தேர்வுகள் என்று எத்தனை விதம் அனைத்தும் கூர்மையான தெளிவுடன்,coordinated ஆக என்னால் போட பட்டன.அத்தனையும் விழலுக்கிறைத்த நீரோ என்ற .விரக்தியே மிகுகிறது. ஒவ்வொரு பதிவுக்கும் பின்னால் 50 ஆண்டு படிப்பனுபவம்,அழகியல்,ஈடுபாடு என்று எவ்வளவு உள்ளன?
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
12th October 2014, 09:40 AM
#243
Senior Member
Senior Hubber
வாசு ஜி,
சபதம் படப்பாடலும் விளக்கமும் தூள்
டி.கே.பகவதி சூப்பர் நடிப்பு எத்தனையோ படங்களில் வில்லனாக, குண்ச்சித்திர பாத்திரங்களில் நடித்திருந்தாலும் இதில் அபாரமான வில்லன் வேடம்
அதுவும் ராஜேஸ்வரி(அஞ்சலியின் ) கணவனாக திரும்பி வர, அந்த நடக்கும் விதம் தொடும் விதத்திலேயே அது தன் கணவன் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் அஞ்சலி ... என இவரது நடிப்பு அபாரம் .. என்னை கேட்டால் இந்த படத்தின் நாயகன் டி.கே.பகவதி தான்
-
12th October 2014, 09:44 AM
#244
Senior Member
Senior Hubber
Originally Posted by
RAGHAVENDRA
இரவின் மடியில்
அழகே.. அழகே.. நெஞ்சம் முழுதும் நீ....
கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளில் இப்பாடலின் இலக்கியத் தரம் போற்ற வேண்டிய ஒன்று..
இசையரசி மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில் ....சொக்க வைக்கும் பாடல்..
இடம் பெற்ற திரைப்படம் வாலிபமே வா வா...
இப்பாடலில் இசையரசியின் குரல்களில் வா வா என்ற வார்த்தைகளின் உச்சரிப்பு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
http://play.raaga.com/tamil/browse/m...-Vava-T0002432
வாலிபமே வா படத்தின் பாடல்கள் கங்கை அமரனும் வாலியும் இல்லையோ??
-
12th October 2014, 09:46 AM
#245
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
நன்றி! எனக்குத் தெரிந்து 'சபதம்' படத்தின் 'தொடுவதென்ன தென்றலோ' பாடலை என் நண்பர்கள் கேட்டுவிட்டு 'எம்.எஸ்.விஸ்வநாதன் என்னமாய் ட்யூன் போட்டிருக்கார்' என்பார்கள். எனக்கு பகீரென்று இருக்கும். 'அடப்பாவிகளா!அது எம்.எஸ்.போட்ட பாடல் இல்லை... ஜி.கே.வெங்கடேஷ் போட்ட பாடல்' என்பேன். அவர்கள் நம்பவே மாட்டர்கள். 'அது யாருப்பா ஜி.கே.வெங்கடேஷ்?' என்று எதிர் கேள்வி போடுவார்கள்.
இந்த மாதிரி வெளியில் தெரியாத அசாத்திய ஞானமுள்ள இசையமைப்பாளர்களைப் பற்றி வெளியே நம் பங்குக்கு ஓரளவிற்காவது ஏதாவது செய்ய வேண்டும் என்பதனால்தான் 'சபதம்' போன்ற பதிவுகள்.
'சபதம்' டைட்டிலில் பின்னணி பாடுபவர்கள் பட்டியலில் ஜி.கே.வெங்கடேஷ் பெயர் இருக்காது. ஆனால் 'ஆட்டத்தை ஆடு' பாடலில் ரவிச்சந்திரனுக்கு ஜி.கே.வெங்கடேஷ் குரல் கொடுத்திருப்பார். அது வேறு ஒரு குழப்பம். அதற்காக என்னிடம் இருந்த புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து அது ஜி.கே.வெங்கடேஷ் என்று கன்பார்ம் செய்து கொண்டேன் முன்னமே தெரிந்திருந்தாலும் கூட. சிலர் சாய்பாபா என்று நினைக்கக் கூடும். குரல் ஒற்றுமை கொஞ்சம் அப்படியே இருக்கும்.
தங்களுடைய இரவின் மடியில், பொங்கும் பூம்புனல் பாடல்களை ஆனந்தமாக ரசிக்கிறேன். அதுவும் இளையராஜாவின் அபூர்வ வரிசைகள் அமிர்தம். தங்கள் ரசனை வியப்புக்குரியது. பின்பற்றி வழி நடக்கச் செய்வது. நன்றி.
Last edited by vasudevan31355; 12th October 2014 at 10:04 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th October 2014, 10:04 AM
#246
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajeshkrv
வாசு ஜி,
சபதம் படப்பாடலும் விளக்கமும் தூள்
டி.கே.பகவதி சூப்பர் நடிப்பு எத்தனையோ படங்களில் வில்லனாக, குண்ச்சித்திர பாத்திரங்களில் நடித்திருந்தாலும் இதில் அபாரமான வில்லன் வேடம்
அதுவும் ராஜேஸ்வரி(அஞ்சலியின் ) கணவனாக திரும்பி வர, அந்த நடக்கும் விதம் தொடும் விதத்திலேயே அது தன் கணவன் இல்லை என்பதை புரிந்து கொள்ளும் அஞ்சலி ... என இவரது நடிப்பு அபாரம் .. என்னை கேட்டால் இந்த படத்தின் நாயகன் டி.கே.பகவதி தான்
நன்றி ராஜேஷ்ஜி!
முற்றிலும் உண்மை!
பகவதி பட்டை கிளப்பிய படம் இது. அதுவும் பண்டரிபாய்க்கு கட்டிய கணவன் தான் உயிருடன் இருக்கும் போதே விதவைக் கோலம் தந்து அண்ணன் செல்வநாயகம் வேடம் பூண்டு இருட்டில் திருட்டுத்தனமாக பண்டரிபாயை காமத்துடன் நெருங்குவது பகவதிக்கு ரொம்பப் புதுசு. நாமே கொஞ்சம் கண்ணைக் கசக்கித்தான் பார்க்க வேண்டும்.
பகவதி நடித்ததில் எனக்கு பிடித்தவை. சம்பூர்ண ராமாயணத்தை விட்டுத்தள்ளுங்கள். ராவணனாகவே வாழ்ந்தார் அதில். அதுவல்லாமல்
'அவன் ஒரு சரித்திரம்' படத்தில் நடிகர் திலகத்தின் தந்தையாக, கிராமத்து பெரிய மனிதராக அருமையாக நடித்திருப்பார். அதில் தன்னுடைய வயலில் மேயும் ஒரு காளை மாட்டிடம் சண்டையிட்டு காயங்களோடு வீட்டிற்கு வருவார். நடிகர் திலகம் பதறி என்னவென்று வினவ காளை மாட்டிடம் சண்டையிட்ட கதையை உணர்ச்சியுடன் விவரிப்பார். எனக்கு மிக மிக பிடித்த நடிப்பு இது.
அடுத்து 'ராஜபார்ட் ரங்கதுரை'. ரங்கதுரையை 'அம்மம்மா!' பாட விட்டு அப்பாட்டை ரசிக்கும் போது பகவதியின் அனுபவம் பளிச்சிடும். மாப்பிள்ளை ஸ்ரீகாந்துக்கு தரும் அறிவுரைகளும் மனதை அள்ளும்.
அடுத்து 'நம் நாடு' படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணனாக. அழகாகப் பண்ணியிருப்பார். ரங்காராவுக்கு எதிராக எம்.ஜி.ஆர் அவர்கள் போர்க்கொடி தூக்கும் போதெல்லாம் எஜமான விஸ்வாசம் கொண்டு எம்.ஜி.ஆர் அவர்களை கடிந்து கொள்வது, பிறகு ரங்காராவ் ஒரு மிருகம் என்று கொதிப்பது, தன் தம்பி தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பூரிப்பைக் காட்டுவது என்று நன்றாக நடித்திருப்பார்.
இன்னும் நிறைய உள்ளது. பழுத்த நாடக அனுபம் மிக்க நல்ல கலைஞரை மறக்க இயலுமா?
-
12th October 2014, 10:06 AM
#247
Senior Member
Senior Hubber
ஜி.கே.வெங்கடேஷ் பற்றிய பேச்சு வந்ததால் சில தினங்களுக்கு முன் ஒரு கன்னட பாடல் பதிவு செய்திருந்தேன்
ராஜ்குமார் மற்றும் பாரதி .. அந்த பாடலுக்கு அருமையான இசை கொடுத்தவர் ஜி.கே.வெங்கடேஷ்
ஜி.கே.வி பல கன்னட படங்களுக்கு அருமையான இசையமைத்துள்ளார். அருமையான பாடல்கள் கொடுத்துள்ளார்.
தெலுங்கிலும் பல நல்ல பாடல்கள் தந்துள்ளார்.
குறிப்பாக நம்மூரின் மேல் நாட்டு மரும்கள் தெலுங்கில் அமெரிக்கா அம்மாயி
முத்தமிழில் பாட வந்தேனின் தெலுங்கு வடிவம் “பாடனா தெனுகு பாட்டா” இசையரசியின் குரலில் ஜொலிக்கும் பாடல்
அதே போல் தேன் சிந்துதே வானம் தெலுங்கில் சோலோவாக மாறியது, ஆண் குரல் பாலா, பெண் குரல் இசையரசி
படம் ஜமீண்தார்காரு அம்மாயி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
12th October 2014, 10:07 AM
#248
Senior Member
Senior Hubber
அதே போல் சவாலே சமாளி, பணமா பாசமா இரண்டிலும் அருமையான வேடம்
-
12th October 2014, 10:08 AM
#249
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி!
பி.எம்.அனுப்ச்சி இருக்கேன் பாருங்க.
-
12th October 2014, 10:12 AM
#250
Senior Member
Diamond Hubber
Originally Posted by
rajeshkrv
அதே போல் சவாலே சமாளி, பணமா பாசமா இரண்டிலும் அருமையான வேடம்
ஆமாஜி! 'சவாலே சமாளி' படத்தில் பஞ்சாயத்து காட்சி ஒன்னு போதுமே! நடிகர் திலகம், பகவதி, நாகேஷ் கொடி நாட்டுவார்கள்.
Bookmarks