Page 326 of 397 FirstFirst ... 226276316324325326327328336376 ... LastLast
Results 3,251 to 3,260 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3251
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங்க் ஆல்

    காலங்கார்த்தால சுறுசுறுப்பா ஒருமெலடி..

    கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
    கண்ணே உன் கைசேரப் பணியும் என்று

    கால்கள் சேர்த்துப் பாடுவது அந்தக்கால வழக்கம் போல..

    உன்னிடம் மயங்குகிறேன் – எனக்குப்பிடித்த பாடல்களில் ஒன்று..பட் இன்று தான் விஷூவல் பார்த்தேன் சிவகுமார்..ஜெய்சித்.. (முன்னால் போடப்பட்டிருக்கலாம் நினைவிலில்லை)



    .
    **

    கலை..இது என்ன எங்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கொண்டு..சரி சரி..வயது குறைந்தவர் என சொல்லியிருக்கிறீர்கள்..

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3252
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன கலைவேந்தன்,



    சி.க, கல்நாயக் இருவருமே ஆரோக்யமான நபர்களே. தவறான இடத்தில் வந்து லேகியம் வாங்கலியோ லேகியம் என கூவி விற்க தொடங்கி விட்டீர்களே?என்ன உங்கள் இடத்தில் விலை போகவில்லையா? எங்களுக்கு நடிகர்திலகம் என்ற அருமருந்து ஒன்று போதும். வேறு எந்த லேகியமும் வேண்டாம்.



    அதுவும் எல்லாரையும் புகழ்ச்சி வலையில் வீழ்த்தி ,வியாபாரம் தொடங்குவது, பிதாமகன் சூர்யா ரேஞ்சில் போக ஆரம்பித்தாயிற்றே?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #3253
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக் ஊருக்குப் போயிருப்பார் என நினைக்கிறேன்..நேற்றுக் கூட வானத்தில் வெண்ணிலா தேய்ந்தது போலத் தோற்றமளித்தது!

    ம்ம் இன்னிக்கு என்ன செய்யலாம்..:

    இலங்கை வானொலியில் கேட்கமட்டும் செய்த பாடல்கள்:

    மாசி மாசம் முகூர்த்த நேரம் எங்கும் மங்கலம் – ரேடியோ சிலோனில் கேட்ட பாடல்…ரொம்ம்ம்ப நாள் கழிச்சு இன்று கேட்கவும் பார்க்கவும் செய்தேன்..
    கோட் சூட் போட்டுக்கொண்டு டூயட் ஆடவேண்டும் என்று ரூல் யார் க்ரியேட் செய்தார்கள்..



    ஒல்லி ஒல்லி ரத்தி கோ.சூ சுதாகர்.. ம்ம் பெண்களுக்குப் புடவை என்றும் அழகு!

    *

  6. Likes kalnayak liked this post
  7. #3254
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *

    கண்ணெல்லாம் உன்வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்..

    இன்னொரு சிலோன் ரேடியோ
    ஹிட் சிவகுமார் ஜெய்சித்ரா..

    ஒரே பாட்டுல குழந்தை பிறந்துஸ்கூல் போகுது..ம்ம் ரியல் லைஃப்ல அப்படி நடந்தா இந்தப் பாட்டுக்கு ஹெவி டிமாண்ட் இருக்கும்.


  8. Likes kalnayak liked this post
  9. #3255
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இதுவும் சிலோன் ரேடியோவில் கேட்டது தான்.. முத்துராமன் சாரதா எனப்பார்க்கையில் ஒரு இனிய ஆச்சர்யம்..

    ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது
    ஆஹஹா.. ஹம்மிங்க்..ஆஹா..

    முத்துராமன் சாரதா..
    மின்னலில் அழகிய ஊஞ்சலை அமைத்து
    மேகத்தில் இரவுக்குப் பஞ்சணை விரித்து
    வானத்து மீன்களில் மல்லிகை தெளித்து
    மன்மத மந்திரம் மயங்கிடப் படித்து.. ம்ம்
    பாடம் சொல்லக் கூடாதோ
    பார்வை ஒன்று போதாதோ..

    யாராக்கும் வரிகள்..


  10. Likes kalnayak liked this post
  11. #3256
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    **
    பாடினார் கவிஞர் பாடினார் – 7

    ஹாய் ஆல்.. ரொம்ப நாளாச்சா இந்த த் தொடரைக் கண்டின்யூ பண்ணி..

    எனில் ஆறாம் அத்தியாயத்தின் இறுதி வரி…

    //அடுத்து வரப்போகும் கவிஞர் இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினார் என ஆச்சரியப்பட வைத்தவர்..அவரும் ஒரு இசையமைப்பாளர், டைரக்டர்..

    அவர்ர்ர்ர்ர்ர்……//

    **

    சரி அந்தக் கவிஞரைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு தகவல் தெரிவதற்கு திருமூலரை அழைப்போம். திருமூலர்? யெஸ் .
    *
    ஒருபாடல் திருமந்திரத்திலிருந்து…


    வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
    புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
    தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
    முழுதும் பழுத்தது வாழைக் கனியே

    என்னவாக்கும் அர்த்தம்?.

    இறைவா என் நெஞ்சில் உனை எண்ணிக் கசிந்துருகும் வண்ணமிருக்கும் யோகப் பயிற்சியை வித்திட்டேன்.. பாகல் எனச் சொல்லப் படும் வைராக்கியம் முளைத்தது.

    .கண்ணை மறைக்கும் புழுதியைப் போல கண்களை மறைத்து உண்மையைக் கூற மறுக்கும் தத்துவங்களை ஆராய்ச்சி செய்தேன்.. பலன் பெரிய பெரிய காய்களைக் கொண்ட பூசணியைப் போல என்னுள்ளே இருந்த சிவமாகிய இறைத் தன்மை வெளிப்பட்டது..

    என்னுள் இருக்கும் இந்திரிய விஷயங்களைத் தொழுது அவற்றை அடக்கி உன்னடி சேர்வதற்குப் பயிற்சியும் செய்தேன்..ஓ. காட்.. என்னாச்சு தெரியுமா.. எனக்கு வாழைப்பழத்தைப் போன்ற சுவைகொண்ட --ஆனால் அவற்றை முன்பின் அறியாமல் இருந்த எனக்கு மிகப்பெரிய ஆன்ம லாபம்..உன்னை அடைவதால் கிடைக்கும் பயன் கிடைச்சதுப்பா..தாங்க்யூ..!

    (சைவப் பெரியார் துடிசைக் கிழார்ங்கறவர் எழுதின உரையைக் கொஞ்சம் எனக்குப் புரிந்த வகையில் எழுதிப் பார்த்தேன்.)

    ஆனா பார்த்தீங்கன்னா…இதைத் தழுவி ரொம்ப ஸிம்ப்பிளா நாம் பார்க்கப் போகும் கவிஞர் அன்றே எழுதியிருக்கிறார் என்று சொல்வதற்கு முன் ஒரு காட்சி..

    (ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான்!)

    *

    பாட்டுக்கு மெட்டு போட்டுட்டயா.. எங்கே…

    கேட்டவர் அந்த ஓரிருபடத்திற்கு இசையமைத்திருந்த புது இசையமைப்பாளரின் நண்பர்..அந்தப் புதுப்படத்தின் புது இயக்குனர்..

    போட்டுட்டேனே.. இதோ ஒரு பாடகியை வச்சு சில வார்த்தைகள் போட்டு பாடச்சொல்லியிருக்கேன்..

    எங்கே சொல்லு..

    தானான தான்னா ஆ ஆ
    தானேனா தான்னா தனனானே தானானா..

    யோவ் மெட்டு எதுக்குய்யா வார்த்தை…

    சொன்னார் இசையமைப்பாளர்.. நல்லா இருக்கே.. எந்தக் கவிஞர்… நம்ம பெரியவரா..

    இல்லீங்காணும்.. என்னோட அஸிஸ்டெண்ட்டா இருக்கானே…” தூரத்தில் வெடவெடவென ஒல்லியாக இருந்த ஒரு இளைஞனைக் காண்பித்தார் இசை..

    “டேய்” அடா புடா நண்பர்கள் தான் இசையும் இயக்கமும்.. “அது உன் தம்பியில்லையா”

    “தம்பியே தான்..அமர்..”

    நல்லா இருக்கு..அவனையே முழுப்பாட்டையும் எழுதச் சொல்..

    அப்படி இளையராஜா என்ற இசையமைப்பாளரின் தம்பியான அமர் என்கிற கங்கை அமரனை ப் பாடல் எழுதச் சொன்னது பாரதிராஜா என்ற புது டைரக்டர்..அந்தக்காலத்தில்..

    அப்படி கங்கை அமரன் எழுதிய பாடல் செந்தூரப் பூவே…. தேசிய விருது எஸ்.ஜானகிக்கு ப் பெற்றுத் தந்த பாடல்..

    தென்றலைத் தூது விட்டு மறு சேதிக்குக் காத்திருப்பேன்
    கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
    கன்னிப்பருவத்தில் வந்த கனவிதுவே
    எண்ண இனிக்குது அந்த நினைவதுவே - ஸீ இதை நினைவிலிருந்து என்னால் டைப் செய்ய முடிகிறது என்றால் காரணம் கவித்துவமிக்க வரிகள்..

    கவிஞர்கள் அனைவருக்கும் இசைஞானம் உள்ளது என்று சொல்ல முடியாது..இசைஞானம் அவ்வளவாக இல்லாத கவிஞர்கள் ,என் போன்ற கவிதை எழுத முயற்சிப்பவர்கள் நிறையவே உண்டு..

    இசைஞானம் உள்ளவருக்கு , இசையமைக்கும் திறமை கொண்ட நபருக்கு , கவித்துவ உள்ளம் கண்டிப்பாக இருக்கும்.. அப்பொழுது தான் மெட்டுக்கள் பொங்கி வரும்..

    அந்தமாதிரிப்பட்டவர் கங்கை அமரன்..

    சிலபாடல்கள் அவர் எழுதியவை என்றால் வெகு ஆச்சர்யமாக இருக்கும்..
    *

    இன்னொரு சம்பவம்..

    இளையராஜாவின் இன்னொரு படம்..இந்தாடா தம்பி.. இந்த மெட்டு.. நான் பாட்டுப்போட்டு இருக்கேன் பாரு..

    அரண்மனைக்கிளி அழகுப் பைங்கிளி
    அரங்கில் வந்ததம்மா.. நல்லா இருக்கா நீ எழுது… என கங்கை அமரனைக் கேட்க

    அவர் எழுதிய பாடல்..

    அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
    அழகு நெத்தியிலே..

    **

    என்ன பாடல்களில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை ..இசை.. பின் திரைக்கதை டைரக்ஷன் என எல்லாத் துறைகளிலுமே கால் வைத்தார்.. வழுக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்..

    ஆனால் பாடலாசிரியராக சிலசமயங்களில் சிற்சில கமர்ஷியல் எனச்சொல்லப்படும் பாடல்களையும் எழுத வேண்டியிருந்தது.. எஸ் ஓரம்போ ஓரம்போ , அண்ணே அண்ணே சிப்பாயண்ணே.. நம்ம ஊர் நல்ல ஊர் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சன்னே, வாடி என் கப்பக் கிழங்கே.. என்பன சில எக்ஸாம்பிள்கள்..

    கவிஞர் கங்கை அமரனின் என் மனங்கவர்ந்த சில பாடல்கள்..

    சீர் கொண்டுவா வெண்மேகமே..
    இது இனிய வசந்த காலம்
    இலைகளில் இளமை துளிரும் கோலம்..
    *
    காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே

    *
    உன்பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
    *
    சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்

    *
    தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும் புது தாளம்வரும்
    அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்..
    மணமாலைவரும் சுப வேளை வரும்
    மண நாள் திரு நாள் சுப நாள்..

    *
    ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சுருச்சு
    பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே

    **
    ஆசையக் காத்துல தூதுவிட்டு
    *
    நீ எப்போதும் பார்த்த புள்ள உன்னை அடையாளம் தெரியவில்லை

    *
    மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
    *
    மண்ணிலிந்தக் காதல் அன்றியாரும் வாழ்தல் கூடுமோ
    *
    இந்த மான் உன் சொந்தமான்பக்கம் வந்து தான்
    சிந்து பாடும்..
    *
    பூ மாலையே தோள் சேரவா..

    *
    பூங்கதவே தாழ் திறவாய், பூவாய் பெண்பாவாய்
    *
    புத்தம்புதுக்காலைபொன்னிற வேளை
    என் வாழ்விலே தினம் தோறும் தோன்றும்
    சுப ராகம் கேட்கும் என்னாளும் ஆனந்தம்
    *
    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    இன்பத்திலாடுது என் மனமே
    *
    அடியே.. மனம் நில்லுன்னா நிக்காதடி..
    கொடியே… எனைக் கண்டு நீ சொக்காதடி
    *
    நான் என்பது நீயல்லவோ தேவ தேவி
    *
    செண்பகமே செண்பகமே தென் பொதிகைச் சந்தனமே
    *
    ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொண்ணும்கவலையில்லே
    *
    ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ்வானிலே ஒளி மின்னல் தோன்றுதே
    *

    இன்னும் நிறையச் சொல்லலாம்..

    இங்கு ரெண்டே ரெண்டு..

    தம்தனதம்தன தாளம் வரும்
    சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
    சுவை அள்ளியது
    மனம் நில்லென சொல்லியும் துள்ளியது

    பெண் மனம் பூவினும் மெல்லியது தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
    மல்லிகை முல்லையில் பஞ்சணையோ
    மன்னவன் கொண்டது நெஞ்சணையோ
    மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ
    இனிக் கனவுகள் தொடர்ந்திட –

    தம்தன நம்தன தாளம் வரும் பல பாவம் வரும்
    அதில்: சந்தன மல்லிகை வாசம் வரும்
    மண மாலை வரும்.. சுப வேளை வரும்.. மண நாள்.. திருநாள்.. புது நாள்.. உனை அழைத்தது



    எப்போதுகேட்டாலும் எனக்கு மெய்மறக்கும் மேலுள்ள பாடல்.. (பிக்சரைசேஷன் எனக்குப் பிடிக்கவில்லை..ஆனால்பாடலைக் கண்மூடிக் கேட்டால் எங்கோ செல்லலாம்…)

    கீழ்வரும் பாடலும் அப்படியே..

    சிறு பொன்மணி அசையும்
    அதில் தெறிக்கும் புது இசையும்
    இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

    நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
    ராகம் தாளம் பாவம் போல
    நானும் நீயும் சேர வேண்டும்


    விழியில் சுகம் பொழியும்
    இதழ் மொழியில் சுவை வழியும்
    எழுதும் வரை எழுதும்
    இனி புலரும் பொழுதும்

    தெளியாதது எண்ணம்
    கலையாதது வண்ணம்
    அழியாதது அடங்காதது
    அணை மீறிடும் உள்ளம்

    வழி தேடுது விழி வாடுது
    கிளி பாடுது உன் நினைவினில்


    **

    இப்போதும் இன்றும்படங்களுக்குபாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் கங்கை அமரன்.. இன்னும் கவித்துவமாக அவர் எழுதி நல்ல மெலடி கேட்கவேண்டுமென்பதே என் போன்ற சிறு ரசிகனின் ஆசை..

    *
    அடுத்து வரும் கவிஞரின் வாழ்வில் நடந்ததாகக்கூறப்படும் ஒரு சம்பவத்தை வைத்து இன்னொரு இந்தக்காலக் கவிஞர் அழகாகச் சிறுகதையும் எழுதியிருக்கிறார்..

    அப்படி அந்தக்காலக் கவிஞர் யார் என்றால்…ஜஸ்ட் வெய்ட் ஃபார் நெக்ஸ்ட் எபிஸோட்..
    *
    ஏதோ மிஸ் பண்ணிட்டேனா..

    ஆமா..ஆரம்பத்துல திருமூலர் பாட்டு அதுக்கும் கங்கை அமரனுக்கும் என்ன தொடர்பு..


    (ரொம்ப சிம்ம்பிளா கங்கை அமரன் (?!) அன்னிக்கே சொல்லிட்டார்..அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் டோய்னு. இல்லியோ 

    எஸ்ஸ்கேப்..

    பின்ன வாரேன்

  12. #3257
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ‘அளந்து கொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு.....’


    சின்னக் கண்ணன்,

    உங்கள் பாடல் தொகுப்புகள் பிரமாதம். நீங்கள் கூறியபடி கல்நாயக் ஊருக்கு போயிருப்பார் என்று கருதுகிறேன். நீங்கள் சொன்னது உண்மைதான். நிலா தேய்ந்தது போல நேற்று தெரிந்திருக்கும். நேற்று சந்திரகிரகணம். கல்நாயக்கும் ஊரில் இல்லை. கங்கை அமரசனுக்கும் திருமூலர் பாட்டுக்கும் நீங்கள் கொடுத்த ‘ லிங்க்’ அபாரம்.

    திரு.கோபால்,

    பி.யு.சின்னப்பாவைப் பற்றி தனக்கு தெரியாது என்று கல்நாயக் கூறினார். எனக்குத் தெரிந்த தகவல்களை நான் கூறினேன். மக்கள் திலகம் தனது உரையில் மேலும் என்ன கூறினார் என்று சின்னக்கண்ணன் கேட்டார். சில அம்சங்களை கூறினேன். இதைப் பார்த்து ஒரு நண்பர் தன்னிடம் ஒலிப்பதிவு உள்ளதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அந்த ஒலிப்பதிவு (அதுவும் இங்கே அல்ல, மக்கள் திலகம் திலகம் திரியில்) தரவேற்றப்படும் என்று தெரிவித்தேன்.

    சின்னக்கண்ணனும், கல்நாயக்கும் திரு.சிவாஜி கணேசன் அவர்களை மோசமாக விமர்சிக்காத ஆரோக்கியமான ரசிகர்கள் என்று எனக்குத் தெரியும். தகுதியும் திறமையும் யாரிடம் இருந்தாலும் மனமார பாராட்டுவது என் வழக்கம். உங்களைக் கூட விஷயம் தெரிந்தவர், திறமையாளர், நல்லவர் என்றெல்லாம் நான் கூறியது உண்டு. அதெல்லாம் பச்சைப் பொய், வெறும் புகழ்ச்சி வலை என்று நீங்கள் சொன்னால்......... நான் என்ன சொல்லப் போகிறேன்? உங்களைப் பற்றி என்னை விட உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும்.

    எம்.எஸ்.விஸ்வநாதன் வாழும் அதிசயம் கட்டுரையில் அடானாவை முதலில் பயன்படுத்தியவர் (வருகிறாள் உம்மைத் தேடி) என்று கூறியிருந்தீர்கள். அதற்கு முன்பே ரத்தக்கண்ணீரில் ‘கதவை சாத்தடி...’ மூலம் சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் அடானாவை பயன்படுத்தி விட்டார் என்று கூறியிருந்தேன். உங்கள் பதிவில் நீங்கள் திருத்தியதாக தெரியவில்லை. பிழையான தகவல் என்று நண்பர் ராஜேஷை வறுத்தெடுக்கும் நீங்கள் பிழையான தகவல் கொடுக்கக் கூடாது அல்லவா?

    நேற்று முன்தினம் nt திரியில் உங்கள் பதிவை பார்த்து உங்கள் மீது ஆத்திரமாக வந்தது. திரு.ராகவேந்திரா சாரின் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? உணர்ச்சி கொந்தளிப்பை ஒதுக்கிவிட்டு நிதானமாக யோசித்து பாருங்கள். நான் சொல்வதன் நியாயம் புரியும்.
    --------------

    சின்னக்கண்ணன், கல்நாயக்

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நைஜீரியராக இருந்தால், வெள்ளையாக இல்லாமல் கறுப்பாக இருந்தால் அவரை ராஜிவ் திருமணம் செய்து கொண்டிருப்பாரா? அவரை காங்கிரஸ்காரர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பார்களா? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் கிஷோர் கூறியிருப்பதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. நைஜீரியா தூதரும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆனந்தஜோதி படத்தில் வரும் அற்புதமான பாடல். கவியரசரின் சிந்தனையில் ஊற்றெடுத்த தேனாறாய் வரிகள். மெல்லிசை மன்னர்களின் மயக்கும் இசை. மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு.

    பல பல பல பல ரகமாய் இருக்குது பூட்டு
    அது பலவிதமாய் மனிதர்களை பூட்டுது போட்டு
    கலகலவென பகுத்தறிவு சாவியப் போட்டு
    நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு..

    அடக்கமில்லாமே சபையிலே ஏறி
    அளந்து கொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு...

    என்ன ஒரு கருத்தாழம் மிக்க வரிகள். கதைப்படி, கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த மாடக்குளம் தர்மலிங்கத்தை தேடி மக்கள் திலகம் மாறுவேடத்தில் வருவார். தர்மலிங்கத்தின் கன்னத்தில் இருக்கும் மருவையும் நெற்றியில் இருக்கும் வெட்டையும் பார்த்ததும் அந்த இரு அடையாளங்களையும் மனதில் வாங்கிக் கொண்டதை காட்டும் வகையில் அனிச்சையாக தன் முகத்தில் அந்த அடையாளங்கள் இருக்கும் இடங்களில் கை வைத்துக் கொள்வார். இசை நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். உச்ச ஸ்தாயியில் பாடும்போது சிலர் காதில் கை வைத்துக் கொள்வார்கள். அதேபோல, பூட்டு, சாவி, ரிப்பேர் என்று உரத்து கூவும்போது பொத்தினாற்போல காதில் கைவைத்துக் கொள்வார். எனக்கு பிடித்த மனங்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

    1962-ம் ஆண்டு தேர்தல் சமயம். காஞ்சியில் அறிஞர் அண்ணா போட்டியிட்டார். அவரை மிகக் கேவலமாக திட்டி, மரியாதைக் குறைவாக ஏசி அவரது வீட்டுக்கு எதிரிலேயே மாற்றுக் கட்சியினர் பெரிய தட்டியை வைத்திருந்தனர். ஆத்திரப்பட்ட உடன்பிறப்புகள் அதை அகற்ற முயற்சித்தனர். வன்முறை வெடித்துவிடக் கூடாதே என்று அவர்களை அமைதிப்படுத்திய அண்ணா, ‘நாளைக்கு அவர்களே அந்த தட்டியை எடுத்து விடுவார்கள். கவலைப்படாதீர்கள்’ என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.ஏதோ மாற்றுக்கட்சி மேலிடத்தில் பேசி எடுக்கச் சொல்லப் போகிறார் போலிருக்கிறது என்று அவர்களும் சென்றுவிட்டனர்.

    எல்லாரும் போன பிறகு நெருக்கமான சிலரை அழைத்து ஒரு யோசனை தெரிவித்தார் அண்ணா. அவர் சொன்ன யோசனை இதுதான்.....

    ‘‘அந்த தட்டிக்கு அருகே இருபுறமும் பெட்ரோமாக்ஸ் விளக்குளை வைத்து விடுங்கள். அதற்குபக்கத்தில் இடம் பெற வேண்டிய வாசகம்...இரவிலும் இந்த தட்டியில் உள்ள வாசகங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கு வைக்கப்படுகிறது. விளக்கு உபயம்: சி.என்.அண்ணாதுரை’’

    மறுநாள் தட்டி மாயம்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. #3258
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கலைவேந்தன்..,

    //அடக்கமில்லாமே சபையிலே ஏறி
    அளந்து கொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு...// இந்த வரிகளுக்காகப் பாடல் போட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நல்ல வரிகள்..பட் பகுத்தறிவு - என்றால் அந்தப் பக்குவ நிலை எனக்கு இன்னும் வரவில்லை எனத் தான் சொல்லவேண்டும்..என் வழி கொஞ்சம் வேறு (தவறாய் எழுதியிருப்பின் மன்னிக்க)

    ஏங்காணும் ஆனந்த ஜோதின்னா நினைவுக்கு வர்றது பொய்யிலேபிறந்துபொய்யிலே வளர்ந்தபுலவர் பெருமானே பாட்டும்... நினைக்கத் தெரிந்த மனமே பாட்டும் தான் எனக்கு..எப்பவும் அரசியலா..போரடிக்காதோ..

    *

    தவறு செய்தவர்களை தலை குனிய வைத்த அறிஞரைப் பற்றிய தகவலுக்கு நன்றி..

    *

    கொஞ்சம் நகைச்சுவைக்காகத் தான் திருமூலர் பாடல் தெளிவுரை எழுதி கடைசியில் இறையருளுக்கு ஞானம் வேண்டும் எனபது போல் சொல்லப் பார்த்தேன்..வேறு எதுவும் தாழ்த்திச் சொல்ல நினைக்கவில்லை..அப்படி தொனி வந்துவிட்டதா என்ன..மன்னிக்க

    *+

  14. #3259
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வடக்கத்திய நண்பர்களின் வீட்டிற்குச் சென்றால் அங்கு வயது குறைந்தவர்கள் எல்லாம் டபக்கென சிரந்தாழ்த்திக் கால் தொட்டுக் கும்பிடுவார்கள்..இதை பாவ் சூ என ஹிந்தியில் சொல்வார்கள் ( நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம் - இந்தி)

    ஷக்தி விகடனைப் புரட்டிய போது இண்ட்ரஸ்டிங்க் ஆக ஒன்று..

    இப்படிக் கால் தொட்டுக் கும்பிடுவதும் காலில் விழுந்து வணங்குவதும் அவசியமா சார்..அது மரியாதை நிமித்தமா பக்தியின் அடையாளமா.. ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தின் காலில் விழுவதில்லை.. யானை இன்னொரு யானையை நமஸ்கரிக்கறதில்லை.. நமக்கு மட்டும் ஏன் சார் இந்தப் பழக்கம்” எனக் கேட்டார் நண்பர்..

    மற்ற ஜீவன்களை விட மனிதனுக்குப் பாதம் என்பது முக்கியமானது.. பரதன் கூட ஸ்ரீ ராமனுடைய பாதங்களா நினைச்சுத் தான் பாதுகைகளை வாங்கிக்கிட்டுப்போறான்..தெய்வங்களுக்கும் பாருங்க முகம் வேற வேறயா இருக்கும். கணபதிக்கு யானை முகம் முருகனுக்கு ஆறுமுகம் நரசிம்மத்துக்கு சிங்க முகம்.. இப்படி ஆனா பாதங்களைப் பொறுத்தவரை எல்லாருக்கும் ஒரே மாதிரி இரண்டு பாதங்கள் தான்.. அதை திருவடிகள் என்போம்..

    திருமூலர் என்ன சொல்றார் (இங்கயுமா)

    திருவடி ஞானஞ் சிவமாக்குவிக்கு
    திருவடி ஞானஞ் சிவலோகஞ்சேர்க்குத்
    திருவடி ஞானஞ்சிறைமல மீட்கு ந்
    திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே..

    அதாவது இறைவனது திருவடிகளைத் தொழும் உண்மை அறிவே தொழுபவர்களை இறைவனாக்குவிக்கும். மோட்ச உலகில் கொண்டு சேர்க்கும்
    வாழ்க்கை எனும் அவஸ்தைகளில் சிக்குண்டு அடைபட்டுக் கிடக்கும் கட்டினை அவிழ்த்து மீட்கும்.. வளமான எண்வகை சித்திகளையும் மோட்சத்தையும் கொடுக்கும்”

    நண்பர் கையெடுத்துக் கும்பிட்டார் என்று முடித்திருப்பார்..

    ( நன்றி ஷக்திவிகடன் வீயெஸ்வி)

    பாதம்னு பாட்டு பார்த்தா ஒன்று கிடைத்தது..கமலம் பாத கமலம் ...வெகு அழகு. (இங்கு போட்டாச் போட்டச் இல்லையே..)


  15. Likes kalnayak liked this post
  16. #3260
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பல பல ரகமாய் பூட்டு - வீடியோ கிடைக்கலை கலைவேந்தன்..கல் நாயக்,மதுண்ணா தருவாங்க..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •