Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மை ஜோ. அற்புதமான பதிவு. மலையாளத்தில் வீட்டில் சம்சாரித்தவர்கள்,கன்னடத்தில் மாத்தாடியவர்கள்,தெலுங்கில் செப்பியவர்கள் அனைவரும் கொண்டாட பட்ட தமிழ் சமூகத்தால் ,நமது கலைஞர்கள்,கவிஞர்கள்,அரசியல் தலைவர்கள் ஜாதி சார்ந்த புறக்கணிப்புக்கு ஆளானார்கள். இதில் ,வு.வே.சா வும் ,பாரதியும், சிவாஜியும் கூட தப்பவில்லை என்பது கசப்பான உண்மை.



    இன்றும் கூட கண்ணதாசனை கொண்டாடுபவர்கள் நகரத்தார் சமூகத்தினர். ஆனால் இரண்டாம் கம்பன் வாலி அவரை விட அதிகம் சாதித்தும் புறக்கணிக்க பட காரணம் அவர் சாதியே.



    இதில் மிக அதிகம் பாதிக்க பட்டவர் நமது நடிகர்திலகம் என்ற உலக மேதையே. சொந்த சமூகத்தாரேலேயே கூட புறக்கணிக்க பட்ட அவலம் சொல்லி மாளாது.(இதற்கு பசும் பொன்-காமராஜ் ஊடல் முக்கிய காரணி)



    கலைஞர் கூட இதில் விலக்கில்லை.தமிழ்த்தாத்தா வு.வே.சா பற்றியோ, பாரதி பற்றியோ மூச்சு விட மாட்டார். எம்.எஸ். இறந்த போது பத்தி எழுதும் இவர் எம்.எல்.வீ, டீ .கே.பீ (தமிழிசை பிரபலமாக உழைத்தவர்) பற்றி கண்டு கொள்ள மாட்டார்.



    என்னை பொறுத்த வரை திருவள்ளுவர், கம்பர்,பாரதி,பெரியார்,புதுமை பித்தன்,சிவாஜி, காமராஜ்,கலைஞர் ,கண்ணதாசன்,வாலி,வைரமுத்து,பாலசந்தர்,மகேந்திரன்,சோ, கமல் ஹாசன்,அசோகமித்திரன் போன்ற மேதைகள் ஜாதி வித்தியாசமின்றி ,தமிழறிந்த ,தமிழை மதமாகவும்,மொழியாகவும் பார்க்கும் அனைவராலும் கொண்டாட பட வேண்டிய உலக மேதைகள்.



    இவ்வளவு சொல்லி இவ்வளவு தமிழ் எழுதி தமிழை தவிர வேறு மொழி அறியாத நானே தமிழனாக திராவிடம் அங்கீகரிக்கவில்லையே?வீட்டில் கன்னடமும்,தெலுங்கும் பேசும் நண்பர்கள்தான் உண்மை தமிழர்களாம்.



    இந்த சாதி வெறிக்கு வித்திட்டது ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கட்சிகள்,பாட்டாளி மக்கள் கட்சி போன்ற குறுகிய நோக்கம் கொண்டவையே.எல்லோரையும் சாதியை சொல்லி பழிக்கும் நவீன தீண்டாமை இவர்களால் உருவானது.(மனுவின் பெரும் கொடுமை தீர்ந்து படும் நாளில் வெறுப்பு சார்ந்த இந்த திருப்பணி அரசியல் காரணங்களுக்காக நடந்தேறி நிறுவன மயமாக்க பட்டு சாதி கட்சிகள் கொடி கட்டி பறக்கின்றன)



    பூணல் மறுத்து, மக்களை கலப்பு மணம் செய்வித்து பெரியாரை கொண்டாடும் எங்கள் போன்றோர் மூலையில் வேடிக்கை பார்க்கின்றோம்.என்ன ஒரு இழிவு. தமிழர்கள் இப்படியா பிரிந்து நிற்பது?கற்றறிந்தோர் இன்னும் அழ்ழமாக இந்த வெறியில் திளைப்பது இன்னும் ஆபத்தான போக்கு .(கல்யாண மாலை கண்டதில்லை?)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Likes Russellpei, KCSHEKAR, joe, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •