Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 29

Thread: கர்ணன் - Karnan - நடிகர் திலகத்தின் கர்ஜனை மீண்ட

  1. #1
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like

    கர்ணன் - Karnan - நடிகர் திலகத்தின் கர்ஜனை மீண்ட

    அனைவருக்கும் வணக்கம்!

    நடிகர் திலகத்தின் பல படங்களுக்கு இதிகாச அந்தஸ்து உண்டு. அவற்றில் முதன்மையான இடத்திற்கு போட்டி போடும் ஒரு சில படங்களில் நடிகர் திலகத்தின் திரைக்காவியமான கர்ணனும் உண்டு.

    முதன் முதலில் வெளியான 1964 பொங்கல் முதல் பல்வேறு தடவைகள் வெளியானபோதும் அதே இதிகாச அந்தஸ்தையும் மக்களின் பேராதரவையும் தக்க வைத்துக் கொண்ட படம். மூன்று வருடங்களுக்கு முன்னால் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு வெளியானபோது உச்சக்கட்ட வெற்றியையும் அலைகடலென வந்த மக்கள் ஆதரவையும் சாட்சிப்படுத்திய கர்ணன் இப்போது 50 ஆண்டு பொன்விழா நிறைவில் நிற்கும்போதும் அதே அந்தஸ்தையும் மக்கள் மனதில் நிரந்தர சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதையும் காண்கிறோம்.

    மூன்று வருடங்களுக்கு முன்பு அருமை சகோதரர் ஜோ அவர்களால் தொடங்கப்பட்ட இந்த திரிக்கு இன்றைக்கு மீண்டும் நட்சத்திர அந்தஸ்து கிடைக்க செய்ய புனர்நிர்மாணம் செய்யப்படுவதற்கு இரண்டு காரணங்கள்.

    முதல் காரணம் நமது நடிகர் திலகத்திற்கு என்றே தனியாக ஒரு விவாத மன்றம் [separate forum] உருவாக்கப்பட்டபோது அது வரை பதிவு செய்யப்பட்ட, விவரங்களும் விவாதங்களும் நிறைந்த நடிகர் திலகம் தொடர்புடைய அனைத்து திரிகளும் இந்த நடிகர் திலகத்தின் forum-ல் இடம் பெற செய்யப்பட்டது. அதில் விட்டுப் போன ஒரே திரி நமது கர்ணன் திரியாகும். அது Archives எனப்படும் சேகரத்தில் இணைக்கப்பட்டு விட்ட காரணத்தினால் அதை இடம் மாற்ற முடியவில்லை. மொத்தமாக இல்லாவிட்டாலும் கூட அதில் இடம் பெற்றிருக்கும் அரிய பல பதிவுகளை மீண்டும் மீள்பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம்.

    இரண்டாவது காரணம், சென்ற முறை டிஜிட்டல் செய்தபோது செய்ய முடியாமல் போன சில மெருகேற்றல்களை இப்போது செய்து முடித்திருக்கிறார் அருமை நண்பர் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள். முன்பு வெளியானபோது இருந்த சிற்சில குறைகளையும் நீக்கி புதிய பொலிவுடன் மீண்டும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார் திரு சொக்கலிங்கம். சென்ற முறை போல் அதிகமான அரங்குகளில் இல்லாமல் அன்றைய வெளியீட்டில் தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் திரையிடப்பட முடியாமல் போன சில திரையரங்குகளில் படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். இந்த 2015-ல் வெளியாகி விடும். ஆகவே கர்ணன் திரைக்காவியம் மீண்டும் வெளியாக இருக்கும் சூழலையும் இரண்டாவது காரணமாக மனதில் கொண்டு இந்த திரிக்கு மீண்டும் விளக்கேற்றுகிறோம்.

    சென்ற முறை திரியில் பதிவு செய்யப்பட்ட நல்ல பதிவுகள் மீண்டும் மீள் பதிவு செய்யப்படும். அதை தவிர்த்து இப்போது வெளியாக போகும் நேரத்தில் வரபோகும் விஷயங்களுடன் திரியின் பங்களிப்பாளர்கள் கர்ணன் திரைக்காவியம் பற்றி தங்கள் மேலான பதிவுகளை அளிக்கலாம்.

    அனைவரின் மேலான ஒத்துழைப்பை வேண்டும்

    அன்புடன்

  2. Likes Russellmai, uvausan, sss liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டும்

    [Posted by Joe]

  5. #3
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    பீஷ்மர் போரில் தனக்கு பதவி அளிக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக போர் புரிய கட்டளையிட்டு அவமானப் படுத்தும்போது சிம்மமெனப் பொங்கியெழுந்து உறையிலிருந்து வாளை உருவி அவரை தனியாகத் தன்னுடன் போர் செய்ய அழைத்தவுடன் துரியோதனன் சமாதானப் படுத்தி "முதலில் உறையில் வாளைப் போடு" என வேண்டிக்கொள்ள அடுத்த கணம் அந்த வாள் உறைக்குள் போகும் வேகம் இருக்கிறதே! தலைவா! உன்னால் மட்டுமே அது சாத்தியமாகும்.

    பாண்டவர்கள் போரை விரும்புவதில்லை என சபையில் கண்ணன் கூறும்போது "அர்ஜுனன் இருக்கும் போதுமா" என்று அழுத்தமாக உச்சரித்து நையாண்டி செய்வது.

    சபையில் பீஷ்மர் உயிருடன் இருக்கும் வரை போர் புரிவதில்லை என சபதம் செய்து தன் அரண்மனை வந்தவுடன் துரியோதனன் "அவரவர்கள் பாடு அவர்களுக்கு... இடையில் ஏன் பாடு இடிபாடாகிறது. இது எவருக்கேனும் புரிகிறதா? என்று இடித்துரைத்தவுடன் "நண்பன் உனக்கு நான்" என்று ஆத்திரமும்,கோபமும் கொப்பளிக்க துரியோதனனிடம் "பேசாதே" என்று பொங்குவது.

    "பீமா, சாப்பாட்டு ராமா!.. உன் இடம் சமையலறை", என்று பீமனிடம் கேலி பேசி போரிடுவது.

    கண்ணன் தன்னைப் பார்த்து கள்ளத்தனமாக சிரிக்கும் போது தன் முடிவை தெரிந்து கொண்டு "இந்தச் சிரிப்பு எமது முடிவைக் குறிப்பதா? என்று சிரித்துக் கொண்டே புரிந்து கொள்வது...

    ஆஹா... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

    முகம் காட்டும் இடமெல்லாம் முத்திரை பதிக்கும் இடங்கள்.

    இருந்து சரித்திரம் படைத்தவரே !

    இறந்தும் சரித்திரம் படைக்கின்றவரே !


    அன்புடன்,

    நெய்வேலி வாசுதேவன்.

  6. Likes Russellmai, uvausan liked this post
  7. #4
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அருமை சகோதரர் நிகில் முருகன் அவர்கள் தரவேற்றிய ட்ரைலர்



    அன்புடன்

  8. Likes Russellmai, uvausan liked this post
  9. #5
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Times Of India-வில் டிஜிட்டல் கர்ணன் வெளியாவதற்கு முன் படத்தைப் பற்றி வந்த கட்டுரை. அதில் மாஸ்டர் ஸ்ரீதர் அவர்களின் பேட்டியை பார்க்கும்போது படத்தின் ட்ரைலர் விழாவில் அவர் பேசியதுதான் நினைவுக்கு வருகிறது.

    CHENNAI: Master Sridhar was six when he walked into the lavish sets of the 1964 Tamil epic 'Karnan'. He had one scene with legendary actor Sivaji Ganesan. His parents took him to the sets and asked him to be careful as "Sivaji sir" was around.

    "I played the role of Meghanathan, an orphan, who meets Karnan after my character is accused of setting fire to a school. I finished the long scene in one take and Sivaji sir hugged me tightly," says 54-year-old Sridhar, who got 1,000 for his efforts.

    Sridhar is hoping to catch up on the epic that is being re-released in cinemascope on Friday. "Karnan is one of our greatest mythological heroes and Sivaji sir, who literally lived the character, made the movie timeless," he says.


    http://timesofindia.indiatimes.com/c.../12283361.cms?

    அன்புடன்

  10. Likes Russellmai liked this post
  11. #6
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    டிஜிட்டல் முறையில் மெருக்கேற்றப்பட்ட கர்ணன் படம் வெளியான 2012 மார்ச் 16 அன்று நாளிதழ்களில் வந்த விளம்பரம்




    அன்புடன்

  12. Likes Russellmai liked this post
  13. #7
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    2012ம் ஆண்டு தமிழ் சினிமாவின் வரலாற்றில் புதிய சாதனையாக பழைய படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து பிரளயத்தையே ஏற்படுத்தி, எங்கும் கர்ணன், எதிலும் கர்ணன் என்கின்ற அளவிற்கு பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கள் மாணவர்கள் சாரை சாரையாக ஒரு திரைப்படத்தைக் கண்டு களிப்பதை முதன் முறையாக சந்தோஷத்துடன் ஆதரித்த பெருமையைப் பெற்றது நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய கர்ணன் திரைக்காவியம். நம் மய்யம் இணைய தளத்திலேயே கூட தனித்திரி துவக்கி விவாதிக்க வேண்டிய அளவிற்கு ஏராளமான பார்வையாளர்களும் பதிவாளர்களும் பங்கு கொண்ட பெருமையையும் பெற்றது.

    அப்படிப்பட்ட சிறப்பு வாய்நத அந்தத் திரியிலிருந்து மீள் பதிவு செய்ய முடியாவிட்டாலும் அவரவர் தங்களுடைய சேமிப்பில் இருந்து இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

    என்னுடைய கணினியில் சேமிக்கப்பட்ட தொகுப்பிலிருந்து நிழற்படங்கள் இங்கே இடம் பெறுகின்றன.

    Last edited by RAGHAVENDRA; 11th July 2015 at 09:20 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes Russellmai liked this post
  15. #8
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Likes Russellmai liked this post
  17. #9
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Likes Russellmai liked this post
  19. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  20. Likes Russellmai liked this post
Page 1 of 3 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •