Page 247 of 401 FirstFirst ... 147197237245246247248249257297347 ... LastLast
Results 2,461 to 2,470 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2461
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன் அம்மு சார்
    நடிகர் திலகத்தின் அந்தமான் காதலி திரைக்காவிய அழகுத் தோற்றங்களின் அணிவகுப்பில் தெரிவது அவரது வசீகரம் மட்டுமல்ல, அந்த நிழற்படத்திற்குப் பின் உள்ள தங்களுடைய உழைப்பும் தான்.
    தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2462
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரு சிவாஜி செந்தில்
    நாளுக்கு நாள் நடிகர் திலகம் தங்களுடைய வித்தியாசமான அணுகுமுறைகளிலும் கோணங்களிலும் பல புதிய தகவல்களை எங்களுக்கு அள்ளித் தருகிறார்.
    தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. Likes Georgeqlj liked this post
  5. #2463
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    மேற்காணும் அபூர்வ நிழற்படத்திற்கு நன்றி, திரு ராஜபாளையம் திருப்பதி ராஜா. நமது மய்யத்தின் அன்றாட பார்வையாளர்களில் ஒருவர். இவரைப் போல் இன்னும் பலர் நம் மய்யத்தில் இணைந்து கொள்ள ஆர்வமாயுள்ளனர். சிலர் விண்ணப்பித்து விட்டுக காத்திருக்கின்றனர். அவர்களில் நமது தூத்துக்குடி ரசிகர் பெரியவர் திரு நடராஜனும் ஒருவர். விரைவில் இவர்கள் நம் மய்யத்தில் இணைவர் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரு திருப்பதி ராஜா அவர்களுக்கு நமது உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2464
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அவன்தான் மனிதன்

    அவன்தான் மனிதன் நடிகர் திலகம் ரசிகர்களுக்கு மனதளவில் மிக நெருக்கமான படம். பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை எப்போதும் பெறும் படம். ஆகவே இந்த மாதம் அவன்தான் மனிதன் என்றவுடன் பல ரசிகர்களும் உற்சாகமாகி விட்டார்கள். நாம் தேதியை முடிவு செய்து அரங்கத்தையும் செய்த பிறகுதான் அன்றைய தினம் IPL Final என்று தெரிய வந்தது. அன்றைக்கு போய் வைத்திருக்கிறீர்களே போன்ற கேள்வியெல்லாம் வந்தது. நான் சொன்னேன் நாங்கள் World Cup Final -யே பார்த்தவர்கள். ஆகவே இது எங்களுக்கு சஞ்சலம் தரும் விஷயமில்லை என்று. இல்லை CSK இறுதி ஆட்டத்திற்கு வந்தால் என்ற கேள்வி அடுத்து! அவர்கள் கேட்டது போல நடந்தது. ஆனால் என்னதான் CSK என்றாலும் தான் தான் CSK என்பதை நிரூபித்தார் நடிகர் திலகம். ஆம் என்றைக்கும் Cinemavin Super King நடிகர் திலகம்தானே. அரங்கம் நிறைந்து வழிய ஆட்கள் குழுமினர்.

    இந்தப் படத்தில் நடிகர் திலகம் பல நாகசு வேலை காட்டியிருப்பார். அன்றைய நாட்களில் அவர் நடித்துக் கொண்டிருந்த பாணியிலிருந்து மாறுபட்டு அடக்கி வாசித்திருப்பார் தன் மனைவி பிரசவத்தில் இறந்து போய் விட்டாள் என்று தெரிந்ததும் ஒன்றுமே பேசாமல் அப்படியே மெதுவாக நடந்து மடங்கி சரிவாரே அதெல்லாம் கிளாஸ். நேற்றைய முன்தினம் ரசிகர்கள் ஆரம்பக் காட்சி முதலே தயாராகி விட்டனர். காட்சிக்கு காட்சி கைதட்டல். சிங்கப்பூர் காட்சிகள் ஆரம்பித்தவுடன் குதுகலம் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது. ஊஞ்சலுக்கு பூச்சூட்டி பாடல் ஆரம்பித்ததிலிருந்து அலப்பரை உச்சக்கட்டத்திற்கு போக ஆரம்பித்தது. மூன்றாவது சரணம் ஆரம்பிக்கும்போது அனைவரும் ரெடி.

    சுமார் நான்கு வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் திரியில் நண்பர் சாரதி அவர்கள் எழுதிய ஒரு பதிவை தருகிறேன்.

    சென்ற வாரம், என்னுடைய கசின்கள் அனைவரும் ஒரு நிகழ்வுக்காக ஒன்று கூடினோம். எல்லோரும் ஒன்று கூடினால், பேச்சு எங்கெங்கோ சென்று கடைசியில், சினிமாவில் வந்து நிற்கும். சினிமாவில் வந்து கடைசியில், நடிகர் திலகத்தில் வந்து மையம் கொள்ளும். என்னுடைய அண்ணன் மகன், "போன வாரம் ஏதோ ஒரு சிவாஜி படத்தின் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்; உடனே, உன் நினைவு வந்து விட்டது" என்று சொன்னான். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, கலைஞர் டிவியின் தேனும் பாலும் நிகழ்ச்சியில், "அவன் தான் மனிதன்" படத்தில் வரும் "ஊஞ்சலுக்குப் பூச்சூட்டி" பாடல் ஆரம்பித்தது. இது அத்தனை நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் பிடித்த பாடலாயிற்றே! நான் அவனிடம் சொன்னேன் "இந்தப் பாடலின் கடைசி சரணத்தில், அவர் மெரூன் கலரில் சட்டை அணிந்து கொண்டு வருவார். "இலக்கிய ரசத்தோடு என்று ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒரு மாதிரியான போஸில் ஆரம்பிப்பார். பாடிக் கொண்டே, கடைசியில், "ஓவிய சீமாட்டி .." எனும்போது, ஒரு ஸ்டைல் பண்ணுவார். பார்" என்று கூறி, வீட்டில் இருந்த அனைவரும், நினைவுகளில் மூழ்கி, சரியாக அந்தச் சரணம் துவங்கி முடிந்தவுடன், அந்த ஸ்டைல் வரவும், எல்லோரும் தங்களை மறந்து வீட்டிலேயே கைத்தட்ட, வீட்டிலிருந்த மற்றவர்கள் ஓடி வந்து பார்க்க, சுவையாக அந்தப் பகல் கழிந்தது.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

    (17.08.2011)


    இப்படி 10 பேர் கூடும் வீட்டிலேயே இந்தளவிற்கு response என்றால் நூற்றுக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பார்க்கும்போது எப்படி இருந்திருக்கும்? இதுவரை நாம் திரையிட்டதிலேயே உச்சபட்ச அலப்பரை இந்தக் காட்சிக்குத்தான் என்று அடித்துச் சொல்லலாம். அதன்பிறகு அன்பு நடமாடும் கலைக்கூடமேவிற்கும் எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது பாடல்கள் அனைத்திற்கும் அலப்பரை. படத்தின் உயிர்நாடி பாடலான ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா பாடலில் வரும் வரிகளான நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே மற்றும் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் மற்றும் கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் என்ற வரிகளின்போதும் செம அப்ளாஸ். மனிதன் நினைப்பதுண்டு பாடலுக்கும் நல்ல வரவேற்பு.

    வசனங்களைப் பொறுத்தவரை முதல் காட்சியில் மேயராக பதவியேற்கும்போது ஆரம்பித்து இறுதிக்காட்சி வரை நடிகர் திலகத்தின் ஸ்பெஷல் வசனங்களுக்கு சரியான response. குறிப்பாக மேஜரின் எல்லாம் பேசி முடிச்சுடீங்களா எஜமான் என்பதற்கு நடிகர் திலகம் சொல்லும் ஆஹா, ராசி என்பது மோதிரத்திலியா இருக்கு. இங்கே என்று நெற்றியை வரைந்து காட்டுவது, இந்த கைக்கு மேலே இருந்து கொடுத்துதான் பழக்கம், கீழே கையை நீட்டி பழக்கமில்லை என்பது.

    செஸ் விளையாட்டு விளையாட வரும் குட்டி பெண் ராஜா பொம்மை உடைந்திருக்கிறது என்று சொல்ல அதை பார்த்துக்கொண்டே எவ்வளவு உடைஞ்சாலும் ராஜா ராஜாதான் என்ற நடிகர் திலகத்தின் வசனத்திற்கு தியேட்டரே அதிர்ந்தது.

    சுருக்கமாக சொன்னால் start to finish ஆட்டம் அலப்பறை.

    மொத்தத்தில் ஒரு மிக நல்ல மாலைப் பொழுது! நன்றி அனைவருக்கும்!

    அன்புடன்

  7. #2465
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    செந்தில்வேல் அவர்களே,

    உங்களின் அரிமா ஆப்டிகல்ஸ் அரிமா பாய்ச்சல் காணட்டும்!

    உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கட்டும்!


    அன்புடன்

  8. Thanks Georgeqlj thanked for this post
  9. #2466
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Cinemavin Super King
    முரளி சார்,
    தங்கள் ஸ்டைலே தனி...
    நடிகர் திலகம் CSK என்றால் நீங்கள் ESK...
    Ezuthil Super King...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. Likes Russellmai liked this post
  11. #2467
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி -படத்தின் அருமையை விட உங்கள் பதிவு இன்னும் அருமையாக உள்ளது . இடைவேளைக்குப் பிறகு ஒரே சோகத்தை பிழியும் கதை - மகிழ்ச்சியையும் சோகத்தையும் இன்னும் சரியான அளவில் சேர்த்து இருக்கலாமோ என்று நினைக்கத்தோன்றும் - "ஆட்டுவித்தால் யாரொருவர் " இன்னும் எல்லோரையும் ஆட்டி வைத்துக்கொண்டிருக்கும் பாடல் . ராஜா என்றுமே ராஜா தான் என்று ஒரு வசனம் இந்த படத்தில் வரும் - சாந்தி தியேட்டரின் கூரை மவுண்ட் ரோடு முழுவதும் சிதறியது நினைவிற்கு வருகின்றது .. இப்படி இவர் நடித்த மன்னிக்கவும் வாழ்ந்த படங்களில் சில :

    1. பச்சை விளக்கு - சாரதி

    2. கர்ணன்

    3. நெஞ்சிருக்கும் வரை -ரகு

    அன்புடன்

  12. Likes vasudevan31355 liked this post
  13. #2468
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு முரளி அவர்களுக்கு


    அனைத்து ரசிகருக்கும் பிடித்த காட்சிகளை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

  14. #2469
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 75
    (From Mr.Sudhangan's Facebook)


    அது என்ன `ஆண்டவன் கட்டளை’ ?
    1964ம் வருடம் வந்த சிவாஜியின் படம் தான் `ஆண்டவன் கட்டளை’!
    அதே சமயம் இந்த வருட சிவாஜிக்கு பல்வேறு கதாபாத்திரங்கள்!
    இந்த வருடம் வந்த முதல் படம் கர்ணன் பற்றி பார்த்தோம்!
    இந்த வருடம் வந்த இரண்டாவது படம் ` பச்சை விளக்கு ‘
    இந்தப் படம் வேல் பிக்சர்ஸ் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.அரங்கண்ணல் தயாரித்த படம்!
    இந்த படத்தின் மூலக்கதையை ஜி.கே. சூர்யம் என்பவர் எழுதியிருந்தார்.
    வசனத்தை ராம. அரங்கண்ணலும், இறைமுடிமணி என்பவரும் சேர்ந்து எழுதியிருந்தார்கள்.!
    திரைக்கதை – இயக்கம் பீம்சிங்!
    வழக்கம் போல விஸ்வநாதன் – ராமமூர்த்தி! கண்ணதாசன் காம்பினேஷன் தான்!
    இந்தத் தொடரை எழுதும்போது எனக்கு இன்னொரு விஷயமும் சிவாஜி படங்களின் மூலமாக கிடைக்கிறது!
    படத்தின் தரம் எப்படி ? அது கலைப்படமா ? அது நாடகப் பாணியாக இருக்கிறதா என்பதெல்லாம் விமர்சகர்களின் வேலை! ஆனால் ஒரு பாமரனாக சினிமா ரசிகனாக படங்களைப் பார்த்தால், மனித குணங்களின் மேன்மையையும், கீழ்மையையும், காட்டி, அவர்களுக்குள்ள படைப்பாற்றல்களையும், கலையான ரசனைகளையும் கொண்டுவந்தது அன்றைய படங்கள்!

    பாசமலர் படம் என்பது பாசத்திற்கு வலு உள்ளது என்தை தமிழகத்திற்கே உணர்த்திய படம் !
    அண்ணன் – தங்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு உணர்த்திய படம்!
    பாசத்திற்கு முன்னால் பணத்தின் பகட்டு நிற்காது என்பதை உணர்த்திய படம் பார் மகளே பார்!
    அடுத்த கட்டத்திற்கு போன படம் தான் `பச்சை விளக்கு’
    பாசம் என்பது உடன்பிறந்தவர்கள் மீது மட்டுமே காட்டப்படுவதல்ல!
    நன்றியை தெரிவிக்கும் இன்னொரு பாணி பாசம் என்பதை உணர்த்திய படம் தான் ` பச்சை விளக்கு’
    படம் முழுவதுமே இந்த நன்றியுணர்ச்சியும், படிப்பில்லாதவரிடம் இருக்கும் மேன்மையையும் காட்டிய படம்!
    சிவாஜிக்கு இந்தப் படத்தில் ரயில் என்ஜின் ஒட்டுனர் கதாபாத்திரம்! அந்த மாதிரி கரியினால் ஒடும் ரயிலை இந்த தலைமுறையினர் பார்த்திருக்க மாட்டார்கள்! அவருக்கு ரயிலில் உதவியாளர் நாகேஷ்! அதாவது சிவாஜி ரயிலை ஒட்டும்போது, அவர் கரி அள்ளிப் போடுவார்! அந்த நாளில் சென்னை, எழும்பூர், வேப்பேரி, ஜாம்பஜார் பகுதிகளிலிருக்கும் ஆங்கிலோ- இந்தியர் ஆண்கள் பெரும்பாலும் நாகேஷ் இந்த படத்தில் செய்யும் பணியில் தான் இருப்பார்கள்! அந்த ஆங்கிலோ இந்தியர்கள் இங்கேயே தங்கிவிட்டதால் அறைகுறை தமிழில்தான் பேசுவார்கள்!
    அந்த பாத்திரத்தை ஏற்றிருந்தார் நாகேஷ்! அன்றைய நாட்களில் ஆங்கிலோ இந்திய கணவர்களுக்கு ரயிலில் வேலையென்றால், அவர்களின் மனைவிமார்கள் நர்ஸரி பள்ளி ஆசிரியைகளாக இருப்பார்கள்!
    அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு பாலர் ஆங்கிலப் பள்ளிகளில் ஆங்கில அரிச்சுவடியைக் கற்றுக்கொடுத்ததே இந்த ஆசிரியைகள் தான்!
    பச்சை விளக்கு படத்தின் ஆரம்பமே நன்றியுணர்ச்சியின் உச்சகட்டத்தில் தான் துவங்கும்!
    சிவாஜியின் தந்தை நாகையா! அவருக்கு இரண்டு பிள்ளைகள்! மூத்தவர் சிவாஜி! இளையவர் ஏவி.எம்.ராஜன்!
    இருவரும் சிறுவர்களாக இருக்கும்போதே அவர்களின் தாயார் இறந்து போவார்! குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல், நாகையா தவிக்கும்போது அந்த வீட்டில் வேலை செய்யும் பெண், `அய்யா என்னுடைய இந்த சின்னப் பெண்ணை வளர்ப்பது மாதிரி, இந்த பிள்ளைகளையும் நான் வளர்க்கிறேன்’ என்பார்!
    அந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளான சிறுமியும், சிவாஜி சகோதரர்களும் அண்ணன் தங்கைகளாக வளர்வார்கள்! இப்போது அந்த தங்கைக்காக உயிரையே விடுவார் சிவாஜி! சிவாஜி திருமண நாளன்று அந்த வேலை செய்த பெண் இறந்து போவார்! அந்த பெண்மணி யார் என்று மனைவி செளகார் கேட்பார்! தாயில்லாத எங்களுக்கு அந்த ` அன்னம்மா’ தான் தாய்! அந்த அன்னம்மாவின் தங்கை என் சகோதரி’ என்பார் சிவாஜி!
    அதனால்.....! அந்தப் பெண்ணை நன்கு படிக்க வைக்க சிவாஜி தம்பதிகள் குழந்தையே பெற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்வார்கள்! அந்த பெண் தான் வளர்ந்த பின் விஜயகுமாரி! அவரை டாக்டராக்க சிவாஜி படாத பாடு படுவார்!
    தன்னை வளர்த்த தாயின் பிள்ளையிடம் சிவாஜி காட்டும் பாசத்தை வைத்தே சுழுலும் கதை!
    முதியோர் இல்லங்களை தோற்றி வித்தவர்கள் பார்க்க வேண்டிய ஒரு படம்! `
    நன்றி உணர்ச்சிதான் நல்லொழுக்கங்களின் ராணி’ என்பார் ரோமானிய தத்துவ ஞானி சிசெய்ரோ! பின்னர் இந்த நன்றியுணர்ச்சியைப் பற்றி தன் புத்தகத்தில் அப்துல் கலாம் எழுதியிருக்கிறார்!
    ஒரு சமூகம் செழிக்க நன்றியுணர்ச்சி தான் ஒழக்க முதலீட்டின் அஸ்திவார கூறு. என்பார் அப்துல் கலாம்!
    உலகத்தின் மிகப்பெரிய தேவை நன்றியுணர்ச்சி!
    மனித குல மேம்பாட்டின் உச்சநிலை நன்றியுணர்ச்சி!
    இதை இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்து பல நாடுகளைப் பார்த்து, இன்றைக்கு பல லட்சம் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து அப்துல் கலாம் பறைசாற்றுவதை 1964 களில் சிவாஜி எம்.ஜி.ஆர் படங்கள் மூலமாக நம் திரைப்படக் கலைஞர்கள் சொல்லிக்கொண்டிருந்ததை என்ன சொல்ல ?
    கூடவே கலைப் படிப்பை பற்றியும் கலாம் சொல்கிறார்! கலை ரசனை வளராத தேசம் வளராது என்கிறார்!
    காரணம் அப்துல் கலாம் ஒரு வீணை இசைக் கலைஞர்! அவருக்கு ராகங்களின் மேன்மை தெரியும்!
    தமிழ் கவிதைகளின் புனிதத்துவம் புரியும்! இவையெல்லாமே பச்சை விளக்கு படத்தின் விரவிக் கிடக்கும்!
    இந்தப் படத்தின் பாடல்களில் தான் எத்தனை வேறு பாடுகள்!
    இன்றும் முதல் வரியை பாட ஆரம்பித்தால் கடைசி வரி வரையில் பாடக் கூடிய வார்த்தைகள்! இசை!
    சிவாஜி தன் இன்ஜின் டிரைவர் வேலையை முடித்துவிட்டு தன் மேல் கோட்டை தோளில் போட்டபடியும், தன் தலைத் தொப்பியை கையில் பிடித்தபடி, விசில் அடித்தபடி ஒரு ஒய்யார நடை நடந்து பாடலை ஆரம்பிப்பார்!
    இந்த பாட்டில் பல்லவி முதலில் விசிலிலேயே வந்துவிடும்! அவர் வரிகளை ஆரம்பிக்கும்போது நாகேஷ் ரயில்வே நிலைய படிக்கட்டுகளிலிருந்து இறங்கி சிவாஜியுடன் சேருவார்!
    `கேள்வி பிறந்தது அன்று – நல்ல
    பதில் கிடைத்தது இன்று! ஆசை
    பிறந்தது அன்று - யாவும்
    நடந்தது இன்று!
    இந்த பாட்டை சிவாஜி பாடிக்கொண்டே வரும்போது, கூட நடந்து வரும் நாகேஷின் அங்க அசைவுகளை `நடிப்பு’ சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளில் போட்டுக் காட்ட வேண்டும்!
    நடிப்பின் அடிப்படை இலக்கணமே ஆக்சன் அல்ல! ரியாக்சன் என்பார்கள்!
    அதற்கு உதாரணம் இந்தப் பாடல் காட்சியில் வரும் நாகேஷ் தான்!

    (தொடரும்)
    Last edited by KCSHEKAR; 27th May 2015 at 11:03 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  15. #2470
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by murali srinivas View Post
    அவன்தான் மனிதன் திரையிடல் மற்றும் புத்தக வெளியீட்டு விழா
    முரளி சார்,

    மற்ற படங்களை miss பண்ணியதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. ஆனால், "அவன்தான் மனிதன்" திரை வெளியீட்டிற்கு வரமுடிய(வ)தில்லை என்ற கவலையை தங்களின் பதிவு போக்கிவிட்டது. நேரடியாக நிகழ்ச்சியைக் கண்ட திருப்தி ஏற்பட்டது. ஆட்டுவித்தால் யாரொருவர் பாடலை என்று, எங்கு கேட்டாலும், என் மனது சிறிது நேரம் சஞ்சலப்படும். பாடலைக் கேட்கும்போதே, பாத்திரப் படைப்புக்கேற்ற கண்ணதாசனின் வைர வரிகள், நடிகர்திலகத்தின் பாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பில் மிளிர்ந்து, காட்சிகள் நம் கண்ணுக்குள் நிழலாடும்..

    நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  16. Likes gkrishna, kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •