சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் 15000 ரூபாய் +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தகோவையைச் சேர்ந்த மாணவிக்கு இன்று கோவையில் வழங்கப்பட்டது.மேலும் மாணவியின்வருங்கால கல்விகட்டணம் முழுவதையும் திரு .பிரபு அவர்கள் ஏற்றுக்கொள்வதாக சென்னையிலிருந்து போனில் அறிவித்தார்.இந்நிகழ்ச்சி விக்ரம்பிரபு மன்றம் சார்பில்நடத்தப்பட்டது.
விழாவில் மூன்று தலைமுறைகளாக இப்பணிகளைநடிகர்திலகத்தின் குடும்பம் செய்து வருகின்றது என்றும் சிவாஜி அவர்கள் இன்றும் கொடைவள்ளல் கர்ணனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விழாவுக்கு
வந்திருந்தஅனைவரும் உரையாற்றினர்.இப்படி பேசிய அனைவரும் சமுகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்.சிவாஜி மேல் அவர்கள் வைத்துள்ள மதிப்பு நம்மை பெருமைப்பட வைத்தது.
Bookmarks