-
12th June 2015, 10:37 AM
#2891
Senior Member
Seasoned Hubber
Congrats Muthaiyan Ammu Sir for reaching the milestone - 5000
-
12th June 2015 10:37 AM
# ADS
Circuit advertisement
-
12th June 2015, 11:58 AM
#2892
Junior Member
Veteran Hubber
அமைதிக்குப் பின் புயல் ?! குறுந்தொடர்
பகுதி 1 புதிய பறவை
மனித வாழ்க்கையே புயலடிக்கும் தோப்பாகவோ குமுறும் எரிமலையாகவோ அலைகள் ஆர்ப்பரிக்கும் கடலாகவோ மாறிவிடும் வாய்ப்புகள் நமது வாழ்வியல் மேலாண்மையைப் பொறுத்தே அமைகிறது ! உலக நடிப்பியல் விற்பன்னரின் பெரும்பாலான படங்கள் போதிக்கும் பாடங்கள் குடும்ப கட்டமைப்பில் ஏற்படும் விரிசல்கள் எப்படி புயலாக மையம் கொண்டு எரிமலையாக வெடித்து சிதறி சுனாமி அலைகளாக ஆர்ப்பரித்து மன நிம்மதியை விழுங்கி சுமைதாங்கியாக வாழும் தனிமனிதனை உருக்குலையச் செய்கின்றன என்னும் கருத்தினை அடித்தளமாகக் கொண்டவையே!
புதிய பறவை திரைப்படம் இவ்வகை உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு நடிகர்திலகம் உயிரூட்டி உருவகப்படுத்திய ஒரு பரிதாபத்துக்குரிய தனிமனித சஞ்சலத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்! குற்ற உணர்வில் குமைந்துகொண்டு திசை தெரியாது தடுமாறிய நாயகன் மூழ்கும்போது தனக்குக் கிடைத்த உயிர்காக்கும் மிதவையாக தனது வாழ்வில் ஒரு திட்டத்தின் ஸ்கெட்சோடு புதிய பறவையாக ஊடுருவும் நங்கையை காதலிக்க ஆரம்பிக்கும் போதே வேரில் வெந்நீரூற்றிய கதையாக பழைய பறவையின் உருவத்தில் வந்து குதிக்கும் மர்ம மங்கையால் அனுபவிக்கும் சித்திரவதைகள் உலகின் எந்த கதாநாயகனாலும் உருவகப்படுத்த இயலாத திரை வரலாற்று சாதனையே!!
ஆழ்கடலின் அமைதி!
புயலின் தாக்கம்! எரிமலையின் சீற்றம்!! அலைகளின் தாண்டவம்!!!
இதைக் கண்டுணர எங்கேயும் போக வேண்டாம்! நடிப்புப் பறவை சிறகடிக்கும் அழகு நம்மை கிறங்கடிக்கிறதே!!
Cyclones always recur! So is NT...he comes back to receive such bangs from his own son....Deivamagan!
Last edited by sivajisenthil; 12th June 2015 at 12:28 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2015, 01:28 PM
#2893
Junior Member
Platinum Hubber
என்னை வாழ்த்தி ஊக்கபடுத்திய இரு பெரும்திலகங்களின் பக்தர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..
-
12th June 2015, 01:55 PM
#2894
Junior Member
Diamond Hubber
Last edited by senthilvel; 12th June 2015 at 02:06 PM.
-
12th June 2015, 02:43 PM
#2895
Junior Member
Veteran Hubber
TODAY's DECCAN CHRONICLE - TRICHI carrying a write up on the reception of NADIGAR THILAGAM FILMS in TRICHY with reference to ENNAI POL ORUVAN in this article !!! - Thanks Deccan Chronicle !!
- Courtesy - Mr. ANNADURAI - SPECIAL CONVEYNER, ALL INDIA SIVAJI GANESAN FANS ASSOCIATION, TRICHY DIST.
Mr. ANNADURAI & Mr. RAMACHANDRAN ( S.P. CHOWDARY here ) has been extending their extra-ordinary support in making this possible !!! Our SPECIAL THANKS TO THEM !!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2015, 02:55 PM
#2896
Junior Member
Veteran Hubber
MURALI SIR,
I was given to understand through one of his very early post by Mr. Pammalar that THANGAPADHAKKAM film released on 01-06-1974 - BROKE THE COLLECTION RECORD OF THE PREVIOUS COLLECTIONS OF ALL RELEASED TILL THEN .
IF I REMEMBER, I WAS ALSO TOLD THAT THANGAPADHAKKAM HAD GARNERED OVER 1.75 CRORES BEATING A RECORD COLLECTION CREATED IN THE PREVIOUS YEAR ie.,1973.
Mr. RMV HAD ALSO MENTIONED THIS IN SOME FILM RELATED FUNCTION OR SO...is WHAT Mr. Pammalar told me rather many of us through one of his early time post !!!
Could you clarify ?
Regards,
RKS
Last edited by RavikiranSurya; 12th June 2015 at 05:17 PM.
-
12th June 2015, 04:48 PM
#2897
Junior Member
Veteran Hubber
1973இல் நடிகர் திலகத்தின் இடைவெளி இல்லாமல் 7 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன
- பாரதவிலாஸ் - 100 நாட்கள் - 24-03-1973
- ராஜ ராஜ சோழன் - - 31-03-1973 ( 6 நாட்கள் இடைவெளி)
- பொனூஞ்சல் 15-06-73 ( இரண்டு மாத இடைவெளி )
- எங்கள் தங்கராஜா - 100 நாட்கள் 15-07-73 (28 நாட்கள் இடைவெளி)
- கெளரவம் - 100 நாட்கள் 25-10-73 ( முதல் முறையாக மூன்று மாத இடைவெளி)
- மனிதரில் மாநிக்யம் 07-12-73 (40 நாட்கள் இடைவெளி)
- ராஜபார்ட் ரங்கதுரை 22-12-73 (14 நாட்கள் இடைவெளி)
உசுவா வெளிவந்த நாள் மே 11 1973 .....அதற்க்கு முன் வெளிவந்த திரைபடம்
இதயவீணை வெளிவந்த மாதம் 20ஆம் தேதி அக்டோபர் 1972.....
ஆக நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் அது முடிந்து மே 10 நாட்கள் நிறைவடைந்த பிறகு 6 மாத இடைவெளிவிட்டு வெளிவந்த படம் உசுவா ...!
சரி வெளிவந்ததன் பிறகு.... பபொ வெளிவந்த தேதி 10-08-1973 அதாவது மூன்று மாதங்கள் கழித்து !
1973 - 2 Films
உசுவ வெளிவந்த நேரத்தில் அதாவது 11-05-73 தொடங்கி அதன் பக்கத்து திரையரங்கில் அதற்க்கு முன் வெளியான இதயவீணை திரைப்படம் ஓடிகொண்டிருந்ததா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதன் பதில் இல்லை என்ற ஒன்றுதான் இருக்க முடியும்.
மேலும் உசுவா வெளிவரக்கூடாது என்று இருந்த ஆளும் கட்சியின் கெடுபிடி ...இத்தியாதி..இத்தியாதி....சமாச்சாரங்கள் ...இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியாகும் ஒரு பெரிய நடிகரின் படம் வசூல் ஆகாமல் இருக்குமா ?
சரி....
தப படத்தை எடுத்துகொள்வோம்....வெளிவந்த நாள் 01-06-1974.
அதற்க்கு முன் வந்த நடிகர் திலகம் படம் வாணி ராணி வெளிவந்த தேதி 14-04-1974
வெளியாகி ஓடிகொண்டிருந்த அரங்கு சாந்தி பக்கத்தில் உள்ள உசுவ ஓடிய அதே அரங்கில் தினசரி 3 காட்சிகள் நடைபெற்றுகொண்டிருந்தது.
சரி...தப வெளிவந்தபிறகு - என் மகன் - வெளிவந்த தேதி - 21-08-1974.
அதாவது, வாணி ராணி 6 வாரம் கடந்து பக்கத்து திரை அரங்கில் அரங்கு நிறைவுடன் ஓடிகொண்டிருக்கும் நிலையில் தப 01-06-74 வெளியாகிறது...தப வெளியாகி 80 நாள் முடிவடைந்த நிலையில் "என்மகன்" அதுவும் சாந்திக்கு பக்கத்து திரை அரங்கான தேவி காம்ப்ளெக்ஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது...
ஆக இப்படி ஒரு இடைவெளியே இல்லாமல் படங்கள் வெளி வந்துகொண்டிருக்கும் பட்சத்தில் கூட தங்கபதக்கம் முந்தைய சாதனையை முறியடித்து (திரிசூலம் வெளிவரும் வரை )சுமார் ருபாய் ஒன்றே முக்கால் கோடி மொத்த வசூலை பெற்று தனிப்பெரும் சாதனை படைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே !!!
மேற்கூறிய தகவல் திரு பம்மளார் அவர்கள் கூறியதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அது சரியா தவறா என்பதை திரு பம்மலார் இங்கு உரைக்கலாம். அவர் இதை படிப்பாரா என்பது சந்தேகம் ..படித்தாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் பதில் அளிப்பாரா என்பது கேள்விக்குறி..பெரிய ENTREPRENEUR ஆக அவர் வளர்ந்து வரும் நேரத்தில் சரியான தகவலை அவரே இங்கு வந்து வெளியிட அவருக்கு நேரம் இருக்குமா ? காரணம் முன்பும் இதுபோல ஒரு சூழல் வந்தபோது ...அவர் மௌனம் காத்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் !
pinkurippu :
மேலே எழுதியிருப்பதற்கு பதில் ....நீங்களும் இடைவெளிவிட்டு வெளியிட்டிருக்கலாமே...நீங்களும் காங்கிரேச்சுடன் கருத்துவேறுபாடு கொண்டு வெளிவந்திருக்கலாமே என்பது பதிலாக யாரும் எழுதும் பட்சத்தில் அவர்களுக்கு என்னுடைய பதில்...
இதைத்தான் நானும் கூற முயல்கிறேன் என்பதேயாகும் !
Last edited by RavikiranSurya; 12th June 2015 at 05:42 PM.
-
12th June 2015, 08:25 PM
#2898
Junior Member
Senior Hubber
மலைகோட்டை மாநகரில் திரையுலக மன்மதன் சிவாஜியின் வசந்த மாளிகை தொடர் வசூல் வேட்டை
சென்ற மாதம் கெய்ட்டியில் ஹவுஸ்புல் சாதனையை தொடர்ந்து சென்ற வாரம் ஸ்ரீரங்கம் ரெஙராஜவில் கணிசமான வசூலுடன் ஓடியதுடன் தற்போது மீண்டும் திருச்சி உறையூர் அருனாவில் வியாழன் முதல் சூப்பரான வசூலுடன் நடை பெற்று கொண்டிருக்கிறது. வியாழன் வெள்ளி இரண்டு நாட்களும் ரசிகர்களின் விசில் சத்தத்துடன் கம்பீரமாக கலக்கி கொண்டிருக்கிறார் தலைவர்.நேற்று இரவு காட்சியில் குறிப்பாக ஏன் ஏன் பாடலின் போது பலர் நடனமாடியதை திரையரங்கு மானேஜர் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து வருகிற வெள்ளி முதல் திருச்சி முருகனில் பவனி வருகிறார் சின்ன ஜமீன். கெய்டிக்கும் அருணாவிற்கும் முருகனுக்கும் இடையே 1 கிலோ மீட்டர் தூரமே இருக்கும் நிலையில் இப்படி தொடர்ந்து திரையிட்டும் சக்கை போடுபோடுவது வியப்புதான்
திருச்சியில் புதுப்படங்களுக்கு ஷிப்டிங்கு தியேட்டர் கிடைக்கிறதோ இல்லையோ வசந்த மாளிகையை திரையிட்டு வசூலை அள்ளி கொண்டிருக்கிறார்கள்
இறந்தும் கொடுக்கும் எங்கள் வள்ளல் சிவாஜியின் புகழை மீடியாக்கள் பயமின்றி மக்களுக்கு பறைசாற்றுவது பெருமையாக உள்ளது.
Last edited by SPCHOWTHRYRAM; 12th June 2015 at 09:37 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th June 2015, 08:53 PM
#2899
Junior Member
Senior Hubber
தற்போது மீண்டும் திருச்சி உறையூர் அருனாவில் வெள்ளி முதல் சூப்பரான வசூலுடன் நடை பெற்று கொண்டிருக்கிறது. வெள்ளி சனி இரண்டு நாட்களும் ரசிகர்களின் விசில் சத்தத்துடன் கம்பீரமாக கலக்கி கொண்டிருக்கிறார் தலைவர்.நேற்று இரவு காட்சியில் குறிப்பாக ஏன் ஏன் பாடலின் போது பலர் நடனமாடியதை திரையரங்கு மானேஜர் பகிர்ந்து கொண்டார்.
வெள்ளி சனி என்பதை வியாழன் வெள்ளி எனப்படிக்கவும்
-
12th June 2015, 08:58 PM
#2900
Junior Member
Veteran Hubber
Originally Posted by
SPCHOWTHRYRAM
மலைகோட்டை மாநகரில் திரையுலக மன்மதன் சிவாஜியின் வசந்த மாளிகை தொடர் வசூல் வேட்டை
சென்ற மாதம் கெய்ட்டியில் ஹவுஸ்புல் சாதனையை தொடர்ந்து சென்ற வாரம் ஸ்ரீரங்கம் ரெஙராஜவில் கணிசமான வசூலுடன் ஓடியதுடன் தற்போது மீண்டும் திருச்சி உறையூர் அருனாவில் வெள்ளி முதல் சூப்பரான வசூலுடன் நடை பெற்று கொண்டிருக்கிறது. வெள்ளி சனி இரண்டு நாட்களும் ரசிகர்களின் விசில் சத்தத்துடன் கம்பீரமாக கலக்கி கொண்டிருக்கிறார் தலைவர்.நேற்று இரவு காட்சியில் குறிப்பாக ஏன் ஏன் பாடலின் போது பலர் நடனமாடியதை திரையரங்கு மானேஜர் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து வருகிற வெள்ளி முதல் திருச்சி முருகனில் பவனி வருகிறார் சின்ன ஜமீன். கெய்டிக்கும் அருணாவிற்கும் முருகனுக்கும் இடையே 1 கிலோ மீட்டர் தூரமே இருக்கும் நிலையில் இப்படி தொடர்ந்து திரையிட்டும் சக்கை போடுபோடுவது வியப்புதான்
திருச்சியில் புதுப்படங்களுக்கு ஷிப்டிங்கு தியேட்டர் கிடைக்கிறதோ இல்லையோ வசந்த மாளிகையை திரையிட்டு வசூலை அள்ளி கொண்டிருக்கிறார்கள்
இறந்தும் கொடுக்கும் எங்கள் வள்ளல் சிவாஜியின் புகழை மீடியாக்கள் பயமின்றி மக்களுக்கு பறைசாற்றுவது பெருமையாக உள்ளது.
Sir,
பல மீடியாக்கள் கட்சி சார்பு பதிவுகள் அல்லாமல் இப்படி உண்மைகளை இப்போதாவது எழுத தொடங்கியிருப்பது வரவேற்க வேண்டிய ஒரு விஷயம்.
என்றும் திரையுலகின் வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு இரண்டு நடிகர்களுடயது முதலாமவர் நமது நடிகர் திலகம் அவர்களின் திரைப்படம் இரேண்டாமவர் மக்கள் கலைஞர் திரு ஜெய்ஷங்கர் அவர்கள்.
புதிய தயாரிப்பாளர்கள், புதிய இயக்குனர்கள், புதிய கதைக்களம், இப்படி தமிழ் திரையுலகிற்கு பல புதிய அம்சங்களை அஞ்சாமல், தயங்காமல் எல்லா கால கட்டத்திலும் கொண்டுவந்ததில் முதன்மயாளர்களாக விளங்கியது நடிகர் திலகமும் மக்கள் கலைஞரும் தான் என்றால் அது மிகையில்லை.
வெளி தயாரிப்பாளர்கள் யாரை வைத்து அதிக படம் எடுத்தார்கள்...யாரை வைத்து சம்பாதித்தார்கள் என்பதை LOGICALLY STATISTICAL DATA வைத்து பார்த்தால் உண்மை விளங்கும் !
பல மாயைகள் இதனால் தவிடு பொடியாகி, ஒருநாள், உண்மையான தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வியிருந்தது...இறுதியில் தர்மமே வென்றது " என்ற பழமொழி நிலைபாடுக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. !
RKS
Last edited by RavikiranSurya; 12th June 2015 at 09:04 PM.
Bookmarks