-
29th June 2015, 09:58 PM
#3391
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
29th June 2015 09:58 PM
# ADS
Circuit advertisement
-
29th June 2015, 10:35 PM
#3392
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
29th June 2015, 11:42 PM
#3393
Junior Member
Devoted Hubber
Courtesy Mr.Sudhangan Face book.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...b0bce020cbcb9f
செலுலாய்ட் சோழன் – 81
``புதிய பறவை’ படத்திற்கு எழத ஒருவழியாக ஆருர்தாஸ் ஒப்புக்கொண்டார்.
அதற்காக ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸையும் கொடுத்தார் சிவாஜி!
உடனே சிவாஜி ஆரூர்தாஸிடம் கேட்டார்.
`எங்க ஒக்காந்து எழுதப் போறே ?’
ஆரூர்தாஸ்: `எங்கே சொல்றீங்களோ அங்கே’
சிவாஜி : `ஒண்ணு செய்யறீயா ? ராயப்பேட்டை சண்முக முதலித் தெருவில் நான் இருந்த வீடு இப்ப காலியாக இருக்கு.அதோட மொட்டை மாடியில் நான் ஒய்வெடுக்கறதுக்காக ஒரு சின்ன கீத்துக் கொட்டகை போட்டு வெச்சிருக்கேன். அமைதியா இருக்கும். நல்ல காத்து வரும். அது ஒனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.அங்க உக்காந்து எழுதறியா ? ஒரு தொந்தரவு இருக்காது’
ஆ.தாஸ்: சரி.... அதுல ஒரு சின்ன கண்டிஷன் ?
சிவாஜி : என்ன ?
ஆ.தாஸ்: ` தேவர் பிலிம்ஸ் எழுத்து வேலை கூட ஷீட்ட்ங்கிற்கும் வந்து `டயலாக்’ சொல்லிக் கொடுக்கணும்னு தேவரண்ணணும் எம்.ஜி.ஆரும் சொல்லி இருக்காங்க. ஆரம்பத்துலேர்ந்தே அப்படித்தான். அதனால ராத்திரி ஒம்பது மணிக்கு மேலதான் நான் `புதிய பறவை’க்காக எழுத முடியும்.
சிவாஜி : உன் செளகரியப்படி செய். அப்போ, நம்ம பையன் ராஜீவையும், டிரைவர் முனுசாமியையும் உங்கூட தங்க வெச்சிடறேன். நீதான் சிகரெட் குடிக்க மாட்டியே!.வயத்துக்கு வஞ்சகமில்லாமல் சாப்பிடுவே.ன்னு எனக்குத் தெரியும். எதிர்ல மெயின் ரோடில `அமீன் கபே’ இருக்கு. அங்கேயிருந்து ஒனக்கு வேணுங்கறதை வாங்கி சாப்பிட்டுக்க.சிரமத்தை பாக்காம எழுதி முடிச்சிட்டின்னா, உடனே ஷீட்டிங்க ஆரம்பிச்சு ஆக்ஸ்டல ரீலிஸ் பண்ணிடலாம். பிசினஸ்ஸெல்லாம் ஆயிடுச்சு சரி... வேற என்ன வேணும் ?’
ஆ.தாஸ்: வேறு ஒண்ணும் வேண்டாம்
என்றபடி சிவாஜி காலைத் தொட்டு வணங்கிவிட்டு கிளம்புகிறார்.
சிவாஜி பாசத்தோடு கட்டியணைத்து விடை கொடுக்கிறார்.
அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை பகுதி முழுவதும் உறங்கிக் கொண்டிருக்க , அந்த நள்ளிரவில் `கொலைகாரன் பேட்டை என்றழைக்கப்பட்ட இடத்திலிருந்த சண்முக முதலித் தெருவில் ஒரே ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒலை வேயப்பட்ட அறையில் மட்டும் ஒளி தெரிகிறது.
உள்ளே பாயா, இடியாப்பம் சாப்பிட்டுவிட்டு ஒருவர் எழுதித் தள்ளிக்கொண்டேயிருக்கிறார் ஒருவர்
அவர்தான் ஆரூர்தாஸ்!
இரவு பகல் தூக்கமில்லாமல் எழுதிக் கொண்டேயிருக்கிறார்!
காலையில் எம்.ஜி.ஆர் படம்!
இரவில் சிவாஜி படத்திற்கான எழுத்து வேலைகள்
இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கும் தெரியும்.
`அன்புக்கு கட்டுப்பட வேண்டியதுதான். உடம்பையும் பாத்துக்கணுமில்லே’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர்
இந்த இடத்தில் ஆருர்தாஸ் நினைவு கூர்ந்த எம்.ஜீ.ஆர் பற்றிய ஒரு தகவலை இங்கே பதிவு செய்தே ஆகவேண்டும்.
ஒரு நாள் மதிய உணவுக்கான இடைவேளை.
ஒப்பனை அறையில் எம்.ஜி.ஆருடன் உணவருந்தி விட்டு, அங்கிருந்த நீண்ட சோபாவில் உறக்கக் கலக்கத்தில் இருந்திருக்கிறார் ஆருர்தாஸ்!
வழக்கம் போல தன் கையிலிருந்த `பாக்கெட் ரேடியோ’வில் எம்.ஜி.ஆர் மதிய செய்தி கேட்டிக்கொண்டிருந்தார்
தூக்க கலக்கத்திலிருந்த ஆரூர்தாஸ் அப்படியே சாய்ந்துவிட்டார்.
சற்றைக்கெல்லாம் சட்டென எழுந்தார் ஆரூர்தாஸ்.
இப்போது அவருடைய தலை எம்.ஜி.ஆரின் தொடையில்!
திகைத்து எழுந்து `மன்னிக்கணும் அண்ணே’ என்று சொல்லியிருக்கிறார்!
`பரவாயில்ல! நல்ல தூக்கத்தில் ஒரு பக்கம் சாஞ்சிட்டிங்க!
தலை தொங்குச்சு. கழுத்து சுளுக்கிடுமேன்னுதான் நான் உங்க தலையை எடுத்து என் தொடையில் வைத்துக்கொண்டேன்’ என்றாராம் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்டதும், அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டதாம் ஆருர்தாஸுக்கு1
எழு இரவுகள் போராடி ` புதிய பறவை’ படத்துக்கான முழு வசனத்தையும் எழுதி முடித்து சிவாஜியிடம் தெரிவித்திருக்கிறார் ஆருர்தாஸ்!
முழு வசனத்தையும் கேட்க சிவாஜி ஒரு நாளை ஒதுக்கிக் கொண்டார்!
கதை, வசனம் படிக்கும்போதெல்லாம் கிழே மொஸைக் தரையில் உட்கார்ந்து பின்னால் சோபாவில் சாய்ந்தபடி காலை நீட்டிக்கொண்டு கேட்பதைத்தான் அவர் பெரிதும் விரும்புவார்!
ஆரூர்தாஸ் படிக்க ஆரம்பிக்கிறார்!
இப்போது க்ளைமாக்ஸ் காட்சி!
தன்னை உயிருக்குயிராய் காதலித்த சரோஜாதேவி ஒரு போலீஸ் உளவாளி என்பது சிவாஜிக்கு தெரிய வருகிற காட்சி!
இந்த காட்சியின் வசனங்கள் மிகவும் அந்த நாளில் பிரபலமானவை!
சரோஜாதேவியின் கதாபாத்திரத்தின் பெயர் லதா!
சிவாஜிசொல்ல ஆரம்பிப்பார்!
`லதா! என் மேல் படையெடுத்து என்னை வீழ்த்த உன் கைக்கு கிடைச்ச ஆயுதம், காதல்ங்கற மென்மையான மலர்தானா ? அதை வெச்சா என்னை அடிச்சிட்டே?’
முழு வசனத்தையும் கேட்டு முடித்த சிவாஜி, ஆரூர்தாஸின் கையை பிடித்துக் குலுக்குகிறார்!
`ஒங்கிட்ட நான் என்ன எதிர்பார்தேனோ – அதே மாதிரி - ஏன் அதுக்கு மேலயும் ரொம்ப நல்லா எழுதியிருக்கே!! `காங்கிராட்ஸ்’ இதுக்காகத்தான் உன்னை வற்புறுத்தி எழுத வெச்சேன்.
`புதிய பறவை’ படப்பிடிப்பு நெப்டியூன் ஸ்டுடியோவிலும் கோடம்பாக்கம் விஜயா ( வாகினி) ஸ்டுடியோவிலும் தொடர்ந்து நடந்தது!
இப்போது க்ளைமாக்ஸ் எடுத்து முடிந்து எல்லோரும் கிளம்புகிற நேரம்!
ஆரூர்தாஸ் சிவாஜியிடம் போய் ` அண்ணே ! ஒரு நிமிஷம்!
செட்டை விட்டு வெளியே போய்க்கொண்டிருந்த சிவாஜி ஒரு நிமிடம் நின்றார்!
`என்னப்பா ?’ என்றார்
சரோஜாதேவி ` என்ன நம்புங்க கோபால்! என்னை நம்புங்கன்னு’ உங்க கால் விழுந்து அழும்போது நீங்க பேசாம போறீங்க! அது சரியாக இல்லை! அதோட உங்க கேரெக்டர் நிறைவு பெற்றதாக நான் நினைக்கலை! அந்த இடத்தில் நீங்க ரெண்டு வார்த்தை பேசினா நல்லா இருக்கும்’ என்றாராம் ஆருர்தாஸ்!
`நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறே?’ இது சிவாஜி
`பெண்மையே நீ வாழ்க! உள்ளமே உனக்கு ஒரு நன்றி!’ இதை சொன்னிங்கன்னாத்தான் சரோஜாதேவி உங்களை காதலிச்சது உண்மைதான் என்கிறதை நீங்க ஒப்புக் கொண்ட மாதிரியிருக்கும். அப்பதான் ஒங்க கதாபாத்திரத்தை நியாயப்படுத்த முடியும். உங்க கதாபாத்திரத்தின் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படும்!
இதை அவர் சொன்னதும் சிவாஜியின் முகபாவனை மாறியது!
`என்னப்பா படப்பிடிப்பு முடிந்து ` பேக் அப்’ சொன்னபிறகு இதைச் சொல்றியே?’
` இப்பதாண்ணே எனக்கு இது தோணிச்சு!
காட்சி மறுபடியும் எடுக்கப்பட்டது!
12.09.1964 `புதிய பறவை ‘ படம் வெளியானது!
சரோஜாதேவியின் அன்றைய இளம் பருவத்து எழில் தோற்றமும், செளகார் ஜானகியின் அந்தப் பாத்திரத்திற்கேற்ற மெருகேறிய சிறந்த நடிப்பும் ` புதிய பறவை’ படத்திற்கு புதிய பொலிவை கொடுத்தது!
படத்தின் இன்னொரு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ! படத்தின் பாடல்கள் அதன் இசை!
அதற்காக தனி அத்யாயமே எழுதலாம்!
அதுவும் அந்த ` எங்கே நிம்மதி’ பாட்டு எப்படி உருவானது ?
(தொடரும்)
Last edited by Barani; 29th June 2015 at 11:44 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
30th June 2015, 08:57 AM
#3394
Junior Member
Senior Hubber
மதுரைையச் சேர்ந்த மக்கள் தலைவரின் அன்பு ரசிகர் திரு.டி.ஆர்,ராஜன் அவர்கள் மணிவிழா காண்கிறார். அவரை வாழ்த்தி ரசிகர்கள் வைத்திருக்கும் வாழ்த்து பேனர்கள்.
60 வயது நெருங்கிய அவர் தலைவரைப் பற்றி பேசினாலோ அல்லது தலைவர் படம் வந்தாலோ 16 வயது இளைஞன் போல் மாறி விடுவார். அவர் நீடுழி வாழ அனைவரும் வாழ்த்தி நாம் வணங்கும் கடவுள் சிவாஜியை வணங்குவோம்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
30th June 2015, 08:59 AM
#3395
Junior Member
Senior Hubber
மதுரைையச் சேர்ந்த மக்கள் தலைவரின் அன்பு ரசிகர் திரு.டி.ஆர்,ராஜன் அவர்கள் மணிவிழா காண்கிறார். அவரை வாழ்த்தி ரசிகர்கள் வைத்திருக்கும் வாழ்த்து பேனர்கள்.
60 வயது நெருங்கிய அவர் தலைவரைப் பற்றி பேசினாலோ அல்லது தலைவர் படம் வந்தாலோ 16 வயது இளைஞன் போல் மாறி விடுவார். அவர் நீடுழி வாழ அனைவரும் வாழ்த்தி நாம் வணங்கும் கடவுள் சிவாஜியை வணங்குவோம்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th June 2015, 09:49 AM
#3396
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
30th June 2015, 10:33 AM
#3397
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
வசந்த மாளிகை முதல் நாள் ஓபனிங் ஷோ பார்பதற்காக டிக்கெட்டிற்கு அலைந்தது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
இந்த தொடரில் பலமுறை நான் மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். பிற்காலத்தில் ஒரு காட்சியை மட்டும் ஒதுக்கி அந்த ஷோவிற்குண்டான அனைத்து டிக்கெட்டுகளும் மன்றத்திடம் கொடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவது அனைவரும் அறிந்திருக்க கூடும். அன்றைய நாட்களில் ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டிக்கெட்டுகள் மன்றத்தினரிடம் கொடுக்கப்பட்டு அவை ரசிகர்களுக்கு அல்லது கேட்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். நான் முன்பே குறிப்பிட்டிருப்பது போல் எங்களைப் போன்றவர்களுக்கு இதில் உள்ள மிகப் பெரிய advantage என்னவென்றால் வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டாம். அதுவும் தவிர மன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. என் கஸினுக்கு மன்ற ஆட்களை தெரியும் என்பதனால் வாங்கி விடுவோம். இந்த டிக்கெட்டுகள் ரீலிசிற்கு ஒரு வாரம் முன்னதாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் 1972-ல் முதன்முறையாக வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். 72-ல் முதல் படமான ராஜா ஜனவரி 26 ரிலீஸ். அது புதன்கிழமை. அதன் பிறகு வெளியான நான்கு படங்களும் [ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே மற்றும் தவப்புதல்வன்] சனிக்கிழமை வெளியானதால் தானாகவே முதல் நாள் 4 காட்சிகள் என்று ஆகிவிட்டது. ஆனால் இது வெள்ளிக்கிழமை என்பதனால் 3 காட்சிகள்தான் இருக்குமா அல்லது காலைக்காட்சி போடுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அன்று 4 காட்சிகள் என்று விநியோகஸ்தர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட மார்னிங் ஷோதான் ஓபனிங் ஷோ என்பது confirm ஆனது.
ஸ்கூல் வேறு லீவ் ஆகவே ஓபனிங் ஷோ டோக்கன் வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தோம் நமக்குதான் அனைவரையும் தெரியுமே அது மட்டுமல்ல இரண்டு டிக்கெட்டுகள்தானே என்ற நினைப்பில் என் கஸின் சற்று தாமதமாக போய் விட ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் எல்லாம் விற்று விட்டன. அன்றைய நாட்களில் ரசிகர்களின் முதல் சாய்ஸ் ஓபனிங் ஷோவாக இருக்கும். அதற்கு அடுத்த சாய்ஸ் நைட் ஷோ. பிறகு ஈவினிங் ஷோ. கடைசி சாய்ஸ்தான் மாட்னி ஷோ. எவ்வளவு முயற்சித்தும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்கவில்லை. மாட்னி ஷோ டிக்கெட் மட்டும்தான் இருந்தது என்பதனால் அதை வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். எப்படியாவது ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் தேற்றி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் மார்னிங் ஷோ டிக்கெட் கிடைக்கவேயில்லை. வீட்டருகே நியூசினிமா தியேட்டர் என்பதனால் காலையில் தியேட்டர் பக்கம் போய் பார்த்தோம். பயங்கரமான கூட்டம். தெரிந்தவர்கள் யாரைக் கேட்டாலும் இல்லை இல்லை என்றே கை விரித்து விட்டார்கள். ராஜா, பட்டிக்காடா பட்டணமா தர்மம் எங்கே போன்ற படங்களுக்கு எங்களுக்கு உதவி செய்த அதிர்ஷ்டம் இந்த முறை கை கொடுக்கவில்லை.
எப்படா 1 மணி ஆகும் என்று காத்திருந்து வீட்டை விட்டு கிளம்பி தியேட்டருக்கு போய் விட்டோம். 1.15 மணி வாக்கில் தியேட்டரின் மெயின் கேட் திறந்து வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வெளியே வர ஆரம்பிக்க திடீரென்று ஒரு பெரிய கூட்டம் வெளியே வந்து சந்தோஷக் கூச்சலிட பட்டாஸ் வாலாக்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன. வெளியே வருபவர்கள் அப்படியே உற்சாகமும் சந்தோஷமும் துள்ள படம் டாப் என்று ரிசல்ட் சொல்ல (நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல சூப்பர் என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை) அந்த ஏரியாவே ஜெகஜோதியானது.
தெரிந்தவர்கள் முகம் தென்பட அவர்களிடம் படம் பற்றி கேட்கிறோம். அந்நேரம் கஸினின் நண்பர்கள் குழாம் ஒன்று படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறது. அதில் ஒருவர் என் கஸினிடம் " காலையிலே எங்கடா போனே? டிக்கெட் எக்ஸ்ட்ரா இருந்தது. சரி உனக்கு கொடுக்கலாம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். நீ வெளியே போயிட்டேன்னு சொன்னாங்க. தியேட்டருக்கு வந்து பார்த்தேன். உன்னை காணோம். நம்ம பசங்க அவன் (என் கஸின் பெயர் சொல்லி) எப்படியாவது டிக்கெட் வாங்கியிருப்பான்னு சொன்னதனாலே அதை வேற ஆட்களுக்கு கொடுத்துட்டேன்" என்று சொல்ல எத்தனை டிக்கெட்-னு என் கஸின் கேட்க இரண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்ததுனு நண்பர் சொல்ல எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது நான் விளக்காமலே அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். நாங்கள் காலையில் தியேட்டர் போய் டிக்கெட்டுகளுக்காக அலைந்த நேரத்தில் அந்த நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரமாகி விட்ட காரணத்தினால் நாங்கள் உள்ளே செல்வதற்கு மெயின் கேட் பக்கத்தில் இருக்கும் சைடு கேட் அருகே சென்றோம். மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் அனைவரும் அந்த கேட் வழியாகதான் போக வேண்டும் என்று சொல்லி விட்டதால் அங்கே போய் நின்றோம். கையில் டிக்கெட் இருந்தும் உள்ளே போவதற்கு நாங்கள் பட்ட பாடு?
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 8 Likes
-
30th June 2015, 01:51 PM
#3398
Senior Member
Devoted Hubber
திரு முரளி சார்,
ஆவலை அடக்க முடியவில்லை அதிக இடைவெளி தராமல் கூடிய சீக்கிரம் அடுத்த பதிவை இடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
30th June 2015, 05:48 PM
#3399
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
-
30th June 2015, 05:49 PM
#3400
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
Bookmarks