Page 30 of 400 FirstFirst ... 2028293031324080130 ... LastLast
Results 291 to 300 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #291
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நண்பர் gkrishnaa அவர்களே,

    உங்கள் கோபாலா தலைப்பிலான பாடல்களுக்கு அனைவருமே வழிமொழிந்து விட்டோம். பலர் பாடல்களையும் எடுத்துக் கொடுத்து விட்டனர். நீங்கள் கோபாலனோடு நிறுத்திக் கொள்ளாமல் க்ருஷ்ணாவிலும் தொடரவேண்டும்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. Thanks gkrishna thanked for this post
    Likes uvausan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #292
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    நண்பர் gkrishnaa அவர்களே,

    உங்கள் கோபாலா தலைப்பிலான பாடல்களுக்கு அனைவருமே வழிமொழிந்து விட்டோம். பலர் பாடல்களையும் எடுத்துக் கொடுத்து விட்டனர். நீங்கள் கோபாலனோடு நிறுத்திக் கொள்ளாமல் க்ருஷ்ணாவிலும் தொடரவேண்டும்.
    கிரிதர கோபாலா பாலா
    கிரிதர கோபாலா பாலா
    கிரிதர கோபாலா

    எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் கானக்குயில் எம் எஸ் சுப்புலட்சுமியின் 'மீரா' திரைபடத்தில்

    gkrishna

  5. Likes kalnayak, chinnakkannan liked this post
  6. #293
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    கோபாலா

    நடிகர் திலகம் திரியில் நண்பர் முத்தையன் அம்மு வெளியிட்ட நிழல் படங்கள் மற்றும் முரளி சார்/ராகவேந்தர் சார் பதிவிட்ட அவன்தான் மனிதன் பாடல்

    கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
    அது கை அளவே ஆனாலும் கலங்க மாட்டேன்


    உள்ளத்தில் உள்ளது தான் உலகம் இது அறிவிற்கு புரிகிறதுஆனால் மனதிற்கு புரியவில்லையே ஆட்டுவிப்பவனும் நீயே அரவணைப்பவனும் நீயேஉன்னால் முடிகிறது
    என்னால் முடியவில்லயே கண்ணா (சின்ன) ! கல்நாயக் மன்னா ! ரவி அண்ணா ! கோபாலா திண்ணா

    சில தத்துவ பாடல்கள் மனதை சுமை ஆக்கும் அல்லது போரடிக்கும் ஆனால் இந்த பாடல்
    மனதில் ஒரு குறுகுறுப்பு கேட்கும்போது ஒரு இனிமை, எதார்த்தம் நிறைந்து ஆறுதல் அறிவுரை



    பாடலின் வரிகள் அனைத்தும் மனதில் கல்வெட்டாக பதித்து வைக்க வேண்டியவை..கவியரசர் வரிகளுக்கு MSV இசை உயிராக இருக்க TMS குரல் இதய துடிப்பாக மாற கேட்கும் நமக்கோ வாழும் நொடியின் நிதர்சனத்தை சொல்லிவிட்டு போகிறது



    gkrishna

  7. Likes uvausan, kalnayak liked this post
  8. #294
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..

    ரவி, கல் நாயக் கிருஷ்ணா இனிய மதிய வணக்கம்..
    உள்ளே வந்து படித்தாலும் கூட பின்னூட்டம் இட இயலவில்லை..

    ரவி, காகிதத்தில் கப்பல் செய்து, யார் தருவார் இந்த அரியாசனத்திற்கும் அன்னைக்கும் லிங்க் பண்ண உஙக்ளால் மட்டுமே முடியும்..

    கிருஷ்ணா.. என்னா பாட்டு தெரியுமா அது..

    ஸிச்சுவேஷன் இதானாம்.. ந.தி வீட்டுக்குப் போறச்சே ஒரு கொயந்தை வருது கிஷ்ணா வேஷம் போட்டுக்கிட்டு.. அதுக்கு எழுதணுமாம்.. சொன்னாங்க.. எழுதிட்டேன்..இந்தா ட்யூன் போட்டுக்கறது உன்னோட பாடு..

    வாட்.. எம்.எஸ்.வி கவிதையை வாங்கி ப்படிக்க..வாவ் வரிகள்..

    தலையைக் கலைத்து எண்ணங்களை முன்னிலைப் படுத்தி ட்யூன் போட்டுப் பார்த்தால் ம்ஹூம் சிக்கவேயில்லை..நிறைய ட்யூன் போட்டுப் பார்த்தாலும் வார்த்தைகள் அமர மறுக்க ஒரு சொர்ண கணப் பொழுதில்..யுரேகா..ட்யூச் சிக்கி வார்த்தைகள் அமர வந்த பாடல் தான் ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா.. (இப்படி எம் . எஸ்.வி யே சொல்லவில்லை..கொஞ்சம் ட்யூன் போட சிரமப்பட்ட பாடல் என்று சொல்லியிருக்கிறார்..

    http://www.adrasaka.com/2013/02/10_14.html )

    படம் (சின்ன வயதில்) பார்க்கையில் கண்கள் கலங்க வைத்து உணர்ச்சி வசப்படவைத்த (பக்கத்திலிருந்த கேர்ள்ப்ரண்ட்டை அணைக்கப் பார்க்க அவள் விலக்..ச்ச் டூப்புங்க.. அப்ப நான் ரொம்பச் சின்னப் பையன்..) பாடல் இது

    இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.. எனக்குப் பிடித்த ப்ளாட்டின வரிகள் இவை..

    ம்ம் கிருஷ்ணா கிருஷ்ணா ஜி..
    Last edited by chinnakkannan; 27th May 2015 at 02:32 PM.

  9. Thanks gkrishna thanked for this post
    Likes gkrishna liked this post
  10. #295
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரவி, ராஜேஷ் ரசித்தமைக்கு நன்றி

    ராஜேஷ்.. கொடிஅசைந்ததும் காற்று வந்ததா வும் தொட்டால் பூ மலரும் பாடலும் அன்று படைக்கப் பட்ட தேன்கள்.. இட்டமைக்கு நன்றி..

  11. #296
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல் 12: "நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    இலயராசாதான் பாடி கிறாரு. அப்ப அவருதானே மியூசிக் போட்டு கீறனும். என்னமோ போங்க இரண்டில் ஒன்றா படம் பார்த்தேனா இல்லையான்னே தெரியல. நம்ப ராம்கி ஆக்ட் கொடுத்து கிறாரு. நதியா கீறாங்க. ராசாவோட சித்ரா பாடி கீறாங்க. பாட்டு ஆரம்பத்துல கீரோயின் தலையிலேந்து விலர பூவை எடுத்து வச்சிகினு இன்னாத்துக்கு 'நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்'-னு கீரோ பாடணும். அடுத்தது சொல்றாரு கேட்டுக்குங்க - காதலின் கோயில் வாழும் தேவிக்காகன்னு. இன்னாத்த சொல்றது? நீங்களே கேட்டுக்குங்க.

    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  12. Likes gkrishna, uvausan, chinnakkannan liked this post
  13. #297
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நான் ஒரு சந்தர்ப்பத்தில் - சில நாள் சென்று போடலாம் என இருந்தபாட் கல் நாயக்.. ம்ம் ஓ.கே ஓகே அண்ட் தாங்க்ஸ்..

    கண்ணா பாட் போட்டாரா கிருஷ்ணா. சடுதியில் ஐந்து நிமிடத்திலெழுதிப் பார்த்தேனா..இதோ..

    இன்னுமென்ன வேண்டுமென்று கண்ணா என்னை
    ..இயற்கையான சிரிப்புடனே கேட்டே விட்டாய்
    வண்ணமென வாலிபந்தான் போச்சே பின்னர்
    ..வாட்டமுற வைக்கின்ற முதுமை கூட
    கண்சிமிட்டிப் பார்த்துத்தான் சொல்லும் நன்றாய்
    ..காலனவன் எண்ணுகின்றான் நாட்க ளென்று
    எண்ணங்கள் மயங்குகையில் கண்ணா கண்ணா
    ..ஏற்றமுற உன்நினைவே வேண்டும் கண்ணா..

  14. Likes gkrishna liked this post
  15. #298
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நண்பர் gkrishna அவர்களே,

    அருமை. அருமை. எம். எஸ். எஸ். அவர்களின் பாடலுடன் பிரமாதமாக துவங்கிவிட்டீர்கள். கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது. நன்றி. தொடருங்கள்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  16. Thanks gkrishna thanked for this post
  17. #299
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நன்றி ராஜேஷ் ஜி,

    நீங்கள் பதிவிட்ட இரண்டு பாடல்களும் எனக்கும் மிக பிடித்தமானவை. கொடி அசைந்ததும் பாடலில் நடிகர் திலகத்தின் நடையும், தொட்டால் பூ மலரும் பாடலில் மக்கள் திலகத்தின் ரசனையும் ரசிக்கத் தகுந்தவை. முதல் பாடல் கவியரசர் அல்லவா. இரண்டாம் பாடல் வாலிபக் கவிஞர். அற்புதமான கவிதைகள். இரண்டிற்கும் இசை அமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்கள். இரண்டிலும் உடன் நடித்தவர் கன்னடத்துப் பைங்கிளி. காட்சி அமைப்பிலும் சிறந்தொங்கிய பாடல்கள். வழங்கியமைக்கு மீண்டும் நன்றி.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  18. #300
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    chi.ka.,

    அவன்தான் மனிதன் படம் பற்றி நடிகர் திலகம் திரியில் முரளி அவர்கள் பதிவிட்ட பின்பு அங்கும் இங்கும் அதிகமாக விவாதிக்கப்படும் பாடலாக 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாடல் விளங்குகிறது. நான் மிகச் சிறிய வயதில் மதுரையில் (எந்த திரை அரங்கம் என்று கூட தெரியவில்லை) என் அம்மாவுடன் போய் பார்த்து என்றும் என் நினைவில் வாழும் திரைப் படமாகவும், என் நெஞ்சில் கலந்த பாடலாகவும் இதை நினைக்கிறேன். மிகச் சிறிய வயதில் மதுரைக்கு வந்த போது பார்த்ததால் என் அம்மா அடிக்கடி அங்கே படம் பார்த்தோம் என்று சொல்லி நினைவு படுத்துவார்கள். கடைசிப் பாடலான 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று' பாடலும் வாழ்வியல் தத்துவத்தை விளக்குவதாகவே படுகிறது. இதில் கவியரசரை வெல்ல இன்னும் ஒரு கவிஞர் வர முடியாது என்றே தோன்றுகிறது. பாடிய பாடகர் திலகத்தைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது. நாமெல்லாம் பார்த்து, கேட்டு ரசிக்க கொடுத்து வைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக 'விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா' - என் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருக்கிறது. விவரம் புரியாத வயதில் பார்த்து மனதில் ஏற்றி வைத்து கால ஓட்டத்தை கணக்கிட வைத்துக் கொண்டு இருக்கிறது இந்த திரைப் படமும் இதன் பாடல்களும். என்னமோ போங்க.
    Last edited by kalnayak; 27th May 2015 at 03:52 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  19. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •