-
25th May 2015, 09:46 AM
#221
Senior Member
Senior Hubber
ஆயிரம் பொய் திரைப்படத்தில் புலவர் சொன்னதும் பொய்யே பாடல் பிரபலமே
ஆனாலும் இந்த பாடலும் ரசிக்கத்தக்க பாடலே .. குறும்பு கொப்பளிக்க இசையரசி பாடுவது அழகோ அழகு
தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
25th May 2015 09:46 AM
# ADS
Circuit advertisement
-
25th May 2015, 10:45 AM
#222
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th May 2015, 10:52 AM
#223
Junior Member
Seasoned Hubber
Ck - உடம்பு எப்படி இருக்கின்றது ? ( அதிகார தோரணை அல்ல - உண்மையில் அக்கறை உள்ள தோரணை ) - மிகவும் படிப்பை பற்றிய பதிவுகளாக வருவதால் - அவைகளில் பங்கேற்க முடியவில்லை . (அப்பவே என் அன்னை சொன்னாள் - நன்றாக படிடா - கவனம் படிப்பில் மட்டும் இருக்க வேண்டும் என்றாள் - கேட்டால் தானே ? - இப்பொழுது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் !!)
உங்கள் "என்னமோ போங்க " - எப்படி எழுதறீங்க ! என்ற கேட்க்க வைக்கின்றது ....
-
25th May 2015, 11:03 AM
#224
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 14
" அம்மா " என்று வருடத்தில் ஒருமுறை அழைத்தான் மகன் - வினாடிக்கு ஆயிரம் முறை அவன் பெயரை சொல்லி அழைப்பாள் அவள் . அவன் அழைப்பில் கடமை இருந்தது - கவனிப்பு இல்லை - அவள் அழைப்பில் பூரிப்பு இருந்தது ,அர்த்தம் இல்லை. அமெரிக்காவில் வாழும் மகனை ஆதம்பாக்கத்தில் இருக்கும் அவளுடைய முதியோர் இல்லம் இணைத்தது அவளுடைய எண்ணங்களால் மட்டுமே .... கொளுத்தும் சூரியனை அவள் இருந்த அறையினால் மூடி மறைக்க முடியவில்லை -- தென்றல் தொடாத இலக்கிய காதல் இல்லை அவள் வாழ்வினிலே - தென்றலே நுழைய முடியாத கசங்கிய வாழ்க்கை அவள் வாழ்ந்த நாட்களிலே !
ஒரு முறை கடைசியாக அவனைப்பார்க்க மாட்டோமா என்று அலைந்தது அவள் கண்கள் - அலையவே முடியாத அந்த சின்ன அறையில் ---- கண்களிலே அவனை சுமந்தாள் - மூட மனம் வரவில்லை - மூடியே ஆக வேண்டும் இன்று என்றான் இறைவன் .
மகனிடம் மானசீகமாக ஒரு உதவியை கேட்டாள் - மகனிடம் உதவியே செய்து வாழ்ந்தவளுக்கு அதை எப்படி அவனிடம் கேட்பது என்று தெரியவில்லை --
" மகனே இனி வரும் என் பென்ஷன் பணத்தில் நான் இருந்த அறையில் ஒரு குளிசாதனப்பெட்டியோ , ஒரு மின்விசிறியோ போட முடியுமா ? எனக்காக கேட்கவில்லை - நான் சென்ற பிறகு - என் அறையில் வேறு ஒரு தாய் வந்தால் அவள் துன்பப்படக்கூடாது அதனால் தான் கேட்க்கிறேன் "----
அவள் அவனை கடைசியாக நினைத்த நேரம் அது - அமெரிக்காவில் மகன் ரோல்ஸ் ராய்ஸ் இல் மனைவியுடன் உல்லாச விடுதிக்கு சென்று கொண்டிருந்தான் --------
யாரோ அவள் உடலின் அருகில் முனு முனுத்துக்கொண்டிருந்தார்கள் - " பாவம் தகனம் செய்ய மகனால் வர முடியவில்லையாம் - எதோ போர்டு மீட்டிங் ஆம் - ரொம்பவும் வேலை சுமையாம் ----"
இந்த வேலையையும் இப்பொழுதெல்லாம் outsource பண்ண ஆரம்பித்த விட்ட இந்த தலைமுறையைப் பார்த்து அவளை தழுவிக்கொண்டிருக்கும் நெருப்பு சிரித்தது .......
"அம்மா "
அம்மா....
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் - தாயே
அன்னை ஒர் ஆலயம்
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
மண்ணின் என்ன தோன்றகூடும்
மழை இல்லத போது
மனிதனொ மிருகமோ
தாயிலாமல் ஏது
மண்ணின் என்ன தோன்றகூடும்
மழை இல்லத போது
மனிதனொ மிருகமோ
தாயிலாமல் ஏது
அன்னை சொன்ன வார்தை இன்று
நினைவில் வந்தது
அன்பு என்ற சொல்லே தாயின்
வழியில் வந்தது
எங்கே எங்கே
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதேனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ
வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதேனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ
மீண்டும் இந்த மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் - தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்...
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
25th May 2015, 11:56 AM
#225
Junior Member
Newbie Hubber
அப்பப்பா ...
இவ்வளவு சீரியஸ் டாபிக் கில் பங்கு கொண்ட சி.க (ஆரம்பித்ததே இவரால்தான்),ஆதிராம்,ராகவேந்திரா இவர்களுக்கு நன்றி. லட்சுமியின் பெண் மனம் விட்டு போனது. இன்னும் சில பல விட்டு போயிருக்கலாம்.
பிரத்யேக ரசனை என்பது வேறு. எனக்கு பிரத்யேகமாக சில ரமணி சந்திரன், குரும்பூர் குப்புசாமி ,ராஜேந்திர குமார் கதைகள் பிடிக்கும். ஆனால் ஒரு தராசில் நிறுத்தும் போது ,நாம் படித்த ,ரசித்த ,உலக அளவுகோலில் நிற்க கூடிய (நான் உலக இலக்கியங்கள்,இந்திய இலக்கியங்களில் பரிச்சயம் கண்டதால்,)விஷயங்களையே நான் உங்களுக்கு சிபாரிசு செய்ய முடியும். எனக்கு ரசவந்தி,நிக் கார்ட்டர்,சரோஜாதேவி,காதல் கிங் முதலியோர் பிடிக்குமென்றாலும் ,அதனை சிபாரிசு செய்ய முடியாது. பூமணி,தாமரை செந்தூர் பாண்டி,பொன்னீலன் ,மேலாண்மை பொன்னுசாமி,இன்னும் பலர் அவ்வப்போது கவர்ந்தாலும் ,பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றுமில்லை.
C .r .ரவீந்திரன் என்பவரின் ஒரு கதை(குத்தகை காரர்கள் பிரச்சினை) என்னை ரொம்ப கவர்ந்தது.பேர் ஜாபகமில்லை. சுமதியின் நாவல் ஒன்று (சவண்டி பிராமணர்களை பற்றி), விட்டல் ராவ் எழுதிய நதிமூலம் ,எல்லாமே குறிப்பிட வேண்டியவை.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th May 2015, 12:13 PM
#226
Senior Member
Senior Hubber
ரவி,
சற்றே தாமதத்திற்கு மன்னிக்கவும். முதலில் 1000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். குறுகிய காலத்தில் மிக அதிக பதிவுகள். அதுவும் நான் செய்ததை விட கிட்டத்தட்ட 3 மடங்கு வேகம் அதிகம் இந்த மதுர கானத்திரியில்.
இரண்டாவதாக கருவின் கரு என்ற புதிய தொடருக்கு (அதற்குள் 14 பதிவுகள் முடிந்தது - நான்தான் தாமதம்.) நடிகர் திலகம் போன்று சில விஷயங்கள் தவிர மற்ற விஷயங்களுக்கு தனது கடினத் தன்மையை காட்டிய கோபால் அவர்களையே உருகி உருகி ஒரு பதிவு போட வைத்த தலைப்பு. பாருங்கள் ஆதிராம் கூட தனது வேலையை விட்டு விட்டு தாயுடன் வந்து இருந்து பார்த்துக் கொள்ள யோசிக்க வைத்துள்ளது. எல்லோருமே உங்கள் தொடரை படித்து விட்டு தங்கள் தாயை நினைத்து உருகுகிறார்கள். எனக்கும் அப்படித்தான். என் தாயும் மறைந்து கிட்டத்தட்ட எட்டரை வருடங்கள் ஆகியுள்ளது. நான் நினைக்காத நாளில்லை. தெய்வமாய் என்றும் என்னை காத்துக்கொண்டிருக்கிறாள். இவை யாவுமே உங்கள் தொடரின் வெற்றிக்கு சாட்சிகள். வாழ்த்துகள்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th May 2015, 12:51 PM
#227
Junior Member
Seasoned Hubber
திரு கல்நாயக் - நல்வரவு - பூக்களின் வாசத்தை அனுபவித்து பல நாட்கள் ஆகிவிட்டன என்றே எண்ணத்தோன்றுகின்றது . உங்கள் பதிவுகளைப்பார்க்காமல் உற்ச்சாகமாக எழுத முடியவில்லை . ஒரு சின்ன உதவி வேண்டும் . என் பதிவில் " பூ முடிப்பாள் " யை இணைக்க ஆசைபடுகிறேன் - உங்கள் அனுமதி தேவை . நீங்கள் வர்ணித்தால் அதன் சுவை பல மடங்கு இருக்கும் - இருந்தாலும் என் எண்ணகளில் அந்த பாடலை பார்க்க விரும்பிகிறேன் - உங்கள் தனிப்பட்ட வர்ணனையும் தேவை - சில பாடல்கள் சாகா வரம் பெற்றவை - எவ்வளவு தடவை கேட்டாலும் இன்னும் புதுமையாகவே இருக்கும் - உங்கள் பாராட்டுக்களுக்கு என் மனமுவந்த நன்றி -
பூக்கள் தொடரட்டும் ------- .
-
25th May 2015, 12:58 PM
#228
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 15
A mother's advice to her grown up daughter !!
Sometimes you are
unsatisfied with your life,
while many people in
this world are dreaming
of living your life..
A child on a farm sees
a plane fly overhead &
dreams of flying. But,
A pilot on the plane sees
the farmhouse & dreams
of returning home.
That's life!! Enjoy yours...
If wealth is the secret to
happiness, then the rich
should be dancing on the
streets. But only poor kids
do that.
If power ensures security,
then officials should walk
unguarded. But those who
live simply, sleep soundly.
If beauty and fame bring
ideal relationships, then
celebrities should have
the best marriages.
Live simply. Walk humbly.
and love genuinely..!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th May 2015, 01:16 PM
#229
Senior Member
Senior Hubber
சி.க.
உங்கள் புதிய தொடர் என்னமோ போங்க - என்னமோ போங்க என்று விட்டுவிட முடியாத அருமையான தொடராக இருக்கிறது. சொல்வதையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியிலே சொல்றீங்களே என்னமோ போங்க-ன்னு இதுக்கு நாங்க என்ன சொல்லனும்னு எதிர் பாக்கறீங்க என்னமோ போங்கவை விட்டுவிட்டு. தனித் தனியா ஒவ்வொரு பதிவையும் எடுத்து சொல்ல நேரமில்லை மன்னிக்கணும். என்னமோ போங்க.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th May 2015, 01:20 PM
#230
Senior Member
Senior Hubber
ஹய்யோ மறந்து விட்டேனே.
கோபால்.
மன்னிக்கணும். சற்றே தாமதமான வாழ்த்துகள் உங்களுடைய 30 வருட வெற்றிகரமான மண வாழ்விற்கு. இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு தாங்களும் தங்கள் சந்ததியினரும் எல்லா வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks