Results 1 to 10 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

Hybrid View

  1. #1
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Mr Aathavan Ravi Facebook

    Aathavan Ravi

    ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
    சபை.
    பருத்த உடலும் தடிமனான
    கண்ணாடியுமாய் பார்வையாளர்
    வரிசையில் ஒரு பாகவதர்.
    பக்கத்தில் வந்தமரும்
    போலீஸ்காரருக்கு
    வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.
    குயில் கூவலாய் ஒரு பெண்
    பாட கச்சேரி துவங்குகிறது.
    அழகாய்ப் பயணப்படும் அந்தப்
    பாடலின் வழியில் ஒரு வேகத் தடை.
    அந்தப் பெண்
    திக்குகிறாள். திணறுகிறாள்.
    பாட்டறிந்த பாகவதர்
    மேடையேறுகிறார்.
    பாடுகிறார்.
    இனிக்கப் பாடுகிறார்.
    இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.
    அப்பப்பா...!
    அந்தப் பாடலென்ன?
    பாவனைகளென்ன?
    அசைவுகளென்ன?
    அபிநயங்களென்ன?
    அணிந்திருக்கும்
    மூக்குக்கண்ணாடிக்குள்
    அழகாய் மிளிரும்
    கண்களிலே,
    அனைத்தும் உணர்ந்ததன்
    விளக்கமென்ன..?
    பாடும் உதடுகள் மீதினிலே
    புன்னகை அமர்த்தும்
    பழக்கமென்ன?
    தன் திறம் காட்டுதல் மட்டும்
    இல்லாமல்,
    உடன் கலை செய்வோரையும்
    உயர்த்தும் தன்மை என்ன?
    ஓங்கி உயர்த்தி
    குரல் தருதல்,
    உடல் நிமிர்த்தியும்,தளர்த்தியும்
    அசைவுறுதல்,
    தூய இசையோடு ஒன்றி விடல்,
    தொடையில் அழகாய்த்
    தாளமிடல்..
    அனைத்திலும் தெரியும்
    உண்மையென்ன..?
    பாடல் தொடர்கிறது.
    தொடர்ந்து நகர்கிறது.
    நகர்ந்து முடிகிற நேரத்...
    ..முதுகில் பிடுங்கிய
    மூட்டைப் பூச்சி
    நினைவூட்டியது..
    அமர்ந்திருப்பது
    திரையரங்கமென்றும், அந்தக்
    கச்சேரி 'குங்குமம்' படக்
    காட்சியென்றும்,
    அந்தப் பாகவதர் நம் நடிகர்
    திலகமென்றும்!

    Aathavan Ravi's photo.

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •