Page 10 of 400 FirstFirst ... 891011122060110 ... LastLast
Results 91 to 100 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #91
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு.. ம்ம்ம் போட்டாசசாக்கும் மறுபடி பார்க்காலாம்..?ஸாரி கேக்கவும் செய்யலாம் வெ.மு என்னா கலர்ஃபுல் ட்ரஸ்..

    என்னென்னவோ நான் நினைத்தேன் பாடலுக்கு நன்றி

    ஆமாம்ல ஒன்பது பக்கம் பறந்து தான்போச்ச்.. பார்வைகள் பார்த்தீர்களோ..அந்தப் பக்கம் சண்டையை வேற ஆரம்பிச்சிருக்கீஙக் ( நைஸ்..) எனக்கும் சண்டை போடத் தோணுது..அது என்னோட அடுத்த போஸ்டில்..

    எஸ்வி .. ஹச்சோ..கடலோரம் வாங்கிய காத்து எனக்கும் ஃபேவரிட்.. எவ்ளோ முறை கேட்டிருப்பேன்..பார்த்துமிருப்பேன்.. நன்றிங்க.

    அங்கே யார் சுருக் சுருக்கமா எழுதியிருக்கறது..முரளி.. மிக்க நன்றிங்க..

  2. Likes Richardsof liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #92
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    காலை வணக்கம்

    'இறக்கை கட்டி பறக்குதையா பாகம் 4 '

    மறந்த இருந்த ஷீபாவை நினைவு படுத்திட்டார் ராஜேஷ் ஜி மற்றும் வாசு ஜி. மோஹி என்ற மோகினி பற்றி சி கேக்கு குறிப்பு வரையணுமாம்

    'ஒரு புறம் பார்த்தால் அதிசய பிறவி ஷீபா
    மறு புறம் பார்த்தால் ஈரமான ரோஜாவே மோகினி'

    மோகினி அமெரிக்கா சென்று யாரோ பரத் என்பவரை திருமணம் செய்து பின் கிறிஸ்துவ மதத்தை தழுவியதாக படித்து நெஞ்சில் நிழலாடுகிறது.
    2008 இல் விவகாரத்து ஆகியதாக கேள்வி. விவாகரத்து ஆகவில்லை .என்றும் ஒரு தகவல் உண்டு. ஜட்ஜ்மெண்ட் டே அன்று அவர் கணவரும் கிறிஸ்துவ மதத்தை தழுவி மீண்டும் இணைந்தார்கள் என்று குருவியார் (தினத்தந்தி) கேள்வி பதிலில் படித்த நினைவும் உண்டு.

    நிறைய மலையாள படம் நடிச்சாங்க. தமிழில் விக்ரமனின் நான் பேச நினைப்பது எல்லாம்,புதிய மன்னர்கள்,கார்த்திக் இன் நாடோடி பாட்டு காரன்,உடன்பிறப்பு இப்படி ஒரு ரவுண்டு வந்தாங்க.

    ஜெயா தொலைகாட்சியின் திரும்பி பார்கிறேன் நிகழ்ச்சியில் பார்த்த நினைவு.தயாரிப்பாளர் கே ஆர் அறிமுகம் .இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டத்தின் நாலுமாவடி என்ற ஊரில் மோகன் சி லாசரஸ் அவர்களின் 'ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்கள்' ஒன்றில் இவரும் நடிகை நக்மாவும் கலந்து கொண்டு சர்ச்சை வந்ததாக ஒரு தகவல் காதில் அடிபட்டது

    ஆத்துகாரர் பரத் உடன் கல்யாண போட்டோ



    கரகாட்டக்காரன் சொப்னசுந்தரி
    gkrishna

  5. Thanks chinnakkannan thanked for this post
  6. #93
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    மீண்டும் jkb போன்று வரவேற்ற கோபால் ஜி,முரளி ஜி ,கல்நாயக் ஜி,சி கே மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
    gkrishna

  7. #94
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    மீண்டும் jkb போன்று வரவேற்ற கோபால் ஜி,முரளி ஜி ,கல்நாயக் ஜி,சி கே மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
    ஓஹோஹோ ,அப்போ வடக்கே நடந்ததெல்லாம் இந்த திருவிளையாடலா?

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Likes vasudevan31355 liked this post
  9. #95
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    பசுமை போர்த்தியிருக்கும் ஏதோ ஒரு மலை வாசஸ்தலத்தை நோக்கிய நீண்ட பயணம். பேருந்தின் ஜன்னல்கள் வழியே சற்று வேகமாகத் தவழ்ந்து வரும் தென்றல் உடலையும் மனதையும் வருடிச் செல்கிறது. சாலையின் இரு புறங்களிலும் படர்ந்திருக்கும் இயற்கைக் காட்சிகள் மனதை அள்ளுகின்றன.

    ஏகாந்தமாகக் கண் மூடி அமர்ந்திருக்கும் உங்களைத் தாலாட்டும், தன்னிச்சையாக மனதுக்குள் ஒலிக்கும் பாடல் ஒன்று. ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்…’. சுட்டெரிக்கும் வெயிலில் உங்கள் பயணம் அமைந்தாலும் உங்கள் ஆன்மாவையே குளிர்விக்கும் ஆற்றல் கொண்ட பயணப் பாடல் இது.

    சில பாடல்களைக் கேட்கும்போது இருந்த இடத்திலிருந்தே கற்பனை நிலப் பகுதிகளுக்கு மனம் நம்மை அழைத்துச் சென்றுவிடும். எங்கெங்கோ சுற்றியலையும் மனம், நினைவின் அடுக்குகளில் விரவிக் கிடக்கும் மகிழ்ச்சியான தருணங்களைத் திரட்டிச் சேர்த்துக்கொண்டே செல்லும். அப்படியான பாடல்களில் ஒன்று இது.

    இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம், ‘பட்டாக்கத்தி பைரவன்’. 1979-ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். தனது நாயக சகாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் அவர் நடித்த படங்களில் ஒன்று இது. ‘எங்கள் தங்க ராஜா’ படத்தில் ‘பட்டாக்கத்தி பைரவன்’ என்ற பெயரில் ஒரு பாத்திரத்தில் வருவார் சிவாஜி. அந்தப் படத்தின் இயக்குநர் வி.பி. ராஜேந்திர பிரசாத் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு அந்தப் பெயரே தலைப்பாகிவிட்டது.

    வானத்தை வருடும் பாடல்

    ஒவ்வொரு நொடியிலும் இனிமையைத் தேக்கிவைத்திருக்கும் பாடல் இது. மென்மையான கிட்டார் இசையுடன் தொடங்கும் இந்தப் பாடல் காற்றின் அலைகளில் ஒவ்வொரு நிலையாகப் பரவி வயலின் இசைக்கோவை மூலம் வானம் வரை எட்டும்.

    கம்பீரமான காதல் குரலில் பாடத் தொடங்குகிறார் எஸ்.பி.பி. ‘எங்கேங்கோ செல்லும் என் எண்ணங்கள்… இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்’ என்று தொடங்கும் எஸ்.பி.பி.யின் குரலுக்கு இனிய துணையாக ஒலிக்கிறது ஜானகியின் குரல். பல்லவியின் முடிவில் ‘என் வாழ்க்கை வானில்… நிலாவே… நிலாவே’ எனும் வரியைப் பாடும்போது காற்றில் மிதந்து மிதந்து தரையிறங்கும் மயிலிறகைப் போல் இருவரின் குரல்களும் கரைந்து மறையும்.

    இரண்டு சரணங்களின் தொடக்கத்திலும், “ஹா…” என்றொரு ஹம்மிங்குடன் பாடலைத் தொடரும் எஸ்.பி.பி.க்கும் ஜானகிக்கும் பரிசாக இந்த உலகத்தையே தந்தாலும் இணையாகுமா! காதல் நுண்ணுணர்வின் பாவங்களைக் குரலில் காட்டத் தெரிந்த அற்புதக் கலைஞர்கள் அல்லவா அவர்கள். பாடலில் மெல்லிய மேகங்கள் மிதக்கும் வானத்தின் கீழ் பரவிக் கிடக்கும் நிலப்பரப்புகளில் ஒவ்வொரு இடமாக இன்னிசையை நடவு செய்தபடி கிட்டார் குறிப்புகள் நகர்ந்து செல்லும். அவற்றின் மேற்பரப்பில் பரவசமூட்டும் வயலின் இசைக்கோவை படரும் உணர்வு நம்முள் பரவும்.

    இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக வரும் நிரவல் இசையில் கிட்டாரும் புல்லாங்குழலும் சங்கேத மொழியில் முணுமுணுப்பாய்ப் பேசிக்கொள்ளும். வயலின்களின் சேர்ந்திசை அந்த உரையாடலைக் கலைத்தபடி காற்றில் பரவிச் செல்லும். வானில் சிறகடிக்கும் பறவை ஒரு கட்டத்தில் இறக்கைகளை அசைக்காமல், சிறகுகள் காற்றில் அசைய மிதந்துகொண்டே தரையிறங்கும். அந்தப் பறத்தல் அனுபவத்தைத் தரும் பாடல் இது.

    கடலலையைத் தழுவும் காற்று வீசும் கடற்கரை, பரந்த புல்வெளி நிலங்கள், எல்லையற்று விரியும் பாலைவனத்தைக் கடக்கும் சாலை என்று எந்த இடத்தையும் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் கற்பனைக்கு ஏற்ற காட்சிகள் இந்தப் பாடலின் ஒலி வடிவத்தில் உறைந்துகிடப்பது தெரியும். ‘கல்லானவன் பூவாகிறேன்… கண்ணே உன்னை எண்ணி’ போன்ற வரிகளில் ஆன்மாவின் காதலைக் கசியவிட்டிருப்பார் கண்ணதாசன்.


    வந்து சென்ற தேவதை

    எஸ்.பி.பி. - ஜானகி இணை பாடும் ‘தேவதை… ஒரு தேவதை’ பாடலும் இப்படத்தில் உண்டு. நாயகியின் மெல்லிய சிரிப்பைப் போல ஒலிக்கத் தொடங்கும் புல்லாங்குழல் எதையோ கண்டு ரசித்ததுபோல் ஆச்சரியக் குறியிடும்! பிறகு கம்பீரமான வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷனுடன் தொடங்கும் அந்தப் பாடல் முழுதும் புல்லாங்குழலின் ராஜ்ஜியம்தான். அற்புதமான இந்தப் பாடலில் தோன்றும் நாயகி தேவி. அவருக்கு ஜோடி ஜெய்கணேஷ் என்பது பாடலின் பெருந்துயரம். படமாக்கப்பட்ட விதத்தைச் சொல்லி அழுவானேன்!

    எஸ்.பி.பி. பாடிய ‘யாரோ நீயும் நானும் யாரோ’, ஜானகி பாடிய ‘ஜில் மாலிஷ் பூட் மாலிஷ்’, எஸ்.பி.பி. – சுசீலா பாடிய ‘வருவாய் கண்ணா நீராட’ போன்ற பாடல்களும் படத்தில் உண்டு. ரசிகர்களின் நினைவிலிருந்து மறைந்துவிட்ட இந்தப் படத்திலிருந்து ஜீவன் வற்றாத ‘எங்கெங்கோ
    Last edited by s.vasudevan; 23rd May 2015 at 12:42 PM.

  10. #96
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஓஹோஹோ ,அப்போ வடக்கே நடந்ததெல்லாம் இந்த திருவிளையாடலா?
    பொக்ரான் குண்டை விட பெரிய குண்டாக இருக்கிறதே இந்த வியட்நாமரின் குண்டு .

    'பத்த வைட்சுட்டியே பரட்டை'



    எனக்கும் வாசுவிற்கும் மட்டுமே பிடித்த உங்களது ப்ளூ கலர் favourite சிரிப்பு icon காணவில்லையே
    gkrishna

  11. Likes vasudevan31355, Russellmai liked this post
  12. #97
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981



    ஓம்....ஓம்....ஓம்....

    ஆதி பராசக்தி.... ஆதி பராசக்தி....

    ஆதி பராசக்தி ஆதி பராசக்தி
    உலகமெங்கனும்.... பரவி நின்றதும்....
    உயிரினங்களில்.... மருவி நின்றதும்....
    உலகமெங்கனும் பரவி நின்றதும்
    உயிரினங்களில் மருவி நின்றதும்
    அளவிலாததும் அழிவிலாததும்

    ஆதி பராசக்தி ஆதி பராசக்தி

    உண்மையாம் பிரம்மம் தன்னிலே
    புணரும் பெண்மை யாவும் பெரும் மாய்கையாய்
    கண்ணில் காணும் பல தோற்றம் ஆகிடும்
    வண்ணமாக்கும் சக்தி
    உண்மையாம் பிரம்மம் தன்னிலே
    புணரும் பெண்மை யாவும் பெரும் மாய்கையாய்
    கண்ணில் காணும் பல தோற்றம் ஆகிடும்
    வண்ணமாக்கும் சக்தி

    முகில் வண்ணனாகி மழை அன்ன தேவளர்
    மண்ணைக் காக்கும் சக்தி
    முக்கண்ணனாகியே அழிக்கும் சக்தி
    ஆதி பராசக்தி....

    எதிர்த்த பற்களை ஒழித்து முப்புரம்
    எரித்த அற்புத சிவ சக்தி
    இடர் செய்யும் அவுனர்கள் பொடிபட
    மயிலவன் அயில் புகு ஜெய ஜெய ஜெய சக்தி

    ஆதி பராசக்தி ஆதி பராசக்தி


    வளர் திங்கள் நதி கங்கை
    மலர் கொன்றை அணிகின்ற
    சிவசம்பு மகிழ் சுந்தரி
    வளர் திங்கள் நதி கங்கை
    மலர் கொன்றை அணிகின்ற
    சிவசம்பு மகிழ் சுந்தரி நிரந்தரி
    மலை தந்தமகள்
    சந்த்ர முக பிம்ப எழில் சிந்தும்
    அரவிந்த பத அந்தரி புரந்தரி
    அரவிந்த பத அந்தரி

    மனதில் நிலை பெறும் இனிய கலைகளும்
    புகழும் உயருறு தெருளும் பலபல
    பொருளும் உலகியல் அறிவு தரும் சக்தி
    மனதில் நிலை பெறும் இனிய கலைகளும்
    புகழும் உயருறு தெருளும் பலபல
    பொருளும் உலகியல் அறிவு தரும் சக்தி

    தத் ஜம் தஜம் தரி தத் தலாங்கு
    தலங் கெனும் படி ஜதி முழங்கிட
    நடமிடும் சக்தி

    ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம்....


    இன்று மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்று உள்ள அன்னைக்கு வாழ்த்துகள்
    gkrishna

  13. Likes Russellmai liked this post
  14. #98
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 1

    அது ஒரு ரம்மியமான மாலை நேரம் - இறைவன் மனதில் ஒரு சின்ன உளைச்சல் - சொல்ல முடியாத ஒரு சங்கடம் . எல்லா தேவர்களையும் அழைத்தான் . நான் இதுவரை படைக்காத ஒன்றை படைக்க ஆசைப்படுகிறேன் - அந்த படைப்புக்கு மிஞ்சிய ஒரு படைப்பு இருக்க முடியாது - என் சக்தி எல்லாவற்றையும் சேர்த்து அந்த படைப்புக்கு வழங்க இருக்கிறேன் - என்னையும் மீறிய படைப்பு இது - நானே இந்த படைப்பைக்கண்டு வணங்க வேண்டும் - என் படைப்புத்தானே என்று எனக்கே கர்வம் வந்து விடக்கூடாது . உங்கள் எல்லோரையும் கூப்பிட்டதற்கு காரணம் இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் - என்றான் . அழைத்த எல்லா தேவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை - உங்களுக்கு மீறிய படைப்பா ?? நீங்களே வணங்க கூடிய படைப்பா - இறைவா - எங்களுடன் விளையாடாதீர்கள் - ஒன்றும் விளங்கவில்லை --

    இறைவன் சிரித்தான் - அந்த சிரிப்பின் ஒளியில் ஒரு அழகே உருவான ஒரு மங்கை வெளி வந்தாள் -- இறைவனுக்கு இன்னும் முழுவதும் திருப்தி வரவில்லை - இளமை , அழகு , சௌந்தரியம் தவழும் இந்த மங்கை எப்படி நான் வணங்க இருக்கும் படைப்பாக இருக்க முடியும் - இவளிடம் அழகு இருக்கின்றது - ஆனால் பூமியின் பொறுமை இல்லை - மீன் போன்ற கண்கள் - ஆனால் அதில் கருணை சற்றே குறைவாக உள்ளது . தனக்காகவே வாழ ஆசைப்படும் இந்த பெண் , என் படைப்புக்கு உதவுவாளா ??

    ஒரு குழந்தை அங்கே தவழ்ந்து வந்து இறைவனின் மடியில் அமர்ந்தது - இறைவனின் எண்ணங்கள் சிதறின --- அந்த குழந்தையை சற்றே கோபத்துடன் அங்கிருந்து அனுப்ப எண்ணும் வேளையில் , அந்த பெண் ஓடி வந்து அந்த குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டாள் - அவள் கண்களில் முன்பு அதிகமாக வெளிப்படாத கருணை தெரிந்தது - கண்கள் குற்றாலத்தை நினைவுப்படுத்தின .

    எல்லாம் தெரிந்த இறைவன் மீண்டும் சிரித்தான் - அவன் மனதிற்கு , அவன் கற்பனைக்கு ஒரு விடை கிடைத்து ... பெண்ணே நீ இந்த குழந்தைக்கு என்ன வேண்டும் ? - அந்த பெண் சொன்னாள் - அந்த குழந்தைக்கு இப்பொழுது நான் வேண்டும் - அதற்கு நான் வேண்டும் - எங்கள் இருவருக்கும் உறவு முறை தெரியாது ----- .

    இந்த படைப்பைத்தான் படைக்க நினைத்தேன் - ஆனால் அதற்கும் முன்பு நீ என்னை படைத்து விட்டாய் தாயே !!

    எல்லோரும் எப்பவும் விரும்பி அனுபவிப்பது - அழகான காலை உதயம் , பறவைகளின் காலை சங்கீதம் - வானத்தில் கோலம் இடும் வில் , பசுமையான காட்ச்சிகள் - யானையின் அழகு - சிங்கத்தின் நடையும் அதன் தலை சீவாத பரந்த முடியும் , தோகையை விரித்தாடும் மயிலும் , பூக்களின் கூட்டமும் ----------- சொல்லிக்கொண்டே போகலாம் . இவைகளை எவ்வளவு வயதானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - குறையாத குளிமை - மாறாத அழகு - இறைவன் இந்த அழகையெல்லாம் மனித படைப்பில் படைத்த உருவம் தான் தாய் --- இந்த படைப்பை விரும்பாத விலங்குகள் இல்லை , மனித இனமும் இல்லை

    " அம்மா " ஒவ்வொரு குழந்தையின் அதரத்திலிருந்து உதிரும் முதற்சொல் ; அன்பு , பாசம் , நேசம் , பரிவு , தியாகம் , அனுதாபம் என்ற தன்மைகளைத் தன்னுள் அடக்கிய அழகான சொல் . பத்து மாதம் சுமந்து , குழந்தையை ஈன்றெடுத்து , பக்குவமாய்ப் பராமரித்து , அன்போடும் , அரவணைப்போடும் வளர்த்து , அக்குழந்தையை வாழ்வின் உயர்வுக்கு இட்டுச் செல்வது தாயன்பே . வாழ்வில் எத்தனை உயர்வடைந்தாலும் , ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தாயை வாஞ்சையுடன் " அம்மா " என்றழைப்பதில் பெருமை கொள்கிறான் . தாய்மையின் தியாகம் சொற்களுக்கு அப்பாற்பட்டது .

    பத்து மாதங்கள் சுமந்தவள் தாய் என்று சொன்னேன் - அது தவறு - தன் கடைசி மூச்சு இருக்கும் வரை நம்மை சுமந்து கொண்டுதான் இருக்கிறாள் - நமக்குத்தான் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை - நம்மை சுமந்தவளை கடைசியில் சுமப்பது முதியோர் இல்லம் என்ற அவள் பெறாத குழந்தைதான் .. நாலு பேருடன் நாமும் சுமக்கும் வேளையில் - மெதுவாக மகனே - உன் கால்கள் வலிக்கப்போகின்றன என்று சொல்வதும் அவளுடைய அசையாத மேனிதான் ---

    Sri Ramanujacharya, Udayavar,-(traditionally, 10171137 CE) இவரை ஒரு அரசன் கேட்டானாம் - சுவாமி - இந்த அரண்மனை , அழகான தோட்டம் - குயிலின் பாட்டு , விளையாடும் மயில்கள் , ரம்மியமான சூழ்நிலை இவைகளில் உங்களை கவர்வது எது ?

    உடனே ராமானுஜர் சொன்னாராம் - இவைகள் அனைத்தையும் என்னை பார்க்க வைத்த என் தாய் - அவள் தான் என்னை என்றும் கவர்ந்தவள் - அவளுக்கு மீறிய அழகு எந்த உலகத்திலும் எதற்குமே இல்லை ----



    ஆதிசங்கரர் தன் தாயை அவளுடைய கடைசி நேரத்தில் வந்து பார்ப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார் - ஆனால் வர முடியவில்லை - தகனம் செய்யும் நேரத்தில் அவர் பாடிய மாத்ருகா பஞ்சகம் , கல்லையும் கரையவைக்கும் - இன்றும் கயாவில் இந்த ஸ்லோகத்தை சொல்லச்சொல்லித்தான் பிண்டம் தாயிற்கு இடச்சொல்லுவார்கள் .

    மாத்ருகா பஞ்சகம்

    1.ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸதிஸமயே துர்வாரசூலவ்யதா
    நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
    ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
    தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

    தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!


    2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
    யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
    குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
    ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II


    ஹே தாயே! ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!


    3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
    ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
    ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
    அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II


    தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது.
    தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!


    4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
    ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
    இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
    ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

    என் முத்தல்லவா ! என் கண் அல்லவா ! என் ராஜா, என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

    5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
    ப்ரஸதிகாலே யதவோச உச்சை :I
    க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே
    த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

    அன்று ப்ரஸவ காலத்தில் அம்மா அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.
    ===

    அவள் இருக்கும் பொழுது அவள் அருமை தெரிவதில்லை - தண்ணீர் கொடுக்க கூட நாம் அருகில் இருப்பதில்லை - மறைந்த பிறகு யாருக்கு வேண்டும் இந்த தண்ணீர் பந்தல்கள் .

    ஒரு தாய் மொபைல் ரிப்பேர் செய்யும் கடையில் கேட்டாளாம் கீழ்கண்டவாறு :

    இது எனக்கு என் மகன் வாங்கிக்கொடுத்தது - ஒரு வாரம் கூட ஆக வில்லை - விலை மட்டும் பத்தாயிரத்திற்கும் மேலே இருக்குமாம் - அவள் முகத்தில் பெருமை சிதம்பரம் பொற்ச்சபையாக மாறியது ....

    " அது சரி அம்மா - இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு - எல்லாம் நன்றாகவே இருக்கின்றது ?"

    " அப்படியா பின் ஏன் மகனிடம் இருந்து ஒரு கால் கூட வருவதில்லை ?"

    கடைக்காரன் அவள் கொடுத்த மொபைல் யை தன் கண்ணீரினால் கழுவிக்கொண்டிருந்தான் ..

    இப்படிப்பட்ட உயர்ந்த தியாக உள்ளத்தை பூஜிக்கும் வகையில் சில பதிவுகள் போடலாம் என்ற ஒரு சின்ன ஆசை - அவள் வெறும் கருவல்ல - கருவின் கரு -- A Child gives birth to a Mother - கதிரவனின் தியாக உள்ளத்தை புரிந்து கொண்டோம் - அவனும் வணங்கும் ஒரு தாயின் பெருமைகளை பார்ப்போமா ?

    முதலில் ஆதிசங்கரரின் மாத்ருகா பஞ்சகம் பாடலைபார்ப்போமா ? பிறகு நம் வரிசையில் ------ !!

    அன்புடன்
    ரவி




  15. Thanks chinnakkannan thanked for this post
  16. #99
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 2

    எமக்குக் காய்ச்சல் வந்தால் மருந்து தேவையில்லை ! அடிக்கடி வந்து
    தொட்டுப்பார்க்கும் அம்மாவின் கையே போதுமானது ! அம்மாக்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் குறைந்தபட்சம்
    இரண்டு சொட்டுக்கண்ணீர் ஈரம் உலராமல் ! --


    தாயின் பெருமைகளை அந்த கணேசனை வணங்காமல் எப்படி ஆரம்பிப்பது ? புரியாத புதிரை புரிய வைக்கும் பாடல் இது .அன்னையின் ஆணை திரைப்படத்தில் கவிஞர் கா.மு.ஷெரிப் எழுதிய தாயாரிடம் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் பாடல் காட்சி.


  17. Likes chinnakkannan, Russellmai liked this post
  18. #100
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - பதிவு 3

    தாயில்லாமல் யாருமே இல்லை - நான் மட்டும் எப்படி இருக்க முடியும் ?- எந்த சமயத்திலும் நம்மைப்பற்றி பெருமைப்பட்டு பூரிப்பு அடையும் ஒரே ஜீவன் அவள் தானே ?? மக்கள் திலகத்தின் மாபெரும் படைப்பில் , மறக்க முடியாத ஒரு பாடல் இது .

    தாய் இல்லாமல் நான் இல்லை
    தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள்
    தாய் இல்லாமல் நான் இல்லை
    தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள்
    தாய் இல்லாமல் நான் இல்லை

    ஜீவ நதியாய் வருவாள்
    என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
    ஜீவ நதியாய் வருவாள்
    என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
    தவறினை பொறுப்பாள்
    தர்மத்தை வளர்ப்பாள்
    தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
    தவறினை பொறுப்பாள்
    தர்மத்தை வளர்ப்பாள்
    தரணியிலே வளம் சேர்த்திடுவாள்
    தாய் இல்லாமல் நான் இல்லை

    தூய நிலமாய் கிடப்பாள்
    தன் தோளில் என்னை சுமப்பாள்
    தூய நிலமாய் கிடப்பாள்
    தன் தோளில் என்னை சுமப்பாள்
    தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
    தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
    தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
    தாய் இல்லாமல் நான் இல்லை

    மேக வீதியில் நடப்பாள்
    உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
    மேக வீதியில் நடப்பாள்
    உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
    மலை முடி தொடுவாள்
    மலர் மணம் தருவாள்
    மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
    மலை முடி தொடுவாள்
    மலர் மணம் தருவாள்
    மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
    தாய் இல்லாமல் நான் இல்லை

    ஆதி அந்தமும் அவள் தான்
    நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
    ஆதி அந்தமும் அவள் தான்
    நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
    அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
    அவள் தான் அன்னை மகாசக்தி
    அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
    அவள் தான் அன்னை மகாசக்தி


    அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
    தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள்
    தாய் இல்லாமல் நான் இல்லை


  19. Likes chinnakkannan, Russellmai liked this post
Page 10 of 400 FirstFirst ... 891011122060110 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •