Page 193 of 400 FirstFirst ... 93143183191192193194195203243293 ... LastLast
Results 1,921 to 1,930 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1921
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் வாசு சார், அசத்திட்டீங்க.

    'நான் தன்னந்தனிக்காட்டு ராஜா' பாடல் அலசலில் நடிகர்திலகத்தின் ஒவ்வொரு அசைவையும் தனித்தனியாக புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். இதுபோன்ற பொது இடங்களில் (குறிப்பாக பொருட்காட்சி) படமாக்கும்போது ஸ்டுடியோவில் எடுத்தது போன்ற அதே முகமலர்ச்சி, உற்சாக துள்ளல் என்று அசத்தியிருப்பார். அதற்கேற்ப குழந்தைகளும் நடிப்பதாக தெரியாமல் ஏதோ பிக்னிக் வந்த உற்சாகத்தோடு நடித்திருப்பார்கள்.

    அதென்ன ஜெயகௌசல்யா, ரோஜாரமணிக்கு மட்டும் அடிஷனல் விளக்கம் மறவர்களுக்கு இல்லையா. பிரபாகர் ('ராமன் எத்தனை ராமனடி'யில் நடிகர்திலகத்துக்கு படத்தில் நடிக்க சான்ஸ் வாங்கி (!?!?!?) கொடுப்பவர். சேகர் (ராஜா, வாணிராணி, கவரிமான், நல்லதொரு குடும்பம்) .

    நடுவில் ஒரு சரணம் வானொலியில் வேண்டுமென்றே கட் செய்யப்பட்டதல்ல. அப்போதைய வினைல் ரிகார்டுகளில் மூன்றரை நிமிடங்களுக்குள் வருமாறு பாடல்கள் எடிட் செய்யப்பட வேண்டும். அதனால் பல பாடல்களின் அருமையான இடையிசை, மற்றும் சரணங்கள் கட் ஆகிவிடும்.

    இதில் அதிகம் அடிவாங்கியது வசந்த மாளிகை பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் ஒரு சரணம் கட்.

    ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் பாடலில் 'தக்கதகதிமி தாளம் ஜதியோடு' கட் செய்யப்பட்டு 'சொர்க்கம் இருப்பது உண்மைஎன்றால்' என்ற சரணத்திலிருந்து துவங்கும்.

    மயக்கம் என்ன பாடலில் இரண்டாவது சரணம் 'பாடிவரும் வண்ண நீரோடை' இசைத்தட்டில் கிடையாது.

    கலைமகள் கைப்பொருளே பாடலில் 'உன்னிடம் ஆயிரம் ராகங்களே' சரணம் கட். 'நான் யார் உன்னை மீட்ட' என்றே துவங்கும்.

    இரண்டுமனம் வேண்டும் பாடலில் 'சிறிய காயம் பெரிய துன்பம்' என்ற சரணம் கட். இரண்டாவது சரணமான 'இரவும் பகலும் இரண்டானால்' என்பதிலிருந்து துவங்கும்.

    உ.சு.வாலிபனில் சிரித்து வாழ வேண்டும் பாடலில் 'முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே' என்ற சரணம் இசைத்தட்டில் இடம்பெறவில்லை.

    சில பாடல்களில் படத்தில் இடம்பெற்ற அருமையான முன்னிசை இசைத்தட்டில் கட் செய்யப்பட்டு, திடீரென்று பல்லவியிலிருந்தே பாடல் துவங்கும்.

    அதுபோலத்தான் நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில் 'மெல்ல வளர்ந்திடும் செல்லக் குழந்தைகள்' சரணமும் கட்.

    நடிகர்திலகத்தின் வித்தியாசமான தொப்பி ஸ்டைல், அதுவும் பாடல் முழுவதும் அமர்க்களம்.

    உங்கள் ஆய்வும் கூட முழுதும் அமர்க்களம்.

  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1922
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //நாகேஷ் நடித்த பாடல் காட்சி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், அதுவும் இங்கே தான் படமாக்கப்பட்டது. உழைப்பாளர் சிலையின் அருகில் நாகேஷ் நிற்கும் போது பின்னணியில் கடலில் கரை தட்டிய கப்பலைப் பார்க்கலாம்.//

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai, RAGHAVENDRA liked this post
  6. #1923
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம். அக்காலத்தில் பட்டம் பெற்று வருபவர்களைக் காட்ட இந்த இடத்தைத் தான் திரைப்படங்களில் பயன்படுத்துவார்கள்.

    பாபு வில் அந்த உணர்வு மயமான காட்சி நினைவுக்கு வரும்.. நிர்மலா பட்டம் பெற்று வரும் போது ந.தி. வாயிலில் பூரிப்போடு கண்டு களிக்கும் உன்னதமான காட்சி. அதே போல் காதலிக்க நேரமில்லை என்ன பார்வை பாடலின் ஒரு பகுதியும் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது.//





    Last edited by vasudevan31355; 17th July 2015 at 06:51 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Thanks RAGHAVENDRA thanked for this post
  8. #1924
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    எங்க மாமா பதிவிற்காக தங்களுக்காக சிறப்புப் பரிசு..
    இது வரை வெளிவராத நிழற்படம் (என எண்ணுகிறேன்)

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #1925
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குமார் சார்
    அந்நாளைய பல விளம்பரங்களை மக்கள் மீண்டும் காண வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் பணி, மிகவும் போற்றுதற்குரியது. இதில் நம் மய்யத்தில் துவங்கிய பம்மலாரின் பணி, உலகெங்கும் பல இணையதளங்களில் அவருடைய பெயரோடு வெற்றி நடை போடுகிறது. அந்த வரிசையில் தாங்கள் அளித்து வரும் நிழற்படங்களும் அமைந்து விட்டன.
    பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes vasudevan31355 liked this post
  12. #1926
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதிராம் சார்,

    தங்கள் பாராட்டிற்கு நன்றி!

    அமர்க்களம். அருமை. ஒரு பதிவு பதித்தால் அது சம்பந்தமாக யாரும் எதிர்பாராத விளக்கப் பதிகளை அளித்து அசர வைப்பதில் தாங்கள் அசகாய சூரர் என்பது மீண்டும் நிரூபணம்.

    அப்போதைய பாடல்கள் வினைல் ரிகார்டுகளில் எப்படி சுருக்கப்பட்டன... அதில் அதிகம் பாதிக்கப்பட்ட 'வசந்த மாளிகை', இன்னும் பிற படங்களின் பட்டியல் என்று அசத்தல். எப்படித்தான் இதையெல்லாம் ஞாபகம் வைத்து சமயம் பார்த்து தருகிறீர்கள் என்று ஆச்சர்யமே மேலோங்குகிறது. என் மனமுவந்த பாராட்டுக்கள்.

    'உலகம் சுற்றும் வாலிபன்' பாடலான 'உலகம்... அழகுக் கலைகளின் சுரங்கம்' பாடலில் அமர்க்களமான ஜப்பானின் 'எக்ஸ்போ 70' கண்கவர் காட்சிகளின் போது பாடலின் இடையே வரும் அசுரத்தனமான, அமர்க்களமான இடையிசை எடுக்கப்பட்டு பாடல் சுருக்கப்பட்டு முழுமை பெறாமல் போனது. நீங்கள் குறிப்பிட்டது போல இந்தப் பாடலில்

    'சிவந்த கன்னம் பாருங்கள்
    சேதி கொஞ்சம் சொல்லுங்கள்
    இடையிரண்டின் ஓரங்கள்
    பருக வேண்டும் சாரங்கள்
    தேவதை விரித்தது மலர் மஞ்சம்
    அதில் தேவையை முடிப்பது இரு நெஞ்சம்'

    என்ற சரணம் அப்படியே ஸ்வாஹா.

    கிட்டத்தட்ட இடையிசையுடன் ஏழு நிமிடங்கள் முழுதாக ஓடும் பாடல். படம் பார்ப்பவர்கள் மட்டுமே இடையிசை மற்றும் சரணங்களை வீட்டு விடாமல் ரசிக்கலாம்.

    அதே போல 'மேயர் மீனாட்சி' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்' பாடலின்

    'இதழின் மீதாக வளையும் வண்ணங்கள்
    இளமைப் பூப்பந்தலோ
    திரையும் மூடாமல் தலையும் வாராமல்
    அசையும் பொன் பூக்களோ

    நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள்
    இடையில் வைத்தார்களோ
    நளினப் பொன்மேனி சுவையைப் பார்
    என்று உனக்கே தந்தார்களோ

    சுகம் ஒன்றாக வைத்தார்களோ
    நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ
    கண் பார்க்க வைத்தார்களோ
    உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ'

    சரணமும் மேற்கூறிய காரணத்தால் பறி போனது.

    இன்னும் சொல்லலாம். டைம்தான் இல்லை.

    'அதென்ன ஜெயகௌசல்யா, ரோஜாரமணிக்கு மட்டும் அடிஷனல் விளக்கம் மறவர்களுக்கு இல்லையா?'

    என்று கேட்டிருந்தீர்கள்.

    நான் பதிவு தயார் செய்யும்போது நினைத்துக் கொண்டேதான் தயார் செய்தேன். உங்களுக்குத் தெரியாததா? 'ஒளி' சம்பந்தப்பட்டதால் கௌசல்யாவுக்கு முன்னுரிமை. 'இருமலர்கள்' படத்தில் நடிகர் திலகம் பத்மினியிடம் குமுறும் அற்புதக் காட்சி மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த இடத்தில் ரோஜாரமணி பின்னிப் பெடல் எடுத்ததால் அவருக்கு அடுத்த உரிமை. (முரளி சாருக்கு ரொம்பப் பிடிக்கும்)

    'மாஸ்டர் ராமு' 'மனிதரில் மாணிக்கம்' படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்திருப்பார். 'திருடன்' படத்தில் ராமுவேதான் சிறுவயது நடிகர் திலகம் என்று நினைக்கிறேன்.

    நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளள ஆசைதான். நான் முன்பு சொன்னது போல நேரம்தான் இடிக்கிறது.

    நன்றி ஆதிராம் சார்.
    Last edited by vasudevan31355; 18th July 2015 at 10:33 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes Russellmai, chinnakkannan liked this post
  14. #1927
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் மன்னரின் திரி சார்ந்த இணைப் பதிவு

    மனதை ஈர்க்கும் எந்த கானமும் மதுர கானமே! அன்பு மேலோங்கும் போது பிரிவுத் துன்பமும் இன்பமே!!

    சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
    புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!
    பகுதி 1 : இதயத்தில் நீ !

    கண்ணை மறைக்கும் காதல்.....கண் மூடினாலும் காதல் மன்னரே முன்னால்!! காதல் பைத்தியம் தீர என்ன வைத்தியப் பத்தியம்?!
    ஜெமினியின் வசீகர வசிய சிரிப்பு மருந்து மாயத்தில் மந்திரித்து விட்ட கோழியாக அல்லலுறும் தேவிகா !!
    கோபம் உள்ள இடத்தில்தானே குணமும் இருக்கும் சந்தேகத்தின் பிறப்பிடமும் என் அன்பு இதயம் முழுவதும் நீ இருப்பதாலேயே...என் காதல் மன்னவனே!
    உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்று ஒரு பொருளிருக்கும் ..



  15. #1928
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நடிகர் திலகம்' தான் நடிகர் என்றே நினைக்காமல், படமென்று நினைக்காமல், படப்பிடிப்பு என்று நினைக்காமல், குழந்தைகளோடு குழந்தையாகவே மாறிவிடுவதை நாம் கண்கூடாக கண்டு கொள்ள முடியும். அதே போல் மற்ற குழந்தைகளாக ரசிகர்களாகிய நாமும் மாறி அவருடன் இணைந்து விடுவோம் என்பதும் மறுக்க முடியாத உண்மையே//வாசு.. வழக்கம் போல கலக்கல்.. நான் எதுவும் சொல்லவிடாதபடி ரவி ராக்வேந்தர் எஸ்வி ஆதிராம் சொல்லி விட்டார்கள்.. மறுபடியும் ஒருமுறை பாட்டை க் கேட்டேன் பார்த்தேன் ரசித்தேன்..உங்கள் எழுத்துக்களையும் சேர்த்து.. நன்றி..

    என்ன பார்வை பாட்டும் கடற்கரை தான்..டாடி எனக்கொரு டவுட்டு..வெண்ணிற ஆடையில் சித்திரமே சொல்லடி என்ன பார்க்..( இந்த என்ன சொல்ல என்ன சொல்லவில் எக்ஸ்ப்ரஷன் காட்டும் நிர்மலா ரியல் பொம்மையாய் வாயசைத்திருப்பார்..சித்திரமே சொல்லடி முத்தமில்லை சொல்லடி எனும்போது மெல்ல வா என க் கூப்பிட்டு படக்கென அறைய வேண்டும் போலிருக்கும்!

    //உலக்கையின் சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கும் போதே இளமையின் சத்தம் இன்னும் அதிகமாக கேட்க்கும் படி செய்து விட்டீர்கள் . // ரவி.. அர்த்தம் புரியவில்லை

  16. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  17. #1929
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெ'மினி'த் தீவிலிருந்து மதுரகான தீபகற்பத்திற்கு ஒரு மெல்லிசைப் பார்சல் !

    சந்தேகச் சேற்றில் மலர்ந்த அன்பு செந்தாமரைகள் :
    புதிய குறுந்தொடர் : Illusions and Hallucinations of Love with the King of Romance!!

    பகுதி 2 : பாதகாணிக்கை !

    எட்டடுக்கு காதல் மாளிகையில் ஏற்றி வைத்த மன்னவரே விட்டுவிட்டு விலகி செல்லலாமா?! சந்தேக வட்டத்துக்குள்ளும் அன்பின் விளிம்பில் அலைமோதும் சாவித்திரி!!

  18. #1930
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    மாற்றார் தோ(போ)ட்ட மெல்லிசையும் மதுரமே
    பகுதி 5 : யு ஒன்லி லிவ் ட்வைஸ் / YOU ONLY LIVE TWICE (1967)
    Sean Connery is James Bond OO7!



    The title credits with Maurice Binder's excellent graphics of the day alongside the tantelizing song by Nancy Sinatra!


    சி.செ. யூ ஒன்லி லிவ் ட்வைஸ் எனக்கு மிகப் பிடித்த பாண்ட் படங்களில் ஒன்று.. ஆரம்பத்திலிருந்து ஆக்*ஷன் ஆக்*ஷன் தான்..சுறுசுறு ஷான் கானரி.. கூடவே இழையோடும் மெல்லிய நகைச்சுவை வேறு..

    ஜப்பான் சென்று அந்த இடத்திலிருந்து தப்பி வரும் போது கொய்ங்க் என்று அந்த ஜப்பான் நளின நங்கை காரில் வந்து நிற்க அதில் தாவி ஏறியும் நம்பாமல் பேசி..பின் அவள் மறைய அவரும் ஓடிப் பின்னால் துரத்த....

    ஓரிடத்தில் அவள் நிற்க..

    த்த்டட்...

    தரைக்கீழே கதவு திறக்க சொய்ங்க்க் என வழுக்கி விழுந்தால்...

    குட் ஈவ்னிங்க் மிஸ்டர் பாண்ட் என்று டைகர் - ஜப்பானிய சீக்ரட் ஏஜண்ட் வந்துபேசுவதெல்லாம் மறக்க முடியாத காட்சிகள்..

    அதற்கு முன்னமேயே ஒரு ஆளை அறையில் பார்த்து ப் பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்த ஆள் வாக்கியம்முடிக்காமலேயே அப்படியே வெறித்து நோக்க
    ஷணப் பொழுதில் தாவி அந்த நபரைத்தொட்டால் சரிய அவர் முதுகில் கத்தி..

    பின் தாவி காரில் பாய்ந்து ஏறி...ம்ம்

    *

    அந்தக் கார் லிஃப்ட் பெண்... எதிரிகளை டைகரிடம் சொல்ல் மாக்னட் மூலமாக கடலில் தள்ளுபவர்... பாவம் பாண்டுடன் தாச்சித் தூங்கி களைப்பில் புரண்டுபடுக்க உச்ச்சியிலிருந்து அதாவதுகூரை உச்சியிலிருந்து ஒல்லி ஒல்லி அந்தக்கால அடிமைப்பெண் ஜோதி லட்சுமி போல விஷம் மெல்ல மெல்ல ஒரு நேர்க்கோடாக இறங்க எதேச்சையாக இதழில் பட்டு உதட்டை நாக்கால் தொட்டு மரணிப்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும்..

    கடைசியில் அந்தத் தீவு..தீவில் நடக்கும் கல்யாணம்..

    கல்யாணம் கட்டிக்கிட்ட குட்டிச்சுட்டி ஜப்பான் பெண்ணிடம்... வீ ஆர் மேரீட்..

    அவள் ஒடிந்து விடும் இடுப்பை ஒசித்து கண்களினால் மறுத்து நோ வி ஆர் இன் பிஸினஸ் சொல்வது... ஜோர்..

    ம்ம் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. நன்றி சி.செ

  19. Thanks eehaiupehazij thanked for this post
    Likes vasudevan31355, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •